background img

புதிய வரவு

Showing posts with label Captain. Show all posts
Showing posts with label Captain. Show all posts
சென்னை: ஐ.பி.எல்., அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆதிக்கம் தொடர்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பை வென்று புதிய வரலாறு படைத்தது. இம்முறை சாம்பியன் கனவை நனவாக்கிய முரளி விஜய் அஷ்வினை, கேப்டன் தோனி வெகுவாக பாராட்டினார்.
இந்தியாவின் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன் தினம் நடந்த பைனலில் அபாரமாக ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி(205/5), பெங்களூரு ராயல் சாலஞ்ர்ஸ் அணியை(147/8) வீழ்த்தி, கோப்பையை தக்க வைத்துக் கொண்டது. இதன் மூலம் ஐ.பி.எல்., கோப்பையை இரண்டு முறை(2010, 11) வென்ற முதல் அணி என்ற வரலாற்று சாதனையை சென்னை அணி படைத்தது.

தமிழகத்துக்கு "ஜே':
அணியின் வெற்றியில் தமிழக வீரர்களான முரளி விஜய் (95 ரன்கள்), அஷ்வின்(3 விக்கெட்) முக்கிய பங்கு வகித்தனர். "ஆபத்தான' பெங்களூரு வீரர் கெய்லை "டக்' அவுட்டாக்கிய அஷ்வின், மீண்டும் ஒரு முறை தனது சுழல் திறமையை வெளிப்படுத்தினார். சென்னை அணிக்கு இன்னொரு முறை கோப்பை பெற்று தந்த "லக்கி' கேப்டன் தோனி கூறியது:
பைனலில் வெல்வதே ஒவ்வொரு வீரரின் நோக்கமாக இருக்கும். இதற்கேற்ப சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் செயல்பட்டனர். முரளி விஜய், மைக்கேல் ஹசி இணைந்து அபார துவக்கம் தந்தனர். இவர்கள் 15வது ஓவர் வரை நிலைத்து நின்று விளையாடியது பாராட்டப்பட வேண்டிய விஷயம். இதனால் தான் 200 ரன்களுக்கும் மேலான ஸ்கோரை எட்ட முடிந்தது.
அஷ்வின் மிகுந்த துணிச்சலாக பந்துவீசினார். "பீல்டிங்' கட்டுப்பாடு இருக்கும் போது வெளிவட்டத்தில் இரண்டு வீரர்கள் தான் இருப்பார்கள். இதனைப் பற்றி கவலைப்படாமல், பந்தை நல்ல உயரத்தில் வருமாறு சாதுர்யமாக வீசினார். அணிக்கு தனது பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்தார்.
கடந்த ஐ.பி.எல்., தொடரில் தட்டுத்தடுமாறி தான் அரையிறுதிக்குள் நுழைந்தோம். இம்முறை ஆரம்பத்தில் இருந்தே நன்றாக விளையாடியதால், சிரமமின்றி கோப்பை வென்றோம்.

சிறிது ஓய்வு:
களத்தில் சிறப்பான முறையில் நடந்து கொண்ட அணிக்கான நன்னடத்தை விருதை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. களத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொண்டால் தான் வெற்றி பெற இயலும் என்று சொல்வார்கள். ஆனால், நேர்மையான முறையில் நடந்து கொண்டு, வெற்றியும் பெறலாம் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறோம். கடந்த நான்கு மாதங்களாக வீட்டுக்கே செல்லவில்லை. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பங்கேற்காத நிலையில், ராஞ்சிக்கு சென்று ஓய்வு எடுக்க உள்ளேன்.
ரசிகர்கள் சோர்வு:
உலக கோப்பை தொடர் முடிந்த கையுடன் ஐ.பி.எல்., போட்டிகள் நடந்தது கடினமானதாக தான் இருந்தது. நாட்டு மக்கள் அனைவரும் உலக கோப்பை வெல்ல வேண்டுமென விரும்பினார்கள். இதற்கேற்ப நாங்களும் வென்று காட்டினோம். உலக கோப்பை வென்றதும் உணர்ச்சிப்பூர்வமாக சோர்வடைந்த ரசிகர்கள், துவக்கத்தில் ஐ.பி.எல்., போட்டிகளை காண அதிகளவில் வரவில்லை. போகப் போக போட்டியை காண ஆர்வத்துடன் மைதானத்துக்கு திரண்டு வந்தனர்.
இவ்வாறு தோனி கூறினார்.

தோல்வி அடைந்த பெங்களூரு கேப்டன் வெட்டோரி கூறுகையில்,""பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட தவறினோம். 200 ரன்களுக்கு மேல் செய்வது "சேஸ்' செய்வது கடினம். 160 முதல் 170 ரன்கள் என்றால் "சேஸ்' செய்திருக்கலாம். ஒட்டுமொத்தமாக இத்தொடர் சிறப்பானதாக அமைந்தது. லீக் சுற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றதை சாதனையாக கருதுகிறேன்,''என்றார்.

இரவெல்லாம் உற்சாகம்
கோப்பை வென்ற உற்சாகத்தை அதிகாலை வரை சென்னை வீரர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். சென்னையில் உள்ள பிரபல ஓட்டலில் நடந்த "பார்ட்டி'யில் அனைவரும் பங்கேற்றனர். கால்பந்து பிரியரான கேப்டன் தோனி மட்டும் தனது மனைவியுடன் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து பைனலை பார்த்தாராம். இதில், தனக்கு பிடித்தமான மான்செஸ்டர் யுனைடெட் அணி, பார்சிலோனாவிடம் தோற்றதால் மிகுந்த கவலை அடைந்திருக்கிறார். பின் சக வீரர்களுடன் சேர்ந்து "பார்ட்டி'யில் சிறிது நேரம் பங்கேற்றுள்ளார்.
விருதுகளும்...பரிசுகளும்...

நான்காவது ஐ.பி.எல்., தொடரில் சாதித்த அணிகள் மட்டுமின்றி தனிப்பட்ட வீரர்களும் பரிசுகளை அள்ளிச் சென்றனர்.

* கோப்பை வென்ற சென்னை அணி ரூ. பத்து கோடி பரிசாக பெற்றது.
* இரண்டாவது இடம் பிடித்த பெங்களூரு அணி ரூ. ஐந்து கோடி பரிசாக பெற்றது.
* ஆட்ட நாயகன் விருது வென்ற முரளி விஜய்( 95 ரன்கள்) ரூ. ஐந்து லட்சம் பரிசாக பெற்றார்.
* இத்தொடரில், 608 ரன்கள் குவித்த பெங்களூரு அணியின் கிறிஸ் கெய்ல் தொடர் நாயகன் விருதை வென்றார். இவருக்கு ரூ. ஐந்து லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. தவிர, அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்த இவர், "ஆரஞ்ச்' நிற தொப்பியை கைப்பற்றியதால், ரூ. பத்து லட்சம் பரிசாக அளிக்கப்பட்டது. இத்தொடரில் அதிக "சிக்சர்' (44) விளாசிய வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்த பெருமை இவரையே சேரும்.
* இத்தொடரில், அதிக விக்கெட்(28 விக்கெட்) வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா ரூ. பத்து லட்சம் பரிசாக பெற்றார்.
* கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர் இக்பால் அப்துல்லா, 15 போட்டிகளில் 16 விக்கெட் கைப்பற்றினார். இதனால் வளரும் வீரருக்கான விருதை வென்ற இவருக்கு ரூ. பத்து லட்சம் பரிசாக கொடுக்கப்பட்டது.
* அதிக "கேட்ச்' பிடித்தவர்களுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் போலார்டு(10 "கேட்ச்')ரூ. பத்து லட்சம் பரிசாக பெற்றார்.
* சென்னை அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் அணியின் வல்தாட்டி, 63 பந்தில் 120 ரன்கள் எடுத்தார். தவிர இவர் 14 போட்டிகளில் 463 ரன்கள் குவித்தார். இதனால் தனிநபர் சாதனையாளர் விருது வென்ற இவருக்கு, கார் ஒன்று பரிசாக கொடுக்கப்பட்டது.
* இத்தொடரின் சிறந்த ஆடுகளத்திற்கான விருது, பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்திற்கு கிடைத்துள்ளது. இதன்மூலம் ரூ. 25 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

சாதித்துக் காட்டிய சென்னை கிங்ஸ் அணி: விஜய், அஷ்வினுக்கு தோனி பாராட்டு

சென்னை: ஐ.பி.எல்., அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆதிக்கம் தொடர்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பை வென்று புதிய வரலாறு படைத்தது. இம்முறை சாம்பியன் கனவை நனவாக்கிய முரளி விஜய் அஷ்வினை, கேப்டன் தோனி வெகுவாக பாராட்டினார்.
இந்தியாவின் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன் தினம் நடந்த பைனலில் அபாரமாக ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி(205/5), பெங்களூரு ராயல் சாலஞ்ர்ஸ் அணியை(147/8) வீழ்த்தி, கோப்பையை தக்க வைத்துக் கொண்டது. இதன் மூலம் ஐ.பி.எல்., கோப்பையை இரண்டு முறை(2010, 11) வென்ற முதல் அணி என்ற வரலாற்று சாதனையை சென்னை அணி படைத்தது.

தமிழகத்துக்கு "ஜே':
அணியின் வெற்றியில் தமிழக வீரர்களான முரளி விஜய் (95 ரன்கள்), அஷ்வின்(3 விக்கெட்) முக்கிய பங்கு வகித்தனர். "ஆபத்தான' பெங்களூரு வீரர் கெய்லை "டக்' அவுட்டாக்கிய அஷ்வின், மீண்டும் ஒரு முறை தனது சுழல் திறமையை வெளிப்படுத்தினார். சென்னை அணிக்கு இன்னொரு முறை கோப்பை பெற்று தந்த "லக்கி' கேப்டன் தோனி கூறியது:
பைனலில் வெல்வதே ஒவ்வொரு வீரரின் நோக்கமாக இருக்கும். இதற்கேற்ப சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் செயல்பட்டனர். முரளி விஜய், மைக்கேல் ஹசி இணைந்து அபார துவக்கம் தந்தனர். இவர்கள் 15வது ஓவர் வரை நிலைத்து நின்று விளையாடியது பாராட்டப்பட வேண்டிய விஷயம். இதனால் தான் 200 ரன்களுக்கும் மேலான ஸ்கோரை எட்ட முடிந்தது.
அஷ்வின் மிகுந்த துணிச்சலாக பந்துவீசினார். "பீல்டிங்' கட்டுப்பாடு இருக்கும் போது வெளிவட்டத்தில் இரண்டு வீரர்கள் தான் இருப்பார்கள். இதனைப் பற்றி கவலைப்படாமல், பந்தை நல்ல உயரத்தில் வருமாறு சாதுர்யமாக வீசினார். அணிக்கு தனது பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்தார்.
கடந்த ஐ.பி.எல்., தொடரில் தட்டுத்தடுமாறி தான் அரையிறுதிக்குள் நுழைந்தோம். இம்முறை ஆரம்பத்தில் இருந்தே நன்றாக விளையாடியதால், சிரமமின்றி கோப்பை வென்றோம்.

சிறிது ஓய்வு:
களத்தில் சிறப்பான முறையில் நடந்து கொண்ட அணிக்கான நன்னடத்தை விருதை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. களத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொண்டால் தான் வெற்றி பெற இயலும் என்று சொல்வார்கள். ஆனால், நேர்மையான முறையில் நடந்து கொண்டு, வெற்றியும் பெறலாம் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறோம். கடந்த நான்கு மாதங்களாக வீட்டுக்கே செல்லவில்லை. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பங்கேற்காத நிலையில், ராஞ்சிக்கு சென்று ஓய்வு எடுக்க உள்ளேன்.
ரசிகர்கள் சோர்வு:
உலக கோப்பை தொடர் முடிந்த கையுடன் ஐ.பி.எல்., போட்டிகள் நடந்தது கடினமானதாக தான் இருந்தது. நாட்டு மக்கள் அனைவரும் உலக கோப்பை வெல்ல வேண்டுமென விரும்பினார்கள். இதற்கேற்ப நாங்களும் வென்று காட்டினோம். உலக கோப்பை வென்றதும் உணர்ச்சிப்பூர்வமாக சோர்வடைந்த ரசிகர்கள், துவக்கத்தில் ஐ.பி.எல்., போட்டிகளை காண அதிகளவில் வரவில்லை. போகப் போக போட்டியை காண ஆர்வத்துடன் மைதானத்துக்கு திரண்டு வந்தனர்.
இவ்வாறு தோனி கூறினார்.

தோல்வி அடைந்த பெங்களூரு கேப்டன் வெட்டோரி கூறுகையில்,""பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட தவறினோம். 200 ரன்களுக்கு மேல் செய்வது "சேஸ்' செய்வது கடினம். 160 முதல் 170 ரன்கள் என்றால் "சேஸ்' செய்திருக்கலாம். ஒட்டுமொத்தமாக இத்தொடர் சிறப்பானதாக அமைந்தது. லீக் சுற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றதை சாதனையாக கருதுகிறேன்,''என்றார்.

இரவெல்லாம் உற்சாகம்
கோப்பை வென்ற உற்சாகத்தை அதிகாலை வரை சென்னை வீரர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். சென்னையில் உள்ள பிரபல ஓட்டலில் நடந்த "பார்ட்டி'யில் அனைவரும் பங்கேற்றனர். கால்பந்து பிரியரான கேப்டன் தோனி மட்டும் தனது மனைவியுடன் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து பைனலை பார்த்தாராம். இதில், தனக்கு பிடித்தமான மான்செஸ்டர் யுனைடெட் அணி, பார்சிலோனாவிடம் தோற்றதால் மிகுந்த கவலை அடைந்திருக்கிறார். பின் சக வீரர்களுடன் சேர்ந்து "பார்ட்டி'யில் சிறிது நேரம் பங்கேற்றுள்ளார்.
விருதுகளும்...பரிசுகளும்...

நான்காவது ஐ.பி.எல்., தொடரில் சாதித்த அணிகள் மட்டுமின்றி தனிப்பட்ட வீரர்களும் பரிசுகளை அள்ளிச் சென்றனர்.

* கோப்பை வென்ற சென்னை அணி ரூ. பத்து கோடி பரிசாக பெற்றது.
* இரண்டாவது இடம் பிடித்த பெங்களூரு அணி ரூ. ஐந்து கோடி பரிசாக பெற்றது.
* ஆட்ட நாயகன் விருது வென்ற முரளி விஜய்( 95 ரன்கள்) ரூ. ஐந்து லட்சம் பரிசாக பெற்றார்.
* இத்தொடரில், 608 ரன்கள் குவித்த பெங்களூரு அணியின் கிறிஸ் கெய்ல் தொடர் நாயகன் விருதை வென்றார். இவருக்கு ரூ. ஐந்து லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. தவிர, அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்த இவர், "ஆரஞ்ச்' நிற தொப்பியை கைப்பற்றியதால், ரூ. பத்து லட்சம் பரிசாக அளிக்கப்பட்டது. இத்தொடரில் அதிக "சிக்சர்' (44) விளாசிய வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்த பெருமை இவரையே சேரும்.
* இத்தொடரில், அதிக விக்கெட்(28 விக்கெட்) வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா ரூ. பத்து லட்சம் பரிசாக பெற்றார்.
* கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர் இக்பால் அப்துல்லா, 15 போட்டிகளில் 16 விக்கெட் கைப்பற்றினார். இதனால் வளரும் வீரருக்கான விருதை வென்ற இவருக்கு ரூ. பத்து லட்சம் பரிசாக கொடுக்கப்பட்டது.
* அதிக "கேட்ச்' பிடித்தவர்களுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் போலார்டு(10 "கேட்ச்')ரூ. பத்து லட்சம் பரிசாக பெற்றார்.
* சென்னை அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் அணியின் வல்தாட்டி, 63 பந்தில் 120 ரன்கள் எடுத்தார். தவிர இவர் 14 போட்டிகளில் 463 ரன்கள் குவித்தார். இதனால் தனிநபர் சாதனையாளர் விருது வென்ற இவருக்கு, கார் ஒன்று பரிசாக கொடுக்கப்பட்டது.
* இத்தொடரின் சிறந்த ஆடுகளத்திற்கான விருது, பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்திற்கு கிடைத்துள்ளது. இதன்மூலம் ரூ. 25 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

சென்னை: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக காம்பிர் தேர்வு செய்யப்பட்டார். சீனியர் வீரர்கள் சச்சின், தோனி ஆகியோருக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. தமிழகத்தின் பத்ரிநாத், சகா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.
ஒரு "டுவென்டி-20', ஐந்து ஒரு நாள் போட்டி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய அணி, வரும் மே 28ல் வெஸ்ட் இண்டீஸ் புறப்படுகிறது. வரும் ஜூன் 4ல் ஒரு "டுவென்டி-20', ஜூன் 6, 8, 11, 13 மற்றும் 16ம் தேதிகளில் ஒருநாள் போட்டிகள் நடக்கின்றது. இதற்கான இந்திய அணியை தேர்வு செய்ய, நேற்று ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது.
சச்சின் ஓய்வு:
தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வரும், இந்திய அணியின் சீனியர் வீரர்கள் சச்சின், ஜாகிர் கான், கேப்டன் தோனி ஆகியோருக்கு "டுவென்டி-20', ஒருநாள் போட்டிகளில் ஓய்வு தரப்பட்டுள்ளது. இவர்கள் டெஸ்ட் அணியில் இடம் பெறுவார்கள். காயம் காரணமாக சேவக், ஆஷிஸ் நெஹ்ரா இருவரும் தேர்வு செய்யப்படவில்லை.
புதிய கேப்டன்:
தோனி ஓய்வு காரணமாக, இந்திய அணியின் கேப்டனாக காம்பிர் நியமிக்கப்பட்டார். இவர் ஏற்கனவே நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை, 5-0 என்று கைப்பற்றி அசத்தியுள்ளார். துணைக்கேப்டன் பொறுப்பு ரெய்னாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. "ஆல் ரவுண்டர்' இடத்தை யூசுப் பதான் தட்டிச் சென்றார்.
பத்ரிநாத் அபாரம்:
"மிடில் ஆர்டருக்கு' பத்ரிநாத், ராயுடுவுக்கு இடையே கடும் போட்டி இருந்தது. ஆனால், அனுபவம் மற்றும் கடந்த ரஞ்சிக் கோப்பை சீசனில் (922 ரன்கள்) அசத்தியதன் காரணமாக, வாய்ப்பு பத்ரிநாத்துக்கு சென்றது. ரோகித் சர்மாவும் மீண்டும் அணிக்கு திரும்பினார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக பார்த்திவ் படேல், சகா ஆகியோர் மறுபடியும் தேர்வு செய்யப்பட்டனர்.
ஸ்ரீசாந்த் "அவுட்':
வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில், உலக கோப்பை தொடரில் இடம் பெறாத பிரவீண் குமார், மீண்டும் வாய்ப்பு பெற்றார். இவருடன் வினய் குமார், முனாப் படேலும், டெக்கான் அணிக்காக ஐ.பி.எல்., தொடரில் அசத்தி வரும் இஷாந்த் சர்மாவும் அணியில் இடம் பெற்றனர். அதேநேரம், தற்போதைய "டுவென்டி-20' தொடரில் ஏமாற்றி வரும் ஸ்ரீசாந்த், அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
மிஸ்ராவுக்கு வாய்ப்பு:
சுழல் பந்து வீச்சில் ஹர்பஜன் சிங், அஷ்வின் ஜோடியுடன் அமித் மிஸ்ரா இணைந்தார். உலக கோப்பை அணியில் இடம் பெற்ற பியுஸ் சாவ்லா, பஞ்சாப் அணியின் ராகுல் சர்மா, இக்பால் அப்துல்லா ஆகியோருக்கு இம்முறை அணியில் இடம் கிடைக்கவில்லை. இதேபோல, அதிரடி வல்தாட்டி, மனோஜ் திவாரிக்கும் ஏமாற்றமே கிடைத்தது.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி குறித்து தேர்வுக்குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் கூறுகையில்,"" சீனியர்கள் இல்லாத நிலையில், சமபலத்துடன் அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது என நினைக்கின்றேன். இவர்கள் சிறப்பாக செயல்பட்டு, வெற்றி நடையை தொடர்வார்கள் என்று நம்பிக்கை உள்ளது,'' என்றார்.
---
16 பேர் கொண்ட இந்திய அணி:
காம்பிர் (கேப்டன்), ரெய்னா (துணைக் கேப்டன்), பார்த்திவ் படேல் (விக்கெட் கீப்பர்), விராத் கோஹ்லி, யுவராஜ் சிங், பத்ரிநாத், ரோகித் சர்மா, ஹர்பஜன் சிங், அஷ்வின், பிரவீண் குமார், இஷாந்த் சர்மா, முனாப் படேல், வினய் குமார், யூசுப் பதான், அமித் மிஸ்ரா, சகா.

இந்திய அணிக்கு காம்பிர் கேப்டன்! * பத்ரி நாத், சகாவுக்கு வாய்ப்பு * சச்சின், தோனி ஓய்வு

சென்னை: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக காம்பிர் தேர்வு செய்யப்பட்டார். சீனியர் வீரர்கள் சச்சின், தோனி ஆகியோருக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. தமிழகத்தின் பத்ரிநாத், சகா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.
ஒரு "டுவென்டி-20', ஐந்து ஒரு நாள் போட்டி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய அணி, வரும் மே 28ல் வெஸ்ட் இண்டீஸ் புறப்படுகிறது. வரும் ஜூன் 4ல் ஒரு "டுவென்டி-20', ஜூன் 6, 8, 11, 13 மற்றும் 16ம் தேதிகளில் ஒருநாள் போட்டிகள் நடக்கின்றது. இதற்கான இந்திய அணியை தேர்வு செய்ய, நேற்று ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது.
சச்சின் ஓய்வு:
தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வரும், இந்திய அணியின் சீனியர் வீரர்கள் சச்சின், ஜாகிர் கான், கேப்டன் தோனி ஆகியோருக்கு "டுவென்டி-20', ஒருநாள் போட்டிகளில் ஓய்வு தரப்பட்டுள்ளது. இவர்கள் டெஸ்ட் அணியில் இடம் பெறுவார்கள். காயம் காரணமாக சேவக், ஆஷிஸ் நெஹ்ரா இருவரும் தேர்வு செய்யப்படவில்லை.
புதிய கேப்டன்:
தோனி ஓய்வு காரணமாக, இந்திய அணியின் கேப்டனாக காம்பிர் நியமிக்கப்பட்டார். இவர் ஏற்கனவே நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை, 5-0 என்று கைப்பற்றி அசத்தியுள்ளார். துணைக்கேப்டன் பொறுப்பு ரெய்னாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. "ஆல் ரவுண்டர்' இடத்தை யூசுப் பதான் தட்டிச் சென்றார்.
பத்ரிநாத் அபாரம்:
"மிடில் ஆர்டருக்கு' பத்ரிநாத், ராயுடுவுக்கு இடையே கடும் போட்டி இருந்தது. ஆனால், அனுபவம் மற்றும் கடந்த ரஞ்சிக் கோப்பை சீசனில் (922 ரன்கள்) அசத்தியதன் காரணமாக, வாய்ப்பு பத்ரிநாத்துக்கு சென்றது. ரோகித் சர்மாவும் மீண்டும் அணிக்கு திரும்பினார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக பார்த்திவ் படேல், சகா ஆகியோர் மறுபடியும் தேர்வு செய்யப்பட்டனர்.
ஸ்ரீசாந்த் "அவுட்':
வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில், உலக கோப்பை தொடரில் இடம் பெறாத பிரவீண் குமார், மீண்டும் வாய்ப்பு பெற்றார். இவருடன் வினய் குமார், முனாப் படேலும், டெக்கான் அணிக்காக ஐ.பி.எல்., தொடரில் அசத்தி வரும் இஷாந்த் சர்மாவும் அணியில் இடம் பெற்றனர். அதேநேரம், தற்போதைய "டுவென்டி-20' தொடரில் ஏமாற்றி வரும் ஸ்ரீசாந்த், அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
மிஸ்ராவுக்கு வாய்ப்பு:
சுழல் பந்து வீச்சில் ஹர்பஜன் சிங், அஷ்வின் ஜோடியுடன் அமித் மிஸ்ரா இணைந்தார். உலக கோப்பை அணியில் இடம் பெற்ற பியுஸ் சாவ்லா, பஞ்சாப் அணியின் ராகுல் சர்மா, இக்பால் அப்துல்லா ஆகியோருக்கு இம்முறை அணியில் இடம் கிடைக்கவில்லை. இதேபோல, அதிரடி வல்தாட்டி, மனோஜ் திவாரிக்கும் ஏமாற்றமே கிடைத்தது.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி குறித்து தேர்வுக்குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் கூறுகையில்,"" சீனியர்கள் இல்லாத நிலையில், சமபலத்துடன் அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது என நினைக்கின்றேன். இவர்கள் சிறப்பாக செயல்பட்டு, வெற்றி நடையை தொடர்வார்கள் என்று நம்பிக்கை உள்ளது,'' என்றார்.
---
16 பேர் கொண்ட இந்திய அணி:
காம்பிர் (கேப்டன்), ரெய்னா (துணைக் கேப்டன்), பார்த்திவ் படேல் (விக்கெட் கீப்பர்), விராத் கோஹ்லி, யுவராஜ் சிங், பத்ரிநாத், ரோகித் சர்மா, ஹர்பஜன் சிங், அஷ்வின், பிரவீண் குமார், இஷாந்த் சர்மா, முனாப் படேல், வினய் குமார், யூசுப் பதான், அமித் மிஸ்ரா, சகா.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனி விளையாட்டு மூலம் பல கோடி ரூபாய் சம்பாதித்து வருகிறார். இது தவிர விளம்பர படங்களில் நடிப்பதால் மேலும் கோடிக்கணக்கில் பணம் குவிகிறது. மதுபான விளம்பரங்களிலும் டோனி நடித்துள்ளார். அவர் மதுபான விளம்பரங்களில் நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார்.

மதுபான விளம்பரத்தில் இருந்து டோனி விலக வலியுறுத்தி பசுமை தாயகத்தினர் இன்று அடையார் பார்க்ஷெரட்டன் ஓட்டல் முன்பு திரண்டனர். அங்கு தங்கி இருந்த டோனிக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று பசுமை தாயக மாநில செயலாளர் இரா.அருள் உள்பட 40 பேரை கைது செய்தனர். அவர்களை தியாகராயநகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

சென்னையில் டோனிக்கு எதிராக பசுமை தாயகத்தினர் ஆர்ப்பாட்டம்; 40 பேர் கைது

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனி விளையாட்டு மூலம் பல கோடி ரூபாய் சம்பாதித்து வருகிறார். இது தவிர விளம்பர படங்களில் நடிப்பதால் மேலும் கோடிக்கணக்கில் பணம் குவிகிறது. மதுபான விளம்பரங்களிலும் டோனி நடித்துள்ளார். அவர் மதுபான விளம்பரங்களில் நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார்.

மதுபான விளம்பரத்தில் இருந்து டோனி விலக வலியுறுத்தி பசுமை தாயகத்தினர் இன்று அடையார் பார்க்ஷெரட்டன் ஓட்டல் முன்பு திரண்டனர். அங்கு தங்கி இருந்த டோனிக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று பசுமை தாயக மாநில செயலாளர் இரா.அருள் உள்பட 40 பேரை கைது செய்தனர். அவர்களை தியாகராயநகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மும்பை: ""தோனி சிறந்த கேப்டன்,'' என, இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் புகழாரம் சூட்டினார்.
சமீபத்தில் இந்திய துணைக் கண்டத்தில் நடந்த பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், தோனி தலைமையிலான இந்திய அணி, 28 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது. இதன்மூலம் ஆறாவது முறையாக உலக கோப்பை தொடரில் விளையாடிய, இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது.
இந்திய வீரர் சச்சின் கூறியதாவது: நான் இடம் பெற்றிருந்த அணிகளில், தோனி தலைமையிலான இந்திய அணியை சிறந்ததாக கருதுகிறேன். உண்மையிலேயே தோனி சிறந்த கேப்டன். இவர், போட்டியின் போது தெளிவாகவும், எச்சரிக்கையாகவும் இருப்பார். ஆட்டத்தின் போக்கை அறிந்து கொண்டு, சீனியர் வீரர்களிடம் ஆலோசிப்பார். தவிர, பேட்ஸ்மேன், பவுலர்களிடமும் தேவைப்படும் பட்சத்தில் ஆலோசனை நடத்துவார். எப்போதும் அமைதியாக இருப்பது, இவரது சிறப்பம்சம். நெருக்கடி இல்லாமல், தோல்வி பயமின்றி விளையாடுவது இவருக்கு கூடுதல் பலம்.
"பவுலிங் மெஷின்':
இம்முறை இந்திய அணி உலக கோப்பை வென்றதில் பெரும் பங்கு, பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனை சேரும். இவரது வருகைக்கு பின், அணியில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. ஒவ்வொரு வீரரின் திறமையை அறிந்து அதற்கேற்ப பயிற்சி வழங்குவது இவரது சிறப்பு. ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் 200 முதல் 300 பந்துகள் வீசுவார். உண்மையிலேயே இவரை "பவுலிங் மெஷின்' என்று கூறலாம். இவர், அணியை விட்டு விலக இருப்பது வருத்தமான விஷயம். சில காலம் இவர் அணியில் நீடித்தால் நன்றாக இருக்கும். இவரது இழப்பை ஈடுகட்டுவது மிகவும் கடினம்.
சிறந்த நாள்:
இந்திய அணி உலக கோப்பை வென்ற, ஏப்.2ம் தேதியை வாழ்நாளின் சிறந்த நாளாக கருதுகிறேன். இதுபோன்ற தருணத்தை அளித்த கடவுளுக்கு நன்றி.
இம்முறை, உலக கோப்பை தொடர் துவங்குவதற்கு முன்பே, இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இதனால் போட்டியின் போது நெருக்கடி இருக்கத்தான் செய்தது. இதை வீரர்கள் எளிதாக சமாளித்து, கோப்பையை கைப்பற்றினர். பைனலில், ஒவ்வொரு வீரரரும் கடமை அறிந்து செயல்பட்டது வெற்றிக்கு கூடுதல் பலம்.
இதுவே முதன்முறை:
சக வீரர்கள், என்னை தூக்கிக் கொண்டு மைதானத்தை வலம் வந்தது இதுவே முதன்முறை. அப்போது எனது கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் எழும்பியது. இதனை நான் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. இதற்காக சக வீரர்களுக்கு எனது நன்றி.
உலக கோப்பை தொடருக்காக, தென் ஆப்ரிக்க தொடரில் இருந்தே பயிற்சி எடுத்தோம். இருப்பினும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டது பெங்களூருவில் நடந்த பயிற்சி முகாமில்தான். இது நல்ல பலன் அளித்தது.
இவ்வாறு சச்சின் கூறினார்.

ஓய்வு எப்போது?
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து சச்சின் கூறுகையில், ""தற்போதைக்கு, ஓய்வு எண்ணம் என் மனதில் தோன்றவில்லை. ஓய்வு பெற விரும்பினால், அன்றைய தினம் வெளிப்படையாக அறிவித்து விடுவேன். தற்போது என் கவனம் முழுவதும் உலக கோப்பை கொண்டாட்டத்தின் மீது உள்ளது. விரைவில் அடுத்து நடக்கவுள்ள தொடர்களுக்கு தயாராக வேண்டும்,'' என்றார்.

சிறந்த கேப்டன் தோனி *சச்சின் புகழாரம்

மும்பை: ""தோனி சிறந்த கேப்டன்,'' என, இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் புகழாரம் சூட்டினார்.
சமீபத்தில் இந்திய துணைக் கண்டத்தில் நடந்த பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், தோனி தலைமையிலான இந்திய அணி, 28 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது. இதன்மூலம் ஆறாவது முறையாக உலக கோப்பை தொடரில் விளையாடிய, இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது.
இந்திய வீரர் சச்சின் கூறியதாவது: நான் இடம் பெற்றிருந்த அணிகளில், தோனி தலைமையிலான இந்திய அணியை சிறந்ததாக கருதுகிறேன். உண்மையிலேயே தோனி சிறந்த கேப்டன். இவர், போட்டியின் போது தெளிவாகவும், எச்சரிக்கையாகவும் இருப்பார். ஆட்டத்தின் போக்கை அறிந்து கொண்டு, சீனியர் வீரர்களிடம் ஆலோசிப்பார். தவிர, பேட்ஸ்மேன், பவுலர்களிடமும் தேவைப்படும் பட்சத்தில் ஆலோசனை நடத்துவார். எப்போதும் அமைதியாக இருப்பது, இவரது சிறப்பம்சம். நெருக்கடி இல்லாமல், தோல்வி பயமின்றி விளையாடுவது இவருக்கு கூடுதல் பலம்.
"பவுலிங் மெஷின்':
இம்முறை இந்திய அணி உலக கோப்பை வென்றதில் பெரும் பங்கு, பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனை சேரும். இவரது வருகைக்கு பின், அணியில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. ஒவ்வொரு வீரரின் திறமையை அறிந்து அதற்கேற்ப பயிற்சி வழங்குவது இவரது சிறப்பு. ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் 200 முதல் 300 பந்துகள் வீசுவார். உண்மையிலேயே இவரை "பவுலிங் மெஷின்' என்று கூறலாம். இவர், அணியை விட்டு விலக இருப்பது வருத்தமான விஷயம். சில காலம் இவர் அணியில் நீடித்தால் நன்றாக இருக்கும். இவரது இழப்பை ஈடுகட்டுவது மிகவும் கடினம்.
சிறந்த நாள்:
இந்திய அணி உலக கோப்பை வென்ற, ஏப்.2ம் தேதியை வாழ்நாளின் சிறந்த நாளாக கருதுகிறேன். இதுபோன்ற தருணத்தை அளித்த கடவுளுக்கு நன்றி.
இம்முறை, உலக கோப்பை தொடர் துவங்குவதற்கு முன்பே, இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இதனால் போட்டியின் போது நெருக்கடி இருக்கத்தான் செய்தது. இதை வீரர்கள் எளிதாக சமாளித்து, கோப்பையை கைப்பற்றினர். பைனலில், ஒவ்வொரு வீரரரும் கடமை அறிந்து செயல்பட்டது வெற்றிக்கு கூடுதல் பலம்.
இதுவே முதன்முறை:
சக வீரர்கள், என்னை தூக்கிக் கொண்டு மைதானத்தை வலம் வந்தது இதுவே முதன்முறை. அப்போது எனது கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் எழும்பியது. இதனை நான் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. இதற்காக சக வீரர்களுக்கு எனது நன்றி.
உலக கோப்பை தொடருக்காக, தென் ஆப்ரிக்க தொடரில் இருந்தே பயிற்சி எடுத்தோம். இருப்பினும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டது பெங்களூருவில் நடந்த பயிற்சி முகாமில்தான். இது நல்ல பலன் அளித்தது.
இவ்வாறு சச்சின் கூறினார்.

ஓய்வு எப்போது?
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து சச்சின் கூறுகையில், ""தற்போதைக்கு, ஓய்வு எண்ணம் என் மனதில் தோன்றவில்லை. ஓய்வு பெற விரும்பினால், அன்றைய தினம் வெளிப்படையாக அறிவித்து விடுவேன். தற்போது என் கவனம் முழுவதும் உலக கோப்பை கொண்டாட்டத்தின் மீது உள்ளது. விரைவில் அடுத்து நடக்கவுள்ள தொடர்களுக்கு தயாராக வேண்டும்,'' என்றார்.

உலக கோப்பை போட்டியில் இந்திய அணி கேப்டன் டோனி சரியாக விளையாடவில்லை என்று அவர் மீது விமர்சனம் இருந்தது. மிகமிக முக்கியமான நேற்றைய இறுதிப்போட்டியில் அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி விமர்சனங்களை தகர்த்து எறிந்தார். அதோடு தான் மிகவும் பொறுப்பான கேப்டன், சிறந்த கேப்டன் என்பதை உணர்த்தினர்.

எளிதில் உணர்ச்சிவசப்படாத அவர் நேற்று பலமுறை தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார். இதற்கு காரணம் ஆட்டம் உலக கோப்பை இறுதிப்போட்டி என்பது தான். 275 ரன் இலக்கு என்ற நிலையில் இந்தியா ஆடியது. 31 ரன் எடுப்பதற்குள் (6.1 ஓவர்) தொடக்க வீரர்கள் ஷேவாக் (0), தெண்டுல்கர் (18) ஆட்டம் இழந்தனர். இதனால் ரசிகர்கள் மிகவும் சோர்ந்துவிட்டனர்.

3-வது விக்கெட்டுக்கு காம்பீருடன், வீராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியதால் ரசிகர்களுக்கு சிறிது நம்பிக்கை ஏற்பட்டது. அது மிகுந்த நேரம் நீடிக்கவில்லை. ஸ்கோர் 114 ஆக இருந்தபோது (21.4 ஓவர்), கோலி 35 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

இந்த நேரத்தில் யுவராஜ் தான் களம் வரவேண்டியது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் கேப்டன் டோனி 5-வது வீரராக களம் வந்தார். பொறுப்பான கேப்டன் என்பதை அவர் வந்த பிறகு தான் தெரிந்தது.

தொடக்கத்தில் மெதுவாக ஆடிய அவர் நேரம் செல்ல முரளீதரன், மலிங்கா பந்தை விளாசி தள்ளினார். அதோடு விக்கெட் விழுந்து விடக்கூடாது என்று காம்பீருக்கு பல முறை அறிவுரை கூறினார். காம்பீர் பந்தை தூக்கி அடிக்கும் போது டோனி அவரை அழைத்து ஆக்ரோஷத்துடன் அறிவுரை வழங்கினார்.

ஒவ்வொரு ரன்னாக எடுக்குமாறு கூறினார். இதை ஏற்று அவரும் அப்படி ஆடினார். ஒரு கட்டத்தில் காம்பீர் அதிரடியாக ஆடநினைத்து 97 ரன்னில் அவுட் ஆனார். காம்பீர்-டோனி ஜோடி 109 ரன் எடுத்தது. அடுத்து வந்த யுவராஜ்சிங்குக்கும், டோனி பலமுறை அறிவுரை வழங்கினார். ரன்அவுட் ஆகப்போகும் நிலை வந்தபேது அவர் அதிகமாக உணர்ச்சி வசப்பட்டார். அதே நேரத்தில் தனது பொறுப்பில் இருந்து பின்வாங்காமல் தொடர்ந்து அதிரடியாக விளையாடினார்.

குறிப்பாக பெரைரா பந்தில் சிக்சரும், மலிங்கா ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரியும் அடித்தார். அவரே சிக்சர் அடித்து வெற்றிக்கான ரன்னை எடுத்தார். உலக கோப்பை இறுதிப்போட்டி மிகவும் முக்கியமானது. இந்தப்போட்டியில் டோனி தனது பொறுப்பை உணர்ந்து நிதானமாகவும், அதிரடியாகவும் விளையாடி கோப்பையை பெற்று கொடுத்தார். இதன் மூலம் தான் ஒரு சிறந்த கேப்டன் என்பதை டோனி நிரூபித்து இருக்கிறார்.

கபில்தேவ் தலைமையில் 1983-ம் ஆண்டு உலக கோப்பை கிடைத்தது. தற்போது டோனி தலைமையில் 28 ஆண்டுகளுக்கு பிறகு உலககோப்பை கிடைத்துள்ளது. 1987 உலக கோப்பையிலும் கபில்தேவ் கேப்டனாக இருந்தார். அந்தப்போட்டியில் அரை இறுதியில் தோற்றது. அதற்கு பிறகு 1992, 1996, 1999 ஆகிய 3 உலக கோப்பையிலும் அசாரூதீன் கேப்டனாக இருந்தார். இதில் 1996-ல் அரை இறுதியில் தோற்றது. 2003-ல் கங்குலி தலைமையிலான அணி இறுதிப்போட்டிக்கு வந்து தோற்றது.

2007-ல் டிராவிட் தலைமையிலான அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது. டோனி உலக கோப்பை போட்டிக்கு முதல் முறையாக கேப்டனாக பணிபுரிந்து கோப்பையை வென்று பெருமை சேர்த்துள்ளார். 20 ஓவர் உலக கோப்பையும் டோனி தலைமையிலான இந்திய அணி 2007-ம் ஆண்டு கைப்பற்றியது. அவர் தலைமையிலான டெஸ்ட் அணியும் “நம்பர் 1” இடத்தில் உள்ளது. ஆக மொத்தத்தில் இந்தியாவின் சிறந்த கேப்டன் டோனி என்று சொன்னல் அது மிகையில்லை.

பொறுப்பான,சிறந்த கேப்டன்

உலக கோப்பை போட்டியில் இந்திய அணி கேப்டன் டோனி சரியாக விளையாடவில்லை என்று அவர் மீது விமர்சனம் இருந்தது. மிகமிக முக்கியமான நேற்றைய இறுதிப்போட்டியில் அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி விமர்சனங்களை தகர்த்து எறிந்தார். அதோடு தான் மிகவும் பொறுப்பான கேப்டன், சிறந்த கேப்டன் என்பதை உணர்த்தினர்.

எளிதில் உணர்ச்சிவசப்படாத அவர் நேற்று பலமுறை தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார். இதற்கு காரணம் ஆட்டம் உலக கோப்பை இறுதிப்போட்டி என்பது தான். 275 ரன் இலக்கு என்ற நிலையில் இந்தியா ஆடியது. 31 ரன் எடுப்பதற்குள் (6.1 ஓவர்) தொடக்க வீரர்கள் ஷேவாக் (0), தெண்டுல்கர் (18) ஆட்டம் இழந்தனர். இதனால் ரசிகர்கள் மிகவும் சோர்ந்துவிட்டனர்.

3-வது விக்கெட்டுக்கு காம்பீருடன், வீராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியதால் ரசிகர்களுக்கு சிறிது நம்பிக்கை ஏற்பட்டது. அது மிகுந்த நேரம் நீடிக்கவில்லை. ஸ்கோர் 114 ஆக இருந்தபோது (21.4 ஓவர்), கோலி 35 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

இந்த நேரத்தில் யுவராஜ் தான் களம் வரவேண்டியது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் கேப்டன் டோனி 5-வது வீரராக களம் வந்தார். பொறுப்பான கேப்டன் என்பதை அவர் வந்த பிறகு தான் தெரிந்தது.

தொடக்கத்தில் மெதுவாக ஆடிய அவர் நேரம் செல்ல முரளீதரன், மலிங்கா பந்தை விளாசி தள்ளினார். அதோடு விக்கெட் விழுந்து விடக்கூடாது என்று காம்பீருக்கு பல முறை அறிவுரை கூறினார். காம்பீர் பந்தை தூக்கி அடிக்கும் போது டோனி அவரை அழைத்து ஆக்ரோஷத்துடன் அறிவுரை வழங்கினார்.

ஒவ்வொரு ரன்னாக எடுக்குமாறு கூறினார். இதை ஏற்று அவரும் அப்படி ஆடினார். ஒரு கட்டத்தில் காம்பீர் அதிரடியாக ஆடநினைத்து 97 ரன்னில் அவுட் ஆனார். காம்பீர்-டோனி ஜோடி 109 ரன் எடுத்தது. அடுத்து வந்த யுவராஜ்சிங்குக்கும், டோனி பலமுறை அறிவுரை வழங்கினார். ரன்அவுட் ஆகப்போகும் நிலை வந்தபேது அவர் அதிகமாக உணர்ச்சி வசப்பட்டார். அதே நேரத்தில் தனது பொறுப்பில் இருந்து பின்வாங்காமல் தொடர்ந்து அதிரடியாக விளையாடினார்.

குறிப்பாக பெரைரா பந்தில் சிக்சரும், மலிங்கா ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரியும் அடித்தார். அவரே சிக்சர் அடித்து வெற்றிக்கான ரன்னை எடுத்தார். உலக கோப்பை இறுதிப்போட்டி மிகவும் முக்கியமானது. இந்தப்போட்டியில் டோனி தனது பொறுப்பை உணர்ந்து நிதானமாகவும், அதிரடியாகவும் விளையாடி கோப்பையை பெற்று கொடுத்தார். இதன் மூலம் தான் ஒரு சிறந்த கேப்டன் என்பதை டோனி நிரூபித்து இருக்கிறார்.

கபில்தேவ் தலைமையில் 1983-ம் ஆண்டு உலக கோப்பை கிடைத்தது. தற்போது டோனி தலைமையில் 28 ஆண்டுகளுக்கு பிறகு உலககோப்பை கிடைத்துள்ளது. 1987 உலக கோப்பையிலும் கபில்தேவ் கேப்டனாக இருந்தார். அந்தப்போட்டியில் அரை இறுதியில் தோற்றது. அதற்கு பிறகு 1992, 1996, 1999 ஆகிய 3 உலக கோப்பையிலும் அசாரூதீன் கேப்டனாக இருந்தார். இதில் 1996-ல் அரை இறுதியில் தோற்றது. 2003-ல் கங்குலி தலைமையிலான அணி இறுதிப்போட்டிக்கு வந்து தோற்றது.

2007-ல் டிராவிட் தலைமையிலான அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது. டோனி உலக கோப்பை போட்டிக்கு முதல் முறையாக கேப்டனாக பணிபுரிந்து கோப்பையை வென்று பெருமை சேர்த்துள்ளார். 20 ஓவர் உலக கோப்பையும் டோனி தலைமையிலான இந்திய அணி 2007-ம் ஆண்டு கைப்பற்றியது. அவர் தலைமையிலான டெஸ்ட் அணியும் “நம்பர் 1” இடத்தில் உள்ளது. ஆக மொத்தத்தில் இந்தியாவின் சிறந்த கேப்டன் டோனி என்று சொன்னல் அது மிகையில்லை.

மும்பை: எல்லோரும் பேட் செய்கிறார்கள், டோணி என்ன செய்கிறார் என்று கேட்கப்பட்டு வந்த கேள்விகளுக்கு நேற்று அட்டகாசமான, ஆணித்தரமான முறையில் அருமையான பதிலளித்து விட்டார் கேப்டன் டோணி. நேற்று அவரது பேட்டிங் பிரளயத்தால்தான் இலங்கையை நசுக்கி, இந்தியா தனது 28 ஆண்டு கால கோப்பைக் கனவை நனவாக்க முடிந்தது.

இந்தத் தொடர் முழுவதுமே டோணியிடமிருந்து பெரியஅளவில் ரன்கள் வரவில்லை. மேலும், அவரது முடிவுகள் பலவும் கூட வி்மர்சிக்கப்பட்டன. குறிப்பாக நேற்றே கூட அஸ்வினுக்குப் பதில், ஸ்ரீசாந்த்தை சேர்த்தது கூட விமர்சிக்கப்பட்டது.

ஆனால் தன்னை நோக்கி வீசப்பட்ட ஒட்டுமொத்த கேள்விகளுக்கும் தனது அசாத்தியமான பேட்டிங் மற்றும் அரிய வெற்றியின் மூலம் ஆணித்தரமாக பதிலளித்து விட்டார் டோணி.

நேற்று அவர் போட்டியை முடித்து வைத்த விதம் அட்டகாசமானது. அழகான ஒரு சூப்பர்ப் சிக்ஸரை விளாசி இந்தியாவை உற்சாகத்தின் உச்சிக்குக் கூட்டிக் கொண்டு போய் விட்டார் டோணி.

இந்தத் தொடர் முழுவதுமே 6வது நிலை வீரராகத்தான் களம் இறங்கினார் டோணி. அவருக்கு முன்பு யுவராஜ் சிங் வருவார். அதன் பின்னர்தான் டோணி இறங்குவார். ஆனால் நேற்று ஆச்சரியமளிக்கும் வகையில் 5வதாக அவர் களம் இறங்கினார். அப்போது இந்தியா இக்கட்டான நிலையில் இருந்தது. 3 முக்கிய விக்கெட்களை இழந்து 114 ரன்களில் தடுமாறிக் கொண்டிருந்தது இந்தியா. இதனால் தானே களம் இறங்கி அணியை மீட்க முடிவு செய்து யுவராஜுக்குப் பதில் அவரை இறங்கி விட்டார் டோணி.

அதேபோல களத்தில் குதித்தது முதல் கடைசி வரை மிகுந்த மன உறுதியோடும், வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற வெறியோடும் ஆடினார் டோணி. அவரும் கம்பீருமாக சேர்ந்து போட்ட 100 ரன் பார்ட்னர்ஷிப்பிலிருந்தே டோணியின் வெற்றி தாகத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது ரசிகர்களால். சும்மா, சொல்லக் கூடாது, இருவரும் சேர்ந்து ஆடியது மிகப் பிரமாதமாக இருந்தது.

வெற்றி கிட்டுமா என்ற சந்தேகத்தில் இருந்தவர்களை ரிலாக்ஸ் ஆக்கி, சந்தோஷத்தைக் கொண்டாட தயார்படுத்தி விட்டனர் கம்பீரும், டோணியும். கம்பீர் நிதானமாக ரன் குவிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், டோணி அதிரடிக்குத் தாவி பின்னி எடுத்து விட்டார்.

குறிப்பாக இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் அவரது கையில் சிக்கி கடுமையாக தண்டிக்கப்பட்டனர். திஷரா பெரைரா, மலிங்கா ஆகியோரின் பந்துகளை பவுண்டரிகளுக்கு விரட்டி ஒன்றுமில்லாமல் செய்து விட்டார்.

டோணியை அடக்க இலங்கை கேப்டன் சங்கக்காரா செய்த அத்தனை உத்திகளும் தவிடுபொடியாக்கி விட்டன. 2 சிக்ஸ், 8 பவுண்டரிகளுடன் 79 பந்துகளில் 91 ரன்களைக் குவித்து நிமிர்ந்து நின்றார் டோணி, ஆட்ட முடிவில்.

யுவராஜ் சிங்குக்குப் பதில் டோணிநேற்று களம் இறங்கியதற்கு முக்கியக் காரணம், அப்போது இலங்கை இரண்டு ஆப் ஸ்பின்னர்களை வைத்து இந்தியாவைக் கலைக்க முயற்சித்ததே. மேலும், ஒரே நேரத்தில் இரண்டு இடது கை ஆட்டக்காரர்கள் இருக்க வேண்டாம் என்று நினைத்தார் டோணி. இதனால்தான் யுவராஜுக்குப் பதில் அவரே இறங்கி விட்டார். ஆனால் அதிர்ஷ்டம் டோணியின் பக்கம் இருந்ததால் தப்பித்தார். ஒருவேளை அவரது முடிவு தப்பாகப் போயிருந்தால் விமர்சகர்களின் வாயில் சிக்கி வறுத்தெடுக்கப்பட்டிருப்பார் டோணி. போட்டியின் முடிவில் அவரே இதை சிரித்தபடி கூறினார்.

ஆரம்பத்தில் மிகவும் கவனமாகத்தான் ஆடினார் டோணி. இந்தியாவின் நிலை வலுப்பட்ட அடுத்த விநாடியே அவர் அதிரடிக்குத் தாவினார். இலங்கை பந்து வீச்சு வெளுக்க ஆரம்பித்து விட்டார். அதுவும் அவர் போட்ட இரண்டு சிக்ஸர்களும் சூப்பர்ப்.

அதிலும் முத்தையா முரளிதரனின் பந்துகளை அவர் அடித்து நொறுக்கியபோது மைதாமே குலுங்கிப் போய் விட்டது. அதுவரை நன்றாகத்தான் பந்து வீசிக் கொண்டிருந்தார் முரளி. ஆனால் டோணியிடம் சிக்கிய அவரது சுழற்பந்து ஒன்றுமில்லாமல் போய் விட்டது.

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முரளிதரன் முன்பு விளையாடியபோது கிடைத்த அனுபவத்தை வைத்து முரளியின் பந்து வீச்சை சிதறடித்து விட்டார் டோணி.

நேற்றைய அதிரடி ஆட்டம் மூலம் தன் மீதான விமர்சனத்தைத் துடைத்து, தனது பேட்டிங் பிரளயத்தையும் மீட்டு, இந்தியாவின் 28 ஆண்டு கால கனவையும் நனவாக்கி, ஒரே 'ஸ்டிரோக்கில்' பல சிக்ஸர்களை அடித்து விட்டார் டோணி.

ரன் வறட்சியைப் போக்கி, கோப்பைக் கனவையும் நனவாக்கிய கேப்டன் டோணி

மும்பை: எல்லோரும் பேட் செய்கிறார்கள், டோணி என்ன செய்கிறார் என்று கேட்கப்பட்டு வந்த கேள்விகளுக்கு நேற்று அட்டகாசமான, ஆணித்தரமான முறையில் அருமையான பதிலளித்து விட்டார் கேப்டன் டோணி. நேற்று அவரது பேட்டிங் பிரளயத்தால்தான் இலங்கையை நசுக்கி, இந்தியா தனது 28 ஆண்டு கால கோப்பைக் கனவை நனவாக்க முடிந்தது.

இந்தத் தொடர் முழுவதுமே டோணியிடமிருந்து பெரியஅளவில் ரன்கள் வரவில்லை. மேலும், அவரது முடிவுகள் பலவும் கூட வி்மர்சிக்கப்பட்டன. குறிப்பாக நேற்றே கூட அஸ்வினுக்குப் பதில், ஸ்ரீசாந்த்தை சேர்த்தது கூட விமர்சிக்கப்பட்டது.

ஆனால் தன்னை நோக்கி வீசப்பட்ட ஒட்டுமொத்த கேள்விகளுக்கும் தனது அசாத்தியமான பேட்டிங் மற்றும் அரிய வெற்றியின் மூலம் ஆணித்தரமாக பதிலளித்து விட்டார் டோணி.

நேற்று அவர் போட்டியை முடித்து வைத்த விதம் அட்டகாசமானது. அழகான ஒரு சூப்பர்ப் சிக்ஸரை விளாசி இந்தியாவை உற்சாகத்தின் உச்சிக்குக் கூட்டிக் கொண்டு போய் விட்டார் டோணி.

இந்தத் தொடர் முழுவதுமே 6வது நிலை வீரராகத்தான் களம் இறங்கினார் டோணி. அவருக்கு முன்பு யுவராஜ் சிங் வருவார். அதன் பின்னர்தான் டோணி இறங்குவார். ஆனால் நேற்று ஆச்சரியமளிக்கும் வகையில் 5வதாக அவர் களம் இறங்கினார். அப்போது இந்தியா இக்கட்டான நிலையில் இருந்தது. 3 முக்கிய விக்கெட்களை இழந்து 114 ரன்களில் தடுமாறிக் கொண்டிருந்தது இந்தியா. இதனால் தானே களம் இறங்கி அணியை மீட்க முடிவு செய்து யுவராஜுக்குப் பதில் அவரை இறங்கி விட்டார் டோணி.

அதேபோல களத்தில் குதித்தது முதல் கடைசி வரை மிகுந்த மன உறுதியோடும், வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற வெறியோடும் ஆடினார் டோணி. அவரும் கம்பீருமாக சேர்ந்து போட்ட 100 ரன் பார்ட்னர்ஷிப்பிலிருந்தே டோணியின் வெற்றி தாகத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது ரசிகர்களால். சும்மா, சொல்லக் கூடாது, இருவரும் சேர்ந்து ஆடியது மிகப் பிரமாதமாக இருந்தது.

வெற்றி கிட்டுமா என்ற சந்தேகத்தில் இருந்தவர்களை ரிலாக்ஸ் ஆக்கி, சந்தோஷத்தைக் கொண்டாட தயார்படுத்தி விட்டனர் கம்பீரும், டோணியும். கம்பீர் நிதானமாக ரன் குவிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், டோணி அதிரடிக்குத் தாவி பின்னி எடுத்து விட்டார்.

குறிப்பாக இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் அவரது கையில் சிக்கி கடுமையாக தண்டிக்கப்பட்டனர். திஷரா பெரைரா, மலிங்கா ஆகியோரின் பந்துகளை பவுண்டரிகளுக்கு விரட்டி ஒன்றுமில்லாமல் செய்து விட்டார்.

டோணியை அடக்க இலங்கை கேப்டன் சங்கக்காரா செய்த அத்தனை உத்திகளும் தவிடுபொடியாக்கி விட்டன. 2 சிக்ஸ், 8 பவுண்டரிகளுடன் 79 பந்துகளில் 91 ரன்களைக் குவித்து நிமிர்ந்து நின்றார் டோணி, ஆட்ட முடிவில்.

யுவராஜ் சிங்குக்குப் பதில் டோணிநேற்று களம் இறங்கியதற்கு முக்கியக் காரணம், அப்போது இலங்கை இரண்டு ஆப் ஸ்பின்னர்களை வைத்து இந்தியாவைக் கலைக்க முயற்சித்ததே. மேலும், ஒரே நேரத்தில் இரண்டு இடது கை ஆட்டக்காரர்கள் இருக்க வேண்டாம் என்று நினைத்தார் டோணி. இதனால்தான் யுவராஜுக்குப் பதில் அவரே இறங்கி விட்டார். ஆனால் அதிர்ஷ்டம் டோணியின் பக்கம் இருந்ததால் தப்பித்தார். ஒருவேளை அவரது முடிவு தப்பாகப் போயிருந்தால் விமர்சகர்களின் வாயில் சிக்கி வறுத்தெடுக்கப்பட்டிருப்பார் டோணி. போட்டியின் முடிவில் அவரே இதை சிரித்தபடி கூறினார்.

ஆரம்பத்தில் மிகவும் கவனமாகத்தான் ஆடினார் டோணி. இந்தியாவின் நிலை வலுப்பட்ட அடுத்த விநாடியே அவர் அதிரடிக்குத் தாவினார். இலங்கை பந்து வீச்சு வெளுக்க ஆரம்பித்து விட்டார். அதுவும் அவர் போட்ட இரண்டு சிக்ஸர்களும் சூப்பர்ப்.

அதிலும் முத்தையா முரளிதரனின் பந்துகளை அவர் அடித்து நொறுக்கியபோது மைதாமே குலுங்கிப் போய் விட்டது. அதுவரை நன்றாகத்தான் பந்து வீசிக் கொண்டிருந்தார் முரளி. ஆனால் டோணியிடம் சிக்கிய அவரது சுழற்பந்து ஒன்றுமில்லாமல் போய் விட்டது.

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முரளிதரன் முன்பு விளையாடியபோது கிடைத்த அனுபவத்தை வைத்து முரளியின் பந்து வீச்சை சிதறடித்து விட்டார் டோணி.

நேற்றைய அதிரடி ஆட்டம் மூலம் தன் மீதான விமர்சனத்தைத் துடைத்து, தனது பேட்டிங் பிரளயத்தையும் மீட்டு, இந்தியாவின் 28 ஆண்டு கால கனவையும் நனவாக்கி, ஒரே 'ஸ்டிரோக்கில்' பல சிக்ஸர்களை அடித்து விட்டார் டோணி.

மும்பை: "பைனல் குறித்து வெளியாகும் பரபரப்பான தகவல்களில் இருந்து, சக வீரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இலங்கைக்கு எதிரான போட்டியில், சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்த வேண்டும்,'' என, இந்திய அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
பத்தாவது உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை நடக்கும் பைனலில் ஆசிய அணிகளான இந்தியா, இலங்கை மோதுகின்றன.
இதுகுறித்து கேப்டன் தோனி கூறியது:
உலக கோப்பை அட்டவணை, உண்மையில் நமக்கு பெரும் உதவியாக இருந்தது. கிடைக்கும் ஓய்வை பயன்படுத்தி, கொஞ்சம், கொஞ்சமாக இழந்த பார்மை மீட்டு வந்தனர். இத்தொடரின் சில போட்டிகளில், கடைசிநேரத்தில் தான் வெற்றி பெற்றோம். இது இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்பாக அமைய, அரையிறுதிக்கு முன்னேற முடிந்தது.
பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டி நடந்த மொகாலி ஆடுகளம், எப்போதும் வேகத்துக்கு தான் ஒத்துழைக்கும். இதனால் தான் அஷ்வினை சேர்க்காமல் ஆஷிஸ் நெஹ்ராவை களமிறக்கினேன். ஆனால் எனது கணிப்பு தவறாகிவிட்டது. இருப்பினும், எதிர்பார்ப்புக்கு மாறாக சுழலுக்கு நன்கு உதவ, ஹர்பஜனும், யுவராஜ் சிங்கும் அசத்தி, நெருக்கடி கொடுத்தனர்.
தற்போது உலக கோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேறியுள்ளோம். நாம் கோப்பை வெல்லவேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புகின்றனர். இந்நிலையில் தேசத்துக்காக போட்டிகளில் பங்கேற்கும் போது, எந்த ஒரு வீரரையும் யாரும் ஊக்குவிக்க வேண்டும் என்ற தேவையில்லை.
சரியான நேரத்தில் எழுச்சி பெறுவோம் என இத்தொடரின் துவக்கத்தில் கூறினேன். அதுபோல ஒவ்வொரு போட்டியிலும் போராடி வென்று வந்துள்ளோம். இது அவ்வளவு எளிதானதல்ல. தவிர, இலக்குகளை "சேஸ்' செய்வது உட்பட, அனைத்து பிரிவுகளிலும் அணியின் திறமையை சோதித்து பார்த்துவிட்டோம். தற்போது பைனலுக்கு தயாராகியுள்ளோம்.
பைனல் போட்டி குறித்து பல்வேறு வகையான கருத்துக்கள் நம்மைச் சுற்றி உலவுகின்றன. இந்த செய்திகளில் நமது கவனத்தை சிதறச்செய்து விடக்கூடாது. ஏனெனில் எல்லோரும் தொழில் ரீதியிலான கிரிக்கெட் வீரர்கள், அதனால் பைனலில் சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்த வேண்டும்.
இத்தொடரில் துவக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தால் அசத்தி வருபவர்கள் இலங்கை அணியினர். இவர்களுக்கு எதிரான பைனலில், நம்மால் முடிந்த அளவுக்கு திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தான், இலங்கை அணியை வீழ்த்த முடியும்.
இவ்வாறு தோனி தெரிவித்தார்.

இந்திய வீரர்களுக்கு தோனி எச்சரிக்கை! * விழிப்பாக இருக்க வேண்டும்

மும்பை: "பைனல் குறித்து வெளியாகும் பரபரப்பான தகவல்களில் இருந்து, சக வீரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இலங்கைக்கு எதிரான போட்டியில், சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்த வேண்டும்,'' என, இந்திய அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
பத்தாவது உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை நடக்கும் பைனலில் ஆசிய அணிகளான இந்தியா, இலங்கை மோதுகின்றன.
இதுகுறித்து கேப்டன் தோனி கூறியது:
உலக கோப்பை அட்டவணை, உண்மையில் நமக்கு பெரும் உதவியாக இருந்தது. கிடைக்கும் ஓய்வை பயன்படுத்தி, கொஞ்சம், கொஞ்சமாக இழந்த பார்மை மீட்டு வந்தனர். இத்தொடரின் சில போட்டிகளில், கடைசிநேரத்தில் தான் வெற்றி பெற்றோம். இது இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்பாக அமைய, அரையிறுதிக்கு முன்னேற முடிந்தது.
பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டி நடந்த மொகாலி ஆடுகளம், எப்போதும் வேகத்துக்கு தான் ஒத்துழைக்கும். இதனால் தான் அஷ்வினை சேர்க்காமல் ஆஷிஸ் நெஹ்ராவை களமிறக்கினேன். ஆனால் எனது கணிப்பு தவறாகிவிட்டது. இருப்பினும், எதிர்பார்ப்புக்கு மாறாக சுழலுக்கு நன்கு உதவ, ஹர்பஜனும், யுவராஜ் சிங்கும் அசத்தி, நெருக்கடி கொடுத்தனர்.
தற்போது உலக கோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேறியுள்ளோம். நாம் கோப்பை வெல்லவேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புகின்றனர். இந்நிலையில் தேசத்துக்காக போட்டிகளில் பங்கேற்கும் போது, எந்த ஒரு வீரரையும் யாரும் ஊக்குவிக்க வேண்டும் என்ற தேவையில்லை.
சரியான நேரத்தில் எழுச்சி பெறுவோம் என இத்தொடரின் துவக்கத்தில் கூறினேன். அதுபோல ஒவ்வொரு போட்டியிலும் போராடி வென்று வந்துள்ளோம். இது அவ்வளவு எளிதானதல்ல. தவிர, இலக்குகளை "சேஸ்' செய்வது உட்பட, அனைத்து பிரிவுகளிலும் அணியின் திறமையை சோதித்து பார்த்துவிட்டோம். தற்போது பைனலுக்கு தயாராகியுள்ளோம்.
பைனல் போட்டி குறித்து பல்வேறு வகையான கருத்துக்கள் நம்மைச் சுற்றி உலவுகின்றன. இந்த செய்திகளில் நமது கவனத்தை சிதறச்செய்து விடக்கூடாது. ஏனெனில் எல்லோரும் தொழில் ரீதியிலான கிரிக்கெட் வீரர்கள், அதனால் பைனலில் சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்த வேண்டும்.
இத்தொடரில் துவக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தால் அசத்தி வருபவர்கள் இலங்கை அணியினர். இவர்களுக்கு எதிரான பைனலில், நம்மால் முடிந்த அளவுக்கு திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தான், இலங்கை அணியை வீழ்த்த முடியும்.
இவ்வாறு தோனி தெரிவித்தார்.

உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோல்வி அடைவது நீடித்து வருகிறது. ஏற்கனவே 4 முறை தோல்வி அடைந்து இருந்தது. மொகாலியில் நேற்று நடந்த அரை இறுதியில் பாகிஸ்தான் அணி 29 ரன்னில் இந்தியாவிடம் தோற்றது. 5-வது முறையாக அந்த அணி இந்தியாவிடம் தோல்வியை தழுவியுள்ளது.

இந்த தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் அப்ரிடி கூறியதாவது:-

கேட்ச்களை தவறவிட்டதே தோல்விக்கு முக்கிய காரணம். எங்களைவிட இந்திய அணி சிறப்பாக விளையாடியது. அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற எனது வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன். எங்கள் அணியின் எந்த ஒரு ஜோடியும் நிலைத்து நின்று ஆடவில்லை.

விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது. வகாப் ரியாஸ் சிறப்பாக பந்து வீசினார். உமர்குல் பந்து வீச்சு சரியாக அமையவில்லை. எந்த ஒரு நபருக்கும் மோசமான நாள் அமையலாம். இந்தியாவுடன் மோதும் அரை இறுதி போட்டியை பாகிஸ்தானில் அனைவரும் எதிர்பார்த்தனர். இந்த தோல்விக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

கேட்ச்”களை தவறவிட்டதால் தோல்வி அடைந்தோம்: பாகிஸ்தான் மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் -அப்ரிடி

உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோல்வி அடைவது நீடித்து வருகிறது. ஏற்கனவே 4 முறை தோல்வி அடைந்து இருந்தது. மொகாலியில் நேற்று நடந்த அரை இறுதியில் பாகிஸ்தான் அணி 29 ரன்னில் இந்தியாவிடம் தோற்றது. 5-வது முறையாக அந்த அணி இந்தியாவிடம் தோல்வியை தழுவியுள்ளது.

இந்த தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் அப்ரிடி கூறியதாவது:-

கேட்ச்களை தவறவிட்டதே தோல்விக்கு முக்கிய காரணம். எங்களைவிட இந்திய அணி சிறப்பாக விளையாடியது. அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற எனது வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன். எங்கள் அணியின் எந்த ஒரு ஜோடியும் நிலைத்து நின்று ஆடவில்லை.

விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது. வகாப் ரியாஸ் சிறப்பாக பந்து வீசினார். உமர்குல் பந்து வீச்சு சரியாக அமையவில்லை. எந்த ஒரு நபருக்கும் மோசமான நாள் அமையலாம். இந்தியாவுடன் மோதும் அரை இறுதி போட்டியை பாகிஸ்தானில் அனைவரும் எதிர்பார்த்தனர். இந்த தோல்விக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்களால் மிகவும் எதிர் பார்க்கப்பட்ட அரை இறுதிப்போட்டியில் இந்தியா 29 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 260 ரன் எடுத்தது. தெண்டுல்கர் 85 ரன்னும், ஷேவாக் 25 பந்தில் 38 ரன்னும், ரெய்னா 36 ரன்னும் எடுத்தனர். வகாப் ரியாஸ் 5 விக்கெட்டுகள், அஜ்மல் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்.

பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் திணறியது. அந்த அணி 49.5 ஓவரில் 231 ரன்னில் “ஆல்-அவுட்” ஆனது. ஜாகீர்கான், நெக்ரா, முனாப்பட்டேல், ஹர்பஜன்சிங், யுவராஜ்சிங் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள். வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் டோனி நிருபர்களிடம் கூறியதாவது:-

நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக விளையாடியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. 260 ரன் என்பது இந்த ஆடுகளத்தில் நல்ல ஸ்கோர் தான். ஆனால் மிகவும் கவனமுடன் விளையாடினோம். பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக பந்து வீச்சினார்கள். பாகிஸ்தான் வீரர்கள் சுழற்பந்து வீச்சில் சிறப்பாக ஆடுவார்கள் என்று கருதியும், ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்று கருதிதான் அஸ்வினை நீக்கிவிட்டு 3-வது வேகப்பந்து வீரரை சேர்த்தேன்.

ஆடுகளம் குறித்து நான் கணித்தது தவறானது. சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் பந்து திரும்பியது. ஆனாலும் எங்களது வேகப்பந்து வீரர்கள் மிகவும் சிறப்பாக பந்து வீசினார்கள். நெக்ரா, ஜாகீர்கான், முனாப்பட்டேல் நன்றாக வீசினார்கள். இந்தியாவின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. தெண்டுல்கரின் பேட்டிங் மிகவும் அபாரமாக இருந்தது. இளம் வீரர்களுக்கு அவர் உதவியாக உள்ளார். ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர் சிறப்பாக விளையாடுவார். அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு தெண்டுல்கர் மிக சிறந்த வழிகாட்டி. ஆசிஷ் நெக்ரா குறித்து விமர்சிக்கப்பட்டது. இது கிரிக்கெட்டின் ஒரு பகுதி. ஆனால் அவர் சிறப்பாக பந்து வீசியதை அனைவரும் பார்த்து இருப்பார்கள்.

ரெய்னாவின் 36 ரன் என்பது மிகவும் சிறப்பானது. 50 ஓவர் வரை ஆடியது முக்கியமானது. இதற்கு ரெய்னா தான் காரணம். பேட்டிங்கில் பவர்பிளேயில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். அணியில் தனிப்பட்டவர்களின் செயல்பாடு இருக்கும். ஆனால் ஒவ்வொரு வரும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்தனர். ஒவ்வொரு வரும் அணியின் வெற்றிக்காகவே ஆடுகிறார்கள். வீரர்களின் கூட்டு முயற்சியால் தான் வெற்றி பெற்றோம். இறுதிப்போட்டியில் இலங்கையை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு டோனி கூறினார்.

கூட்டு முயற்சியால் வெற்றி: இளம் வீரர்களுக்கு தெண்டுல்கர் வழிகாட்டி; டோனி பாராட்டு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்களால் மிகவும் எதிர் பார்க்கப்பட்ட அரை இறுதிப்போட்டியில் இந்தியா 29 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 260 ரன் எடுத்தது. தெண்டுல்கர் 85 ரன்னும், ஷேவாக் 25 பந்தில் 38 ரன்னும், ரெய்னா 36 ரன்னும் எடுத்தனர். வகாப் ரியாஸ் 5 விக்கெட்டுகள், அஜ்மல் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்.

பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் திணறியது. அந்த அணி 49.5 ஓவரில் 231 ரன்னில் “ஆல்-அவுட்” ஆனது. ஜாகீர்கான், நெக்ரா, முனாப்பட்டேல், ஹர்பஜன்சிங், யுவராஜ்சிங் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள். வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் டோனி நிருபர்களிடம் கூறியதாவது:-

நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக விளையாடியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. 260 ரன் என்பது இந்த ஆடுகளத்தில் நல்ல ஸ்கோர் தான். ஆனால் மிகவும் கவனமுடன் விளையாடினோம். பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக பந்து வீச்சினார்கள். பாகிஸ்தான் வீரர்கள் சுழற்பந்து வீச்சில் சிறப்பாக ஆடுவார்கள் என்று கருதியும், ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்று கருதிதான் அஸ்வினை நீக்கிவிட்டு 3-வது வேகப்பந்து வீரரை சேர்த்தேன்.

ஆடுகளம் குறித்து நான் கணித்தது தவறானது. சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் பந்து திரும்பியது. ஆனாலும் எங்களது வேகப்பந்து வீரர்கள் மிகவும் சிறப்பாக பந்து வீசினார்கள். நெக்ரா, ஜாகீர்கான், முனாப்பட்டேல் நன்றாக வீசினார்கள். இந்தியாவின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. தெண்டுல்கரின் பேட்டிங் மிகவும் அபாரமாக இருந்தது. இளம் வீரர்களுக்கு அவர் உதவியாக உள்ளார். ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர் சிறப்பாக விளையாடுவார். அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு தெண்டுல்கர் மிக சிறந்த வழிகாட்டி. ஆசிஷ் நெக்ரா குறித்து விமர்சிக்கப்பட்டது. இது கிரிக்கெட்டின் ஒரு பகுதி. ஆனால் அவர் சிறப்பாக பந்து வீசியதை அனைவரும் பார்த்து இருப்பார்கள்.

ரெய்னாவின் 36 ரன் என்பது மிகவும் சிறப்பானது. 50 ஓவர் வரை ஆடியது முக்கியமானது. இதற்கு ரெய்னா தான் காரணம். பேட்டிங்கில் பவர்பிளேயில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். அணியில் தனிப்பட்டவர்களின் செயல்பாடு இருக்கும். ஆனால் ஒவ்வொரு வரும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்தனர். ஒவ்வொரு வரும் அணியின் வெற்றிக்காகவே ஆடுகிறார்கள். வீரர்களின் கூட்டு முயற்சியால் தான் வெற்றி பெற்றோம். இறுதிப்போட்டியில் இலங்கையை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு டோனி கூறினார்.

மொகாலி: "பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி குறித்து வெளியாகும் பல்வேறு செய்திகளால், வீரர்கள் தங்கள் கவனத்தை சிதறவிட்டுவிடக் கூடாது. இன்றைய போட்டியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்,'' என, இந்திய அணி கேப்டன் தோனி, வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட்டின் இரண்டாவது அரையிறுதி போட்டியில், இன்று இந்திய அணி, தனது பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. கிரிக்கெட் உலகின் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் இந்த போட்டி குறித்து கேப்டன் தோனி கூறியது:
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி குறித்து, பல்வேறு செய்திகளை மீடியா வெளியிட்டு வருகிறது. இதிலிருந்து எங்கள் மீது எந்தளவுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என தெரிகிறது. இவைகள் அனைத்தும் கிரிக்கெட்டின் ஒருபகுதி தான். இதை நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும்.
உலக கோப்பை என்பது மிகப்பெரிய தொடர். இதற்காக சிறப்பாக தயாராகியுள்ளோம். இருப்பினும், இதற்கு முந்தைய போட்டிகளில் விளையாடியதைப் போல, இப்போதும் அதுபோலத்தான் விளையாட போகிறோம். மற்றபடி சொந்தமண் என்பதால் ஏற்படும் நெருக்கடி, எங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாது.
சிறப்பான பவுலிங்:
அதேநேரம், பாகிஸ்தான் அணி சிறந்த பவுலிங்கை கொண்டுள்ளது. அணியின் வேகப்பந்து வீச்சாளர்களும், ஸ்பின்னர்களும் சிறப்பாக செயல்படுகின்றனர். தவிர, "பார்ட் டைம்' பவுலர்களும் அசத்துகின்றனர். இந்திய துணைக்கண்டத்து ஆடுகளங்களில் இந்த வீரர்கள் தான் ஆதிக்கம் செலுத்த முடியும். அப்ரிதியின் பந்துகளை கவனித்து, விளையாடுவோம்.
பேட்டிங் நம்பிக்கை:
பொதுவாக 5,6 அல்லது 7வதாக களமிறங்கும் போது, அதிகமாக பேட்டிங்கிற்கு வாய்ப்பு வராது. என்னைப் பொறுத்தவரையில் பேட்டிங்கில் சிறப்பாகவே விளையாடுகிறேன். ஒருசில நேரத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாத நிலை இருக்கும். வங்கதேசத்துக்கு எதிராக நல்ல சூழ்நிலை இருந்த போது, நான் பேட்டிங் செய்யவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், அதிரடிக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால், பந்து நேராக பீல்டரிடம் சென்றுவிட்டது.
முக்கியமான போட்டி:
இந்த போட்டி முக்கியமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேநேரம், வரும் காலங்களில் இதை மறந்து விடுவோம். கடந்த 2007 "டுவென்டி-20' உலக கோப்பை தொடரின் அரையிறுதி, பைனலின் போது என்ன மனநிலையில் இருந்தோம் என்பது இப்போது தெரியாது. ஏனெனில் அடுத்த 3 ஆண்டுகளில், பல போட்டிகளில் பங்கேற்று விட்டோம்.
ஆடுகளம் தெரியாது:
அதேநேரம், இன்றைய நாளின் இறுதியில் ஏதாவது ஒரு அணி தோற்கத்தான் வேண்டும். இது கிரிக்கெட்டில் மட்டுமல்ல, அனைத்து விளையாட்டிலும் இப்படித்தான் நடக்கும். இன்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்டு, 50 ஓவரும் அசத்தினால் வெற்றி பெறலாம்.
மொகாலி ஆடுகளத்தை இன்னும் பார்வையிடவில்லை. இதனால் அதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது. ஆனால், பெரும்பாலான நேரங்களில், பேட்ஸ்மேன்களுக்கு சாதமாகத்தான் இருந்து வருகிறது.
இவ்வாறு தோனி தெரிவித்தார்.

அரசியல் மாற்றம்
இன்றைய போட்டியில் இரண்டு நாடுகளின் பிரதமர்களின் பங்கேற்பு குறித்து இந்திய அணியின் கேப்டன் தோனி கூறுகையில்,"" அணியின் கேப்டனாக எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை திறமையாக செய்வேன். போட்டியை காண பிரதமர்கள் வருவது வீரர்கள் கவனத்தை திசை திருப்பலாம். இருப்பினும், இரு நாடுகள் இடையே அரசியல் ரீதியாக மாற்றத்தை கொண்டுவர, நாங்கள் எப்படி உதவலாம் என, நினைத்துக்கொண்டுள்ளேன்,'' என்றார்.

வீரர்கள் கவனமாக விளையாட வேண்டும் * கேப்டன் தோனி அறிவுரை

மொகாலி: "பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி குறித்து வெளியாகும் பல்வேறு செய்திகளால், வீரர்கள் தங்கள் கவனத்தை சிதறவிட்டுவிடக் கூடாது. இன்றைய போட்டியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்,'' என, இந்திய அணி கேப்டன் தோனி, வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட்டின் இரண்டாவது அரையிறுதி போட்டியில், இன்று இந்திய அணி, தனது பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. கிரிக்கெட் உலகின் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் இந்த போட்டி குறித்து கேப்டன் தோனி கூறியது:
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி குறித்து, பல்வேறு செய்திகளை மீடியா வெளியிட்டு வருகிறது. இதிலிருந்து எங்கள் மீது எந்தளவுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என தெரிகிறது. இவைகள் அனைத்தும் கிரிக்கெட்டின் ஒருபகுதி தான். இதை நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும்.
உலக கோப்பை என்பது மிகப்பெரிய தொடர். இதற்காக சிறப்பாக தயாராகியுள்ளோம். இருப்பினும், இதற்கு முந்தைய போட்டிகளில் விளையாடியதைப் போல, இப்போதும் அதுபோலத்தான் விளையாட போகிறோம். மற்றபடி சொந்தமண் என்பதால் ஏற்படும் நெருக்கடி, எங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாது.
சிறப்பான பவுலிங்:
அதேநேரம், பாகிஸ்தான் அணி சிறந்த பவுலிங்கை கொண்டுள்ளது. அணியின் வேகப்பந்து வீச்சாளர்களும், ஸ்பின்னர்களும் சிறப்பாக செயல்படுகின்றனர். தவிர, "பார்ட் டைம்' பவுலர்களும் அசத்துகின்றனர். இந்திய துணைக்கண்டத்து ஆடுகளங்களில் இந்த வீரர்கள் தான் ஆதிக்கம் செலுத்த முடியும். அப்ரிதியின் பந்துகளை கவனித்து, விளையாடுவோம்.
பேட்டிங் நம்பிக்கை:
பொதுவாக 5,6 அல்லது 7வதாக களமிறங்கும் போது, அதிகமாக பேட்டிங்கிற்கு வாய்ப்பு வராது. என்னைப் பொறுத்தவரையில் பேட்டிங்கில் சிறப்பாகவே விளையாடுகிறேன். ஒருசில நேரத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாத நிலை இருக்கும். வங்கதேசத்துக்கு எதிராக நல்ல சூழ்நிலை இருந்த போது, நான் பேட்டிங் செய்யவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், அதிரடிக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால், பந்து நேராக பீல்டரிடம் சென்றுவிட்டது.
முக்கியமான போட்டி:
இந்த போட்டி முக்கியமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேநேரம், வரும் காலங்களில் இதை மறந்து விடுவோம். கடந்த 2007 "டுவென்டி-20' உலக கோப்பை தொடரின் அரையிறுதி, பைனலின் போது என்ன மனநிலையில் இருந்தோம் என்பது இப்போது தெரியாது. ஏனெனில் அடுத்த 3 ஆண்டுகளில், பல போட்டிகளில் பங்கேற்று விட்டோம்.
ஆடுகளம் தெரியாது:
அதேநேரம், இன்றைய நாளின் இறுதியில் ஏதாவது ஒரு அணி தோற்கத்தான் வேண்டும். இது கிரிக்கெட்டில் மட்டுமல்ல, அனைத்து விளையாட்டிலும் இப்படித்தான் நடக்கும். இன்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்டு, 50 ஓவரும் அசத்தினால் வெற்றி பெறலாம்.
மொகாலி ஆடுகளத்தை இன்னும் பார்வையிடவில்லை. இதனால் அதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது. ஆனால், பெரும்பாலான நேரங்களில், பேட்ஸ்மேன்களுக்கு சாதமாகத்தான் இருந்து வருகிறது.
இவ்வாறு தோனி தெரிவித்தார்.

அரசியல் மாற்றம்
இன்றைய போட்டியில் இரண்டு நாடுகளின் பிரதமர்களின் பங்கேற்பு குறித்து இந்திய அணியின் கேப்டன் தோனி கூறுகையில்,"" அணியின் கேப்டனாக எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை திறமையாக செய்வேன். போட்டியை காண பிரதமர்கள் வருவது வீரர்கள் கவனத்தை திசை திருப்பலாம். இருப்பினும், இரு நாடுகள் இடையே அரசியல் ரீதியாக மாற்றத்தை கொண்டுவர, நாங்கள் எப்படி உதவலாம் என, நினைத்துக்கொண்டுள்ளேன்,'' என்றார்.

சென்னை: இந்திய தேர்வுக்குழுவினர் மற்றும் கேப்டன் தோனி இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இவரது தவறான பாணி தொடர்வதால், தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் நேரடியாக தலையிட்டு பேசியுள்ளார். பதிலுக்கு தோனியும் காட்டமாக பேச, காரசாரமான விவாதம் நடந்ததாக தெரிகிறது.
உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டதில் இருந்தே தோனிக்கும் தேர்வு குழுவினருக்கும் இடையே உரசல் இருந்து வந்தது. பிரவீண் குமார் காயம் காரணமாக நீக்கப்பட, வினய் குமாருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டுமென தோனி வலியுறுத்தினார். ஆனால், தேர்வுக் குழுவினர் ஸ்ரீசாந்துக்கு வாய்ப்பு கொடுத்து அதிர்ச்சி அளித்தனர்.
சாவ்லா சர்ச்சை:
பின் உலக கோப்பை போட்டிகளின் போது பியுஸ் சாவ்லா மீது அதிக "பாசம்' காட்டினார் தோனி. இதன் விளைவாக தொடர்ந்து சொதப்பிய போதும், அணியில் தவறாமல் இடம் பெற்றார் சாவ்லா. இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் "பேட்டிங் ஆர்டரை' மாற்றியது, கடைசி ஓவரை வீச ஹர்பஜனுக்கு பதில் நெஹ்ராவுக்கு வாய்ப்பு அளித்தது போன்ற தவறுகளை செய்தார் தோனி. இதன் காரணமாக இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.
ஸ்ரீகாந்த் மோதல்:
இந்தச்சூழலில் தோனி தனது பாணியை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தேர்வுக்குழுவினர் இருவர் வலியுறுத்தியுள்ளனர். "சாவ்லாவுக்கு போதுமான வாய்ப்பு அளிக்கப்பட்டு விட்டது. இனி விளையாடும் 11 பேரில் அஷ்வினை சேர்க்க வேண்டும்' என, கூறியுள்ளனர். இதனை தோனி ஏற்றுக் கொள்ளவில்லையாம். இதையடுத்து, வழக்கமாக வீரர்கள் தேர்வு போன்ற விஷயங்களில் தலையிடாத ஸ்ரீகாந்த் களத்தில் இறங்க நேர்ந்துள்ளது. சென்னையில் நமது வீரர்கள் தங்கியுள்ள ஓட்டலுக்கு சென்றுள்ளார். தோனியை சந்தித்து, அணித் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளார். அப்போது தோனி மற்றும் ஸ்ரீகாந்த் இடையே காரசாரமான வாக்குவாதம் நடந்துள்ளது. இறுதியில், "முடிவு எடுக்கும் அதிகாரம் கேப்டன் கையில் தான் உள்ளது,'' என்று கூறி அங்கிருந்து சென்று விட்டாõராம் ஸ்ரீகாந்த். இவர்களுக்கு இடையே நடந்த மோதலின் போது இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயலர் சீனிவாசனும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது.
இது பற்றி ஸ்ரீகாந்திடம் கருத்து கேட்க நிருபர்கள் முற்பட்டனர். அப்போது,""இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் போட்டி முடிந்த பின் பேசுவோம்,'' என்று கூறி, நழுவினார்.
--------------
பி.சி.சி.ஐ., மறுப்பு
தோனி-ஸ்ரீகாந்த் தொடர்பான செய்திகளை பி.சி.சி.ஐ., மறுத்துள்ளது. இது குறித்து இதன் செயலர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,""ஆதாரமற்ற செய்திகள் வெளியாகியுள்ளன. தோனி-ஸ்ரீகாந்த் இடையிலான சந்திப்பு நடக்கவே இல்லை,''என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாணியை மாற்றுவாரா தோனி? * தேர்வுக்குழுவுடன் மோதல்

சென்னை: இந்திய தேர்வுக்குழுவினர் மற்றும் கேப்டன் தோனி இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இவரது தவறான பாணி தொடர்வதால், தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் நேரடியாக தலையிட்டு பேசியுள்ளார். பதிலுக்கு தோனியும் காட்டமாக பேச, காரசாரமான விவாதம் நடந்ததாக தெரிகிறது.
உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டதில் இருந்தே தோனிக்கும் தேர்வு குழுவினருக்கும் இடையே உரசல் இருந்து வந்தது. பிரவீண் குமார் காயம் காரணமாக நீக்கப்பட, வினய் குமாருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டுமென தோனி வலியுறுத்தினார். ஆனால், தேர்வுக் குழுவினர் ஸ்ரீசாந்துக்கு வாய்ப்பு கொடுத்து அதிர்ச்சி அளித்தனர்.
சாவ்லா சர்ச்சை:
பின் உலக கோப்பை போட்டிகளின் போது பியுஸ் சாவ்லா மீது அதிக "பாசம்' காட்டினார் தோனி. இதன் விளைவாக தொடர்ந்து சொதப்பிய போதும், அணியில் தவறாமல் இடம் பெற்றார் சாவ்லா. இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் "பேட்டிங் ஆர்டரை' மாற்றியது, கடைசி ஓவரை வீச ஹர்பஜனுக்கு பதில் நெஹ்ராவுக்கு வாய்ப்பு அளித்தது போன்ற தவறுகளை செய்தார் தோனி. இதன் காரணமாக இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.
ஸ்ரீகாந்த் மோதல்:
இந்தச்சூழலில் தோனி தனது பாணியை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தேர்வுக்குழுவினர் இருவர் வலியுறுத்தியுள்ளனர். "சாவ்லாவுக்கு போதுமான வாய்ப்பு அளிக்கப்பட்டு விட்டது. இனி விளையாடும் 11 பேரில் அஷ்வினை சேர்க்க வேண்டும்' என, கூறியுள்ளனர். இதனை தோனி ஏற்றுக் கொள்ளவில்லையாம். இதையடுத்து, வழக்கமாக வீரர்கள் தேர்வு போன்ற விஷயங்களில் தலையிடாத ஸ்ரீகாந்த் களத்தில் இறங்க நேர்ந்துள்ளது. சென்னையில் நமது வீரர்கள் தங்கியுள்ள ஓட்டலுக்கு சென்றுள்ளார். தோனியை சந்தித்து, அணித் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளார். அப்போது தோனி மற்றும் ஸ்ரீகாந்த் இடையே காரசாரமான வாக்குவாதம் நடந்துள்ளது. இறுதியில், "முடிவு எடுக்கும் அதிகாரம் கேப்டன் கையில் தான் உள்ளது,'' என்று கூறி அங்கிருந்து சென்று விட்டாõராம் ஸ்ரீகாந்த். இவர்களுக்கு இடையே நடந்த மோதலின் போது இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயலர் சீனிவாசனும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது.
இது பற்றி ஸ்ரீகாந்திடம் கருத்து கேட்க நிருபர்கள் முற்பட்டனர். அப்போது,""இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் போட்டி முடிந்த பின் பேசுவோம்,'' என்று கூறி, நழுவினார்.
--------------
பி.சி.சி.ஐ., மறுப்பு
தோனி-ஸ்ரீகாந்த் தொடர்பான செய்திகளை பி.சி.சி.ஐ., மறுத்துள்ளது. இது குறித்து இதன் செயலர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,""ஆதாரமற்ற செய்திகள் வெளியாகியுள்ளன. தோனி-ஸ்ரீகாந்த் இடையிலான சந்திப்பு நடக்கவே இல்லை,''என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு: ""ஐந்தாவது பவுலர் வேலையை "பார்ட் டைம்' பவுலர்கள் பார்த்துக்கொள்வர். இதனால் ஏழு பேட்ஸ்மேன்களுடன் இன்று களமிறங்குவோம்,'' என, இந்திய அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு, சின்னச்சாமி மைதானத்தில் இதுவரை இரண்டு உலக கோப்பை லீக் போட்டிகள் நடந்துள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் நான்கு இன்னிங்சில், அனைத்து அணிகளும் 326 ரன்களுக்கு மேல் குவித்தது. இதனால் பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாக பெங்களூரு மாறியுள்ளது.
இந்நிலையில் இன்று இந்திய அணி தனது மூன்றாவது லீக் போட்டியில், அயர்லாந்தை சந்திக்கிறது. இந்த போட்டி குறித்து கேப்டன் தோனி கூறியது:
பெங்களூரு மைதானம் ஒளிவெள்ளத்தில் பேட்டிங் செய்ய சிறப்பாக உள்ளது. இங்கு இரண்டாவதாக பேட்டிங் செய்யும் போது, பந்து பேட்டிற்கு நன்றாக வருகிறது. சுழலுக்கும் சற்று ஒத்துழைப்பதால், கூடுதல் வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கப் போவதில்லை.
பொதுவாக இந்தியாவில் வேகப்பந்துக்கு ஒத்துழைக்கும் ஆடுகளங்கள் இல்லை. இது மோசமானது. பந்துவீச்சில் திருப்பம் ஏற்படும் நிலை இருக்கும் போது, வேகப்பந்துக்கு சாதகமாக எதிர்பார்க்க முடியாது.
பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம்:
இன்று பந்து வீச்சில் திருப்பம் ஏற்படுமா இல்லையா என்பதை சொல்வது மிகவும் கடினம். ஏனெனில் கடைசியாக இங்கு நடந்த 2 போட்டிகளில் 1300க்கும் மேற்பட்ட ரன்கள் எடுக்கப்பட்டன. இன்றும், இதுபோல அதிக ரன்கள் எடுக்கப்படும் என்று நம்புகிறேன். ஏனெனில் இங்கு பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
ஐந்தாவது பவுலர்?
ஐந்து பவுலர்களுடன் களமிறங்குவது என்பது தேவையில்லாதது. நமது பலத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அணிக்கு 30 ரன்கள் போதவில்லை என்ற நிலையில், யூசுப் பதான் அணியில் இருந்தால், அவரும் யுவராஜ் சிங்கும் சேர்ந்து ஐந்தாவது பவுலர் பணியை செய்வார்கள். இந்நிலையில் ஏழு பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கலாம்.
இந்திய அணியின் பவுலர்கள் இதுவரை பெரிய அளவில் சாதிக்கவில்லை. ஒரு போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டால், அப்புறம் எல்லாம் மாறிவிடும். இருப்பினும், பேட்ஸ்மேன்கள் முழு அளவில் திறமை வெளிப்படுத்தி வருவது பாராட்டுக்குரியது. அணியில் அனைவரும் ரன்கள் குவிக்கின்றனர். இதனால் ஒவ்வொரு இடத்துக்கும் போட்டி அதிகரித்துள்ளது.
கோஹ்லிக்கு பாராட்டு:
யுவராஜ் நான்காவது இடத்தில் களமிறங்க விரும்புகிறார். இந்த இடத்தில் வரும் விராத் கோஹ்லி, வேக மற்றும் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சமீபகாலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தவிர, 5, 6 அல்லது 7வது இடமாக இருந்தாலும் திறமையாக விளையாடுகிறார். ஆனால் நேரத்துக்கு ஏற்ப ரன்விகிதத்தை அதிகரிக்க யுவராஜ், யூசுப் பதானை களமிறக்கலாம்.
அஷ்வினுக்கு வாய்ப்பு?
அயர்லாந்து அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் அதிகமாக உள்ளனர். இதனால் ஹர்பஜன், யூசுப் பதான் போன்றவர்கள் இருந்தாலும், கூடுதல் "ஆப்' ஸ்பின்னர்களுடன் களமிறங்க வேண்டிய முடிவு ஏற்பட்டுள்ளது. சாவ்லா கடந்த போட்டிகளில் அதிக ரன்கள் கொடுத்திருந்தாலும், அவர் முக்கிய நேரங்களில் உதவுவார். அதேநேரத்தில் அஷ்வினும் இதற்கு முன் சிறப்பாக செயல்பட்டுள்ளார். குறிப்பாக, முதல் 10 ஓவர்கள் கூட பவுலிங் செய்யச் சொல்லலாம்.
பலவீனமானது அல்ல:
உலக கோப்பை தொடரை பொறுத்தவரையில் எந்த அணியையும், பலவீனமானது என்று நாங்கள் எப்போதும் கூறியதில்லை. இதனால், அயர்லாந்துக்கு எதிராக தவறு செய்யமாட்டோம். இந்த அணியின் கெவின் ஓ பிரையன், இங்கிலாந்துக்கு எதிராக நம்பமுடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நமக்கு எதிராக இப்படி விளையாட மாட்டார் என்று நம்புகிறேன். இவரை மீண்டும் ரன் அவுட்டாக்க முயற்சிப்போம்.
இவ்வாறு தோனி கூறினார்.

உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள்
""ரசிர்கள் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்,'' என, கேப்டன் தோனி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"" வங்கதேச தோல்வியடைந்ததால், வெஸ்ட் இண்டீஸ் அணியினர் சென்ற பஸ் மீது தாக்குதல் நடத்தியது வருந்தத்தக்கது. வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.

ஏழு பேட்ஸ்மேன் "பார்முலா' தொடரும்! *கேப்டன் தோனி உறுதி

பெங்களூரு: ""ஐந்தாவது பவுலர் வேலையை "பார்ட் டைம்' பவுலர்கள் பார்த்துக்கொள்வர். இதனால் ஏழு பேட்ஸ்மேன்களுடன் இன்று களமிறங்குவோம்,'' என, இந்திய அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு, சின்னச்சாமி மைதானத்தில் இதுவரை இரண்டு உலக கோப்பை லீக் போட்டிகள் நடந்துள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் நான்கு இன்னிங்சில், அனைத்து அணிகளும் 326 ரன்களுக்கு மேல் குவித்தது. இதனால் பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாக பெங்களூரு மாறியுள்ளது.
இந்நிலையில் இன்று இந்திய அணி தனது மூன்றாவது லீக் போட்டியில், அயர்லாந்தை சந்திக்கிறது. இந்த போட்டி குறித்து கேப்டன் தோனி கூறியது:
பெங்களூரு மைதானம் ஒளிவெள்ளத்தில் பேட்டிங் செய்ய சிறப்பாக உள்ளது. இங்கு இரண்டாவதாக பேட்டிங் செய்யும் போது, பந்து பேட்டிற்கு நன்றாக வருகிறது. சுழலுக்கும் சற்று ஒத்துழைப்பதால், கூடுதல் வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கப் போவதில்லை.
பொதுவாக இந்தியாவில் வேகப்பந்துக்கு ஒத்துழைக்கும் ஆடுகளங்கள் இல்லை. இது மோசமானது. பந்துவீச்சில் திருப்பம் ஏற்படும் நிலை இருக்கும் போது, வேகப்பந்துக்கு சாதகமாக எதிர்பார்க்க முடியாது.
பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம்:
இன்று பந்து வீச்சில் திருப்பம் ஏற்படுமா இல்லையா என்பதை சொல்வது மிகவும் கடினம். ஏனெனில் கடைசியாக இங்கு நடந்த 2 போட்டிகளில் 1300க்கும் மேற்பட்ட ரன்கள் எடுக்கப்பட்டன. இன்றும், இதுபோல அதிக ரன்கள் எடுக்கப்படும் என்று நம்புகிறேன். ஏனெனில் இங்கு பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
ஐந்தாவது பவுலர்?
ஐந்து பவுலர்களுடன் களமிறங்குவது என்பது தேவையில்லாதது. நமது பலத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அணிக்கு 30 ரன்கள் போதவில்லை என்ற நிலையில், யூசுப் பதான் அணியில் இருந்தால், அவரும் யுவராஜ் சிங்கும் சேர்ந்து ஐந்தாவது பவுலர் பணியை செய்வார்கள். இந்நிலையில் ஏழு பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கலாம்.
இந்திய அணியின் பவுலர்கள் இதுவரை பெரிய அளவில் சாதிக்கவில்லை. ஒரு போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டால், அப்புறம் எல்லாம் மாறிவிடும். இருப்பினும், பேட்ஸ்மேன்கள் முழு அளவில் திறமை வெளிப்படுத்தி வருவது பாராட்டுக்குரியது. அணியில் அனைவரும் ரன்கள் குவிக்கின்றனர். இதனால் ஒவ்வொரு இடத்துக்கும் போட்டி அதிகரித்துள்ளது.
கோஹ்லிக்கு பாராட்டு:
யுவராஜ் நான்காவது இடத்தில் களமிறங்க விரும்புகிறார். இந்த இடத்தில் வரும் விராத் கோஹ்லி, வேக மற்றும் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சமீபகாலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தவிர, 5, 6 அல்லது 7வது இடமாக இருந்தாலும் திறமையாக விளையாடுகிறார். ஆனால் நேரத்துக்கு ஏற்ப ரன்விகிதத்தை அதிகரிக்க யுவராஜ், யூசுப் பதானை களமிறக்கலாம்.
அஷ்வினுக்கு வாய்ப்பு?
அயர்லாந்து அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் அதிகமாக உள்ளனர். இதனால் ஹர்பஜன், யூசுப் பதான் போன்றவர்கள் இருந்தாலும், கூடுதல் "ஆப்' ஸ்பின்னர்களுடன் களமிறங்க வேண்டிய முடிவு ஏற்பட்டுள்ளது. சாவ்லா கடந்த போட்டிகளில் அதிக ரன்கள் கொடுத்திருந்தாலும், அவர் முக்கிய நேரங்களில் உதவுவார். அதேநேரத்தில் அஷ்வினும் இதற்கு முன் சிறப்பாக செயல்பட்டுள்ளார். குறிப்பாக, முதல் 10 ஓவர்கள் கூட பவுலிங் செய்யச் சொல்லலாம்.
பலவீனமானது அல்ல:
உலக கோப்பை தொடரை பொறுத்தவரையில் எந்த அணியையும், பலவீனமானது என்று நாங்கள் எப்போதும் கூறியதில்லை. இதனால், அயர்லாந்துக்கு எதிராக தவறு செய்யமாட்டோம். இந்த அணியின் கெவின் ஓ பிரையன், இங்கிலாந்துக்கு எதிராக நம்பமுடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நமக்கு எதிராக இப்படி விளையாட மாட்டார் என்று நம்புகிறேன். இவரை மீண்டும் ரன் அவுட்டாக்க முயற்சிப்போம்.
இவ்வாறு தோனி கூறினார்.

உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள்
""ரசிர்கள் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்,'' என, கேப்டன் தோனி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"" வங்கதேச தோல்வியடைந்ததால், வெஸ்ட் இண்டீஸ் அணியினர் சென்ற பஸ் மீது தாக்குதல் நடத்தியது வருந்தத்தக்கது. வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.

முக நூல்

Popular Posts