background img

புதிய வரவு

Showing posts with label 2 G Spectrum. Show all posts
Showing posts with label 2 G Spectrum. Show all posts
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியைச் சந்திக்க முன்னாள் மத்திய அமைச்சர் ராசா விரும்புகிறாராம். இதற்காக சென்னை வர விரும்பும் அவர், கோர்ட் அனுமதி கோரி விண்ணப்பிக்கவுள்ளார். கிடைத்தவுடன் சென்னை வருவார் என்று தெரிகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கி கைதான முதல் நபர் ராசா. மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்து வந்த ராசா, இந்த வழக்கில் சிக்கி கைதான கனிமொழி உள்ளிட்ட அனைவரும் ஜாமீனில் விடுதலையாகி விட்ட நிலையில் கடைசி ஆளாக ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தார்.

ஏப்ரல் 15ம் தேதி ஜாமீனில் விடுதலையான ராசா, டெல்லியை விட்டு எங்கும் போகக் கூடாது என்று நிபந்தனையுடன் விடுதலையாகியுள்ளார்.எனவே தொடர்ந்து டெல்லியிலேயே தங்கியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது கருணாநிதியைச் சந்திக்க ராசா விரும்புகிறார். கருணாநிதிக்கு ஜூன் 3ம் தேதி பிறந்த நாள் வருகிறது. எனவே அன்று அவரை சந்தித்து வாழ்த்து கூறவும் ஆசி பெறவும் அவர் விரும்புவதாக தெரிகிறது. இதற்காக தான் சென்னைக்குச் செல்ல அனுமதி வேண்டும் என்று கோரி கோர்ட்டை அணுக அவர் திட்டமிட்டுள்ளாராம்.

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்து அவர் விடுதலையான போது சென்னைக்கு வந்த போது மிகப் பிரமாண்டமான வரவேற்பை திமுக அளித்தது. அதேபோல ராசாவும் சென்னைக்கு வரும்போது பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கருணாநிதியைச் சந்திக்க விரும்பும் ராசா... அனுமதி கோரி கோர்ட்டில் விண்ணப்பிக்கிறார்!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியைச் சந்திக்க முன்னாள் மத்திய அமைச்சர் ராசா விரும்புகிறாராம். இதற்காக சென்னை வர விரும்பும் அவர், கோர்ட் அனுமதி கோரி விண்ணப்பிக்கவுள்ளார். கிடைத்தவுடன் சென்னை வருவார் என்று தெரிகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கி கைதான முதல் நபர் ராசா. மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்து வந்த ராசா, இந்த வழக்கில் சிக்கி கைதான கனிமொழி உள்ளிட்ட அனைவரும் ஜாமீனில் விடுதலையாகி விட்ட நிலையில் கடைசி ஆளாக ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தார்.

ஏப்ரல் 15ம் தேதி ஜாமீனில் விடுதலையான ராசா, டெல்லியை விட்டு எங்கும் போகக் கூடாது என்று நிபந்தனையுடன் விடுதலையாகியுள்ளார்.எனவே தொடர்ந்து டெல்லியிலேயே தங்கியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது கருணாநிதியைச் சந்திக்க ராசா விரும்புகிறார். கருணாநிதிக்கு ஜூன் 3ம் தேதி பிறந்த நாள் வருகிறது. எனவே அன்று அவரை சந்தித்து வாழ்த்து கூறவும் ஆசி பெறவும் அவர் விரும்புவதாக தெரிகிறது. இதற்காக தான் சென்னைக்குச் செல்ல அனுமதி வேண்டும் என்று கோரி கோர்ட்டை அணுக அவர் திட்டமிட்டுள்ளாராம்.

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்து அவர் விடுதலையான போது சென்னைக்கு வந்த போது மிகப் பிரமாண்டமான வரவேற்பை திமுக அளித்தது. அதேபோல ராசாவும் சென்னைக்கு வரும்போது பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இதுவரை இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஸ்பெக்ட்ரம் வழக்கில் முதன் முதலாக கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, தொலைத் தொடர்புத் துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ராசாவின் உதவியாளர் சந்தோலியா ஆகியோர் கைதானார்கள்.

பிறகு டிபிரியாலிட்டி நிறுவன இயக்குனர் பல்வா கைதானார். இதையடுத்து தனியார் தொலைத் தொடர்புத் துறை நிறுவன உயர் அதிகாரிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு பல்வா தம்பி, ஒரு இடைத்தரகர், சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கரீம் மொரனி ஆகியோர் கைதானார்கள்.

நேற்று கனிமொழி, சரத்குமார் கைது செய்யப்பட்டுள்ள தொடர்ந்து இது வரை ஸ்பெக்ட்ரம் வழக்கில் 14 பேர் கைதாகி உள்ளனர். இவர்களில் கரீம் மொரனி தவிர மற்ற 13 பேரும் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக 3-வது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தயார் செய்து வருகிறது. அடுத்த மாதம் (ஜூன்) 2-வது வாரம் அல்லது மாத இறுதியில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதில் லூப் டெலிகாம் மற்றும் எஸ்ஸார் நிறுவனத்திடம் நடத்தப்பட்ட விசாரணை விவரங்கள் இடம் பெறும்.

லூப் டெலிகாம் நிறுவனம் முறைகேடாக 21 உரிமங்கள் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. 3-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு மேலும் சில தனியார் தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: 3-வது குற்றப்பத்திரிகை அடுத்த மாதம் தாக்கல்

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இதுவரை இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஸ்பெக்ட்ரம் வழக்கில் முதன் முதலாக கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, தொலைத் தொடர்புத் துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ராசாவின் உதவியாளர் சந்தோலியா ஆகியோர் கைதானார்கள்.

பிறகு டிபிரியாலிட்டி நிறுவன இயக்குனர் பல்வா கைதானார். இதையடுத்து தனியார் தொலைத் தொடர்புத் துறை நிறுவன உயர் அதிகாரிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு பல்வா தம்பி, ஒரு இடைத்தரகர், சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கரீம் மொரனி ஆகியோர் கைதானார்கள்.

நேற்று கனிமொழி, சரத்குமார் கைது செய்யப்பட்டுள்ள தொடர்ந்து இது வரை ஸ்பெக்ட்ரம் வழக்கில் 14 பேர் கைதாகி உள்ளனர். இவர்களில் கரீம் மொரனி தவிர மற்ற 13 பேரும் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக 3-வது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தயார் செய்து வருகிறது. அடுத்த மாதம் (ஜூன்) 2-வது வாரம் அல்லது மாத இறுதியில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதில் லூப் டெலிகாம் மற்றும் எஸ்ஸார் நிறுவனத்திடம் நடத்தப்பட்ட விசாரணை விவரங்கள் இடம் பெறும்.

லூப் டெலிகாம் நிறுவனம் முறைகேடாக 21 உரிமங்கள் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. 3-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு மேலும் சில தனியார் தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நியூயார்க்: அமெரிக்காவின், "டைம்ஸ்' இதழ் வெளியிட்டுள்ள, முறைகேடாக அதிகார துஷ்பிரயோகம் செய்து அதனால் அவப்பெயர் பெற்ற தலைவர்கள் பட்டியலில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு இரண்டாமிடம் கிடைத்திருக்கிறது.

நியூயார்க்கில் இருந்து வெளியாகும், "டைம்ஸ்' இதழின் இப்பட்டியலில், முதலிடத்தில் இருப்பவர் டேனியல் எல்ஸ்பெர்க். இவர், அமெரிக்க முன்னாள் அதிபர் ரிச்சர்டு நிக்சன் அரசில், அந்நாட்டு ராணுவ ரகசியங்களை கசிய விட்டவர். இரண்டாம் இடத்தில் இருப்பவர், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா. லிபியா ஆட்சியாளர் முவாம்மர் கடாபி, வடகொரியா சர்வாதிகார ஆட்சியாளர் கிம் ஜாங் - 2, இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி ஆகியோரை பந்தயத்தில் முந்தி, ராஜா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இவர்கள் எல்லாம் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், ராஜா குறித்து, "டைம்ஸ்' இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், "முன்னர், அசைக்க முடியாத அளவிற்கு அதிகாரத்தில் பீடத்தில் அமர்ந்திருந்த இந்திய கூட்டணி ஆட்சிக்கு, தற்போது, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் சவாலாக அமைந்துள்ளது. இந்தியாவில் எப்போதும் நடைபெறும், குதிரை பேரத்தின் மூலம் மத்திய அமைச்சர் பதவியை பெற்றவர் ராஜா. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலால், இந்திய அரசுக்கு 32 ஆயிரத்து 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றிலேயே, இது மிகப்பெரிய ஊழல். இந்த ஊழலால், ராஜாவைச் சேர்ந்த கட்சி கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் பெரும் தோல்வியைத் தழுவியது. இந்திய நீதிமன்றத்தில், இந்த வழக்கு இஞ்ச், இஞ்சாக நகர்ந்து முன்னேறி வருகிறது' என்று அதில் கூறப்பட்டுள்ளது. இப்பட்டியலில், டைகோ தலைமை செயல் அதிகாரி டென்னிஸ் கோஸ்லோஸ்கி, இஸ்ரேல் முன்னாள் அதிபர் மோசி கத்சவ், சீனாவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் தலைவர் ஜெங் ஜியாவ்யு மற்றும் 1992ம் ஆண்டில் அமெரிக்காவின் உள்துறை அமைச்சராக இருந்த ஆல்பர்ட் பால் ஆகியோரின் பெயர் இடம் பெற்றுள்ளது.

அவப்பெயர் பெற்ற தலைவர்களில் ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு இரண்டாமிடம்

நியூயார்க்: அமெரிக்காவின், "டைம்ஸ்' இதழ் வெளியிட்டுள்ள, முறைகேடாக அதிகார துஷ்பிரயோகம் செய்து அதனால் அவப்பெயர் பெற்ற தலைவர்கள் பட்டியலில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு இரண்டாமிடம் கிடைத்திருக்கிறது.

நியூயார்க்கில் இருந்து வெளியாகும், "டைம்ஸ்' இதழின் இப்பட்டியலில், முதலிடத்தில் இருப்பவர் டேனியல் எல்ஸ்பெர்க். இவர், அமெரிக்க முன்னாள் அதிபர் ரிச்சர்டு நிக்சன் அரசில், அந்நாட்டு ராணுவ ரகசியங்களை கசிய விட்டவர். இரண்டாம் இடத்தில் இருப்பவர், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா. லிபியா ஆட்சியாளர் முவாம்மர் கடாபி, வடகொரியா சர்வாதிகார ஆட்சியாளர் கிம் ஜாங் - 2, இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி ஆகியோரை பந்தயத்தில் முந்தி, ராஜா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இவர்கள் எல்லாம் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், ராஜா குறித்து, "டைம்ஸ்' இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், "முன்னர், அசைக்க முடியாத அளவிற்கு அதிகாரத்தில் பீடத்தில் அமர்ந்திருந்த இந்திய கூட்டணி ஆட்சிக்கு, தற்போது, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் சவாலாக அமைந்துள்ளது. இந்தியாவில் எப்போதும் நடைபெறும், குதிரை பேரத்தின் மூலம் மத்திய அமைச்சர் பதவியை பெற்றவர் ராஜா. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலால், இந்திய அரசுக்கு 32 ஆயிரத்து 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றிலேயே, இது மிகப்பெரிய ஊழல். இந்த ஊழலால், ராஜாவைச் சேர்ந்த கட்சி கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் பெரும் தோல்வியைத் தழுவியது. இந்திய நீதிமன்றத்தில், இந்த வழக்கு இஞ்ச், இஞ்சாக நகர்ந்து முன்னேறி வருகிறது' என்று அதில் கூறப்பட்டுள்ளது. இப்பட்டியலில், டைகோ தலைமை செயல் அதிகாரி டென்னிஸ் கோஸ்லோஸ்கி, இஸ்ரேல் முன்னாள் அதிபர் மோசி கத்சவ், சீனாவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் தலைவர் ஜெங் ஜியாவ்யு மற்றும் 1992ம் ஆண்டில் அமெரிக்காவின் உள்துறை அமைச்சராக இருந்த ஆல்பர்ட் பால் ஆகியோரின் பெயர் இடம் பெற்றுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழலில், முதல்வர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி.,யுமான கனிமொழிக்கும், கலைஞர் "டிவி' நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கும் தொடர்பு இருப்பதாக, சி.பி.ஐ., தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இருவரும் கூட்டுச்சதி செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு பெயர் இடம் பெறவில்லை.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரித்து வரும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவான சி.பி.ஐ., தனது முதல் குற்றப்பத்திரிகையை கடந்த 2ம் தேதி தாக்கல் செய்திருந்தது.அந்த குற்றப்பத்திரிகையில், முன்னாள் அமைச்சர் ராஜா உட்பட ஒன்பது பேர்களின் மீது, ஐந்து விதமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அதில் முதலாவதாக, இந்திய தண்டனைச் சட்டம் ஐபிசி 120 பி (கிரிமினல் சதித் திட்டம் தீட்டுதல்) பிரிவின் கீழும், ஐபிசி 420 (ஏமாற்றுதல்) பிரிவின் கீழும், ஐபிசி 468 (போலி ஆவணங்களைத் தயாரித்தல்) பிரிவின் கீழும், ஐபிசி 471 (போலி ஆவணங்களை பயன்படுத்துதல்) பிரிவின் கீழும் மற்றும் இந்திய ஊழல் தடுப்புச் சட்டம் 1988 (அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தங்களுக்கு வேண்டப்பட்ட சிலருக்கு ஆதரவாகச் செயல்படுதல்) பிரிவின் கீழும் அதிக அளவில் குற்றங்களை இந்த ஒன்பது பேரும் செய்துள்ளதாக சி.பி.ஐ., குற்றம் சாட்டியிருந்தது.இந்நிலையில், சி.பி.ஐ., தனது இரண்டாவது குற்றப்பத்திரிகையை நேற்று பிற்பகல் 3 மணியளவில் தாக்கல் செய்தது. டில்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில், இந்த குற்றப்பத்திரிகையை நீதிபதி ஓ.பி.சைனி முன் தாக்கல் செய்யப்பட்டது.

* அதில், தமிழக முதல்வர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி.,யுமான கனிமொழி மற்றும் கலைஞர் "டிவி' நிர்வாக இயக்குனர் சரத்குமார் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இது தவிர, சுவான் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜிவ் அகர்வால், கரீம் மொரானி, அசீப் பல்வா ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றுள்ளன. ஏற்கனவே சிறையில் இருக்கும் ஷாகித் பல்வாவின் சகோதரர் தான் இந்த அசீப் பல்வா.
* ஸ்பெக்ட்ரம் உரிமத்தை சுவான் நிறுவனத்திற்கு வழங்கியதற்காக பிரதி பலனாக அளித்த லஞ்சப்பணம் 214 கோடி ரூபாய் பற்றியும்; அந்த பணம் எந்தெந்த வழிகளில் கலைஞர் "டிவி'க்கு வழங்கப்பட்டது என்பது பற்றியும்; இந்த பண பரிவர்த்தனைகளில் பங்கு பெற்ற நபர்கள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.
* அதன்படி, ராஜாவின் பெயரும் சேர்க்கப்பட்டு, லஞ்சம் வாங்கிய குற்றம் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. அதேபோல கனிமொழி, கலைஞர் "டிவி'யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகிய இருவர் மீதும் கூட்டுச் சதியில் பங்கேற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
* கலைஞர் "டிவி'க்கு பணம் வழங்கியதாக, டிபி ரியாலிட்டி குரூப்பைச் சேர்ந்த குசேகான் மற்றும் சினியுக் நிறுவனங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றின் அதிகாரிகளான கரீம் மொரானி, ராஜிவ் அகர்வால் ஆகியோரது பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.
* இந்த ஐந்து பேர் மீதும், இந்திய குற்றவியல் சட்டம் 120 பி (ஐபிசி) பிரிவு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன்படி ராஜாவின் மீது லஞ்சம் பெற்றதாகவும், கனிமொழி, சரத்குமார் ஆகியோர் மீது கிரிமினல் சதியில் ஈடுபட்டதாகவும், மொரானி, ராஜிவ் அகர்வால், அசீப் பல்வா ஆகியோர் மீது லஞ்சம் அளித்தனர் என குற்றச் செயல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

தயாளு இல்லை: குற்றப்பத்திரிகையில், முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு இடம் பெறுவார் என்ற பரபரப்பு இருந்தது. கலைஞர் "டிவி'யில் அதிகபட்சமாக 60 சதவீத பங்குகளை தயாளு வைத்திருந்தார். எனவே, அவர் பெயர் இடம்பெறுமென செய்திகள் வெளியாயின. ஆனால், அவர் பெயர் இடம் பெறாமல் தவிர்க்கப்பட்டிருந்தது. இது குறித்து தெளிவான விவரங்கள் எதுவும் கூறப்படவில்லை. இதில் அரசு பாரபட்சம் காட்டுவதாக, எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

48 பக்கம்: இரண்டாவது குற்றப்பத்திரிகை 48 பக்கங்களைக் கொண்டதாக இருந்தது. அதில் கனிமொழி பற்றி குறிப்பிடும் போது, ஸ்பெக்ட்ரம் ஊழலின் பிரதான குற்றவாளியான ராஜாவுடன் அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்தார் என்றும், கலைஞர் "டிவி' துவக்கப்படுவதற்கு தீவிர பங்காற்றினார் என்றும், தொலைத்தொடர்புத் துறையை ராஜாவுக்கு திரும்பவும் கிடைக்கச் செய்ததில் மிக முக்கிய பங்கு வகித்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல பல்வா, கோயங்கா உள்ளிட்ட பலரும் எவ்வாறு கலைஞர் "டிவி'க்கு தங்களது நிறுவனங்கள் மூலமாக லஞ்சப் பணத்தை அளிப்பதற்காக பல்வேறு முறைகேடான செயல்களில் ஈடுபட்டனர் என்றும் விளக்கப்பட்டுள்ளது. இரண்டாவது குற்றப்பத்திரிகையின் முகப்பில், சப்ளிமென்டரி-1 என்று கூறப்பட்டிருப்பதால், அடுத்தடுத்து துணை குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.

கனிமொழி மே 6ல் ஆஜர் : குற்றப்பத்திரிகையை ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து மாலையில் கூறுவதாக, 3.30 மணியளவில் நீதிபதி ஓ.பி.சைனி ஒத்தி வைத்துவிட்டு சென்றார். இதையடுத்து, மீண்டும் மாலை 5.45 மணியளவில், தனது தீர்ப்பை வழங்கிய நீதிபதி சைனி, கனிமொழிக்கு நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டார்.மேலும் அவரை, மே 6ம் தேதி, சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜராகும்படியும் தனது தீர்ப்பில் தெரிவித்தார். இதேபோல சரத்குமார், கரீம் மொரானி ஆகியோருக்கும் சம்மன் அனுப்பும்படி கூறினார். ராஜிவ் அகர்வாலையும், அசீப் பல்வாவையும் நாளை (இன்று)ஆஜர்படுத்தும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் கனிமொழிக்கு தொடர்பு: குற்றப்பத்திரிகையில் தகவல்: தயாளு பெயர் இல்லை

ஸ்பெக்ட்ரம் ஊழலில், முதல்வர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி.,யுமான கனிமொழிக்கும், கலைஞர் "டிவி' நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கும் தொடர்பு இருப்பதாக, சி.பி.ஐ., தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இருவரும் கூட்டுச்சதி செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு பெயர் இடம் பெறவில்லை.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரித்து வரும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவான சி.பி.ஐ., தனது முதல் குற்றப்பத்திரிகையை கடந்த 2ம் தேதி தாக்கல் செய்திருந்தது.அந்த குற்றப்பத்திரிகையில், முன்னாள் அமைச்சர் ராஜா உட்பட ஒன்பது பேர்களின் மீது, ஐந்து விதமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அதில் முதலாவதாக, இந்திய தண்டனைச் சட்டம் ஐபிசி 120 பி (கிரிமினல் சதித் திட்டம் தீட்டுதல்) பிரிவின் கீழும், ஐபிசி 420 (ஏமாற்றுதல்) பிரிவின் கீழும், ஐபிசி 468 (போலி ஆவணங்களைத் தயாரித்தல்) பிரிவின் கீழும், ஐபிசி 471 (போலி ஆவணங்களை பயன்படுத்துதல்) பிரிவின் கீழும் மற்றும் இந்திய ஊழல் தடுப்புச் சட்டம் 1988 (அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தங்களுக்கு வேண்டப்பட்ட சிலருக்கு ஆதரவாகச் செயல்படுதல்) பிரிவின் கீழும் அதிக அளவில் குற்றங்களை இந்த ஒன்பது பேரும் செய்துள்ளதாக சி.பி.ஐ., குற்றம் சாட்டியிருந்தது.இந்நிலையில், சி.பி.ஐ., தனது இரண்டாவது குற்றப்பத்திரிகையை நேற்று பிற்பகல் 3 மணியளவில் தாக்கல் செய்தது. டில்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில், இந்த குற்றப்பத்திரிகையை நீதிபதி ஓ.பி.சைனி முன் தாக்கல் செய்யப்பட்டது.

* அதில், தமிழக முதல்வர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி.,யுமான கனிமொழி மற்றும் கலைஞர் "டிவி' நிர்வாக இயக்குனர் சரத்குமார் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இது தவிர, சுவான் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜிவ் அகர்வால், கரீம் மொரானி, அசீப் பல்வா ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றுள்ளன. ஏற்கனவே சிறையில் இருக்கும் ஷாகித் பல்வாவின் சகோதரர் தான் இந்த அசீப் பல்வா.
* ஸ்பெக்ட்ரம் உரிமத்தை சுவான் நிறுவனத்திற்கு வழங்கியதற்காக பிரதி பலனாக அளித்த லஞ்சப்பணம் 214 கோடி ரூபாய் பற்றியும்; அந்த பணம் எந்தெந்த வழிகளில் கலைஞர் "டிவி'க்கு வழங்கப்பட்டது என்பது பற்றியும்; இந்த பண பரிவர்த்தனைகளில் பங்கு பெற்ற நபர்கள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.
* அதன்படி, ராஜாவின் பெயரும் சேர்க்கப்பட்டு, லஞ்சம் வாங்கிய குற்றம் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. அதேபோல கனிமொழி, கலைஞர் "டிவி'யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகிய இருவர் மீதும் கூட்டுச் சதியில் பங்கேற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
* கலைஞர் "டிவி'க்கு பணம் வழங்கியதாக, டிபி ரியாலிட்டி குரூப்பைச் சேர்ந்த குசேகான் மற்றும் சினியுக் நிறுவனங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றின் அதிகாரிகளான கரீம் மொரானி, ராஜிவ் அகர்வால் ஆகியோரது பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.
* இந்த ஐந்து பேர் மீதும், இந்திய குற்றவியல் சட்டம் 120 பி (ஐபிசி) பிரிவு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன்படி ராஜாவின் மீது லஞ்சம் பெற்றதாகவும், கனிமொழி, சரத்குமார் ஆகியோர் மீது கிரிமினல் சதியில் ஈடுபட்டதாகவும், மொரானி, ராஜிவ் அகர்வால், அசீப் பல்வா ஆகியோர் மீது லஞ்சம் அளித்தனர் என குற்றச் செயல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

தயாளு இல்லை: குற்றப்பத்திரிகையில், முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு இடம் பெறுவார் என்ற பரபரப்பு இருந்தது. கலைஞர் "டிவி'யில் அதிகபட்சமாக 60 சதவீத பங்குகளை தயாளு வைத்திருந்தார். எனவே, அவர் பெயர் இடம்பெறுமென செய்திகள் வெளியாயின. ஆனால், அவர் பெயர் இடம் பெறாமல் தவிர்க்கப்பட்டிருந்தது. இது குறித்து தெளிவான விவரங்கள் எதுவும் கூறப்படவில்லை. இதில் அரசு பாரபட்சம் காட்டுவதாக, எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

48 பக்கம்: இரண்டாவது குற்றப்பத்திரிகை 48 பக்கங்களைக் கொண்டதாக இருந்தது. அதில் கனிமொழி பற்றி குறிப்பிடும் போது, ஸ்பெக்ட்ரம் ஊழலின் பிரதான குற்றவாளியான ராஜாவுடன் அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்தார் என்றும், கலைஞர் "டிவி' துவக்கப்படுவதற்கு தீவிர பங்காற்றினார் என்றும், தொலைத்தொடர்புத் துறையை ராஜாவுக்கு திரும்பவும் கிடைக்கச் செய்ததில் மிக முக்கிய பங்கு வகித்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல பல்வா, கோயங்கா உள்ளிட்ட பலரும் எவ்வாறு கலைஞர் "டிவி'க்கு தங்களது நிறுவனங்கள் மூலமாக லஞ்சப் பணத்தை அளிப்பதற்காக பல்வேறு முறைகேடான செயல்களில் ஈடுபட்டனர் என்றும் விளக்கப்பட்டுள்ளது. இரண்டாவது குற்றப்பத்திரிகையின் முகப்பில், சப்ளிமென்டரி-1 என்று கூறப்பட்டிருப்பதால், அடுத்தடுத்து துணை குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.

கனிமொழி மே 6ல் ஆஜர் : குற்றப்பத்திரிகையை ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து மாலையில் கூறுவதாக, 3.30 மணியளவில் நீதிபதி ஓ.பி.சைனி ஒத்தி வைத்துவிட்டு சென்றார். இதையடுத்து, மீண்டும் மாலை 5.45 மணியளவில், தனது தீர்ப்பை வழங்கிய நீதிபதி சைனி, கனிமொழிக்கு நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டார்.மேலும் அவரை, மே 6ம் தேதி, சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜராகும்படியும் தனது தீர்ப்பில் தெரிவித்தார். இதேபோல சரத்குமார், கரீம் மொரானி ஆகியோருக்கும் சம்மன் அனுப்பும்படி கூறினார். ராஜிவ் அகர்வாலையும், அசீப் பல்வாவையும் நாளை (இன்று)ஆஜர்படுத்தும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ. கடந்த 2-ந்தேதி முதலாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இதில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, அவரது உதவியாளர் சந்தோலியா, டி.பி. ரியாலிட்டி நிறுவனத் தலைவர் பல்வா, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ஸ்வான் டெலிகாம் இயக்குனர் வினோத் கோயங்கா, யுனிடெக் வயர்லஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கவுதம் தோஷி, சுரேந்திர பிபாரா, அரிநாயர் ஆகிய 9 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.



இந்த 9 பேர் மீதும் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. அதுபோல ரிலையன்ஸ் டெலிகாம், ஸ்வான் டெலிகாம், யுனிடெக் டெலிகாம் ஆகிய 3 தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள 9 பேரில் ஆ. ராசா, பல்வா, சித்தார்த் பெகுரா, சந்தோலியா ஆகிய 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்ற 5 பேரும் இது வரை கைது ஆகவில்லை. இவர்கள் 5 பேரையும் கைது செய்ய சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்தது.

இதற்கிடையே தாங்கள் கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு 5 அதிகாரிகளும் டெல்லி ஐகோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். நேற்று இந்த வழக்கு விசாரணை நடந்தது. அப்போது 5 அதிகாரிகளுக்கும் முன் ஜாமீன் அளிக்கக்கூடாது என்று சி.பி.ஐ. மனு தாக்கல் செய்தது.

5 அதிகாரிகளும் சாட்சிகளை மிரட்டவும், தலைமறைவாகி விடவும் வாய்ப்புள்ளது. எனவே 5 பேருக்கும் முன் ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று சி.பி.ஐ. மனுவில் கூறப்பட்டிருந்தது. 5 அதிகாரிகளின் சார்பில் ஆஜரான வக்கீல்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

விசாரணையின்போது கைது செய்யப்படவில்லை என்பதால் இனி கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று வக்கீல்கள் கூறினார்கள். முன் ஜாமீன் பெறும் உரிமையை தடுக்கக்கூடாது என்றும் வக்கீல்கள் வாதிட்டனர். சுமார் 3 மணி நேரம் இந்த வழக்கு விசாரணை நடந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சைனி, 5 அதிகாரிகளுக்கும் ஜாமீன் கொடுப்பது தொடர்பாக 20-ந்தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று கூறினார். வழக்கு நிலுவையில் உள்ள காரணத்தால் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் 5 அதிகாரிகளும் 20-ந்தேதி வரை கைது செய்யப்பட மாட்டார்கள்.

அதன் பிறகு அவர்களை சி.பி.ஐ. கைது செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 5 அதிகாரிகள் மீதும் மோசடி, ஆவணங்களை திருத்தி ஏமாற்றுதல், ஊழல் செய்தால், லஞ்சம் கொடுத்தல் உள்பட பல பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெக்ட்ரம் -மேலும் 5 அதிகாரிகள் கைதாகிறார்கள்

ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ. கடந்த 2-ந்தேதி முதலாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இதில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, அவரது உதவியாளர் சந்தோலியா, டி.பி. ரியாலிட்டி நிறுவனத் தலைவர் பல்வா, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ஸ்வான் டெலிகாம் இயக்குனர் வினோத் கோயங்கா, யுனிடெக் வயர்லஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கவுதம் தோஷி, சுரேந்திர பிபாரா, அரிநாயர் ஆகிய 9 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.



இந்த 9 பேர் மீதும் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. அதுபோல ரிலையன்ஸ் டெலிகாம், ஸ்வான் டெலிகாம், யுனிடெக் டெலிகாம் ஆகிய 3 தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள 9 பேரில் ஆ. ராசா, பல்வா, சித்தார்த் பெகுரா, சந்தோலியா ஆகிய 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்ற 5 பேரும் இது வரை கைது ஆகவில்லை. இவர்கள் 5 பேரையும் கைது செய்ய சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்தது.

இதற்கிடையே தாங்கள் கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு 5 அதிகாரிகளும் டெல்லி ஐகோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். நேற்று இந்த வழக்கு விசாரணை நடந்தது. அப்போது 5 அதிகாரிகளுக்கும் முன் ஜாமீன் அளிக்கக்கூடாது என்று சி.பி.ஐ. மனு தாக்கல் செய்தது.

5 அதிகாரிகளும் சாட்சிகளை மிரட்டவும், தலைமறைவாகி விடவும் வாய்ப்புள்ளது. எனவே 5 பேருக்கும் முன் ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று சி.பி.ஐ. மனுவில் கூறப்பட்டிருந்தது. 5 அதிகாரிகளின் சார்பில் ஆஜரான வக்கீல்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

விசாரணையின்போது கைது செய்யப்படவில்லை என்பதால் இனி கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று வக்கீல்கள் கூறினார்கள். முன் ஜாமீன் பெறும் உரிமையை தடுக்கக்கூடாது என்றும் வக்கீல்கள் வாதிட்டனர். சுமார் 3 மணி நேரம் இந்த வழக்கு விசாரணை நடந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சைனி, 5 அதிகாரிகளுக்கும் ஜாமீன் கொடுப்பது தொடர்பாக 20-ந்தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று கூறினார். வழக்கு நிலுவையில் உள்ள காரணத்தால் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் 5 அதிகாரிகளும் 20-ந்தேதி வரை கைது செய்யப்பட மாட்டார்கள்.

அதன் பிறகு அவர்களை சி.பி.ஐ. கைது செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 5 அதிகாரிகள் மீதும் மோசடி, ஆவணங்களை திருத்தி ஏமாற்றுதல், ஊழல் செய்தால், லஞ்சம் கொடுத்தல் உள்பட பல பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி: 2ஜி ஊழல் விவகாரத்தி்ல் கைதாகி சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா ஜாமீன் கேட்டு இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.

2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரது உதவியாளர் சந்தோலியா, டி.பி. ரியாலிட்டி நிறுவன இயக்குனர் பல்வா, தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரியாரா ஆகியோரும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் 80,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சிபிஐ கடந்த 2ம் தேதி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. மேலும் ஒரு குற்றப்பத்திரிக்கையை இந்த மாத இறுதியில் தாக்கல் செய்யவிருக்கிறது. இதற்கிடையே சிறையில் இருக்கும் ஆ.ராசா ஜாமீனில் விடுவிக்கக்கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இதேபோன்று பல்வா, சித்தார்த் பெகுரா, சந்தோலியா ஆகியோரும் ஜாமீன் கேட்டு தனித்தனியாக மனு கொடுத்துள்ளனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை விரைவில் நடைபெறவிருக்கிறது.

2ஜி வழக்கில் ஜாமீன் கேட்டு கார்பரேட் பிரமுகர்கள் மனு

2ஜி வழக்கி்ல் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் கார்பரேட் நிறுவன பிரமுகர்கள் ஜாமீன் கேட்டு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் மனு குறி்த்து பதில் அளிக்குமாறு சிபிஐயை நீதிமன்றம் கேட்டு்க் கொண்டுள்ளது.

ஸ்வான் டெலிகாம் நிறுவன இயக்குநர் வினோத் கோயங்கா, யூனிடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா மற்றும் ரிலையன்ஸ் ஏடிஏ குழுமத்தின் உயர் அதிகாரிகளான கௌதம் டோஷி, சுரேந்திர பிபாரா, ஹரி நாயர் ஆகியோர் இன்று முதன்முறையாக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

இந்நிலையில் சிபிஐ சிறப்பு வழக்கறிஞராக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள யு.யு.லலித் அவர்களுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.

ஜாமீன் மனுக்களுக்கு பதில் அளிக்க லலித் கால அவகாசம் கேட்டார். இதையடுத்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி் சைனி இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். மேலும், அன்று சிபிஐ பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

2ஜி ஊழல்: ஜாமீன் கேட்டு ராசா மனு-விரைவில் விசாரணை

டெல்லி: 2ஜி ஊழல் விவகாரத்தி்ல் கைதாகி சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா ஜாமீன் கேட்டு இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.

2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரது உதவியாளர் சந்தோலியா, டி.பி. ரியாலிட்டி நிறுவன இயக்குனர் பல்வா, தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரியாரா ஆகியோரும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் 80,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சிபிஐ கடந்த 2ம் தேதி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. மேலும் ஒரு குற்றப்பத்திரிக்கையை இந்த மாத இறுதியில் தாக்கல் செய்யவிருக்கிறது. இதற்கிடையே சிறையில் இருக்கும் ஆ.ராசா ஜாமீனில் விடுவிக்கக்கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இதேபோன்று பல்வா, சித்தார்த் பெகுரா, சந்தோலியா ஆகியோரும் ஜாமீன் கேட்டு தனித்தனியாக மனு கொடுத்துள்ளனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை விரைவில் நடைபெறவிருக்கிறது.

2ஜி வழக்கில் ஜாமீன் கேட்டு கார்பரேட் பிரமுகர்கள் மனு

2ஜி வழக்கி்ல் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் கார்பரேட் நிறுவன பிரமுகர்கள் ஜாமீன் கேட்டு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் மனு குறி்த்து பதில் அளிக்குமாறு சிபிஐயை நீதிமன்றம் கேட்டு்க் கொண்டுள்ளது.

ஸ்வான் டெலிகாம் நிறுவன இயக்குநர் வினோத் கோயங்கா, யூனிடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா மற்றும் ரிலையன்ஸ் ஏடிஏ குழுமத்தின் உயர் அதிகாரிகளான கௌதம் டோஷி, சுரேந்திர பிபாரா, ஹரி நாயர் ஆகியோர் இன்று முதன்முறையாக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

இந்நிலையில் சிபிஐ சிறப்பு வழக்கறிஞராக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள யு.யு.லலித் அவர்களுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.

ஜாமீன் மனுக்களுக்கு பதில் அளிக்க லலித் கால அவகாசம் கேட்டார். இதையடுத்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி் சைனி இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். மேலும், அன்று சிபிஐ பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொழில் தரகர் நீரா ராடியாவுக்கு தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ஸ்பெக்ட்ரம் தொடர்பாக அவர் பல்வேறு தொழில் அதிபர்களிடமும் மற்றவர்களிடமும் டெலிபோனில் பேசிய டேப் ஆதாரங்கள் சிக்கி இருந்தன. அதுபற்றி நீரா ராடியாவிடம் சி.பி.ஐ. பல்வேறு கட்டமாக விசாரணை நடத்தியது.

சமீபத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு அவரிடம் விசாரித்தது. இந்த நிலையில் நேற்று நீரா ராடியா திடீரென மயங்கி விழுந்தார். பேச்சு, மூச்சு இல்லாமல் மயங்கி கிடந்த அவரை தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்த்தனர். நீண்ட நேர சிகிச்சைக்கு பிறகு அவர் மயக்கம் தெளிந்தார்.

இதுபற்றி டாக்டர்களிடம் கேட்டபோது, ராடியா உடலில் ஏற்பட்ட ஏதோ பாதிப்பின் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளது.இதை கண்டறிய பல்வேறு சோதனைகளை நடத்தி வருகிறோம். சோதனை முடிவில்தான் மயக்கத்துக்கான காரணம் தெரிய வரும். பின்னர் அதற்குரிய சிகிச்சை அளிக்கப்படும் என்றனர்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கிய நீரா ராடியா மயங்கி விழுந்தார்; ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொழில் தரகர் நீரா ராடியாவுக்கு தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ஸ்பெக்ட்ரம் தொடர்பாக அவர் பல்வேறு தொழில் அதிபர்களிடமும் மற்றவர்களிடமும் டெலிபோனில் பேசிய டேப் ஆதாரங்கள் சிக்கி இருந்தன. அதுபற்றி நீரா ராடியாவிடம் சி.பி.ஐ. பல்வேறு கட்டமாக விசாரணை நடத்தியது.

சமீபத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு அவரிடம் விசாரித்தது. இந்த நிலையில் நேற்று நீரா ராடியா திடீரென மயங்கி விழுந்தார். பேச்சு, மூச்சு இல்லாமல் மயங்கி கிடந்த அவரை தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்த்தனர். நீண்ட நேர சிகிச்சைக்கு பிறகு அவர் மயக்கம் தெளிந்தார்.

இதுபற்றி டாக்டர்களிடம் கேட்டபோது, ராடியா உடலில் ஏற்பட்ட ஏதோ பாதிப்பின் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளது.இதை கண்டறிய பல்வேறு சோதனைகளை நடத்தி வருகிறோம். சோதனை முடிவில்தான் மயக்கத்துக்கான காரணம் தெரிய வரும். பின்னர் அதற்குரிய சிகிச்சை அளிக்கப்படும் என்றனர்.

முக நூல்

Popular Posts