background img

புதிய வரவு

இரண்டாவது ஒருநாள்: இலங்கை வெற்றி

கொழும்புவில் இலங்கை மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகளை இலங்கை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதன் மூலம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

வெற்றி பெற 204 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி தில்ஷான் விக்கெட்டை அவரது சொந்த எண்ணிக்கையான 11 ரன்களில் ராம்பாலிடம் இழந்தது.

அதன் பிறகு ரோச், ராம்பால், சம்மி, கெய்ல் ஆகியோர் நெருக்க ரன் விகிதம் மெதுவாகவே ஏறியது. தரங்காவும் ஜெயவர்தனேயும் 14.3 ஓவர்களில் ஸ்கோரை 46 ரன்களுக்குக் கொண்டு சென்றபோது மழை வரத்தொடங்கியது. பிறகு ஆட்டம் 3.15 மணிக்குத் துவங்கியபோது இலக்கு 47 ஓவர்களில் 197 ரன்களாகக் குறக்கப்பட்டது.

இதில் உபுல் தரங்கா அபாரமாக விளையாடி 101 ரன்களையும், ஜெயவர்தனே 46 பந்துகளில் 48 ரன்களையும் எடுத்து இன்னும் 27 பந்துகள் மீதமிருக்க 199/2 என்று வெற்றி பெறச் செய்தனர்.

இடையில் சங்கக்கார 20 ரன்களில் பிராவோவிடம் ஆட்டமிழந்தார். ஜெயவர்தனேயும், தரங்காவும் 97 ரன்களை ஆட்டமிழக்காமல் சேர்த்தனர்.

ஆட்டநாயகனாக உப்புத் தரங்கா தேர்வு செய்யப்பட்டார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts