background img

புதிய வரவு

Showing posts with label Comedy Actor. Show all posts
Showing posts with label Comedy Actor. Show all posts
ராணாவாவது காணாவாவது... என்ற பரபரப்பு கருத்தை தெரிவித்து ரஜினி ரசிகர்களின் கோபத்தை(யும்) சம்பாதித்துக் கொண்ட வடிவேலு, மருத்துவமனையில் சிகிகிச்சை பெற்று வரும் ரஜினியை பார்க்கச் சென்றிருக்கார். ரஜினியின் நெருங்கிய விஐபி நண்பர்களையே உள்ளே அனுமதிக்காத மருத்துவமனை நிர்வாகம் வடிவேலுவை மட்டும் விட்டுவிடுமா என்ன? விரட்டியடித்து விட்டார்களாம்.

திமுகவின் பிரசார பீரங்கியாக வலம் வந்தபோது சக நடிகர் என்றும் பாராமல் தேமுதிக தலைவர் விஜயகாந்தை வாய்க்கு வந்தபடி பேசியதன் விளைவாக ரஜினியின் ராணா படத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதுபற்றி கருத்து தெரிவித்த வடிவேலு, ராணாவாவது... காணாவாவது... தேர்தல் முடிவு வந்த பிறகு பாருங்கள், எத்தனை பேர் யார் காலில் வந்து விழப்போகிறார்கள் என்று... என்று தெனாவட்டாக கூறினார். வடிவேலுவின் போதாத காலம்... தேர்தல் முடிவில் திமுக வரலாறு காணாத ‌தோல்வியை தழுவியது. திமுக இறங்குமுகமாக இருந்தபோதே வடி‌வேலுவின் வீடு மீது கல் வீசப்பட்டது. மர்ம நபர்கள் வடிவேலுவின் பண்ணை தோட்டத்தை நாசப்படுத்தினர். இதனால் சென்னை செல்லாமல் மதுரையிலேயே பதுங்கியிருந்தார் வடிவேலு.

நிலைமை சற்று அமைதியானதால் சென்னை சென்ற வடிவேலு, ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினியின் உடல்நிலையை விசாரிக்கச் சென்றுள்ளார். ஏற்கனவே கொதித்துப் போயிருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். இந்த நேரத்தில் வடிவேலுவும் போய் நின்றால் என்னாகும்? ரஜினியை பார்க்க போன வடிவேலுவை துரத்தியடிக்காத குறையாக அனுப்பி வைத்தார்களாம். நல்லவேளையாக இவர் போயிருந்த நேரத்தில் ரசிகர்கள் பெருமளவு இல்லை. எப்படியோ உள்ளே சென்றவர், அண்ணனை பார்க்கணும் என்றதாகவும், பெரிய பெரிய ஆளுங்களையே உள்ள விடல. உங்களை எப்படி விட முடியும்? போயிட்டு வாங்க என்றார்களாம் மருத்துவமனை நிர்வாகத்தில்! ரஜினி குடும்பத்தை பார்த்து சில வார்த்தைகள் விசாரித்துவிட்டு வரலாம் என்று நினைத்த வடிவேலுவுக்கு அதிலும் ஏமாற்றம்தான் மிஞ்சியதாம்! என்னத்த சொல்ல...?

ரஜினியை பார்க்க போன ‌வடிவேலு விரட்டியடிப்பு!

ராணாவாவது காணாவாவது... என்ற பரபரப்பு கருத்தை தெரிவித்து ரஜினி ரசிகர்களின் கோபத்தை(யும்) சம்பாதித்துக் கொண்ட வடிவேலு, மருத்துவமனையில் சிகிகிச்சை பெற்று வரும் ரஜினியை பார்க்கச் சென்றிருக்கார். ரஜினியின் நெருங்கிய விஐபி நண்பர்களையே உள்ளே அனுமதிக்காத மருத்துவமனை நிர்வாகம் வடிவேலுவை மட்டும் விட்டுவிடுமா என்ன? விரட்டியடித்து விட்டார்களாம்.

திமுகவின் பிரசார பீரங்கியாக வலம் வந்தபோது சக நடிகர் என்றும் பாராமல் தேமுதிக தலைவர் விஜயகாந்தை வாய்க்கு வந்தபடி பேசியதன் விளைவாக ரஜினியின் ராணா படத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதுபற்றி கருத்து தெரிவித்த வடிவேலு, ராணாவாவது... காணாவாவது... தேர்தல் முடிவு வந்த பிறகு பாருங்கள், எத்தனை பேர் யார் காலில் வந்து விழப்போகிறார்கள் என்று... என்று தெனாவட்டாக கூறினார். வடிவேலுவின் போதாத காலம்... தேர்தல் முடிவில் திமுக வரலாறு காணாத ‌தோல்வியை தழுவியது. திமுக இறங்குமுகமாக இருந்தபோதே வடி‌வேலுவின் வீடு மீது கல் வீசப்பட்டது. மர்ம நபர்கள் வடிவேலுவின் பண்ணை தோட்டத்தை நாசப்படுத்தினர். இதனால் சென்னை செல்லாமல் மதுரையிலேயே பதுங்கியிருந்தார் வடிவேலு.

நிலைமை சற்று அமைதியானதால் சென்னை சென்ற வடிவேலு, ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினியின் உடல்நிலையை விசாரிக்கச் சென்றுள்ளார். ஏற்கனவே கொதித்துப் போயிருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். இந்த நேரத்தில் வடிவேலுவும் போய் நின்றால் என்னாகும்? ரஜினியை பார்க்க போன வடிவேலுவை துரத்தியடிக்காத குறையாக அனுப்பி வைத்தார்களாம். நல்லவேளையாக இவர் போயிருந்த நேரத்தில் ரசிகர்கள் பெருமளவு இல்லை. எப்படியோ உள்ளே சென்றவர், அண்ணனை பார்க்கணும் என்றதாகவும், பெரிய பெரிய ஆளுங்களையே உள்ள விடல. உங்களை எப்படி விட முடியும்? போயிட்டு வாங்க என்றார்களாம் மருத்துவமனை நிர்வாகத்தில்! ரஜினி குடும்பத்தை பார்த்து சில வார்த்தைகள் விசாரித்துவிட்டு வரலாம் என்று நினைத்த வடிவேலுவுக்கு அதிலும் ஏமாற்றம்தான் மிஞ்சியதாம்! என்னத்த சொல்ல...?

சென்னையை அடுத்த படப்பை அருகே நடிகர் வடிவேலுவின் பண்ணை வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள் மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.

படப்பையை அடுத்த புஷ்பகிரி பகுதியில் நடிகர் வடிவேலுவுக்கு மாமர தோப்புடன் கூடிய பண்ணை வீடு உள்ளது. இங்கு வேலு என்பவர் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.

வேலு தனது குடும்பத்துடன் இந்த தோப்பில் தனி வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் திங்கள்கிழமை மாலை வடிவேலுவின் பண்ணைக்கு வந்த சுமார் 30க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள், காவலாளி வேலுவிடம் வடிவேலுவின் தொலைபேசி எண்ணைக் கொடுக்குமாறு மிரட்டியுள்ளனர். அதற்கு அவர், தொலைபேசி எண் தெரியாது என்று கூறியுள்ளார்.

உடனே மர்ம நபர்கள் வேலுவுடைய செல்போனைப் பிடுங்கி அதில் வடிவேலுவின் நம்பர் இருக்கிறதா என பார்த்தனராம். அதில் நடிகர் வடிவேலுவின் எண் இல்லாததால் செல்போனை

அவரிடம் கொடுத்த மர்ம நபர்கள், வீட்டின் 6 கண்ணாடி ஜன்னல்களை அடித்து நொறுக்கினர். மேலும் வரும் சனிக்கிழமைக்குள் இந்த இடத்தை காலி செய்துவிடவேண்டும் என்றும் இல்லையென்றால் நாங்களே ஜேசிபி இயந்திரம் கொண்டு வந்து வீட்டை இடிப்போம் என்றும் மிரட்டிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து காவலாளி வேலு பண்ணை மேலாளர் சங்கருக்கு இந்தத் தகவலைத் தெரிவித்தார். மேலாளர் சங்கர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இது குறித்து மணிமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

நடிகர் வடிவேலு பண்ணை வீடு மீது தாக்குதல்

சென்னையை அடுத்த படப்பை அருகே நடிகர் வடிவேலுவின் பண்ணை வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள் மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.

படப்பையை அடுத்த புஷ்பகிரி பகுதியில் நடிகர் வடிவேலுவுக்கு மாமர தோப்புடன் கூடிய பண்ணை வீடு உள்ளது. இங்கு வேலு என்பவர் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.

வேலு தனது குடும்பத்துடன் இந்த தோப்பில் தனி வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் திங்கள்கிழமை மாலை வடிவேலுவின் பண்ணைக்கு வந்த சுமார் 30க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள், காவலாளி வேலுவிடம் வடிவேலுவின் தொலைபேசி எண்ணைக் கொடுக்குமாறு மிரட்டியுள்ளனர். அதற்கு அவர், தொலைபேசி எண் தெரியாது என்று கூறியுள்ளார்.

உடனே மர்ம நபர்கள் வேலுவுடைய செல்போனைப் பிடுங்கி அதில் வடிவேலுவின் நம்பர் இருக்கிறதா என பார்த்தனராம். அதில் நடிகர் வடிவேலுவின் எண் இல்லாததால் செல்போனை

அவரிடம் கொடுத்த மர்ம நபர்கள், வீட்டின் 6 கண்ணாடி ஜன்னல்களை அடித்து நொறுக்கினர். மேலும் வரும் சனிக்கிழமைக்குள் இந்த இடத்தை காலி செய்துவிடவேண்டும் என்றும் இல்லையென்றால் நாங்களே ஜேசிபி இயந்திரம் கொண்டு வந்து வீட்டை இடிப்போம் என்றும் மிரட்டிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து காவலாளி வேலு பண்ணை மேலாளர் சங்கருக்கு இந்தத் தகவலைத் தெரிவித்தார். மேலாளர் சங்கர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இது குறித்து மணிமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சிரியோ சிரியென சிரித்துக் கொண்டிருக்கிறார் காமெடி நடிகர் சிங்கமுத்து. வடிவேலு அண்ட் கோ காமெடி கூட்டணியில் முக்கிய புள்ளியாக இருந்தவர் சிங்கமுத்து. சொத்து தகராறு காரணமாக வடிவேலு - சிங்கமுத்து இடையே மோதல் வெடித்து, கோர்ட் - கேஸ் என அலைந்து கொண்டிருக்கிறார்கள். தேர்தல் களத்தில் திமுகவுக்கு ஆதரவாக வடிவேலு களமிறங்கியதால், அவருக்கு போட்டியாக அவரது அந்தரங்க விஷயங்கள் எல்லாமும் தெரிந்த சிங்கமுத்து களமிறக்கப்பட்டார். வடிவேலு விஜயகாந்துக்கு எதிராக பேச... வடிவேலுக்கு எதிராக சிங்கமுத்து பேசினார். வடிவேலுவின் பிரசாரத்துக்கு கிடைத்த அளவு சிங்கமுத்து பிரசாரத்துக்கு ஆதரவு இல்லையென்றாலும்...‌ ஜெயித்தது என்னவோ சிங்கமுத்து பிரசாரம் செய்த அதிமுகதான்.

அதனால்தான் இப்போது சிரியோ சிரியென சிரித்துக் கொண்டிருக்கிறார் சிங்கமுத்து. தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெறுவதற்காக போயஸ் கார்டன் சென்ற சிங்கமுத்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறுகையில், தேர்தல் பிரசாரத்திற்கு புறப்படும்போது, இந்த வெற்றி எங்களுக்கு தெரியவில்லை. ஆனால், மக்களை பார்த்தபோது, அவர்களின் கண்களில் ஏக்கம் தெரிந்தது. பெரிய மாற்றத்தை மக்கள் விரும்பினார்கள். அதனால், வெளியில் சொல்ல பயந்து கொண்டே, இரட்டை இலைக்கு ஓட்டு போட்டு விட்டார்கள். இனி மக்கள் எதிர்பார்க்கும் அத்தனையும் நடக்கும், என்றார்.

வடிவேலு பிரசாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த சிங்கமுத்து, தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் ஜெயிக்க வேண்டும் என்று வடிவேலு எங்கேயும் பிரசாரம் செய்யவில்லையே. எம்.ஜி.ஆர். பாட்டை பாடிக்காட்டி ஓட்டு கேட்டு விட்டு, எம்.ஜி.ஆர். வளர்த்த கட்சிக்கு ஓட்டு போடாதே என்றார். அவரது பிரசாரம் காமெடியில் முடிந்துவிட்டது, என்றார்.

என்ன ஒரு காமெடித்தனம்! சிரி சிரி சிங்கமுத்து!

சிரியோ சிரியென சிரித்துக் கொண்டிருக்கிறார் காமெடி நடிகர் சிங்கமுத்து. வடிவேலு அண்ட் கோ காமெடி கூட்டணியில் முக்கிய புள்ளியாக இருந்தவர் சிங்கமுத்து. சொத்து தகராறு காரணமாக வடிவேலு - சிங்கமுத்து இடையே மோதல் வெடித்து, கோர்ட் - கேஸ் என அலைந்து கொண்டிருக்கிறார்கள். தேர்தல் களத்தில் திமுகவுக்கு ஆதரவாக வடிவேலு களமிறங்கியதால், அவருக்கு போட்டியாக அவரது அந்தரங்க விஷயங்கள் எல்லாமும் தெரிந்த சிங்கமுத்து களமிறக்கப்பட்டார். வடிவேலு விஜயகாந்துக்கு எதிராக பேச... வடிவேலுக்கு எதிராக சிங்கமுத்து பேசினார். வடிவேலுவின் பிரசாரத்துக்கு கிடைத்த அளவு சிங்கமுத்து பிரசாரத்துக்கு ஆதரவு இல்லையென்றாலும்...‌ ஜெயித்தது என்னவோ சிங்கமுத்து பிரசாரம் செய்த அதிமுகதான்.

அதனால்தான் இப்போது சிரியோ சிரியென சிரித்துக் கொண்டிருக்கிறார் சிங்கமுத்து. தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெறுவதற்காக போயஸ் கார்டன் சென்ற சிங்கமுத்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறுகையில், தேர்தல் பிரசாரத்திற்கு புறப்படும்போது, இந்த வெற்றி எங்களுக்கு தெரியவில்லை. ஆனால், மக்களை பார்த்தபோது, அவர்களின் கண்களில் ஏக்கம் தெரிந்தது. பெரிய மாற்றத்தை மக்கள் விரும்பினார்கள். அதனால், வெளியில் சொல்ல பயந்து கொண்டே, இரட்டை இலைக்கு ஓட்டு போட்டு விட்டார்கள். இனி மக்கள் எதிர்பார்க்கும் அத்தனையும் நடக்கும், என்றார்.

வடிவேலு பிரசாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த சிங்கமுத்து, தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் ஜெயிக்க வேண்டும் என்று வடிவேலு எங்கேயும் பிரசாரம் செய்யவில்லையே. எம்.ஜி.ஆர். பாட்டை பாடிக்காட்டி ஓட்டு கேட்டு விட்டு, எம்.ஜி.ஆர். வளர்த்த கட்சிக்கு ஓட்டு போடாதே என்றார். அவரது பிரசாரம் காமெடியில் முடிந்துவிட்டது, என்றார்.

சட்டசபை தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து நடிகர் வடிவேலு அதிர்ச்சி அடைந்துள்ளார். அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கும் வடிவேலு வீட்டில் கல் வீசப்பட்டது. இதையடுத்து அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட வடிவேலு, தேமுதிக தலைவர் விஜயகாந்தை குடிகாரன் என்று பேசி கடுமையாக தாக்கினார். வடிவேலுவின் காமெடியான பேச்சை கேட்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். வந்தவர்கள் எல்லாம் திமுக கூட்டணிக்குத்தான் ஓட்டு போடுவார்கள் என்று நினைத்த வடிவேலு, தனது பேச்சில் மேலும் மேலும் கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தத் தொடங்கினார். தேர்தல் பிரசாரத்தை முடித்த பின்னர் அளித்த பேட்டியில் கூட, செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் வரவேற்பு அதிக அளவில் இருந்ததாகவும், திமுக மாபெரும் வெற்றி பெறும் என்றும் கூறினார்.

இப்போது திமுக அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளது. இது யாரை பாதிக்கிறதோ இல்லையோ... வடிவேலுவை நிச்சயம் பாதிக்கும் என்கிறார்கள் கோடம்பாக்கத்து முக்கிய புள்ளிகள். சக நடிகர் என்று கூட பாராமல் ஏக வசனத்தில் பேசி விஜயகாந்தை விமர்சித்ததால் சில சினிமா வாய்ப்புகளை இழந்திருக்கும் வடிவேலுவின் கதி இனி என்னவாக இருக்கும்? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. ‌அதிமுக ஆட்சியை பிடிக்கும் நிலைமையை நெருங்கியதுமே, சென்னை சாலிகிராமத்தில் உள்ள வடிவேலு வீடு முன் கல் மற்றும் உருட்டுக்கட்டைகளுடன் திரண்ட தேமுதிகவினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அங்கு போலீசார் விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் முடிவைத் தொடர்ந்து வடிவேலுவின் அடுத்த ஸ்டெப் என்னவாக இருக்கும்? என்ற ‌கேள்வி எழுந்துள்ள நிலையில் இருவேறு விதமாக பேசப்பட்டு வருகிறது. ஒன்று போயஸ் கார்டன் சென்று சமாதானம் ஆவது; இன்னொன்று திமுகவிலேயே ஐக்கியமாவது. இந்த இரண்டில் ஒரு முடிவைத்தான் வடிவேலு எடுக்கக் கூடும் என கோடம்பாக்கத்தில் பேச்சு எழுந்துள்ளது.

இதற்கிடையில் மதுரையில் மத்திய அமைச்சர் அழகிரியின் வீட்டுக்கு சென்ற வடிவேலு, அழகிரியுடன் சிறிது நேரம் பேசினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. அதேநேரம் வடிவேலுவின் வீட்டுக்கு விஜயகாந்த் ரசிகர்களால் தாக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்பதால் சென்னை மற்றும் மதுரையில் உள்ள அவரது வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாப்புக்கு வெச்சிட்டாங்களே ஆப்பு!

இனி போயஸ் கார்டனா? அறிவாலயமா? குழப்பத்தில் வடிவேலு!

சட்டசபை தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து நடிகர் வடிவேலு அதிர்ச்சி அடைந்துள்ளார். அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கும் வடிவேலு வீட்டில் கல் வீசப்பட்டது. இதையடுத்து அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட வடிவேலு, தேமுதிக தலைவர் விஜயகாந்தை குடிகாரன் என்று பேசி கடுமையாக தாக்கினார். வடிவேலுவின் காமெடியான பேச்சை கேட்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். வந்தவர்கள் எல்லாம் திமுக கூட்டணிக்குத்தான் ஓட்டு போடுவார்கள் என்று நினைத்த வடிவேலு, தனது பேச்சில் மேலும் மேலும் கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தத் தொடங்கினார். தேர்தல் பிரசாரத்தை முடித்த பின்னர் அளித்த பேட்டியில் கூட, செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் வரவேற்பு அதிக அளவில் இருந்ததாகவும், திமுக மாபெரும் வெற்றி பெறும் என்றும் கூறினார்.

இப்போது திமுக அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளது. இது யாரை பாதிக்கிறதோ இல்லையோ... வடிவேலுவை நிச்சயம் பாதிக்கும் என்கிறார்கள் கோடம்பாக்கத்து முக்கிய புள்ளிகள். சக நடிகர் என்று கூட பாராமல் ஏக வசனத்தில் பேசி விஜயகாந்தை விமர்சித்ததால் சில சினிமா வாய்ப்புகளை இழந்திருக்கும் வடிவேலுவின் கதி இனி என்னவாக இருக்கும்? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. ‌அதிமுக ஆட்சியை பிடிக்கும் நிலைமையை நெருங்கியதுமே, சென்னை சாலிகிராமத்தில் உள்ள வடிவேலு வீடு முன் கல் மற்றும் உருட்டுக்கட்டைகளுடன் திரண்ட தேமுதிகவினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அங்கு போலீசார் விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் முடிவைத் தொடர்ந்து வடிவேலுவின் அடுத்த ஸ்டெப் என்னவாக இருக்கும்? என்ற ‌கேள்வி எழுந்துள்ள நிலையில் இருவேறு விதமாக பேசப்பட்டு வருகிறது. ஒன்று போயஸ் கார்டன் சென்று சமாதானம் ஆவது; இன்னொன்று திமுகவிலேயே ஐக்கியமாவது. இந்த இரண்டில் ஒரு முடிவைத்தான் வடிவேலு எடுக்கக் கூடும் என கோடம்பாக்கத்தில் பேச்சு எழுந்துள்ளது.

இதற்கிடையில் மதுரையில் மத்திய அமைச்சர் அழகிரியின் வீட்டுக்கு சென்ற வடிவேலு, அழகிரியுடன் சிறிது நேரம் பேசினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. அதேநேரம் வடிவேலுவின் வீட்டுக்கு விஜயகாந்த் ரசிகர்களால் தாக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்பதால் சென்னை மற்றும் மதுரையில் உள்ள அவரது வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாப்புக்கு வெச்சிட்டாங்களே ஆப்பு!

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திருவாரூர் தொகுதியில் முதலமைச்சர் கருணாநிதி போட்டியிடுகிறார்.
தி.மு.க. கூட்டணி தேர்தல் பிரச்சாரத்தை முதலமைச்சர் கருணாநிதி திருவாரூரில் இன்று மாலை தொடங்கி வைக்கிறார்.
இதற்காக திருவாரூர் தெற்கு வீதியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்காக முதலமைச்சர் கருணாநிதி இன்று (புதன்கிழமை) காலை 6.30 மணிக்கு சென்னையிலிருந்து கார் மூலம் புறப்பட்டு புதுச்சேரி, கடலூர் வழியாக திருவாரூர் சென்றார்.
மதியம் 2.30 மணி அளவில் திருவாரூர் சென்றடைகிறார். அங்கு அவர் மதிய உணவு சாப்பிட்டு விட்டு, சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.
மாலை 6 மணிக்கு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் தொடங்குகிறது. அதில் கருணாநிதி கலந்து கொண்டு திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்ட தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசுகிறார்.
இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, டாக்டர் ராமதாஸ், தொல்.திருமாவளவன், கி.வீரமணி, ஆர்.எம்.வீரப்பன், கே.எம்.காதர்மொய்தீன், பெஸ்ட் ராமசாமி, ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையார், என்.ஆர்.தனபாலன், பேராயர் எஸ்றா சற்குணம், கு.செல்லமுத்து, எல்.சந்தானம், பொன்.குமார், எம்.பசீர் அகமது, வலசை ரவிச்சந்திரன், லியாகத் அலிகான் ஆகியோரும் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் நடிகர் வடிவேலு கலந்துகொண்டு திமுகவுக்கு ஆதரவாக பேசுகிறார். அதுமட்டுல்லாமல் அவர் அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்து பேசவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

கலைஞர் தலைமையில் பொதுக்கூட்டம் : விஜயகாந்தை விளாசும் வடிவேலு

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திருவாரூர் தொகுதியில் முதலமைச்சர் கருணாநிதி போட்டியிடுகிறார்.
தி.மு.க. கூட்டணி தேர்தல் பிரச்சாரத்தை முதலமைச்சர் கருணாநிதி திருவாரூரில் இன்று மாலை தொடங்கி வைக்கிறார்.
இதற்காக திருவாரூர் தெற்கு வீதியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்காக முதலமைச்சர் கருணாநிதி இன்று (புதன்கிழமை) காலை 6.30 மணிக்கு சென்னையிலிருந்து கார் மூலம் புறப்பட்டு புதுச்சேரி, கடலூர் வழியாக திருவாரூர் சென்றார்.
மதியம் 2.30 மணி அளவில் திருவாரூர் சென்றடைகிறார். அங்கு அவர் மதிய உணவு சாப்பிட்டு விட்டு, சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.
மாலை 6 மணிக்கு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் தொடங்குகிறது. அதில் கருணாநிதி கலந்து கொண்டு திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்ட தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசுகிறார்.
இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, டாக்டர் ராமதாஸ், தொல்.திருமாவளவன், கி.வீரமணி, ஆர்.எம்.வீரப்பன், கே.எம்.காதர்மொய்தீன், பெஸ்ட் ராமசாமி, ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையார், என்.ஆர்.தனபாலன், பேராயர் எஸ்றா சற்குணம், கு.செல்லமுத்து, எல்.சந்தானம், பொன்.குமார், எம்.பசீர் அகமது, வலசை ரவிச்சந்திரன், லியாகத் அலிகான் ஆகியோரும் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் நடிகர் வடிவேலு கலந்துகொண்டு திமுகவுக்கு ஆதரவாக பேசுகிறார். அதுமட்டுல்லாமல் அவர் அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்து பேசவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

தன்னை இன்னொரு எம்ஜிஆர் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவரை அதிமுக ஏற்றுக்‌ கொள்கிறதா? என்று விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் இணைந்திருப்பது பற்றி காமெடி நடிகர் வடிவேலு கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த சிலபல மாதங்களுக்கு முன்பு, நடிகர் வடிவேலுவுக்கும், தேமுதிகவை சேர்ந்த பிரமுகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வடிவேலுவின் வீடு மீது கல்வீச்சு தாக்குதலும் நடந்தது. இதையடுத்து ஆவேசமடைந்த வடிவேலு ‌போலீசில் விஜயகாந்த் மீது புகார் அளித்ததுடன், அடுத்த தேர்தலில் விஜயகாந்த் எந்த தொகுதியில் நின்றாலும், அவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெறுவேன், என்று கூறியிருந்தார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், விஜயகாந்த் அதிமுகவுடனான கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனையில் இருக்கிறார். விஜயகாந்த் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று சொன்ன நடிகர் வடிவேலு என்ன செய்யப்போகிறார்? அவர் விஜயகாந்தை எதிர்த்து போட்டியிடுவாரா? என்பதையும் பரபரப்பான அரசியலுக்கிடையே சிலர் எதிர்பாத்து காத்திருக்கிறார்கள்.

இதுபற்றி வடிவேலுவிடம் கேட்டால் தீர்க்கமான முடிவை தெரிவிக்காமல் மழுப்பி விட்டார். அவர் அளித்துள்ள பேட்டியில், நான், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். எம்.ஜி.ஆரும், கலைஞரும் ஒரே கட்சியில் இருந்தவர்கள். எம்.ஜி.ஆரின் கொள்கைகள் எனக்கு பிடிக்கும். கலைஞரின் அறிவும், ஆற்றலும், அயராத உழைப்பும் எனக்கு பிடிக்கும். அவருடைய நிர்வாக திறன் பிடிக்கும். என்றாலும், நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நான் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். இன்னொரு எம்.ஜி.ஆர். என்று சொல்லிக்கொள்ளும் ஒருவரை அ.தி.மு.க. ஏற்றுக்கொள்கிறதா? அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? இந்த கேள்விக்கு விடை தெரிந்தபின், விஜயகாந்தை எதிர்த்து நான் தேர்தலில் போட்டியிடுவேனா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கிறேன், என்று கூறியிருக்கிறார் வடிவேலு.

வடிவேலு அரசியல் களம் இறங்குவாரா? விஜயகாந்தை எதிர்த்து போட்டியிடுவாரா? அப்படி போட்டியிட்டால் எவ்வளவு ஓட்டுக்கள் கிடைக்கும்? அல்லது விஜயகாந்துக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபடுவாரா? என்பன போன்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், தி.மு.க. வட்டாரம் வடிவேலுவை வளைத்துப் போடும் திட்டத்தையும் போட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

வடிவேலு தேர்தலில் போட்டியிடுவது அவசியமா? அல்லது தேவையில்லாத ஒன்றா? அப்படி போட்டியிட்டால் என்னவாகும் அவரது நிலை? என்பது பற்றிய கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் வாசகர்களே..!

தேர்தலில் வடிவேலு போட்டி? விஜயகாந்துக்கு எதிராக களமிறங்க திட்டம்!

தன்னை இன்னொரு எம்ஜிஆர் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவரை அதிமுக ஏற்றுக்‌ கொள்கிறதா? என்று விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் இணைந்திருப்பது பற்றி காமெடி நடிகர் வடிவேலு கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த சிலபல மாதங்களுக்கு முன்பு, நடிகர் வடிவேலுவுக்கும், தேமுதிகவை சேர்ந்த பிரமுகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வடிவேலுவின் வீடு மீது கல்வீச்சு தாக்குதலும் நடந்தது. இதையடுத்து ஆவேசமடைந்த வடிவேலு ‌போலீசில் விஜயகாந்த் மீது புகார் அளித்ததுடன், அடுத்த தேர்தலில் விஜயகாந்த் எந்த தொகுதியில் நின்றாலும், அவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெறுவேன், என்று கூறியிருந்தார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், விஜயகாந்த் அதிமுகவுடனான கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனையில் இருக்கிறார். விஜயகாந்த் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று சொன்ன நடிகர் வடிவேலு என்ன செய்யப்போகிறார்? அவர் விஜயகாந்தை எதிர்த்து போட்டியிடுவாரா? என்பதையும் பரபரப்பான அரசியலுக்கிடையே சிலர் எதிர்பாத்து காத்திருக்கிறார்கள்.

இதுபற்றி வடிவேலுவிடம் கேட்டால் தீர்க்கமான முடிவை தெரிவிக்காமல் மழுப்பி விட்டார். அவர் அளித்துள்ள பேட்டியில், நான், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். எம்.ஜி.ஆரும், கலைஞரும் ஒரே கட்சியில் இருந்தவர்கள். எம்.ஜி.ஆரின் கொள்கைகள் எனக்கு பிடிக்கும். கலைஞரின் அறிவும், ஆற்றலும், அயராத உழைப்பும் எனக்கு பிடிக்கும். அவருடைய நிர்வாக திறன் பிடிக்கும். என்றாலும், நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நான் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். இன்னொரு எம்.ஜி.ஆர். என்று சொல்லிக்கொள்ளும் ஒருவரை அ.தி.மு.க. ஏற்றுக்கொள்கிறதா? அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? இந்த கேள்விக்கு விடை தெரிந்தபின், விஜயகாந்தை எதிர்த்து நான் தேர்தலில் போட்டியிடுவேனா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கிறேன், என்று கூறியிருக்கிறார் வடிவேலு.

வடிவேலு அரசியல் களம் இறங்குவாரா? விஜயகாந்தை எதிர்த்து போட்டியிடுவாரா? அப்படி போட்டியிட்டால் எவ்வளவு ஓட்டுக்கள் கிடைக்கும்? அல்லது விஜயகாந்துக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபடுவாரா? என்பன போன்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், தி.மு.க. வட்டாரம் வடிவேலுவை வளைத்துப் போடும் திட்டத்தையும் போட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

வடிவேலு தேர்தலில் போட்டியிடுவது அவசியமா? அல்லது தேவையில்லாத ஒன்றா? அப்படி போட்டியிட்டால் என்னவாகும் அவரது நிலை? என்பது பற்றிய கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் வாசகர்களே..!

காமெடி நடிகர் சந்தானம், சர்ச்சைக்குரிய சாமியாரான நித்தியானந்தாவை நேரில் சந்தித்து பேசினார். நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாதன் மூலம் சர்ச்சைக்குரிய சாமியார்களின் பட்டியலில் இணைந்தவர் நித்தியானந்தா. ரஞ்சிதா தனது பக்தை என்று கூறி வரும் நித்தி, அவர் மீதான புகார்களை மறுத்து வருகிறார். பெரும் தொகை கேட்டு அரசியல்வாதிகள் சிலர் தன்னை மிரட்டியதாகவும், அதற்கு அடிபணியாததால்தான் அதுபோன்ற போலீ வீடியோ ஒன்றை வெளியிட்டு என்னையும், என் பக்தர்களையும், ஆசிர‌மத்தையும் களங்கப்படுத்தி விட்டனர் என்றும் பேட்டியில் கூறியிருந்தார்.

இதற்கிடையில் நித்தியானந்தாவை தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் அவ்வ‌ப்போது சந்தித்து வருகிறார்கள். அந்த வரிசையில் புதிதாக நித்தியானந்தாவை சந்தித்து ஆசி பெற்றிருப்பவர் காமெடி நடிகர் சந்தானம். தமிழ் சினிமா காமெடியர்களில் வேகமாக வளர்ந்து வரும் காமெடி நடிகர் சந்தானம், பெங்களூருவில் நித்தியானந்தா ஆசிரமத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்து பேசினார். முப்பொழுதும் உன் கற்பனைகள் என்ற படத்தின் சூட்டிங் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக ‌அங்கு சென்றிருந்த சந்தானம், சாமியார் நித்தியானந்தாவை நேரில் சந்திக்க விரும்பினார். இதையடுத்து ஆசிரமத்திற்கு சென்று சந்தித்து பேசியிருக்கிறார். சந்தானத்துடன் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட்டும் சென்றிருந்தார்.

நித்தியானந்தாவை சந்தித்தார் சந்தானம்

காமெடி நடிகர் சந்தானம், சர்ச்சைக்குரிய சாமியாரான நித்தியானந்தாவை நேரில் சந்தித்து பேசினார். நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாதன் மூலம் சர்ச்சைக்குரிய சாமியார்களின் பட்டியலில் இணைந்தவர் நித்தியானந்தா. ரஞ்சிதா தனது பக்தை என்று கூறி வரும் நித்தி, அவர் மீதான புகார்களை மறுத்து வருகிறார். பெரும் தொகை கேட்டு அரசியல்வாதிகள் சிலர் தன்னை மிரட்டியதாகவும், அதற்கு அடிபணியாததால்தான் அதுபோன்ற போலீ வீடியோ ஒன்றை வெளியிட்டு என்னையும், என் பக்தர்களையும், ஆசிர‌மத்தையும் களங்கப்படுத்தி விட்டனர் என்றும் பேட்டியில் கூறியிருந்தார்.

இதற்கிடையில் நித்தியானந்தாவை தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் அவ்வ‌ப்போது சந்தித்து வருகிறார்கள். அந்த வரிசையில் புதிதாக நித்தியானந்தாவை சந்தித்து ஆசி பெற்றிருப்பவர் காமெடி நடிகர் சந்தானம். தமிழ் சினிமா காமெடியர்களில் வேகமாக வளர்ந்து வரும் காமெடி நடிகர் சந்தானம், பெங்களூருவில் நித்தியானந்தா ஆசிரமத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்து பேசினார். முப்பொழுதும் உன் கற்பனைகள் என்ற படத்தின் சூட்டிங் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக ‌அங்கு சென்றிருந்த சந்தானம், சாமியார் நித்தியானந்தாவை நேரில் சந்திக்க விரும்பினார். இதையடுத்து ஆசிரமத்திற்கு சென்று சந்தித்து பேசியிருக்கிறார். சந்தானத்துடன் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட்டும் சென்றிருந்தார்.

முக நூல்

Popular Posts