background img

புதிய வரவு

Showing posts with label death. Show all posts
Showing posts with label death. Show all posts
திருச்சி : ""மரியம்பிச்சையின் சாவில் மர்மம் இருக்கிறது,'' என்று, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில், திருச்சி மேற்கு தொகுதியில் தி.மு.க., அமைச்சர் நேருவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற அ.தி.மு.க.,வின் மரியம்பிச்சை, சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.நேற்று முன்தினம், சென்னையிலிருந்து திருச்சி வந்த அவர், நேற்று காலை 6.30 மணிக்கு பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழாவை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாலை அணிவித்தார். இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவபதி, கலெக்டர் மகேசன் காசிராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவுக்குப் பின், அங்கிருந்தே சென்னையில் நடந்த எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமைச்சர்கள் மரியம்பிச்சையும், சிவபதியும் தனித்தனி காரில் புறப்பட்டனர்.அமைச்சர் மரியம்பிச்சையின் கார் பாடாலூர் அருகே சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது மோதியது. இதில், காரின் ஒருபக்க முன்பகுதி நொறுங்கியது. டிரைவர் அருகில் உட்கார்ந்திருந்த அமைச்சர் மரியம்பிச்சை, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.அவருக்கு பின்னால் வந்த பாதுகாப்பு போலீசாரின் சுமோவில், திருச்சி அரசு மருத்துவமனைக்கு, போலீசார் கொண்டு வந்து பரிசோதித்த போது, அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப் பின், மரியம்பிச்சை உடல், வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அமைச்சர் மரியம்பிச்சையின் மரண செய்தி கேள்விப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, சென்னையில் நடந்த எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு விழாவில் சிறிது நேரம் பங்கேற்று விட்டு, அமைச்சர்கள் பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோருடன் தனி விமானத்தில், மதியம் 2.30 மணிக்கு திருச்சி வந்தார்.விமான நிலையத்தில் இருந்து நேராக, மரியம்பிச்சை வீட்டுக்குச் சென்ற முதல்வர் ஜெயலலிதா, மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, அங்கிருந்த மரியம்பிச்சை மனைவி பாத்திமா கனி, மகன் ஆசிக் மீரான் உள்ளிட்ட குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் நிருபர்களிடம் ஜெயலலிதா கூறியதாவது:மரியம்பிச்சை இழப்பு கட்சிக்கும், அவரது குடும்பத்துக்கும் பேரிழப்பு. மூன்று முறை மாநகராட்சி கவுன்சிலராக இருந்து படிப்படியாக அரசியலில் உயர்ந்தவர். நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர், இப்படி அகால மரணம் அடைவார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.பொதுமக்கள், கட்சியினர், அவரது குடும்பத்தாரிடம் விசாரித்ததில், மரியம்பிச்சையின் சாவில் மர்மம் இருக்கிறது. அதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்படும். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். மரியம்பிச்சையின் ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

"மரியம்பிச்சையின் சாவில் மர்மம் இருக்கிறது' : முதல்வர் ஜெ., பரபரப்பு பேட்டி

திருச்சி : ""மரியம்பிச்சையின் சாவில் மர்மம் இருக்கிறது,'' என்று, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில், திருச்சி மேற்கு தொகுதியில் தி.மு.க., அமைச்சர் நேருவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற அ.தி.மு.க.,வின் மரியம்பிச்சை, சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.நேற்று முன்தினம், சென்னையிலிருந்து திருச்சி வந்த அவர், நேற்று காலை 6.30 மணிக்கு பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழாவை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாலை அணிவித்தார். இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவபதி, கலெக்டர் மகேசன் காசிராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவுக்குப் பின், அங்கிருந்தே சென்னையில் நடந்த எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமைச்சர்கள் மரியம்பிச்சையும், சிவபதியும் தனித்தனி காரில் புறப்பட்டனர்.அமைச்சர் மரியம்பிச்சையின் கார் பாடாலூர் அருகே சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது மோதியது. இதில், காரின் ஒருபக்க முன்பகுதி நொறுங்கியது. டிரைவர் அருகில் உட்கார்ந்திருந்த அமைச்சர் மரியம்பிச்சை, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.அவருக்கு பின்னால் வந்த பாதுகாப்பு போலீசாரின் சுமோவில், திருச்சி அரசு மருத்துவமனைக்கு, போலீசார் கொண்டு வந்து பரிசோதித்த போது, அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப் பின், மரியம்பிச்சை உடல், வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அமைச்சர் மரியம்பிச்சையின் மரண செய்தி கேள்விப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, சென்னையில் நடந்த எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு விழாவில் சிறிது நேரம் பங்கேற்று விட்டு, அமைச்சர்கள் பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோருடன் தனி விமானத்தில், மதியம் 2.30 மணிக்கு திருச்சி வந்தார்.விமான நிலையத்தில் இருந்து நேராக, மரியம்பிச்சை வீட்டுக்குச் சென்ற முதல்வர் ஜெயலலிதா, மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, அங்கிருந்த மரியம்பிச்சை மனைவி பாத்திமா கனி, மகன் ஆசிக் மீரான் உள்ளிட்ட குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் நிருபர்களிடம் ஜெயலலிதா கூறியதாவது:மரியம்பிச்சை இழப்பு கட்சிக்கும், அவரது குடும்பத்துக்கும் பேரிழப்பு. மூன்று முறை மாநகராட்சி கவுன்சிலராக இருந்து படிப்படியாக அரசியலில் உயர்ந்தவர். நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர், இப்படி அகால மரணம் அடைவார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.பொதுமக்கள், கட்சியினர், அவரது குடும்பத்தாரிடம் விசாரித்ததில், மரியம்பிச்சையின் சாவில் மர்மம் இருக்கிறது. அதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்படும். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். மரியம்பிச்சையின் ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

டிரிபோலி : லிபிய தலைவர் மும்மர் கடாபியின் குடியிருப்பின் மீது "நேட்டோ' விமானப் படைகள் குண்டு வீசி தாக்கியதில், அவரது மகன் ஒருவரும் மூன்று பேரக் குழந்தைகளும் பலியானதாக, லிபிய அரசு தெரிவித்துள்ளது. இத்தகவலை, பெங்காசியில் உள்ள எதிர்த்தரப்பு நம்ப மறுத்துவிட்டது.
லிபியாவில் அதன் தலைவர் கடாபியின் படை தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக, "நேட்டோ' விமானப் படைகள், கடாபியின் முக்கிய ராணுவ மையங்களின் மீது குண்டு வீசி தாக்கி வருகின்றன. நேற்று முன்தினம் இரவு, கடாபி மற்றும் அவரது மகன்கள், உறவினர்கள், நண்பர்கள் குடியிருக்கும் "பாப் அல் அஜீசியா' வளாகத்தின் மீது, "நேட்டோ' விமானப் படைகள் குண்டுகளை வீசி தாக்கின. இச்சம்பவத்தில், கடாபியின் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு கட்டடத்தின் மீது குண்டுகள் விழுந்தன. அதன் சத்தம், டிரிபோலியின் பல பகுதிகளில் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகன்,பேரக் குழந்தைகள் பலி: அப்போது, அக்கட்டடத்தின் உள்ளே இருந்த கடாபியின் இளைய மகன் சயீப் அல் அரப்(29) என்பவரும், கடாபியின் பேரக் குழந்தைகள் மூன்று பேரும் பலியாகினர். இவர்கள் மூவரும் 12 வயதுக்குட்பட்டவர்கள்.
இதுகுறித்து லிபிய அரசின் செய்தித் தொடர்பாளர் மூசா இப்ராகிம் கூறியதாவது: அக்கட்டடத்தின் மீது மூன்று ஏவுகணைகள் விழுந்துள்ளன. தாக்குதல் நடந்த போது கட்டடத்தின் உள்பகுதியில் கடாபி, அவரது மனைவி, உறவினர்கள், நண்பர்கள், சயீப் அல் அரப், மூன்று பேரக் குழந்தைகள் ஆகியோர் இருந்தனர்.
சயீப் அல் அரப், அப்போது தனது தந்தையுடன் பேசிக் கொண்டும், அக்குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டும் இருந்தார். குண்டு வீச்சில் அவரும், குழந்தைகளும் பலியாகினர். கடாபி மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட மற்றவர்கள் காயமின்றித் தப்பினர். இதிலிருந்து, லிபியாவில் என்ன நடக்கிறது என்பதை உலகம் தெரிந்து கொள்ளட்டும். இதுபோன்ற தாக்குதல்கள் மூலம் லிபிய மக்களை எப்படி காக்க முடியும்? கடாபியின் மீது நேரடியாக நடத்தப்பட்ட தாக்குதல் தான் இது.
"நேட்டோ' மற்றும் சர்வதேச நாடுகள் லிபியாவில் அமைதியை விரும்பாமல், தாக்குதல் நடத்தி வருகின்றன. அவர்களின் நோக்கம், லிபிய எண்ணெய் வளத்தை சூறையாடுவது தான். பேச்சுவார்த்தை, தேர்தல், அரசியல் சாசன முன்வரைவு என எல்லாவற்றுக்கும் நாங்கள் தயாராக உள்ளோம் என்பதை பலமுறை வலியுறுத்தி வருகிறோம். ஆனால், மேற்கத்திய நாடுகள் எங்கள் குரலுக்குச் செவிசாய்க்காமல், எங்களைக் கொள்ளையடிக்கின்றன. இவ்வாறு மூசா இப்ராகிம் தெரிவித்தார்.
தாக்குதல் நடந்த இடத்தை, பத்திரிகையாளர்கள் அனைவரும் நேரில் பார்த்து ஆய்வு செய்ய, லிபிய அரசு ஏற்பாடு செய்தது. வெனிசுலா அதிபர் ஹ்யூகோ சாவேஸ், இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"நேட்டோ' ஒப்புதல்: இதுகுறித்து "நேட்டோ'வின் லிபியத் தாக்குதலுக்கான தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சார்லஸ் பவுச்சார்ட் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடாபியின் குடியிப்பு மீது "நேட்டோ' தாக்குதல் நடத்தியது. ஆனால் அது தனிப்பட்டவர்கள் மீதான தாக்குதல் அல்ல. அக்கட்டடம், கடாபி ராணுவத்தின் கட்டுப்பாட்டு மையம் என்பதால் குண்டு வீசப்பட்டது. ஐ.நா., தீர்மானத்தின்படி, கடாபியின் ராணுவ மையங்கள் "நேட்டோ'வால் தாக்கப்பட்டு வருகின்றன. இத்தாக்குதலில் கடாபியின் உறவினர்கள் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்காக வருந்துகிறோம். இவ்வாறு பவுச்சார்ட் தெரிவித்துள்ளார்.
பொதுவாக, இதுபோன்ற தாக்குதல்களுக்காக "நேட்டோ' அறிக்கை எதுவும் வெளியிடாது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக, இத்தாக்குதல் நடந்த சில மணி நேரங்களிலேயே "நேட்டோ' அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிர்த்தரப்பு நம்ப மறுப்பு: கடாபியின் மகன் மற்றும் பேரக் குழந்தைகள் பலியானதை, வேறு தகவல்கள் எதுவும் உறுதிப்படுத்தவில்லை. அதனால், பெங்காசியில் உள்ள எதிர்த்தரப்பினர், இத்தகவலை நம்ப மறுத்து விட்டனர். இதுகுறித்து தேசிய இடைக்கால கவுன்சில் அரசின் செய்தித் தொடர்பாளர் அப்துல் ஹபேஸ் கோகா கூறியதாவது: இதுபோன்ற தகவல்களைப் பரப்பி தன் மீது அனுதாபம் வரவழைப்பது கடாபியின் வாடிக்கை. 1986ல் ரொனால்டு ரீகன் அமெரிக்க அதிபராக இருந்த போது, டிரிபோலி மீது அமெரிக்க விமானப் படைகள் நடத்திய தாக்குதலில், கடாபியின் தத்துப் பெண் குழந்தை பலியானதாக செய்திகள் வெளியாகின.
தாக்குதல் நடந்த இடத்தை செய்தியாளர்கள் தோண்டிப் பார்த்த போது, ஒரு குழந்தையின் சடலம் கிடைத்தது. ஆனால், அந்தக் குழந்தைக்கும் கடாபிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அவர், தன் மீது மக்கள் மத்தியில் ஒரு அனுதாபம் வர வேண்டும் என்பதற்காக, அக்குழந்தையைத் தத்து எடுத்திருப்பதாக அறிவித்துக் கொண்டார். இவ்வாறு கோகா தெரிவித்தார்.
நேற்று முன்தினம், தான் பேச்சுக்குத் தயாராக இருப்பதாக, கடாபி தன் குடியிருப்பில் இருந்து பேட்டியளித்துக் கொண்டிருந்த போது, அவர் வீட்டுக்கு அருகில் உள்ள "டிவி' நிலையம் ஒன்றின் கட்டடம் மீது "நேட்டோ' விமானப் படைகள் குண்டு வீசித் தாக்கின என்பது குறிப்பிடத்தக்கது.
எட்டு பிள்ளைகளின் அப்பா கடாபி : கடாபிக்கு இரு மனைவிகள். முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டார். இரண்டாவது மனைவி சபியா பர்காஸ் மூலம் கடாபிக்கு எட்டு குழந்தைகள் பிறந்தன. எட்டு பேரில், ஆயிஷா கடாபி மட்டும் பெண் குழந்தை. முகமது, சயீப் அல் இஸ்லாம், அல் சாடி, ஹனிபால், பிலால், சயீப் அல் அரப், கமீஸ், ஆகியோர் பிற குழந்தைகள்.
மிலாட் என்பவரையும், ஹன்னா என்ற பெண் குழந்தையையும் கடாபி தத்தெடுத்தார். 1986ல், கடாபி வீட்டின் மீது நடந்த தாக்குதலில் ஹன்னா இறந்து போனதாக தகவல் வெளியானது. கடந்த பிப்ரவரி மாதம் எதிர்த்தரப்பினர் நடத்திய தாக்குதலில், கமீஸ் பலியானதாகவும் தகவல் வந்தது. ஆனால், அது உறுதிப்படுத்தப்படவில்லை. அவரது தலைமையில் இயங்கும் ராணுவம் தான் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறது.
சயீப் அல் அரப் ஜெர்மனியில் படித்து வந்தார். சமீபத்தில் தான் நாடு திரும்பினார். அரசியல் வாழ்வில் அவர் ஈடுபடாததால், அவரது புகைப்படம் கூட இதுவரை வெளியானதில்லை.

குண்டுவீச்சில் கடாபி மகன், பேரக்குழந்தைகள் பலி : கடாபி தப்பினார்: லிபியாவில் பரபரப்பு

டிரிபோலி : லிபிய தலைவர் மும்மர் கடாபியின் குடியிருப்பின் மீது "நேட்டோ' விமானப் படைகள் குண்டு வீசி தாக்கியதில், அவரது மகன் ஒருவரும் மூன்று பேரக் குழந்தைகளும் பலியானதாக, லிபிய அரசு தெரிவித்துள்ளது. இத்தகவலை, பெங்காசியில் உள்ள எதிர்த்தரப்பு நம்ப மறுத்துவிட்டது.
லிபியாவில் அதன் தலைவர் கடாபியின் படை தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக, "நேட்டோ' விமானப் படைகள், கடாபியின் முக்கிய ராணுவ மையங்களின் மீது குண்டு வீசி தாக்கி வருகின்றன. நேற்று முன்தினம் இரவு, கடாபி மற்றும் அவரது மகன்கள், உறவினர்கள், நண்பர்கள் குடியிருக்கும் "பாப் அல் அஜீசியா' வளாகத்தின் மீது, "நேட்டோ' விமானப் படைகள் குண்டுகளை வீசி தாக்கின. இச்சம்பவத்தில், கடாபியின் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு கட்டடத்தின் மீது குண்டுகள் விழுந்தன. அதன் சத்தம், டிரிபோலியின் பல பகுதிகளில் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகன்,பேரக் குழந்தைகள் பலி: அப்போது, அக்கட்டடத்தின் உள்ளே இருந்த கடாபியின் இளைய மகன் சயீப் அல் அரப்(29) என்பவரும், கடாபியின் பேரக் குழந்தைகள் மூன்று பேரும் பலியாகினர். இவர்கள் மூவரும் 12 வயதுக்குட்பட்டவர்கள்.
இதுகுறித்து லிபிய அரசின் செய்தித் தொடர்பாளர் மூசா இப்ராகிம் கூறியதாவது: அக்கட்டடத்தின் மீது மூன்று ஏவுகணைகள் விழுந்துள்ளன. தாக்குதல் நடந்த போது கட்டடத்தின் உள்பகுதியில் கடாபி, அவரது மனைவி, உறவினர்கள், நண்பர்கள், சயீப் அல் அரப், மூன்று பேரக் குழந்தைகள் ஆகியோர் இருந்தனர்.
சயீப் அல் அரப், அப்போது தனது தந்தையுடன் பேசிக் கொண்டும், அக்குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டும் இருந்தார். குண்டு வீச்சில் அவரும், குழந்தைகளும் பலியாகினர். கடாபி மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட மற்றவர்கள் காயமின்றித் தப்பினர். இதிலிருந்து, லிபியாவில் என்ன நடக்கிறது என்பதை உலகம் தெரிந்து கொள்ளட்டும். இதுபோன்ற தாக்குதல்கள் மூலம் லிபிய மக்களை எப்படி காக்க முடியும்? கடாபியின் மீது நேரடியாக நடத்தப்பட்ட தாக்குதல் தான் இது.
"நேட்டோ' மற்றும் சர்வதேச நாடுகள் லிபியாவில் அமைதியை விரும்பாமல், தாக்குதல் நடத்தி வருகின்றன. அவர்களின் நோக்கம், லிபிய எண்ணெய் வளத்தை சூறையாடுவது தான். பேச்சுவார்த்தை, தேர்தல், அரசியல் சாசன முன்வரைவு என எல்லாவற்றுக்கும் நாங்கள் தயாராக உள்ளோம் என்பதை பலமுறை வலியுறுத்தி வருகிறோம். ஆனால், மேற்கத்திய நாடுகள் எங்கள் குரலுக்குச் செவிசாய்க்காமல், எங்களைக் கொள்ளையடிக்கின்றன. இவ்வாறு மூசா இப்ராகிம் தெரிவித்தார்.
தாக்குதல் நடந்த இடத்தை, பத்திரிகையாளர்கள் அனைவரும் நேரில் பார்த்து ஆய்வு செய்ய, லிபிய அரசு ஏற்பாடு செய்தது. வெனிசுலா அதிபர் ஹ்யூகோ சாவேஸ், இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"நேட்டோ' ஒப்புதல்: இதுகுறித்து "நேட்டோ'வின் லிபியத் தாக்குதலுக்கான தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சார்லஸ் பவுச்சார்ட் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடாபியின் குடியிப்பு மீது "நேட்டோ' தாக்குதல் நடத்தியது. ஆனால் அது தனிப்பட்டவர்கள் மீதான தாக்குதல் அல்ல. அக்கட்டடம், கடாபி ராணுவத்தின் கட்டுப்பாட்டு மையம் என்பதால் குண்டு வீசப்பட்டது. ஐ.நா., தீர்மானத்தின்படி, கடாபியின் ராணுவ மையங்கள் "நேட்டோ'வால் தாக்கப்பட்டு வருகின்றன. இத்தாக்குதலில் கடாபியின் உறவினர்கள் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்காக வருந்துகிறோம். இவ்வாறு பவுச்சார்ட் தெரிவித்துள்ளார்.
பொதுவாக, இதுபோன்ற தாக்குதல்களுக்காக "நேட்டோ' அறிக்கை எதுவும் வெளியிடாது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக, இத்தாக்குதல் நடந்த சில மணி நேரங்களிலேயே "நேட்டோ' அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிர்த்தரப்பு நம்ப மறுப்பு: கடாபியின் மகன் மற்றும் பேரக் குழந்தைகள் பலியானதை, வேறு தகவல்கள் எதுவும் உறுதிப்படுத்தவில்லை. அதனால், பெங்காசியில் உள்ள எதிர்த்தரப்பினர், இத்தகவலை நம்ப மறுத்து விட்டனர். இதுகுறித்து தேசிய இடைக்கால கவுன்சில் அரசின் செய்தித் தொடர்பாளர் அப்துல் ஹபேஸ் கோகா கூறியதாவது: இதுபோன்ற தகவல்களைப் பரப்பி தன் மீது அனுதாபம் வரவழைப்பது கடாபியின் வாடிக்கை. 1986ல் ரொனால்டு ரீகன் அமெரிக்க அதிபராக இருந்த போது, டிரிபோலி மீது அமெரிக்க விமானப் படைகள் நடத்திய தாக்குதலில், கடாபியின் தத்துப் பெண் குழந்தை பலியானதாக செய்திகள் வெளியாகின.
தாக்குதல் நடந்த இடத்தை செய்தியாளர்கள் தோண்டிப் பார்த்த போது, ஒரு குழந்தையின் சடலம் கிடைத்தது. ஆனால், அந்தக் குழந்தைக்கும் கடாபிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அவர், தன் மீது மக்கள் மத்தியில் ஒரு அனுதாபம் வர வேண்டும் என்பதற்காக, அக்குழந்தையைத் தத்து எடுத்திருப்பதாக அறிவித்துக் கொண்டார். இவ்வாறு கோகா தெரிவித்தார்.
நேற்று முன்தினம், தான் பேச்சுக்குத் தயாராக இருப்பதாக, கடாபி தன் குடியிருப்பில் இருந்து பேட்டியளித்துக் கொண்டிருந்த போது, அவர் வீட்டுக்கு அருகில் உள்ள "டிவி' நிலையம் ஒன்றின் கட்டடம் மீது "நேட்டோ' விமானப் படைகள் குண்டு வீசித் தாக்கின என்பது குறிப்பிடத்தக்கது.
எட்டு பிள்ளைகளின் அப்பா கடாபி : கடாபிக்கு இரு மனைவிகள். முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டார். இரண்டாவது மனைவி சபியா பர்காஸ் மூலம் கடாபிக்கு எட்டு குழந்தைகள் பிறந்தன. எட்டு பேரில், ஆயிஷா கடாபி மட்டும் பெண் குழந்தை. முகமது, சயீப் அல் இஸ்லாம், அல் சாடி, ஹனிபால், பிலால், சயீப் அல் அரப், கமீஸ், ஆகியோர் பிற குழந்தைகள்.
மிலாட் என்பவரையும், ஹன்னா என்ற பெண் குழந்தையையும் கடாபி தத்தெடுத்தார். 1986ல், கடாபி வீட்டின் மீது நடந்த தாக்குதலில் ஹன்னா இறந்து போனதாக தகவல் வெளியானது. கடந்த பிப்ரவரி மாதம் எதிர்த்தரப்பினர் நடத்திய தாக்குதலில், கமீஸ் பலியானதாகவும் தகவல் வந்தது. ஆனால், அது உறுதிப்படுத்தப்படவில்லை. அவரது தலைமையில் இயங்கும் ராணுவம் தான் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறது.
சயீப் அல் அரப் ஜெர்மனியில் படித்து வந்தார். சமீபத்தில் தான் நாடு திரும்பினார். அரசியல் வாழ்வில் அவர் ஈடுபடாததால், அவரது புகைப்படம் கூட இதுவரை வெளியானதில்லை.

வாஷிங்டன்: அமெரிக்காவின் சிம்மசொப்பனமாக விளங்கிய ஒசாமாபின்லாடன் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது அமெரிக்க உளவுப்படையினரின் அதிரடி ஆப்ரேஷன் திட்டத்தில் குறி வைத்து காலி செய்யப்பட்டான். அமெரிக்காவின் நீண்டகால ஆசையும், முக்கிய நோக்கமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவரது பலி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் பராக்ஒபாமா டி.வி.,யில் தோன்றி அறிவித்தார்.

சவுதியில் பிறந்து மதவாதியான ஒசாமா பின்லாடன் பயங்கரவாத அமைப்பான அல்குவைதாவின் தலைவரானான். இவனுக்கு வயது 54. ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு பயங்கரவாத அமைப்பை உலகமே கண்டு அச்சுறும் வகையில் மிக ரகசியமாக நடத்தி வந்தான். இவனது அமைப்பில் உள்ளவர்கள் தற்கொலை படை தாக்குதல் நடத்துவதில் கில்லாடிகள். அமெரிக்காவே எங்கள் எதிரி என்றும், அவர்களுக்கு எதிராகவே எங்களின் போர் நடக்கும் என ஒசாமா கூறி வந்தான். கடந்த 2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் தேதி அமெரிக்காவின் புகழ்பெற்ற வர்த்தக இரட்டை கோபுரத்தை விமானத்தை கொண்டு மோதி தூள், தூளாக்கினான். இதில் அமெரிக்கா நிலைகுலைந்து பெரும் அழிவை சந்தித்தது. ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இந்த நாள் முதல் சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தான் ஒசாமா .

இவனை உயிருடன் பிடித்து சட்டத்தின் முன்நிறுத்துவோம் என அமெரிக்க அதிபர்கள் புஷ், பராக்ஒபாமா உறுதியாக சொல்லி வந்தனர். ஒசாமா பாகிஸ்தான் பகுதிகளில்தான் பதுங்கி இருப்பான் என அமெரிக்க அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், உயர் அதிகாரிகள் கூறி வந்தனர். ஒசாமாவை பிடிப்பதே முக்கியப்பணியாக இருக்கும் என்றனர். இதனையடுத்து இந்த பகுதிகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வந்தன.

ஒசாமாவின் வீடியோ காட்சிகள் அவ்வப்போது ஒளிபரப்பாகி வந்தன. இந்நிலையில் ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டான் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது. பல முறை ஒசாமா கொல்லப்பட்டான் என்ற செய்தி வருவதும், இதனை அல்குவைதா மறுப்பதும் நடந்திருக்கிறது. ஆனால் இதுவரை இன்றைய ஒசாமா பலி குறித்து அல்குவைதா அமைப்பினர் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை.

இந்த முறை இவனது உடலை டி.என்.ஏ., டெஸ்ட் மூலம் ஒசாமாதான் என்று உறுதி செய்யப்பட்டதாக அமெரிக்க மத்திய உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. இவன் கொல்லப்பட்ட இன்றைய நாள் அமெரிக்காவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பான நாள் என அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ்சின் தலைமை அதிகாரி ஆண்டிகார்ட்டு கூறியுள்ளார்.

ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டது எப்படி? : பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் நகரில் பதுங்கி இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் மாற்று உடையில் சென்று கண்காணித்து இவனை எப்படி கொல்வது என திட்டமிடப்பட்டது. ஒரு வாரத்தில் இந்த ஆப்ரேஷன் கச்சிதமாக முடிக்கப்பட்டது. எப்போதும் வனப்பகுதி , மலைப்பள்ளத்தாக்கில்தான் ஒசாமா பதுங்கி இருப்பான் என்ற செய்தியைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம் இந்தமுறை இஸ்லாமாபாத் நகரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் ஒசாமா தங்கியிருந்திருக்கிறான். இதனையடுத்து உளவு துறை அதிகாரிகள் தாக்குதல் நடத்தி ஒசாமாவை கொன்றனர். இந்த பண்ணை வீட்டின் வெளியே ஒசாமா பிணமானான். அமெரிக்காவின் முக்கியப்பணி முடிந்தது.

அதிபர் பராக் ஒபாமா மகிழ்ச்சி: பின்லாடன் இறந்ததகவலை அமெரிக்க அதிபர் ஒபாமா உறுதி செய்தார். நாட்டு மக்களுக்கு டி.வி., மூலம் அறிவித்த போது அமெரிக்காவின் நீண்டகால ஆசை நிறைவேறியிருக்கிறது என்றும், நீதி நிலைநாட்டப்பட்டிருப்பதாகவும் கூறினார். அவர் மேலும் கூறுகையில், 10 ஆண்டு காலத்துக்கும் மேலாக ஒசாமா பின் லேடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் , உளவு அதிகாரிகளுக்கு அமெரிக்கா மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. இந்த வெற்றி செப்டம்பர் 11ம் தேதி இரட்டைக் கோபுர தாக்குதலில் பலியான அப்பாவி மக்களின் ஆத்ம சாந்திக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. அந்த பயங்கரவாத தாக்குதலில் உற்றார் , உறவினர்களை பலி கொடுத்த அமெரிக்க குடும்பங்களை மறந்து விடவில்லை. இந்த தருணத்தில் அவர்களை நினைவு கூறுகிறோம். அல்குவைதாவை அழிக்கும் பணி தொடர்ந்து நடக்கும். இத்துடன் முடிவதில்லை. இவ்வாறு ஒபாமா கூறினார்.

அமெரிக்காவின் முக்கிய எதிரி ஒசாமா ஒழிந்தான்; பாகிஸ்தானில் பதுங்கி இருந்த போது குண்டுக்கு பலி

வாஷிங்டன்: அமெரிக்காவின் சிம்மசொப்பனமாக விளங்கிய ஒசாமாபின்லாடன் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது அமெரிக்க உளவுப்படையினரின் அதிரடி ஆப்ரேஷன் திட்டத்தில் குறி வைத்து காலி செய்யப்பட்டான். அமெரிக்காவின் நீண்டகால ஆசையும், முக்கிய நோக்கமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவரது பலி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் பராக்ஒபாமா டி.வி.,யில் தோன்றி அறிவித்தார்.

சவுதியில் பிறந்து மதவாதியான ஒசாமா பின்லாடன் பயங்கரவாத அமைப்பான அல்குவைதாவின் தலைவரானான். இவனுக்கு வயது 54. ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு பயங்கரவாத அமைப்பை உலகமே கண்டு அச்சுறும் வகையில் மிக ரகசியமாக நடத்தி வந்தான். இவனது அமைப்பில் உள்ளவர்கள் தற்கொலை படை தாக்குதல் நடத்துவதில் கில்லாடிகள். அமெரிக்காவே எங்கள் எதிரி என்றும், அவர்களுக்கு எதிராகவே எங்களின் போர் நடக்கும் என ஒசாமா கூறி வந்தான். கடந்த 2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் தேதி அமெரிக்காவின் புகழ்பெற்ற வர்த்தக இரட்டை கோபுரத்தை விமானத்தை கொண்டு மோதி தூள், தூளாக்கினான். இதில் அமெரிக்கா நிலைகுலைந்து பெரும் அழிவை சந்தித்தது. ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இந்த நாள் முதல் சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தான் ஒசாமா .

இவனை உயிருடன் பிடித்து சட்டத்தின் முன்நிறுத்துவோம் என அமெரிக்க அதிபர்கள் புஷ், பராக்ஒபாமா உறுதியாக சொல்லி வந்தனர். ஒசாமா பாகிஸ்தான் பகுதிகளில்தான் பதுங்கி இருப்பான் என அமெரிக்க அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், உயர் அதிகாரிகள் கூறி வந்தனர். ஒசாமாவை பிடிப்பதே முக்கியப்பணியாக இருக்கும் என்றனர். இதனையடுத்து இந்த பகுதிகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வந்தன.

ஒசாமாவின் வீடியோ காட்சிகள் அவ்வப்போது ஒளிபரப்பாகி வந்தன. இந்நிலையில் ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டான் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது. பல முறை ஒசாமா கொல்லப்பட்டான் என்ற செய்தி வருவதும், இதனை அல்குவைதா மறுப்பதும் நடந்திருக்கிறது. ஆனால் இதுவரை இன்றைய ஒசாமா பலி குறித்து அல்குவைதா அமைப்பினர் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை.

இந்த முறை இவனது உடலை டி.என்.ஏ., டெஸ்ட் மூலம் ஒசாமாதான் என்று உறுதி செய்யப்பட்டதாக அமெரிக்க மத்திய உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. இவன் கொல்லப்பட்ட இன்றைய நாள் அமெரிக்காவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பான நாள் என அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ்சின் தலைமை அதிகாரி ஆண்டிகார்ட்டு கூறியுள்ளார்.

ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டது எப்படி? : பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் நகரில் பதுங்கி இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் மாற்று உடையில் சென்று கண்காணித்து இவனை எப்படி கொல்வது என திட்டமிடப்பட்டது. ஒரு வாரத்தில் இந்த ஆப்ரேஷன் கச்சிதமாக முடிக்கப்பட்டது. எப்போதும் வனப்பகுதி , மலைப்பள்ளத்தாக்கில்தான் ஒசாமா பதுங்கி இருப்பான் என்ற செய்தியைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம் இந்தமுறை இஸ்லாமாபாத் நகரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் ஒசாமா தங்கியிருந்திருக்கிறான். இதனையடுத்து உளவு துறை அதிகாரிகள் தாக்குதல் நடத்தி ஒசாமாவை கொன்றனர். இந்த பண்ணை வீட்டின் வெளியே ஒசாமா பிணமானான். அமெரிக்காவின் முக்கியப்பணி முடிந்தது.

அதிபர் பராக் ஒபாமா மகிழ்ச்சி: பின்லாடன் இறந்ததகவலை அமெரிக்க அதிபர் ஒபாமா உறுதி செய்தார். நாட்டு மக்களுக்கு டி.வி., மூலம் அறிவித்த போது அமெரிக்காவின் நீண்டகால ஆசை நிறைவேறியிருக்கிறது என்றும், நீதி நிலைநாட்டப்பட்டிருப்பதாகவும் கூறினார். அவர் மேலும் கூறுகையில், 10 ஆண்டு காலத்துக்கும் மேலாக ஒசாமா பின் லேடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் , உளவு அதிகாரிகளுக்கு அமெரிக்கா மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. இந்த வெற்றி செப்டம்பர் 11ம் தேதி இரட்டைக் கோபுர தாக்குதலில் பலியான அப்பாவி மக்களின் ஆத்ம சாந்திக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. அந்த பயங்கரவாத தாக்குதலில் உற்றார் , உறவினர்களை பலி கொடுத்த அமெரிக்க குடும்பங்களை மறந்து விடவில்லை. இந்த தருணத்தில் அவர்களை நினைவு கூறுகிறோம். அல்குவைதாவை அழிக்கும் பணி தொடர்ந்து நடக்கும். இத்துடன் முடிவதில்லை. இவ்வாறு ஒபாமா கூறினார்.

டோக்கியோ: ஜப்பானை புரட்டிப்போட்டு நிலைகுலைய செய்துள்ள நிலையில் இங்குள்ள அணு மின் மையத்தில் இருந்து அழுத்தம் காரணமாக வாயுச்கசிவு ஏற்பட்டுள்ளது. இது பெரும் அச்சம் தரும் விஷயமல்லை என்ற போதும் அணுஉலைகள் இருக்கும் இடத்தில் இருந்து 10 கி.மீட்டர் வரை வசிப்போர் காலி செய்து மாற்று இடங்களுக்கு செல்ல கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நேற்று மதியம் சுனாமி தாக்கியதில் டோக்கியோவையொட்டி பல்வேறு தீவுப்பகுதிகள் மூழ்கின. கடலோரத்தில் இருந்த துறைமுகங்கள், வீடுகள் முற்றிலும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய காத்திருந்த புத்தம், புது கார்கள் ஆயிரக்கணக்கில் கடலில் குப்பைகள் போல சென்றன. 3 ரயில்கள் காணவில்லை. இதில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.

சுனாமி ஏற்பட்டு சேதத்தில் சிக்கி தவிப்போரை மீட்கள் ஆயிரக்கணக்கான மீட்பு படையினர் ஈடுபட்டுள்னர். விமானம், கப்பல் , மற்றும் வாகனங்களில் சென்று ஆங்காங்கே உயிருக்கு போராடி வருவோரை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆயிரத்து 300 பேர் இறந்திருக்கலாம் என்று ஜப்பானில் வெளியாககும் ஒரு இணையதளம் கூறியிருக்கிறது. இன்றும் காலையில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் செய்வதறியாது திகைத்து போய் உள்ளனர்.

அணுமின் கசிவு அதிகாரிகள் விளக்கம்: புகுஷிமாவில் அணு மின் நிலையம் உள்ள பகுதியில் சற்று வாயு பரவியிருப்பதாக தெரிகிறது. இது குறித்து அணு மைய அதிகாரிகள் கூறுகையில்; சுனாமி காரணமாக இங்குள்ள 5 அணு உலைகளில் 1 சேதமடைந்திருக்கிறது. இதனால் அழுத்தம் காரணமாக இது அணு வெப்ப வாயு கசிந்துள்ளது. அணு கதிர் எதுவும் வெளியேறவில்லை. இது பெரும் ஆபத்து இல்லை இருப்பினும் 10 கி.மீட்டர் வரை வசிப்போர்கள் காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.

அவசர நிலை பிரகடனம்: இந்தப்பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இங்கு வசிப்போர‌ை விமானம் மூலம் மீட்டு மாற்று இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அணுவை பிளப்பதன் மூலம் ஏற்படும் வெப்பமூட்டும் கருவி வழக்கத்தை விட ஆயிரம் மடங்கு வெப்பம் வெளியேறி வருகிறது. இதனை கூல் செய்யும் நிலையில் உள்ள கருவிகள் தங்களுடைய பணிகளை சரிவர செய்யவில்லை இதனால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜப்பானில் அணுசக்தி வாயு கசிவு: வீடுகளை காலி ; செய்ய உத்தரவு: இதுவரை ஆயிரத்து 300 பேர் பலி !

டோக்கியோ: ஜப்பானை புரட்டிப்போட்டு நிலைகுலைய செய்துள்ள நிலையில் இங்குள்ள அணு மின் மையத்தில் இருந்து அழுத்தம் காரணமாக வாயுச்கசிவு ஏற்பட்டுள்ளது. இது பெரும் அச்சம் தரும் விஷயமல்லை என்ற போதும் அணுஉலைகள் இருக்கும் இடத்தில் இருந்து 10 கி.மீட்டர் வரை வசிப்போர் காலி செய்து மாற்று இடங்களுக்கு செல்ல கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நேற்று மதியம் சுனாமி தாக்கியதில் டோக்கியோவையொட்டி பல்வேறு தீவுப்பகுதிகள் மூழ்கின. கடலோரத்தில் இருந்த துறைமுகங்கள், வீடுகள் முற்றிலும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய காத்திருந்த புத்தம், புது கார்கள் ஆயிரக்கணக்கில் கடலில் குப்பைகள் போல சென்றன. 3 ரயில்கள் காணவில்லை. இதில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.

சுனாமி ஏற்பட்டு சேதத்தில் சிக்கி தவிப்போரை மீட்கள் ஆயிரக்கணக்கான மீட்பு படையினர் ஈடுபட்டுள்னர். விமானம், கப்பல் , மற்றும் வாகனங்களில் சென்று ஆங்காங்கே உயிருக்கு போராடி வருவோரை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆயிரத்து 300 பேர் இறந்திருக்கலாம் என்று ஜப்பானில் வெளியாககும் ஒரு இணையதளம் கூறியிருக்கிறது. இன்றும் காலையில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் செய்வதறியாது திகைத்து போய் உள்ளனர்.

அணுமின் கசிவு அதிகாரிகள் விளக்கம்: புகுஷிமாவில் அணு மின் நிலையம் உள்ள பகுதியில் சற்று வாயு பரவியிருப்பதாக தெரிகிறது. இது குறித்து அணு மைய அதிகாரிகள் கூறுகையில்; சுனாமி காரணமாக இங்குள்ள 5 அணு உலைகளில் 1 சேதமடைந்திருக்கிறது. இதனால் அழுத்தம் காரணமாக இது அணு வெப்ப வாயு கசிந்துள்ளது. அணு கதிர் எதுவும் வெளியேறவில்லை. இது பெரும் ஆபத்து இல்லை இருப்பினும் 10 கி.மீட்டர் வரை வசிப்போர்கள் காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.

அவசர நிலை பிரகடனம்: இந்தப்பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இங்கு வசிப்போர‌ை விமானம் மூலம் மீட்டு மாற்று இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அணுவை பிளப்பதன் மூலம் ஏற்படும் வெப்பமூட்டும் கருவி வழக்கத்தை விட ஆயிரம் மடங்கு வெப்பம் வெளியேறி வருகிறது. இதனை கூல் செய்யும் நிலையில் உள்ள கருவிகள் தங்களுடைய பணிகளை சரிவர செய்யவில்லை இதனால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லி: முன்னாள் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 81.

பல்வேறு உடல் நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்த அர்ஜூன் சிங் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று மாலை அவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவரான அர்ஜூன் சிங், மத்தியப் பிரதேச முதல்வர், மத்திய அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்தவர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்.

முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வர் திக்விஜய் சிங், அமேதி தொகுதியின் முன்னாள் எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோர் அர்ஜூன் சிங்கின் நெருங்கிய உறவினர்கள் ஆவர்.

மறைந்த பி.வி. நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது அர்ஜூன் சிங் அமைச்சராக இருந்தார். ஆனால் பாபர் மசூதி இடிப்பு சம்பவத்திற்குப் பின்னர் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் அவர் காங்கிரஸிலிருந்து விலகினார். என்.டி.திவாரியுடன் சேர்ந்து திவாரி காங்கிரஸை உருவாக்கினார். பின்னர் மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்.

மத்தியப் பிரதேச முதல்வராக 3 முறையும், மத்திய அமைச்சராக இருமுறையும், பஞ்சாப் மாநில ஆளுநராக ஒருமுறையும் இருந்தவர் அர்ஜூன் சிங். இரு முறையும் இவர் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் மாநில ஆளுநராக இவர் இருந்தபோதுதான் ராஜீவ்-லோங்கோவால் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. 2000மாவது ஆண்டு சிறந்த நாடாளுமன்றவாதியாக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆண்டர்சனை தப்ப விட்டவர்!

அர்ஜூன் சிங் மத்தியப் பிரதேச முதல்வராக இருந்தபோதுதான், போபாலில் விஷவாயுக் கசிவு சம்பவம் நடந்து பல ஆயிரம் பேர் உயிரைப் பறித்தது. அந்த சமயத்தில் யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சனை பத்திரமாக இந்தியாவிலிருந்து தப்ப உதவியவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

போபால் நகரை விஷவாயு தாக்கிய அந்த நாளில், அதிலிருந்து தப்புவதற்காக நகரை விட்டு வெளியேறி தனக்குச் சொந்தமான கேர்வா டாம் அரண்மனைக்குப் போய் தங்கினார் அர்ஜூன் சிங் என்ற குற்றச்சாட்டும் அப்போது எழுந்தது.

பூலான் தேவியை சரணடைய வைத்தவர்

நாட்டையே அதிர வைத்த பிரபல கொள்ளைக்காரி பூலான் தேவி, ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சரணடைய முன்வந்தபோது அப்போதைய ம..பி முதல்வராக இருந்த அர்ஜூன் சிங் முன்னிலையி்ல்தான் சரணடைய விருப்பம் தெரிவித்தார். அதேபோல அர்ஜூன் சிங் முன்புதான் அவர் ஆயுதங்களைப் போட்டு சரணடைந்தார் பூலான் தேவி.

பூலான் தேவி சரணடையும் விவகாரத்தில் முக்கியப் பங்காற்றியவர் அர்ஜூன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

இட ஒதுக்கீட்டுக்காக பாடுபட்டவர்

அர்ஜூன் சிங் மீது பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும் கூட இந்தியாவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக அவரும் விளங்கினார். குறிப்பாக பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் மிகவும் முக்கியமான பங்காற்றியவர் அர்ஜூன் சிங்.

அரசு உதவி பெறாத தனியார்ர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற சட்ட மசோதாவைக் கொண்டு வந்தவர் அர்ஜூன் சிங்.

மேலும் ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் அர்ஜூன் சிங்.

மேலும், அர்ஜூன் சிங், மன்மோகன் சிங் அமைச்சரவையில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது 32 மத்திய கல்வி நிலையங்களில் மட்டுமே அமல்படுத்தப்பட்டு வந்த பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 100க்கும் மேற்பட்ட நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் செயல்படுத்த முயற்சி எடுத்து வந்தார்.

தனது இறுதிக் காலத்தில் காங்கிரஸ் தலைமையுடன் அவர் ஒத்துப் போக முன்வராததால் கட்சியால் கிட்டத்தட்ட கைவிடப்பட்டார். அரசியலிருந்தும் ஒதுங்கினார்.

காரியக் கமிட்டியிலிருந்து நீக்கியதும் மரணம்

இன்று பிற்பகலில்தான் காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர் பொறுப்பிலிருந்து அர்ஜூன் சிங்கை நீக்கியிருந்தனர். இந்த நிலையில் மாலையில் அவர் மரணமடைந்துள்ளார்.

முன்னாள் மனித வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் மரணம்

டெல்லி: முன்னாள் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 81.

பல்வேறு உடல் நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்த அர்ஜூன் சிங் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று மாலை அவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவரான அர்ஜூன் சிங், மத்தியப் பிரதேச முதல்வர், மத்திய அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்தவர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்.

முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வர் திக்விஜய் சிங், அமேதி தொகுதியின் முன்னாள் எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோர் அர்ஜூன் சிங்கின் நெருங்கிய உறவினர்கள் ஆவர்.

மறைந்த பி.வி. நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது அர்ஜூன் சிங் அமைச்சராக இருந்தார். ஆனால் பாபர் மசூதி இடிப்பு சம்பவத்திற்குப் பின்னர் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் அவர் காங்கிரஸிலிருந்து விலகினார். என்.டி.திவாரியுடன் சேர்ந்து திவாரி காங்கிரஸை உருவாக்கினார். பின்னர் மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்.

மத்தியப் பிரதேச முதல்வராக 3 முறையும், மத்திய அமைச்சராக இருமுறையும், பஞ்சாப் மாநில ஆளுநராக ஒருமுறையும் இருந்தவர் அர்ஜூன் சிங். இரு முறையும் இவர் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் மாநில ஆளுநராக இவர் இருந்தபோதுதான் ராஜீவ்-லோங்கோவால் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. 2000மாவது ஆண்டு சிறந்த நாடாளுமன்றவாதியாக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆண்டர்சனை தப்ப விட்டவர்!

அர்ஜூன் சிங் மத்தியப் பிரதேச முதல்வராக இருந்தபோதுதான், போபாலில் விஷவாயுக் கசிவு சம்பவம் நடந்து பல ஆயிரம் பேர் உயிரைப் பறித்தது. அந்த சமயத்தில் யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சனை பத்திரமாக இந்தியாவிலிருந்து தப்ப உதவியவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

போபால் நகரை விஷவாயு தாக்கிய அந்த நாளில், அதிலிருந்து தப்புவதற்காக நகரை விட்டு வெளியேறி தனக்குச் சொந்தமான கேர்வா டாம் அரண்மனைக்குப் போய் தங்கினார் அர்ஜூன் சிங் என்ற குற்றச்சாட்டும் அப்போது எழுந்தது.

பூலான் தேவியை சரணடைய வைத்தவர்

நாட்டையே அதிர வைத்த பிரபல கொள்ளைக்காரி பூலான் தேவி, ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சரணடைய முன்வந்தபோது அப்போதைய ம..பி முதல்வராக இருந்த அர்ஜூன் சிங் முன்னிலையி்ல்தான் சரணடைய விருப்பம் தெரிவித்தார். அதேபோல அர்ஜூன் சிங் முன்புதான் அவர் ஆயுதங்களைப் போட்டு சரணடைந்தார் பூலான் தேவி.

பூலான் தேவி சரணடையும் விவகாரத்தில் முக்கியப் பங்காற்றியவர் அர்ஜூன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

இட ஒதுக்கீட்டுக்காக பாடுபட்டவர்

அர்ஜூன் சிங் மீது பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும் கூட இந்தியாவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக அவரும் விளங்கினார். குறிப்பாக பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் மிகவும் முக்கியமான பங்காற்றியவர் அர்ஜூன் சிங்.

அரசு உதவி பெறாத தனியார்ர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற சட்ட மசோதாவைக் கொண்டு வந்தவர் அர்ஜூன் சிங்.

மேலும் ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் அர்ஜூன் சிங்.

மேலும், அர்ஜூன் சிங், மன்மோகன் சிங் அமைச்சரவையில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது 32 மத்திய கல்வி நிலையங்களில் மட்டுமே அமல்படுத்தப்பட்டு வந்த பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 100க்கும் மேற்பட்ட நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் செயல்படுத்த முயற்சி எடுத்து வந்தார்.

தனது இறுதிக் காலத்தில் காங்கிரஸ் தலைமையுடன் அவர் ஒத்துப் போக முன்வராததால் கட்சியால் கிட்டத்தட்ட கைவிடப்பட்டார். அரசியலிருந்தும் ஒதுங்கினார்.

காரியக் கமிட்டியிலிருந்து நீக்கியதும் மரணம்

இன்று பிற்பகலில்தான் காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர் பொறுப்பிலிருந்து அர்ஜூன் சிங்கை நீக்கியிருந்தனர். இந்த நிலையில் மாலையில் அவர் மரணமடைந்துள்ளார்.

பாகிஸ்தான் சிறுபான்மையின நல மந்திரியாக இருந்தவர் ஷாபாஸ்பாத்தி. இன்று மதியம் அவர் இஸ்லாமாபாத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வீட்டு அருகே மறைந்து இருந்த மர்ம மனிதன் அவர் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இதில் ஷாபாஸ் படுகாயம் அடைந்தார். உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் வழியிலேயே உயிர் இழந்தார். இந்த தாக்குதலில் 2 பேர் காயம் அடைந்தனர். அவரை சுட்டவன் உடனே அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். அவர் தீவிரவாதியாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அவனை பிடிக்க இஸ்லாமாபாத் முழுவதும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

ஷாபாஸ் பாகிஸ்தான் மக்கள் கட்சி எம்.பி.யாக இருந்தார். கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர். பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்தவ தலைவர்களில் முக்கியமானவராகவும் திகழ்ந்தார்.

பாகிஸ்தான் மந்திரி சுட்டுக்கொலை: மர்ம மனிதன் திடீர் தாக்குதல்

பாகிஸ்தான் சிறுபான்மையின நல மந்திரியாக இருந்தவர் ஷாபாஸ்பாத்தி. இன்று மதியம் அவர் இஸ்லாமாபாத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வீட்டு அருகே மறைந்து இருந்த மர்ம மனிதன் அவர் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இதில் ஷாபாஸ் படுகாயம் அடைந்தார். உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் வழியிலேயே உயிர் இழந்தார். இந்த தாக்குதலில் 2 பேர் காயம் அடைந்தனர். அவரை சுட்டவன் உடனே அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். அவர் தீவிரவாதியாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அவனை பிடிக்க இஸ்லாமாபாத் முழுவதும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

ஷாபாஸ் பாகிஸ்தான் மக்கள் கட்சி எம்.பி.யாக இருந்தார். கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர். பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்தவ தலைவர்களில் முக்கியமானவராகவும் திகழ்ந்தார்.

சீனாவில் முன்னாள் உயர் அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்ற வழக்கில்,அவருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சீனாவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள லியோனிங் மாகாண மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுவின் துணைத் தலைவராக இருந்தவர் சாங் யோங்(56).

கடந்த 2000 முதல் 2009 வரை இவர் பதவியில் இருந்த போது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி 23 தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் 720 லட்சம் ரூபாய் லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு அரசு ஒப்பந்தங்களையும் பணி உயர்வையும் லஞ்சம் பெற்றுக் கொண்டு வழங்கியுள்ளார்.

இது குறித்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.சட்ட விரோதமாக அவர் சம்பாதித்த அனைத்தும் அரசால் கைப்பற்றப்பட்டன.பீஜிங் நகர இரண்டாவது இடை நிலை மக்கள் நீதிமன்றம் அவரது வழக்கை விசாரித்து அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

சீனா: லஞ்சம் பெற்ற அதிகாரிக்கு மரண தண்டனை

சீனாவில் முன்னாள் உயர் அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்ற வழக்கில்,அவருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சீனாவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள லியோனிங் மாகாண மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுவின் துணைத் தலைவராக இருந்தவர் சாங் யோங்(56).

கடந்த 2000 முதல் 2009 வரை இவர் பதவியில் இருந்த போது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி 23 தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் 720 லட்சம் ரூபாய் லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு அரசு ஒப்பந்தங்களையும் பணி உயர்வையும் லஞ்சம் பெற்றுக் கொண்டு வழங்கியுள்ளார்.

இது குறித்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.சட்ட விரோதமாக அவர் சம்பாதித்த அனைத்தும் அரசால் கைப்பற்றப்பட்டன.பீஜிங் நகர இரண்டாவது இடை நிலை மக்கள் நீதிமன்றம் அவரது வழக்கை விசாரித்து அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

முக நூல்

Popular Posts