background img

புதிய வரவு

Showing posts with label 2g corruption. Show all posts
Showing posts with label 2g corruption. Show all posts
ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக டில்லி சி.பி.ஐ., கோர்ட்டில், தி.மு.க., எம்.பி.,க்கள் புடைசூழ கனிமொழி ஆஜரானார். அவருக்கு ஜாமின் வழங்கக்கோரி ஆஜரான பிரபல கிரிமினல் வக்கீல் ஜெத்மலானி, ""கனிமொழிக்கு இந்த விஷயத்தில் நேரடித் தொடர்பு இல்லை,'' என, வாதாடினார். நீதிபதி சைனி , ""இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை, இதே நிலை நீடிக்கும்,'' என்றார். இன்றும் வழக்கு விசாரணை நீடிப்பதால், கனிமொழிக்கு ஜாமின் கிடைக்குமா என்பது இன்றுதான் தெரியவரும்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் கனிமொழி, டில்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ., கோர்ட்டிற்கு நேற்று வந்திருந்தார். அவருடன், தி.மு.க., பார்லிமென்டரி கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு உட்பட 11 எம்.பி.,க்கள் வந்தனர். நீதிபதி சைனி முன்பாக வாதிட்ட வக்கீல் ராம்ஜெத்மலானி கூறியதாவது: கனிமொழிக்கு சம்மன் அனுப்பியாகி விட்டது. அவர் ரெகுலராக கோர்ட்டிற்கு வந்து வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறரா என்பதைத்தான் பார்க்க வேண்டும். உத்தரவாதம் பெற்று அவரை ஜாமினில் விடுக்க வேண்டும். ஜாமின் கேட்பது என்பது அவரது பிறப்புரிமை. சுப்ரீம் கோர்ட்டும் சரி, அலகாபாத் ஐகோர்ட் உள்ளிட்ட பிற கோர்ட்டுகளும் இதை ஏற்கனவே உறுதி செய்துள்ளன.

கலைஞர் "டிவி'யில், கனிமொழி வெறும் பங்குதாரர் மட்டுமே. அதுவும் பெரிய அளவிலான பங்குதாரரும் இல்லை. வெறும் 20 சதவீத பங்குகளை மட்டுமே வைத்துள்ளார். அதன்படி பார்த்தால், கலைஞர் "டிவி' சம்பந்தப்பட்ட எந்த ஒரு ஆவணங்களிலும் கனிமொழி கையெழுத்திடவில்லை. கலைஞர் "டிவி'யில் ஆரம்ப காலத்தில், கனிமொழி ஒரு இயக்குனராக இருந்தார். அதன்பின் அந்தப் பதவியில் இருந்தும் விலகி விட்டார். அதன்பிறகு "டிவி' தொடர்பான நடவடிக்கைகளில் அவர் பெரிதும் ஈடுபடவில்லை. கனிமொழி அப்பாவி. ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும், கனிமொழிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கலைஞர் "டிவி' தொடர்பான எந்த போர்டு மீட்டிங், ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்றதில்லை.

கலைஞர் "டிவி' உருவாவதற்கு அடித்தளமே கனிமொழி என்ற சி.பி.ஐ., யின் குற்றச்சாட்டு தவறானது. மேலும், ராஜா மூலமாக கலைஞர் "டிவி'க்கு ரூ.200 கோடி வந்தது என்று கருதப்பட்டாலும், அதில் கனிமொழிக்கு சம்பந்தம் என்ன இருக்கிறது. அந்தப் பணவரவு குறித்து எந்த ஆவணத்திலும் கனிமொழி கையெழுத்திடவில்லை. கலைஞர் "டிவி' பற்றி முடிவெடுத்தது சரத்குமார் பொறுப்பாகும். மரணதண்டனை மற்றும் ஆயுள் தண்டனை ஆகிய குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு வேண்டுமானால், இந்த ஜாமின் மறுக்கப்படலாமே தவிர, மற்ற வழக்குகளில் ஜாமின் வழங்குவது சாத்தியமானதே. அதிலும் கூட பெண்கள், நோயாளிகள், முதியவர்கள் போன்ற காரணங்களுக்காகவும் ஜாமின் வழங்க கோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளது. இவ்வாறு ராம்ஜெத்மலானி வாதிட்டார். கோர்ட் அறை முழுவதும் பெரும் கூட்டம் நிரம்பி இருந்தது. இவருக்கு பிறகு, சரத்குமார் ரெட்டியின் வக்கீல் அல்தாப், பல்வா வக்கீல் @பசினர். நேரம் ஆகிவிடவே தன் வாதங்களை நாளை (இன்று) வைப்பதாக சி.பி.ஐ., வக்கீல் லலித் கூறினார். அவரது வாதத்தை கேட்டபின் முடிவு எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில், நாளையும் (இன்று) தொடரும் என்று நீதிபதி சைனி அறிவித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

டில்லி கோர்ட்டில் கனிமொழி ஆஜர்: இன்றும் நீடிக்கிறது விசாரணை

ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக டில்லி சி.பி.ஐ., கோர்ட்டில், தி.மு.க., எம்.பி.,க்கள் புடைசூழ கனிமொழி ஆஜரானார். அவருக்கு ஜாமின் வழங்கக்கோரி ஆஜரான பிரபல கிரிமினல் வக்கீல் ஜெத்மலானி, ""கனிமொழிக்கு இந்த விஷயத்தில் நேரடித் தொடர்பு இல்லை,'' என, வாதாடினார். நீதிபதி சைனி , ""இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை, இதே நிலை நீடிக்கும்,'' என்றார். இன்றும் வழக்கு விசாரணை நீடிப்பதால், கனிமொழிக்கு ஜாமின் கிடைக்குமா என்பது இன்றுதான் தெரியவரும்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் கனிமொழி, டில்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ., கோர்ட்டிற்கு நேற்று வந்திருந்தார். அவருடன், தி.மு.க., பார்லிமென்டரி கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு உட்பட 11 எம்.பி.,க்கள் வந்தனர். நீதிபதி சைனி முன்பாக வாதிட்ட வக்கீல் ராம்ஜெத்மலானி கூறியதாவது: கனிமொழிக்கு சம்மன் அனுப்பியாகி விட்டது. அவர் ரெகுலராக கோர்ட்டிற்கு வந்து வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறரா என்பதைத்தான் பார்க்க வேண்டும். உத்தரவாதம் பெற்று அவரை ஜாமினில் விடுக்க வேண்டும். ஜாமின் கேட்பது என்பது அவரது பிறப்புரிமை. சுப்ரீம் கோர்ட்டும் சரி, அலகாபாத் ஐகோர்ட் உள்ளிட்ட பிற கோர்ட்டுகளும் இதை ஏற்கனவே உறுதி செய்துள்ளன.

கலைஞர் "டிவி'யில், கனிமொழி வெறும் பங்குதாரர் மட்டுமே. அதுவும் பெரிய அளவிலான பங்குதாரரும் இல்லை. வெறும் 20 சதவீத பங்குகளை மட்டுமே வைத்துள்ளார். அதன்படி பார்த்தால், கலைஞர் "டிவி' சம்பந்தப்பட்ட எந்த ஒரு ஆவணங்களிலும் கனிமொழி கையெழுத்திடவில்லை. கலைஞர் "டிவி'யில் ஆரம்ப காலத்தில், கனிமொழி ஒரு இயக்குனராக இருந்தார். அதன்பின் அந்தப் பதவியில் இருந்தும் விலகி விட்டார். அதன்பிறகு "டிவி' தொடர்பான நடவடிக்கைகளில் அவர் பெரிதும் ஈடுபடவில்லை. கனிமொழி அப்பாவி. ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும், கனிமொழிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கலைஞர் "டிவி' தொடர்பான எந்த போர்டு மீட்டிங், ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்றதில்லை.

கலைஞர் "டிவி' உருவாவதற்கு அடித்தளமே கனிமொழி என்ற சி.பி.ஐ., யின் குற்றச்சாட்டு தவறானது. மேலும், ராஜா மூலமாக கலைஞர் "டிவி'க்கு ரூ.200 கோடி வந்தது என்று கருதப்பட்டாலும், அதில் கனிமொழிக்கு சம்பந்தம் என்ன இருக்கிறது. அந்தப் பணவரவு குறித்து எந்த ஆவணத்திலும் கனிமொழி கையெழுத்திடவில்லை. கலைஞர் "டிவி' பற்றி முடிவெடுத்தது சரத்குமார் பொறுப்பாகும். மரணதண்டனை மற்றும் ஆயுள் தண்டனை ஆகிய குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு வேண்டுமானால், இந்த ஜாமின் மறுக்கப்படலாமே தவிர, மற்ற வழக்குகளில் ஜாமின் வழங்குவது சாத்தியமானதே. அதிலும் கூட பெண்கள், நோயாளிகள், முதியவர்கள் போன்ற காரணங்களுக்காகவும் ஜாமின் வழங்க கோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளது. இவ்வாறு ராம்ஜெத்மலானி வாதிட்டார். கோர்ட் அறை முழுவதும் பெரும் கூட்டம் நிரம்பி இருந்தது. இவருக்கு பிறகு, சரத்குமார் ரெட்டியின் வக்கீல் அல்தாப், பல்வா வக்கீல் @பசினர். நேரம் ஆகிவிடவே தன் வாதங்களை நாளை (இன்று) வைப்பதாக சி.பி.ஐ., வக்கீல் லலித் கூறினார். அவரது வாதத்தை கேட்டபின் முடிவு எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில், நாளையும் (இன்று) தொடரும் என்று நீதிபதி சைனி அறிவித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.


“இராசா இந்தத் (தொலைத் தொடர்புத்) துறை அமைச்சராகப் பொறுப்பேற்று செய்த குற்றம் என்ன என்று பார்த்தால், ஏழை. எளிய மக்களுக்கும் சேல்போனை கொண்டு சென்றதுதான” என்று தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான மு.கருணாநிதி, சென்னையில் நேற்று இரவு நடைபெற்ற தி.மு.க.பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விளக்கக் கூட்டத்தில் பேசியுள்ளார்.

இவ்வாறு கூறியதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. “செல்போன் பணக்காரர்களுக்கு மட்டும் சொந்தமானதாக இருந்தது. இப்போது நாற்று நடச் செல்லும் பெண்களும், தையல் வேலைக்குச் செல்லும் பெண்களும் செல்போனை பயன்படுத்துகிறார்கள். மிகக் குறைந்த விலையில், குறைந்த வாடகையில் செல்போன் பயன்படுத்துவதற்கான நிலையை ஏற்படுத்திய பெருமை இன்று டெல்லிச் சிறையில் வாடும் இராசாவிற்கு உண்டு” என்று பொருந்தாத புகழ் சூட்டி, இராசாவை தொடாமலேயே உச்சி மோந்துள்ளார் கருணாநிதி.

‘கேட்பவன் கேணையனாக இருந்தால், எதையுத் திரிப்பார்கள்’ என்ற சமீபகால பழமொழிக்கு இணங்க, எதிரில் கூடியிருக்கும் தன் கட்சித் தொண்டர்களின் சிந்தையறிந்து சிறப்பாக, உருக்கமாக பேசியுள்ளார் கருணாநிதி. அவருக்கு இதெல்லாம் வாய் வந்த கலை. ஓராண்டா, ஈராண்டா... 70ஆண்டுக்கால அரசியல் அனுபவமல்லவா?

தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்து 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு செய்து, அதனால் அத்துறைக்கு இராசா ஏற்படுத்திய இழப்பு 1.76 இலட்சம் என்று மத்திய அரசின் தலைமை கணக்காய்வாளர் மற்றும் தணிக்கையாளர் தனது அறிக்கையில் மிகத் தெளிவாகவே கூறியுள்ளார்.

“இவ்வளவு பெரிய முறைகேட்டை ஒரே ஒருவர் மட்டுமே செய்துவிட முடியுமா?என்று கேட்டு நம்மையெல்லாம் சிந்திக்க வைத்த தமிழ்நாட்டின் முதல்வர், இந்த முறைகேட்டால் எந்த ஏழை, எளிய மக்கள் பயன்பெற்றார்கள் என்று கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு குறித்து புலனாய்வு செய்துவரும் மத்திய புலனாய்வுக் கழகம், கடந்த புதன்கிழமை கைது செய்த முன்னாள் அமைச்சர் இராசாவையும், அவரோடு கைது செய்யப்பட்ட தொலைத்தொடர்பு முன்னாள் செயலர் சித்தார்த் பெஹூரியா, இராசாவின் தனிச் செயலர் ஆர்.கே.சண்டோலியா ஆகியோரையும் டெல்லி ம.பு.க. சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று நிறுத்தியது.

அப்போது, இராசா உள்ளிட்ட அந்த மூவர் மீது உள்ள வழக்கு என்ன என்பதை நீதிபதி ஓ.பி.சைனிக்கு எடுத்துரைத்த ம.பு.க. வழக்குரைஞர் அகிலேஷ், “முதலில் வருபவருக்கு முதலில் உரிமம் என்ற கொள்கையை தவறாகப் பயன்படுத்தி, 2 ஜி அலைக்கற்றைகளை 2001ஆம் ஆண்டு விலையில் ஒதுக்கீடு செய்துள்ளனர். இதில் தங்களுக்குத்தான் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அந்த உரிமத்தைப் பெற்ற நிறுவனங்களுக்கு முன்பே தெரியும் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

ஆ.இராசா உதவிய முக்கியமான இரண்டு நிறுவனங்களை ம.பு.க.வழக்குரைஞர் நீதிமன்றத்திற்கு எடுத்துரைத்து, அதில் நடந்த முறைகேட்டினால் ஏற்பட்ட இழப்பைக் கூறியுள்ளார்.

ஏழைகளுக்கு உதவவா உரிமம் அளித்தார் இராசா?

“இராசா இந்தத் (தொலைத் தொடர்புத்) துறை அமைச்சராகப் பொறுப்பேற்று செய்த குற்றம் என்ன என்று பார்த்தால், ஏழை. எளிய மக்களுக்கும் சேல்போனை கொண்டு சென்றதுதான” என்று தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான மு.கருணாநிதி, சென்னையில் நேற்று இரவு நடைபெற்ற தி.மு.க.பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விளக்கக் கூட்டத்தில் பேசியுள்ளார்.

இவ்வாறு கூறியதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. “செல்போன் பணக்காரர்களுக்கு மட்டும் சொந்தமானதாக இருந்தது. இப்போது நாற்று நடச் செல்லும் பெண்களும், தையல் வேலைக்குச் செல்லும் பெண்களும் செல்போனை பயன்படுத்துகிறார்கள். மிகக் குறைந்த விலையில், குறைந்த வாடகையில் செல்போன் பயன்படுத்துவதற்கான நிலையை ஏற்படுத்திய பெருமை இன்று டெல்லிச் சிறையில் வாடும் இராசாவிற்கு உண்டு” என்று பொருந்தாத புகழ் சூட்டி, இராசாவை தொடாமலேயே உச்சி மோந்துள்ளார் கருணாநிதி.

‘கேட்பவன் கேணையனாக இருந்தால், எதையுத் திரிப்பார்கள்’ என்ற சமீபகால பழமொழிக்கு இணங்க, எதிரில் கூடியிருக்கும் தன் கட்சித் தொண்டர்களின் சிந்தையறிந்து சிறப்பாக, உருக்கமாக பேசியுள்ளார் கருணாநிதி. அவருக்கு இதெல்லாம் வாய் வந்த கலை. ஓராண்டா, ஈராண்டா... 70ஆண்டுக்கால அரசியல் அனுபவமல்லவா?

தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்து 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு செய்து, அதனால் அத்துறைக்கு இராசா ஏற்படுத்திய இழப்பு 1.76 இலட்சம் என்று மத்திய அரசின் தலைமை கணக்காய்வாளர் மற்றும் தணிக்கையாளர் தனது அறிக்கையில் மிகத் தெளிவாகவே கூறியுள்ளார்.

“இவ்வளவு பெரிய முறைகேட்டை ஒரே ஒருவர் மட்டுமே செய்துவிட முடியுமா?என்று கேட்டு நம்மையெல்லாம் சிந்திக்க வைத்த தமிழ்நாட்டின் முதல்வர், இந்த முறைகேட்டால் எந்த ஏழை, எளிய மக்கள் பயன்பெற்றார்கள் என்று கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு குறித்து புலனாய்வு செய்துவரும் மத்திய புலனாய்வுக் கழகம், கடந்த புதன்கிழமை கைது செய்த முன்னாள் அமைச்சர் இராசாவையும், அவரோடு கைது செய்யப்பட்ட தொலைத்தொடர்பு முன்னாள் செயலர் சித்தார்த் பெஹூரியா, இராசாவின் தனிச் செயலர் ஆர்.கே.சண்டோலியா ஆகியோரையும் டெல்லி ம.பு.க. சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று நிறுத்தியது.

அப்போது, இராசா உள்ளிட்ட அந்த மூவர் மீது உள்ள வழக்கு என்ன என்பதை நீதிபதி ஓ.பி.சைனிக்கு எடுத்துரைத்த ம.பு.க. வழக்குரைஞர் அகிலேஷ், “முதலில் வருபவருக்கு முதலில் உரிமம் என்ற கொள்கையை தவறாகப் பயன்படுத்தி, 2 ஜி அலைக்கற்றைகளை 2001ஆம் ஆண்டு விலையில் ஒதுக்கீடு செய்துள்ளனர். இதில் தங்களுக்குத்தான் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அந்த உரிமத்தைப் பெற்ற நிறுவனங்களுக்கு முன்பே தெரியும் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

ஆ.இராசா உதவிய முக்கியமான இரண்டு நிறுவனங்களை ம.பு.க.வழக்குரைஞர் நீதிமன்றத்திற்கு எடுத்துரைத்து, அதில் நடந்த முறைகேட்டினால் ஏற்பட்ட இழப்பைக் கூறியுள்ளார்.

2ஜி ஒதுக்கீடு குறித்து விசாரித்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை, முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவை காப்பற்றும் ஒரு முயற்சியே என்று பா.ஜனதா குற்றம் சாற்றியுள்ளது.

2ஜி ஒதுக்கீடு குறித்து விசாரிக்க மத்திய அரசால் நியமிக்கப்பட்ட முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சிவராஜ் பாட்டீலைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம்,தனது அறிக்கையை அண்மையில் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் கபில்சிபலிடம் அளித்தது.

இந்நிலையில் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களை இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் வெளியிட்ட கபில் சிபல், 2003 முதல் 08 ஆம் ஆண்டு வரையில் எடுக்கப்பட்ட அனைத்து ஸ்பெக்ட்ரம் முடிவுகளுமே தவறானவை என்று அதில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனைக் குறிப்பிட்டே,ராசா செய்த சட்டவிரோத காரியங்களிலிருந்து அவரை காப்பாற்றும் நோக்கத்தில் சிவராஜ் பாட்டீல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது பா.ஜனதா பேச்சாளர் ரவி சங்கர் பிரசாத், குற்றம்சாற்றினார்.

எனவே நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை மட்டுமே உண்மையை வெளிக்கொண்டு வரும் என்பதால்தான்,அதனை தமது கட்சி வலியுறுத்துவதாக அவர் கூறினார்.

தே.ஜ. கூட்டணியிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை. 1998 லிருந்தே ஒவ்வொரு ஒதுக்கீடு குறித்தும் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்கட்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம் என்று ரவி சங்கர் மேலும் கூறினார்.

ஆ.ராசாவை காப்பாற்ற முயற்சி: பா.ஜனதா குற்றச்சாற்று

2ஜி ஒதுக்கீடு குறித்து விசாரித்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை, முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவை காப்பற்றும் ஒரு முயற்சியே என்று பா.ஜனதா குற்றம் சாற்றியுள்ளது.

2ஜி ஒதுக்கீடு குறித்து விசாரிக்க மத்திய அரசால் நியமிக்கப்பட்ட முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சிவராஜ் பாட்டீலைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம்,தனது அறிக்கையை அண்மையில் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் கபில்சிபலிடம் அளித்தது.

இந்நிலையில் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களை இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் வெளியிட்ட கபில் சிபல், 2003 முதல் 08 ஆம் ஆண்டு வரையில் எடுக்கப்பட்ட அனைத்து ஸ்பெக்ட்ரம் முடிவுகளுமே தவறானவை என்று அதில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனைக் குறிப்பிட்டே,ராசா செய்த சட்டவிரோத காரியங்களிலிருந்து அவரை காப்பாற்றும் நோக்கத்தில் சிவராஜ் பாட்டீல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது பா.ஜனதா பேச்சாளர் ரவி சங்கர் பிரசாத், குற்றம்சாற்றினார்.

எனவே நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை மட்டுமே உண்மையை வெளிக்கொண்டு வரும் என்பதால்தான்,அதனை தமது கட்சி வலியுறுத்துவதாக அவர் கூறினார்.

தே.ஜ. கூட்டணியிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை. 1998 லிருந்தே ஒவ்வொரு ஒதுக்கீடு குறித்தும் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்கட்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம் என்று ரவி சங்கர் மேலும் கூறினார்.

முக நூல்

Popular Posts