background img

புதிய வரவு

Showing posts with label Karthik. Show all posts
Showing posts with label Karthik. Show all posts
சென்னை:""என் கட்சி வேட்பாளர்கள் மூவரை அ.தி.மு.க.,வினர் துப்பாக்கிமுனையில் மிரட்டியுள்ளனர். ஒரு வேட்பாளரை விலைக்கு வாங்கி விட்டனர்,'' என்று அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக் புகார் கூறினார்.இது குறித்து சென்னையில் நேற்று நிருபர்கள் சந்திப்பில் கார்த்திக் கூறியதாவது:எங்கள் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி, 27 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருந்தது. இதில், எட்டு பேர் வாபஸ் பெற்று விட்டனர். தற்போது எனது கட்சியை சேர்ந்த 19 பேரும், நாங்குநேரி மற்றும் திருநெல்வேலி தொகுதிகளில் சுயேச்சையாக போட்டியிடும் இருவரும் சேர்ந்து, எனது கட்சியின் சார்பில் 21 பேர் போட்டியிடுகின்றனர்.எனது கட்சியின் சார்பில் கம்பம் தொகுதி வேட்பாளர் ரவிச்சந்திரன், போடி வேட்பாளர் அறிவரசன், உசிலம்பட்டி வேட்பாளர் வீரண்ணராஜு ஆகியோர் ராயப்பேட்டையில் ஒரு தனியார் லாட்ஜில் தங்கியிருந்தனர்.இவர்களை, அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் இரு தினங்களுக்கு முன், ஸ்கார்பியோ காரில் கடத்தி துப்பாக்கிமுனையில் மிரட்டி, வாபஸ் வாங்கச் சொல்லியுள்ளனர். இதில், அறிவரசன் அவர்களுடன் சேர்ந்து விட்டார். ரவிச்சந்திரனையும், வீரண்ணராஜுவையும் திருச்சி - திண்டுக்கல் இடையே மிரட்டி இறக்கி விட்டுள்ளனர். மிரட்டப்பட்ட வேட்பாளர்கள் மூலம் தேர்தல் கமிஷனருக்கு புகார் கொடுக்க உள்ளோம்.
நான் நாகரிகமாக அரசியல் நடத்த விரும்புகிறேன். சிலர் அநாகரிக அரசியல் நடத்துகின்றனர். வேட்பாளர்களை மிரட்டலாம், என்னை மிரட்டி பணிய வைக்க முடியாது. இனி இருக்கும் எனது வேட்பாளர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. எனது வேட்பாளர்களை ஆதரித்து திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்திலிருந்து இன்று பிரசாரத்தை துவங்குகிறேன். ஒரு நாளைக்கு இரண்டு தொகுதிகள் வீதம் பிரசாரம் செய்ய உள்ளேன்.எனது கட்சி போட்டியிடாத தொகுதிகளில் உள்ள எனது கட்சியை சேர்ந்தவர்கள், அவர்கள் இஷ்டத்திற்கு யாருக்கு வேண்டுமென்றாலும் ஓட்டளிக்கலாம். அவர்கள் யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்று என்னை கேட்டால், நான் தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளிக்கலாம் என்று தான் சொல்வேன். இவ்வாறு கார்த்திக் கூறினார்.

தேர்தல் கமிஷனிடம் நடிகர் கார்த்திக் புகார்

சென்னை:""என் கட்சி வேட்பாளர்கள் மூவரை அ.தி.மு.க.,வினர் துப்பாக்கிமுனையில் மிரட்டியுள்ளனர். ஒரு வேட்பாளரை விலைக்கு வாங்கி விட்டனர்,'' என்று அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக் புகார் கூறினார்.இது குறித்து சென்னையில் நேற்று நிருபர்கள் சந்திப்பில் கார்த்திக் கூறியதாவது:எங்கள் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி, 27 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருந்தது. இதில், எட்டு பேர் வாபஸ் பெற்று விட்டனர். தற்போது எனது கட்சியை சேர்ந்த 19 பேரும், நாங்குநேரி மற்றும் திருநெல்வேலி தொகுதிகளில் சுயேச்சையாக போட்டியிடும் இருவரும் சேர்ந்து, எனது கட்சியின் சார்பில் 21 பேர் போட்டியிடுகின்றனர்.எனது கட்சியின் சார்பில் கம்பம் தொகுதி வேட்பாளர் ரவிச்சந்திரன், போடி வேட்பாளர் அறிவரசன், உசிலம்பட்டி வேட்பாளர் வீரண்ணராஜு ஆகியோர் ராயப்பேட்டையில் ஒரு தனியார் லாட்ஜில் தங்கியிருந்தனர்.இவர்களை, அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் இரு தினங்களுக்கு முன், ஸ்கார்பியோ காரில் கடத்தி துப்பாக்கிமுனையில் மிரட்டி, வாபஸ் வாங்கச் சொல்லியுள்ளனர். இதில், அறிவரசன் அவர்களுடன் சேர்ந்து விட்டார். ரவிச்சந்திரனையும், வீரண்ணராஜுவையும் திருச்சி - திண்டுக்கல் இடையே மிரட்டி இறக்கி விட்டுள்ளனர். மிரட்டப்பட்ட வேட்பாளர்கள் மூலம் தேர்தல் கமிஷனருக்கு புகார் கொடுக்க உள்ளோம்.
நான் நாகரிகமாக அரசியல் நடத்த விரும்புகிறேன். சிலர் அநாகரிக அரசியல் நடத்துகின்றனர். வேட்பாளர்களை மிரட்டலாம், என்னை மிரட்டி பணிய வைக்க முடியாது. இனி இருக்கும் எனது வேட்பாளர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. எனது வேட்பாளர்களை ஆதரித்து திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்திலிருந்து இன்று பிரசாரத்தை துவங்குகிறேன். ஒரு நாளைக்கு இரண்டு தொகுதிகள் வீதம் பிரசாரம் செய்ய உள்ளேன்.எனது கட்சி போட்டியிடாத தொகுதிகளில் உள்ள எனது கட்சியை சேர்ந்தவர்கள், அவர்கள் இஷ்டத்திற்கு யாருக்கு வேண்டுமென்றாலும் ஓட்டளிக்கலாம். அவர்கள் யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்று என்னை கேட்டால், நான் தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளிக்கலாம் என்று தான் சொல்வேன். இவ்வாறு கார்த்திக் கூறினார்.

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக் சென்னையில் நேற்று அக்கட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், ’’இந்த தேர்தலில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மொத்தம் 1300 விண்ணப்பங்கள் வந்திருந்தன. வேறு கட்சிகளைச் சேர்ந்த சிலரும் அனுப்பியிருந்தார்கள். அந்த விண்ணப்பங்களை கண்டறிந்து நீக்கியதால்தான் வேட்பாளர் பட்டியல் தயாரிக்க தாமதம் ஏற்பட்டது.

இன்று 14 வேட்பாளர்கள் கொண்ட முதல்பட்டியலை வெளியிடுகிறேன். கடையநல்லூர் தொகுதியில் எங்கள் கட்சி சார்பில் போலி வேட்பாளர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். தோல்வி பயத்தால் இப்படி செய்திருக்கிறார்கள். அதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்.

எங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிக்கிறேன். சங்கரன்கோவில் தொகுதியில் பி.சுப்புலட்சுமி, திருப்பரங்குன்றம் தொகுதியில் கே.சாந்திபூசன், நாங்குனேரி தொகுதியில் எம்.சண்முகசுந்தரம், ராதாபுரம் தொகுதியில் ஆர்.மரகதவல்லி, அம்பாசமுத்திரம் தொகுதியில் குவைத்.எம்.குமார்,

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எம்.எஸ்.ராஜா, கடையநல்லூர் தொகுதியில் எம்.பாலசுப்பிரமணியன், தென்காசி தொகுதியில் எஸ்.பரமசிவம், வாசுதேவநல்லூர் தொகுதியில் எஸ்.பிச்சைக்கனி, ஒட்டப்பிடாரம் தொகுதியில் சி.சங்கர், சாத்தூர் தொகுதியில் கே.எஸ்.வைரமுத்து, ராஜபாளையம் தொகுதியில் கே.சூரியமகாராஜா,

விருதுநகர் தொகுதியில் எஸ்.செந்தாமரை பாண்டியன், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் எஸ்.சுப்பிரமணியன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதில், வேட்பாளர்கள் சுப்புலட்சுமியும், சங்கரும் கூலித் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்படும். அதில் 15 வேட்பாளர்கள் இடம்பெறுவார்கள்.

எங்கள் கட்சி, தென்மாவட்டங்களில் 40 தொகுதிகளில் நிற்க முடியும். நேரமில்லாத காரணத்தால் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நாங்கள் போட்டியிடும் தொகுதிகள் தவிர மற்ற தொகுதிகளில் யாரை ஆதரிப்பது என்று ஓரிரு நாளில் அறிவிப்பேன். நிச்சயமாக அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டோம்.

ஆள் பலம், பணம் பலத்தைக் காட்டி எங்களை மிரட்டுகிறார்கள். யாருடைய மிரட்டலுக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம்.

எங்களுக்கு காந்தி போலவும் இருக்க தெரியும். சுபாஷ் சந்திரபோஸ், முத்துராமலிங்க தேவர் போலவும் இருக்க முடியும். நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. எங்களை மிரட்டியவர்கள் பற்றி தேர்தல் கமிஷனில் புகார் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். தேர்தலில் மிரட்டல் இருக்கக்கூடாது. ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும்.

எங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய வேண்டி இருப்பதால் நான் போட்டியிடுவது பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை.

உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடுவது இல்லை என்ற முடிவை மறுபரிசீலனை செய்வோம். சிவகாசி தொகுதியில் போட்டியிடுவது குறித்தும் ஓரிரு நாளில் அறிவிப்போம். 28-ந் தேதி முதல் பிரசாரத்தில் ஈடுபடுவேன்.

தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக அ.தி.மு.க. எங்களை மிகவும் துன்புறுத்தியது. ஆனால், கலைஞர் கருணாநிதிக்கு தாராள குணம். எல்லா கட்சியினரையும் மதித்து தொகுதிகளை தாராளமாக ஒதுக்கி கொடுத்துள்ளார்’’என்று கூறினார்.

அதிமுகவுக்கு யாரும் ஓட்டுப்போட வேண்டாம் : நடிகர் கார்த்திக்

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக் சென்னையில் நேற்று அக்கட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், ’’இந்த தேர்தலில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மொத்தம் 1300 விண்ணப்பங்கள் வந்திருந்தன. வேறு கட்சிகளைச் சேர்ந்த சிலரும் அனுப்பியிருந்தார்கள். அந்த விண்ணப்பங்களை கண்டறிந்து நீக்கியதால்தான் வேட்பாளர் பட்டியல் தயாரிக்க தாமதம் ஏற்பட்டது.

இன்று 14 வேட்பாளர்கள் கொண்ட முதல்பட்டியலை வெளியிடுகிறேன். கடையநல்லூர் தொகுதியில் எங்கள் கட்சி சார்பில் போலி வேட்பாளர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். தோல்வி பயத்தால் இப்படி செய்திருக்கிறார்கள். அதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்.

எங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிக்கிறேன். சங்கரன்கோவில் தொகுதியில் பி.சுப்புலட்சுமி, திருப்பரங்குன்றம் தொகுதியில் கே.சாந்திபூசன், நாங்குனேரி தொகுதியில் எம்.சண்முகசுந்தரம், ராதாபுரம் தொகுதியில் ஆர்.மரகதவல்லி, அம்பாசமுத்திரம் தொகுதியில் குவைத்.எம்.குமார்,

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எம்.எஸ்.ராஜா, கடையநல்லூர் தொகுதியில் எம்.பாலசுப்பிரமணியன், தென்காசி தொகுதியில் எஸ்.பரமசிவம், வாசுதேவநல்லூர் தொகுதியில் எஸ்.பிச்சைக்கனி, ஒட்டப்பிடாரம் தொகுதியில் சி.சங்கர், சாத்தூர் தொகுதியில் கே.எஸ்.வைரமுத்து, ராஜபாளையம் தொகுதியில் கே.சூரியமகாராஜா,

விருதுநகர் தொகுதியில் எஸ்.செந்தாமரை பாண்டியன், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் எஸ்.சுப்பிரமணியன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதில், வேட்பாளர்கள் சுப்புலட்சுமியும், சங்கரும் கூலித் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்படும். அதில் 15 வேட்பாளர்கள் இடம்பெறுவார்கள்.

எங்கள் கட்சி, தென்மாவட்டங்களில் 40 தொகுதிகளில் நிற்க முடியும். நேரமில்லாத காரணத்தால் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நாங்கள் போட்டியிடும் தொகுதிகள் தவிர மற்ற தொகுதிகளில் யாரை ஆதரிப்பது என்று ஓரிரு நாளில் அறிவிப்பேன். நிச்சயமாக அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டோம்.

ஆள் பலம், பணம் பலத்தைக் காட்டி எங்களை மிரட்டுகிறார்கள். யாருடைய மிரட்டலுக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம்.

எங்களுக்கு காந்தி போலவும் இருக்க தெரியும். சுபாஷ் சந்திரபோஸ், முத்துராமலிங்க தேவர் போலவும் இருக்க முடியும். நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. எங்களை மிரட்டியவர்கள் பற்றி தேர்தல் கமிஷனில் புகார் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். தேர்தலில் மிரட்டல் இருக்கக்கூடாது. ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும்.

எங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய வேண்டி இருப்பதால் நான் போட்டியிடுவது பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை.

உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடுவது இல்லை என்ற முடிவை மறுபரிசீலனை செய்வோம். சிவகாசி தொகுதியில் போட்டியிடுவது குறித்தும் ஓரிரு நாளில் அறிவிப்போம். 28-ந் தேதி முதல் பிரசாரத்தில் ஈடுபடுவேன்.

தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக அ.தி.மு.க. எங்களை மிகவும் துன்புறுத்தியது. ஆனால், கலைஞர் கருணாநிதிக்கு தாராள குணம். எல்லா கட்சியினரையும் மதித்து தொகுதிகளை தாராளமாக ஒதுக்கி கொடுத்துள்ளார்’’என்று கூறினார்.

சென்னை:""அ.தி.மு.க., கூட்டணியில் நான் சேரவில்லை. எங்கள் கட்சி 41 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது.வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும்,'' என்று அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவரும், நடிகருகமான கார்த்திக் தெரிவித்தார்.சென்னையில் நேற்று மாலை அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் கார்த்திக் பேசும் போது,""அ.தி.மு.க., கூட்டணியில் நான் சேர்வதில்லை என்று நான் எடுத்த முடிவில் மாற்றம் இல்லை. அவர்கள் 55 தொகுதி கொடுத்தால் கூட நான் அவர்கள் கூட்டணியில் சேரமாட்டேன். எனது கட்சி சென்னையில், மயிலாப்பூர், அண்ணாநகர், தி.நகர் உட்பட தமிழகத்தில் 41 தொகுதிகளில் போட்டியிட வியூகம் அமைத்து வருகிறேன்.
இதில், 30 தொகுதிகளிலாவது வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள்.கட்சியின் மூலம் நேற்றும், இன்றும் நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. இன்று மாலை நேர்காணல் முடிந்ததும், நாளை வேட்பாளர் பட்டியல் வெளியிடுவேன். நானும் தேர்தலில் போட்டியிடுகிறேன். எந்தத் தொகுதி என்று நாளை அறிவிப்பேன். எனது வேட்பாளர்கள் நாளை மறுநாளிலிருந்து வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். வரும் 22ம்தேதியிலிருந்து நான் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளேன். அம்பாசமுத்திரத்தில் பிரசாரத்தை துவங்குகி‌‌றேன்,'' என்றார்.
முடிவு செய்துள்ள41 தொகுதிகள்:மயிலாப்பூர், அண்ணாநகர், தி.நகர், சங்கரன்கோவில், வாசுதேவ நல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், திருவாடானை, ராமநாதபுரம், கடலாடி, முதுகுளத்தூர், அருப்புக்கோட்டை, சாத்தூர், விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர், கம்பம், ஆண்டிபட்டி, பல்லடம், திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு), திருமங்கலம், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம், மதுரை நகர், மதுரை (கிழக்கு), மதுரை (தெற்கு) ஆகிய 41 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் கார்த்திக் கட்சி தனித்து போட்டி:நாளை வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை:""அ.தி.மு.க., கூட்டணியில் நான் சேரவில்லை. எங்கள் கட்சி 41 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது.வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும்,'' என்று அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவரும், நடிகருகமான கார்த்திக் தெரிவித்தார்.சென்னையில் நேற்று மாலை அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் கார்த்திக் பேசும் போது,""அ.தி.மு.க., கூட்டணியில் நான் சேர்வதில்லை என்று நான் எடுத்த முடிவில் மாற்றம் இல்லை. அவர்கள் 55 தொகுதி கொடுத்தால் கூட நான் அவர்கள் கூட்டணியில் சேரமாட்டேன். எனது கட்சி சென்னையில், மயிலாப்பூர், அண்ணாநகர், தி.நகர் உட்பட தமிழகத்தில் 41 தொகுதிகளில் போட்டியிட வியூகம் அமைத்து வருகிறேன்.
இதில், 30 தொகுதிகளிலாவது வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள்.கட்சியின் மூலம் நேற்றும், இன்றும் நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. இன்று மாலை நேர்காணல் முடிந்ததும், நாளை வேட்பாளர் பட்டியல் வெளியிடுவேன். நானும் தேர்தலில் போட்டியிடுகிறேன். எந்தத் தொகுதி என்று நாளை அறிவிப்பேன். எனது வேட்பாளர்கள் நாளை மறுநாளிலிருந்து வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். வரும் 22ம்தேதியிலிருந்து நான் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளேன். அம்பாசமுத்திரத்தில் பிரசாரத்தை துவங்குகி‌‌றேன்,'' என்றார்.
முடிவு செய்துள்ள41 தொகுதிகள்:மயிலாப்பூர், அண்ணாநகர், தி.நகர், சங்கரன்கோவில், வாசுதேவ நல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், திருவாடானை, ராமநாதபுரம், கடலாடி, முதுகுளத்தூர், அருப்புக்கோட்டை, சாத்தூர், விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர், கம்பம், ஆண்டிபட்டி, பல்லடம், திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு), திருமங்கலம், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம், மதுரை நகர், மதுரை (கிழக்கு), மதுரை (தெற்கு) ஆகிய 41 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை: ""கேட்ட தொகுதிகளை தராததால், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகுகிறோம்,'' என, நடிகர் கார்த்திக் அறிவித்துள்ளார்.

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அ.தி.மு.க.,வின் பிரதிநிதிகள் கடந்த ஜனவரி மாதம் என்னை சந்தித்து, அ.தி.மு.க.,வுடன் எங்கள் கட்சி கூட்டணி குறித்து பேசினர். அப்போது, பா.ம.க., மற்றும் தே.மு.தி.க., ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க உள்ளதால், எங்களுக்கு எத்தனை தொகுதிகள் என்பது முடிவடையவில்லை. அ.தி.மு.க., பிரதிநிதிகள் என்னை கேட்டுக் கொண்டதற்கிணங்க, கடந்த ஜனவரி 19ம் தேதி, அ.தி.மு.க., பொதுச் செயலரை நேரில் சந்தித்துப் பேசி, ஆதரவு கடிதம் கொடுத்தேன். அ.தி.மு.க., - பா.ம.க., கூட்டணியில் உடன்பாடு ஏற்படாததால் பா.ம.க., கூட்டணியிலிருந்து விலகியது. நான் நியாயமாக கோரியிருந்த தொகுதிகளை கேட்டதற்கு மறுப்பும் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு, இன்று வரை எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இந்நிலையில், அவர்கள் பேச்சில் கூட்டணிக்கு உகந்த நோக்கம் இல்லாதது தெளிவாகத் தெரிந்தது. அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து விலகிக் கொள்வது சுயமரியாதைக்கு ஏற்றதென முடிவெடுக்கப்பட்டது. கூட்டணியிலிருந்து விலகுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இவ்வாறு அறிக்கையில் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து நடிகர் கார்த்திக் கட்சி விலகல்

சென்னை: ""கேட்ட தொகுதிகளை தராததால், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகுகிறோம்,'' என, நடிகர் கார்த்திக் அறிவித்துள்ளார்.

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அ.தி.மு.க.,வின் பிரதிநிதிகள் கடந்த ஜனவரி மாதம் என்னை சந்தித்து, அ.தி.மு.க.,வுடன் எங்கள் கட்சி கூட்டணி குறித்து பேசினர். அப்போது, பா.ம.க., மற்றும் தே.மு.தி.க., ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க உள்ளதால், எங்களுக்கு எத்தனை தொகுதிகள் என்பது முடிவடையவில்லை. அ.தி.மு.க., பிரதிநிதிகள் என்னை கேட்டுக் கொண்டதற்கிணங்க, கடந்த ஜனவரி 19ம் தேதி, அ.தி.மு.க., பொதுச் செயலரை நேரில் சந்தித்துப் பேசி, ஆதரவு கடிதம் கொடுத்தேன். அ.தி.மு.க., - பா.ம.க., கூட்டணியில் உடன்பாடு ஏற்படாததால் பா.ம.க., கூட்டணியிலிருந்து விலகியது. நான் நியாயமாக கோரியிருந்த தொகுதிகளை கேட்டதற்கு மறுப்பும் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு, இன்று வரை எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இந்நிலையில், அவர்கள் பேச்சில் கூட்டணிக்கு உகந்த நோக்கம் இல்லாதது தெளிவாகத் தெரிந்தது. அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து விலகிக் கொள்வது சுயமரியாதைக்கு ஏற்றதென முடிவெடுக்கப்பட்டது. கூட்டணியிலிருந்து விலகுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இவ்வாறு அறிக்கையில் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

முக நூல்

Popular Posts