background img

புதிய வரவு

Showing posts with label mumbai. Show all posts
Showing posts with label mumbai. Show all posts
நடிகர் கார்த்திக்கும், ஈரோட்டைச் சேர்ந்த ரஞ்சனிக்கும் வருகிற ஜூலை மாதம் 3-ந் தேதி கோவை கொடிசியா அரங்கில் திருமணம் நடக்கிறது. இதற்காக தனக்கும் எதிர்கால மனைவிக்குமான உடைகளை மும்பையில் டிசைன் செய்து வாங்குகிறார் கார்த்தி.

கார்த்தி-ரஞ்சனி திருமண நிச்சயதார்த்தம் ஈரோட்டில் உள்ள மணப்பெண் வீட்டில் சமீபத்தில் நடந்தது.

தற்போது திருமண ஏற்பாடுகள் இருவர் வீட்டிலும் வேகமாக நடந்து வருகிறது. மணமகளுக்கான பட்டுப் புடவை, மணமகனுக்கான பட்டுவேட்டி, பட்டு சட்டை ஆகியவை ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளன.

மறுநாள் சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மணமகன், மணமகள் இருவரும் அணிவதற்காக பிரத்தியேக ஆடைகள் தேர்வு செய்யப்படுகின்றன.

இந்த ஆடைகளை தேர்வு செய்வதற்காக நடிகர் கார்த்தி மும்பை சென்றுள்ளார். அவருடன் குடும்பத்தினரும் சென்றுள்ளனர். மும்பையில் பிரபல டிசைனர் மூலம் ஆடைகள் தேர்வு செய்யப்படுகின்றன. அங்குள்ள பிரபல துணிக் கடைகளில் மணமகளுக்கு பொருத்தமாக ஆடைகளை கார்த்தியும், அவரது குடும்பத்தினரும் தேர்வு செய்கிறார்கள்.

திருமண வரவேற்புக்கும் இங்கேயே உடைகளை வாங்குகிறார் கார்த்தி.

திருமணத்துக்கு மும்பையில் உடை வாங்கும் கார்த்தி

நடிகர் கார்த்திக்கும், ஈரோட்டைச் சேர்ந்த ரஞ்சனிக்கும் வருகிற ஜூலை மாதம் 3-ந் தேதி கோவை கொடிசியா அரங்கில் திருமணம் நடக்கிறது. இதற்காக தனக்கும் எதிர்கால மனைவிக்குமான உடைகளை மும்பையில் டிசைன் செய்து வாங்குகிறார் கார்த்தி.

கார்த்தி-ரஞ்சனி திருமண நிச்சயதார்த்தம் ஈரோட்டில் உள்ள மணப்பெண் வீட்டில் சமீபத்தில் நடந்தது.

தற்போது திருமண ஏற்பாடுகள் இருவர் வீட்டிலும் வேகமாக நடந்து வருகிறது. மணமகளுக்கான பட்டுப் புடவை, மணமகனுக்கான பட்டுவேட்டி, பட்டு சட்டை ஆகியவை ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளன.

மறுநாள் சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மணமகன், மணமகள் இருவரும் அணிவதற்காக பிரத்தியேக ஆடைகள் தேர்வு செய்யப்படுகின்றன.

இந்த ஆடைகளை தேர்வு செய்வதற்காக நடிகர் கார்த்தி மும்பை சென்றுள்ளார். அவருடன் குடும்பத்தினரும் சென்றுள்ளனர். மும்பையில் பிரபல டிசைனர் மூலம் ஆடைகள் தேர்வு செய்யப்படுகின்றன. அங்குள்ள பிரபல துணிக் கடைகளில் மணமகளுக்கு பொருத்தமாக ஆடைகளை கார்த்தியும், அவரது குடும்பத்தினரும் தேர்வு செய்கிறார்கள்.

திருமண வரவேற்புக்கும் இங்கேயே உடைகளை வாங்குகிறார் கார்த்தி.

மும்பை: ஐ.பி.எல்., லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. பேட்டிங், பவுலிங்கில் சோபிக்கத்தவறிய கில்கிறிஸ்ட் அணி, "ஹாட்ரிக் தோல்வியை பதிவு செய்தது.
இந்திய மண்ணில், நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20 கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. "டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கில்கிறிஸ்ட், "பீல்டிங் தேர்வு செய்தார்.
அம்பதி அதிரடி:
முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டேவி ஜேக்கப்ஸ் (10) சுமாரான துவக்கம் அளித்தார். அடுத்து வந்த அம்பதி ராயுடு, கேப்டன் சச்சினுடன் இணைந்து அதிரடியாக ரன் சேர்த்தார். பஞ்சாப் பந்துவீச்சை பதம்பார்த்த அம்பதி, பியுஸ் சாவ்லா பந்தில் ஒரு "சூப்பர் பவுண்டரி அடித்து அரைசதத்தை பதிவு செய்தார். இவர், 37 பந்தில் 51 ரன்கள் (ஒரு சிக்சர், 8 பவுண்டரி) எடுத்து, பியுஸ் சாவ்லா சுழலில் சிக்கினார்.
சச்சின் அரைசதம்:
மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின், அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ரேயான் ஹாரிஸ் வீசிய ஆட்டத்தின் 17வது ஓவரின் முதல் பந்தில், ஒரு "சூப்பர் பவுண்டரி விளாசிய சச்சின், ஐ.பி.எல்., அரங்கில் தனது 10வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அடுத்த பந்தில் "சிக்சர் அடிக்க முயன்ற சச்சின் (51), அபிஷேக் நாயரிடம் "கேட்ச் கொடுத்து அவுட்டானார். பின் இணைந்த போலார்டு, ரோகித் சர்மா ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. வல்தாட்டி, பியுஸ் சாவ்லா பந்தில் தலா ஒரு "சிக்சர் விளாசிய போலார்டு (20) நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ரோகித் சர்மா (18), சைமண்ட்ஸ் (4*) ஓரளவு கைகொடுக்க, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி சார்பில் ரேயான் ஹாரிஸ், பியுஸ் சாவ்லா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
கில்கிறிஸ்ட் ஏமாற்றம்:
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஹர்பஜன் சுழலில் கில்கிறிஸ்ட் எல்.பி.டபிள்யு., முறையில் "டக்-அவுட் ஆனார். பின் இணைந்த வல்தாட்டி, மார்ஷ் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. இந்த ஜோடி, 2வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்த போது, சைமண்ட்ஸ் சுழலில் வல்தாட்டி (33) சிக்கினார்.
மார்ஷ் ஆறுதல்:
அடுத்து வந்த டேவிட் ஹசி (2), தினேஷ் கார்த்திக் (1) சொற்ப ரன்களில் வெளியேறினர். மறுமுனையில் அதிரடி காட்டிய மார்ஷ், ரன் வேட்டை நடத்தினார். ஹர்பஜன் பந்தில் ஒரு "பவுண்டரி அடித்த மார்ஷ், அரைசதம் அடித்தார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த அபிஷேக் நாயர் (14) பெரிய அளவில் சோபிக்கவில்லை. அடுத்து வந்த பிபுல் சர்மா (1), மலிங்கா வேகத்தில் "போல்டானார். பொறுப்புடன் ஆடிய மார்ஷ், 47 பந்தில் 61 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார்.
முனாப் படேல் வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் 28 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 4 ரன்கள் மட்டுமே எடுத்த பஞ்சாப் அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. பியுஸ் சாவ்லா (10), பிரவீண் குமார் (2) அவுட்டாகாமல் இருந்தனர். மும்பை அணி சார்பில் ஹர்பஜன், மலிங்கா, முனாப் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். "ஆல்-ரவுண்டராக அசத்திய மும்பை அணியின் போலார்டு, ஆட்ட நாயகன் விருதை கைப்பற்றினார்.
ஸ்கோர் போர்டு
மும்பை இந்தியன்ஸ்
ஜேக்கப்ஸ் (ப)பிபுல் 10(10)
சச்சின் (கே)அபிஷேக் (ப)ஹாரிஸ் 51(45)
அம்பதி (கே)கார்த்திக் (ப)சாவ்லா 51(37)
போலார்டு (கே)வல்தாட்டி (ப)சாவ்லா 20(11)
ரோகித் (கே)ஹசி (ப)ஹாரிஸ் 18(11)
சைமண்ட்ஸ் -அவுட் இல்லை- 4(6)
சுமன் -அவுட் இல்லை- 0(0)
உதிரிகள் 5
மொத்தம் (20 ஓவரில், 5 விக்.,) 159
விக்கெட் வீழ்ச்சி: 1-14(ஜேக்கப்ஸ்), 2-109(அம்பதி), 3-129(சச்சின்), 4-144(போலார்டு), 5-158(ரோகித்).
பந்துவீச்சு: பட் 4-0-26-0, பிரவீண் 3-0-28-0, பிபுல் 4-0-22-1, ஹாரிஸ் 4-0-33-2, சாவ்லா 4-0-37-2, வல்தாட்டி 1-0-10-0.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
வல்தாட்டி (கே)போலார்டு (ப)சைமண்ட்ஸ் 33(38)
கில்கிறிஸ்ட் எல்.பி.டபிள்யு.,(ப)ஹர்பஜன் 0(2)
மார்ஷ் (கே)சச்சின் (ப)மலிங்கா 61(47)
ஹசி (கே)ரோகித் (ப)முனாப் 1(5)
கார்த்திக் எல்.பி.டபிள்யு.,(ப)போலார்டு 1(2)
அபிஷேக் (கே)சைமண்ட்ஸ் (ப)ஹர்பஜன் 14(9)
பிபுல் (ப)மலிங்கா 1(2)
சாவ்லா -அவுட் இல்லை- 10(10)
ஹாரிஸ் (கே)போலார்டு (ப)முனாப் 1(2)
பிரவீண் -அவுட் இல்லை- 2(3)
உதிரிகள் 12
மொத்தம் (20 ஓவரில், 8 விக்.,) 136
விக்கெட் வீழ்ச்சி: 1-1(கில்கிறிஸ்ட்), 2-73(வல்தாட்டி), 3-79(ஹசி), 4-83(கார்த்திக்), 5-113(அபிஷேக்), 6-116(பிபுல்), 7-131(மார்ஷ்), 8-132(ஹாரிஸ்).
பந்துவீச்சு: ஹர்பஜன் 4-0-25-2, மலிங்கா 4-0-19-2, நேசிம் 3-0-22-0, முனாப் 4-0-18-2, சுமன் 1-0-12-0, போலார்டு 3-0-18-1, சைமண்ட்ஸ் 1-0-11-1.

மும்பை இந்தியன்ஸ் அசத்தல் வெற்றி! * பஞ்சாப் அணி "ஹாட்ரிக் தோல்வி

மும்பை: ஐ.பி.எல்., லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. பேட்டிங், பவுலிங்கில் சோபிக்கத்தவறிய கில்கிறிஸ்ட் அணி, "ஹாட்ரிக் தோல்வியை பதிவு செய்தது.
இந்திய மண்ணில், நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20 கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. "டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கில்கிறிஸ்ட், "பீல்டிங் தேர்வு செய்தார்.
அம்பதி அதிரடி:
முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டேவி ஜேக்கப்ஸ் (10) சுமாரான துவக்கம் அளித்தார். அடுத்து வந்த அம்பதி ராயுடு, கேப்டன் சச்சினுடன் இணைந்து அதிரடியாக ரன் சேர்த்தார். பஞ்சாப் பந்துவீச்சை பதம்பார்த்த அம்பதி, பியுஸ் சாவ்லா பந்தில் ஒரு "சூப்பர் பவுண்டரி அடித்து அரைசதத்தை பதிவு செய்தார். இவர், 37 பந்தில் 51 ரன்கள் (ஒரு சிக்சர், 8 பவுண்டரி) எடுத்து, பியுஸ் சாவ்லா சுழலில் சிக்கினார்.
சச்சின் அரைசதம்:
மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின், அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ரேயான் ஹாரிஸ் வீசிய ஆட்டத்தின் 17வது ஓவரின் முதல் பந்தில், ஒரு "சூப்பர் பவுண்டரி விளாசிய சச்சின், ஐ.பி.எல்., அரங்கில் தனது 10வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அடுத்த பந்தில் "சிக்சர் அடிக்க முயன்ற சச்சின் (51), அபிஷேக் நாயரிடம் "கேட்ச் கொடுத்து அவுட்டானார். பின் இணைந்த போலார்டு, ரோகித் சர்மா ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. வல்தாட்டி, பியுஸ் சாவ்லா பந்தில் தலா ஒரு "சிக்சர் விளாசிய போலார்டு (20) நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ரோகித் சர்மா (18), சைமண்ட்ஸ் (4*) ஓரளவு கைகொடுக்க, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி சார்பில் ரேயான் ஹாரிஸ், பியுஸ் சாவ்லா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
கில்கிறிஸ்ட் ஏமாற்றம்:
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஹர்பஜன் சுழலில் கில்கிறிஸ்ட் எல்.பி.டபிள்யு., முறையில் "டக்-அவுட் ஆனார். பின் இணைந்த வல்தாட்டி, மார்ஷ் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. இந்த ஜோடி, 2வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்த போது, சைமண்ட்ஸ் சுழலில் வல்தாட்டி (33) சிக்கினார்.
மார்ஷ் ஆறுதல்:
அடுத்து வந்த டேவிட் ஹசி (2), தினேஷ் கார்த்திக் (1) சொற்ப ரன்களில் வெளியேறினர். மறுமுனையில் அதிரடி காட்டிய மார்ஷ், ரன் வேட்டை நடத்தினார். ஹர்பஜன் பந்தில் ஒரு "பவுண்டரி அடித்த மார்ஷ், அரைசதம் அடித்தார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த அபிஷேக் நாயர் (14) பெரிய அளவில் சோபிக்கவில்லை. அடுத்து வந்த பிபுல் சர்மா (1), மலிங்கா வேகத்தில் "போல்டானார். பொறுப்புடன் ஆடிய மார்ஷ், 47 பந்தில் 61 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார்.
முனாப் படேல் வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் 28 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 4 ரன்கள் மட்டுமே எடுத்த பஞ்சாப் அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. பியுஸ் சாவ்லா (10), பிரவீண் குமார் (2) அவுட்டாகாமல் இருந்தனர். மும்பை அணி சார்பில் ஹர்பஜன், மலிங்கா, முனாப் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். "ஆல்-ரவுண்டராக அசத்திய மும்பை அணியின் போலார்டு, ஆட்ட நாயகன் விருதை கைப்பற்றினார்.
ஸ்கோர் போர்டு
மும்பை இந்தியன்ஸ்
ஜேக்கப்ஸ் (ப)பிபுல் 10(10)
சச்சின் (கே)அபிஷேக் (ப)ஹாரிஸ் 51(45)
அம்பதி (கே)கார்த்திக் (ப)சாவ்லா 51(37)
போலார்டு (கே)வல்தாட்டி (ப)சாவ்லா 20(11)
ரோகித் (கே)ஹசி (ப)ஹாரிஸ் 18(11)
சைமண்ட்ஸ் -அவுட் இல்லை- 4(6)
சுமன் -அவுட் இல்லை- 0(0)
உதிரிகள் 5
மொத்தம் (20 ஓவரில், 5 விக்.,) 159
விக்கெட் வீழ்ச்சி: 1-14(ஜேக்கப்ஸ்), 2-109(அம்பதி), 3-129(சச்சின்), 4-144(போலார்டு), 5-158(ரோகித்).
பந்துவீச்சு: பட் 4-0-26-0, பிரவீண் 3-0-28-0, பிபுல் 4-0-22-1, ஹாரிஸ் 4-0-33-2, சாவ்லா 4-0-37-2, வல்தாட்டி 1-0-10-0.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
வல்தாட்டி (கே)போலார்டு (ப)சைமண்ட்ஸ் 33(38)
கில்கிறிஸ்ட் எல்.பி.டபிள்யு.,(ப)ஹர்பஜன் 0(2)
மார்ஷ் (கே)சச்சின் (ப)மலிங்கா 61(47)
ஹசி (கே)ரோகித் (ப)முனாப் 1(5)
கார்த்திக் எல்.பி.டபிள்யு.,(ப)போலார்டு 1(2)
அபிஷேக் (கே)சைமண்ட்ஸ் (ப)ஹர்பஜன் 14(9)
பிபுல் (ப)மலிங்கா 1(2)
சாவ்லா -அவுட் இல்லை- 10(10)
ஹாரிஸ் (கே)போலார்டு (ப)முனாப் 1(2)
பிரவீண் -அவுட் இல்லை- 2(3)
உதிரிகள் 12
மொத்தம் (20 ஓவரில், 8 விக்.,) 136
விக்கெட் வீழ்ச்சி: 1-1(கில்கிறிஸ்ட்), 2-73(வல்தாட்டி), 3-79(ஹசி), 4-83(கார்த்திக்), 5-113(அபிஷேக்), 6-116(பிபுல்), 7-131(மார்ஷ்), 8-132(ஹாரிஸ்).
பந்துவீச்சு: ஹர்பஜன் 4-0-25-2, மலிங்கா 4-0-19-2, நேசிம் 3-0-22-0, முனாப் 4-0-18-2, சுமன் 1-0-12-0, போலார்டு 3-0-18-1, சைமண்ட்ஸ் 1-0-11-1.

மும்பை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, கடைசி பந்தில் "திரில்' வெற்றி பெற்றது. கடைசி வரை போராடிய யுவராஜ் சிங்கின் புனே வாரியர்ஸ் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ்-புனே வாரியர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற புனே அணி கேப்டன் யுவராஜ் சிங், பேட்டிங் தேர்வு செய்தார்.
ஹர்பஜன் இல்லை:
இப்போட்டிக்கான இரு அணியிலும் தலா இரண்டு மாற்றம் செய்யப்பட்டது. மும்பை அணியில் ஹர்பஜன் சிங், டேவிட் ஜேக்கப்ஸ் நீக்கப்பட்டு, ஜேம்ஸ் பிராங்க்ளின், அபு நேசிம் அகமது வாய்ப்பு பெற்றனர். புனே அணியில் ஸ்டீவன் ஸ்மித், பார்னல் நீக்கப்பட்டு டிம் பெய்னே, முரளி கார்த்திக் தேர்வு செய்யப்பட்டனர்.
விக்கெட் "மடமட':
முதலில் பேட்டிங் செய்த புனே அணிக்கு, "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்தனர். நேசிம் அகமது வீசிய ஆட்டத்தின் 4வது ஓவரில் ஜெசி ரைடர் (12), மிதுன் மன்ஹாஸ் (0) அவுட்டானார்கள். முனாப் படேல் வீசிய 5வது ஓவரில் டிம் பெய்னே (2), யுவராஜ் சிங் (0) பெவிலியன் திரும்பினர். இதனால் புனே அணி 17 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
உத்தப்பா ஆறுதல்:
பின் இணைந்த ராபின் உத்தப்பா, மோனிஷ் மிஸ்ரா ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. மும்பை பந்துவீச்சை எளிதாக சமாளித்த இந்த ஜோடி, 5வது விக்கெட்டுக்கு 35 ரன்கள் சேர்த்தபோது மோனிஷ் மிஸ்ரா (12) அவுட்டானார். அடுத்து வந்த முரளி கார்த்திக் (11) நிலைக்கவில்லை. மறுமுனையில் பொறுப்பாக ஆடிய உத்தப்பா, 37 பந்தில் ஒரு சிக்சர், 6 பவுண்டரி உட்பட 45 ரன்கள் எடுத்து அரைசத வாய்ப்பை இழந்தார். அடுத்து களமிறங்கிய பார்னல் (9), ஸ்ரீகாந்த் வாக் (2), ராகுல் சர்மா (13) சொற்ப ரன்களில் வெளியேற, புனே வாரியர்ஸ் அணி 17.2 ஓவரில் 118 ரன்களுக்கு சுருண்டது. மும்பை சார்பில் முனாப் படேல் 3, மொர்டசா, மலிங்கா, நேசிம் அகமது தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
சச்சின் நம்பிக்கை:
சுலப இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, ஜேம்ஸ் பிராங்க்ளின் (6) ஏமாற்றம் அளித்தார். பின் இணைந்த சச்சின், அம்பாதி ராயுடு ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நிதானமாக ஆடிய இந்த ஜோடி, 2வது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்த போது, ராகுல் சர்மா சுழலில் சச்சின் (35) சிக்கினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த அம்பாதி ராயுடு (37), தாமஸ் பந்தில் வெளியேறினார்.
திரில் வெற்றி:
அடுத்து வந்த சைமண்ட்ஸ், ரோகித் சர்மா ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்டது. முரளி கார்த்திக் வீசிய கடைசி ஓவரின் முதல் மூன்று பந்தில் தலா ஒரு ரன் எடுக்கப்பட்டது. நான்காவது பந்தை சைமண்ட்ஸ் வீணடிக்க, இரண்டு பந்தில் இரண்டு ரன்கள் என நெருக்கடி ஏற்பட்டது. ஐந்தாவது பந்தில் சைமண்ட்ஸ் ஒரு ரன் எடுக்க, கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. இதில் ஒரு "சூப்பர் சிக்சர்' அடித்த ரோகித் சர்மா, வெற்றியை உறுதி செய்தார். மும்பை அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் (20), சைமண்ட்ஸ் (16) அவுட்டாகாமல் இருந்தனர். புனே அணி சார்பில் தாமஸ், வாக், ராகுல் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக மும்பை அணியின் முனாப் படேல் தேர்வு செய்யப்பட்டார்.

மும்பை இந்தியன்ஸ் "திரில்' வெற்றி * புனே வாரியர்ஸ் ஏமாற்றம்

மும்பை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, கடைசி பந்தில் "திரில்' வெற்றி பெற்றது. கடைசி வரை போராடிய யுவராஜ் சிங்கின் புனே வாரியர்ஸ் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ்-புனே வாரியர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற புனே அணி கேப்டன் யுவராஜ் சிங், பேட்டிங் தேர்வு செய்தார்.
ஹர்பஜன் இல்லை:
இப்போட்டிக்கான இரு அணியிலும் தலா இரண்டு மாற்றம் செய்யப்பட்டது. மும்பை அணியில் ஹர்பஜன் சிங், டேவிட் ஜேக்கப்ஸ் நீக்கப்பட்டு, ஜேம்ஸ் பிராங்க்ளின், அபு நேசிம் அகமது வாய்ப்பு பெற்றனர். புனே அணியில் ஸ்டீவன் ஸ்மித், பார்னல் நீக்கப்பட்டு டிம் பெய்னே, முரளி கார்த்திக் தேர்வு செய்யப்பட்டனர்.
விக்கெட் "மடமட':
முதலில் பேட்டிங் செய்த புனே அணிக்கு, "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்தனர். நேசிம் அகமது வீசிய ஆட்டத்தின் 4வது ஓவரில் ஜெசி ரைடர் (12), மிதுன் மன்ஹாஸ் (0) அவுட்டானார்கள். முனாப் படேல் வீசிய 5வது ஓவரில் டிம் பெய்னே (2), யுவராஜ் சிங் (0) பெவிலியன் திரும்பினர். இதனால் புனே அணி 17 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
உத்தப்பா ஆறுதல்:
பின் இணைந்த ராபின் உத்தப்பா, மோனிஷ் மிஸ்ரா ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. மும்பை பந்துவீச்சை எளிதாக சமாளித்த இந்த ஜோடி, 5வது விக்கெட்டுக்கு 35 ரன்கள் சேர்த்தபோது மோனிஷ் மிஸ்ரா (12) அவுட்டானார். அடுத்து வந்த முரளி கார்த்திக் (11) நிலைக்கவில்லை. மறுமுனையில் பொறுப்பாக ஆடிய உத்தப்பா, 37 பந்தில் ஒரு சிக்சர், 6 பவுண்டரி உட்பட 45 ரன்கள் எடுத்து அரைசத வாய்ப்பை இழந்தார். அடுத்து களமிறங்கிய பார்னல் (9), ஸ்ரீகாந்த் வாக் (2), ராகுல் சர்மா (13) சொற்ப ரன்களில் வெளியேற, புனே வாரியர்ஸ் அணி 17.2 ஓவரில் 118 ரன்களுக்கு சுருண்டது. மும்பை சார்பில் முனாப் படேல் 3, மொர்டசா, மலிங்கா, நேசிம் அகமது தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
சச்சின் நம்பிக்கை:
சுலப இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, ஜேம்ஸ் பிராங்க்ளின் (6) ஏமாற்றம் அளித்தார். பின் இணைந்த சச்சின், அம்பாதி ராயுடு ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நிதானமாக ஆடிய இந்த ஜோடி, 2வது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்த போது, ராகுல் சர்மா சுழலில் சச்சின் (35) சிக்கினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த அம்பாதி ராயுடு (37), தாமஸ் பந்தில் வெளியேறினார்.
திரில் வெற்றி:
அடுத்து வந்த சைமண்ட்ஸ், ரோகித் சர்மா ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்டது. முரளி கார்த்திக் வீசிய கடைசி ஓவரின் முதல் மூன்று பந்தில் தலா ஒரு ரன் எடுக்கப்பட்டது. நான்காவது பந்தை சைமண்ட்ஸ் வீணடிக்க, இரண்டு பந்தில் இரண்டு ரன்கள் என நெருக்கடி ஏற்பட்டது. ஐந்தாவது பந்தில் சைமண்ட்ஸ் ஒரு ரன் எடுக்க, கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. இதில் ஒரு "சூப்பர் சிக்சர்' அடித்த ரோகித் சர்மா, வெற்றியை உறுதி செய்தார். மும்பை அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் (20), சைமண்ட்ஸ் (16) அவுட்டாகாமல் இருந்தனர். புனே அணி சார்பில் தாமஸ், வாக், ராகுல் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக மும்பை அணியின் முனாப் படேல் தேர்வு செய்யப்பட்டார்.


எகிப்தில் அதிபர் முபாரக்குக்கு எதிராக பயங்கர கலவரம் வெடித்துள்ளதா‌ல் அங்கு தவித்து கொண்டிருக்கும் இந்தியர்களை அழைத்து வர தனி விமானம் அனுப்பப்பட்டது.

முதல் கட்டமாக நேற்று 320 பேர் மும்பை வந்து சேர்ந்தனர். மேலும் ஒரு தனி விமானம் மூலம் 280 பேர் இன்று அதிகாலை மும்பை வந்து சேர்ந்தனர்.

இதற்கிடையே, எகிப்து தலைநகர் கெய்ரோவில் இன்று லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது.

எகிப்தில் ௦இருந்து 280 பேர் இ‌ந்‌தியா வ‌ந்தன‌ர்


எகிப்தில் அதிபர் முபாரக்குக்கு எதிராக பயங்கர கலவரம் வெடித்துள்ளதா‌ல் அங்கு தவித்து கொண்டிருக்கும் இந்தியர்களை அழைத்து வர தனி விமானம் அனுப்பப்பட்டது.

முதல் கட்டமாக நேற்று 320 பேர் மும்பை வந்து சேர்ந்தனர். மேலும் ஒரு தனி விமானம் மூலம் 280 பேர் இன்று அதிகாலை மும்பை வந்து சேர்ந்தனர்.

இதற்கிடையே, எகிப்து தலைநகர் கெய்ரோவில் இன்று லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது.


எண்ணெய் குழாய் வெடித்து எண்ணெய் கடலில் கொட்டியதால், மும்பை கடல் மீண்டும் மாசடைந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், மும்பை கடலில் வந்துகொண்டிருந்த எண்ணெய் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த டேங்கர்களில் இருந்த எண்ணெய் கடலில் கொட்டியதால், கடல் பெருமளவில் சேதமடைந்தது.

பல்வேறு நடவடிக்கைகளுக்கு பின்னரே, நீண்ட நாட்கள் கழித்து மும்பை கடலில் எண்ணெய் மாசு நீங்கியது.

இந்நிலையில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் (ஓஎன்ஜிசி) சார்பில், மும்பை கடலோரத்திலிருந்து 80 கி.மீ. தொலைவில் பதிக்கப்பட்டிருந்த எண்ணெய் குழாய், இன்று காலை 8/45 மணியளவில் வெடித்தது.

இதனால் குழாய் வழியாக சென்று கொண்டிருந்த எண்ணெ கடலில் கொட்டி, கடல் மீண்டும் மாசடைந்துள்ளது..

இருப்பினும் மதியத்திற்குள் குழாய் வெடிப்பு சரி செய்யப்பட்டு, எண்ணெய் கொட்டுவது நிறுத்தப்பட்டதாக ஓஎன்ஜிசி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மும்பை கடல் மீண்டும் மாசடைந்தது


எண்ணெய் குழாய் வெடித்து எண்ணெய் கடலில் கொட்டியதால், மும்பை கடல் மீண்டும் மாசடைந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், மும்பை கடலில் வந்துகொண்டிருந்த எண்ணெய் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த டேங்கர்களில் இருந்த எண்ணெய் கடலில் கொட்டியதால், கடல் பெருமளவில் சேதமடைந்தது.

பல்வேறு நடவடிக்கைகளுக்கு பின்னரே, நீண்ட நாட்கள் கழித்து மும்பை கடலில் எண்ணெய் மாசு நீங்கியது.

இந்நிலையில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் (ஓஎன்ஜிசி) சார்பில், மும்பை கடலோரத்திலிருந்து 80 கி.மீ. தொலைவில் பதிக்கப்பட்டிருந்த எண்ணெய் குழாய், இன்று காலை 8/45 மணியளவில் வெடித்தது.

இதனால் குழாய் வழியாக சென்று கொண்டிருந்த எண்ணெ கடலில் கொட்டி, கடல் மீண்டும் மாசடைந்துள்ளது..

இருப்பினும் மதியத்திற்குள் குழாய் வெடிப்பு சரி செய்யப்பட்டு, எண்ணெய் கொட்டுவது நிறுத்தப்பட்டதாக ஓஎன்ஜிசி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


மும்பை அருகே நிலத்தகராறில் எதிரியை பழி வாங்குவதற்காக அவரது வீட்டருகே குப்பைத் தொட்டிக்குள் வெடிபொருட்களை பதுக்கிவைத்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். 

மும்பை புறநகர் பகுதியான மலாட் என்ற இடத்தை சேர்ந்த சலீம் கான் என்பவருக்கும், அவரது உறவினர்களுக்கும் இடையே நிலத் தகராறு இருந்துவந்தது. 

இதனையடுத்து சலீம் கானை பழிவாங்கும் எண்ணத்தில் அவரை தீவிரவாதி போல் காட்டி காவல்துறையிடம் மாட்டிவிட அவரது உறவினர்கள் சதித் திட்டம் தீட்டினர். 

இந்நிலையில், அவரது வீட்டின் அருகே உள்ள குப்பைத் தொட்டியில் வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் வெடிமருந்து, பால்பேரிங்குகள், காரின் நட்டுகள் மற்றும் போல்ட்டுகள் ஆகியவை அடங்கிய பை ஒன்றை மர்ம நபர்கள் சிலர் கடந்த செவ்வாய்க்கிழமையன்று போட்டுவிட்டு சென்றுவிட்டனர். 

இந்நிலையில் குப்பைத் தொட்டியில் வெடிபொருட்கள் கிடப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று, அதனை கைப்பற்றினர். 

பின்னர் அருகிலுள்ள வீடு உரிமையாளரான சலீம் கானிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, அவருக்கும் அவரது உறவினர்களுக்கும் நிலத்தகராறு இருந்துவந்ததும், அவரை பழிவாங்க இந்த சதி நடந்திருப்பதும் தெரியவந்தது. 

இதனையடுத்து இது தொடர்பாக 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மும்பை: குப்பையில் வெடிபொருட்களை பதுக்கி வைத்த 5 பேர் கைது


மும்பை அருகே நிலத்தகராறில் எதிரியை பழி வாங்குவதற்காக அவரது வீட்டருகே குப்பைத் தொட்டிக்குள் வெடிபொருட்களை பதுக்கிவைத்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். 

மும்பை புறநகர் பகுதியான மலாட் என்ற இடத்தை சேர்ந்த சலீம் கான் என்பவருக்கும், அவரது உறவினர்களுக்கும் இடையே நிலத் தகராறு இருந்துவந்தது. 

இதனையடுத்து சலீம் கானை பழிவாங்கும் எண்ணத்தில் அவரை தீவிரவாதி போல் காட்டி காவல்துறையிடம் மாட்டிவிட அவரது உறவினர்கள் சதித் திட்டம் தீட்டினர். 

இந்நிலையில், அவரது வீட்டின் அருகே உள்ள குப்பைத் தொட்டியில் வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் வெடிமருந்து, பால்பேரிங்குகள், காரின் நட்டுகள் மற்றும் போல்ட்டுகள் ஆகியவை அடங்கிய பை ஒன்றை மர்ம நபர்கள் சிலர் கடந்த செவ்வாய்க்கிழமையன்று போட்டுவிட்டு சென்றுவிட்டனர். 

இந்நிலையில் குப்பைத் தொட்டியில் வெடிபொருட்கள் கிடப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று, அதனை கைப்பற்றினர். 

பின்னர் அருகிலுள்ள வீடு உரிமையாளரான சலீம் கானிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, அவருக்கும் அவரது உறவினர்களுக்கும் நிலத்தகராறு இருந்துவந்ததும், அவரை பழிவாங்க இந்த சதி நடந்திருப்பதும் தெரியவந்தது. 

இதனையடுத்து இது தொடர்பாக 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

முக நூல்

Popular Posts