background img

புதிய வரவு

Showing posts with label Vadivelu. Show all posts
Showing posts with label Vadivelu. Show all posts
தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை மன்னராக இருந்தார் வடிவேலு. ஆனால் யார் கண் பட்டதோ அரசியலில் குதித்ததன்மூலம் தனது மார்கெட்டை இழந்தார். இன்னோரு பக்கம் சந்தானத்தின் விஸ்வரூப வளர்ச்சி, வடிவேலுவின் இடத்தை நிரப்பியது. இதனால் பிஸியாக இருந்த வடிவேலு கேட்பாரற்று கிடந்தார்.
இதனால் மீண்டும் ஒரு அதிரடியான நுழைவின் மூலம் தனது இடத்தை பிடிக்க முடிவு செய்திருக்கும் வடிவேலு, இதற்காக இயக்குனர் சிம்புதேவனைச் சரணடைந்தார். சிம்புதேவனும் ‘மாரீசன்’ படத்துக்கு உடனடியாக கால்ஷீட் கொடுக்காததால், வெறுத்துப் போய் இருந்த சூழ்நிலையில் வடிவேலு வலிய வந்து நின்றதில் அவரை அப்படியே கப்பென்று பிடித்துக் கொண்டாராம்! மார்கெட் இழந்த நடிகர். மார்கெட் இழந்த இயக்குனர் இரண்டுபேரும் முதல் முறையாக ஒன்றாக சேர்ந்து இருக்கிறார்கள்.
சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு திரையுலகில் இருந்து வடிவேலு மறைந்து வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து , “நான் ஓடி ஒளியவில்லை. மீண்டும் சினிமாவில் நடிப்பேன், அதுவும் ஹீரோவாகத்தான் வருவேன்” என்று கூறிவருகிறார் வைப்புயல். இந்நிலையில்தான் ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகத்தை மிகபிரமாண்டமாக உருவாக்குவதை விட குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கலாம் என்று ஒருமனதாக முடிவு இருப்பதாகத் தகவல் கிடைக்கிறது. இந்த இரண்டாம் பாகத்தில் வடிவேலுவை திடீர் முதலமைச்சராக காட்டுவதென்று முடிவு செய்து கதை விவாதம் நடத்தி முடித்திருகிறாராம் சிம்புதேவன். இதனடிப்படையில் வடிவேலு தமிழக முதல்வரானால் என்ன நடக்கும் என்பதை இரண்டரை மணிநேர திரைக்கதையாக்கி, முதல் பாகத்தை தயாரித்த ஷங்கரிடமே சொல்லியிருகிறார் சிம்பு!
கதைக்கேட்டு மூக்கில் விரல்வைத்த ஷங்கர் “ இதுதாங்க ரியல் ஸ்ஃபூப்” என்றாராம். அத்துடன் புலிகேசியின் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்க ஷங்கரே ஒப்புகொண்டிருகிறார் என்கிறார்கள். ஜூன் முதல்வாரம் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் சிம்புதேன், தேன்நிலவு முடிந்ததும், புலிக்கேசி இரண்டாம் பாகத்துக்கான வேலைகளில் சுறுசுறுப்பாக இறங்க இருக்கிறராம் எது எப்படியோ! இந்த இரண்டாவது பாகத்தில் கேப்டன் நடிகரை கைது செய்து, தனது ஆட்சியில் படாத பாடு படுத்துவதுபோல வடிவேலு காட்சி அமைக்கச் சொல்லுவர் என்பது மட்டும் உறுதி!

வடிவேலு இப்போ அடுத்த C.M?

தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை மன்னராக இருந்தார் வடிவேலு. ஆனால் யார் கண் பட்டதோ அரசியலில் குதித்ததன்மூலம் தனது மார்கெட்டை இழந்தார். இன்னோரு பக்கம் சந்தானத்தின் விஸ்வரூப வளர்ச்சி, வடிவேலுவின் இடத்தை நிரப்பியது. இதனால் பிஸியாக இருந்த வடிவேலு கேட்பாரற்று கிடந்தார்.
இதனால் மீண்டும் ஒரு அதிரடியான நுழைவின் மூலம் தனது இடத்தை பிடிக்க முடிவு செய்திருக்கும் வடிவேலு, இதற்காக இயக்குனர் சிம்புதேவனைச் சரணடைந்தார். சிம்புதேவனும் ‘மாரீசன்’ படத்துக்கு உடனடியாக கால்ஷீட் கொடுக்காததால், வெறுத்துப் போய் இருந்த சூழ்நிலையில் வடிவேலு வலிய வந்து நின்றதில் அவரை அப்படியே கப்பென்று பிடித்துக் கொண்டாராம்! மார்கெட் இழந்த நடிகர். மார்கெட் இழந்த இயக்குனர் இரண்டுபேரும் முதல் முறையாக ஒன்றாக சேர்ந்து இருக்கிறார்கள்.
சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு திரையுலகில் இருந்து வடிவேலு மறைந்து வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து , “நான் ஓடி ஒளியவில்லை. மீண்டும் சினிமாவில் நடிப்பேன், அதுவும் ஹீரோவாகத்தான் வருவேன்” என்று கூறிவருகிறார் வைப்புயல். இந்நிலையில்தான் ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகத்தை மிகபிரமாண்டமாக உருவாக்குவதை விட குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கலாம் என்று ஒருமனதாக முடிவு இருப்பதாகத் தகவல் கிடைக்கிறது. இந்த இரண்டாம் பாகத்தில் வடிவேலுவை திடீர் முதலமைச்சராக காட்டுவதென்று முடிவு செய்து கதை விவாதம் நடத்தி முடித்திருகிறாராம் சிம்புதேவன். இதனடிப்படையில் வடிவேலு தமிழக முதல்வரானால் என்ன நடக்கும் என்பதை இரண்டரை மணிநேர திரைக்கதையாக்கி, முதல் பாகத்தை தயாரித்த ஷங்கரிடமே சொல்லியிருகிறார் சிம்பு!
கதைக்கேட்டு மூக்கில் விரல்வைத்த ஷங்கர் “ இதுதாங்க ரியல் ஸ்ஃபூப்” என்றாராம். அத்துடன் புலிகேசியின் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்க ஷங்கரே ஒப்புகொண்டிருகிறார் என்கிறார்கள். ஜூன் முதல்வாரம் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் சிம்புதேன், தேன்நிலவு முடிந்ததும், புலிக்கேசி இரண்டாம் பாகத்துக்கான வேலைகளில் சுறுசுறுப்பாக இறங்க இருக்கிறராம் எது எப்படியோ! இந்த இரண்டாவது பாகத்தில் கேப்டன் நடிகரை கைது செய்து, தனது ஆட்சியில் படாத பாடு படுத்துவதுபோல வடிவேலு காட்சி அமைக்கச் சொல்லுவர் என்பது மட்டும் உறுதி!

ராணாவாவது காணாவாவது... என்ற பரபரப்பு கருத்தை தெரிவித்து ரஜினி ரசிகர்களின் கோபத்தை(யும்) சம்பாதித்துக் கொண்ட வடிவேலு, மருத்துவமனையில் சிகிகிச்சை பெற்று வரும் ரஜினியை பார்க்கச் சென்றிருக்கார். ரஜினியின் நெருங்கிய விஐபி நண்பர்களையே உள்ளே அனுமதிக்காத மருத்துவமனை நிர்வாகம் வடிவேலுவை மட்டும் விட்டுவிடுமா என்ன? விரட்டியடித்து விட்டார்களாம்.

திமுகவின் பிரசார பீரங்கியாக வலம் வந்தபோது சக நடிகர் என்றும் பாராமல் தேமுதிக தலைவர் விஜயகாந்தை வாய்க்கு வந்தபடி பேசியதன் விளைவாக ரஜினியின் ராணா படத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதுபற்றி கருத்து தெரிவித்த வடிவேலு, ராணாவாவது... காணாவாவது... தேர்தல் முடிவு வந்த பிறகு பாருங்கள், எத்தனை பேர் யார் காலில் வந்து விழப்போகிறார்கள் என்று... என்று தெனாவட்டாக கூறினார். வடிவேலுவின் போதாத காலம்... தேர்தல் முடிவில் திமுக வரலாறு காணாத ‌தோல்வியை தழுவியது. திமுக இறங்குமுகமாக இருந்தபோதே வடி‌வேலுவின் வீடு மீது கல் வீசப்பட்டது. மர்ம நபர்கள் வடிவேலுவின் பண்ணை தோட்டத்தை நாசப்படுத்தினர். இதனால் சென்னை செல்லாமல் மதுரையிலேயே பதுங்கியிருந்தார் வடிவேலு.

நிலைமை சற்று அமைதியானதால் சென்னை சென்ற வடிவேலு, ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினியின் உடல்நிலையை விசாரிக்கச் சென்றுள்ளார். ஏற்கனவே கொதித்துப் போயிருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். இந்த நேரத்தில் வடிவேலுவும் போய் நின்றால் என்னாகும்? ரஜினியை பார்க்க போன வடிவேலுவை துரத்தியடிக்காத குறையாக அனுப்பி வைத்தார்களாம். நல்லவேளையாக இவர் போயிருந்த நேரத்தில் ரசிகர்கள் பெருமளவு இல்லை. எப்படியோ உள்ளே சென்றவர், அண்ணனை பார்க்கணும் என்றதாகவும், பெரிய பெரிய ஆளுங்களையே உள்ள விடல. உங்களை எப்படி விட முடியும்? போயிட்டு வாங்க என்றார்களாம் மருத்துவமனை நிர்வாகத்தில்! ரஜினி குடும்பத்தை பார்த்து சில வார்த்தைகள் விசாரித்துவிட்டு வரலாம் என்று நினைத்த வடிவேலுவுக்கு அதிலும் ஏமாற்றம்தான் மிஞ்சியதாம்! என்னத்த சொல்ல...?

ரஜினியை பார்க்க போன ‌வடிவேலு விரட்டியடிப்பு!

ராணாவாவது காணாவாவது... என்ற பரபரப்பு கருத்தை தெரிவித்து ரஜினி ரசிகர்களின் கோபத்தை(யும்) சம்பாதித்துக் கொண்ட வடிவேலு, மருத்துவமனையில் சிகிகிச்சை பெற்று வரும் ரஜினியை பார்க்கச் சென்றிருக்கார். ரஜினியின் நெருங்கிய விஐபி நண்பர்களையே உள்ளே அனுமதிக்காத மருத்துவமனை நிர்வாகம் வடிவேலுவை மட்டும் விட்டுவிடுமா என்ன? விரட்டியடித்து விட்டார்களாம்.

திமுகவின் பிரசார பீரங்கியாக வலம் வந்தபோது சக நடிகர் என்றும் பாராமல் தேமுதிக தலைவர் விஜயகாந்தை வாய்க்கு வந்தபடி பேசியதன் விளைவாக ரஜினியின் ராணா படத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதுபற்றி கருத்து தெரிவித்த வடிவேலு, ராணாவாவது... காணாவாவது... தேர்தல் முடிவு வந்த பிறகு பாருங்கள், எத்தனை பேர் யார் காலில் வந்து விழப்போகிறார்கள் என்று... என்று தெனாவட்டாக கூறினார். வடிவேலுவின் போதாத காலம்... தேர்தல் முடிவில் திமுக வரலாறு காணாத ‌தோல்வியை தழுவியது. திமுக இறங்குமுகமாக இருந்தபோதே வடி‌வேலுவின் வீடு மீது கல் வீசப்பட்டது. மர்ம நபர்கள் வடிவேலுவின் பண்ணை தோட்டத்தை நாசப்படுத்தினர். இதனால் சென்னை செல்லாமல் மதுரையிலேயே பதுங்கியிருந்தார் வடிவேலு.

நிலைமை சற்று அமைதியானதால் சென்னை சென்ற வடிவேலு, ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினியின் உடல்நிலையை விசாரிக்கச் சென்றுள்ளார். ஏற்கனவே கொதித்துப் போயிருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். இந்த நேரத்தில் வடிவேலுவும் போய் நின்றால் என்னாகும்? ரஜினியை பார்க்க போன வடிவேலுவை துரத்தியடிக்காத குறையாக அனுப்பி வைத்தார்களாம். நல்லவேளையாக இவர் போயிருந்த நேரத்தில் ரசிகர்கள் பெருமளவு இல்லை. எப்படியோ உள்ளே சென்றவர், அண்ணனை பார்க்கணும் என்றதாகவும், பெரிய பெரிய ஆளுங்களையே உள்ள விடல. உங்களை எப்படி விட முடியும்? போயிட்டு வாங்க என்றார்களாம் மருத்துவமனை நிர்வாகத்தில்! ரஜினி குடும்பத்தை பார்த்து சில வார்த்தைகள் விசாரித்துவிட்டு வரலாம் என்று நினைத்த வடிவேலுவுக்கு அதிலும் ஏமாற்றம்தான் மிஞ்சியதாம்! என்னத்த சொல்ல...?

சென்னையை அடுத்த படப்பை அருகே நடிகர் வடிவேலுவின் பண்ணை வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள் மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.

படப்பையை அடுத்த புஷ்பகிரி பகுதியில் நடிகர் வடிவேலுவுக்கு மாமர தோப்புடன் கூடிய பண்ணை வீடு உள்ளது. இங்கு வேலு என்பவர் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.

வேலு தனது குடும்பத்துடன் இந்த தோப்பில் தனி வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் திங்கள்கிழமை மாலை வடிவேலுவின் பண்ணைக்கு வந்த சுமார் 30க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள், காவலாளி வேலுவிடம் வடிவேலுவின் தொலைபேசி எண்ணைக் கொடுக்குமாறு மிரட்டியுள்ளனர். அதற்கு அவர், தொலைபேசி எண் தெரியாது என்று கூறியுள்ளார்.

உடனே மர்ம நபர்கள் வேலுவுடைய செல்போனைப் பிடுங்கி அதில் வடிவேலுவின் நம்பர் இருக்கிறதா என பார்த்தனராம். அதில் நடிகர் வடிவேலுவின் எண் இல்லாததால் செல்போனை

அவரிடம் கொடுத்த மர்ம நபர்கள், வீட்டின் 6 கண்ணாடி ஜன்னல்களை அடித்து நொறுக்கினர். மேலும் வரும் சனிக்கிழமைக்குள் இந்த இடத்தை காலி செய்துவிடவேண்டும் என்றும் இல்லையென்றால் நாங்களே ஜேசிபி இயந்திரம் கொண்டு வந்து வீட்டை இடிப்போம் என்றும் மிரட்டிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து காவலாளி வேலு பண்ணை மேலாளர் சங்கருக்கு இந்தத் தகவலைத் தெரிவித்தார். மேலாளர் சங்கர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இது குறித்து மணிமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

நடிகர் வடிவேலு பண்ணை வீடு மீது தாக்குதல்

சென்னையை அடுத்த படப்பை அருகே நடிகர் வடிவேலுவின் பண்ணை வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள் மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.

படப்பையை அடுத்த புஷ்பகிரி பகுதியில் நடிகர் வடிவேலுவுக்கு மாமர தோப்புடன் கூடிய பண்ணை வீடு உள்ளது. இங்கு வேலு என்பவர் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.

வேலு தனது குடும்பத்துடன் இந்த தோப்பில் தனி வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் திங்கள்கிழமை மாலை வடிவேலுவின் பண்ணைக்கு வந்த சுமார் 30க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள், காவலாளி வேலுவிடம் வடிவேலுவின் தொலைபேசி எண்ணைக் கொடுக்குமாறு மிரட்டியுள்ளனர். அதற்கு அவர், தொலைபேசி எண் தெரியாது என்று கூறியுள்ளார்.

உடனே மர்ம நபர்கள் வேலுவுடைய செல்போனைப் பிடுங்கி அதில் வடிவேலுவின் நம்பர் இருக்கிறதா என பார்த்தனராம். அதில் நடிகர் வடிவேலுவின் எண் இல்லாததால் செல்போனை

அவரிடம் கொடுத்த மர்ம நபர்கள், வீட்டின் 6 கண்ணாடி ஜன்னல்களை அடித்து நொறுக்கினர். மேலும் வரும் சனிக்கிழமைக்குள் இந்த இடத்தை காலி செய்துவிடவேண்டும் என்றும் இல்லையென்றால் நாங்களே ஜேசிபி இயந்திரம் கொண்டு வந்து வீட்டை இடிப்போம் என்றும் மிரட்டிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து காவலாளி வேலு பண்ணை மேலாளர் சங்கருக்கு இந்தத் தகவலைத் தெரிவித்தார். மேலாளர் சங்கர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இது குறித்து மணிமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சட்டசபை தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து நடிகர் வடிவேலு அதிர்ச்சி அடைந்துள்ளார். அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கும் வடிவேலு வீட்டில் கல் வீசப்பட்டது. இதையடுத்து அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட வடிவேலு, தேமுதிக தலைவர் விஜயகாந்தை குடிகாரன் என்று பேசி கடுமையாக தாக்கினார். வடிவேலுவின் காமெடியான பேச்சை கேட்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். வந்தவர்கள் எல்லாம் திமுக கூட்டணிக்குத்தான் ஓட்டு போடுவார்கள் என்று நினைத்த வடிவேலு, தனது பேச்சில் மேலும் மேலும் கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தத் தொடங்கினார். தேர்தல் பிரசாரத்தை முடித்த பின்னர் அளித்த பேட்டியில் கூட, செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் வரவேற்பு அதிக அளவில் இருந்ததாகவும், திமுக மாபெரும் வெற்றி பெறும் என்றும் கூறினார்.

இப்போது திமுக அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளது. இது யாரை பாதிக்கிறதோ இல்லையோ... வடிவேலுவை நிச்சயம் பாதிக்கும் என்கிறார்கள் கோடம்பாக்கத்து முக்கிய புள்ளிகள். சக நடிகர் என்று கூட பாராமல் ஏக வசனத்தில் பேசி விஜயகாந்தை விமர்சித்ததால் சில சினிமா வாய்ப்புகளை இழந்திருக்கும் வடிவேலுவின் கதி இனி என்னவாக இருக்கும்? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. ‌அதிமுக ஆட்சியை பிடிக்கும் நிலைமையை நெருங்கியதுமே, சென்னை சாலிகிராமத்தில் உள்ள வடிவேலு வீடு முன் கல் மற்றும் உருட்டுக்கட்டைகளுடன் திரண்ட தேமுதிகவினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அங்கு போலீசார் விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் முடிவைத் தொடர்ந்து வடிவேலுவின் அடுத்த ஸ்டெப் என்னவாக இருக்கும்? என்ற ‌கேள்வி எழுந்துள்ள நிலையில் இருவேறு விதமாக பேசப்பட்டு வருகிறது. ஒன்று போயஸ் கார்டன் சென்று சமாதானம் ஆவது; இன்னொன்று திமுகவிலேயே ஐக்கியமாவது. இந்த இரண்டில் ஒரு முடிவைத்தான் வடிவேலு எடுக்கக் கூடும் என கோடம்பாக்கத்தில் பேச்சு எழுந்துள்ளது.

இதற்கிடையில் மதுரையில் மத்திய அமைச்சர் அழகிரியின் வீட்டுக்கு சென்ற வடிவேலு, அழகிரியுடன் சிறிது நேரம் பேசினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. அதேநேரம் வடிவேலுவின் வீட்டுக்கு விஜயகாந்த் ரசிகர்களால் தாக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்பதால் சென்னை மற்றும் மதுரையில் உள்ள அவரது வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாப்புக்கு வெச்சிட்டாங்களே ஆப்பு!

இனி போயஸ் கார்டனா? அறிவாலயமா? குழப்பத்தில் வடிவேலு!

சட்டசபை தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து நடிகர் வடிவேலு அதிர்ச்சி அடைந்துள்ளார். அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கும் வடிவேலு வீட்டில் கல் வீசப்பட்டது. இதையடுத்து அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட வடிவேலு, தேமுதிக தலைவர் விஜயகாந்தை குடிகாரன் என்று பேசி கடுமையாக தாக்கினார். வடிவேலுவின் காமெடியான பேச்சை கேட்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். வந்தவர்கள் எல்லாம் திமுக கூட்டணிக்குத்தான் ஓட்டு போடுவார்கள் என்று நினைத்த வடிவேலு, தனது பேச்சில் மேலும் மேலும் கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தத் தொடங்கினார். தேர்தல் பிரசாரத்தை முடித்த பின்னர் அளித்த பேட்டியில் கூட, செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் வரவேற்பு அதிக அளவில் இருந்ததாகவும், திமுக மாபெரும் வெற்றி பெறும் என்றும் கூறினார்.

இப்போது திமுக அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளது. இது யாரை பாதிக்கிறதோ இல்லையோ... வடிவேலுவை நிச்சயம் பாதிக்கும் என்கிறார்கள் கோடம்பாக்கத்து முக்கிய புள்ளிகள். சக நடிகர் என்று கூட பாராமல் ஏக வசனத்தில் பேசி விஜயகாந்தை விமர்சித்ததால் சில சினிமா வாய்ப்புகளை இழந்திருக்கும் வடிவேலுவின் கதி இனி என்னவாக இருக்கும்? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. ‌அதிமுக ஆட்சியை பிடிக்கும் நிலைமையை நெருங்கியதுமே, சென்னை சாலிகிராமத்தில் உள்ள வடிவேலு வீடு முன் கல் மற்றும் உருட்டுக்கட்டைகளுடன் திரண்ட தேமுதிகவினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அங்கு போலீசார் விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் முடிவைத் தொடர்ந்து வடிவேலுவின் அடுத்த ஸ்டெப் என்னவாக இருக்கும்? என்ற ‌கேள்வி எழுந்துள்ள நிலையில் இருவேறு விதமாக பேசப்பட்டு வருகிறது. ஒன்று போயஸ் கார்டன் சென்று சமாதானம் ஆவது; இன்னொன்று திமுகவிலேயே ஐக்கியமாவது. இந்த இரண்டில் ஒரு முடிவைத்தான் வடிவேலு எடுக்கக் கூடும் என கோடம்பாக்கத்தில் பேச்சு எழுந்துள்ளது.

இதற்கிடையில் மதுரையில் மத்திய அமைச்சர் அழகிரியின் வீட்டுக்கு சென்ற வடிவேலு, அழகிரியுடன் சிறிது நேரம் பேசினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. அதேநேரம் வடிவேலுவின் வீட்டுக்கு விஜயகாந்த் ரசிகர்களால் தாக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்பதால் சென்னை மற்றும் மதுரையில் உள்ள அவரது வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாப்புக்கு வெச்சிட்டாங்களே ஆப்பு!

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் உற்சாகமாக சுற்றுப்பயணம் செய்த ‌காமெடி நடிகர் வடிவேலுவுக்கு முதல் அடி விழுந்திருப்பதாக கோடம்பாக்கமே சூடாக பேசிக் கொண்டிருக்கிறது. ஆம்! இப்போதைக்கு எந்த பட வாய்‌ப்பும் இல்லாமல் இருக்கும் வடிவேலு, தேர்தல் முடிவு வருவதற்குள் ஒரு படத்தில் நடித்து முடித்துவிடும் திட்டத்தில் இருக்கிறார். இதற்காக விஷால் நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு, அப்படத்தின் டைரக்டரான நடிகர் பிரபுதேவாவுக்கு போன் அடித்திருக்கிறார் வைகைப் புயல். எதிர் முனையில் இருந்து எந்த ரெஸ்பான்சும் இல்லையாம்.

தேர்தல் நேரத்தில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று சக நடிகரை, அதுவும் தனக்கு வாய்ப்பு கொடுத்த நடிகரையே மகா கேவலமாக பேசிய வடிவேலுவுக்கு இப்போது விழுந்திருப்பது முதல் அடிதான். மே 13ம் தேதிக்குப் பிறகு இன்னும் நிறைய அடி வாங்குவார் என்று ஆரூடம் கணிக்கிறார்கள் கேப்டனுக்கு வேண்டப்பட்ட கோடம்பாக்கத்துக்காரர்கள். வடிவேலு பிரசாரம் செய்யப்போன இடங்களில் எல்லாம் எக்கச்சக்க கூட்டம் கூடி வரவேற்றதையும், வடிவேலுவின் எதார்த்த பேச்சை கேட்க கூடியிருந்த கூட்டத்தை பார்த்தும் பெருமைப்பட்ட வைகைப்புயலின் ஆதரவாளர்கள் இப்போதைக்கு கப்-சிப்பாக இருக்கிறார்கள்.

பணத்துக்கு பஞ்சமில்லை என்றாலும் தொழிலுக்கு போகவில்லையென்றால் தூங்கு மூஞ்சி ஆவதைத் தவிர வேறு வழியில்லையே. வடிவேலு இனி சினிமாவில் வாழ்வதும் பிழைப்பதும் மே 13ம்தேதி அவரது ஜாதக கட்டம் என்ன சொல்கிறது என்பதில்தானே இருக்கிறது.

வடிவேலுவுக்கு முதல் அடி!

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் உற்சாகமாக சுற்றுப்பயணம் செய்த ‌காமெடி நடிகர் வடிவேலுவுக்கு முதல் அடி விழுந்திருப்பதாக கோடம்பாக்கமே சூடாக பேசிக் கொண்டிருக்கிறது. ஆம்! இப்போதைக்கு எந்த பட வாய்‌ப்பும் இல்லாமல் இருக்கும் வடிவேலு, தேர்தல் முடிவு வருவதற்குள் ஒரு படத்தில் நடித்து முடித்துவிடும் திட்டத்தில் இருக்கிறார். இதற்காக விஷால் நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு, அப்படத்தின் டைரக்டரான நடிகர் பிரபுதேவாவுக்கு போன் அடித்திருக்கிறார் வைகைப் புயல். எதிர் முனையில் இருந்து எந்த ரெஸ்பான்சும் இல்லையாம்.

தேர்தல் நேரத்தில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று சக நடிகரை, அதுவும் தனக்கு வாய்ப்பு கொடுத்த நடிகரையே மகா கேவலமாக பேசிய வடிவேலுவுக்கு இப்போது விழுந்திருப்பது முதல் அடிதான். மே 13ம் தேதிக்குப் பிறகு இன்னும் நிறைய அடி வாங்குவார் என்று ஆரூடம் கணிக்கிறார்கள் கேப்டனுக்கு வேண்டப்பட்ட கோடம்பாக்கத்துக்காரர்கள். வடிவேலு பிரசாரம் செய்யப்போன இடங்களில் எல்லாம் எக்கச்சக்க கூட்டம் கூடி வரவேற்றதையும், வடிவேலுவின் எதார்த்த பேச்சை கேட்க கூடியிருந்த கூட்டத்தை பார்த்தும் பெருமைப்பட்ட வைகைப்புயலின் ஆதரவாளர்கள் இப்போதைக்கு கப்-சிப்பாக இருக்கிறார்கள்.

பணத்துக்கு பஞ்சமில்லை என்றாலும் தொழிலுக்கு போகவில்லையென்றால் தூங்கு மூஞ்சி ஆவதைத் தவிர வேறு வழியில்லையே. வடிவேலு இனி சினிமாவில் வாழ்வதும் பிழைப்பதும் மே 13ம்தேதி அவரது ஜாதக கட்டம் என்ன சொல்கிறது என்பதில்தானே இருக்கிறது.

தி.மு.க.,வின் பிரசார பீரங்கியாக மாறியுள்ள நடிகர் வடிவேலுவுக்கு எதிராகவும், போட்டியாகவும், நடிகர் சிங்கமுத்துவை களமிறக்குகிறது தே.மு.தி.க., கட்சி.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் களைகட்ட தொடங்கியுள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் நடிகர், நடிகைகளை பிரசாரம் செய்ய ஈடுபடுத்தி வருகிறது. தி.மு.க.,வுக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரத்தின் போது ஏற்கனவே விஜயகாந்தின் மீதுள்ள கோபத்தை எல்லாம் தன்னுடைய பிரசாரத்தில் காட்டி வருகிறார். திருவாரூரில் முதல்வர் கருணாநிதி பங்கேற்ற கூட்டத்தில் பிராசரத்தை ஆரம்பித்த வடிவேலு, விஜயகாந்தை மிகவும் கீழ்தரமாக பேசினார். அதுமட்டுமல்லாமல் பிரசாரத்திற்கு போகும் ஒவ்வொரு இடத்திற்கும் அவரை வசைபாடி வருகிறார். வடிவேலுவின் இந்தபேச்சு மிகவும் கீழ்த்தரமாக இருந்தாலும் அவரது பேச்சை கேட்கவும் நிறைய கூட்டம் கூடுகிறதாம்.

இந்நிலையில் வடிவேலுவுக்கு நிகராக தே.மு.தி.க.,விலும் ஒருவரை களமிறக்க அந்தகட்சி திட்டமிட்டது. அதன்படி யாரை அழைக்கலாம் என்ற நிலையில், வடிவேலுவின் மாஜி நண்பரும், தற்போது எதிரியுமான நடிகர் சிங்கமுத்துவை களமிறக்க இருக்கிறது அந்தகட்சி. இதுதொடர்பாக சிங்கமுத்துவிடம் தே.மு.தி.க., கட்சியினர் அணுகியபோது அவரும் ஓ.கே., சொல்லியிருக்கிறார். அத்துடன் சினிமாவில் வடிவேலுவை காமடியனாகத்தான் பார்த்திருக்கிறீர்கள், அவருக்கு இன்னொரு முகவும் இருக்கிறது. அந்த முகத்தை பிரசாரத்தின்போது நிச்சயம் தோலுறித்து காட்டத்தான் போகிறேன் என்று கூறிவருகிறார் சிங்கமுத்து. நாளை அல்லது நாளை மறுதினம் முதல் தனது பிரசாரத்தை துவங்க இருக்கிறார் சிங்கமுத்து.

வடிவேலுவுக்கு போட்டியாக சிங்கமுத்துவை களமிறக்கும் தே.மு.தி.க.,

தி.மு.க.,வின் பிரசார பீரங்கியாக மாறியுள்ள நடிகர் வடிவேலுவுக்கு எதிராகவும், போட்டியாகவும், நடிகர் சிங்கமுத்துவை களமிறக்குகிறது தே.மு.தி.க., கட்சி.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் களைகட்ட தொடங்கியுள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் நடிகர், நடிகைகளை பிரசாரம் செய்ய ஈடுபடுத்தி வருகிறது. தி.மு.க.,வுக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரத்தின் போது ஏற்கனவே விஜயகாந்தின் மீதுள்ள கோபத்தை எல்லாம் தன்னுடைய பிரசாரத்தில் காட்டி வருகிறார். திருவாரூரில் முதல்வர் கருணாநிதி பங்கேற்ற கூட்டத்தில் பிராசரத்தை ஆரம்பித்த வடிவேலு, விஜயகாந்தை மிகவும் கீழ்தரமாக பேசினார். அதுமட்டுமல்லாமல் பிரசாரத்திற்கு போகும் ஒவ்வொரு இடத்திற்கும் அவரை வசைபாடி வருகிறார். வடிவேலுவின் இந்தபேச்சு மிகவும் கீழ்த்தரமாக இருந்தாலும் அவரது பேச்சை கேட்கவும் நிறைய கூட்டம் கூடுகிறதாம்.

இந்நிலையில் வடிவேலுவுக்கு நிகராக தே.மு.தி.க.,விலும் ஒருவரை களமிறக்க அந்தகட்சி திட்டமிட்டது. அதன்படி யாரை அழைக்கலாம் என்ற நிலையில், வடிவேலுவின் மாஜி நண்பரும், தற்போது எதிரியுமான நடிகர் சிங்கமுத்துவை களமிறக்க இருக்கிறது அந்தகட்சி. இதுதொடர்பாக சிங்கமுத்துவிடம் தே.மு.தி.க., கட்சியினர் அணுகியபோது அவரும் ஓ.கே., சொல்லியிருக்கிறார். அத்துடன் சினிமாவில் வடிவேலுவை காமடியனாகத்தான் பார்த்திருக்கிறீர்கள், அவருக்கு இன்னொரு முகவும் இருக்கிறது. அந்த முகத்தை பிரசாரத்தின்போது நிச்சயம் தோலுறித்து காட்டத்தான் போகிறேன் என்று கூறிவருகிறார் சிங்கமுத்து. நாளை அல்லது நாளை மறுதினம் முதல் தனது பிரசாரத்தை துவங்க இருக்கிறார் சிங்கமுத்து.

சென்னை: காமெடி பீஸ் வடிவேலு, விரைவில் அரசியலில் அடிவாங்கப் போகிறார் என்றார் நடிகை விந்தியா.

நடிகை விந்தியா அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்தை நடிகர் வடிவேலு கடுமையாக விமர்சித்து வருவதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று அவர் பிரச்சாரம் அமைந்ததது.

தனது பிரச்சாரத்தின்போது விந்தியா பேசுகையில், "வடிவேலு ஒரு காமெடி பீஸ். அவரால திமுகவும் இப்போ காமெடி பீஸா தெரியுது.

திமுககிட்ட எவ்வளவு வாங்குனாரோ தெரியல. வாங்குனதுக்கு வஞ்சமில்லாம பேசிக்கிட்டு திரியறாரு. இவரு வந்து கேப்டனை ஒழிச்சிக் கட்டுவாராம். இதை விட மிகப் பெரிய காமெடி ஒண்ணுமே இல்லைங்க. சினிமாவில கூட இந்த மாதிரி காமெடியை நான் பார்த்ததில்லை.

மக்களுக்கு நல்லது செய்ய அம்மாவுடன் சேர்ந்திருக்கிற நல்லவர் கேப்டன். கேப்டனின் லெக் கிக்; பஞ்ச் பவர் பற்றி தமிழ்நாட்டில் எல்லோருக்கும் தெரியும். பொதுவா சினிமாவில் வடிவேலு அடி வாங்கி அடி வாங்கித்தான் காமெடி பண்ணூவார். அவர் அரசியலில் இன்னும் அடிவாங்கல.

இப்போ அதுக்கான நேரம் வந்துடுச்சி போலிருக்கு. அடி வாங்குறதுக்காகத்தான் இப்படி பேசுறாரு," என்றார்.

காமெடி பீஸ்! - வடிவேலுவை தாக்கும் விந்தியா

சென்னை: காமெடி பீஸ் வடிவேலு, விரைவில் அரசியலில் அடிவாங்கப் போகிறார் என்றார் நடிகை விந்தியா.

நடிகை விந்தியா அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்தை நடிகர் வடிவேலு கடுமையாக விமர்சித்து வருவதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று அவர் பிரச்சாரம் அமைந்ததது.

தனது பிரச்சாரத்தின்போது விந்தியா பேசுகையில், "வடிவேலு ஒரு காமெடி பீஸ். அவரால திமுகவும் இப்போ காமெடி பீஸா தெரியுது.

திமுககிட்ட எவ்வளவு வாங்குனாரோ தெரியல. வாங்குனதுக்கு வஞ்சமில்லாம பேசிக்கிட்டு திரியறாரு. இவரு வந்து கேப்டனை ஒழிச்சிக் கட்டுவாராம். இதை விட மிகப் பெரிய காமெடி ஒண்ணுமே இல்லைங்க. சினிமாவில கூட இந்த மாதிரி காமெடியை நான் பார்த்ததில்லை.

மக்களுக்கு நல்லது செய்ய அம்மாவுடன் சேர்ந்திருக்கிற நல்லவர் கேப்டன். கேப்டனின் லெக் கிக்; பஞ்ச் பவர் பற்றி தமிழ்நாட்டில் எல்லோருக்கும் தெரியும். பொதுவா சினிமாவில் வடிவேலு அடி வாங்கி அடி வாங்கித்தான் காமெடி பண்ணூவார். அவர் அரசியலில் இன்னும் அடிவாங்கல.

இப்போ அதுக்கான நேரம் வந்துடுச்சி போலிருக்கு. அடி வாங்குறதுக்காகத்தான் இப்படி பேசுறாரு," என்றார்.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திருவாரூர் தொகுதியில் முதலமைச்சர் கருணாநிதி போட்டியிடுகிறார்.
தி.மு.க. கூட்டணி தேர்தல் பிரச்சாரத்தை முதலமைச்சர் கருணாநிதி திருவாரூரில் இன்று மாலை தொடங்கி வைக்கிறார்.
இதற்காக திருவாரூர் தெற்கு வீதியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்காக முதலமைச்சர் கருணாநிதி இன்று (புதன்கிழமை) காலை 6.30 மணிக்கு சென்னையிலிருந்து கார் மூலம் புறப்பட்டு புதுச்சேரி, கடலூர் வழியாக திருவாரூர் சென்றார்.
மதியம் 2.30 மணி அளவில் திருவாரூர் சென்றடைகிறார். அங்கு அவர் மதிய உணவு சாப்பிட்டு விட்டு, சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.
மாலை 6 மணிக்கு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் தொடங்குகிறது. அதில் கருணாநிதி கலந்து கொண்டு திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்ட தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசுகிறார்.
இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, டாக்டர் ராமதாஸ், தொல்.திருமாவளவன், கி.வீரமணி, ஆர்.எம்.வீரப்பன், கே.எம்.காதர்மொய்தீன், பெஸ்ட் ராமசாமி, ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையார், என்.ஆர்.தனபாலன், பேராயர் எஸ்றா சற்குணம், கு.செல்லமுத்து, எல்.சந்தானம், பொன்.குமார், எம்.பசீர் அகமது, வலசை ரவிச்சந்திரன், லியாகத் அலிகான் ஆகியோரும் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் நடிகர் வடிவேலு கலந்துகொண்டு திமுகவுக்கு ஆதரவாக பேசுகிறார். அதுமட்டுல்லாமல் அவர் அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்து பேசவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

கலைஞர் தலைமையில் பொதுக்கூட்டம் : விஜயகாந்தை விளாசும் வடிவேலு

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திருவாரூர் தொகுதியில் முதலமைச்சர் கருணாநிதி போட்டியிடுகிறார்.
தி.மு.க. கூட்டணி தேர்தல் பிரச்சாரத்தை முதலமைச்சர் கருணாநிதி திருவாரூரில் இன்று மாலை தொடங்கி வைக்கிறார்.
இதற்காக திருவாரூர் தெற்கு வீதியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்காக முதலமைச்சர் கருணாநிதி இன்று (புதன்கிழமை) காலை 6.30 மணிக்கு சென்னையிலிருந்து கார் மூலம் புறப்பட்டு புதுச்சேரி, கடலூர் வழியாக திருவாரூர் சென்றார்.
மதியம் 2.30 மணி அளவில் திருவாரூர் சென்றடைகிறார். அங்கு அவர் மதிய உணவு சாப்பிட்டு விட்டு, சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.
மாலை 6 மணிக்கு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் தொடங்குகிறது. அதில் கருணாநிதி கலந்து கொண்டு திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்ட தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசுகிறார்.
இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, டாக்டர் ராமதாஸ், தொல்.திருமாவளவன், கி.வீரமணி, ஆர்.எம்.வீரப்பன், கே.எம்.காதர்மொய்தீன், பெஸ்ட் ராமசாமி, ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையார், என்.ஆர்.தனபாலன், பேராயர் எஸ்றா சற்குணம், கு.செல்லமுத்து, எல்.சந்தானம், பொன்.குமார், எம்.பசீர் அகமது, வலசை ரவிச்சந்திரன், லியாகத் அலிகான் ஆகியோரும் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் நடிகர் வடிவேலு கலந்துகொண்டு திமுகவுக்கு ஆதரவாக பேசுகிறார். அதுமட்டுல்லாமல் அவர் அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்து பேசவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

தன்னை இன்னொரு எம்ஜிஆர் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவரை அதிமுக ஏற்றுக்‌ கொள்கிறதா? என்று விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் இணைந்திருப்பது பற்றி காமெடி நடிகர் வடிவேலு கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த சிலபல மாதங்களுக்கு முன்பு, நடிகர் வடிவேலுவுக்கும், தேமுதிகவை சேர்ந்த பிரமுகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வடிவேலுவின் வீடு மீது கல்வீச்சு தாக்குதலும் நடந்தது. இதையடுத்து ஆவேசமடைந்த வடிவேலு ‌போலீசில் விஜயகாந்த் மீது புகார் அளித்ததுடன், அடுத்த தேர்தலில் விஜயகாந்த் எந்த தொகுதியில் நின்றாலும், அவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெறுவேன், என்று கூறியிருந்தார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், விஜயகாந்த் அதிமுகவுடனான கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனையில் இருக்கிறார். விஜயகாந்த் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று சொன்ன நடிகர் வடிவேலு என்ன செய்யப்போகிறார்? அவர் விஜயகாந்தை எதிர்த்து போட்டியிடுவாரா? என்பதையும் பரபரப்பான அரசியலுக்கிடையே சிலர் எதிர்பாத்து காத்திருக்கிறார்கள்.

இதுபற்றி வடிவேலுவிடம் கேட்டால் தீர்க்கமான முடிவை தெரிவிக்காமல் மழுப்பி விட்டார். அவர் அளித்துள்ள பேட்டியில், நான், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். எம்.ஜி.ஆரும், கலைஞரும் ஒரே கட்சியில் இருந்தவர்கள். எம்.ஜி.ஆரின் கொள்கைகள் எனக்கு பிடிக்கும். கலைஞரின் அறிவும், ஆற்றலும், அயராத உழைப்பும் எனக்கு பிடிக்கும். அவருடைய நிர்வாக திறன் பிடிக்கும். என்றாலும், நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நான் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். இன்னொரு எம்.ஜி.ஆர். என்று சொல்லிக்கொள்ளும் ஒருவரை அ.தி.மு.க. ஏற்றுக்கொள்கிறதா? அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? இந்த கேள்விக்கு விடை தெரிந்தபின், விஜயகாந்தை எதிர்த்து நான் தேர்தலில் போட்டியிடுவேனா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கிறேன், என்று கூறியிருக்கிறார் வடிவேலு.

வடிவேலு அரசியல் களம் இறங்குவாரா? விஜயகாந்தை எதிர்த்து போட்டியிடுவாரா? அப்படி போட்டியிட்டால் எவ்வளவு ஓட்டுக்கள் கிடைக்கும்? அல்லது விஜயகாந்துக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபடுவாரா? என்பன போன்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், தி.மு.க. வட்டாரம் வடிவேலுவை வளைத்துப் போடும் திட்டத்தையும் போட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

வடிவேலு தேர்தலில் போட்டியிடுவது அவசியமா? அல்லது தேவையில்லாத ஒன்றா? அப்படி போட்டியிட்டால் என்னவாகும் அவரது நிலை? என்பது பற்றிய கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் வாசகர்களே..!

தேர்தலில் வடிவேலு போட்டி? விஜயகாந்துக்கு எதிராக களமிறங்க திட்டம்!

தன்னை இன்னொரு எம்ஜிஆர் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவரை அதிமுக ஏற்றுக்‌ கொள்கிறதா? என்று விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் இணைந்திருப்பது பற்றி காமெடி நடிகர் வடிவேலு கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த சிலபல மாதங்களுக்கு முன்பு, நடிகர் வடிவேலுவுக்கும், தேமுதிகவை சேர்ந்த பிரமுகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வடிவேலுவின் வீடு மீது கல்வீச்சு தாக்குதலும் நடந்தது. இதையடுத்து ஆவேசமடைந்த வடிவேலு ‌போலீசில் விஜயகாந்த் மீது புகார் அளித்ததுடன், அடுத்த தேர்தலில் விஜயகாந்த் எந்த தொகுதியில் நின்றாலும், அவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெறுவேன், என்று கூறியிருந்தார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், விஜயகாந்த் அதிமுகவுடனான கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனையில் இருக்கிறார். விஜயகாந்த் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று சொன்ன நடிகர் வடிவேலு என்ன செய்யப்போகிறார்? அவர் விஜயகாந்தை எதிர்த்து போட்டியிடுவாரா? என்பதையும் பரபரப்பான அரசியலுக்கிடையே சிலர் எதிர்பாத்து காத்திருக்கிறார்கள்.

இதுபற்றி வடிவேலுவிடம் கேட்டால் தீர்க்கமான முடிவை தெரிவிக்காமல் மழுப்பி விட்டார். அவர் அளித்துள்ள பேட்டியில், நான், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். எம்.ஜி.ஆரும், கலைஞரும் ஒரே கட்சியில் இருந்தவர்கள். எம்.ஜி.ஆரின் கொள்கைகள் எனக்கு பிடிக்கும். கலைஞரின் அறிவும், ஆற்றலும், அயராத உழைப்பும் எனக்கு பிடிக்கும். அவருடைய நிர்வாக திறன் பிடிக்கும். என்றாலும், நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நான் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். இன்னொரு எம்.ஜி.ஆர். என்று சொல்லிக்கொள்ளும் ஒருவரை அ.தி.மு.க. ஏற்றுக்கொள்கிறதா? அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? இந்த கேள்விக்கு விடை தெரிந்தபின், விஜயகாந்தை எதிர்த்து நான் தேர்தலில் போட்டியிடுவேனா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கிறேன், என்று கூறியிருக்கிறார் வடிவேலு.

வடிவேலு அரசியல் களம் இறங்குவாரா? விஜயகாந்தை எதிர்த்து போட்டியிடுவாரா? அப்படி போட்டியிட்டால் எவ்வளவு ஓட்டுக்கள் கிடைக்கும்? அல்லது விஜயகாந்துக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபடுவாரா? என்பன போன்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், தி.மு.க. வட்டாரம் வடிவேலுவை வளைத்துப் போடும் திட்டத்தையும் போட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

வடிவேலு தேர்தலில் போட்டியிடுவது அவசியமா? அல்லது தேவையில்லாத ஒன்றா? அப்படி போட்டியிட்டால் என்னவாகும் அவரது நிலை? என்பது பற்றிய கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் வாசகர்களே..!

முக நூல்

Popular Posts