
சிறந்த ஆளுமையின் வேரை அழிப்பது மட்டுமின்றி, நமது நாட்டின் மதிப்பை பன்னாட்டு அளவில் தாழ்த்துகிறது ஊழல் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
தனது தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிற்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாற்றுகள் கூறப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் நடைபெற்றுவரும் மாநில அரசுகளின் தலைமை செயலர்கள் மாநாட்டில் இன்று காலை உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சி்ங் இவ்வாறு கூறியுள்ளார்.
\
“மிகச் சிறந்த ஆளுமையின் வேலை ஊழல் அழிக்கிறது. வேகமான வளர்ச்சிக்கு எதிரானது ஊழல், அனைத்து தரப்பு மக்களையும் முன்னேற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் நாம் மேற்கொள்ளும் அனைத்து திட்டகங்கள் எல்லாவற்றையும் சிதைக்கிறது அல்லது தடுத்துவிடுகிறது. இது நமது நாட்டின் மதிப்பை பன்னாட்டு அளவில் குறைக்கிறது. நமது மக்களே நம்மை மதிப்பின்றி பார்க்கும் நிலையை ஏற்படுத்தி விடுகிறது” என்று கூறியுள்ள மன்மோகன் சிங், ஊழலை நேரிடையாக, துணிச்சலாக, உடனடியாக எதிர்கொண்டு வீழ்த்த வேண்டும் என்றார்.
0 comments :
Post a Comment