background img

புதிய வரவு

Showing posts with label Party. Show all posts
Showing posts with label Party. Show all posts
கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக, மயிலாப்பூர் எம்எல்ஏ எஸ்.வி.சேகர் உள்பட 19 பேரை கட்சியில் இருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு நீக்கியுள்ளார்.

இதுதொடர்பாக தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், மயிலாப்பூர் எம்எல்ஏ எஸ்.வி.சேகர், தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மங்கள் ராஜ், தென்சென்னை இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜேம்ஸ் ஜி.பிரகாஷ், சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் சாந்தி, செங்கை செல்லப்பன், விஜயசேகர் உள்பட மொத்தம் 19 பேர் நீக்கப்பட்டுள்ளதாக தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இவர்கள் அனைவரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அதிகாரப்பூர்வ காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டதாக, தங்கபாலு கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள எஸ்.வி.சேகர், என்னை கட்சியில் இருந்து நீக்க தங்கபாலுவுக்கு அதிகாரம் இல்லை. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஒப்புதலை பெறாமல் தங்கபாலு, தன்னிச்சையாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். தனக்கு எதிராக கட்சியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நீக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தங்கபாலு செயல்பட்டுள்ளார். தங்கபாலு நடவடிக்கை குறித்து ராகுல் காந்திக்கு இமெயில் அனுப்ப உள்ளேன் என்றார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து எஸ்.வி.சேகர் நீக்கம்

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக, மயிலாப்பூர் எம்எல்ஏ எஸ்.வி.சேகர் உள்பட 19 பேரை கட்சியில் இருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு நீக்கியுள்ளார்.

இதுதொடர்பாக தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், மயிலாப்பூர் எம்எல்ஏ எஸ்.வி.சேகர், தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மங்கள் ராஜ், தென்சென்னை இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜேம்ஸ் ஜி.பிரகாஷ், சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் சாந்தி, செங்கை செல்லப்பன், விஜயசேகர் உள்பட மொத்தம் 19 பேர் நீக்கப்பட்டுள்ளதாக தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இவர்கள் அனைவரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அதிகாரப்பூர்வ காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டதாக, தங்கபாலு கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள எஸ்.வி.சேகர், என்னை கட்சியில் இருந்து நீக்க தங்கபாலுவுக்கு அதிகாரம் இல்லை. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஒப்புதலை பெறாமல் தங்கபாலு, தன்னிச்சையாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். தனக்கு எதிராக கட்சியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நீக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தங்கபாலு செயல்பட்டுள்ளார். தங்கபாலு நடவடிக்கை குறித்து ராகுல் காந்திக்கு இமெயில் அனுப்ப உள்ளேன் என்றார்.

கோல்கட்டா : "எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், திரிணமுல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் காங்கிரஸ் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை' என, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டசபை தேர்தல் ஆறு கட்டமாக நடக்கிறது. இதையொட்டி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜி நிருபர்களிடம் கூறியதாவது:மேற்கு வங்கத்தில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், திரிணமுல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை வெளியே இருந்து ஆதரிப்போம். ஆட்சியில் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. ஆட்சியில் பங்கேற்பது குறித்து, மேலிட ஆலோசனைக்கு பிறகு தான் முடிவு செய்யப்படும். முதலில் பாலத்தை நெருங்குவோம்; அதன் பிறகு பாலத்தைக் கடப்பது குறித்து யோசிப்போம்.தேர்தலில் சீட் கிடைக்காத காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் போட்டி வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்வதை வாபஸ் பெற வேண்டும்.

தேர்தலில் சீட் வேண்டும் என்பது பிறப்புரிமை கிடையாது. யாருக்கு சீட் கொடுப்பது என்பதை கட்சி தான் முடிவு செய்யும். மீறி போட்டி வேட்பாளராக மனு செய்பவர்கள், கட்சியிலிருந்து ஆறாண்டு காலத்துக்கு நீக்கப்படுவர் . இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஒழுங்கு நடவடிக்கை குழு தேவையில்லை. மாநில காங்கிரஸ் கட்சித் தலைவருக்கே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போதிய அதிகாரம் உள்ளது.நான் காங்கிரஸ் செயற்குழுவில் இடம் பெற்றிருந்தாலும் கூட, 1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட விரும்பினேன். ஆனால், கட்சி மேலிடம் எனக்கு சீட் கொடுக்கவில்லை. அதன் பின் நடந்த தேர்தலில் சீட் கிடைத்து, இன்று முக்கிய பதவியில் இருக்கிறேன். எனவே, தேர்தலில் சீட் கிடைக்காததையெல்லாம் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

மம்தா கட்சி ஆட்சிக்கு வந்தால் காங்., நிலை என்ன: பிரணாப்

கோல்கட்டா : "எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், திரிணமுல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் காங்கிரஸ் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை' என, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டசபை தேர்தல் ஆறு கட்டமாக நடக்கிறது. இதையொட்டி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜி நிருபர்களிடம் கூறியதாவது:மேற்கு வங்கத்தில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், திரிணமுல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை வெளியே இருந்து ஆதரிப்போம். ஆட்சியில் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. ஆட்சியில் பங்கேற்பது குறித்து, மேலிட ஆலோசனைக்கு பிறகு தான் முடிவு செய்யப்படும். முதலில் பாலத்தை நெருங்குவோம்; அதன் பிறகு பாலத்தைக் கடப்பது குறித்து யோசிப்போம்.தேர்தலில் சீட் கிடைக்காத காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் போட்டி வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்வதை வாபஸ் பெற வேண்டும்.

தேர்தலில் சீட் வேண்டும் என்பது பிறப்புரிமை கிடையாது. யாருக்கு சீட் கொடுப்பது என்பதை கட்சி தான் முடிவு செய்யும். மீறி போட்டி வேட்பாளராக மனு செய்பவர்கள், கட்சியிலிருந்து ஆறாண்டு காலத்துக்கு நீக்கப்படுவர் . இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஒழுங்கு நடவடிக்கை குழு தேவையில்லை. மாநில காங்கிரஸ் கட்சித் தலைவருக்கே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போதிய அதிகாரம் உள்ளது.நான் காங்கிரஸ் செயற்குழுவில் இடம் பெற்றிருந்தாலும் கூட, 1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட விரும்பினேன். ஆனால், கட்சி மேலிடம் எனக்கு சீட் கொடுக்கவில்லை. அதன் பின் நடந்த தேர்தலில் சீட் கிடைத்து, இன்று முக்கிய பதவியில் இருக்கிறேன். எனவே, தேர்தலில் சீட் கிடைக்காததையெல்லாம் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

கொழும்பு:இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிபர் ராஜபக்ஷேவின் ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.இலங்கையில் நேற்று முன்தினம் 234 கவுன்சில்களுக்கு தேர்தல் நடந்தது. இதில் ராஜபக்ஷே தலைமையிலான ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி 205 இடங்களை கைப்பற்றியுள்ளது. எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி ஒன்பது இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தமிழ் தேசிய கூட்டணி 12 இடங்களிலும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் நான்கு இடங்களிலும், மற்றொரு தமிழ் கட்சி ஒரு இடத்திலும், சுயேச்சைகள் மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.கடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்ஷே கட்சி 58 சதவீத ஓட்டுகளை பெற்றது. ஆனால், இந்த தேர்தலில் 55 சதவீத ஓட்டுகளே கிடைத்துள்ளன. ஓட்டுகளின் எண்ணிக்கை 3 சதவீதம் குறைந்துள்ளது.

ராஜபக்ஷே கட்சிஅபார வெற்றி

கொழும்பு:இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிபர் ராஜபக்ஷேவின் ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.இலங்கையில் நேற்று முன்தினம் 234 கவுன்சில்களுக்கு தேர்தல் நடந்தது. இதில் ராஜபக்ஷே தலைமையிலான ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி 205 இடங்களை கைப்பற்றியுள்ளது. எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி ஒன்பது இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தமிழ் தேசிய கூட்டணி 12 இடங்களிலும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் நான்கு இடங்களிலும், மற்றொரு தமிழ் கட்சி ஒரு இடத்திலும், சுயேச்சைகள் மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.கடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்ஷே கட்சி 58 சதவீத ஓட்டுகளை பெற்றது. ஆனால், இந்த தேர்தலில் 55 சதவீத ஓட்டுகளே கிடைத்துள்ளன. ஓட்டுகளின் எண்ணிக்கை 3 சதவீதம் குறைந்துள்ளது.

சென்னை:""அ.தி.மு.க., கூட்டணியில் நான் சேரவில்லை. எங்கள் கட்சி 41 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது.வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும்,'' என்று அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவரும், நடிகருகமான கார்த்திக் தெரிவித்தார்.சென்னையில் நேற்று மாலை அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் கார்த்திக் பேசும் போது,""அ.தி.மு.க., கூட்டணியில் நான் சேர்வதில்லை என்று நான் எடுத்த முடிவில் மாற்றம் இல்லை. அவர்கள் 55 தொகுதி கொடுத்தால் கூட நான் அவர்கள் கூட்டணியில் சேரமாட்டேன். எனது கட்சி சென்னையில், மயிலாப்பூர், அண்ணாநகர், தி.நகர் உட்பட தமிழகத்தில் 41 தொகுதிகளில் போட்டியிட வியூகம் அமைத்து வருகிறேன்.
இதில், 30 தொகுதிகளிலாவது வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள்.கட்சியின் மூலம் நேற்றும், இன்றும் நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. இன்று மாலை நேர்காணல் முடிந்ததும், நாளை வேட்பாளர் பட்டியல் வெளியிடுவேன். நானும் தேர்தலில் போட்டியிடுகிறேன். எந்தத் தொகுதி என்று நாளை அறிவிப்பேன். எனது வேட்பாளர்கள் நாளை மறுநாளிலிருந்து வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். வரும் 22ம்தேதியிலிருந்து நான் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளேன். அம்பாசமுத்திரத்தில் பிரசாரத்தை துவங்குகி‌‌றேன்,'' என்றார்.
முடிவு செய்துள்ள41 தொகுதிகள்:மயிலாப்பூர், அண்ணாநகர், தி.நகர், சங்கரன்கோவில், வாசுதேவ நல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், திருவாடானை, ராமநாதபுரம், கடலாடி, முதுகுளத்தூர், அருப்புக்கோட்டை, சாத்தூர், விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர், கம்பம், ஆண்டிபட்டி, பல்லடம், திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு), திருமங்கலம், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம், மதுரை நகர், மதுரை (கிழக்கு), மதுரை (தெற்கு) ஆகிய 41 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் கார்த்திக் கட்சி தனித்து போட்டி:நாளை வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை:""அ.தி.மு.க., கூட்டணியில் நான் சேரவில்லை. எங்கள் கட்சி 41 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது.வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும்,'' என்று அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவரும், நடிகருகமான கார்த்திக் தெரிவித்தார்.சென்னையில் நேற்று மாலை அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் கார்த்திக் பேசும் போது,""அ.தி.மு.க., கூட்டணியில் நான் சேர்வதில்லை என்று நான் எடுத்த முடிவில் மாற்றம் இல்லை. அவர்கள் 55 தொகுதி கொடுத்தால் கூட நான் அவர்கள் கூட்டணியில் சேரமாட்டேன். எனது கட்சி சென்னையில், மயிலாப்பூர், அண்ணாநகர், தி.நகர் உட்பட தமிழகத்தில் 41 தொகுதிகளில் போட்டியிட வியூகம் அமைத்து வருகிறேன்.
இதில், 30 தொகுதிகளிலாவது வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள்.கட்சியின் மூலம் நேற்றும், இன்றும் நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. இன்று மாலை நேர்காணல் முடிந்ததும், நாளை வேட்பாளர் பட்டியல் வெளியிடுவேன். நானும் தேர்தலில் போட்டியிடுகிறேன். எந்தத் தொகுதி என்று நாளை அறிவிப்பேன். எனது வேட்பாளர்கள் நாளை மறுநாளிலிருந்து வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். வரும் 22ம்தேதியிலிருந்து நான் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளேன். அம்பாசமுத்திரத்தில் பிரசாரத்தை துவங்குகி‌‌றேன்,'' என்றார்.
முடிவு செய்துள்ள41 தொகுதிகள்:மயிலாப்பூர், அண்ணாநகர், தி.நகர், சங்கரன்கோவில், வாசுதேவ நல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், திருவாடானை, ராமநாதபுரம், கடலாடி, முதுகுளத்தூர், அருப்புக்கோட்டை, சாத்தூர், விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர், கம்பம், ஆண்டிபட்டி, பல்லடம், திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு), திருமங்கலம், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம், மதுரை நகர், மதுரை (கிழக்கு), மதுரை (தெற்கு) ஆகிய 41 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. அதேபோல புதுச்சேரி, கேரளா சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலும் நாளையே தொடங்குகிறது.

இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக சட்டசபை பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் 19ந் தேதி (நாளை) முதல் 26ந் தேதி வரை தொகுதி தேர்தல் அதிகாரி அலுவலகங்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பெற்றுக்கொள்ளப்படும்.

20ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பொதுவிடுமுறை என்பதால் அன்றைய தினம் வேட்பு மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது. வேட்பு மனு பற்றிய அறிவிப்பினை சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அதிகாரிகள் 19ந் தேதி (நாளை) வெளியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அட்டவணை:

வேட்பு மனு தாக்கல் தொடக்கம் - மார்ச் 19
வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் - மார்ச் 26
வேட்பு மனுக்கள் பரிசீலனை - மார்ச் 28
மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் - மார்ச் 30
வாக்குப் பதிவு - ஏப்ரல் 13
வாக்கு எண்ணிக்கை - மே 13

கட்டுப்பாடுகள்:

வேட்பு மனு தாக்கல் மற்றும் பிரசாரம் தொடர்பாக ஏராளமான கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

அவை பின்வருமாறு:

- வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக வரக்கூடாது.

- மனு தாக்கல் செய்யும் அறையில் வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சுயேட்சை வேட்பாளர் என்றால் பெயரை முன்மொழிய 10 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

- வேட்பு மனு தாக்கலின்போது வேட்பாளரின் கல்வித்தகுதி, சொத்து விவரம், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.

கூட்டணி அமளிகளுக்கு மத்தியில் நாளை வேட்பு மனுத் தாக்கல் தொடக்கம்

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. அதேபோல புதுச்சேரி, கேரளா சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலும் நாளையே தொடங்குகிறது.

இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக சட்டசபை பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் 19ந் தேதி (நாளை) முதல் 26ந் தேதி வரை தொகுதி தேர்தல் அதிகாரி அலுவலகங்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பெற்றுக்கொள்ளப்படும்.

20ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பொதுவிடுமுறை என்பதால் அன்றைய தினம் வேட்பு மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது. வேட்பு மனு பற்றிய அறிவிப்பினை சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அதிகாரிகள் 19ந் தேதி (நாளை) வெளியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அட்டவணை:

வேட்பு மனு தாக்கல் தொடக்கம் - மார்ச் 19
வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் - மார்ச் 26
வேட்பு மனுக்கள் பரிசீலனை - மார்ச் 28
மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் - மார்ச் 30
வாக்குப் பதிவு - ஏப்ரல் 13
வாக்கு எண்ணிக்கை - மே 13

கட்டுப்பாடுகள்:

வேட்பு மனு தாக்கல் மற்றும் பிரசாரம் தொடர்பாக ஏராளமான கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

அவை பின்வருமாறு:

- வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக வரக்கூடாது.

- மனு தாக்கல் செய்யும் அறையில் வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சுயேட்சை வேட்பாளர் என்றால் பெயரை முன்மொழிய 10 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

- வேட்பு மனு தாக்கலின்போது வேட்பாளரின் கல்வித்தகுதி, சொத்து விவரம், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.

முக நூல்

Popular Posts