background img

புதிய வரவு

Showing posts with label Obama. Show all posts
Showing posts with label Obama. Show all posts

தன்னை அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா வெள்ளை மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுத்தது குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பூரிப்புடன் பேட்டியில் கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமெரிக்காவில் உள்ள மியாமி பல்கலைக்கழகம் டாக்டர்  பட்டம் வழங்க தீர்மானித்தது.
அதையேற்று கடந்த சனிக்கிழமை ரஹ்மான் அமெரிக்கா சென்றார். அங்கு மியாமி பல்கலைக்கழக விழாவில் கலந்து கொண்ட அவருக்கு டாக்டர்  பட்டம் வழங்கப்பட்டது.
பின்னர் அவர் கூறியதாவது: அமெரிக்க ஜனாதிபதியும் அவரது குடும்பத்தினரும் தனிப்பட்ட முறையில் கையெழுத்திட்டு என்னை வெள்ளை மாளிகை விருந்திற்கு வரச்சொல்லி கடிதம் அனுப்பி இருந்தனர்.
இதை கற்பனை செய்துகூட பார்க்கவில்லை. இந்நேரத்தில் எனது வாழ்க்கையில் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தி தந்தவர்களை நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன் என்றார்.
எனது தந்தை, தாயார் என் வாழ்க்கையை ஒழுக்க நெறிகளுடன் செம்மையாக அமைத்து தந்தனர்.
கொலிவுட்டில் ‘ரோஜா’ படம் மூலம் எனக்கு முதன்முதலாக வாய்ப்பளித்தவர் மணிரத்னம். இஸ்லாமிய ஞானிகள் என்னை நானே உணர்ந்துகொள்ள வழிகாட்டினார்கள்.
இந்திய ரசிகர்கள் என்னையும், எனது இசையையும் எந்த பாகுபாடும் இல்லாமல் அரவணைத்துக்கொண்டனர்.
அதேபோன்று ஹாலிவுட்டிலும் என்னை ஏற்றுக்கொண்டிருப்பதை உணர்கிறேன் என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறினார்

எ ஆர் ரஹ்மானுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது மியாமி யுனிவர்சிட்டி- ஒபாமா வெள்ளை மாளிகைக்கு வருமாறு அழைப்பு: ரஹ்மான் பூரிப்பு


தன்னை அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா வெள்ளை மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுத்தது குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பூரிப்புடன் பேட்டியில் கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமெரிக்காவில் உள்ள மியாமி பல்கலைக்கழகம் டாக்டர்  பட்டம் வழங்க தீர்மானித்தது.
அதையேற்று கடந்த சனிக்கிழமை ரஹ்மான் அமெரிக்கா சென்றார். அங்கு மியாமி பல்கலைக்கழக விழாவில் கலந்து கொண்ட அவருக்கு டாக்டர்  பட்டம் வழங்கப்பட்டது.
பின்னர் அவர் கூறியதாவது: அமெரிக்க ஜனாதிபதியும் அவரது குடும்பத்தினரும் தனிப்பட்ட முறையில் கையெழுத்திட்டு என்னை வெள்ளை மாளிகை விருந்திற்கு வரச்சொல்லி கடிதம் அனுப்பி இருந்தனர்.
இதை கற்பனை செய்துகூட பார்க்கவில்லை. இந்நேரத்தில் எனது வாழ்க்கையில் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தி தந்தவர்களை நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன் என்றார்.
எனது தந்தை, தாயார் என் வாழ்க்கையை ஒழுக்க நெறிகளுடன் செம்மையாக அமைத்து தந்தனர்.
கொலிவுட்டில் ‘ரோஜா’ படம் மூலம் எனக்கு முதன்முதலாக வாய்ப்பளித்தவர் மணிரத்னம். இஸ்லாமிய ஞானிகள் என்னை நானே உணர்ந்துகொள்ள வழிகாட்டினார்கள்.
இந்திய ரசிகர்கள் என்னையும், எனது இசையையும் எந்த பாகுபாடும் இல்லாமல் அரவணைத்துக்கொண்டனர்.
அதேபோன்று ஹாலிவுட்டிலும் என்னை ஏற்றுக்கொண்டிருப்பதை உணர்கிறேன் என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறினார்

வாஷிங்டன், மே 9: அல்-காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனுக்கு உதவிய பாகிஸ்தான் அதிகாரிகள் யார்? விசாரணை நடத்தி அவர்களை கண்டுபிடித்துக் கூறுங்கள் என்று பாகிஸ்தானை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த விவகாரத்தை பாகிஸ்தான் விசாரிக்கிறது என்று விட்டுவிடமாட்டோம். உண்மை தெரியும்வரை நாங்களும் விசாரிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரட்டைக் கோபுரத்தை தகர்த்த பின்லேடன் கொல்லப்பட்டதால் அமெரிக்காவே பூரிப்பில் உள்ளது. அதிபர் ஒபாமாவுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் பின்லேடன் கொல்லப்பட்டதையடுத்து ஒபாமா திங்கள்கிழமை ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு முதல்தடவையாகப் பேட்டியளித்தார். இந்த பேட்டியின் போதுதான் பாகிஸ்தானில் ஆதரவு கிடைக்காமல் பின்லேடன் அங்கு வசித்திருக்க முடியாது என்று குற்றம்சுமத்தினார்.
மேலும் அவர் கூறியது: நாங்கள் வலைவீசித் தேடிவந்த பயங்கரவாதி பாகிஸ்தான் மண்ணில்தான் இருந்துள்ளார். அதுவும் நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இருந்து குறைந்த தொலைவில் ராணுவ மையம் அருகிலேயே துணிச்சலாக வசித்து வந்துள்ளார். இது எப்படி சாத்தியம்? பாகிஸ்தானில் யாருடைய ஆதரவும், உதவியும் இல்லாமல் பின்லேடனால் அங்கு வசித்திருக்க முடியுமா? வாய்ப்பே இல்லை. அவருக்கு பாகிஸ்தான் அரசு அதிகாரிகளோ, அரசுக்கு வெளியில் உள்ளவர்களோ ஆதரவுக் கரம் நீட்டியிருக்க வேண்டும். அவருக்கு வேண்டிய உதவியை செய்திருக்க வேண்டும். அவருடைய அந்த நலவிரும்பிகள் யார் என்பது அமெரிக்காவுக்கு நிச்சயம் தெரிந்தாக வேண்டும்.
இந்த விஷயத்தை பாகிஸ்தான் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டறிய வேண்டும். இதுதான் அமெரிக்காவின் விருப்பம்.
பின்லேடன் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள சூழலால் கடந்த காலத்தில் பயங்கரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு அளித்த ஒத்துழைப்பையும், உதவியையும் மறந்திட முடியாது. இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டதில் இருந்து பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைக்கு சிறந்தவகையில் ஒத்துழைப்பை நல்கி வருகிறது.
பயங்கரவாதத்துக்கு எதிரானப் போரை பொறுத்தவரை பின்லேடன் கொல்லப்படுவதற்கு முன்னதாகவே அமெரிக்கா மெச்சும் வகையில் நடவடிக்கையை எடுத்துள்ளது. பாகிஸ்தானில் உலா வந்த ஏராளமான பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டியுள்ளது. இது, பாகிஸ்தானின் ஒத்துழைப்பு இல்லாமல் நிச்சயம் சாத்தியமாயிருக்காது.
இந்தத் தருணம் இரு நாடுகளுக்குமே முக்கியமானது. பாகிஸ்தானுக்கு நெருக்குதல் அளிக்க வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே விரிசல் உருவாகக் கூடாது என்றே அமெரிக்கா விரும்புகிறது.
பயங்கரவாதத்துக்கு எதிராக கடந்த காலத்தைவிட வருங்காலத்தில்தான் நிறைய நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இதற்கு இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது அவசியம். பின்லேடன் கொல்லப்பட்டதன் மூலம் பயங்கரவாதமே முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருத முடியாது. அல்லது அல்-காய்தா அழிக்கப்பட்டுவிட்டதாகவும் நினைக்க முடியாது. பின்லேடன் வீழ்த்தப்பட்டதன் மூலம் அல்-காய்தா பயங்கரவாதிகளை ஒடுக்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அவ்வளவுதான். குறைந்தபட்சம் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் பிராந்தியத்தில் வேரூன்றியுள்ள அல்-காய்தா அமைப்பை அடியோடு அழிக்க முயற்சிக்க வேண்டும்.
பின்லேடனை கொன்றது மிகப் பெரிய வெற்றிதான் என்பதையும் மறுக்க முடியாது. அவரைக் கொல்ல அமெரிக்க கமாண்டோ வீரர்களின் 40 நிமிடப் போராட்டம் என்னைப் பிரமிக்க வைத்துவிட்டது. பின்லேடனை தீர்த்துக்கட்ட கமாண்டோ வீரர்கள் போராடிய போது எனக்குப் பதற்றமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. அடுத்து என்ன நடக்குமோ, அடுத்து என்ன நடக்குமோ என்ற அதிர்ச்சி கேள்வி என்னுள் எழுந்த வண்ணம் இருந்தது. அந்த 40 நிமிடமே என் வாழ்வின் நீண்ட 40 நிமிடம் என்றார் ஒபாமா.
ஒபாமா பாகிஸ்தான் செல்ல மாட்டார்-அமெரிக்கா: இப்போதைய சூழலில் அதிபர் ஒபாமா பாகிஸ்தான் செல்ல வாய்ப்பில்லை என்று வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்த ஆண்டு பாகிஸ்தான் செல்லுவார் என்று கூறப்பட்டது. இதை பாகிஸ்தான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தது. இந்நிலையில் பின்லேடன் பாகிஸ்தான் மண்ணில் இருந்தது அம்பலமானதால் இரு நாடுகளின உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு செல்ல ஒபாமா விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் பின்லேடன் விவகாரத்தையும், ஒபாமா பயண ரத்தையும் அமெரிக்கா தொடர்புபடுத்தவில்லை. சூழலையே காரணம் காட்டியுள்ளது.

பின்லேடனுக்கு பாகிஸ்தான் அதிகாரிகள் உதவினரா? விசாரணை தேவை-ஒபாமா

வாஷிங்டன், மே 9: அல்-காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனுக்கு உதவிய பாகிஸ்தான் அதிகாரிகள் யார்? விசாரணை நடத்தி அவர்களை கண்டுபிடித்துக் கூறுங்கள் என்று பாகிஸ்தானை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த விவகாரத்தை பாகிஸ்தான் விசாரிக்கிறது என்று விட்டுவிடமாட்டோம். உண்மை தெரியும்வரை நாங்களும் விசாரிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரட்டைக் கோபுரத்தை தகர்த்த பின்லேடன் கொல்லப்பட்டதால் அமெரிக்காவே பூரிப்பில் உள்ளது. அதிபர் ஒபாமாவுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் பின்லேடன் கொல்லப்பட்டதையடுத்து ஒபாமா திங்கள்கிழமை ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு முதல்தடவையாகப் பேட்டியளித்தார். இந்த பேட்டியின் போதுதான் பாகிஸ்தானில் ஆதரவு கிடைக்காமல் பின்லேடன் அங்கு வசித்திருக்க முடியாது என்று குற்றம்சுமத்தினார்.
மேலும் அவர் கூறியது: நாங்கள் வலைவீசித் தேடிவந்த பயங்கரவாதி பாகிஸ்தான் மண்ணில்தான் இருந்துள்ளார். அதுவும் நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இருந்து குறைந்த தொலைவில் ராணுவ மையம் அருகிலேயே துணிச்சலாக வசித்து வந்துள்ளார். இது எப்படி சாத்தியம்? பாகிஸ்தானில் யாருடைய ஆதரவும், உதவியும் இல்லாமல் பின்லேடனால் அங்கு வசித்திருக்க முடியுமா? வாய்ப்பே இல்லை. அவருக்கு பாகிஸ்தான் அரசு அதிகாரிகளோ, அரசுக்கு வெளியில் உள்ளவர்களோ ஆதரவுக் கரம் நீட்டியிருக்க வேண்டும். அவருக்கு வேண்டிய உதவியை செய்திருக்க வேண்டும். அவருடைய அந்த நலவிரும்பிகள் யார் என்பது அமெரிக்காவுக்கு நிச்சயம் தெரிந்தாக வேண்டும்.
இந்த விஷயத்தை பாகிஸ்தான் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டறிய வேண்டும். இதுதான் அமெரிக்காவின் விருப்பம்.
பின்லேடன் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள சூழலால் கடந்த காலத்தில் பயங்கரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு அளித்த ஒத்துழைப்பையும், உதவியையும் மறந்திட முடியாது. இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டதில் இருந்து பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைக்கு சிறந்தவகையில் ஒத்துழைப்பை நல்கி வருகிறது.
பயங்கரவாதத்துக்கு எதிரானப் போரை பொறுத்தவரை பின்லேடன் கொல்லப்படுவதற்கு முன்னதாகவே அமெரிக்கா மெச்சும் வகையில் நடவடிக்கையை எடுத்துள்ளது. பாகிஸ்தானில் உலா வந்த ஏராளமான பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டியுள்ளது. இது, பாகிஸ்தானின் ஒத்துழைப்பு இல்லாமல் நிச்சயம் சாத்தியமாயிருக்காது.
இந்தத் தருணம் இரு நாடுகளுக்குமே முக்கியமானது. பாகிஸ்தானுக்கு நெருக்குதல் அளிக்க வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே விரிசல் உருவாகக் கூடாது என்றே அமெரிக்கா விரும்புகிறது.
பயங்கரவாதத்துக்கு எதிராக கடந்த காலத்தைவிட வருங்காலத்தில்தான் நிறைய நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இதற்கு இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது அவசியம். பின்லேடன் கொல்லப்பட்டதன் மூலம் பயங்கரவாதமே முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருத முடியாது. அல்லது அல்-காய்தா அழிக்கப்பட்டுவிட்டதாகவும் நினைக்க முடியாது. பின்லேடன் வீழ்த்தப்பட்டதன் மூலம் அல்-காய்தா பயங்கரவாதிகளை ஒடுக்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அவ்வளவுதான். குறைந்தபட்சம் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் பிராந்தியத்தில் வேரூன்றியுள்ள அல்-காய்தா அமைப்பை அடியோடு அழிக்க முயற்சிக்க வேண்டும்.
பின்லேடனை கொன்றது மிகப் பெரிய வெற்றிதான் என்பதையும் மறுக்க முடியாது. அவரைக் கொல்ல அமெரிக்க கமாண்டோ வீரர்களின் 40 நிமிடப் போராட்டம் என்னைப் பிரமிக்க வைத்துவிட்டது. பின்லேடனை தீர்த்துக்கட்ட கமாண்டோ வீரர்கள் போராடிய போது எனக்குப் பதற்றமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. அடுத்து என்ன நடக்குமோ, அடுத்து என்ன நடக்குமோ என்ற அதிர்ச்சி கேள்வி என்னுள் எழுந்த வண்ணம் இருந்தது. அந்த 40 நிமிடமே என் வாழ்வின் நீண்ட 40 நிமிடம் என்றார் ஒபாமா.
ஒபாமா பாகிஸ்தான் செல்ல மாட்டார்-அமெரிக்கா: இப்போதைய சூழலில் அதிபர் ஒபாமா பாகிஸ்தான் செல்ல வாய்ப்பில்லை என்று வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்த ஆண்டு பாகிஸ்தான் செல்லுவார் என்று கூறப்பட்டது. இதை பாகிஸ்தான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தது. இந்நிலையில் பின்லேடன் பாகிஸ்தான் மண்ணில் இருந்தது அம்பலமானதால் இரு நாடுகளின உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு செல்ல ஒபாமா விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் பின்லேடன் விவகாரத்தையும், ஒபாமா பயண ரத்தையும் அமெரிக்கா தொடர்புபடுத்தவில்லை. சூழலையே காரணம் காட்டியுள்ளது.

வாஷிங்டன், மே 4: வாக்குறுதி அளித்தபடி வரிகளைக் குறைக்கவில்லை, வசதியைப் பெருக்கவில்லை, வேலைவாய்ப்பை அதிகப்படுத்தவில்லை, பொருளாதாரச் சரிவிலிருந்து நாட்டைக் காப்பாற்றவில்லை என்றெல்லாம் அதிபர் பராக் ஒபாமா மீது அதிருப்தியாக இருந்த அமெரிக்கர்கள், பின் லேடனைவெற்றிகரமாகக் கொன்றுவிட்டார் என்றதும் ஆதரவை அள்ளித்தர ஆரம்பித்துள்ளனர்.
இது நீடிக்குமா, அடுத்த முறையும் அதிபராக இது போதுமா என்றெல்லாம் இப்போது ஆராய வேண்டாம். இந்த நாளில் அவர் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது என்பதுதான் உண்மை.
"யு.எஸ்.ஏ. டுடே' நடத்திய கருத்துக் கணிப்பின்படி பின் லேடனை அமெரிக்க ராணுவம் கொன்றது சரியான செயல் என்று 90% அமெரிக்கர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவைப் பொருத்தவரை இது மிக முக்கியமான நடவடிக்கை என்று 79% அமெரிக்கர்கள் கருதுகின்றனர். பின் லேடன் கொல்லப்பட்டதைத் தாங்கள் அங்கீகரிப்பதாக 93% அமெரிக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா ராணுவ நடவடிக்கையை எடுத்தபோது 2001 அக்டோபர் 7-ம் தேதி நடத்திய இதே போன்ற கருத்துக் கணிப்பின்போது 90% அமெரிக்கர்கள் அதை ஆதரித்தனர். 1991-ல் வளைகுடாப் போரில் அமெரிக்கா இறங்கியபோதும் 2003-ல் இராக் மீது படையெடுத்த போதும்கூட சுமார் 70% அமெரிக்கர்கள்தான் ஆதரவு தெரிவித்தனர். இந்த முறை இது 90%-க்கு மேல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பின் லேடனைக் கண்டுபிடித்துக் கொலை செய்ததில் முக்கியப் பங்கு அமெரிக்க ராணுவத்துக்கும் சி.ஏ.ஐ.வுக்கும்தான் அதிகம் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது அதிபரைவிட அந்த இரு அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த விஷயத்தில் பெரும் பங்கு ஒபாமாவுக்குத்தான் என்கிறவர்கள் 35%தான். ஓரளவுக்கு அவருக்குப் பங்கு என்கிறவர்கள் 36%. அவருடைய
பங்கு அதிகம் இல்லை என்று கருதுகிறவர்கள் 25%.

ஒபாமாவுக்கு செல்வாக்கு அதிகரிப்பு!

வாஷிங்டன், மே 4: வாக்குறுதி அளித்தபடி வரிகளைக் குறைக்கவில்லை, வசதியைப் பெருக்கவில்லை, வேலைவாய்ப்பை அதிகப்படுத்தவில்லை, பொருளாதாரச் சரிவிலிருந்து நாட்டைக் காப்பாற்றவில்லை என்றெல்லாம் அதிபர் பராக் ஒபாமா மீது அதிருப்தியாக இருந்த அமெரிக்கர்கள், பின் லேடனைவெற்றிகரமாகக் கொன்றுவிட்டார் என்றதும் ஆதரவை அள்ளித்தர ஆரம்பித்துள்ளனர்.
இது நீடிக்குமா, அடுத்த முறையும் அதிபராக இது போதுமா என்றெல்லாம் இப்போது ஆராய வேண்டாம். இந்த நாளில் அவர் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது என்பதுதான் உண்மை.
"யு.எஸ்.ஏ. டுடே' நடத்திய கருத்துக் கணிப்பின்படி பின் லேடனை அமெரிக்க ராணுவம் கொன்றது சரியான செயல் என்று 90% அமெரிக்கர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவைப் பொருத்தவரை இது மிக முக்கியமான நடவடிக்கை என்று 79% அமெரிக்கர்கள் கருதுகின்றனர். பின் லேடன் கொல்லப்பட்டதைத் தாங்கள் அங்கீகரிப்பதாக 93% அமெரிக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா ராணுவ நடவடிக்கையை எடுத்தபோது 2001 அக்டோபர் 7-ம் தேதி நடத்திய இதே போன்ற கருத்துக் கணிப்பின்போது 90% அமெரிக்கர்கள் அதை ஆதரித்தனர். 1991-ல் வளைகுடாப் போரில் அமெரிக்கா இறங்கியபோதும் 2003-ல் இராக் மீது படையெடுத்த போதும்கூட சுமார் 70% அமெரிக்கர்கள்தான் ஆதரவு தெரிவித்தனர். இந்த முறை இது 90%-க்கு மேல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பின் லேடனைக் கண்டுபிடித்துக் கொலை செய்ததில் முக்கியப் பங்கு அமெரிக்க ராணுவத்துக்கும் சி.ஏ.ஐ.வுக்கும்தான் அதிகம் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது அதிபரைவிட அந்த இரு அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த விஷயத்தில் பெரும் பங்கு ஒபாமாவுக்குத்தான் என்கிறவர்கள் 35%தான். ஓரளவுக்கு அவருக்குப் பங்கு என்கிறவர்கள் 36%. அவருடைய
பங்கு அதிகம் இல்லை என்று கருதுகிறவர்கள் 25%.

வாஷிங்டன்: அல் கொய்தா நிறுவனர் ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்படுவதை வீடியோ மூலம் நேரடியாக பார்த்துள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. அவர் மட்டுமல்லாமல் ஹில்லாரி கிளிண்டன் உள்ளிட்ட உயர் மட்டத் தலைவர்கள் இந்தக் காட்சியை நேரில் பார்த்துள்ளனர்.

ஒபாமா, ஹில்லாரி தவிர துணை அதிபர் ஜோ பிடனும் இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தார்.

வெள்ளை மாளிகையின் நெருக்கடி கால அறையில் அமர்ந்தபடி இந்த வீடியோக் காட்சிகளை அவர்கள் பார்த்துள்ளனர். பின்லேடனை சுட்டு வீழ்த்திய வீரர்களில் ஒருவரது ஹெல்மட்டில் பதித்து வைக்கப்பட்டிருந்த வீடியோ காமரா மூலம் இந்தக் காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பாகி அதைத்தான் ஒபாமா குழுவினர் பார்த்துள்ளனர்.

பின்லேடனை இடது கண்ணில் அமெரிக்க வீரர் சுட்டுத் தள்ளியதை நேரில் பார்த்துள்ளார் ஒபாமா. அவ்வாறு சுட்டதும் பின்லேடன் கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அந்த வீரர் மீண்டும் பின்லேடனின் இடதுபுற நெஞ்சில் சுட்டு மரணத்தை உறுதி செய்துள்ளார்.

இந்த வீடியோவில், பின்லேடனை அவரது மனைவி காப்பாற்ற முயற்சித்து பின்லேடனுக்கு முன்னால் வந்து நிற்பது போன்ற காட்சியும் இருப்பதாக தெரிகிறது.

ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய பின்லேடன் பாதுகாவலர்கள்:

ஆப்கானிஸ்தானில் இருந்து 4 ஹெலிகாப்டர்களில் சென்ற அமெரிக்கக் கடற்படை சீல்கள் பிரிவைச் (Navy Seal Team-6) சேர்ந்த கமாண்டோக்கள் தான் இந்த ஆபரேசனை நடத்தியதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஆனால், இந்த 4 ஹெலிகாப்டர்கள் தவிர மேலும் ஏராளமான போர் விமானங்களும், கனரக ஆயுதம் ஏந்திச் செல்லும் சரக்கு விமானங்களும், மேலும் ஏராளமான வீரர்களைக் கொண்ட சி-15 ரக விமானங்களும், ஆளில்லா உளவு விமானங்களும், ராக்கெட்களை வீசக் கூடிய AC-13 ரக ஹெலிகாப்டர்களும், CH-47, UH-60 ரக ஹெலிகாப்டகள் பலவும் இந்தத் தாக்குதலில் பங்கேற்றிருக்க வேண்டும் என்றே கருதப்படுகிறது.

சீல்கள் வந்த நான்கு CH-47 ஹெலிகாப்டர்களில் ஒன்றை பின்லேடனின் பாதுகாவலர்கள் சுட்டு வீழ்த்தியதும் உறுதியாகியுள்ளது. ஆனால், அது எந்திரக் கோளாரால் செயலிழந்ததால் தாங்களே அதை குண்டுவீசி அழித்துவிட்டதாகவும், அமெரிக்கத் தரப்பில் உயிர்ச் சேதம் ஏதும் இல்லை என்றும் அதிபர் ஒபாமா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஒரு ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதில் சில அமெரிக்க வீரர்கள் காயமோ அல்லது உயிரிழந்திருக்கவோ வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது.

இந்தத் தாக்குதலை 7,000 கி.மீ. தொலைவில் இருந்தபடி ஒபாமாவும் அவரது டீமும் நேரடியாக தொலைக்காட்சியில் பார்த்துள்ளனர்.

பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதை வீடியோ மூலம் நேரடியாகப் பார்த்த ஒபாமா!

வாஷிங்டன்: அல் கொய்தா நிறுவனர் ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்படுவதை வீடியோ மூலம் நேரடியாக பார்த்துள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. அவர் மட்டுமல்லாமல் ஹில்லாரி கிளிண்டன் உள்ளிட்ட உயர் மட்டத் தலைவர்கள் இந்தக் காட்சியை நேரில் பார்த்துள்ளனர்.

ஒபாமா, ஹில்லாரி தவிர துணை அதிபர் ஜோ பிடனும் இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தார்.

வெள்ளை மாளிகையின் நெருக்கடி கால அறையில் அமர்ந்தபடி இந்த வீடியோக் காட்சிகளை அவர்கள் பார்த்துள்ளனர். பின்லேடனை சுட்டு வீழ்த்திய வீரர்களில் ஒருவரது ஹெல்மட்டில் பதித்து வைக்கப்பட்டிருந்த வீடியோ காமரா மூலம் இந்தக் காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பாகி அதைத்தான் ஒபாமா குழுவினர் பார்த்துள்ளனர்.

பின்லேடனை இடது கண்ணில் அமெரிக்க வீரர் சுட்டுத் தள்ளியதை நேரில் பார்த்துள்ளார் ஒபாமா. அவ்வாறு சுட்டதும் பின்லேடன் கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அந்த வீரர் மீண்டும் பின்லேடனின் இடதுபுற நெஞ்சில் சுட்டு மரணத்தை உறுதி செய்துள்ளார்.

இந்த வீடியோவில், பின்லேடனை அவரது மனைவி காப்பாற்ற முயற்சித்து பின்லேடனுக்கு முன்னால் வந்து நிற்பது போன்ற காட்சியும் இருப்பதாக தெரிகிறது.

ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய பின்லேடன் பாதுகாவலர்கள்:

ஆப்கானிஸ்தானில் இருந்து 4 ஹெலிகாப்டர்களில் சென்ற அமெரிக்கக் கடற்படை சீல்கள் பிரிவைச் (Navy Seal Team-6) சேர்ந்த கமாண்டோக்கள் தான் இந்த ஆபரேசனை நடத்தியதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஆனால், இந்த 4 ஹெலிகாப்டர்கள் தவிர மேலும் ஏராளமான போர் விமானங்களும், கனரக ஆயுதம் ஏந்திச் செல்லும் சரக்கு விமானங்களும், மேலும் ஏராளமான வீரர்களைக் கொண்ட சி-15 ரக விமானங்களும், ஆளில்லா உளவு விமானங்களும், ராக்கெட்களை வீசக் கூடிய AC-13 ரக ஹெலிகாப்டர்களும், CH-47, UH-60 ரக ஹெலிகாப்டகள் பலவும் இந்தத் தாக்குதலில் பங்கேற்றிருக்க வேண்டும் என்றே கருதப்படுகிறது.

சீல்கள் வந்த நான்கு CH-47 ஹெலிகாப்டர்களில் ஒன்றை பின்லேடனின் பாதுகாவலர்கள் சுட்டு வீழ்த்தியதும் உறுதியாகியுள்ளது. ஆனால், அது எந்திரக் கோளாரால் செயலிழந்ததால் தாங்களே அதை குண்டுவீசி அழித்துவிட்டதாகவும், அமெரிக்கத் தரப்பில் உயிர்ச் சேதம் ஏதும் இல்லை என்றும் அதிபர் ஒபாமா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஒரு ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதில் சில அமெரிக்க வீரர்கள் காயமோ அல்லது உயிரிழந்திருக்கவோ வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது.

இந்தத் தாக்குதலை 7,000 கி.மீ. தொலைவில் இருந்தபடி ஒபாமாவும் அவரது டீமும் நேரடியாக தொலைக்காட்சியில் பார்த்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அமெரிக்கர் அல்ல. வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்ற சர்ச்சை சமீபத்தில் எழுந்தது. அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக தான் அமெரிக்காவில் பிறந்ததற்கான பிறப்பு சான்றிதழை ஒபாமா வெளியிட்டார்.

தற்போது, அவரை இழிவுபடுத்தும் வகையில் இனவெறி இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது. அதாவது அவரது தாய், தந்தையை பெரிய மனித குரங்கு போன்றும், அவர்களுடன் குட்டி மனித குரங்காக ஒபாமா இருப்பது போன்றும் படம் வரைந்து இ-மெயில் வெளியிடப்பட்டுள்ளது.

இதை கலிபோர்னியாவில் உள்ள “டீ பார்ட்டி” அமைப்பைச்சேர்ந்த மரில்யன் தேவன் போர்ட் என்ற பெண் அனுப்பியுள்ளார். இவர் ஆரிஞ்ச் மாகாண குடியரசு கட்சியின் உறுப்பினராக உள்ளார். படத்துடன் அனுப்பியுள்ள இ-மெயிலில், அவர் யார்? என்று தெரியவில்லை

ஏனெனில் அவரிடம் பிறப்பு சான்றிதழ் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த இ-மெயிலுக்கு அமெரிக்காவில் கடும் கண்ட னம் எழுந்துள்ளது. ஒபாமா குறித்து அவர் அனுப்பிய இந்த இ-மெயில் இனவெறியை தூண்டுகிறது.

அவரது இந்த மட்டமான ரசனை வெறுக்க தக்க வகையில் உள்ளது என அவரது கட்சியின் ஆரிஞ்ச் மாகாண தலைவர் ஸ்காட்பாக் தெரிவித்துள்ளார். மேலும், அவர் தனது கட்சியில் இருந்து பதவியை ராஜினாமா செய்து விட்டு வெளியேற வேண்டும் என கூறி உள்ளார்.

இது போன்று அவரது கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் பதவி விலக தேவன் போர்ட் மறுத்துள்ளார். நான் இனவெறியை தூண்டுவதற்காக இது போன்று இ-மெயில் அனுப்பவில்லை. ஒபாமாவை கேலி (ஜோக்) செய்யவே இது போன்று செய்தேன்.

எனது நடவடிக்கையில் யாருக்கேனும் மனவருத்தம் ஏற்பட்டால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.

மனித குரங்கு போன்று படம்: அமெரிக்க அதிபர் ஒபாமா பற்றி இனவெறி இ-மெயில்

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அமெரிக்கர் அல்ல. வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்ற சர்ச்சை சமீபத்தில் எழுந்தது. அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக தான் அமெரிக்காவில் பிறந்ததற்கான பிறப்பு சான்றிதழை ஒபாமா வெளியிட்டார்.

தற்போது, அவரை இழிவுபடுத்தும் வகையில் இனவெறி இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது. அதாவது அவரது தாய், தந்தையை பெரிய மனித குரங்கு போன்றும், அவர்களுடன் குட்டி மனித குரங்காக ஒபாமா இருப்பது போன்றும் படம் வரைந்து இ-மெயில் வெளியிடப்பட்டுள்ளது.

இதை கலிபோர்னியாவில் உள்ள “டீ பார்ட்டி” அமைப்பைச்சேர்ந்த மரில்யன் தேவன் போர்ட் என்ற பெண் அனுப்பியுள்ளார். இவர் ஆரிஞ்ச் மாகாண குடியரசு கட்சியின் உறுப்பினராக உள்ளார். படத்துடன் அனுப்பியுள்ள இ-மெயிலில், அவர் யார்? என்று தெரியவில்லை

ஏனெனில் அவரிடம் பிறப்பு சான்றிதழ் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த இ-மெயிலுக்கு அமெரிக்காவில் கடும் கண்ட னம் எழுந்துள்ளது. ஒபாமா குறித்து அவர் அனுப்பிய இந்த இ-மெயில் இனவெறியை தூண்டுகிறது.

அவரது இந்த மட்டமான ரசனை வெறுக்க தக்க வகையில் உள்ளது என அவரது கட்சியின் ஆரிஞ்ச் மாகாண தலைவர் ஸ்காட்பாக் தெரிவித்துள்ளார். மேலும், அவர் தனது கட்சியில் இருந்து பதவியை ராஜினாமா செய்து விட்டு வெளியேற வேண்டும் என கூறி உள்ளார்.

இது போன்று அவரது கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் பதவி விலக தேவன் போர்ட் மறுத்துள்ளார். நான் இனவெறியை தூண்டுவதற்காக இது போன்று இ-மெயில் அனுப்பவில்லை. ஒபாமாவை கேலி (ஜோக்) செய்யவே இது போன்று செய்தேன்.

எனது நடவடிக்கையில் யாருக்கேனும் மனவருத்தம் ஏற்பட்டால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நண்பர் ராபர்ட் பாபி டிட்காம்ப் (49). இவர் ஹோனோலூலு நகருக்கு 4 பேருடன் சென்று இருந்தார். அங்கு அவர்கள் ஒரு பெண்ணை விபசாரத்துக்கு அழைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் டிட்காம்ப் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் தலா ரூ.25 ஆயிரம் தனிநபர் ஜாமீனில் விடப்பட்டனர். டிட்காம்ப் அதிபர் ஒபாமாவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். இவர்கள் இருவரும் ஹோனோ லூலுவில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த 1970-ம் ஆண்டு முதல் ஒன்றாக படித்தவர்கள்.

இவர்கள் இருவரும் குடும்ப நண்பர்கள் ஆவர். கோல்ப், கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளை இருவரும் ஒன்றாக சேர்ந்து விளையாடுவார்கள். கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட விடுமுறை நாட்களை இருவரும் தங்கள் குடும்பத்தினரோடு கழிப்பார்கள்.

அமெரிக்காவில் விபசார வழக்கில் ஒபாமா நண்பர் கைது

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நண்பர் ராபர்ட் பாபி டிட்காம்ப் (49). இவர் ஹோனோலூலு நகருக்கு 4 பேருடன் சென்று இருந்தார். அங்கு அவர்கள் ஒரு பெண்ணை விபசாரத்துக்கு அழைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் டிட்காம்ப் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் தலா ரூ.25 ஆயிரம் தனிநபர் ஜாமீனில் விடப்பட்டனர். டிட்காம்ப் அதிபர் ஒபாமாவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். இவர்கள் இருவரும் ஹோனோ லூலுவில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த 1970-ம் ஆண்டு முதல் ஒன்றாக படித்தவர்கள்.

இவர்கள் இருவரும் குடும்ப நண்பர்கள் ஆவர். கோல்ப், கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளை இருவரும் ஒன்றாக சேர்ந்து விளையாடுவார்கள். கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட விடுமுறை நாட்களை இருவரும் தங்கள் குடும்பத்தினரோடு கழிப்பார்கள்.

வாஷிங்டன்: "ராணுவத்தை பயன்படுத்தி, லிபியா ஆட்சியாளர் மும்மர் கடாபியைகொல்லும் திட்டம் இல்லை. அவருக்கு எதிரான போரில், நாங்கள் வெற்றி பெற்று வருகிறோம்' என, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பார்லிமென்டில், லிபியா மீதான தாக்குதல் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள்சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதற்கு அதிபர் ஒபாமா பதில் அளித்தார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், "லிபியாவின் வான் பகுதி, நேட்டோ நாடுகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. 1973ம் ஆண்டின் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி, லிபிய மக்களின் பாதுகாப்பும், கட்டுப்பாடும் நேட்டோ அமைப்பின் கீழ் கொண்டு வரப்படும். ராணுவத்தை பயன்படுத்தி, லிபியா ஆட்சியாளர் கடாபியை கொல்லும் திட்டம் எதுவும் இல்லை; ஆட்சியை மாற்றும் திட்டம் தான் உள்ளது' என, ஒபாமா தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், லிபியா நிலைமை குறித்து, வாஷிங்டனில் உள்ள தேசிய ராணுவ பல்கலைக் கழகத்தில், நாளை (திங்கள் கிழமை) அதிபர் ஒபாமா உரையாற்றுவார்' என, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, நேற்று ரேடியோ மூலம் நாட்டு மக்களுக்கு அளித்த பேட்டியில் அதிபர் ஒபாமா, "லிபியா ஆட்சியாளருக்கு எதிரான எங்களது போரில் நாங்கள் வெற்றி பெற்று வருகிறோம். பெங்காசியில் கடாபியின் படை பின்வாங்கி யுள்ளது. லிபியாவுக்குள் ராணுவப் படையை நாங்கள் பயன்படுத்தவில்லை. எங்களுடன் இணைந்து விமான தாக்குதலில், அரபு நாடுகளான கத்தார் மற்றும் யு.ஏ.ஈ., ஈடுபட்டுள்ளன. லிபியா மீதான தாக்குதல் பொறுப்பு, இந்த வார ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவிடம் இருந்து நேட்டோ அமைப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது. கடாபியின் கோடிக்கணக்கான சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. லிபியா மக்களின் பயன்பாட்டிற்கு இது உதவும். கடாபியின் படைகள் பின் வாங்கி, மனிதாபிமான உதவிகளுக்கு வழி விட வேண்டும். வன்முறையில் ஈடுபடு பவர்கள், அதற்கான பலனை அனுபவிப்பர். கடாபி ரத்தத்தில் குளிக்கப் போவதாக மிரட்டுகிறார். இது, அந்த மண்டலம் முழுவதையும் பாதிக்கும். இதை தடுக்க, சர்வதேச சமுதாயம் முன் வரும் போது நாங்களும் பங்கேற்க வேண்டும். அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டியது எங்களுடைய கடமை' என்றார்.


இதுகுறித்து பென்டகன் அதிகாரி பில் கோர்ட்னி கூறுகையில், "லிபியாவில் தொடர்ந்து கடாபியின் ஆதரவாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது விமானப் படை விமானங்கள் வானில் பறக்க முடியாது. போர் கப்பல்கள் துறைமுகத்தில் நிற்கின்றன. ஆயுதக்கிடங்குகள் அழிக்கப்பட்டன. தகவல்தொடர்பு சாதனங்கள் செயலிழக்கப்பட்டன. ஆனாலும், நிலத்தில் இருந்து இயக்கப்படும் பீரங்கிகள் மூலம் விமானத்தை நோக்கி தாக்குதல் நடத்திவருகின்றனர். இது இன்னும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. டிரிபோலி, செபாவில் நேட்டோ படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தின. பெங்காசி நகரம் கிளர்ச்சியாளர்களின் கையில் உள்ளது. அஜ்தாபையாவில் தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. இதேபோல், மிசுரட்டா, ஜிந்தன் ஆகிய இடங்களில் அப்பாவி மக்கள்மீது, கடாபி யின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்' என்றார்.

கடாபியை கொல்லும் திட்டம் இல்லை: அமெரிக்க அதிபர் ஒபாமா விளக்கம்

வாஷிங்டன்: "ராணுவத்தை பயன்படுத்தி, லிபியா ஆட்சியாளர் மும்மர் கடாபியைகொல்லும் திட்டம் இல்லை. அவருக்கு எதிரான போரில், நாங்கள் வெற்றி பெற்று வருகிறோம்' என, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பார்லிமென்டில், லிபியா மீதான தாக்குதல் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள்சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதற்கு அதிபர் ஒபாமா பதில் அளித்தார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், "லிபியாவின் வான் பகுதி, நேட்டோ நாடுகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. 1973ம் ஆண்டின் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி, லிபிய மக்களின் பாதுகாப்பும், கட்டுப்பாடும் நேட்டோ அமைப்பின் கீழ் கொண்டு வரப்படும். ராணுவத்தை பயன்படுத்தி, லிபியா ஆட்சியாளர் கடாபியை கொல்லும் திட்டம் எதுவும் இல்லை; ஆட்சியை மாற்றும் திட்டம் தான் உள்ளது' என, ஒபாமா தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், லிபியா நிலைமை குறித்து, வாஷிங்டனில் உள்ள தேசிய ராணுவ பல்கலைக் கழகத்தில், நாளை (திங்கள் கிழமை) அதிபர் ஒபாமா உரையாற்றுவார்' என, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, நேற்று ரேடியோ மூலம் நாட்டு மக்களுக்கு அளித்த பேட்டியில் அதிபர் ஒபாமா, "லிபியா ஆட்சியாளருக்கு எதிரான எங்களது போரில் நாங்கள் வெற்றி பெற்று வருகிறோம். பெங்காசியில் கடாபியின் படை பின்வாங்கி யுள்ளது. லிபியாவுக்குள் ராணுவப் படையை நாங்கள் பயன்படுத்தவில்லை. எங்களுடன் இணைந்து விமான தாக்குதலில், அரபு நாடுகளான கத்தார் மற்றும் யு.ஏ.ஈ., ஈடுபட்டுள்ளன. லிபியா மீதான தாக்குதல் பொறுப்பு, இந்த வார ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவிடம் இருந்து நேட்டோ அமைப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது. கடாபியின் கோடிக்கணக்கான சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. லிபியா மக்களின் பயன்பாட்டிற்கு இது உதவும். கடாபியின் படைகள் பின் வாங்கி, மனிதாபிமான உதவிகளுக்கு வழி விட வேண்டும். வன்முறையில் ஈடுபடு பவர்கள், அதற்கான பலனை அனுபவிப்பர். கடாபி ரத்தத்தில் குளிக்கப் போவதாக மிரட்டுகிறார். இது, அந்த மண்டலம் முழுவதையும் பாதிக்கும். இதை தடுக்க, சர்வதேச சமுதாயம் முன் வரும் போது நாங்களும் பங்கேற்க வேண்டும். அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டியது எங்களுடைய கடமை' என்றார்.


இதுகுறித்து பென்டகன் அதிகாரி பில் கோர்ட்னி கூறுகையில், "லிபியாவில் தொடர்ந்து கடாபியின் ஆதரவாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது விமானப் படை விமானங்கள் வானில் பறக்க முடியாது. போர் கப்பல்கள் துறைமுகத்தில் நிற்கின்றன. ஆயுதக்கிடங்குகள் அழிக்கப்பட்டன. தகவல்தொடர்பு சாதனங்கள் செயலிழக்கப்பட்டன. ஆனாலும், நிலத்தில் இருந்து இயக்கப்படும் பீரங்கிகள் மூலம் விமானத்தை நோக்கி தாக்குதல் நடத்திவருகின்றனர். இது இன்னும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. டிரிபோலி, செபாவில் நேட்டோ படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தின. பெங்காசி நகரம் கிளர்ச்சியாளர்களின் கையில் உள்ளது. அஜ்தாபையாவில் தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. இதேபோல், மிசுரட்டா, ஜிந்தன் ஆகிய இடங்களில் அப்பாவி மக்கள்மீது, கடாபி யின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்' என்றார்.

லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக போராடி வரும் பொது மக்கள் மீது கடும் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. மக்கள் ஆதரவு புரட்சி படையினர் 5 நகரங்களை கைப்பற்றி இருந்தனர். அதில் 4 நகரங்களை கடாபி படை மீட்டு உள்ளது. புரட்சி படையினரிடம் இருக்கும் பென்காசி நகரை பிடிக்க இப்போது தீவிர தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

போராட்டக்காரர்கள் மீது விமானம் மூலம் குண்டு வீசப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானம் மூலம் குண்டு வீசுவதற்கு ஐ.நா.சபை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் எச்சரிக்கை விடுத்தன. ஆனாலும் அதிபர் கடாபி கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து ராணுவ தாக்குதல்கள் மூலம் ஏராளமானோரை கொன்று குவித்து வருகிறார்.

லிபியாவை அச்சுறுத்தும் வகையில் அமெரிக்கா 2 விமானந்தாங்கி போர் கப்பல்களை லிபியா அருகே அனுப்பி இருந்தது. ஆனாலும் கடாபி பணியவில்லை. இதற்கிடையே லிபியா பற்றி ஆராய ஐ.நா. பாதுகாப்பு சபை அவசர கூட்டம் நியூயார்க்கில் நடந்தது. பாதுகாப்பு சபையின் 15 உறுப்பினர்களில் 10 பேர் கலந்து கொண்டனர். நிரந்தர உறுப்பினர்களான சீனா, ரஷியா, தற்காலிக உறுப்பினர்களான இந்தியா, ஜெர்மனி, பிரேசில் கலந்து கொள்ளவில்லை.

கூட்டத்தில் கடாபி உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. அங்குள்ள மக்களை பாதுகாக்க மற்ற நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிப்பது. பொதுமக்கள் பகுதிகளில் போர் விமானம் பறக்க தடை விதிப்பது என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதற்கு 10 உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்து ஓட்டு போட்டனர். ஐ.நா.சபை தீர்மானத்தை அடுத்து லிபியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது.

ஐ.நா.தீர்மானத்தை கடாபி ஏற்க மறுத்தால் உடனடியாக தாக்குதல் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமா இங்கிலாந்து பிரதமர் கேமரூன், பிரான்சு அதிபர் சார்கோசி ஆகியோருடன் அவசரமாக ஆலோசனை நடத்தி உள்ளார்.

இது தொடர்பாக ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர்சுசன் ரைஸ் கூறும் போது, “ஐ.நா.சபை தீர்மானம் மூலம் கடாபிக்கு கடும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தி மக்களை கொல்வதை அவர் உடனடியாக நிறுத்த வேண்டும் இல்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.

ஐ.நா.வுக்கான இங்கிலாந்து தூதர் மார்க்லேயர் கூறும் போது, “கடாபி மீது நடவடிக்கை எடுக்க சர்வ தேச சமுதாயர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். அவர் உடன டியாக அமைதியை கொண்டு வரவேண்டும். இல்லை என்றால் உரிய நடவடிக்கை எடுக்க இங்கிலாந்து தயாராக இருக்கிறது” என்றார்.

ஐ.நா.பாதுகாப்பு சபை ஆதரவு: லிபியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகிறது; ஒபாமா அவசர ஆலோசனை

லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக போராடி வரும் பொது மக்கள் மீது கடும் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. மக்கள் ஆதரவு புரட்சி படையினர் 5 நகரங்களை கைப்பற்றி இருந்தனர். அதில் 4 நகரங்களை கடாபி படை மீட்டு உள்ளது. புரட்சி படையினரிடம் இருக்கும் பென்காசி நகரை பிடிக்க இப்போது தீவிர தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

போராட்டக்காரர்கள் மீது விமானம் மூலம் குண்டு வீசப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானம் மூலம் குண்டு வீசுவதற்கு ஐ.நா.சபை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் எச்சரிக்கை விடுத்தன. ஆனாலும் அதிபர் கடாபி கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து ராணுவ தாக்குதல்கள் மூலம் ஏராளமானோரை கொன்று குவித்து வருகிறார்.

லிபியாவை அச்சுறுத்தும் வகையில் அமெரிக்கா 2 விமானந்தாங்கி போர் கப்பல்களை லிபியா அருகே அனுப்பி இருந்தது. ஆனாலும் கடாபி பணியவில்லை. இதற்கிடையே லிபியா பற்றி ஆராய ஐ.நா. பாதுகாப்பு சபை அவசர கூட்டம் நியூயார்க்கில் நடந்தது. பாதுகாப்பு சபையின் 15 உறுப்பினர்களில் 10 பேர் கலந்து கொண்டனர். நிரந்தர உறுப்பினர்களான சீனா, ரஷியா, தற்காலிக உறுப்பினர்களான இந்தியா, ஜெர்மனி, பிரேசில் கலந்து கொள்ளவில்லை.

கூட்டத்தில் கடாபி உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. அங்குள்ள மக்களை பாதுகாக்க மற்ற நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிப்பது. பொதுமக்கள் பகுதிகளில் போர் விமானம் பறக்க தடை விதிப்பது என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதற்கு 10 உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்து ஓட்டு போட்டனர். ஐ.நா.சபை தீர்மானத்தை அடுத்து லிபியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது.

ஐ.நா.தீர்மானத்தை கடாபி ஏற்க மறுத்தால் உடனடியாக தாக்குதல் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமா இங்கிலாந்து பிரதமர் கேமரூன், பிரான்சு அதிபர் சார்கோசி ஆகியோருடன் அவசரமாக ஆலோசனை நடத்தி உள்ளார்.

இது தொடர்பாக ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர்சுசன் ரைஸ் கூறும் போது, “ஐ.நா.சபை தீர்மானம் மூலம் கடாபிக்கு கடும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தி மக்களை கொல்வதை அவர் உடனடியாக நிறுத்த வேண்டும் இல்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.

ஐ.நா.வுக்கான இங்கிலாந்து தூதர் மார்க்லேயர் கூறும் போது, “கடாபி மீது நடவடிக்கை எடுக்க சர்வ தேச சமுதாயர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். அவர் உடன டியாக அமைதியை கொண்டு வரவேண்டும். இல்லை என்றால் உரிய நடவடிக்கை எடுக்க இங்கிலாந்து தயாராக இருக்கிறது” என்றார்.

லிபியாவில் போராட்டக் காரர்கள் வசம் இருக்கும் நகரங்களை மீண்டும் தன் வசப்படுத்துவதில் கடாபி அரசு தீவிரமாக உள்ளது. எனவே, அவரது ஆதரவு ராணுவத்தினர் போராட்டக்காரர்கள் வசம் இருக்கும் மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள எண்ணை வளம் மிக்க துறைமுகம் நகரமான ராஸ் லனூப் மீது கடும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

2-வது நாளாக நேற்று அந்நகரின், மீது பறந்து ராணுவத்தின் போர் விமானங்கள் சரமாரியாக குண்டுவீசி தாக்கின. பதிலுக்கு போராட்டக்காரர்களின் புரட்சிப்படையும் தாக்குதல் நடத்தியது. இதனால் இரு பிரிவினருக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. ராணுவம் குண்டு வீசியதில் 2 குழந்தைகள் பலியாகினர். இதற்கிடையே தலைநகர் திரிபோலியை நோக்கி புரட்சிப்படை முன்னேறி வருகிறது.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே சண்டை வலுவடைந்துள்ளது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடாபியின் ராணுவம் கொடூர தாக்குதல் களை நடத்தி வருவதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடாபியின் ஆதரவு அதிகாரிகள் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது மிகவும் வருந்தத்தக்கது என்று தெரிவித்துள்ளார். புரூசெல்ஸ் நகரில் பன்னாட்டு ராணுவத்தின் கூட்டம் நடந்தது. அதில், லிபியாவில் தற்போது நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது லிபியாவில் அமைதியை ஏற்படுத்த ராணுவ நடவடிக்கை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும், கலவரத்தால் பாதிக்கப்பட்ட லிபியா மக்களுக்கு மேலும் ரூ.68 கோடி வழங்கவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்த தகவலை ஒபாமா தெரிவித்ததாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே, கடாபியின் ராணுவத்துக்கு எதிராக போராடும் புரட்சி படைக்கு ஆயுத உதவி அளிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. விமானங்கள் மூலம் ஆயுதங்கள் மற்றும் கமாண் டோக்களை அனுப்பவும் ஏற்பாடு செய்து வருகிறது.

கடந்த 2001-ம் ஆண்டு தலிபான்களிடம் இருந்து ஆப்கானிஸ்தானை மீட்க இதுபோன்ற நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. அதே முறை லிபியாவிலும் கடைபிடிக்கப்பட உள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, பெங்காசியில் போராடும் புரட்சி படைக்கு சவுதி அரேபியா ஆயுதம் வழங்கும்படி அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு சவுதிஅரேபியா மன்னர் மறுத்து விட்டதாக தெரிகிறது. இருந்தும் அவருடன் அமெரிக்கா பேசி வருகிறது.

லிபியாவில் வன்முறை நீடிப்பு: அதிபர் கடாபிக்கு ஒபாமா எச்சரிக்கை; ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும்

லிபியாவில் போராட்டக் காரர்கள் வசம் இருக்கும் நகரங்களை மீண்டும் தன் வசப்படுத்துவதில் கடாபி அரசு தீவிரமாக உள்ளது. எனவே, அவரது ஆதரவு ராணுவத்தினர் போராட்டக்காரர்கள் வசம் இருக்கும் மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள எண்ணை வளம் மிக்க துறைமுகம் நகரமான ராஸ் லனூப் மீது கடும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

2-வது நாளாக நேற்று அந்நகரின், மீது பறந்து ராணுவத்தின் போர் விமானங்கள் சரமாரியாக குண்டுவீசி தாக்கின. பதிலுக்கு போராட்டக்காரர்களின் புரட்சிப்படையும் தாக்குதல் நடத்தியது. இதனால் இரு பிரிவினருக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. ராணுவம் குண்டு வீசியதில் 2 குழந்தைகள் பலியாகினர். இதற்கிடையே தலைநகர் திரிபோலியை நோக்கி புரட்சிப்படை முன்னேறி வருகிறது.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே சண்டை வலுவடைந்துள்ளது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடாபியின் ராணுவம் கொடூர தாக்குதல் களை நடத்தி வருவதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடாபியின் ஆதரவு அதிகாரிகள் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது மிகவும் வருந்தத்தக்கது என்று தெரிவித்துள்ளார். புரூசெல்ஸ் நகரில் பன்னாட்டு ராணுவத்தின் கூட்டம் நடந்தது. அதில், லிபியாவில் தற்போது நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது லிபியாவில் அமைதியை ஏற்படுத்த ராணுவ நடவடிக்கை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும், கலவரத்தால் பாதிக்கப்பட்ட லிபியா மக்களுக்கு மேலும் ரூ.68 கோடி வழங்கவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்த தகவலை ஒபாமா தெரிவித்ததாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே, கடாபியின் ராணுவத்துக்கு எதிராக போராடும் புரட்சி படைக்கு ஆயுத உதவி அளிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. விமானங்கள் மூலம் ஆயுதங்கள் மற்றும் கமாண் டோக்களை அனுப்பவும் ஏற்பாடு செய்து வருகிறது.

கடந்த 2001-ம் ஆண்டு தலிபான்களிடம் இருந்து ஆப்கானிஸ்தானை மீட்க இதுபோன்ற நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. அதே முறை லிபியாவிலும் கடைபிடிக்கப்பட உள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, பெங்காசியில் போராடும் புரட்சி படைக்கு சவுதி அரேபியா ஆயுதம் வழங்கும்படி அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு சவுதிஅரேபியா மன்னர் மறுத்து விட்டதாக தெரிகிறது. இருந்தும் அவருடன் அமெரிக்கா பேசி வருகிறது.

வாஷிங்டன்: லிபியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ள அதிபர் கடாபியின் அரசுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடாபியின் அடக்கு முறைக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும், ஒருமித்த வகையில் குரல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக, அதிபர் பதவியில் இருக்கும் கடாபிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர் பதவி விலக வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர். இதனால், லிபியா மக்கள் மீது அதிபர் கடாபியின் நிர்வாகம், அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. ராணுவத்தினரும், கடாபியின் ஆதரவாளர்களும் போராட்டக்காரர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். விமானங்கள் மூலமும் குண்டு வீசப்படுகின்றன. இந்தத் தாக்குதல்களில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். சொந்த நாட்டு மக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தி, ரத்த ஆறு ஓடச் செய்யும் அதிபர் கடாபிக்கும், அவரது நிர்வாகத்திற்கும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடாபிக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒருமித்த குரலில் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: லிபியாவில் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் மூர்க்கத்தனமானது மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது. போராட்டத்தில் ஈடுபடும் மக்களை தண்டிக்கும் நடவடிக்கையில் அதிபர் கடாபியின் அரசு இறங்கியுள்ளது. இந்தச் செயல் சர்வதேச விதிமுறைகளுக்கு எதிரானது. நாகரீகமற்ற செயலும் கூட. லிபியா அரசின் அடக்கு முறைக்கு எதிராக வடக்கு,தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு என, உலக நாடுகள் அனைத்தும் ஓங்கி குரல் எழுப்ப வேண்டும். லிபியா மக்களின் உரிமைகளுக்காகவும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். லிபியாபில் பிரச்னையைத் தீர்ப்பதற்கான வாய்ப்புகளை ஆராயும்படி எனது நிர்வாகத்தையும் நான் கேட்டுக் கொண்டுள்ளேன். மற்ற கூட்டணி நாடுகளுடன் ஒருங்கிணைந்து நல்ல நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற உலக நாடுகளைப் போல, லிபியா அரசும் வன்முறைகளில் ஈடுபடுவதில் இருந்து விலகி இருக்க வேண்டும். தேவைப்படும் ஒவ்வொருவருக்கும் மனிதாபிமான ரீதியான உதவிகளை வழங்க வேண்டும். மக்களின் உரிமைகளை மதிக்க வேண்டும். இதுவரை கடமைகளைச் செய்யத் தவறியமைக்கு பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

இதற்கிடையில், "போராட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விடுவதை நிறுத்த வேண்டும்' என்ற தனது வேண்டுகோளை லிபியா அதிபர் கடாபி நிராகரித்ததற்கு ஐ.நா., பொதுச் செயலர் பான்-கி-மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய மூன் கூறியதாவது: லிபியா அதிபருடன் நான் நீண்ட நேரம், விரிவான விவாதம் நடத்தினேன். மக்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விடுவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். இருந்தும், எனது வேண்டுகோளுக்கு அவர் செவிசாய்க்கவில்லை. அவர் செய்யும் செயல்கள் எல்லாம் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதவை. லிபியா நிலவரம் மிக மோசமாக மாறிக் கொண்டிருக்கிறது. எனவே, நிலைமையை நாம் மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும், என்றார்.

கடாபி மகள் பதவி பறிப்பு: லிபியா அதிபர் கடாபியின் மகளுக்கு வழங்கப்பட்டிருந்த நல்லெண்ண தூதர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஐ.நா., தகவல் தொடர்பாளர் மார்ட்டின் நெசிர்கி கூறியதாவது: ஐ.நா., மேம்பாட்டுத் திட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், லிபியா அதிபர் கடாபியின் மகள் ஆயிஷா அல்-கடாபி, கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி லிபியாவிற்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார். எய்ட்ஸ் ஒழிப்பு, பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுத்தல், வறுமையை ஒழிப்பதற்கான லட்சியங்களை நிறைவேற்றுதல் போன்றவை தொடர்பான ஐ.நா., வின் பணிகளில் அதிக முக்கியத்துவம் காட்டுவதற்காக ஆயிஷா இப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். ஆனால், லிபியாவில் தற்போது நடந்து வரும் வன்முறைகள் மற்றும் அடக்கு முறைகள் காரணமாக ஆயிஷாவின் பதவி பறிக்கப்பட்டுள்ளது, என்றார். இவ்வாறு மார்ட்டின் கூறினார்.

மீட்புப்பணியில் இந்தியக்கப்பல்: வன்முறையால் பாதித்த லிபியாவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்ட கப்பல் தற்போது, பெங்காசி துறைமுகத்தை எட்டியுள்ளது. இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா கூறியதாவது: லிபியாவில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர். அங்கிருந்து வெளியேற விரும்பும் இந்தியர்கள், பாதுகாப்பாகவும், எந்த விதமான செலவும் இல்லாமல் வெளியேற தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியர்களை அழைத்து வருவதற்காக லிபியாவின் பெங்காசி துறைமுகத்திற்கு கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முதல் கப்பல் துறைமுகத்தை நெருங்கியுள்ளது. இந்தக் கப்பலில் 1,120 பேருக்கு மேல் பயணிக்க முடியும். இவ்வாறு கிருஷ்ணா கூறினார்.

கடாபியின் அடக்குமுறைக்கு பதிலடி தரப்படும்: ஒபாமா

வாஷிங்டன்: லிபியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ள அதிபர் கடாபியின் அரசுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடாபியின் அடக்கு முறைக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும், ஒருமித்த வகையில் குரல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக, அதிபர் பதவியில் இருக்கும் கடாபிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர் பதவி விலக வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர். இதனால், லிபியா மக்கள் மீது அதிபர் கடாபியின் நிர்வாகம், அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. ராணுவத்தினரும், கடாபியின் ஆதரவாளர்களும் போராட்டக்காரர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். விமானங்கள் மூலமும் குண்டு வீசப்படுகின்றன. இந்தத் தாக்குதல்களில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். சொந்த நாட்டு மக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தி, ரத்த ஆறு ஓடச் செய்யும் அதிபர் கடாபிக்கும், அவரது நிர்வாகத்திற்கும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடாபிக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒருமித்த குரலில் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: லிபியாவில் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் மூர்க்கத்தனமானது மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது. போராட்டத்தில் ஈடுபடும் மக்களை தண்டிக்கும் நடவடிக்கையில் அதிபர் கடாபியின் அரசு இறங்கியுள்ளது. இந்தச் செயல் சர்வதேச விதிமுறைகளுக்கு எதிரானது. நாகரீகமற்ற செயலும் கூட. லிபியா அரசின் அடக்கு முறைக்கு எதிராக வடக்கு,தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு என, உலக நாடுகள் அனைத்தும் ஓங்கி குரல் எழுப்ப வேண்டும். லிபியா மக்களின் உரிமைகளுக்காகவும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். லிபியாபில் பிரச்னையைத் தீர்ப்பதற்கான வாய்ப்புகளை ஆராயும்படி எனது நிர்வாகத்தையும் நான் கேட்டுக் கொண்டுள்ளேன். மற்ற கூட்டணி நாடுகளுடன் ஒருங்கிணைந்து நல்ல நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற உலக நாடுகளைப் போல, லிபியா அரசும் வன்முறைகளில் ஈடுபடுவதில் இருந்து விலகி இருக்க வேண்டும். தேவைப்படும் ஒவ்வொருவருக்கும் மனிதாபிமான ரீதியான உதவிகளை வழங்க வேண்டும். மக்களின் உரிமைகளை மதிக்க வேண்டும். இதுவரை கடமைகளைச் செய்யத் தவறியமைக்கு பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

இதற்கிடையில், "போராட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விடுவதை நிறுத்த வேண்டும்' என்ற தனது வேண்டுகோளை லிபியா அதிபர் கடாபி நிராகரித்ததற்கு ஐ.நா., பொதுச் செயலர் பான்-கி-மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய மூன் கூறியதாவது: லிபியா அதிபருடன் நான் நீண்ட நேரம், விரிவான விவாதம் நடத்தினேன். மக்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விடுவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். இருந்தும், எனது வேண்டுகோளுக்கு அவர் செவிசாய்க்கவில்லை. அவர் செய்யும் செயல்கள் எல்லாம் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதவை. லிபியா நிலவரம் மிக மோசமாக மாறிக் கொண்டிருக்கிறது. எனவே, நிலைமையை நாம் மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும், என்றார்.

கடாபி மகள் பதவி பறிப்பு: லிபியா அதிபர் கடாபியின் மகளுக்கு வழங்கப்பட்டிருந்த நல்லெண்ண தூதர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஐ.நா., தகவல் தொடர்பாளர் மார்ட்டின் நெசிர்கி கூறியதாவது: ஐ.நா., மேம்பாட்டுத் திட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், லிபியா அதிபர் கடாபியின் மகள் ஆயிஷா அல்-கடாபி, கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி லிபியாவிற்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார். எய்ட்ஸ் ஒழிப்பு, பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுத்தல், வறுமையை ஒழிப்பதற்கான லட்சியங்களை நிறைவேற்றுதல் போன்றவை தொடர்பான ஐ.நா., வின் பணிகளில் அதிக முக்கியத்துவம் காட்டுவதற்காக ஆயிஷா இப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். ஆனால், லிபியாவில் தற்போது நடந்து வரும் வன்முறைகள் மற்றும் அடக்கு முறைகள் காரணமாக ஆயிஷாவின் பதவி பறிக்கப்பட்டுள்ளது, என்றார். இவ்வாறு மார்ட்டின் கூறினார்.

மீட்புப்பணியில் இந்தியக்கப்பல்: வன்முறையால் பாதித்த லிபியாவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்ட கப்பல் தற்போது, பெங்காசி துறைமுகத்தை எட்டியுள்ளது. இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா கூறியதாவது: லிபியாவில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர். அங்கிருந்து வெளியேற விரும்பும் இந்தியர்கள், பாதுகாப்பாகவும், எந்த விதமான செலவும் இல்லாமல் வெளியேற தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியர்களை அழைத்து வருவதற்காக லிபியாவின் பெங்காசி துறைமுகத்திற்கு கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முதல் கப்பல் துறைமுகத்தை நெருங்கியுள்ளது. இந்தக் கப்பலில் 1,120 பேருக்கு மேல் பயணிக்க முடியும். இவ்வாறு கிருஷ்ணா கூறினார்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி தன் மகள்களுடன் மீண்டும் இந்தியா வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் முறையாக தமது கணவருடன் இந்தியா வந்தார்.

மும்பை, டெல்லி ஆகிய நகரங்களுக்கு சென்ற அவர் மீண்டும் தன் மகள்கள் சஷா, மாலியாவுடன் இந்தியா வர இருக்கிறார்.

இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனனை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசியபோது அவரிடம் இந்த தகவலை ஒபாமாவே தெரிவித்ததாக செய்திகள் கூறுகின்றன.

இந்தியாவில் தங்கி இருந்த நாட்களை சுகமான அனுபவமாக மிச்சல் கருதினார் என்றும், அவர் தன் மகள்களுடன் மீண்டும் இந்தியா வர விரும்புகிறார் என்றும் ஒபாமா கூறியதாகவும் அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

மீண்டும் இந்தியா வருகிறது ஒபாமா குடும்பம்

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி தன் மகள்களுடன் மீண்டும் இந்தியா வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் முறையாக தமது கணவருடன் இந்தியா வந்தார்.

மும்பை, டெல்லி ஆகிய நகரங்களுக்கு சென்ற அவர் மீண்டும் தன் மகள்கள் சஷா, மாலியாவுடன் இந்தியா வர இருக்கிறார்.

இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனனை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசியபோது அவரிடம் இந்த தகவலை ஒபாமாவே தெரிவித்ததாக செய்திகள் கூறுகின்றன.

இந்தியாவில் தங்கி இருந்த நாட்களை சுகமான அனுபவமாக மிச்சல் கருதினார் என்றும், அவர் தன் மகள்களுடன் மீண்டும் இந்தியா வர விரும்புகிறார் என்றும் ஒபாமா கூறியதாகவும் அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

எகிப்தில் உடனடி ஆட்சி மாற்றம் வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.

எகிப்தில் கடந்த 30 ஆண்டு காலமாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் ஹோஸ்னி முபாரக்கை பதவி விலகக்கோரி, கடந்த ஒரு வாரமாக கிளர்ச்சியாளர்கள் போராட்டம் ந்டத்தி வருகிறார்கள்.

முபாரக்கிற்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண அமெரிக்கா முயன்று வருகிறது.

அதன் காரணமாக அதிபர் ஒபாமாவின் தூதுவர் ஒருவர் எகிப்து அனுப்பப்பட்டுள்ளார்.

எகிப்து அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்த போதிலும்,முபாரக் பதவில் நீடிப்பதை அந்நாட்டு மக்கள் விரும்பாத நிலையில் அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும்,எகிப்தில் அமைதி திரும்பவும், ஜனநாயக அரசு அமையவும் உடனடியாக ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் ஒபாமா விரும்புவதாக அத்தூதர் மூலம் எகிப்து அதிபர் முபாராக்கிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எகிப்தில் உடனடி ஆட்சி மாற்றம் வேண்டும்: ஒபாமா வலியுறுத்தல்

எகிப்தில் உடனடி ஆட்சி மாற்றம் வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.

எகிப்தில் கடந்த 30 ஆண்டு காலமாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் ஹோஸ்னி முபாரக்கை பதவி விலகக்கோரி, கடந்த ஒரு வாரமாக கிளர்ச்சியாளர்கள் போராட்டம் ந்டத்தி வருகிறார்கள்.

முபாரக்கிற்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண அமெரிக்கா முயன்று வருகிறது.

அதன் காரணமாக அதிபர் ஒபாமாவின் தூதுவர் ஒருவர் எகிப்து அனுப்பப்பட்டுள்ளார்.

எகிப்து அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்த போதிலும்,முபாரக் பதவில் நீடிப்பதை அந்நாட்டு மக்கள் விரும்பாத நிலையில் அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும்,எகிப்தில் அமைதி திரும்பவும், ஜனநாயக அரசு அமையவும் உடனடியாக ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் ஒபாமா விரும்புவதாக அத்தூதர் மூலம் எகிப்து அதிபர் முபாராக்கிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகின் அமைதி மற்றும் நன்மைக்காக இந்தியாவுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்கா செய்துகொள்ள உள்ளதாக அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின்போது இதனை தெரிவித்த அவர், பயங்கரவாதத்தை ஒழிக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் இந்தியாவுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்கள் மேலும் பலப்படுத்தபட உள்ளதாக அவர் கூறினார்.

இந்தியா மற்றும் ரஷ்யாவுடன் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும், இதற்காக இந்தாண்டு மார்ச் மாதத்தில் பிரேசில்,சிலி,சால்வடார் உள்ளிட்ட நாடுகளுக்கு தான் செல்ல உள்ளதாகவும் ஒபாமா மேலும் தெரிவித்தார்.

இந்தியாவுடன் புதிய ஒப்பந்தம்:ஒபாமா அறிவிப்பு

உலகின் அமைதி மற்றும் நன்மைக்காக இந்தியாவுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்கா செய்துகொள்ள உள்ளதாக அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின்போது இதனை தெரிவித்த அவர், பயங்கரவாதத்தை ஒழிக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் இந்தியாவுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்கள் மேலும் பலப்படுத்தபட உள்ளதாக அவர் கூறினார்.

இந்தியா மற்றும் ரஷ்யாவுடன் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும், இதற்காக இந்தாண்டு மார்ச் மாதத்தில் பிரேசில்,சிலி,சால்வடார் உள்ளிட்ட நாடுகளுக்கு தான் செல்ல உள்ளதாகவும் ஒபாமா மேலும் தெரிவித்தார்.

முக நூல்

Popular Posts