background img

புதிய வரவு

Showing posts with label Success. Show all posts
Showing posts with label Success. Show all posts
உதயநிதி ஸ்டாலின் நடத்தும் 4 படங்களின் வெற்றி விழாவில் பங்கேற்க ஆரம்பத்தில் மறுத்த ரஜினி, பின்னர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

உதயநிதி வெளியிட்ட 4 படங்களின் வெற்றி விழா, சென்னையில் மே 7-ந் தேதி, ரஜினிகாந்த் தலைமையில் நடக்கிறது.

கமல்ஹாசன் நடித்த மன்மதன் அம்பு, விஜய் நடித்த குருவி, உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர் உதயநிதி ஸ்டாலின். இப்போது 7-ம் அறிவு என்ற படத்தை தயாரிப்பதுடன், ராஜேஷ் எம். இயக்கத்தில், `ஒரு கல் ஒரு கண்ணாடி' என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடிக்கிறார்.

இவர் தனது ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் சார்பில் வெளியிட்ட விண்ணைத்தாண்டி வருவாயா, மதராச பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், மைனா ஆகிய படங்கள் வெற்றி பெற்றg 100 நாட்கள் ஓடின.

இந்த 4 படங்களின் வெற்றி விழாக்கள், ஏப்ரல் 22ம் தேதி நடப்பதாக முதலில் கூறப்பட்டது. இந்த விழாவுக்கு ரஜினி வருவார் என்றும் அறிவித்திருந்தனர்.

ஆனால் தேர்தல் நாளன்று ரஜினி வாக்களித்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியதால், பொதுநிகழ்ச்சிகளைத் தவிர்த்து வந்தார் ரஜினி. சிரஞ்சீவி மகன் நிகழ்ச்சியும் இதனால் தள்ளிப் போடப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்திருந்த வெற்றிவிழாவும் இதனால் தள்ளிப் போனது. இப்போது இரு வாரங்கள் கழித்து, மே 7ம் தேதி விழாவை ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த விழாவுக்கு தலைமை தாங்கி, கலைஞர்களுக்கு கேடயம் வழங்கவும் ரஜினி சம்மதித்துள்ளார்.

மே மாதம் 7-ந் தேதி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது இந்த விழா. தமிழ் திரையுலகின் முக்கிய கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

வெற்றி விழா: ரஜினியை சம்மதிக்க வைத்த உதயநிதி!

உதயநிதி ஸ்டாலின் நடத்தும் 4 படங்களின் வெற்றி விழாவில் பங்கேற்க ஆரம்பத்தில் மறுத்த ரஜினி, பின்னர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

உதயநிதி வெளியிட்ட 4 படங்களின் வெற்றி விழா, சென்னையில் மே 7-ந் தேதி, ரஜினிகாந்த் தலைமையில் நடக்கிறது.

கமல்ஹாசன் நடித்த மன்மதன் அம்பு, விஜய் நடித்த குருவி, உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர் உதயநிதி ஸ்டாலின். இப்போது 7-ம் அறிவு என்ற படத்தை தயாரிப்பதுடன், ராஜேஷ் எம். இயக்கத்தில், `ஒரு கல் ஒரு கண்ணாடி' என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடிக்கிறார்.

இவர் தனது ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் சார்பில் வெளியிட்ட விண்ணைத்தாண்டி வருவாயா, மதராச பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், மைனா ஆகிய படங்கள் வெற்றி பெற்றg 100 நாட்கள் ஓடின.

இந்த 4 படங்களின் வெற்றி விழாக்கள், ஏப்ரல் 22ம் தேதி நடப்பதாக முதலில் கூறப்பட்டது. இந்த விழாவுக்கு ரஜினி வருவார் என்றும் அறிவித்திருந்தனர்.

ஆனால் தேர்தல் நாளன்று ரஜினி வாக்களித்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியதால், பொதுநிகழ்ச்சிகளைத் தவிர்த்து வந்தார் ரஜினி. சிரஞ்சீவி மகன் நிகழ்ச்சியும் இதனால் தள்ளிப் போடப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்திருந்த வெற்றிவிழாவும் இதனால் தள்ளிப் போனது. இப்போது இரு வாரங்கள் கழித்து, மே 7ம் தேதி விழாவை ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த விழாவுக்கு தலைமை தாங்கி, கலைஞர்களுக்கு கேடயம் வழங்கவும் ரஜினி சம்மதித்துள்ளார்.

மே மாதம் 7-ந் தேதி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது இந்த விழா. தமிழ் திரையுலகின் முக்கிய கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

கொழும்பு:இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிபர் ராஜபக்ஷேவின் ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.இலங்கையில் நேற்று முன்தினம் 234 கவுன்சில்களுக்கு தேர்தல் நடந்தது. இதில் ராஜபக்ஷே தலைமையிலான ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி 205 இடங்களை கைப்பற்றியுள்ளது. எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி ஒன்பது இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தமிழ் தேசிய கூட்டணி 12 இடங்களிலும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் நான்கு இடங்களிலும், மற்றொரு தமிழ் கட்சி ஒரு இடத்திலும், சுயேச்சைகள் மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.கடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்ஷே கட்சி 58 சதவீத ஓட்டுகளை பெற்றது. ஆனால், இந்த தேர்தலில் 55 சதவீத ஓட்டுகளே கிடைத்துள்ளன. ஓட்டுகளின் எண்ணிக்கை 3 சதவீதம் குறைந்துள்ளது.

ராஜபக்ஷே கட்சிஅபார வெற்றி

கொழும்பு:இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிபர் ராஜபக்ஷேவின் ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.இலங்கையில் நேற்று முன்தினம் 234 கவுன்சில்களுக்கு தேர்தல் நடந்தது. இதில் ராஜபக்ஷே தலைமையிலான ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி 205 இடங்களை கைப்பற்றியுள்ளது. எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி ஒன்பது இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தமிழ் தேசிய கூட்டணி 12 இடங்களிலும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் நான்கு இடங்களிலும், மற்றொரு தமிழ் கட்சி ஒரு இடத்திலும், சுயேச்சைகள் மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.கடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்ஷே கட்சி 58 சதவீத ஓட்டுகளை பெற்றது. ஆனால், இந்த தேர்தலில் 55 சதவீத ஓட்டுகளே கிடைத்துள்ளன. ஓட்டுகளின் எண்ணிக்கை 3 சதவீதம் குறைந்துள்ளது.

முக நூல்

Popular Posts