background img

புதிய வரவு

Showing posts with label america. Show all posts
Showing posts with label america. Show all posts
உலகை அச்சுறுத்தி வந்த அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்த 2-ந்தேதி பாகிஸ்தான் அபோதாபாத்தில் அமெரிக்க படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது அவர் தங்கியிருந்த வீட்டில் அமெரிக்கா உளவுத்துறை நடத்திய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கின.

அதில், பின்லேடன் தீட்டி இருந்த சதி திட்டம் பற்றிய பல அதிர்ச்சிகள் இருந்தன. அதில், இந்திய பெருங்கடல், அரபிக்கடல் மற்றும் அட்லாண்டிக்கடல் பகுதியில் செல்லும் எண்ணை கப்பல்களை கடத்தி அவற்றை தகர்க்க அல்கொய்தா திட்டமிட்டிருந்தது. அதற்கான மிகப்பெரிய சதி திட்டத்தை பின்லேடன் தயாரித்து இருந்தார்.

இதை கடந்த ஆண்டு கோடை காலத்தில் செயல்படுத்த திட்டமிட்டிருந்தார்.இதன் மூலம் உலகம் முழுவதும் கச்சா எண்ணை விலை தாறுமாறாக உயரும். இதனால் உலக பொருளாதாரம் சீரழிந்து பெருமளவில் பாதிப்பு ஏற்படும் என பின்லேடன் கருதினார். ஆனால், கப்பல்களை தகர்க்கும் கடல் பகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம் வாழ்வதால் பெருமளவில் பாதிப்பு ஏற்படும் என கருதி அதற்கு மறுத்து விட்டார். அல்கொய்தா தீவிரவாதிகள் மறுத்து விட்டனர். அதனால் இந்த திட்டம் கைவிடப்பட்டது.

இவ்வாறு அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. இத்தகவலை அமெரிக்கா உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக பொருளாதாரத்தை சீர்குலைக்க எண்ணை கப்பல்களை தகர்க்க பின்லேடன் திட்டம் தீட்டியிருந்தார்; அமெரிக்கா தகவல்

உலகை அச்சுறுத்தி வந்த அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்த 2-ந்தேதி பாகிஸ்தான் அபோதாபாத்தில் அமெரிக்க படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது அவர் தங்கியிருந்த வீட்டில் அமெரிக்கா உளவுத்துறை நடத்திய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கின.

அதில், பின்லேடன் தீட்டி இருந்த சதி திட்டம் பற்றிய பல அதிர்ச்சிகள் இருந்தன. அதில், இந்திய பெருங்கடல், அரபிக்கடல் மற்றும் அட்லாண்டிக்கடல் பகுதியில் செல்லும் எண்ணை கப்பல்களை கடத்தி அவற்றை தகர்க்க அல்கொய்தா திட்டமிட்டிருந்தது. அதற்கான மிகப்பெரிய சதி திட்டத்தை பின்லேடன் தயாரித்து இருந்தார்.

இதை கடந்த ஆண்டு கோடை காலத்தில் செயல்படுத்த திட்டமிட்டிருந்தார்.இதன் மூலம் உலகம் முழுவதும் கச்சா எண்ணை விலை தாறுமாறாக உயரும். இதனால் உலக பொருளாதாரம் சீரழிந்து பெருமளவில் பாதிப்பு ஏற்படும் என பின்லேடன் கருதினார். ஆனால், கப்பல்களை தகர்க்கும் கடல் பகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம் வாழ்வதால் பெருமளவில் பாதிப்பு ஏற்படும் என கருதி அதற்கு மறுத்து விட்டார். அல்கொய்தா தீவிரவாதிகள் மறுத்து விட்டனர். அதனால் இந்த திட்டம் கைவிடப்பட்டது.

இவ்வாறு அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. இத்தகவலை அமெரிக்கா உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாஷிங்டன், மே 9: அல்-காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனுக்கு உதவிய பாகிஸ்தான் அதிகாரிகள் யார்? விசாரணை நடத்தி அவர்களை கண்டுபிடித்துக் கூறுங்கள் என்று பாகிஸ்தானை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த விவகாரத்தை பாகிஸ்தான் விசாரிக்கிறது என்று விட்டுவிடமாட்டோம். உண்மை தெரியும்வரை நாங்களும் விசாரிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரட்டைக் கோபுரத்தை தகர்த்த பின்லேடன் கொல்லப்பட்டதால் அமெரிக்காவே பூரிப்பில் உள்ளது. அதிபர் ஒபாமாவுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் பின்லேடன் கொல்லப்பட்டதையடுத்து ஒபாமா திங்கள்கிழமை ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு முதல்தடவையாகப் பேட்டியளித்தார். இந்த பேட்டியின் போதுதான் பாகிஸ்தானில் ஆதரவு கிடைக்காமல் பின்லேடன் அங்கு வசித்திருக்க முடியாது என்று குற்றம்சுமத்தினார்.
மேலும் அவர் கூறியது: நாங்கள் வலைவீசித் தேடிவந்த பயங்கரவாதி பாகிஸ்தான் மண்ணில்தான் இருந்துள்ளார். அதுவும் நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இருந்து குறைந்த தொலைவில் ராணுவ மையம் அருகிலேயே துணிச்சலாக வசித்து வந்துள்ளார். இது எப்படி சாத்தியம்? பாகிஸ்தானில் யாருடைய ஆதரவும், உதவியும் இல்லாமல் பின்லேடனால் அங்கு வசித்திருக்க முடியுமா? வாய்ப்பே இல்லை. அவருக்கு பாகிஸ்தான் அரசு அதிகாரிகளோ, அரசுக்கு வெளியில் உள்ளவர்களோ ஆதரவுக் கரம் நீட்டியிருக்க வேண்டும். அவருக்கு வேண்டிய உதவியை செய்திருக்க வேண்டும். அவருடைய அந்த நலவிரும்பிகள் யார் என்பது அமெரிக்காவுக்கு நிச்சயம் தெரிந்தாக வேண்டும்.
இந்த விஷயத்தை பாகிஸ்தான் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டறிய வேண்டும். இதுதான் அமெரிக்காவின் விருப்பம்.
பின்லேடன் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள சூழலால் கடந்த காலத்தில் பயங்கரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு அளித்த ஒத்துழைப்பையும், உதவியையும் மறந்திட முடியாது. இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டதில் இருந்து பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைக்கு சிறந்தவகையில் ஒத்துழைப்பை நல்கி வருகிறது.
பயங்கரவாதத்துக்கு எதிரானப் போரை பொறுத்தவரை பின்லேடன் கொல்லப்படுவதற்கு முன்னதாகவே அமெரிக்கா மெச்சும் வகையில் நடவடிக்கையை எடுத்துள்ளது. பாகிஸ்தானில் உலா வந்த ஏராளமான பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டியுள்ளது. இது, பாகிஸ்தானின் ஒத்துழைப்பு இல்லாமல் நிச்சயம் சாத்தியமாயிருக்காது.
இந்தத் தருணம் இரு நாடுகளுக்குமே முக்கியமானது. பாகிஸ்தானுக்கு நெருக்குதல் அளிக்க வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே விரிசல் உருவாகக் கூடாது என்றே அமெரிக்கா விரும்புகிறது.
பயங்கரவாதத்துக்கு எதிராக கடந்த காலத்தைவிட வருங்காலத்தில்தான் நிறைய நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இதற்கு இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது அவசியம். பின்லேடன் கொல்லப்பட்டதன் மூலம் பயங்கரவாதமே முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருத முடியாது. அல்லது அல்-காய்தா அழிக்கப்பட்டுவிட்டதாகவும் நினைக்க முடியாது. பின்லேடன் வீழ்த்தப்பட்டதன் மூலம் அல்-காய்தா பயங்கரவாதிகளை ஒடுக்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அவ்வளவுதான். குறைந்தபட்சம் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் பிராந்தியத்தில் வேரூன்றியுள்ள அல்-காய்தா அமைப்பை அடியோடு அழிக்க முயற்சிக்க வேண்டும்.
பின்லேடனை கொன்றது மிகப் பெரிய வெற்றிதான் என்பதையும் மறுக்க முடியாது. அவரைக் கொல்ல அமெரிக்க கமாண்டோ வீரர்களின் 40 நிமிடப் போராட்டம் என்னைப் பிரமிக்க வைத்துவிட்டது. பின்லேடனை தீர்த்துக்கட்ட கமாண்டோ வீரர்கள் போராடிய போது எனக்குப் பதற்றமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. அடுத்து என்ன நடக்குமோ, அடுத்து என்ன நடக்குமோ என்ற அதிர்ச்சி கேள்வி என்னுள் எழுந்த வண்ணம் இருந்தது. அந்த 40 நிமிடமே என் வாழ்வின் நீண்ட 40 நிமிடம் என்றார் ஒபாமா.
ஒபாமா பாகிஸ்தான் செல்ல மாட்டார்-அமெரிக்கா: இப்போதைய சூழலில் அதிபர் ஒபாமா பாகிஸ்தான் செல்ல வாய்ப்பில்லை என்று வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்த ஆண்டு பாகிஸ்தான் செல்லுவார் என்று கூறப்பட்டது. இதை பாகிஸ்தான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தது. இந்நிலையில் பின்லேடன் பாகிஸ்தான் மண்ணில் இருந்தது அம்பலமானதால் இரு நாடுகளின உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு செல்ல ஒபாமா விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் பின்லேடன் விவகாரத்தையும், ஒபாமா பயண ரத்தையும் அமெரிக்கா தொடர்புபடுத்தவில்லை. சூழலையே காரணம் காட்டியுள்ளது.

பின்லேடனுக்கு பாகிஸ்தான் அதிகாரிகள் உதவினரா? விசாரணை தேவை-ஒபாமா

வாஷிங்டன், மே 9: அல்-காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனுக்கு உதவிய பாகிஸ்தான் அதிகாரிகள் யார்? விசாரணை நடத்தி அவர்களை கண்டுபிடித்துக் கூறுங்கள் என்று பாகிஸ்தானை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த விவகாரத்தை பாகிஸ்தான் விசாரிக்கிறது என்று விட்டுவிடமாட்டோம். உண்மை தெரியும்வரை நாங்களும் விசாரிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரட்டைக் கோபுரத்தை தகர்த்த பின்லேடன் கொல்லப்பட்டதால் அமெரிக்காவே பூரிப்பில் உள்ளது. அதிபர் ஒபாமாவுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் பின்லேடன் கொல்லப்பட்டதையடுத்து ஒபாமா திங்கள்கிழமை ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு முதல்தடவையாகப் பேட்டியளித்தார். இந்த பேட்டியின் போதுதான் பாகிஸ்தானில் ஆதரவு கிடைக்காமல் பின்லேடன் அங்கு வசித்திருக்க முடியாது என்று குற்றம்சுமத்தினார்.
மேலும் அவர் கூறியது: நாங்கள் வலைவீசித் தேடிவந்த பயங்கரவாதி பாகிஸ்தான் மண்ணில்தான் இருந்துள்ளார். அதுவும் நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இருந்து குறைந்த தொலைவில் ராணுவ மையம் அருகிலேயே துணிச்சலாக வசித்து வந்துள்ளார். இது எப்படி சாத்தியம்? பாகிஸ்தானில் யாருடைய ஆதரவும், உதவியும் இல்லாமல் பின்லேடனால் அங்கு வசித்திருக்க முடியுமா? வாய்ப்பே இல்லை. அவருக்கு பாகிஸ்தான் அரசு அதிகாரிகளோ, அரசுக்கு வெளியில் உள்ளவர்களோ ஆதரவுக் கரம் நீட்டியிருக்க வேண்டும். அவருக்கு வேண்டிய உதவியை செய்திருக்க வேண்டும். அவருடைய அந்த நலவிரும்பிகள் யார் என்பது அமெரிக்காவுக்கு நிச்சயம் தெரிந்தாக வேண்டும்.
இந்த விஷயத்தை பாகிஸ்தான் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டறிய வேண்டும். இதுதான் அமெரிக்காவின் விருப்பம்.
பின்லேடன் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள சூழலால் கடந்த காலத்தில் பயங்கரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு அளித்த ஒத்துழைப்பையும், உதவியையும் மறந்திட முடியாது. இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டதில் இருந்து பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைக்கு சிறந்தவகையில் ஒத்துழைப்பை நல்கி வருகிறது.
பயங்கரவாதத்துக்கு எதிரானப் போரை பொறுத்தவரை பின்லேடன் கொல்லப்படுவதற்கு முன்னதாகவே அமெரிக்கா மெச்சும் வகையில் நடவடிக்கையை எடுத்துள்ளது. பாகிஸ்தானில் உலா வந்த ஏராளமான பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டியுள்ளது. இது, பாகிஸ்தானின் ஒத்துழைப்பு இல்லாமல் நிச்சயம் சாத்தியமாயிருக்காது.
இந்தத் தருணம் இரு நாடுகளுக்குமே முக்கியமானது. பாகிஸ்தானுக்கு நெருக்குதல் அளிக்க வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே விரிசல் உருவாகக் கூடாது என்றே அமெரிக்கா விரும்புகிறது.
பயங்கரவாதத்துக்கு எதிராக கடந்த காலத்தைவிட வருங்காலத்தில்தான் நிறைய நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இதற்கு இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது அவசியம். பின்லேடன் கொல்லப்பட்டதன் மூலம் பயங்கரவாதமே முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருத முடியாது. அல்லது அல்-காய்தா அழிக்கப்பட்டுவிட்டதாகவும் நினைக்க முடியாது. பின்லேடன் வீழ்த்தப்பட்டதன் மூலம் அல்-காய்தா பயங்கரவாதிகளை ஒடுக்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அவ்வளவுதான். குறைந்தபட்சம் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் பிராந்தியத்தில் வேரூன்றியுள்ள அல்-காய்தா அமைப்பை அடியோடு அழிக்க முயற்சிக்க வேண்டும்.
பின்லேடனை கொன்றது மிகப் பெரிய வெற்றிதான் என்பதையும் மறுக்க முடியாது. அவரைக் கொல்ல அமெரிக்க கமாண்டோ வீரர்களின் 40 நிமிடப் போராட்டம் என்னைப் பிரமிக்க வைத்துவிட்டது. பின்லேடனை தீர்த்துக்கட்ட கமாண்டோ வீரர்கள் போராடிய போது எனக்குப் பதற்றமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. அடுத்து என்ன நடக்குமோ, அடுத்து என்ன நடக்குமோ என்ற அதிர்ச்சி கேள்வி என்னுள் எழுந்த வண்ணம் இருந்தது. அந்த 40 நிமிடமே என் வாழ்வின் நீண்ட 40 நிமிடம் என்றார் ஒபாமா.
ஒபாமா பாகிஸ்தான் செல்ல மாட்டார்-அமெரிக்கா: இப்போதைய சூழலில் அதிபர் ஒபாமா பாகிஸ்தான் செல்ல வாய்ப்பில்லை என்று வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்த ஆண்டு பாகிஸ்தான் செல்லுவார் என்று கூறப்பட்டது. இதை பாகிஸ்தான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தது. இந்நிலையில் பின்லேடன் பாகிஸ்தான் மண்ணில் இருந்தது அம்பலமானதால் இரு நாடுகளின உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு செல்ல ஒபாமா விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் பின்லேடன் விவகாரத்தையும், ஒபாமா பயண ரத்தையும் அமெரிக்கா தொடர்புபடுத்தவில்லை. சூழலையே காரணம் காட்டியுள்ளது.

வாஷிங்டன், மே 5: பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில், ஒசாமா பின் லேடனைக் கொல்வதற்கு எவ்வித அறிவிப்பும் இன்றி அமெரிக்க கமாண்டோக்கள் நுழைந்ததைப் போல தேவைப்படும்போதெல்லாம் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார். இத்தகவலை வெள்ளை மாளிகை ஊடக செய்தித் தொடர்பாளர் ஜே கார்னி உறுதி செய்தார்.
வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஜே கார்னி கூறியது: பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுவோர் பாகிஸ்தானில் எங்கிருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் இதைப் போன்ற அதிரடி நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும். இதை அதிபர் பராக் ஒபாமா தெளிவுபட தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அபோட்டாபாத் நகரில் அல்-காய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் மீது தாக்குதல் நடத்துவதற்காக கமாண்டோ வீரர்கள் அதிரடியாக நுழைந்தனர். பாகிஸ்தான் அரசிடம் தெரிவிக்காமல் அமெரிக்க கமாண்டோ வீரர்கள் நுழைந்தது, அந்நாட்டு இறையாண்மையை பாதிக்கும் விஷயம் என்று தெரிவிக்கப்பட்டது. அமெரிக்க அரசு தன்னிச்சையாக, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இத்தகைய நடவடிக்கையை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து கேட்டதற்கு, ஒசாமா பின் லேடனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த தாக்குதல் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது என்றார் அவர்.
ஒருவேளை அமெரிக்காவிடம் அல் காய்தா தலைவர் பின் லேடன் சரணடைந்திருந்தால் அதை அமெரிக்கா ஏற்றிருக்குமா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அபோட்டாபாத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையில் அடுத்தடுத்த நிகழ்வுகள் மேற்கொள்ள வேண்டியதாயிற்று. இதன் தொடர் நடவடிக்கையாக ஒசாமாவை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இதுவும் சட்டத்துக்கு உள்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைதான். நியூயார்க் நகரிலிருந்த இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட சம்பவத்தில் பிரதான மூளையாக செயல்பட்ட அல்-காய்தா இயக்கத் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. கமாண்டோக்கள் எதிர்கொண்ட சூழ்நிலையை இங்கிருந்தவாறு விளக்குவது சரியாக இருக்காது. மேலும் அவர்கள் சட்டத்திற்கு உள்பட்டுத்தான் செயல்பட்டுள்ளனர் என்றார். சதித் திட்டம் தீட்டி பல்லாயிரக்கணக்கானவர்கள் சாவுக்குக் காரணமானவருக்கு சரியான முடிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டது.
பின் லேடனின் வீட்டை சுற்றிவளைத்து இந்த தாக்குதலை வெற்றிகரமராக நிறைவேற்றியது மிகவும் துணிச்சலான அதேசமயம், அதிக ஆபத்து நிறைந்த பணியாகும். அதை தேர்ச்சி பெற்ற கமாண்டோக்கள் சரியாக செய்து முடித்தனர். போர் விதிமுறைகள்படிதான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நடவடிக்கை சட்ட விதிமீறல் என்று கூற முடியாது. அல்-காய்தா தீவிரவாத இயக்கம் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நியூயார்க் நகரில் இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்த சம்பவத்துக்கு பொறுப்பேற்றது. இத்தகைய பயங்கரவாத செயலை செய்த அமைப்புக்கு இத்தகைய தண்டனைதான் சிறந்த தீர்ப்பு. மேலும் அமெரிக்காவின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு வந்துள்ளார் பின் லேடன். அமெரிக்காவின் பாதுகாப்பு கருதி இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் பொதுமக்கள் உயிரிழப்பு முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளது. அமெரிக்க வீரர்களின் உயிரையும் பணயம் வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் முழுக்க முழுக்க போர் சட்டங்களுக்கு உள்பட்டுத்தான் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பின் லேடன் சரணைடைந்திருந்தால், அதற்குரிய சூழல் இருப்பின் அது ஏற்கப்பட்டிருக்கும் என்றார் ஜே கார்னி.
பின் லேடன் மரணத்துடன்,
அல் - காய்தா இயக்கத்துக்கு எதிரான நடவடிக்கை முற்றுப் பெறவில்லை என்று வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் சுட்டிக் காட்டியுள்ளார்.

"பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கை தொடரும்': பராக் ஒபாமா

வாஷிங்டன், மே 5: பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில், ஒசாமா பின் லேடனைக் கொல்வதற்கு எவ்வித அறிவிப்பும் இன்றி அமெரிக்க கமாண்டோக்கள் நுழைந்ததைப் போல தேவைப்படும்போதெல்லாம் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார். இத்தகவலை வெள்ளை மாளிகை ஊடக செய்தித் தொடர்பாளர் ஜே கார்னி உறுதி செய்தார்.
வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஜே கார்னி கூறியது: பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுவோர் பாகிஸ்தானில் எங்கிருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் இதைப் போன்ற அதிரடி நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும். இதை அதிபர் பராக் ஒபாமா தெளிவுபட தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அபோட்டாபாத் நகரில் அல்-காய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் மீது தாக்குதல் நடத்துவதற்காக கமாண்டோ வீரர்கள் அதிரடியாக நுழைந்தனர். பாகிஸ்தான் அரசிடம் தெரிவிக்காமல் அமெரிக்க கமாண்டோ வீரர்கள் நுழைந்தது, அந்நாட்டு இறையாண்மையை பாதிக்கும் விஷயம் என்று தெரிவிக்கப்பட்டது. அமெரிக்க அரசு தன்னிச்சையாக, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இத்தகைய நடவடிக்கையை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து கேட்டதற்கு, ஒசாமா பின் லேடனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த தாக்குதல் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது என்றார் அவர்.
ஒருவேளை அமெரிக்காவிடம் அல் காய்தா தலைவர் பின் லேடன் சரணடைந்திருந்தால் அதை அமெரிக்கா ஏற்றிருக்குமா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அபோட்டாபாத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையில் அடுத்தடுத்த நிகழ்வுகள் மேற்கொள்ள வேண்டியதாயிற்று. இதன் தொடர் நடவடிக்கையாக ஒசாமாவை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இதுவும் சட்டத்துக்கு உள்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைதான். நியூயார்க் நகரிலிருந்த இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட சம்பவத்தில் பிரதான மூளையாக செயல்பட்ட அல்-காய்தா இயக்கத் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. கமாண்டோக்கள் எதிர்கொண்ட சூழ்நிலையை இங்கிருந்தவாறு விளக்குவது சரியாக இருக்காது. மேலும் அவர்கள் சட்டத்திற்கு உள்பட்டுத்தான் செயல்பட்டுள்ளனர் என்றார். சதித் திட்டம் தீட்டி பல்லாயிரக்கணக்கானவர்கள் சாவுக்குக் காரணமானவருக்கு சரியான முடிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டது.
பின் லேடனின் வீட்டை சுற்றிவளைத்து இந்த தாக்குதலை வெற்றிகரமராக நிறைவேற்றியது மிகவும் துணிச்சலான அதேசமயம், அதிக ஆபத்து நிறைந்த பணியாகும். அதை தேர்ச்சி பெற்ற கமாண்டோக்கள் சரியாக செய்து முடித்தனர். போர் விதிமுறைகள்படிதான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நடவடிக்கை சட்ட விதிமீறல் என்று கூற முடியாது. அல்-காய்தா தீவிரவாத இயக்கம் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நியூயார்க் நகரில் இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்த சம்பவத்துக்கு பொறுப்பேற்றது. இத்தகைய பயங்கரவாத செயலை செய்த அமைப்புக்கு இத்தகைய தண்டனைதான் சிறந்த தீர்ப்பு. மேலும் அமெரிக்காவின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு வந்துள்ளார் பின் லேடன். அமெரிக்காவின் பாதுகாப்பு கருதி இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் பொதுமக்கள் உயிரிழப்பு முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளது. அமெரிக்க வீரர்களின் உயிரையும் பணயம் வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் முழுக்க முழுக்க போர் சட்டங்களுக்கு உள்பட்டுத்தான் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பின் லேடன் சரணைடைந்திருந்தால், அதற்குரிய சூழல் இருப்பின் அது ஏற்கப்பட்டிருக்கும் என்றார் ஜே கார்னி.
பின் லேடன் மரணத்துடன்,
அல் - காய்தா இயக்கத்துக்கு எதிரான நடவடிக்கை முற்றுப் பெறவில்லை என்று வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் சுட்டிக் காட்டியுள்ளார்.

வாஷிங்டன், மே 4: வாக்குறுதி அளித்தபடி வரிகளைக் குறைக்கவில்லை, வசதியைப் பெருக்கவில்லை, வேலைவாய்ப்பை அதிகப்படுத்தவில்லை, பொருளாதாரச் சரிவிலிருந்து நாட்டைக் காப்பாற்றவில்லை என்றெல்லாம் அதிபர் பராக் ஒபாமா மீது அதிருப்தியாக இருந்த அமெரிக்கர்கள், பின் லேடனைவெற்றிகரமாகக் கொன்றுவிட்டார் என்றதும் ஆதரவை அள்ளித்தர ஆரம்பித்துள்ளனர்.
இது நீடிக்குமா, அடுத்த முறையும் அதிபராக இது போதுமா என்றெல்லாம் இப்போது ஆராய வேண்டாம். இந்த நாளில் அவர் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது என்பதுதான் உண்மை.
"யு.எஸ்.ஏ. டுடே' நடத்திய கருத்துக் கணிப்பின்படி பின் லேடனை அமெரிக்க ராணுவம் கொன்றது சரியான செயல் என்று 90% அமெரிக்கர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவைப் பொருத்தவரை இது மிக முக்கியமான நடவடிக்கை என்று 79% அமெரிக்கர்கள் கருதுகின்றனர். பின் லேடன் கொல்லப்பட்டதைத் தாங்கள் அங்கீகரிப்பதாக 93% அமெரிக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா ராணுவ நடவடிக்கையை எடுத்தபோது 2001 அக்டோபர் 7-ம் தேதி நடத்திய இதே போன்ற கருத்துக் கணிப்பின்போது 90% அமெரிக்கர்கள் அதை ஆதரித்தனர். 1991-ல் வளைகுடாப் போரில் அமெரிக்கா இறங்கியபோதும் 2003-ல் இராக் மீது படையெடுத்த போதும்கூட சுமார் 70% அமெரிக்கர்கள்தான் ஆதரவு தெரிவித்தனர். இந்த முறை இது 90%-க்கு மேல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பின் லேடனைக் கண்டுபிடித்துக் கொலை செய்ததில் முக்கியப் பங்கு அமெரிக்க ராணுவத்துக்கும் சி.ஏ.ஐ.வுக்கும்தான் அதிகம் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது அதிபரைவிட அந்த இரு அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த விஷயத்தில் பெரும் பங்கு ஒபாமாவுக்குத்தான் என்கிறவர்கள் 35%தான். ஓரளவுக்கு அவருக்குப் பங்கு என்கிறவர்கள் 36%. அவருடைய
பங்கு அதிகம் இல்லை என்று கருதுகிறவர்கள் 25%.

ஒபாமாவுக்கு செல்வாக்கு அதிகரிப்பு!

வாஷிங்டன், மே 4: வாக்குறுதி அளித்தபடி வரிகளைக் குறைக்கவில்லை, வசதியைப் பெருக்கவில்லை, வேலைவாய்ப்பை அதிகப்படுத்தவில்லை, பொருளாதாரச் சரிவிலிருந்து நாட்டைக் காப்பாற்றவில்லை என்றெல்லாம் அதிபர் பராக் ஒபாமா மீது அதிருப்தியாக இருந்த அமெரிக்கர்கள், பின் லேடனைவெற்றிகரமாகக் கொன்றுவிட்டார் என்றதும் ஆதரவை அள்ளித்தர ஆரம்பித்துள்ளனர்.
இது நீடிக்குமா, அடுத்த முறையும் அதிபராக இது போதுமா என்றெல்லாம் இப்போது ஆராய வேண்டாம். இந்த நாளில் அவர் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது என்பதுதான் உண்மை.
"யு.எஸ்.ஏ. டுடே' நடத்திய கருத்துக் கணிப்பின்படி பின் லேடனை அமெரிக்க ராணுவம் கொன்றது சரியான செயல் என்று 90% அமெரிக்கர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவைப் பொருத்தவரை இது மிக முக்கியமான நடவடிக்கை என்று 79% அமெரிக்கர்கள் கருதுகின்றனர். பின் லேடன் கொல்லப்பட்டதைத் தாங்கள் அங்கீகரிப்பதாக 93% அமெரிக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா ராணுவ நடவடிக்கையை எடுத்தபோது 2001 அக்டோபர் 7-ம் தேதி நடத்திய இதே போன்ற கருத்துக் கணிப்பின்போது 90% அமெரிக்கர்கள் அதை ஆதரித்தனர். 1991-ல் வளைகுடாப் போரில் அமெரிக்கா இறங்கியபோதும் 2003-ல் இராக் மீது படையெடுத்த போதும்கூட சுமார் 70% அமெரிக்கர்கள்தான் ஆதரவு தெரிவித்தனர். இந்த முறை இது 90%-க்கு மேல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பின் லேடனைக் கண்டுபிடித்துக் கொலை செய்ததில் முக்கியப் பங்கு அமெரிக்க ராணுவத்துக்கும் சி.ஏ.ஐ.வுக்கும்தான் அதிகம் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது அதிபரைவிட அந்த இரு அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த விஷயத்தில் பெரும் பங்கு ஒபாமாவுக்குத்தான் என்கிறவர்கள் 35%தான். ஓரளவுக்கு அவருக்குப் பங்கு என்கிறவர்கள் 36%. அவருடைய
பங்கு அதிகம் இல்லை என்று கருதுகிறவர்கள் 25%.

வாஷிங்டன்: அல் கொய்தா நிறுவனர் ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்படுவதை வீடியோ மூலம் நேரடியாக பார்த்துள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. அவர் மட்டுமல்லாமல் ஹில்லாரி கிளிண்டன் உள்ளிட்ட உயர் மட்டத் தலைவர்கள் இந்தக் காட்சியை நேரில் பார்த்துள்ளனர்.

ஒபாமா, ஹில்லாரி தவிர துணை அதிபர் ஜோ பிடனும் இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தார்.

வெள்ளை மாளிகையின் நெருக்கடி கால அறையில் அமர்ந்தபடி இந்த வீடியோக் காட்சிகளை அவர்கள் பார்த்துள்ளனர். பின்லேடனை சுட்டு வீழ்த்திய வீரர்களில் ஒருவரது ஹெல்மட்டில் பதித்து வைக்கப்பட்டிருந்த வீடியோ காமரா மூலம் இந்தக் காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பாகி அதைத்தான் ஒபாமா குழுவினர் பார்த்துள்ளனர்.

பின்லேடனை இடது கண்ணில் அமெரிக்க வீரர் சுட்டுத் தள்ளியதை நேரில் பார்த்துள்ளார் ஒபாமா. அவ்வாறு சுட்டதும் பின்லேடன் கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அந்த வீரர் மீண்டும் பின்லேடனின் இடதுபுற நெஞ்சில் சுட்டு மரணத்தை உறுதி செய்துள்ளார்.

இந்த வீடியோவில், பின்லேடனை அவரது மனைவி காப்பாற்ற முயற்சித்து பின்லேடனுக்கு முன்னால் வந்து நிற்பது போன்ற காட்சியும் இருப்பதாக தெரிகிறது.

ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய பின்லேடன் பாதுகாவலர்கள்:

ஆப்கானிஸ்தானில் இருந்து 4 ஹெலிகாப்டர்களில் சென்ற அமெரிக்கக் கடற்படை சீல்கள் பிரிவைச் (Navy Seal Team-6) சேர்ந்த கமாண்டோக்கள் தான் இந்த ஆபரேசனை நடத்தியதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஆனால், இந்த 4 ஹெலிகாப்டர்கள் தவிர மேலும் ஏராளமான போர் விமானங்களும், கனரக ஆயுதம் ஏந்திச் செல்லும் சரக்கு விமானங்களும், மேலும் ஏராளமான வீரர்களைக் கொண்ட சி-15 ரக விமானங்களும், ஆளில்லா உளவு விமானங்களும், ராக்கெட்களை வீசக் கூடிய AC-13 ரக ஹெலிகாப்டர்களும், CH-47, UH-60 ரக ஹெலிகாப்டகள் பலவும் இந்தத் தாக்குதலில் பங்கேற்றிருக்க வேண்டும் என்றே கருதப்படுகிறது.

சீல்கள் வந்த நான்கு CH-47 ஹெலிகாப்டர்களில் ஒன்றை பின்லேடனின் பாதுகாவலர்கள் சுட்டு வீழ்த்தியதும் உறுதியாகியுள்ளது. ஆனால், அது எந்திரக் கோளாரால் செயலிழந்ததால் தாங்களே அதை குண்டுவீசி அழித்துவிட்டதாகவும், அமெரிக்கத் தரப்பில் உயிர்ச் சேதம் ஏதும் இல்லை என்றும் அதிபர் ஒபாமா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஒரு ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதில் சில அமெரிக்க வீரர்கள் காயமோ அல்லது உயிரிழந்திருக்கவோ வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது.

இந்தத் தாக்குதலை 7,000 கி.மீ. தொலைவில் இருந்தபடி ஒபாமாவும் அவரது டீமும் நேரடியாக தொலைக்காட்சியில் பார்த்துள்ளனர்.

பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதை வீடியோ மூலம் நேரடியாகப் பார்த்த ஒபாமா!

வாஷிங்டன்: அல் கொய்தா நிறுவனர் ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்படுவதை வீடியோ மூலம் நேரடியாக பார்த்துள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. அவர் மட்டுமல்லாமல் ஹில்லாரி கிளிண்டன் உள்ளிட்ட உயர் மட்டத் தலைவர்கள் இந்தக் காட்சியை நேரில் பார்த்துள்ளனர்.

ஒபாமா, ஹில்லாரி தவிர துணை அதிபர் ஜோ பிடனும் இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தார்.

வெள்ளை மாளிகையின் நெருக்கடி கால அறையில் அமர்ந்தபடி இந்த வீடியோக் காட்சிகளை அவர்கள் பார்த்துள்ளனர். பின்லேடனை சுட்டு வீழ்த்திய வீரர்களில் ஒருவரது ஹெல்மட்டில் பதித்து வைக்கப்பட்டிருந்த வீடியோ காமரா மூலம் இந்தக் காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பாகி அதைத்தான் ஒபாமா குழுவினர் பார்த்துள்ளனர்.

பின்லேடனை இடது கண்ணில் அமெரிக்க வீரர் சுட்டுத் தள்ளியதை நேரில் பார்த்துள்ளார் ஒபாமா. அவ்வாறு சுட்டதும் பின்லேடன் கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அந்த வீரர் மீண்டும் பின்லேடனின் இடதுபுற நெஞ்சில் சுட்டு மரணத்தை உறுதி செய்துள்ளார்.

இந்த வீடியோவில், பின்லேடனை அவரது மனைவி காப்பாற்ற முயற்சித்து பின்லேடனுக்கு முன்னால் வந்து நிற்பது போன்ற காட்சியும் இருப்பதாக தெரிகிறது.

ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய பின்லேடன் பாதுகாவலர்கள்:

ஆப்கானிஸ்தானில் இருந்து 4 ஹெலிகாப்டர்களில் சென்ற அமெரிக்கக் கடற்படை சீல்கள் பிரிவைச் (Navy Seal Team-6) சேர்ந்த கமாண்டோக்கள் தான் இந்த ஆபரேசனை நடத்தியதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஆனால், இந்த 4 ஹெலிகாப்டர்கள் தவிர மேலும் ஏராளமான போர் விமானங்களும், கனரக ஆயுதம் ஏந்திச் செல்லும் சரக்கு விமானங்களும், மேலும் ஏராளமான வீரர்களைக் கொண்ட சி-15 ரக விமானங்களும், ஆளில்லா உளவு விமானங்களும், ராக்கெட்களை வீசக் கூடிய AC-13 ரக ஹெலிகாப்டர்களும், CH-47, UH-60 ரக ஹெலிகாப்டகள் பலவும் இந்தத் தாக்குதலில் பங்கேற்றிருக்க வேண்டும் என்றே கருதப்படுகிறது.

சீல்கள் வந்த நான்கு CH-47 ஹெலிகாப்டர்களில் ஒன்றை பின்லேடனின் பாதுகாவலர்கள் சுட்டு வீழ்த்தியதும் உறுதியாகியுள்ளது. ஆனால், அது எந்திரக் கோளாரால் செயலிழந்ததால் தாங்களே அதை குண்டுவீசி அழித்துவிட்டதாகவும், அமெரிக்கத் தரப்பில் உயிர்ச் சேதம் ஏதும் இல்லை என்றும் அதிபர் ஒபாமா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஒரு ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதில் சில அமெரிக்க வீரர்கள் காயமோ அல்லது உயிரிழந்திருக்கவோ வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது.

இந்தத் தாக்குதலை 7,000 கி.மீ. தொலைவில் இருந்தபடி ஒபாமாவும் அவரது டீமும் நேரடியாக தொலைக்காட்சியில் பார்த்துள்ளனர்.

வாஷிங்டன்: பாகிஸ்தானில் கொல்லப்பட்ட ஒசாமா பின் லேடனின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட திசுவிலிருந்த டிஎன்ஏவை, இறந்து போன அவரது சகோதரியின் மூளை திசுவிலிருந்து எடுத்த டிஎன்ஏவுடன் ஒப்பிட்டுப் பார்த்து, அது பின் லேடன் தான் என்ற முடிவுக்கு வந்துள்ளது சிஐஏ.

நியூயார்க்கில் விமானத் தாக்குதல் நடந்தவுடன் அமெரிக்காவின் சிஐஏ உளவுப் பிரிவு உலகம் முழுதும் வசித்து வரும் பின்லேடனின் குடும்ப உறுப்பினர்களை பட்டியல் எடுத்து, அவர்களில் பெரும்பாலானவர்களின் ரத்த மாதிரியையும் திசுக்களையும் எடுத்து டிஎன்ஏ 'சிக்னேச்சரையும்' பதிவு செய்து வைத்துவிட்டது.

வழக்கமாக ஒரு நபரின் டிஎன்ஏ அவரது பெற்றோர் அல்லது குழந்தையின் டிஎன்ஏவோடு 50 சதவீதம் தான் ஒத்து இருக்கும். இன்னொரு 50 சதவீத டிஎன்ஏ அவருக்கே உரிய தனித்துவத்துடன் இருக்கும்.

இதனால் டிஎன்ஏ மேட்சிங் செய்யும்போது ஏற்படும் குறையைக் கலைய, பெற்றோர், குழந்தைகள் மற்றும் நெருங்கிய உறவுகளின் டிஎன்ஏக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். இதன்மூலம் குறையை (error) கலைய முடியும்.

இதற்காக கடந்த 10 ஆண்டுகளாகவே பின்லேடனின் பல உறவினர்களிடமும் சிஐஏ டிஎன்ஏ மாதிரிகளை சேகரித்து வந்தது.

ஆனால், பின்லேடனுக்கு உடன் பிறந்த சகோதர சகோதரிகள் இல்லை. அவரது சகோதரர்கள், சகோதரிகள் அனைவருமே ஒன்றுவிட்ட சகோதரிகள் அல்லது சகோதரர்கள் தான் (siblings). இவர்களில் பெரும்பாலானவர்கள், பின்லேடன் தீவிரவாதப் பாதைக்குத் திரும்பியவுடனேயே அவருடனான தொடர்பை துண்டித்துக் கொண்டவர்கள்.

இதில் ஒரு சகோதரி அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வசித்து வந்தார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட அவர் மசாசூசெட்ஸ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலியானவுடன், அமெரிக்க அதிகாரிகள் நீதிமன்ற உதவியோடு, அந்தப் பெண்ணின் மூளையில் இருந்து திசுக்களில் இருந்து டிஎன்ஏ மாதிரியை எடுத்து வைத்திருந்தனர்.

பின்லேடன் கொல்லப்பட்டவுடன், அவரது உடலிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவை அவரது இந்த உறவினர்களின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவோடு ஒப்பிட்டபோது 99.9 சதவீதம் இது பின்லேடன் என்று உறுதிப்படுத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது தவிர பாகிஸ்தானில் பிடிபட்ட பின்லேடனின் இரு மனைவிகளிடமும் அவரது உடலை அமெரிக்கப் படையினர் காட்டி, அது பின்லேடன் தான் என்று உறுதி செய்ததாகவும் கூறப்படுகிறது.

வழக்கமாக டிஎன்ஏ மேட்சிங் செய்ய 14 நாட்கள் வரை ஆகும். ஆனால், கடந்த ஆண்டு அரிசோனா பல்கலைக்கழகத்தின் நுண்ணியிரியல் பிரிவு ஒரு சாதனத்தைக் கண்டுபிடித்தது. 2 மணி நேரத்தில் டிஎன்ஏ மேட்சிங் செய்யும் அந்த அதிநவீன கருவியை சிஐஏ, ஆப்கானில்தானில் தயார் நிலையில் வைத்திருந்தது.

பின்லேடனின் உடலை அங்கு கொண்டு சென்று டிஎன்ஏ சோதனையை முடித்துவிட்டு, இது 99.9 சதவீதம் பின்லேடன் தான் என்று தகவல் தரப்பட்ட பின்னரே தொலைக்காட்சிகள் முன் தோன்றி அவர் கொல்லப்பட்டதை அறிவித்தார் அமெரிக்க அதிபர் ஒபாமா.

ஆனாலும் மிச்சமுள்ள 0.1 சதவீத சந்தேகத்தை வைத்து இது பின்லேடன் இல்லை என்று வாதிடுவோர் நிச்சயம் இருக்கத் தான் செய்வார்கள் என்கிறார், டிஎன்ஏ ஆராய்ச்சியாளரான கி்ட் ஏடன்.

இறந்தது பின்லேடன் தான்-உறுதி செய்ய உதவிய இறந்து போன சகோதரியின் மூளை திசு டிஎன்ஏ!

வாஷிங்டன்: பாகிஸ்தானில் கொல்லப்பட்ட ஒசாமா பின் லேடனின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட திசுவிலிருந்த டிஎன்ஏவை, இறந்து போன அவரது சகோதரியின் மூளை திசுவிலிருந்து எடுத்த டிஎன்ஏவுடன் ஒப்பிட்டுப் பார்த்து, அது பின் லேடன் தான் என்ற முடிவுக்கு வந்துள்ளது சிஐஏ.

நியூயார்க்கில் விமானத் தாக்குதல் நடந்தவுடன் அமெரிக்காவின் சிஐஏ உளவுப் பிரிவு உலகம் முழுதும் வசித்து வரும் பின்லேடனின் குடும்ப உறுப்பினர்களை பட்டியல் எடுத்து, அவர்களில் பெரும்பாலானவர்களின் ரத்த மாதிரியையும் திசுக்களையும் எடுத்து டிஎன்ஏ 'சிக்னேச்சரையும்' பதிவு செய்து வைத்துவிட்டது.

வழக்கமாக ஒரு நபரின் டிஎன்ஏ அவரது பெற்றோர் அல்லது குழந்தையின் டிஎன்ஏவோடு 50 சதவீதம் தான் ஒத்து இருக்கும். இன்னொரு 50 சதவீத டிஎன்ஏ அவருக்கே உரிய தனித்துவத்துடன் இருக்கும்.

இதனால் டிஎன்ஏ மேட்சிங் செய்யும்போது ஏற்படும் குறையைக் கலைய, பெற்றோர், குழந்தைகள் மற்றும் நெருங்கிய உறவுகளின் டிஎன்ஏக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். இதன்மூலம் குறையை (error) கலைய முடியும்.

இதற்காக கடந்த 10 ஆண்டுகளாகவே பின்லேடனின் பல உறவினர்களிடமும் சிஐஏ டிஎன்ஏ மாதிரிகளை சேகரித்து வந்தது.

ஆனால், பின்லேடனுக்கு உடன் பிறந்த சகோதர சகோதரிகள் இல்லை. அவரது சகோதரர்கள், சகோதரிகள் அனைவருமே ஒன்றுவிட்ட சகோதரிகள் அல்லது சகோதரர்கள் தான் (siblings). இவர்களில் பெரும்பாலானவர்கள், பின்லேடன் தீவிரவாதப் பாதைக்குத் திரும்பியவுடனேயே அவருடனான தொடர்பை துண்டித்துக் கொண்டவர்கள்.

இதில் ஒரு சகோதரி அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வசித்து வந்தார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட அவர் மசாசூசெட்ஸ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலியானவுடன், அமெரிக்க அதிகாரிகள் நீதிமன்ற உதவியோடு, அந்தப் பெண்ணின் மூளையில் இருந்து திசுக்களில் இருந்து டிஎன்ஏ மாதிரியை எடுத்து வைத்திருந்தனர்.

பின்லேடன் கொல்லப்பட்டவுடன், அவரது உடலிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவை அவரது இந்த உறவினர்களின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவோடு ஒப்பிட்டபோது 99.9 சதவீதம் இது பின்லேடன் என்று உறுதிப்படுத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது தவிர பாகிஸ்தானில் பிடிபட்ட பின்லேடனின் இரு மனைவிகளிடமும் அவரது உடலை அமெரிக்கப் படையினர் காட்டி, அது பின்லேடன் தான் என்று உறுதி செய்ததாகவும் கூறப்படுகிறது.

வழக்கமாக டிஎன்ஏ மேட்சிங் செய்ய 14 நாட்கள் வரை ஆகும். ஆனால், கடந்த ஆண்டு அரிசோனா பல்கலைக்கழகத்தின் நுண்ணியிரியல் பிரிவு ஒரு சாதனத்தைக் கண்டுபிடித்தது. 2 மணி நேரத்தில் டிஎன்ஏ மேட்சிங் செய்யும் அந்த அதிநவீன கருவியை சிஐஏ, ஆப்கானில்தானில் தயார் நிலையில் வைத்திருந்தது.

பின்லேடனின் உடலை அங்கு கொண்டு சென்று டிஎன்ஏ சோதனையை முடித்துவிட்டு, இது 99.9 சதவீதம் பின்லேடன் தான் என்று தகவல் தரப்பட்ட பின்னரே தொலைக்காட்சிகள் முன் தோன்றி அவர் கொல்லப்பட்டதை அறிவித்தார் அமெரிக்க அதிபர் ஒபாமா.

ஆனாலும் மிச்சமுள்ள 0.1 சதவீத சந்தேகத்தை வைத்து இது பின்லேடன் இல்லை என்று வாதிடுவோர் நிச்சயம் இருக்கத் தான் செய்வார்கள் என்கிறார், டிஎன்ஏ ஆராய்ச்சியாளரான கி்ட் ஏடன்.

டெல்லி: அமெரிக்காவால் தீவிரமாக தேடப்பட்டு வந்த பின்லேடனை சுட்டு வீழ்த்தி விட்டது அந்த நாடு. அதேபோல இந்தியாவில் பல்வேறு படு பாதக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ள தீவிரவாதத் தலைவர்களையும் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தனக்கு வந்தால்தான் வலியும், நோயும் என்பார்கள். அதேபோல இந்தியா தீவிரவாதத்தால் பல காலமாக அவதிப்பட்டு வந்தபோதிலும் அதை நி்வர்த்தி செய்யவோ, பாகிஸ்தானை கண்டிக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ முயன்றதில்லை அமெரிக்கா. மாறாக, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பொங்கத் தொடங்கும்போதெல்லாம் உள்ளே புகுந்து பொசுக்கென்று சூட்டைத் தணித்து பாகிஸ்தானைக் காப்பதிலேயே அது கவனமாக இருந்தது.

ஆனால் நியூயார்க் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர்தான் அமெரிக்காவுக்கு தீவிரவாதத்தின் வலி புரிந்தது. அதன் விபரீதம் புரிந்தது. இதையடுத்து அது தீவிரமாக வேட்டையில் குதித்து கடைசியில் பின்லேடனை கொன்று தனது நாட்டு மக்களுக்கு சந்தோஷத்தை அளித்துள்ளது.

இந்த நிலையில், தீவிரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு நிவாரணம் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு, அமெரிக்கா உதவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானில் அமர்ந்தபடி திட்டமிட்டு, பல்வேறு தீவிரவாத செயல்களை இந்தியாவில் அரங்கேற்றிய பலரும் இன்னும் பாகிஸ்தானில்தான் நிம்மதியாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.

தாவூத் இப்ராகிம், ஹபீஸ் சயீத் உள்ளிட்டோர் இவர்களில் சிலர். இவர்களில் ஹபீஸ் சயீத், மும்பையில் 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் மூளை ஆவார். லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவரான இவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா கோரி வருகிறது. ஆனால் இதை பாகிஸ்தான் கண்டு கொள்ளவே இல்லை.

சயீத்துக்கு, மும்பைத் தாக்குதலில் உள்ள தொடர்புகளை ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளது இந்தியா. இந்த ஆதாரங்களை அமெரிக்க அதிபர் ஒபாமாவிடமும் தெரிவித்துள்ளது.+

தற்போது பின்லேடன் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் மீதான தனது நெருக்கடியை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது இந்தியா. இந்த விஷயத்தில் அமெரிக்கா உதவிட வேண்டும் என்ற எண்ணமும் இந்தியாவில் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தவிர பின்லேடன் உள்ளிட்ட பலரும் கூட பாகிஸ்தானில்தான் அடைக்கலம் புகுந்துள்ளனர் என்று இந்தியா பல முறை சொல்லியுள்ளது. தொடர்ந்து கூறியும் வந்தது. ஹபீஸ் சயீத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு அது பலமுறை கோரிக்கை விடுத்தும் அதற்குப் பலன் கிடைக்கவில்லை. இதை அமெரிக்கா கூட பெரிதாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை.

அதேபோல மும்பையில் முன்பு நடந்த பல்வேறு தீவிரவாதத் தாக்குதல்களில் தொடர்புடையவரான தாவூத் இப்ராகிமை ஒப்படைகக் கோரி இந்தியா விடுத்த வேண்டுகோள்களையும் இதுவரை பாகிஸ்தான் ஏற்கவே இல்லை.

எனவே இந்தியாவுக்கு உதவும் வகையில் இவர்களையும் பிடித்துத் தர அமெரி்ககா உதவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

அதேபோல, பாகிஸ்தானில் இருந்தபடி செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகளை ஒழித்துக் கட்டவும், அவர்களின் முகாம்களை அழிக்கவும் அமெரிக்கா நினைத்தால் நடவடிக்கை எடுக்க முடியும் என்ற எதிர்பார்ப்பும் இந்தியாவில் அதிகரித்துள்ளது.

ஆனால் அதை அமெரிக்கா நிறைவேற்றுமா என்பது சந்தேகம்தான்.

தாவூத் இப்ராகிம், ஹபீஸ் சயீதை பிடித்துத் தருமா அமெரிக்கா?

டெல்லி: அமெரிக்காவால் தீவிரமாக தேடப்பட்டு வந்த பின்லேடனை சுட்டு வீழ்த்தி விட்டது அந்த நாடு. அதேபோல இந்தியாவில் பல்வேறு படு பாதக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ள தீவிரவாதத் தலைவர்களையும் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தனக்கு வந்தால்தான் வலியும், நோயும் என்பார்கள். அதேபோல இந்தியா தீவிரவாதத்தால் பல காலமாக அவதிப்பட்டு வந்தபோதிலும் அதை நி்வர்த்தி செய்யவோ, பாகிஸ்தானை கண்டிக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ முயன்றதில்லை அமெரிக்கா. மாறாக, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பொங்கத் தொடங்கும்போதெல்லாம் உள்ளே புகுந்து பொசுக்கென்று சூட்டைத் தணித்து பாகிஸ்தானைக் காப்பதிலேயே அது கவனமாக இருந்தது.

ஆனால் நியூயார்க் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர்தான் அமெரிக்காவுக்கு தீவிரவாதத்தின் வலி புரிந்தது. அதன் விபரீதம் புரிந்தது. இதையடுத்து அது தீவிரமாக வேட்டையில் குதித்து கடைசியில் பின்லேடனை கொன்று தனது நாட்டு மக்களுக்கு சந்தோஷத்தை அளித்துள்ளது.

இந்த நிலையில், தீவிரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு நிவாரணம் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு, அமெரிக்கா உதவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானில் அமர்ந்தபடி திட்டமிட்டு, பல்வேறு தீவிரவாத செயல்களை இந்தியாவில் அரங்கேற்றிய பலரும் இன்னும் பாகிஸ்தானில்தான் நிம்மதியாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.

தாவூத் இப்ராகிம், ஹபீஸ் சயீத் உள்ளிட்டோர் இவர்களில் சிலர். இவர்களில் ஹபீஸ் சயீத், மும்பையில் 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் மூளை ஆவார். லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவரான இவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா கோரி வருகிறது. ஆனால் இதை பாகிஸ்தான் கண்டு கொள்ளவே இல்லை.

சயீத்துக்கு, மும்பைத் தாக்குதலில் உள்ள தொடர்புகளை ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளது இந்தியா. இந்த ஆதாரங்களை அமெரிக்க அதிபர் ஒபாமாவிடமும் தெரிவித்துள்ளது.+

தற்போது பின்லேடன் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் மீதான தனது நெருக்கடியை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது இந்தியா. இந்த விஷயத்தில் அமெரிக்கா உதவிட வேண்டும் என்ற எண்ணமும் இந்தியாவில் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தவிர பின்லேடன் உள்ளிட்ட பலரும் கூட பாகிஸ்தானில்தான் அடைக்கலம் புகுந்துள்ளனர் என்று இந்தியா பல முறை சொல்லியுள்ளது. தொடர்ந்து கூறியும் வந்தது. ஹபீஸ் சயீத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு அது பலமுறை கோரிக்கை விடுத்தும் அதற்குப் பலன் கிடைக்கவில்லை. இதை அமெரிக்கா கூட பெரிதாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை.

அதேபோல மும்பையில் முன்பு நடந்த பல்வேறு தீவிரவாதத் தாக்குதல்களில் தொடர்புடையவரான தாவூத் இப்ராகிமை ஒப்படைகக் கோரி இந்தியா விடுத்த வேண்டுகோள்களையும் இதுவரை பாகிஸ்தான் ஏற்கவே இல்லை.

எனவே இந்தியாவுக்கு உதவும் வகையில் இவர்களையும் பிடித்துத் தர அமெரி்ககா உதவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

அதேபோல, பாகிஸ்தானில் இருந்தபடி செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகளை ஒழித்துக் கட்டவும், அவர்களின் முகாம்களை அழிக்கவும் அமெரிக்கா நினைத்தால் நடவடிக்கை எடுக்க முடியும் என்ற எதிர்பார்ப்பும் இந்தியாவில் அதிகரித்துள்ளது.

ஆனால் அதை அமெரிக்கா நிறைவேற்றுமா என்பது சந்தேகம்தான்.

வாஷிங்டன்: அமெரிக்காவின் சிம்மசொப்பனமாக விளங்கிய ஒசாமாபின்லாடன் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது அமெரிக்க உளவுப்படையினரின் அதிரடி ஆப்ரேஷன் திட்டத்தில் குறி வைத்து காலி செய்யப்பட்டான். அமெரிக்காவின் நீண்டகால ஆசையும், முக்கிய நோக்கமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவரது பலி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் பராக்ஒபாமா டி.வி.,யில் தோன்றி அறிவித்தார்.

சவுதியில் பிறந்து மதவாதியான ஒசாமா பின்லாடன் பயங்கரவாத அமைப்பான அல்குவைதாவின் தலைவரானான். இவனுக்கு வயது 54. ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு பயங்கரவாத அமைப்பை உலகமே கண்டு அச்சுறும் வகையில் மிக ரகசியமாக நடத்தி வந்தான். இவனது அமைப்பில் உள்ளவர்கள் தற்கொலை படை தாக்குதல் நடத்துவதில் கில்லாடிகள். அமெரிக்காவே எங்கள் எதிரி என்றும், அவர்களுக்கு எதிராகவே எங்களின் போர் நடக்கும் என ஒசாமா கூறி வந்தான். கடந்த 2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் தேதி அமெரிக்காவின் புகழ்பெற்ற வர்த்தக இரட்டை கோபுரத்தை விமானத்தை கொண்டு மோதி தூள், தூளாக்கினான். இதில் அமெரிக்கா நிலைகுலைந்து பெரும் அழிவை சந்தித்தது. ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இந்த நாள் முதல் சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தான் ஒசாமா .

இவனை உயிருடன் பிடித்து சட்டத்தின் முன்நிறுத்துவோம் என அமெரிக்க அதிபர்கள் புஷ், பராக்ஒபாமா உறுதியாக சொல்லி வந்தனர். ஒசாமா பாகிஸ்தான் பகுதிகளில்தான் பதுங்கி இருப்பான் என அமெரிக்க அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், உயர் அதிகாரிகள் கூறி வந்தனர். ஒசாமாவை பிடிப்பதே முக்கியப்பணியாக இருக்கும் என்றனர். இதனையடுத்து இந்த பகுதிகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வந்தன.

ஒசாமாவின் வீடியோ காட்சிகள் அவ்வப்போது ஒளிபரப்பாகி வந்தன. இந்நிலையில் ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டான் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது. பல முறை ஒசாமா கொல்லப்பட்டான் என்ற செய்தி வருவதும், இதனை அல்குவைதா மறுப்பதும் நடந்திருக்கிறது. ஆனால் இதுவரை இன்றைய ஒசாமா பலி குறித்து அல்குவைதா அமைப்பினர் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை.

இந்த முறை இவனது உடலை டி.என்.ஏ., டெஸ்ட் மூலம் ஒசாமாதான் என்று உறுதி செய்யப்பட்டதாக அமெரிக்க மத்திய உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. இவன் கொல்லப்பட்ட இன்றைய நாள் அமெரிக்காவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பான நாள் என அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ்சின் தலைமை அதிகாரி ஆண்டிகார்ட்டு கூறியுள்ளார்.

ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டது எப்படி? : பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் நகரில் பதுங்கி இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் மாற்று உடையில் சென்று கண்காணித்து இவனை எப்படி கொல்வது என திட்டமிடப்பட்டது. ஒரு வாரத்தில் இந்த ஆப்ரேஷன் கச்சிதமாக முடிக்கப்பட்டது. எப்போதும் வனப்பகுதி , மலைப்பள்ளத்தாக்கில்தான் ஒசாமா பதுங்கி இருப்பான் என்ற செய்தியைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம் இந்தமுறை இஸ்லாமாபாத் நகரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் ஒசாமா தங்கியிருந்திருக்கிறான். இதனையடுத்து உளவு துறை அதிகாரிகள் தாக்குதல் நடத்தி ஒசாமாவை கொன்றனர். இந்த பண்ணை வீட்டின் வெளியே ஒசாமா பிணமானான். அமெரிக்காவின் முக்கியப்பணி முடிந்தது.

அதிபர் பராக் ஒபாமா மகிழ்ச்சி: பின்லாடன் இறந்ததகவலை அமெரிக்க அதிபர் ஒபாமா உறுதி செய்தார். நாட்டு மக்களுக்கு டி.வி., மூலம் அறிவித்த போது அமெரிக்காவின் நீண்டகால ஆசை நிறைவேறியிருக்கிறது என்றும், நீதி நிலைநாட்டப்பட்டிருப்பதாகவும் கூறினார். அவர் மேலும் கூறுகையில், 10 ஆண்டு காலத்துக்கும் மேலாக ஒசாமா பின் லேடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் , உளவு அதிகாரிகளுக்கு அமெரிக்கா மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. இந்த வெற்றி செப்டம்பர் 11ம் தேதி இரட்டைக் கோபுர தாக்குதலில் பலியான அப்பாவி மக்களின் ஆத்ம சாந்திக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. அந்த பயங்கரவாத தாக்குதலில் உற்றார் , உறவினர்களை பலி கொடுத்த அமெரிக்க குடும்பங்களை மறந்து விடவில்லை. இந்த தருணத்தில் அவர்களை நினைவு கூறுகிறோம். அல்குவைதாவை அழிக்கும் பணி தொடர்ந்து நடக்கும். இத்துடன் முடிவதில்லை. இவ்வாறு ஒபாமா கூறினார்.

அமெரிக்காவின் முக்கிய எதிரி ஒசாமா ஒழிந்தான்; பாகிஸ்தானில் பதுங்கி இருந்த போது குண்டுக்கு பலி

வாஷிங்டன்: அமெரிக்காவின் சிம்மசொப்பனமாக விளங்கிய ஒசாமாபின்லாடன் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது அமெரிக்க உளவுப்படையினரின் அதிரடி ஆப்ரேஷன் திட்டத்தில் குறி வைத்து காலி செய்யப்பட்டான். அமெரிக்காவின் நீண்டகால ஆசையும், முக்கிய நோக்கமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவரது பலி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் பராக்ஒபாமா டி.வி.,யில் தோன்றி அறிவித்தார்.

சவுதியில் பிறந்து மதவாதியான ஒசாமா பின்லாடன் பயங்கரவாத அமைப்பான அல்குவைதாவின் தலைவரானான். இவனுக்கு வயது 54. ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு பயங்கரவாத அமைப்பை உலகமே கண்டு அச்சுறும் வகையில் மிக ரகசியமாக நடத்தி வந்தான். இவனது அமைப்பில் உள்ளவர்கள் தற்கொலை படை தாக்குதல் நடத்துவதில் கில்லாடிகள். அமெரிக்காவே எங்கள் எதிரி என்றும், அவர்களுக்கு எதிராகவே எங்களின் போர் நடக்கும் என ஒசாமா கூறி வந்தான். கடந்த 2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் தேதி அமெரிக்காவின் புகழ்பெற்ற வர்த்தக இரட்டை கோபுரத்தை விமானத்தை கொண்டு மோதி தூள், தூளாக்கினான். இதில் அமெரிக்கா நிலைகுலைந்து பெரும் அழிவை சந்தித்தது. ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இந்த நாள் முதல் சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தான் ஒசாமா .

இவனை உயிருடன் பிடித்து சட்டத்தின் முன்நிறுத்துவோம் என அமெரிக்க அதிபர்கள் புஷ், பராக்ஒபாமா உறுதியாக சொல்லி வந்தனர். ஒசாமா பாகிஸ்தான் பகுதிகளில்தான் பதுங்கி இருப்பான் என அமெரிக்க அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், உயர் அதிகாரிகள் கூறி வந்தனர். ஒசாமாவை பிடிப்பதே முக்கியப்பணியாக இருக்கும் என்றனர். இதனையடுத்து இந்த பகுதிகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வந்தன.

ஒசாமாவின் வீடியோ காட்சிகள் அவ்வப்போது ஒளிபரப்பாகி வந்தன. இந்நிலையில் ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டான் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது. பல முறை ஒசாமா கொல்லப்பட்டான் என்ற செய்தி வருவதும், இதனை அல்குவைதா மறுப்பதும் நடந்திருக்கிறது. ஆனால் இதுவரை இன்றைய ஒசாமா பலி குறித்து அல்குவைதா அமைப்பினர் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை.

இந்த முறை இவனது உடலை டி.என்.ஏ., டெஸ்ட் மூலம் ஒசாமாதான் என்று உறுதி செய்யப்பட்டதாக அமெரிக்க மத்திய உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. இவன் கொல்லப்பட்ட இன்றைய நாள் அமெரிக்காவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பான நாள் என அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ்சின் தலைமை அதிகாரி ஆண்டிகார்ட்டு கூறியுள்ளார்.

ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டது எப்படி? : பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் நகரில் பதுங்கி இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் மாற்று உடையில் சென்று கண்காணித்து இவனை எப்படி கொல்வது என திட்டமிடப்பட்டது. ஒரு வாரத்தில் இந்த ஆப்ரேஷன் கச்சிதமாக முடிக்கப்பட்டது. எப்போதும் வனப்பகுதி , மலைப்பள்ளத்தாக்கில்தான் ஒசாமா பதுங்கி இருப்பான் என்ற செய்தியைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம் இந்தமுறை இஸ்லாமாபாத் நகரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் ஒசாமா தங்கியிருந்திருக்கிறான். இதனையடுத்து உளவு துறை அதிகாரிகள் தாக்குதல் நடத்தி ஒசாமாவை கொன்றனர். இந்த பண்ணை வீட்டின் வெளியே ஒசாமா பிணமானான். அமெரிக்காவின் முக்கியப்பணி முடிந்தது.

அதிபர் பராக் ஒபாமா மகிழ்ச்சி: பின்லாடன் இறந்ததகவலை அமெரிக்க அதிபர் ஒபாமா உறுதி செய்தார். நாட்டு மக்களுக்கு டி.வி., மூலம் அறிவித்த போது அமெரிக்காவின் நீண்டகால ஆசை நிறைவேறியிருக்கிறது என்றும், நீதி நிலைநாட்டப்பட்டிருப்பதாகவும் கூறினார். அவர் மேலும் கூறுகையில், 10 ஆண்டு காலத்துக்கும் மேலாக ஒசாமா பின் லேடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் , உளவு அதிகாரிகளுக்கு அமெரிக்கா மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. இந்த வெற்றி செப்டம்பர் 11ம் தேதி இரட்டைக் கோபுர தாக்குதலில் பலியான அப்பாவி மக்களின் ஆத்ம சாந்திக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. அந்த பயங்கரவாத தாக்குதலில் உற்றார் , உறவினர்களை பலி கொடுத்த அமெரிக்க குடும்பங்களை மறந்து விடவில்லை. இந்த தருணத்தில் அவர்களை நினைவு கூறுகிறோம். அல்குவைதாவை அழிக்கும் பணி தொடர்ந்து நடக்கும். இத்துடன் முடிவதில்லை. இவ்வாறு ஒபாமா கூறினார்.

அமெரிக்காவில் விசிதா நகரைச் சேர்ந்தவர் வெஸ்லி பிரவுன். 103 வயதான இவர் அங்குள்ள மாவட்ட கோர்ட்டில் நீதிபதியாக பணி புரிகிறார். இந்த தள்ளாத வயதிலும் அவர் சிறப்பாக பணியாற்றுகிறார். அவரால் நடக்க முடியவில்லை.எனவே சக்கர நாற்காலியில் வருகிறார்.

கடந்த 49 ஆண்டுகளாக நீதிபதியாக இருக்கிறார்.அமெரிக்க அதிபராக இருந்த கென்னடி தனது பதவி காலத்தில் 4 பேரை “பெடரல்” நீதிபதியாக நியமனம் செய்தார். அவர்களில் இவரும் ஒருவர். தற்போது பணி புரியும் நீதிபதிகளில் மிகவும் மூத்தவர் இவர் தான்.

தற்போதுள்ள 1294 பெடரல் நீதிபதிகளில் இவர் 516-வது நபர். ஏற்கனவே ஓய்வு பெற்ற இவர் தற்போது பாதி சம்பளத்தில் பணி புரிகிறார். அமெரிக்க நீதிபதிகளில் இவர்தான் அதிக நாள் பணிபுரிந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அமெரிக்க கோர்ட்டில் 103 வயதில் பணிபுரியும் நீதிபதி

அமெரிக்காவில் விசிதா நகரைச் சேர்ந்தவர் வெஸ்லி பிரவுன். 103 வயதான இவர் அங்குள்ள மாவட்ட கோர்ட்டில் நீதிபதியாக பணி புரிகிறார். இந்த தள்ளாத வயதிலும் அவர் சிறப்பாக பணியாற்றுகிறார். அவரால் நடக்க முடியவில்லை.எனவே சக்கர நாற்காலியில் வருகிறார்.

கடந்த 49 ஆண்டுகளாக நீதிபதியாக இருக்கிறார்.அமெரிக்க அதிபராக இருந்த கென்னடி தனது பதவி காலத்தில் 4 பேரை “பெடரல்” நீதிபதியாக நியமனம் செய்தார். அவர்களில் இவரும் ஒருவர். தற்போது பணி புரியும் நீதிபதிகளில் மிகவும் மூத்தவர் இவர் தான்.

தற்போதுள்ள 1294 பெடரல் நீதிபதிகளில் இவர் 516-வது நபர். ஏற்கனவே ஓய்வு பெற்ற இவர் தற்போது பாதி சம்பளத்தில் பணி புரிகிறார். அமெரிக்க நீதிபதிகளில் இவர்தான் அதிக நாள் பணிபுரிந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியை சேர்ந்தவன் ஜெஸ்சி சாக்ஷான். 4 வயது சிறுவனான இவன் தனது தாயுடன் காரில் வெளியில் சென்று இருந்தான். திடீரென மனச்சோர்வடைந்த அவன் காரில் அமர்ந்தபடி அழுது கொண்டிருந்தான்.

இதை பார்த்த அவனது தாய் ஏன் அழுகிறாய் என கேட்டார். அதற்கு அவன் நான் நியூஜெர்சி மாகாண கவர்னராக வேண்டும் என தனது ஆசையை தெரிவித்தான். உடனே, அவனது தாய், நீ சிறுவனாக இருக்கிறாய். எனவே தற்போது கவர்னராக முடியாது.

வளர்ந்து பெரியவன் ஆனதும் நீயும் கவர்னர் பதவி வகிக்கலாம் என்றார். ஆனால், சிறுவன் ஜெஸ்சி சாக்சன் கேட்கவில்லை. தொடர்ந்து அழுதபடி அடம் பிடித்தான். பின்னர் ஒரு வழியாக சமாதானம் செய்து அவனது தாய் அழைத்து சென்றார்.

இச்சம்பவம் அனைத்தும் “யூடியூப்” இணைய தளத்தில் வீடியோ காட்சியாக ஒளிபரப்பானது. அதை நியூஜெர்சி மாகாணத்தின் தற்போதைய கவர்னர் கிரிஸ் கிறிஸ்டி பார்த்தார். இதை தொடர்ந்து அச்சிறுவனின் ஆசையை தீர்த்து வைக்க விரும்பினார்.

ஆகவே அவனை நியூஜெர்ஸி மாகாணத்தின் ஒருநாள் கவர்னர் ஆக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்தார். பின்னர் சிறுவன் ஜெஸ்சி சாக்சான் ஒரு நாள் கவர்னராக பதவி வகித்தான். இதை அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

மேலும் தனது தம்பி கவர்னராக இருந்த ஆலிவுட் நடிகர் அர்னால்டு ஷ்வார்ஷ் னேஷரை போல தானும் கவர்னராக வேண்டும் என இதுபோன்று அழுது அடம் பிடித்ததாக பலத்த சிரிப்புக்கு இடையே கூறினார்.

“முதல்வன்” சினிமா படத்தில் நடிகர் அர்ஜூன் ஒருநாள் முதல்-அமைச்சராவது போல் நடித்து இருந்தார். ஆனால் அமெரிக்காவில் 4 வயது சிறுவன் உண்மையிலேயே ஒரு நாள் கவர்னராக பதவி வகித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறான்.

அமெரிக்கா நியூஜெர்சியில் ஒருநாள் கவர்னராக பதவி வகித்த 4 வயது சிறுவன்

அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியை சேர்ந்தவன் ஜெஸ்சி சாக்ஷான். 4 வயது சிறுவனான இவன் தனது தாயுடன் காரில் வெளியில் சென்று இருந்தான். திடீரென மனச்சோர்வடைந்த அவன் காரில் அமர்ந்தபடி அழுது கொண்டிருந்தான்.

இதை பார்த்த அவனது தாய் ஏன் அழுகிறாய் என கேட்டார். அதற்கு அவன் நான் நியூஜெர்சி மாகாண கவர்னராக வேண்டும் என தனது ஆசையை தெரிவித்தான். உடனே, அவனது தாய், நீ சிறுவனாக இருக்கிறாய். எனவே தற்போது கவர்னராக முடியாது.

வளர்ந்து பெரியவன் ஆனதும் நீயும் கவர்னர் பதவி வகிக்கலாம் என்றார். ஆனால், சிறுவன் ஜெஸ்சி சாக்சன் கேட்கவில்லை. தொடர்ந்து அழுதபடி அடம் பிடித்தான். பின்னர் ஒரு வழியாக சமாதானம் செய்து அவனது தாய் அழைத்து சென்றார்.

இச்சம்பவம் அனைத்தும் “யூடியூப்” இணைய தளத்தில் வீடியோ காட்சியாக ஒளிபரப்பானது. அதை நியூஜெர்சி மாகாணத்தின் தற்போதைய கவர்னர் கிரிஸ் கிறிஸ்டி பார்த்தார். இதை தொடர்ந்து அச்சிறுவனின் ஆசையை தீர்த்து வைக்க விரும்பினார்.

ஆகவே அவனை நியூஜெர்ஸி மாகாணத்தின் ஒருநாள் கவர்னர் ஆக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்தார். பின்னர் சிறுவன் ஜெஸ்சி சாக்சான் ஒரு நாள் கவர்னராக பதவி வகித்தான். இதை அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

மேலும் தனது தம்பி கவர்னராக இருந்த ஆலிவுட் நடிகர் அர்னால்டு ஷ்வார்ஷ் னேஷரை போல தானும் கவர்னராக வேண்டும் என இதுபோன்று அழுது அடம் பிடித்ததாக பலத்த சிரிப்புக்கு இடையே கூறினார்.

“முதல்வன்” சினிமா படத்தில் நடிகர் அர்ஜூன் ஒருநாள் முதல்-அமைச்சராவது போல் நடித்து இருந்தார். ஆனால் அமெரிக்காவில் 4 வயது சிறுவன் உண்மையிலேயே ஒரு நாள் கவர்னராக பதவி வகித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறான்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நண்பர் ராபர்ட் பாபி டிட்காம்ப் (49). இவர் ஹோனோலூலு நகருக்கு 4 பேருடன் சென்று இருந்தார். அங்கு அவர்கள் ஒரு பெண்ணை விபசாரத்துக்கு அழைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் டிட்காம்ப் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் தலா ரூ.25 ஆயிரம் தனிநபர் ஜாமீனில் விடப்பட்டனர். டிட்காம்ப் அதிபர் ஒபாமாவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். இவர்கள் இருவரும் ஹோனோ லூலுவில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த 1970-ம் ஆண்டு முதல் ஒன்றாக படித்தவர்கள்.

இவர்கள் இருவரும் குடும்ப நண்பர்கள் ஆவர். கோல்ப், கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளை இருவரும் ஒன்றாக சேர்ந்து விளையாடுவார்கள். கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட விடுமுறை நாட்களை இருவரும் தங்கள் குடும்பத்தினரோடு கழிப்பார்கள்.

அமெரிக்காவில் விபசார வழக்கில் ஒபாமா நண்பர் கைது

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நண்பர் ராபர்ட் பாபி டிட்காம்ப் (49). இவர் ஹோனோலூலு நகருக்கு 4 பேருடன் சென்று இருந்தார். அங்கு அவர்கள் ஒரு பெண்ணை விபசாரத்துக்கு அழைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் டிட்காம்ப் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் தலா ரூ.25 ஆயிரம் தனிநபர் ஜாமீனில் விடப்பட்டனர். டிட்காம்ப் அதிபர் ஒபாமாவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். இவர்கள் இருவரும் ஹோனோ லூலுவில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த 1970-ம் ஆண்டு முதல் ஒன்றாக படித்தவர்கள்.

இவர்கள் இருவரும் குடும்ப நண்பர்கள் ஆவர். கோல்ப், கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளை இருவரும் ஒன்றாக சேர்ந்து விளையாடுவார்கள். கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட விடுமுறை நாட்களை இருவரும் தங்கள் குடும்பத்தினரோடு கழிப்பார்கள்.

வாஷிங்டன்: "ராணுவத்தை பயன்படுத்தி, லிபியா ஆட்சியாளர் மும்மர் கடாபியைகொல்லும் திட்டம் இல்லை. அவருக்கு எதிரான போரில், நாங்கள் வெற்றி பெற்று வருகிறோம்' என, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பார்லிமென்டில், லிபியா மீதான தாக்குதல் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள்சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதற்கு அதிபர் ஒபாமா பதில் அளித்தார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், "லிபியாவின் வான் பகுதி, நேட்டோ நாடுகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. 1973ம் ஆண்டின் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி, லிபிய மக்களின் பாதுகாப்பும், கட்டுப்பாடும் நேட்டோ அமைப்பின் கீழ் கொண்டு வரப்படும். ராணுவத்தை பயன்படுத்தி, லிபியா ஆட்சியாளர் கடாபியை கொல்லும் திட்டம் எதுவும் இல்லை; ஆட்சியை மாற்றும் திட்டம் தான் உள்ளது' என, ஒபாமா தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், லிபியா நிலைமை குறித்து, வாஷிங்டனில் உள்ள தேசிய ராணுவ பல்கலைக் கழகத்தில், நாளை (திங்கள் கிழமை) அதிபர் ஒபாமா உரையாற்றுவார்' என, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, நேற்று ரேடியோ மூலம் நாட்டு மக்களுக்கு அளித்த பேட்டியில் அதிபர் ஒபாமா, "லிபியா ஆட்சியாளருக்கு எதிரான எங்களது போரில் நாங்கள் வெற்றி பெற்று வருகிறோம். பெங்காசியில் கடாபியின் படை பின்வாங்கி யுள்ளது. லிபியாவுக்குள் ராணுவப் படையை நாங்கள் பயன்படுத்தவில்லை. எங்களுடன் இணைந்து விமான தாக்குதலில், அரபு நாடுகளான கத்தார் மற்றும் யு.ஏ.ஈ., ஈடுபட்டுள்ளன. லிபியா மீதான தாக்குதல் பொறுப்பு, இந்த வார ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவிடம் இருந்து நேட்டோ அமைப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது. கடாபியின் கோடிக்கணக்கான சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. லிபியா மக்களின் பயன்பாட்டிற்கு இது உதவும். கடாபியின் படைகள் பின் வாங்கி, மனிதாபிமான உதவிகளுக்கு வழி விட வேண்டும். வன்முறையில் ஈடுபடு பவர்கள், அதற்கான பலனை அனுபவிப்பர். கடாபி ரத்தத்தில் குளிக்கப் போவதாக மிரட்டுகிறார். இது, அந்த மண்டலம் முழுவதையும் பாதிக்கும். இதை தடுக்க, சர்வதேச சமுதாயம் முன் வரும் போது நாங்களும் பங்கேற்க வேண்டும். அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டியது எங்களுடைய கடமை' என்றார்.


இதுகுறித்து பென்டகன் அதிகாரி பில் கோர்ட்னி கூறுகையில், "லிபியாவில் தொடர்ந்து கடாபியின் ஆதரவாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது விமானப் படை விமானங்கள் வானில் பறக்க முடியாது. போர் கப்பல்கள் துறைமுகத்தில் நிற்கின்றன. ஆயுதக்கிடங்குகள் அழிக்கப்பட்டன. தகவல்தொடர்பு சாதனங்கள் செயலிழக்கப்பட்டன. ஆனாலும், நிலத்தில் இருந்து இயக்கப்படும் பீரங்கிகள் மூலம் விமானத்தை நோக்கி தாக்குதல் நடத்திவருகின்றனர். இது இன்னும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. டிரிபோலி, செபாவில் நேட்டோ படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தின. பெங்காசி நகரம் கிளர்ச்சியாளர்களின் கையில் உள்ளது. அஜ்தாபையாவில் தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. இதேபோல், மிசுரட்டா, ஜிந்தன் ஆகிய இடங்களில் அப்பாவி மக்கள்மீது, கடாபி யின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்' என்றார்.

கடாபியை கொல்லும் திட்டம் இல்லை: அமெரிக்க அதிபர் ஒபாமா விளக்கம்

வாஷிங்டன்: "ராணுவத்தை பயன்படுத்தி, லிபியா ஆட்சியாளர் மும்மர் கடாபியைகொல்லும் திட்டம் இல்லை. அவருக்கு எதிரான போரில், நாங்கள் வெற்றி பெற்று வருகிறோம்' என, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பார்லிமென்டில், லிபியா மீதான தாக்குதல் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள்சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதற்கு அதிபர் ஒபாமா பதில் அளித்தார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், "லிபியாவின் வான் பகுதி, நேட்டோ நாடுகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. 1973ம் ஆண்டின் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி, லிபிய மக்களின் பாதுகாப்பும், கட்டுப்பாடும் நேட்டோ அமைப்பின் கீழ் கொண்டு வரப்படும். ராணுவத்தை பயன்படுத்தி, லிபியா ஆட்சியாளர் கடாபியை கொல்லும் திட்டம் எதுவும் இல்லை; ஆட்சியை மாற்றும் திட்டம் தான் உள்ளது' என, ஒபாமா தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், லிபியா நிலைமை குறித்து, வாஷிங்டனில் உள்ள தேசிய ராணுவ பல்கலைக் கழகத்தில், நாளை (திங்கள் கிழமை) அதிபர் ஒபாமா உரையாற்றுவார்' என, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, நேற்று ரேடியோ மூலம் நாட்டு மக்களுக்கு அளித்த பேட்டியில் அதிபர் ஒபாமா, "லிபியா ஆட்சியாளருக்கு எதிரான எங்களது போரில் நாங்கள் வெற்றி பெற்று வருகிறோம். பெங்காசியில் கடாபியின் படை பின்வாங்கி யுள்ளது. லிபியாவுக்குள் ராணுவப் படையை நாங்கள் பயன்படுத்தவில்லை. எங்களுடன் இணைந்து விமான தாக்குதலில், அரபு நாடுகளான கத்தார் மற்றும் யு.ஏ.ஈ., ஈடுபட்டுள்ளன. லிபியா மீதான தாக்குதல் பொறுப்பு, இந்த வார ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவிடம் இருந்து நேட்டோ அமைப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது. கடாபியின் கோடிக்கணக்கான சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. லிபியா மக்களின் பயன்பாட்டிற்கு இது உதவும். கடாபியின் படைகள் பின் வாங்கி, மனிதாபிமான உதவிகளுக்கு வழி விட வேண்டும். வன்முறையில் ஈடுபடு பவர்கள், அதற்கான பலனை அனுபவிப்பர். கடாபி ரத்தத்தில் குளிக்கப் போவதாக மிரட்டுகிறார். இது, அந்த மண்டலம் முழுவதையும் பாதிக்கும். இதை தடுக்க, சர்வதேச சமுதாயம் முன் வரும் போது நாங்களும் பங்கேற்க வேண்டும். அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டியது எங்களுடைய கடமை' என்றார்.


இதுகுறித்து பென்டகன் அதிகாரி பில் கோர்ட்னி கூறுகையில், "லிபியாவில் தொடர்ந்து கடாபியின் ஆதரவாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது விமானப் படை விமானங்கள் வானில் பறக்க முடியாது. போர் கப்பல்கள் துறைமுகத்தில் நிற்கின்றன. ஆயுதக்கிடங்குகள் அழிக்கப்பட்டன. தகவல்தொடர்பு சாதனங்கள் செயலிழக்கப்பட்டன. ஆனாலும், நிலத்தில் இருந்து இயக்கப்படும் பீரங்கிகள் மூலம் விமானத்தை நோக்கி தாக்குதல் நடத்திவருகின்றனர். இது இன்னும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. டிரிபோலி, செபாவில் நேட்டோ படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தின. பெங்காசி நகரம் கிளர்ச்சியாளர்களின் கையில் உள்ளது. அஜ்தாபையாவில் தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. இதேபோல், மிசுரட்டா, ஜிந்தன் ஆகிய இடங்களில் அப்பாவி மக்கள்மீது, கடாபி யின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்' என்றார்.

எகிப்தில் உடனடி ஆட்சி மாற்றம் வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.

எகிப்தில் கடந்த 30 ஆண்டு காலமாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் ஹோஸ்னி முபாரக்கை பதவி விலகக்கோரி, கடந்த ஒரு வாரமாக கிளர்ச்சியாளர்கள் போராட்டம் ந்டத்தி வருகிறார்கள்.

முபாரக்கிற்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண அமெரிக்கா முயன்று வருகிறது.

அதன் காரணமாக அதிபர் ஒபாமாவின் தூதுவர் ஒருவர் எகிப்து அனுப்பப்பட்டுள்ளார்.

எகிப்து அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்த போதிலும்,முபாரக் பதவில் நீடிப்பதை அந்நாட்டு மக்கள் விரும்பாத நிலையில் அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும்,எகிப்தில் அமைதி திரும்பவும், ஜனநாயக அரசு அமையவும் உடனடியாக ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் ஒபாமா விரும்புவதாக அத்தூதர் மூலம் எகிப்து அதிபர் முபாராக்கிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எகிப்தில் உடனடி ஆட்சி மாற்றம் வேண்டும்: ஒபாமா வலியுறுத்தல்

எகிப்தில் உடனடி ஆட்சி மாற்றம் வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.

எகிப்தில் கடந்த 30 ஆண்டு காலமாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் ஹோஸ்னி முபாரக்கை பதவி விலகக்கோரி, கடந்த ஒரு வாரமாக கிளர்ச்சியாளர்கள் போராட்டம் ந்டத்தி வருகிறார்கள்.

முபாரக்கிற்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண அமெரிக்கா முயன்று வருகிறது.

அதன் காரணமாக அதிபர் ஒபாமாவின் தூதுவர் ஒருவர் எகிப்து அனுப்பப்பட்டுள்ளார்.

எகிப்து அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்த போதிலும்,முபாரக் பதவில் நீடிப்பதை அந்நாட்டு மக்கள் விரும்பாத நிலையில் அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும்,எகிப்தில் அமைதி திரும்பவும், ஜனநாயக அரசு அமையவும் உடனடியாக ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் ஒபாமா விரும்புவதாக அத்தூதர் மூலம் எகிப்து அதிபர் முபாராக்கிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெ‌ரி‌க்கா‌வி‌லபோ‌லி ‌விசபடி‌த்தவருவதாகூ‌றி கா‌ல்க‌ளி‌ல் பொறு‌த்த‌ப்ப‌ட்ட க‌ண்கா‌ணி‌ப்பு கே‌மிரா‌க்களை அக‌ற்ற‌க் கோ‌ரிய இ‌ந்‌திமாணவ‌ர்க‌‌‌ள் 2 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

கலிபோர்னியாவில் செயல்பட்டு வ‌ரு‌மடிரிவேலி பல்கலைக்கழகத்தில் ஏராளமாஇந்திய மாணவர்கள் போலி விசாவில் படித்து வருவதாகூ‌றிகாவ‌ல்துறை‌யின‌ர், குடியுரிமை அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

போலி விசாவில் அங்கு இருக்கும் மாணவர்களின் கால்களில் கண்காணிப்பு கே‌மிராவகாவ‌ல்துறை‌யின‌ரபொருத்தி இருக்கிறார்கள். இதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்லையில் கண்காணிப்பு கே‌மிரபொருத்தப்பட்ட 2 மாணவர்கள் காவ‌ல்துறை‌யின‌ரிட‌ம், தங்கள் காலில் பொருத்தப்பட்ட கருவியை அகற்றுமாறு கூறி தகராறு செய்து‌ள்ளன‌ர்.

இதையடு‌த்தஅவர்களகைது செய்காவ‌ல்துறை‌யின‌ரகண்காணிப்பு முகாமில் வைத்து‌ள்ளன‌ர்.

அமெரிக்காவில் இ‌ந்‌திய மாணவர்கள் 2 பே‌ர் கைது

அமெ‌ரி‌க்கா‌வி‌லபோ‌லி ‌விசபடி‌த்தவருவதாகூ‌றி கா‌ல்க‌ளி‌ல் பொறு‌த்த‌ப்ப‌ட்ட க‌ண்கா‌ணி‌ப்பு கே‌மிரா‌க்களை அக‌ற்ற‌க் கோ‌ரிய இ‌ந்‌திமாணவ‌ர்க‌‌‌ள் 2 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

கலிபோர்னியாவில் செயல்பட்டு வ‌ரு‌மடிரிவேலி பல்கலைக்கழகத்தில் ஏராளமாஇந்திய மாணவர்கள் போலி விசாவில் படித்து வருவதாகூ‌றிகாவ‌ல்துறை‌யின‌ர், குடியுரிமை அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

போலி விசாவில் அங்கு இருக்கும் மாணவர்களின் கால்களில் கண்காணிப்பு கே‌மிராவகாவ‌ல்துறை‌யின‌ரபொருத்தி இருக்கிறார்கள். இதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்லையில் கண்காணிப்பு கே‌மிரபொருத்தப்பட்ட 2 மாணவர்கள் காவ‌ல்துறை‌யின‌ரிட‌ம், தங்கள் காலில் பொருத்தப்பட்ட கருவியை அகற்றுமாறு கூறி தகராறு செய்து‌ள்ளன‌ர்.

இதையடு‌த்தஅவர்களகைது செய்காவ‌ல்துறை‌யின‌ரகண்காணிப்பு முகாமில் வைத்து‌ள்ளன‌ர்.

வாஷிங்டன்: அமெரிக்காவின் டிரிவேலி பல்கலை மோசடியில் சிக்கிக் கொண்ட மாணவர்களின் காலில், "எலக்ட்ரானிக் டேக்' கட்டியது சரி தான் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இதற்கிடையில், நடந்த மோசடிக்கு தான் பொறுப்பாக முடியாது என்றும், பல்கலையில் பணிபுரிந்த இந்திய பணியாளர் ஒருவர் தான் காரணம் என்றும் அப்பல்கலை குற்றம்சாட்டியுள்ளது.


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டிரிவேலி பல்கலைக் கழகம், போலி விசா மூலம் வெளிநாட்டு மாணவர்களை சேர்த்த வழக்கில், இந்திய மாணவர்களின் கால்களில் "எலக்ட்ரானிக் டேக்3 எனப்படும் கருவி கட்டி விடப்பட்டது.


இதுகுறித்து, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறுகையில்,"இந்திய மாணவர்கள் குற்றவாளிகள் அல்ல. எலக்ட்ரானிக் டேக் உடனடியாக நீக்கப்பட வேண்டும்' என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.


வெளியுறவு செய்தித் தொடர்பாளர் பி.ஜே.க்ரவுலி," அது குற்ற அடிப்படையில் கண்காணிக்கும் கருவி அல்ல. பல்வேறு விசாரணை வழிமுறைகளில் அதுவும் ஒன்று. அமெரிக்காவில் வழக்கமாக கடைபிடிக்கப்படும் நடைமுறை தான் அது' என்று விளக்கம் கொடுத்தார்.


இந்நிலையில், இவ்விவகாரத்தில் நீண்ட நாட்களுக்குப் பின் டிரிவேலி பல்கலைக் கழகம் தன் மவுனத்தை உடைத்து, நேற்று விளக்கம் அளித்தது. அதில், நடந்த மோசடிகளுக்கு அங்கு பணியாற்றிய இந்திய பணியாளர் ஒருவர் தான் காரணம் என்று கூறியுள்ளது.


இதுகுறித்து, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பல்கலை நிறுவனரும் தலைவருமான சூசன் சூ அனுப்பியிருந்த இ-மெயிலில் கூறியிருந்ததாவது:பல்கலை மீதான விசா மோசடி குற்றச்சாட்டு ஆதாரமற்றது. ஆதாரமற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், அமெரிக்க குடியேற்றத் துறை பல்கலையை மூடிவிட்டது. பல்கலையின் நிர்வாகத்தில் மாணவ உதவியாளராக பணியாற்றியவர் அஞ்சி ரெட்டி. ஆலோசனை நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த மாணவர் ராம் கிருஷ்ட கராவும், ரெட்டியும் சேர்ந்து கொண்டு, கல்விக் கட்டணம் என்ற பெயரில் வசூல் வேட்டை நடத்தியுள்ளனர். இது நடந்தது கடந்தாண்டு ஏப்ரல் மாதம்.அந்தப் பணத்தை கராவின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் சேர்த்துள்ளனர். இதைக் கண்டுபிடித்த பல்கலை, அவர்கள் இருவரையும் பணியில் இருந்து நீக்கிவிட்டது. குடியேற்றத் துறையிடம் அவர்கள் தான் பல்கலை மீது புகார் அளித்துள்ளனர்.மேலும், பல்கலையில் சேர்வதற்கு 140 பேரை தவிர்த்து, மீதி 5,500 மாணவர்களுக்கு ஐ-20 எனப்படும் அனுமதி ஆவணம் அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த மெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பல்கலையின் விளக்கத்துக்கு அமெரிக்க குடியேற்ற துறை பதில் எதுவும் அளிக்கவில்லை.

காலில் விலங்கு போன்ற கண்காணிப்பு : அமெரிக்க செயல் குறித்து புதிய விளக்கம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் டிரிவேலி பல்கலை மோசடியில் சிக்கிக் கொண்ட மாணவர்களின் காலில், "எலக்ட்ரானிக் டேக்' கட்டியது சரி தான் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இதற்கிடையில், நடந்த மோசடிக்கு தான் பொறுப்பாக முடியாது என்றும், பல்கலையில் பணிபுரிந்த இந்திய பணியாளர் ஒருவர் தான் காரணம் என்றும் அப்பல்கலை குற்றம்சாட்டியுள்ளது.


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டிரிவேலி பல்கலைக் கழகம், போலி விசா மூலம் வெளிநாட்டு மாணவர்களை சேர்த்த வழக்கில், இந்திய மாணவர்களின் கால்களில் "எலக்ட்ரானிக் டேக்3 எனப்படும் கருவி கட்டி விடப்பட்டது.


இதுகுறித்து, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறுகையில்,"இந்திய மாணவர்கள் குற்றவாளிகள் அல்ல. எலக்ட்ரானிக் டேக் உடனடியாக நீக்கப்பட வேண்டும்' என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.


வெளியுறவு செய்தித் தொடர்பாளர் பி.ஜே.க்ரவுலி," அது குற்ற அடிப்படையில் கண்காணிக்கும் கருவி அல்ல. பல்வேறு விசாரணை வழிமுறைகளில் அதுவும் ஒன்று. அமெரிக்காவில் வழக்கமாக கடைபிடிக்கப்படும் நடைமுறை தான் அது' என்று விளக்கம் கொடுத்தார்.


இந்நிலையில், இவ்விவகாரத்தில் நீண்ட நாட்களுக்குப் பின் டிரிவேலி பல்கலைக் கழகம் தன் மவுனத்தை உடைத்து, நேற்று விளக்கம் அளித்தது. அதில், நடந்த மோசடிகளுக்கு அங்கு பணியாற்றிய இந்திய பணியாளர் ஒருவர் தான் காரணம் என்று கூறியுள்ளது.


இதுகுறித்து, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பல்கலை நிறுவனரும் தலைவருமான சூசன் சூ அனுப்பியிருந்த இ-மெயிலில் கூறியிருந்ததாவது:பல்கலை மீதான விசா மோசடி குற்றச்சாட்டு ஆதாரமற்றது. ஆதாரமற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், அமெரிக்க குடியேற்றத் துறை பல்கலையை மூடிவிட்டது. பல்கலையின் நிர்வாகத்தில் மாணவ உதவியாளராக பணியாற்றியவர் அஞ்சி ரெட்டி. ஆலோசனை நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த மாணவர் ராம் கிருஷ்ட கராவும், ரெட்டியும் சேர்ந்து கொண்டு, கல்விக் கட்டணம் என்ற பெயரில் வசூல் வேட்டை நடத்தியுள்ளனர். இது நடந்தது கடந்தாண்டு ஏப்ரல் மாதம்.அந்தப் பணத்தை கராவின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் சேர்த்துள்ளனர். இதைக் கண்டுபிடித்த பல்கலை, அவர்கள் இருவரையும் பணியில் இருந்து நீக்கிவிட்டது. குடியேற்றத் துறையிடம் அவர்கள் தான் பல்கலை மீது புகார் அளித்துள்ளனர்.மேலும், பல்கலையில் சேர்வதற்கு 140 பேரை தவிர்த்து, மீதி 5,500 மாணவர்களுக்கு ஐ-20 எனப்படும் அனுமதி ஆவணம் அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த மெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பல்கலையின் விளக்கத்துக்கு அமெரிக்க குடியேற்ற துறை பதில் எதுவும் அளிக்கவில்லை.

முக நூல்

Popular Posts