background img

புதிய வரவு

Showing posts with label Singamuthu. Show all posts
Showing posts with label Singamuthu. Show all posts
சிரியோ சிரியென சிரித்துக் கொண்டிருக்கிறார் காமெடி நடிகர் சிங்கமுத்து. வடிவேலு அண்ட் கோ காமெடி கூட்டணியில் முக்கிய புள்ளியாக இருந்தவர் சிங்கமுத்து. சொத்து தகராறு காரணமாக வடிவேலு - சிங்கமுத்து இடையே மோதல் வெடித்து, கோர்ட் - கேஸ் என அலைந்து கொண்டிருக்கிறார்கள். தேர்தல் களத்தில் திமுகவுக்கு ஆதரவாக வடிவேலு களமிறங்கியதால், அவருக்கு போட்டியாக அவரது அந்தரங்க விஷயங்கள் எல்லாமும் தெரிந்த சிங்கமுத்து களமிறக்கப்பட்டார். வடிவேலு விஜயகாந்துக்கு எதிராக பேச... வடிவேலுக்கு எதிராக சிங்கமுத்து பேசினார். வடிவேலுவின் பிரசாரத்துக்கு கிடைத்த அளவு சிங்கமுத்து பிரசாரத்துக்கு ஆதரவு இல்லையென்றாலும்...‌ ஜெயித்தது என்னவோ சிங்கமுத்து பிரசாரம் செய்த அதிமுகதான்.

அதனால்தான் இப்போது சிரியோ சிரியென சிரித்துக் கொண்டிருக்கிறார் சிங்கமுத்து. தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெறுவதற்காக போயஸ் கார்டன் சென்ற சிங்கமுத்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறுகையில், தேர்தல் பிரசாரத்திற்கு புறப்படும்போது, இந்த வெற்றி எங்களுக்கு தெரியவில்லை. ஆனால், மக்களை பார்த்தபோது, அவர்களின் கண்களில் ஏக்கம் தெரிந்தது. பெரிய மாற்றத்தை மக்கள் விரும்பினார்கள். அதனால், வெளியில் சொல்ல பயந்து கொண்டே, இரட்டை இலைக்கு ஓட்டு போட்டு விட்டார்கள். இனி மக்கள் எதிர்பார்க்கும் அத்தனையும் நடக்கும், என்றார்.

வடிவேலு பிரசாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த சிங்கமுத்து, தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் ஜெயிக்க வேண்டும் என்று வடிவேலு எங்கேயும் பிரசாரம் செய்யவில்லையே. எம்.ஜி.ஆர். பாட்டை பாடிக்காட்டி ஓட்டு கேட்டு விட்டு, எம்.ஜி.ஆர். வளர்த்த கட்சிக்கு ஓட்டு போடாதே என்றார். அவரது பிரசாரம் காமெடியில் முடிந்துவிட்டது, என்றார்.

என்ன ஒரு காமெடித்தனம்! சிரி சிரி சிங்கமுத்து!

சிரியோ சிரியென சிரித்துக் கொண்டிருக்கிறார் காமெடி நடிகர் சிங்கமுத்து. வடிவேலு அண்ட் கோ காமெடி கூட்டணியில் முக்கிய புள்ளியாக இருந்தவர் சிங்கமுத்து. சொத்து தகராறு காரணமாக வடிவேலு - சிங்கமுத்து இடையே மோதல் வெடித்து, கோர்ட் - கேஸ் என அலைந்து கொண்டிருக்கிறார்கள். தேர்தல் களத்தில் திமுகவுக்கு ஆதரவாக வடிவேலு களமிறங்கியதால், அவருக்கு போட்டியாக அவரது அந்தரங்க விஷயங்கள் எல்லாமும் தெரிந்த சிங்கமுத்து களமிறக்கப்பட்டார். வடிவேலு விஜயகாந்துக்கு எதிராக பேச... வடிவேலுக்கு எதிராக சிங்கமுத்து பேசினார். வடிவேலுவின் பிரசாரத்துக்கு கிடைத்த அளவு சிங்கமுத்து பிரசாரத்துக்கு ஆதரவு இல்லையென்றாலும்...‌ ஜெயித்தது என்னவோ சிங்கமுத்து பிரசாரம் செய்த அதிமுகதான்.

அதனால்தான் இப்போது சிரியோ சிரியென சிரித்துக் கொண்டிருக்கிறார் சிங்கமுத்து. தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெறுவதற்காக போயஸ் கார்டன் சென்ற சிங்கமுத்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறுகையில், தேர்தல் பிரசாரத்திற்கு புறப்படும்போது, இந்த வெற்றி எங்களுக்கு தெரியவில்லை. ஆனால், மக்களை பார்த்தபோது, அவர்களின் கண்களில் ஏக்கம் தெரிந்தது. பெரிய மாற்றத்தை மக்கள் விரும்பினார்கள். அதனால், வெளியில் சொல்ல பயந்து கொண்டே, இரட்டை இலைக்கு ஓட்டு போட்டு விட்டார்கள். இனி மக்கள் எதிர்பார்க்கும் அத்தனையும் நடக்கும், என்றார்.

வடிவேலு பிரசாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த சிங்கமுத்து, தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் ஜெயிக்க வேண்டும் என்று வடிவேலு எங்கேயும் பிரசாரம் செய்யவில்லையே. எம்.ஜி.ஆர். பாட்டை பாடிக்காட்டி ஓட்டு கேட்டு விட்டு, எம்.ஜி.ஆர். வளர்த்த கட்சிக்கு ஓட்டு போடாதே என்றார். அவரது பிரசாரம் காமெடியில் முடிந்துவிட்டது, என்றார்.

தி.மு.க.,வின் பிரசார பீரங்கியாக மாறியுள்ள நடிகர் வடிவேலுவுக்கு எதிராகவும், போட்டியாகவும், நடிகர் சிங்கமுத்துவை களமிறக்குகிறது தே.மு.தி.க., கட்சி.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் களைகட்ட தொடங்கியுள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் நடிகர், நடிகைகளை பிரசாரம் செய்ய ஈடுபடுத்தி வருகிறது. தி.மு.க.,வுக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரத்தின் போது ஏற்கனவே விஜயகாந்தின் மீதுள்ள கோபத்தை எல்லாம் தன்னுடைய பிரசாரத்தில் காட்டி வருகிறார். திருவாரூரில் முதல்வர் கருணாநிதி பங்கேற்ற கூட்டத்தில் பிராசரத்தை ஆரம்பித்த வடிவேலு, விஜயகாந்தை மிகவும் கீழ்தரமாக பேசினார். அதுமட்டுமல்லாமல் பிரசாரத்திற்கு போகும் ஒவ்வொரு இடத்திற்கும் அவரை வசைபாடி வருகிறார். வடிவேலுவின் இந்தபேச்சு மிகவும் கீழ்த்தரமாக இருந்தாலும் அவரது பேச்சை கேட்கவும் நிறைய கூட்டம் கூடுகிறதாம்.

இந்நிலையில் வடிவேலுவுக்கு நிகராக தே.மு.தி.க.,விலும் ஒருவரை களமிறக்க அந்தகட்சி திட்டமிட்டது. அதன்படி யாரை அழைக்கலாம் என்ற நிலையில், வடிவேலுவின் மாஜி நண்பரும், தற்போது எதிரியுமான நடிகர் சிங்கமுத்துவை களமிறக்க இருக்கிறது அந்தகட்சி. இதுதொடர்பாக சிங்கமுத்துவிடம் தே.மு.தி.க., கட்சியினர் அணுகியபோது அவரும் ஓ.கே., சொல்லியிருக்கிறார். அத்துடன் சினிமாவில் வடிவேலுவை காமடியனாகத்தான் பார்த்திருக்கிறீர்கள், அவருக்கு இன்னொரு முகவும் இருக்கிறது. அந்த முகத்தை பிரசாரத்தின்போது நிச்சயம் தோலுறித்து காட்டத்தான் போகிறேன் என்று கூறிவருகிறார் சிங்கமுத்து. நாளை அல்லது நாளை மறுதினம் முதல் தனது பிரசாரத்தை துவங்க இருக்கிறார் சிங்கமுத்து.

வடிவேலுவுக்கு போட்டியாக சிங்கமுத்துவை களமிறக்கும் தே.மு.தி.க.,

தி.மு.க.,வின் பிரசார பீரங்கியாக மாறியுள்ள நடிகர் வடிவேலுவுக்கு எதிராகவும், போட்டியாகவும், நடிகர் சிங்கமுத்துவை களமிறக்குகிறது தே.மு.தி.க., கட்சி.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் களைகட்ட தொடங்கியுள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் நடிகர், நடிகைகளை பிரசாரம் செய்ய ஈடுபடுத்தி வருகிறது. தி.மு.க.,வுக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரத்தின் போது ஏற்கனவே விஜயகாந்தின் மீதுள்ள கோபத்தை எல்லாம் தன்னுடைய பிரசாரத்தில் காட்டி வருகிறார். திருவாரூரில் முதல்வர் கருணாநிதி பங்கேற்ற கூட்டத்தில் பிராசரத்தை ஆரம்பித்த வடிவேலு, விஜயகாந்தை மிகவும் கீழ்தரமாக பேசினார். அதுமட்டுமல்லாமல் பிரசாரத்திற்கு போகும் ஒவ்வொரு இடத்திற்கும் அவரை வசைபாடி வருகிறார். வடிவேலுவின் இந்தபேச்சு மிகவும் கீழ்த்தரமாக இருந்தாலும் அவரது பேச்சை கேட்கவும் நிறைய கூட்டம் கூடுகிறதாம்.

இந்நிலையில் வடிவேலுவுக்கு நிகராக தே.மு.தி.க.,விலும் ஒருவரை களமிறக்க அந்தகட்சி திட்டமிட்டது. அதன்படி யாரை அழைக்கலாம் என்ற நிலையில், வடிவேலுவின் மாஜி நண்பரும், தற்போது எதிரியுமான நடிகர் சிங்கமுத்துவை களமிறக்க இருக்கிறது அந்தகட்சி. இதுதொடர்பாக சிங்கமுத்துவிடம் தே.மு.தி.க., கட்சியினர் அணுகியபோது அவரும் ஓ.கே., சொல்லியிருக்கிறார். அத்துடன் சினிமாவில் வடிவேலுவை காமடியனாகத்தான் பார்த்திருக்கிறீர்கள், அவருக்கு இன்னொரு முகவும் இருக்கிறது. அந்த முகத்தை பிரசாரத்தின்போது நிச்சயம் தோலுறித்து காட்டத்தான் போகிறேன் என்று கூறிவருகிறார் சிங்கமுத்து. நாளை அல்லது நாளை மறுதினம் முதல் தனது பிரசாரத்தை துவங்க இருக்கிறார் சிங்கமுத்து.

முக நூல்

Popular Posts