background img

புதிய வரவு

Showing posts with label Gadabi. Show all posts
Showing posts with label Gadabi. Show all posts
வாஷிங்டன்: "ராணுவத்தை பயன்படுத்தி, லிபியா ஆட்சியாளர் மும்மர் கடாபியைகொல்லும் திட்டம் இல்லை. அவருக்கு எதிரான போரில், நாங்கள் வெற்றி பெற்று வருகிறோம்' என, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பார்லிமென்டில், லிபியா மீதான தாக்குதல் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள்சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதற்கு அதிபர் ஒபாமா பதில் அளித்தார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், "லிபியாவின் வான் பகுதி, நேட்டோ நாடுகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. 1973ம் ஆண்டின் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி, லிபிய மக்களின் பாதுகாப்பும், கட்டுப்பாடும் நேட்டோ அமைப்பின் கீழ் கொண்டு வரப்படும். ராணுவத்தை பயன்படுத்தி, லிபியா ஆட்சியாளர் கடாபியை கொல்லும் திட்டம் எதுவும் இல்லை; ஆட்சியை மாற்றும் திட்டம் தான் உள்ளது' என, ஒபாமா தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், லிபியா நிலைமை குறித்து, வாஷிங்டனில் உள்ள தேசிய ராணுவ பல்கலைக் கழகத்தில், நாளை (திங்கள் கிழமை) அதிபர் ஒபாமா உரையாற்றுவார்' என, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, நேற்று ரேடியோ மூலம் நாட்டு மக்களுக்கு அளித்த பேட்டியில் அதிபர் ஒபாமா, "லிபியா ஆட்சியாளருக்கு எதிரான எங்களது போரில் நாங்கள் வெற்றி பெற்று வருகிறோம். பெங்காசியில் கடாபியின் படை பின்வாங்கி யுள்ளது. லிபியாவுக்குள் ராணுவப் படையை நாங்கள் பயன்படுத்தவில்லை. எங்களுடன் இணைந்து விமான தாக்குதலில், அரபு நாடுகளான கத்தார் மற்றும் யு.ஏ.ஈ., ஈடுபட்டுள்ளன. லிபியா மீதான தாக்குதல் பொறுப்பு, இந்த வார ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவிடம் இருந்து நேட்டோ அமைப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது. கடாபியின் கோடிக்கணக்கான சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. லிபியா மக்களின் பயன்பாட்டிற்கு இது உதவும். கடாபியின் படைகள் பின் வாங்கி, மனிதாபிமான உதவிகளுக்கு வழி விட வேண்டும். வன்முறையில் ஈடுபடு பவர்கள், அதற்கான பலனை அனுபவிப்பர். கடாபி ரத்தத்தில் குளிக்கப் போவதாக மிரட்டுகிறார். இது, அந்த மண்டலம் முழுவதையும் பாதிக்கும். இதை தடுக்க, சர்வதேச சமுதாயம் முன் வரும் போது நாங்களும் பங்கேற்க வேண்டும். அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டியது எங்களுடைய கடமை' என்றார்.


இதுகுறித்து பென்டகன் அதிகாரி பில் கோர்ட்னி கூறுகையில், "லிபியாவில் தொடர்ந்து கடாபியின் ஆதரவாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது விமானப் படை விமானங்கள் வானில் பறக்க முடியாது. போர் கப்பல்கள் துறைமுகத்தில் நிற்கின்றன. ஆயுதக்கிடங்குகள் அழிக்கப்பட்டன. தகவல்தொடர்பு சாதனங்கள் செயலிழக்கப்பட்டன. ஆனாலும், நிலத்தில் இருந்து இயக்கப்படும் பீரங்கிகள் மூலம் விமானத்தை நோக்கி தாக்குதல் நடத்திவருகின்றனர். இது இன்னும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. டிரிபோலி, செபாவில் நேட்டோ படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தின. பெங்காசி நகரம் கிளர்ச்சியாளர்களின் கையில் உள்ளது. அஜ்தாபையாவில் தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. இதேபோல், மிசுரட்டா, ஜிந்தன் ஆகிய இடங்களில் அப்பாவி மக்கள்மீது, கடாபி யின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்' என்றார்.

கடாபியை கொல்லும் திட்டம் இல்லை: அமெரிக்க அதிபர் ஒபாமா விளக்கம்

வாஷிங்டன்: "ராணுவத்தை பயன்படுத்தி, லிபியா ஆட்சியாளர் மும்மர் கடாபியைகொல்லும் திட்டம் இல்லை. அவருக்கு எதிரான போரில், நாங்கள் வெற்றி பெற்று வருகிறோம்' என, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பார்லிமென்டில், லிபியா மீதான தாக்குதல் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள்சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதற்கு அதிபர் ஒபாமா பதில் அளித்தார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், "லிபியாவின் வான் பகுதி, நேட்டோ நாடுகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. 1973ம் ஆண்டின் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி, லிபிய மக்களின் பாதுகாப்பும், கட்டுப்பாடும் நேட்டோ அமைப்பின் கீழ் கொண்டு வரப்படும். ராணுவத்தை பயன்படுத்தி, லிபியா ஆட்சியாளர் கடாபியை கொல்லும் திட்டம் எதுவும் இல்லை; ஆட்சியை மாற்றும் திட்டம் தான் உள்ளது' என, ஒபாமா தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், லிபியா நிலைமை குறித்து, வாஷிங்டனில் உள்ள தேசிய ராணுவ பல்கலைக் கழகத்தில், நாளை (திங்கள் கிழமை) அதிபர் ஒபாமா உரையாற்றுவார்' என, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, நேற்று ரேடியோ மூலம் நாட்டு மக்களுக்கு அளித்த பேட்டியில் அதிபர் ஒபாமா, "லிபியா ஆட்சியாளருக்கு எதிரான எங்களது போரில் நாங்கள் வெற்றி பெற்று வருகிறோம். பெங்காசியில் கடாபியின் படை பின்வாங்கி யுள்ளது. லிபியாவுக்குள் ராணுவப் படையை நாங்கள் பயன்படுத்தவில்லை. எங்களுடன் இணைந்து விமான தாக்குதலில், அரபு நாடுகளான கத்தார் மற்றும் யு.ஏ.ஈ., ஈடுபட்டுள்ளன. லிபியா மீதான தாக்குதல் பொறுப்பு, இந்த வார ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவிடம் இருந்து நேட்டோ அமைப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது. கடாபியின் கோடிக்கணக்கான சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. லிபியா மக்களின் பயன்பாட்டிற்கு இது உதவும். கடாபியின் படைகள் பின் வாங்கி, மனிதாபிமான உதவிகளுக்கு வழி விட வேண்டும். வன்முறையில் ஈடுபடு பவர்கள், அதற்கான பலனை அனுபவிப்பர். கடாபி ரத்தத்தில் குளிக்கப் போவதாக மிரட்டுகிறார். இது, அந்த மண்டலம் முழுவதையும் பாதிக்கும். இதை தடுக்க, சர்வதேச சமுதாயம் முன் வரும் போது நாங்களும் பங்கேற்க வேண்டும். அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டியது எங்களுடைய கடமை' என்றார்.


இதுகுறித்து பென்டகன் அதிகாரி பில் கோர்ட்னி கூறுகையில், "லிபியாவில் தொடர்ந்து கடாபியின் ஆதரவாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது விமானப் படை விமானங்கள் வானில் பறக்க முடியாது. போர் கப்பல்கள் துறைமுகத்தில் நிற்கின்றன. ஆயுதக்கிடங்குகள் அழிக்கப்பட்டன. தகவல்தொடர்பு சாதனங்கள் செயலிழக்கப்பட்டன. ஆனாலும், நிலத்தில் இருந்து இயக்கப்படும் பீரங்கிகள் மூலம் விமானத்தை நோக்கி தாக்குதல் நடத்திவருகின்றனர். இது இன்னும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. டிரிபோலி, செபாவில் நேட்டோ படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தின. பெங்காசி நகரம் கிளர்ச்சியாளர்களின் கையில் உள்ளது. அஜ்தாபையாவில் தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. இதேபோல், மிசுரட்டா, ஜிந்தன் ஆகிய இடங்களில் அப்பாவி மக்கள்மீது, கடாபி யின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்' என்றார்.

லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக அதிபராக இருக்கும் கடாபி பதவி விலக வலியுறுத்தி பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை அடக்க கடாபி தனது ராணுவத்தை ஏவி விட்டு ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகிறார்.

எனவே, ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானத்தின்படி அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு மற்றும் இத்தாலி நாடுகளின் கூட்டுப்படை லிபியாவின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதிபர் கடாபியின் ராணுவ நிலைகள் மீது போர் விமானங்கள் குண்டு வீசி வருகின்றன. ஏவுகணை தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

நேற்று முன்தினம் நள்ளி ரவு தலைநகர் திரிபோலியில் உள்ள கடாபியின் வீடு மீது ஏவுகணைகளும், குண்டுகளும் வீசப்பட்டன. இதில், அவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து சேதமடைந்தது. ஆனால் கடாபி உயிர் தப்பினார். கடாபியின் வீடு அருகே தான் ராணுவ வீரர்களின் குடியிருப்பும் உள்ளது.

குண்டு வீச்சின் போது அவரது வீட்டின் முன்பு ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர். இத்தாக்குதலில் அவர்களின் கதி என்ன ஆனது என தெரியவில்லை. இதற்கிடையே போராட்டக்காரர்கள் கைவசம் இருந்த அஜ்தாபியா, மிஸ்ரதா, ரஸ்லனுப் ஆகிய 3 முக்கிய நகரங்களை கடாபியின் ராணுவம் பிடித்தது.

பெரிய நகரமான பெங்காசியை மீண்டும் கைப்பற்றும் நடவடிக்கையில் அங்கு ராணுவ தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அஜ்தாபியில் இருந்து ராணுவத்தினரை விரட்ட அமெரிக்க கூட்டுப்படைகள் அங்கு தாக்குதல் நடத்தின. அங்குள்ள ராணுவ நிலைகள் மீது சரமாரியாக குண்டு வீசப்பட்டது.

இதனால் ராணுவம் நிலை குலைந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த டாங்கிகள் தூள் தூளாகி தீப்பிடித்து எரிகின்றன. இதையொட்டி ஏற்கனவே அஜ்தாபியில் இருந்து பெங்காசியை நோக்கி முன்னேறியிருந்த கடாபியின் ராணுவம் சுமார் 100 கி.மீட்டர் தூரத்துக்கு பின் வாங்கி ஓட்டம் பிடித்தது.

இருந்தும் அப்பகுதியில் மீதமுள்ள ராணுவ நிலைகள், டாங்கிகள் மீது தொடர்ந்து குண்டு வீச்சு நடந்து வருகிறது. அப்பகுதியில் போர் விமானங்கள் தொடர்ந்து குண்டு வீசுவதால் போராட்டக்காரர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வீதிகளில் ஆடிப்பாடி மகிழ்கின்றனர்.

இதற்கிடையே, குண்டு வீச்சில் உயிர் தப்பிய கடாபி எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. திரி போலியை ஒட்டியுள்ள பாப்-அல்-அஷியா நகரில் உள்ள தனது மாளிகையில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசுவார் என அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் அவரது வீடு மீது குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதால் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டார்.

தற்போது அவர் ஒரு மறைவிடத்தில் பாதுகாப்பான பாதாள அறையில் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. லிபியா மீது அமெரிக்கா கூட்டுபடைகளின் குண்டு வீச்சுக்கு அரபு நாடுகள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு சபை விமானம் பறக்க தடை விதித்துள்ள பகுதியில் பறந்து குண்டு வீசுவதாக விமர்சனம் செய்துள்ளது.

ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர் பான்கி மூன் எகிப்து சென்றுள்ளார். அங்கு போராட்டம் நடந்த தக்ரீர் மைதானத்தை பார்வையிட சென்றிருந்தார். அப்போது லிபியா அதிபர் கடாபியின் ஆதரவாளர்கள் சுமார் 50 பேர் திரண்டு அவரை முற்றுகையிட்டனர்.

கையில் லிபியா நாட்டு கொடியுடன் வந்திருந்த அவர்கள் லிபியா மீது அமெரிக்கா கூட்டு படைகள் நடத்தும் குண்டு வீச்சு தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அமெரிக்கா ஒழிக என்றும் கோஷமிட்டனர். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

இதை தொடர்ந்து பான்கிமூனும், ஐ.நா. துணை பொதுச் செயலாளரும், சிலி முன்னாள் அதிபருமான மிச்செலி பசெலெட் உள்ளிட்ட 15 பேர் குழுவினர் அங்கிருந்து பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.

குண்டுவீச்சில் இருந்து தப்பிக்க லிபியா அதிபர் கடாபி பாதாள அறையில் பதுங்கல்

லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக அதிபராக இருக்கும் கடாபி பதவி விலக வலியுறுத்தி பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை அடக்க கடாபி தனது ராணுவத்தை ஏவி விட்டு ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகிறார்.

எனவே, ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானத்தின்படி அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு மற்றும் இத்தாலி நாடுகளின் கூட்டுப்படை லிபியாவின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதிபர் கடாபியின் ராணுவ நிலைகள் மீது போர் விமானங்கள் குண்டு வீசி வருகின்றன. ஏவுகணை தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

நேற்று முன்தினம் நள்ளி ரவு தலைநகர் திரிபோலியில் உள்ள கடாபியின் வீடு மீது ஏவுகணைகளும், குண்டுகளும் வீசப்பட்டன. இதில், அவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து சேதமடைந்தது. ஆனால் கடாபி உயிர் தப்பினார். கடாபியின் வீடு அருகே தான் ராணுவ வீரர்களின் குடியிருப்பும் உள்ளது.

குண்டு வீச்சின் போது அவரது வீட்டின் முன்பு ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர். இத்தாக்குதலில் அவர்களின் கதி என்ன ஆனது என தெரியவில்லை. இதற்கிடையே போராட்டக்காரர்கள் கைவசம் இருந்த அஜ்தாபியா, மிஸ்ரதா, ரஸ்லனுப் ஆகிய 3 முக்கிய நகரங்களை கடாபியின் ராணுவம் பிடித்தது.

பெரிய நகரமான பெங்காசியை மீண்டும் கைப்பற்றும் நடவடிக்கையில் அங்கு ராணுவ தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அஜ்தாபியில் இருந்து ராணுவத்தினரை விரட்ட அமெரிக்க கூட்டுப்படைகள் அங்கு தாக்குதல் நடத்தின. அங்குள்ள ராணுவ நிலைகள் மீது சரமாரியாக குண்டு வீசப்பட்டது.

இதனால் ராணுவம் நிலை குலைந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த டாங்கிகள் தூள் தூளாகி தீப்பிடித்து எரிகின்றன. இதையொட்டி ஏற்கனவே அஜ்தாபியில் இருந்து பெங்காசியை நோக்கி முன்னேறியிருந்த கடாபியின் ராணுவம் சுமார் 100 கி.மீட்டர் தூரத்துக்கு பின் வாங்கி ஓட்டம் பிடித்தது.

இருந்தும் அப்பகுதியில் மீதமுள்ள ராணுவ நிலைகள், டாங்கிகள் மீது தொடர்ந்து குண்டு வீச்சு நடந்து வருகிறது. அப்பகுதியில் போர் விமானங்கள் தொடர்ந்து குண்டு வீசுவதால் போராட்டக்காரர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வீதிகளில் ஆடிப்பாடி மகிழ்கின்றனர்.

இதற்கிடையே, குண்டு வீச்சில் உயிர் தப்பிய கடாபி எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. திரி போலியை ஒட்டியுள்ள பாப்-அல்-அஷியா நகரில் உள்ள தனது மாளிகையில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசுவார் என அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் அவரது வீடு மீது குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதால் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டார்.

தற்போது அவர் ஒரு மறைவிடத்தில் பாதுகாப்பான பாதாள அறையில் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. லிபியா மீது அமெரிக்கா கூட்டுபடைகளின் குண்டு வீச்சுக்கு அரபு நாடுகள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு சபை விமானம் பறக்க தடை விதித்துள்ள பகுதியில் பறந்து குண்டு வீசுவதாக விமர்சனம் செய்துள்ளது.

ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர் பான்கி மூன் எகிப்து சென்றுள்ளார். அங்கு போராட்டம் நடந்த தக்ரீர் மைதானத்தை பார்வையிட சென்றிருந்தார். அப்போது லிபியா அதிபர் கடாபியின் ஆதரவாளர்கள் சுமார் 50 பேர் திரண்டு அவரை முற்றுகையிட்டனர்.

கையில் லிபியா நாட்டு கொடியுடன் வந்திருந்த அவர்கள் லிபியா மீது அமெரிக்கா கூட்டு படைகள் நடத்தும் குண்டு வீச்சு தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அமெரிக்கா ஒழிக என்றும் கோஷமிட்டனர். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

இதை தொடர்ந்து பான்கிமூனும், ஐ.நா. துணை பொதுச் செயலாளரும், சிலி முன்னாள் அதிபருமான மிச்செலி பசெலெட் உள்ளிட்ட 15 பேர் குழுவினர் அங்கிருந்து பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.

முக நூல்

Popular Posts