background img

புதிய வரவு

Showing posts with label Bomb blast. Show all posts
Showing posts with label Bomb blast. Show all posts
இந்தியாவில் “யூனியன் பிரதேசங்கள்” எனப்படும் மத்திய அரசின் நேரடி பகுதிகள் தவிர,33 மாநிலங்கள் இருக்கின்றன. அதேபோல அமெரிக்காவில் மொத்தம் ஐம்பது { 50 } மாநிலங்கள் இருக்கின்றன. அங்குள்ள மத்திய அரசும் இந்திய மத்திய அரசைப் போலவே ” மரணதண்டனையை” தனது சட்டத்தில் இன்னமும் வைத்துக் கொண்டுள்ளது. ஆனால் அங்குள்ள மாநிலங்கள் பல துணிச்சலாக முடிவு எடுத்துள்ளனர். அதாவது 13 மாநிலங்கள் ” மரண தண்டனையை” தங்கள் மாநிலங்களில் “ரத்து” செய்துள்ளன. அங்குள்ள 50 மாநிலங்களில் 13 மாநிலங்கள் துணிச்சலாக இந்த காரியத்தை செய்துள்ளன.அவையாவன: அலாஸ்கா, ஹவாய், லோவா, மைனே, மசாசுசெட்ஸ், மிசிகன், மின்னேசோட்டா, நியு ஜெர்சி, வடக்கு டகோடா, ரோடே தீவு, வேர்மோன்ட், மேற்கு வெர்ஜினியா, விஸ்கான்சின், ஆகியவையே அந்த பதின்மூன்று மாநிலங்கள். அது தவிர, “நெபராஸ்கா” அன்ர மாநிலத்தில் உள்ள “உச்சநீதிமன்றம்” மரணதண்டனைகளை “மின்சாரம் பாய்ச்சி” நடத்துவது, ” கொடுமையானதும், மனிதத்தன்மை அற்றதும்” என்று தீர்ப்பு கொடுத்துள்ளது. அதனால் அந்த மாநிலத்திலும் மரணதண்டனை செயல்பாட்டில் இல்லை.

இத்தகைய அதாவது அமெரிக்கா போன்ற “அரசு கட்டமைப்போ” அல்லது மாநிலங்களுக்கு தனி உச்ச நீதிமன்றங்களோ இந்தியாவில் இல்லை என்றாலும், இங்குள்ள மாநிலங்களின் “அமைச்சரவைகள்” இந்திய அரசியல் சட்டத்தில் இருக்கும் 161 ஆம் பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி, “மரணதண்டனையை, ஆயுள் தணடனையாக” குறைக்கலாம். அதற்கு அமெரிக்காவின் முன்னுதாரணத்தை , தமிழக முதல்வர் முதன் முதலாக இந்திய நாட்டில் பயன்படுத்தி, வரலாறு உருவாக்கலாம்.
Thanks Meenagam

அமெரிக்க மாநிலங்களை முதல்வர் பின்பற்றலாமே?

இந்தியாவில் “யூனியன் பிரதேசங்கள்” எனப்படும் மத்திய அரசின் நேரடி பகுதிகள் தவிர,33 மாநிலங்கள் இருக்கின்றன. அதேபோல அமெரிக்காவில் மொத்தம் ஐம்பது { 50 } மாநிலங்கள் இருக்கின்றன. அங்குள்ள மத்திய அரசும் இந்திய மத்திய அரசைப் போலவே ” மரணதண்டனையை” தனது சட்டத்தில் இன்னமும் வைத்துக் கொண்டுள்ளது. ஆனால் அங்குள்ள மாநிலங்கள் பல துணிச்சலாக முடிவு எடுத்துள்ளனர். அதாவது 13 மாநிலங்கள் ” மரண தண்டனையை” தங்கள் மாநிலங்களில் “ரத்து” செய்துள்ளன. அங்குள்ள 50 மாநிலங்களில் 13 மாநிலங்கள் துணிச்சலாக இந்த காரியத்தை செய்துள்ளன.அவையாவன: அலாஸ்கா, ஹவாய், லோவா, மைனே, மசாசுசெட்ஸ், மிசிகன், மின்னேசோட்டா, நியு ஜெர்சி, வடக்கு டகோடா, ரோடே தீவு, வேர்மோன்ட், மேற்கு வெர்ஜினியா, விஸ்கான்சின், ஆகியவையே அந்த பதின்மூன்று மாநிலங்கள். அது தவிர, “நெபராஸ்கா” அன்ர மாநிலத்தில் உள்ள “உச்சநீதிமன்றம்” மரணதண்டனைகளை “மின்சாரம் பாய்ச்சி” நடத்துவது, ” கொடுமையானதும், மனிதத்தன்மை அற்றதும்” என்று தீர்ப்பு கொடுத்துள்ளது. அதனால் அந்த மாநிலத்திலும் மரணதண்டனை செயல்பாட்டில் இல்லை.

இத்தகைய அதாவது அமெரிக்கா போன்ற “அரசு கட்டமைப்போ” அல்லது மாநிலங்களுக்கு தனி உச்ச நீதிமன்றங்களோ இந்தியாவில் இல்லை என்றாலும், இங்குள்ள மாநிலங்களின் “அமைச்சரவைகள்” இந்திய அரசியல் சட்டத்தில் இருக்கும் 161 ஆம் பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி, “மரணதண்டனையை, ஆயுள் தணடனையாக” குறைக்கலாம். அதற்கு அமெரிக்காவின் முன்னுதாரணத்தை , தமிழக முதல்வர் முதன் முதலாக இந்திய நாட்டில் பயன்படுத்தி, வரலாறு உருவாக்கலாம்.
Thanks Meenagam

புதுடில்லி : டில்லி ஐகோர்ட் வளாகத்தில் குண்டு வெடித்தது. வாயில் எண் 7 அருகே குண்டு வெடித்துள்ளது. உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. குண்டு வெடிப்புக்கான காரணமும் தெரியவில்லை. சம்பவ இடத்துக்கு 4 தீயணைப்பு வண்டிகள் விரைந்துள்ளன. பார்க்கிங் ஏரியா அருகே குண்டு வெடித்தது. பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போர்டு பிகோ காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பையில் குண்டு இருந்தது.

போலீஸ் ஆய்வு : குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் ஏ.டி.எஸ்., ( பயங்கரவாத தடுப்பு பிரிவு ) போலீஸ் மற்றும் டில்லி போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து போலீசார் இன்று மாலை முதல் தகவல் அளிப்பார்கள் என தெரிகிறது.

பாதுகாப்பு படையினர் சுற்றிவளைப்பு : சிறிய ரக குண்டு வெடித்ததை தொடர்ந்து டில்லி ஐகோர்ட் வளாகத்தில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

டில்லி ஐகோர்ட் வளாகத்தில் குண்டு வெடிப்பு

புதுடில்லி : டில்லி ஐகோர்ட் வளாகத்தில் குண்டு வெடித்தது. வாயில் எண் 7 அருகே குண்டு வெடித்துள்ளது. உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. குண்டு வெடிப்புக்கான காரணமும் தெரியவில்லை. சம்பவ இடத்துக்கு 4 தீயணைப்பு வண்டிகள் விரைந்துள்ளன. பார்க்கிங் ஏரியா அருகே குண்டு வெடித்தது. பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போர்டு பிகோ காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பையில் குண்டு இருந்தது.

போலீஸ் ஆய்வு : குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் ஏ.டி.எஸ்., ( பயங்கரவாத தடுப்பு பிரிவு ) போலீஸ் மற்றும் டில்லி போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து போலீசார் இன்று மாலை முதல் தகவல் அளிப்பார்கள் என தெரிகிறது.

பாதுகாப்பு படையினர் சுற்றிவளைப்பு : சிறிய ரக குண்டு வெடித்ததை தொடர்ந்து டில்லி ஐகோர்ட் வளாகத்தில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


எகிப்தை தொடர்ந்து லிபியா நாட்டிலும் அதிபர் கடாபியை எதிர்த்து மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். அவர்கள் மீது ராணுவத்தை ஏவி விட்டு அடக்கு முறையில் இறங்கினார்.

இதையடுத்து அமெரிக்கா மற்றும் அதன் நேச நாட்டு (நேட்டோ) படைகள் லிபியா மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் திரிபோலியில் அதிபர் கடாபி தங்கியுள்ள “பாப்-அல்-அஜீசியா” மாளிகை கடுமையாக சேதம் அடைந்தது.

நேற்று முன்தினம் 2-வது நாளாக நேட்டோ படைகள் திரிபோலியில் தாக்குதல் நடத்தின. இதில் பத்திரிகையாளர்கள் உள்பட 3 பேர் பலியானார்கள்.

இந்த தாக்குதலில் கடாபி எழுந்து நடமாட முடியாத அளவுக்கு காயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக லிபியாவை விட்டு வேறு எங்கோ எடுத்துச்சென்று விட்டதாக லிபியாவில் வதந்திகள் பரவி உள்ளன. அவர் உயிரோடு இருக்கிறாரா? என்றும் சந்தேகம் கிளம்பி உள்ளது.

இந்த நிலையில் கடாபியின் பேச்சுக்கள் அடங்கிய ஆடியோ கேசட் வெளியிடப்பட்டுள்ளது. அதில், நேட்டோ படைகளால் என்னை கொல்ல முடியாது, அவற்றால் தாக்க முடியாத இடத்தில் நான் இருக்கிறேன் என்றும் கூறி உள்ளார்.

தன்னைப்பற்றி வதந்தி பரவுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், ராணுவம் தன்னை விட்டு விலகாமல் இருக்கவும் கடாபி இந்த ஆடியோ கேசட்டை வெளியீட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அவர் உயிரோடு இருப்பது தெளிவாகி உள்ளது. என்றாலும் அவரால் வெளியே வர முடியாத அளவுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறார் என்றும், கொல்லப்படுவோம் என்ற அச்சத்தில் எங்கோ பதுங்கி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

கடாபி நன்றாக இருக்கிறார், திரிபோலியிலேயே தங்கி இருக்கிறார் என்று லிபியா அரசின் பத்திரிகை தொடர்பாளர் மூசா இப்ராகிம் அறிவித்துள்ளார். ஆனால் கடாபி திரிபோலியில் இல்லை, அவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக இத்தாலி நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி பிராங்கோ பிராட்டினி கூறினார்.

குண்டுவீச்சில் லிபியா அதிபர் கடாபி பலியானதாக வதந்தி; ஆடியோ கேசட்டில் பேசினார்


எகிப்தை தொடர்ந்து லிபியா நாட்டிலும் அதிபர் கடாபியை எதிர்த்து மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். அவர்கள் மீது ராணுவத்தை ஏவி விட்டு அடக்கு முறையில் இறங்கினார்.

இதையடுத்து அமெரிக்கா மற்றும் அதன் நேச நாட்டு (நேட்டோ) படைகள் லிபியா மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் திரிபோலியில் அதிபர் கடாபி தங்கியுள்ள “பாப்-அல்-அஜீசியா” மாளிகை கடுமையாக சேதம் அடைந்தது.

நேற்று முன்தினம் 2-வது நாளாக நேட்டோ படைகள் திரிபோலியில் தாக்குதல் நடத்தின. இதில் பத்திரிகையாளர்கள் உள்பட 3 பேர் பலியானார்கள்.

இந்த தாக்குதலில் கடாபி எழுந்து நடமாட முடியாத அளவுக்கு காயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக லிபியாவை விட்டு வேறு எங்கோ எடுத்துச்சென்று விட்டதாக லிபியாவில் வதந்திகள் பரவி உள்ளன. அவர் உயிரோடு இருக்கிறாரா? என்றும் சந்தேகம் கிளம்பி உள்ளது.

இந்த நிலையில் கடாபியின் பேச்சுக்கள் அடங்கிய ஆடியோ கேசட் வெளியிடப்பட்டுள்ளது. அதில், நேட்டோ படைகளால் என்னை கொல்ல முடியாது, அவற்றால் தாக்க முடியாத இடத்தில் நான் இருக்கிறேன் என்றும் கூறி உள்ளார்.

தன்னைப்பற்றி வதந்தி பரவுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், ராணுவம் தன்னை விட்டு விலகாமல் இருக்கவும் கடாபி இந்த ஆடியோ கேசட்டை வெளியீட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அவர் உயிரோடு இருப்பது தெளிவாகி உள்ளது. என்றாலும் அவரால் வெளியே வர முடியாத அளவுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறார் என்றும், கொல்லப்படுவோம் என்ற அச்சத்தில் எங்கோ பதுங்கி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

கடாபி நன்றாக இருக்கிறார், திரிபோலியிலேயே தங்கி இருக்கிறார் என்று லிபியா அரசின் பத்திரிகை தொடர்பாளர் மூசா இப்ராகிம் அறிவித்துள்ளார். ஆனால் கடாபி திரிபோலியில் இல்லை, அவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக இத்தாலி நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி பிராங்கோ பிராட்டினி கூறினார்.

டிரிபோலி : லிபிய தலைவர் மும்மர் கடாபியின் குடியிருப்பின் மீது "நேட்டோ' விமானப் படைகள் குண்டு வீசி தாக்கியதில், அவரது மகன் ஒருவரும் மூன்று பேரக் குழந்தைகளும் பலியானதாக, லிபிய அரசு தெரிவித்துள்ளது. இத்தகவலை, பெங்காசியில் உள்ள எதிர்த்தரப்பு நம்ப மறுத்துவிட்டது.
லிபியாவில் அதன் தலைவர் கடாபியின் படை தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக, "நேட்டோ' விமானப் படைகள், கடாபியின் முக்கிய ராணுவ மையங்களின் மீது குண்டு வீசி தாக்கி வருகின்றன. நேற்று முன்தினம் இரவு, கடாபி மற்றும் அவரது மகன்கள், உறவினர்கள், நண்பர்கள் குடியிருக்கும் "பாப் அல் அஜீசியா' வளாகத்தின் மீது, "நேட்டோ' விமானப் படைகள் குண்டுகளை வீசி தாக்கின. இச்சம்பவத்தில், கடாபியின் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு கட்டடத்தின் மீது குண்டுகள் விழுந்தன. அதன் சத்தம், டிரிபோலியின் பல பகுதிகளில் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகன்,பேரக் குழந்தைகள் பலி: அப்போது, அக்கட்டடத்தின் உள்ளே இருந்த கடாபியின் இளைய மகன் சயீப் அல் அரப்(29) என்பவரும், கடாபியின் பேரக் குழந்தைகள் மூன்று பேரும் பலியாகினர். இவர்கள் மூவரும் 12 வயதுக்குட்பட்டவர்கள்.
இதுகுறித்து லிபிய அரசின் செய்தித் தொடர்பாளர் மூசா இப்ராகிம் கூறியதாவது: அக்கட்டடத்தின் மீது மூன்று ஏவுகணைகள் விழுந்துள்ளன. தாக்குதல் நடந்த போது கட்டடத்தின் உள்பகுதியில் கடாபி, அவரது மனைவி, உறவினர்கள், நண்பர்கள், சயீப் அல் அரப், மூன்று பேரக் குழந்தைகள் ஆகியோர் இருந்தனர்.
சயீப் அல் அரப், அப்போது தனது தந்தையுடன் பேசிக் கொண்டும், அக்குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டும் இருந்தார். குண்டு வீச்சில் அவரும், குழந்தைகளும் பலியாகினர். கடாபி மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட மற்றவர்கள் காயமின்றித் தப்பினர். இதிலிருந்து, லிபியாவில் என்ன நடக்கிறது என்பதை உலகம் தெரிந்து கொள்ளட்டும். இதுபோன்ற தாக்குதல்கள் மூலம் லிபிய மக்களை எப்படி காக்க முடியும்? கடாபியின் மீது நேரடியாக நடத்தப்பட்ட தாக்குதல் தான் இது.
"நேட்டோ' மற்றும் சர்வதேச நாடுகள் லிபியாவில் அமைதியை விரும்பாமல், தாக்குதல் நடத்தி வருகின்றன. அவர்களின் நோக்கம், லிபிய எண்ணெய் வளத்தை சூறையாடுவது தான். பேச்சுவார்த்தை, தேர்தல், அரசியல் சாசன முன்வரைவு என எல்லாவற்றுக்கும் நாங்கள் தயாராக உள்ளோம் என்பதை பலமுறை வலியுறுத்தி வருகிறோம். ஆனால், மேற்கத்திய நாடுகள் எங்கள் குரலுக்குச் செவிசாய்க்காமல், எங்களைக் கொள்ளையடிக்கின்றன. இவ்வாறு மூசா இப்ராகிம் தெரிவித்தார்.
தாக்குதல் நடந்த இடத்தை, பத்திரிகையாளர்கள் அனைவரும் நேரில் பார்த்து ஆய்வு செய்ய, லிபிய அரசு ஏற்பாடு செய்தது. வெனிசுலா அதிபர் ஹ்யூகோ சாவேஸ், இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"நேட்டோ' ஒப்புதல்: இதுகுறித்து "நேட்டோ'வின் லிபியத் தாக்குதலுக்கான தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சார்லஸ் பவுச்சார்ட் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடாபியின் குடியிப்பு மீது "நேட்டோ' தாக்குதல் நடத்தியது. ஆனால் அது தனிப்பட்டவர்கள் மீதான தாக்குதல் அல்ல. அக்கட்டடம், கடாபி ராணுவத்தின் கட்டுப்பாட்டு மையம் என்பதால் குண்டு வீசப்பட்டது. ஐ.நா., தீர்மானத்தின்படி, கடாபியின் ராணுவ மையங்கள் "நேட்டோ'வால் தாக்கப்பட்டு வருகின்றன. இத்தாக்குதலில் கடாபியின் உறவினர்கள் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்காக வருந்துகிறோம். இவ்வாறு பவுச்சார்ட் தெரிவித்துள்ளார்.
பொதுவாக, இதுபோன்ற தாக்குதல்களுக்காக "நேட்டோ' அறிக்கை எதுவும் வெளியிடாது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக, இத்தாக்குதல் நடந்த சில மணி நேரங்களிலேயே "நேட்டோ' அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிர்த்தரப்பு நம்ப மறுப்பு: கடாபியின் மகன் மற்றும் பேரக் குழந்தைகள் பலியானதை, வேறு தகவல்கள் எதுவும் உறுதிப்படுத்தவில்லை. அதனால், பெங்காசியில் உள்ள எதிர்த்தரப்பினர், இத்தகவலை நம்ப மறுத்து விட்டனர். இதுகுறித்து தேசிய இடைக்கால கவுன்சில் அரசின் செய்தித் தொடர்பாளர் அப்துல் ஹபேஸ் கோகா கூறியதாவது: இதுபோன்ற தகவல்களைப் பரப்பி தன் மீது அனுதாபம் வரவழைப்பது கடாபியின் வாடிக்கை. 1986ல் ரொனால்டு ரீகன் அமெரிக்க அதிபராக இருந்த போது, டிரிபோலி மீது அமெரிக்க விமானப் படைகள் நடத்திய தாக்குதலில், கடாபியின் தத்துப் பெண் குழந்தை பலியானதாக செய்திகள் வெளியாகின.
தாக்குதல் நடந்த இடத்தை செய்தியாளர்கள் தோண்டிப் பார்த்த போது, ஒரு குழந்தையின் சடலம் கிடைத்தது. ஆனால், அந்தக் குழந்தைக்கும் கடாபிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அவர், தன் மீது மக்கள் மத்தியில் ஒரு அனுதாபம் வர வேண்டும் என்பதற்காக, அக்குழந்தையைத் தத்து எடுத்திருப்பதாக அறிவித்துக் கொண்டார். இவ்வாறு கோகா தெரிவித்தார்.
நேற்று முன்தினம், தான் பேச்சுக்குத் தயாராக இருப்பதாக, கடாபி தன் குடியிருப்பில் இருந்து பேட்டியளித்துக் கொண்டிருந்த போது, அவர் வீட்டுக்கு அருகில் உள்ள "டிவி' நிலையம் ஒன்றின் கட்டடம் மீது "நேட்டோ' விமானப் படைகள் குண்டு வீசித் தாக்கின என்பது குறிப்பிடத்தக்கது.
எட்டு பிள்ளைகளின் அப்பா கடாபி : கடாபிக்கு இரு மனைவிகள். முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டார். இரண்டாவது மனைவி சபியா பர்காஸ் மூலம் கடாபிக்கு எட்டு குழந்தைகள் பிறந்தன. எட்டு பேரில், ஆயிஷா கடாபி மட்டும் பெண் குழந்தை. முகமது, சயீப் அல் இஸ்லாம், அல் சாடி, ஹனிபால், பிலால், சயீப் அல் அரப், கமீஸ், ஆகியோர் பிற குழந்தைகள்.
மிலாட் என்பவரையும், ஹன்னா என்ற பெண் குழந்தையையும் கடாபி தத்தெடுத்தார். 1986ல், கடாபி வீட்டின் மீது நடந்த தாக்குதலில் ஹன்னா இறந்து போனதாக தகவல் வெளியானது. கடந்த பிப்ரவரி மாதம் எதிர்த்தரப்பினர் நடத்திய தாக்குதலில், கமீஸ் பலியானதாகவும் தகவல் வந்தது. ஆனால், அது உறுதிப்படுத்தப்படவில்லை. அவரது தலைமையில் இயங்கும் ராணுவம் தான் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறது.
சயீப் அல் அரப் ஜெர்மனியில் படித்து வந்தார். சமீபத்தில் தான் நாடு திரும்பினார். அரசியல் வாழ்வில் அவர் ஈடுபடாததால், அவரது புகைப்படம் கூட இதுவரை வெளியானதில்லை.

குண்டுவீச்சில் கடாபி மகன், பேரக்குழந்தைகள் பலி : கடாபி தப்பினார்: லிபியாவில் பரபரப்பு

டிரிபோலி : லிபிய தலைவர் மும்மர் கடாபியின் குடியிருப்பின் மீது "நேட்டோ' விமானப் படைகள் குண்டு வீசி தாக்கியதில், அவரது மகன் ஒருவரும் மூன்று பேரக் குழந்தைகளும் பலியானதாக, லிபிய அரசு தெரிவித்துள்ளது. இத்தகவலை, பெங்காசியில் உள்ள எதிர்த்தரப்பு நம்ப மறுத்துவிட்டது.
லிபியாவில் அதன் தலைவர் கடாபியின் படை தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக, "நேட்டோ' விமானப் படைகள், கடாபியின் முக்கிய ராணுவ மையங்களின் மீது குண்டு வீசி தாக்கி வருகின்றன. நேற்று முன்தினம் இரவு, கடாபி மற்றும் அவரது மகன்கள், உறவினர்கள், நண்பர்கள் குடியிருக்கும் "பாப் அல் அஜீசியா' வளாகத்தின் மீது, "நேட்டோ' விமானப் படைகள் குண்டுகளை வீசி தாக்கின. இச்சம்பவத்தில், கடாபியின் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு கட்டடத்தின் மீது குண்டுகள் விழுந்தன. அதன் சத்தம், டிரிபோலியின் பல பகுதிகளில் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகன்,பேரக் குழந்தைகள் பலி: அப்போது, அக்கட்டடத்தின் உள்ளே இருந்த கடாபியின் இளைய மகன் சயீப் அல் அரப்(29) என்பவரும், கடாபியின் பேரக் குழந்தைகள் மூன்று பேரும் பலியாகினர். இவர்கள் மூவரும் 12 வயதுக்குட்பட்டவர்கள்.
இதுகுறித்து லிபிய அரசின் செய்தித் தொடர்பாளர் மூசா இப்ராகிம் கூறியதாவது: அக்கட்டடத்தின் மீது மூன்று ஏவுகணைகள் விழுந்துள்ளன. தாக்குதல் நடந்த போது கட்டடத்தின் உள்பகுதியில் கடாபி, அவரது மனைவி, உறவினர்கள், நண்பர்கள், சயீப் அல் அரப், மூன்று பேரக் குழந்தைகள் ஆகியோர் இருந்தனர்.
சயீப் அல் அரப், அப்போது தனது தந்தையுடன் பேசிக் கொண்டும், அக்குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டும் இருந்தார். குண்டு வீச்சில் அவரும், குழந்தைகளும் பலியாகினர். கடாபி மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட மற்றவர்கள் காயமின்றித் தப்பினர். இதிலிருந்து, லிபியாவில் என்ன நடக்கிறது என்பதை உலகம் தெரிந்து கொள்ளட்டும். இதுபோன்ற தாக்குதல்கள் மூலம் லிபிய மக்களை எப்படி காக்க முடியும்? கடாபியின் மீது நேரடியாக நடத்தப்பட்ட தாக்குதல் தான் இது.
"நேட்டோ' மற்றும் சர்வதேச நாடுகள் லிபியாவில் அமைதியை விரும்பாமல், தாக்குதல் நடத்தி வருகின்றன. அவர்களின் நோக்கம், லிபிய எண்ணெய் வளத்தை சூறையாடுவது தான். பேச்சுவார்த்தை, தேர்தல், அரசியல் சாசன முன்வரைவு என எல்லாவற்றுக்கும் நாங்கள் தயாராக உள்ளோம் என்பதை பலமுறை வலியுறுத்தி வருகிறோம். ஆனால், மேற்கத்திய நாடுகள் எங்கள் குரலுக்குச் செவிசாய்க்காமல், எங்களைக் கொள்ளையடிக்கின்றன. இவ்வாறு மூசா இப்ராகிம் தெரிவித்தார்.
தாக்குதல் நடந்த இடத்தை, பத்திரிகையாளர்கள் அனைவரும் நேரில் பார்த்து ஆய்வு செய்ய, லிபிய அரசு ஏற்பாடு செய்தது. வெனிசுலா அதிபர் ஹ்யூகோ சாவேஸ், இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"நேட்டோ' ஒப்புதல்: இதுகுறித்து "நேட்டோ'வின் லிபியத் தாக்குதலுக்கான தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சார்லஸ் பவுச்சார்ட் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடாபியின் குடியிப்பு மீது "நேட்டோ' தாக்குதல் நடத்தியது. ஆனால் அது தனிப்பட்டவர்கள் மீதான தாக்குதல் அல்ல. அக்கட்டடம், கடாபி ராணுவத்தின் கட்டுப்பாட்டு மையம் என்பதால் குண்டு வீசப்பட்டது. ஐ.நா., தீர்மானத்தின்படி, கடாபியின் ராணுவ மையங்கள் "நேட்டோ'வால் தாக்கப்பட்டு வருகின்றன. இத்தாக்குதலில் கடாபியின் உறவினர்கள் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்காக வருந்துகிறோம். இவ்வாறு பவுச்சார்ட் தெரிவித்துள்ளார்.
பொதுவாக, இதுபோன்ற தாக்குதல்களுக்காக "நேட்டோ' அறிக்கை எதுவும் வெளியிடாது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக, இத்தாக்குதல் நடந்த சில மணி நேரங்களிலேயே "நேட்டோ' அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிர்த்தரப்பு நம்ப மறுப்பு: கடாபியின் மகன் மற்றும் பேரக் குழந்தைகள் பலியானதை, வேறு தகவல்கள் எதுவும் உறுதிப்படுத்தவில்லை. அதனால், பெங்காசியில் உள்ள எதிர்த்தரப்பினர், இத்தகவலை நம்ப மறுத்து விட்டனர். இதுகுறித்து தேசிய இடைக்கால கவுன்சில் அரசின் செய்தித் தொடர்பாளர் அப்துல் ஹபேஸ் கோகா கூறியதாவது: இதுபோன்ற தகவல்களைப் பரப்பி தன் மீது அனுதாபம் வரவழைப்பது கடாபியின் வாடிக்கை. 1986ல் ரொனால்டு ரீகன் அமெரிக்க அதிபராக இருந்த போது, டிரிபோலி மீது அமெரிக்க விமானப் படைகள் நடத்திய தாக்குதலில், கடாபியின் தத்துப் பெண் குழந்தை பலியானதாக செய்திகள் வெளியாகின.
தாக்குதல் நடந்த இடத்தை செய்தியாளர்கள் தோண்டிப் பார்த்த போது, ஒரு குழந்தையின் சடலம் கிடைத்தது. ஆனால், அந்தக் குழந்தைக்கும் கடாபிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அவர், தன் மீது மக்கள் மத்தியில் ஒரு அனுதாபம் வர வேண்டும் என்பதற்காக, அக்குழந்தையைத் தத்து எடுத்திருப்பதாக அறிவித்துக் கொண்டார். இவ்வாறு கோகா தெரிவித்தார்.
நேற்று முன்தினம், தான் பேச்சுக்குத் தயாராக இருப்பதாக, கடாபி தன் குடியிருப்பில் இருந்து பேட்டியளித்துக் கொண்டிருந்த போது, அவர் வீட்டுக்கு அருகில் உள்ள "டிவி' நிலையம் ஒன்றின் கட்டடம் மீது "நேட்டோ' விமானப் படைகள் குண்டு வீசித் தாக்கின என்பது குறிப்பிடத்தக்கது.
எட்டு பிள்ளைகளின் அப்பா கடாபி : கடாபிக்கு இரு மனைவிகள். முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டார். இரண்டாவது மனைவி சபியா பர்காஸ் மூலம் கடாபிக்கு எட்டு குழந்தைகள் பிறந்தன. எட்டு பேரில், ஆயிஷா கடாபி மட்டும் பெண் குழந்தை. முகமது, சயீப் அல் இஸ்லாம், அல் சாடி, ஹனிபால், பிலால், சயீப் அல் அரப், கமீஸ், ஆகியோர் பிற குழந்தைகள்.
மிலாட் என்பவரையும், ஹன்னா என்ற பெண் குழந்தையையும் கடாபி தத்தெடுத்தார். 1986ல், கடாபி வீட்டின் மீது நடந்த தாக்குதலில் ஹன்னா இறந்து போனதாக தகவல் வெளியானது. கடந்த பிப்ரவரி மாதம் எதிர்த்தரப்பினர் நடத்திய தாக்குதலில், கமீஸ் பலியானதாகவும் தகவல் வந்தது. ஆனால், அது உறுதிப்படுத்தப்படவில்லை. அவரது தலைமையில் இயங்கும் ராணுவம் தான் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறது.
சயீப் அல் அரப் ஜெர்மனியில் படித்து வந்தார். சமீபத்தில் தான் நாடு திரும்பினார். அரசியல் வாழ்வில் அவர் ஈடுபடாததால், அவரது புகைப்படம் கூட இதுவரை வெளியானதில்லை.

பாகிஸ்தானில் வடமேற்கு பகுதி தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ளது. அங்கு அடிக்கடி குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த நிலையில், அப்பகுதியில் சுவாபி என்ற இடத்தில் உள்ள போலீஸ் சோதனை சாவடி அருகே இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் 6 பேர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். பலர் காயம் அடைந்தனர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.

பாகிஸ்தானில் குண்டு வெடித்தது; 6 பேர் பலி

பாகிஸ்தானில் வடமேற்கு பகுதி தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ளது. அங்கு அடிக்கடி குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த நிலையில், அப்பகுதியில் சுவாபி என்ற இடத்தில் உள்ள போலீஸ் சோதனை சாவடி அருகே இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் 6 பேர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். பலர் காயம் அடைந்தனர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.

பாகிஸ்தானில் 2 இடங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 8 பேர் பலியாயினர்.


வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகர் அருகே உள்ள கைபர் என்னும் இடத்தில் வெடிப்பொருள் ஏற்றிய லாரியை மோதச் செய்து தாக்குதல் நடத்தப்பட்டது.


இதே போல் இராணுவ சோதனை சாவடி மீது எண்ணெய் நிரப்பப்பட்ட லாரி ஒன்றை மோதி தீவிரவாதிகள் வெடிக்க செய்தனர்.


இந்த இரண்டு தாக்குதலிலும் 8 பேர் பலியானதாகவும், 14 பேர் படுகாயம் அடைந்ததாகவும் காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான்: குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு 8 பேர் பலி

பாகிஸ்தானில் 2 இடங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 8 பேர் பலியாயினர்.


வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகர் அருகே உள்ள கைபர் என்னும் இடத்தில் வெடிப்பொருள் ஏற்றிய லாரியை மோதச் செய்து தாக்குதல் நடத்தப்பட்டது.


இதே போல் இராணுவ சோதனை சாவடி மீது எண்ணெய் நிரப்பப்பட்ட லாரி ஒன்றை மோதி தீவிரவாதிகள் வெடிக்க செய்தனர்.


இந்த இரண்டு தாக்குதலிலும் 8 பேர் பலியானதாகவும், 14 பேர் படுகாயம் அடைந்ததாகவும் காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஈராக்கில் இன்று நடந்த கார் குண்டு தாக்குதலில் 18 பேர் பலியாகினர்.

தலைநகர் பாக்தாத் அருகில் உள்ள ஷிதே பிரிவு இஸ்லாமியர்களின் புனிதத் தலமான கர்பாலா என்ற இடத்தில் இந்த தாக்குதல் நடந்தது.

அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஈராக்: கார் குண்டு தாக்குதலில் 18 பேர் பலி

ஈராக்கில் இன்று நடந்த கார் குண்டு தாக்குதலில் 18 பேர் பலியாகினர்.

தலைநகர் பாக்தாத் அருகில் உள்ள ஷிதே பிரிவு இஸ்லாமியர்களின் புனிதத் தலமான கர்பாலா என்ற இடத்தில் இந்த தாக்குதல் நடந்தது.

அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முக நூல்

Popular Posts