background img

புதிய வரவு

Showing posts with label Director. Show all posts
Showing posts with label Director. Show all posts
சென்னை: "தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் திரைப்படம் தயாரிக்கும் நிலையை உருவாக்கி, சினிமாவுக்கு உயிர் கொடுக்க வேண்டும்" என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு, இயக்குனர் தங்கர்பச்சான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக மக்கள் ஒருமித்த தீர்ப்பின் மூலம் முதல்வருக்கு மிகப்பெரிய பொறுப்பினை அளித்துள்ளனர். மக்கள் அளித்துள்ள தீர்ப்பு, ஆட்சியாளர்கள் நேர்மை தவறியதற்காகவும், இனி ஆளப்போகிறவர்கள் நேர்மை தவறாமல் இருப்பதற்காகவும் விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவும் இருக்கிறது.

தங்களின் வாக்குரிமை ஒன்றின் மூலம் மட்டுமே எதிர்ப்பினையும், தேவையையும் உணர்த்துகின்ற வகையில் வாக்களித்திருக்கின்ற தமிழ் மக்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் மட்டுமே. விளைவிக்கிற பொருளுக்கு உரிய விலையையும், நீர் ஆதாரத்தையும், இடுபொருள், பூச்சிக்கொல்லிகளையும், உரிய நேரத்தில் தந்து விவசாய தொழிலில் உள்ள பிரச்சினைகளை தீர்த்தால், கட்டுப்பாட்டையும் மீறி பல மடங்கு உயர்ந்து விட்ட உணவுப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்தலாம்.

அத்துடன் பெண்களுக்கு பாதுகாவலராக இருக்கிற நமது முதல்-அமைச்சர் மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தும் சாத்தியம் இல்லாமல் போனாலும், கட்டுப்பாடுகளை உடனடியாக விதித்து மதுக்கடைகள் அனைத்தையும் ஊருக்கு வெளியில் ஒதுக்குபுறமாக அமைக்க வேண்டும்.

ராஜபக்சேவுக்கு தண்டனை

ராஜபக்சேவிற்கு தண்டனை பெற்று தர தமிழக அரசு மத்திய அரசினை வற்புறுத்தும் எனச்சொல்லி நம்பிக்கையை விதைத்திருக்கிற முதல்வர் முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே இதற்கான ஆணையை நிறைவேற்றி உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

யார் வேண்டுமானாலும் திரைப்படங்கள் தயாரிக்க...

திரைப்படத் தொழில் தொடங்கிய காலந் தொட்டு திரைப்படங்களை தயாரித்து வந்த நிறுவனங்கள் கூட கடந்த ஆண்டுகளில் தயாரிப்பதை நிறுத்தி விட்டதோடு, புதியதாக படங்கள் தயாரித்தவர்களுக்கும், தயாரித்த படங்களை வெளியிட முடியாமல் கடனில் சிக்கி தவித்து மூழ்கி கொண்டிருக்கும் வேளையில் நான் சாந்திருக்கின்ற திரைப்படத்துறையை நம்பியிருக்கிற பல லட்சக்கணக்கான தொழிலாளர்களின் பிரச்சினையை முதல்வர் தீர்ந்து வைப்பார் என நம்புகிறேன்.

திறமையை மட்டுமே மூலதனமாக கொண்டிருக்கின்ற என்னைப்போன்ற கலைஞர்கள் சுதந்திரமாக செயல்படவும், யார் வேண்டுமானாலும், திரைப்படத்தை தயாரிக்கலாம், யார் வேண்டுமானாலும் வெளியிடலாம் என்கிற நிலையை உருவாக்கி தந்து மக்களுக்கான திரைப்பட கலைக்கு உயிர் கொடுக்க வேண்டும்.

தமிழக மக்களின் பேராதரவை பெற்ற முதல்வருக்கு ஒரு கலைஞன் என்ற முறையில், ஒரு வாக்காளன் என்ற முறையில் தங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை கூறி வேண்டுகோளை தமிழக மக்களின் சார்பில் வைக்கிறேன்."

-இவ்வாறு அறிக்கையில் தங்கர்பச்சான் கூறியுள்ளார்.

திரைப்படத் துறைக்கு உயிர்கொடுங்கள்! - ஜெயலலிதாவுக்கு தங்கர் பச்சான் வேண்டுகோள்

சென்னை: "தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் திரைப்படம் தயாரிக்கும் நிலையை உருவாக்கி, சினிமாவுக்கு உயிர் கொடுக்க வேண்டும்" என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு, இயக்குனர் தங்கர்பச்சான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக மக்கள் ஒருமித்த தீர்ப்பின் மூலம் முதல்வருக்கு மிகப்பெரிய பொறுப்பினை அளித்துள்ளனர். மக்கள் அளித்துள்ள தீர்ப்பு, ஆட்சியாளர்கள் நேர்மை தவறியதற்காகவும், இனி ஆளப்போகிறவர்கள் நேர்மை தவறாமல் இருப்பதற்காகவும் விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவும் இருக்கிறது.

தங்களின் வாக்குரிமை ஒன்றின் மூலம் மட்டுமே எதிர்ப்பினையும், தேவையையும் உணர்த்துகின்ற வகையில் வாக்களித்திருக்கின்ற தமிழ் மக்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் மட்டுமே. விளைவிக்கிற பொருளுக்கு உரிய விலையையும், நீர் ஆதாரத்தையும், இடுபொருள், பூச்சிக்கொல்லிகளையும், உரிய நேரத்தில் தந்து விவசாய தொழிலில் உள்ள பிரச்சினைகளை தீர்த்தால், கட்டுப்பாட்டையும் மீறி பல மடங்கு உயர்ந்து விட்ட உணவுப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்தலாம்.

அத்துடன் பெண்களுக்கு பாதுகாவலராக இருக்கிற நமது முதல்-அமைச்சர் மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தும் சாத்தியம் இல்லாமல் போனாலும், கட்டுப்பாடுகளை உடனடியாக விதித்து மதுக்கடைகள் அனைத்தையும் ஊருக்கு வெளியில் ஒதுக்குபுறமாக அமைக்க வேண்டும்.

ராஜபக்சேவுக்கு தண்டனை

ராஜபக்சேவிற்கு தண்டனை பெற்று தர தமிழக அரசு மத்திய அரசினை வற்புறுத்தும் எனச்சொல்லி நம்பிக்கையை விதைத்திருக்கிற முதல்வர் முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே இதற்கான ஆணையை நிறைவேற்றி உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

யார் வேண்டுமானாலும் திரைப்படங்கள் தயாரிக்க...

திரைப்படத் தொழில் தொடங்கிய காலந் தொட்டு திரைப்படங்களை தயாரித்து வந்த நிறுவனங்கள் கூட கடந்த ஆண்டுகளில் தயாரிப்பதை நிறுத்தி விட்டதோடு, புதியதாக படங்கள் தயாரித்தவர்களுக்கும், தயாரித்த படங்களை வெளியிட முடியாமல் கடனில் சிக்கி தவித்து மூழ்கி கொண்டிருக்கும் வேளையில் நான் சாந்திருக்கின்ற திரைப்படத்துறையை நம்பியிருக்கிற பல லட்சக்கணக்கான தொழிலாளர்களின் பிரச்சினையை முதல்வர் தீர்ந்து வைப்பார் என நம்புகிறேன்.

திறமையை மட்டுமே மூலதனமாக கொண்டிருக்கின்ற என்னைப்போன்ற கலைஞர்கள் சுதந்திரமாக செயல்படவும், யார் வேண்டுமானாலும், திரைப்படத்தை தயாரிக்கலாம், யார் வேண்டுமானாலும் வெளியிடலாம் என்கிற நிலையை உருவாக்கி தந்து மக்களுக்கான திரைப்பட கலைக்கு உயிர் கொடுக்க வேண்டும்.

தமிழக மக்களின் பேராதரவை பெற்ற முதல்வருக்கு ஒரு கலைஞன் என்ற முறையில், ஒரு வாக்காளன் என்ற முறையில் தங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை கூறி வேண்டுகோளை தமிழக மக்களின் சார்பில் வைக்கிறேன்."

-இவ்வாறு அறிக்கையில் தங்கர்பச்சான் கூறியுள்ளார்.

முதல்வராக இருந்த கருணாநிதிக்கு ஜால்ரா போட்டு வந்த தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராமநாரயணன், பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து புதிய தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக விஜய்யின் அப்பாவும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க தலைவராக ராம.நாராயணன் இருந்தார். தி.மு.க., ஆதரவாளரான அவர், தேர்தல் முடிவு வெளியானதை தொடர்ந்து, திடீரென சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்க அதிருப்தியாளர்கள் கூட்டம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நடந்தது. கூட்டத்திற்கு தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி., தலைமை தாங்கினார். இதில், தயாரிப்பாளர்கள் கே.ஆர்., ரத்தினம், குஞ்சுமோன் உள்ளிட்டோர், இயக்குனர்கள் சக்தி சிதம்பரம், சஞ்சய் ராம், ஆதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்ட முடிவில் தயாரிப்பாளர்கள் கே.ஆர்.ஜி., மற்றும் கேயார் ஆகியோர் பேசுகையில், கடந்த ஐந்தாண்டுகளாக தயாரிப்பாளர் சங்கத்திற்குள் அரசியலை புகுத்தி விட்டனர். ராம.நாராயணன் பதவி விலகல் மூலம் இது நிரூபணமாகியுள்ளது. சங்கத்திற்குள் பல முறைகேடுகள் நடந்துள்ளன. சிறு தயாரிப்பாளர்களிடம் வசூல் செய்துள்ளனர். தயாரிப்பாளர் சங்கத்தின் பெயரை பயன்படுத்தி, தனிப்பட்டவர்கள் கடன் பெற்றுள்ளனர். வீடு கட்டும் சொசைட்டி என்ற பெயரால் வசூல் நடந்துள்ளது. அதற்கு ரசீது தரவில்லை. ராம.நாராயணனை தொடர்ந்து, சங்க நிர்வாகிகள் அனைவரும், வரும் 16ம் தேதிக்குள் பதவி விலக வேண்டும். இல்லையென்றால், பொதுக்குழு மூலம் அனைவரையும் நீக்க வேண்டி வரும். மீண்டும் தேர்தல் நடத்தி, புதிய தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர், என்றனர்.

இதனிடையே மாலையில் மீண்டும் அவசரமாக கூடியது தயாரிப்பாளர்கள் சங்க கூட்டம், அதில் ஏற்கனவே உப தலைவராக இருக்கும் நடிகர் விஜய்யின் அப்பாவும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரை தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ளனர். தேர்தலில் மகாத்தான வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்க இருக்க நிலையில் அதிமுக.,வுடன் மிக நெருக்கமாக இருக்கும் எஸ்.ஏ.சி.யை தலைவராக்கினால் நன்மை கிடைக்கும் என்ற நோக்கத்தில் அவரை ‌த‌லைவராக தேர்ந்தெடுத்துள்ளனர்.

இதற்கிடையில், ராம.நாராயணன் தரப்பை சேர்ந்தவர்கள், தேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தயாரிப்பாளர் சங்கத்தில், மோதல் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. "பெப்சி தலைவராக இருந்த குகநாதனும், தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அங்கும் அதிருப்தியாளர்கள் புதிய தலைவர் மற்றும் சங்க உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் நடத்துவதற்கு முனைப்பு காட்டி வருகின்றனர். ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, திரையுலகம் பல புதிய சிக்கல்களை சந்தித்து வருகிறது.

ஜால்ராக்கள் ஓட்டத்தால் எஸ்.ஏ.சி.,க்கு அடித்தது லக்!

முதல்வராக இருந்த கருணாநிதிக்கு ஜால்ரா போட்டு வந்த தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராமநாரயணன், பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து புதிய தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக விஜய்யின் அப்பாவும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க தலைவராக ராம.நாராயணன் இருந்தார். தி.மு.க., ஆதரவாளரான அவர், தேர்தல் முடிவு வெளியானதை தொடர்ந்து, திடீரென சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்க அதிருப்தியாளர்கள் கூட்டம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நடந்தது. கூட்டத்திற்கு தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி., தலைமை தாங்கினார். இதில், தயாரிப்பாளர்கள் கே.ஆர்., ரத்தினம், குஞ்சுமோன் உள்ளிட்டோர், இயக்குனர்கள் சக்தி சிதம்பரம், சஞ்சய் ராம், ஆதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்ட முடிவில் தயாரிப்பாளர்கள் கே.ஆர்.ஜி., மற்றும் கேயார் ஆகியோர் பேசுகையில், கடந்த ஐந்தாண்டுகளாக தயாரிப்பாளர் சங்கத்திற்குள் அரசியலை புகுத்தி விட்டனர். ராம.நாராயணன் பதவி விலகல் மூலம் இது நிரூபணமாகியுள்ளது. சங்கத்திற்குள் பல முறைகேடுகள் நடந்துள்ளன. சிறு தயாரிப்பாளர்களிடம் வசூல் செய்துள்ளனர். தயாரிப்பாளர் சங்கத்தின் பெயரை பயன்படுத்தி, தனிப்பட்டவர்கள் கடன் பெற்றுள்ளனர். வீடு கட்டும் சொசைட்டி என்ற பெயரால் வசூல் நடந்துள்ளது. அதற்கு ரசீது தரவில்லை. ராம.நாராயணனை தொடர்ந்து, சங்க நிர்வாகிகள் அனைவரும், வரும் 16ம் தேதிக்குள் பதவி விலக வேண்டும். இல்லையென்றால், பொதுக்குழு மூலம் அனைவரையும் நீக்க வேண்டி வரும். மீண்டும் தேர்தல் நடத்தி, புதிய தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர், என்றனர்.

இதனிடையே மாலையில் மீண்டும் அவசரமாக கூடியது தயாரிப்பாளர்கள் சங்க கூட்டம், அதில் ஏற்கனவே உப தலைவராக இருக்கும் நடிகர் விஜய்யின் அப்பாவும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரை தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ளனர். தேர்தலில் மகாத்தான வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்க இருக்க நிலையில் அதிமுக.,வுடன் மிக நெருக்கமாக இருக்கும் எஸ்.ஏ.சி.யை தலைவராக்கினால் நன்மை கிடைக்கும் என்ற நோக்கத்தில் அவரை ‌த‌லைவராக தேர்ந்தெடுத்துள்ளனர்.

இதற்கிடையில், ராம.நாராயணன் தரப்பை சேர்ந்தவர்கள், தேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தயாரிப்பாளர் சங்கத்தில், மோதல் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. "பெப்சி தலைவராக இருந்த குகநாதனும், தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அங்கும் அதிருப்தியாளர்கள் புதிய தலைவர் மற்றும் சங்க உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் நடத்துவதற்கு முனைப்பு காட்டி வருகின்றனர். ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, திரையுலகம் பல புதிய சிக்கல்களை சந்தித்து வருகிறது.

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஐந்து வருடங்கள் உண்மையாகவும், நேர்மையாகவும், தலைவராக நான் பணிபுரிந்தது என்னுடன் இருந்த நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஏனைய தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் தெரியும்.

120 சிறு முதலீட்டு படங்களில் பணியாற்றிய நான் எளிமையே வலிமை என்ற உணர்வோடு வாழ்ந்து வருபவன். எந்த காலத்திலும் திரை உலகில் நான் யாருக்கும் பாக்கி வைத்ததில்லை. நேர்மை தவறியதில்லை. இது திரை உலகில் நான் பணியாற்றிய ஏவிஎம், கே. பாலச்சந்தரின் கவிதாலயா போன்ற பெரிய நிறுவனங்களுக்கும் ஏனைய நிறுவனங்களுக்கும் தெரியும்.

ஞாயப்படி நடக்கும் என்னை சங்கத்தின் முன்னாள் தலைவரும் மற்றவர்களும் சங்கத்தில் 15 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என பொய்யான தகவலை கொடுத்து ஒளிபரப்பி வருகின்றனர். சங்கத்தில் வரவு-செலவு கணக்கு ஒவ்வொரு மாதமும் நடைபெறும் செயற்குழு கூட் டத்தில் ஆடிட்டர் மூலம் தணிக்கை செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதை மினிட்ஸ் புத்தகத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

புதிதாக தலைவர் பொறுப்பேற்றுள்ள எஸ்.ஏ. சந்திரசேகரன் தீவிர விசாரித்து உண்மை நிலையை எல்லோருக்கும் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன். அவருக்கு மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் ராமநாராயணன் கூறி உள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்தில் ரூ.15 கோடி ஊழலா? ராம நாராயணன் மறுப்பு

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஐந்து வருடங்கள் உண்மையாகவும், நேர்மையாகவும், தலைவராக நான் பணிபுரிந்தது என்னுடன் இருந்த நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஏனைய தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் தெரியும்.

120 சிறு முதலீட்டு படங்களில் பணியாற்றிய நான் எளிமையே வலிமை என்ற உணர்வோடு வாழ்ந்து வருபவன். எந்த காலத்திலும் திரை உலகில் நான் யாருக்கும் பாக்கி வைத்ததில்லை. நேர்மை தவறியதில்லை. இது திரை உலகில் நான் பணியாற்றிய ஏவிஎம், கே. பாலச்சந்தரின் கவிதாலயா போன்ற பெரிய நிறுவனங்களுக்கும் ஏனைய நிறுவனங்களுக்கும் தெரியும்.

ஞாயப்படி நடக்கும் என்னை சங்கத்தின் முன்னாள் தலைவரும் மற்றவர்களும் சங்கத்தில் 15 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என பொய்யான தகவலை கொடுத்து ஒளிபரப்பி வருகின்றனர். சங்கத்தில் வரவு-செலவு கணக்கு ஒவ்வொரு மாதமும் நடைபெறும் செயற்குழு கூட் டத்தில் ஆடிட்டர் மூலம் தணிக்கை செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதை மினிட்ஸ் புத்தகத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

புதிதாக தலைவர் பொறுப்பேற்றுள்ள எஸ்.ஏ. சந்திரசேகரன் தீவிர விசாரித்து உண்மை நிலையை எல்லோருக்கும் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன். அவருக்கு மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் ராமநாராயணன் கூறி உள்ளார்.

தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து திரையுலகின் ஜாம்பவான்களாக, அதிகாரத்தில், தலைவர் பதவியில் இருந்த ராம.நாராயணன், வி.சி.குகநாதன் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருக்கும் ராம.நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், என் சொந்த வேலை காரணமாகவும், புதிய பட வேலையில் ஈடுபட இருப்பதாலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்து கொள்கிறேன். இதுவரை எனக்கு ஒத்துழைப்பு அளித்த பட அதிபர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், திரைப்பட தொழிலாளர்கள் ஆகிய அனைத்து தரப்பினருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.

பெப்சி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ள வி.சி.குகநாதன் அளித்துள்ள பேட்டியில், `திரைப்பட தொழிலாளர்களுக்காக கடந்த 2 வருடங்களாக அரசின் உதவியை பெற்று, என்னென்ன நன்மைகள் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தேன். தொடர்ந்து அதை செய்ய முடியுமா? என்ற கேள்விக்குறி ஏற்பட்டு இருக்கிறது. எனவே தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து விட்டேன். என் ராஜினாமா கடிதத்தை செயலாளர் ஜி.சிவா, பொருளாளர் சண்முகம் ஆகியோரிடம் கொடுத்து விட்டேன், என்று கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ் திரையுலகம் சார்பில் ஏராளமான பாராட்டு விழாக்களை எடுத்தவர்கள்தான் இந்த ராம.நாராயணனும், வி.சி.குகநாதனும். அதேபோல கருணாநிதி பங்கேற்கும் திரையுலகம் தொடர்பான அனைத்து விழாக்களிலும் இவர்கள் 2 பேரும் ஆஜராகி கருணாநிதி திரைத்துறைக்கு செய்த சலுகைகளை குறிப்பிட்டு பாராட்டி பேசி கருணாநிதியை சந்தோஷப்படுத்துவார்கள்.

பாசத்தலைவருக்கு பாராட்டு விழா என்ற பெயரில் தமிழ் திரையுலகம் கருணாநிதிக்காக நடத்திய பாராட்டு விழாவில் அரசியல்வாதி கெட்-அப்பில் கலந்து கொண்ட அஜித் பேசும்போது, ஒரு பிரச்னைன்னா திரைத்துறையில, பதவில இருக்கிற ஒரு சிலர் அறிக்கை விட்டுடுறாங்க. நாங்க ஊர்வலம் எடுக்கப் போறோம்னு அறிக்கை விடுறாங்க. பதவில இருக்கிற ஒரு சிலர், நடிகர்கள் எல்லாரும் கலந்துக்கணும்னு சொல்லி மிர‌ட்டி வர வைக்கிறாங்க. அதுக்கு ஒரு முடிவு கட்டுங்க. வராவிட்டா ஒத்துழைப்பு தரமாட்டோம்னு மிரட்டுறாங்கய்யா. முடிங்கய்யா. அதுக்கு ஏதாவது ஒரு வழி பண்ணுங்க. அதுக்கு பயந்து வரவேண்டியிருக்கு, என்று நியாயமான கருத்துக்களை தெரிவித்து ஒட்டுமொத்த திரையுலகினரின் பாராட்டுக்களைப் பெற்றார். அதன் பிறகு அஜித் சந்தித்த பிரச்னைகள் ஏராளம்.

இன்று கருணாநிதி ஆட்சி மாறியதும், பதவியை விட்டு விலகும் பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் அஜித் விவகாரத்தில் ரொம்பவே மூக்கை நுழைத்தார். பாடகசாலை என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய அவர், ஊரோடு ஒத்துப் போகணும் என்று ஒரு பழமொழி உண்டு. அதனை உணர்ந்து அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும் எதிர்த்துதான் நிற்போம் என்றால், இவர்களை எப்படி மேலோ கொண்டு வந்தோமோ... அதே போல் இருக்கும் இடம் தெரியாமலும் செய்து விடுவோம், என்று மிரட்டும் தொனியில் பேசினார். பின்னர் அஜித், கருணாநிதியை சந்தித்து மன்னிப்பு கேட்ட பிறகே பிரச்னை முடிவுக்கு வந்தது, என்பது குறிப்பிடத்தக்கது.

ஓட்டமெடுத்த திமுக திரையுலக ஜால்ராக்கள்!

தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து திரையுலகின் ஜாம்பவான்களாக, அதிகாரத்தில், தலைவர் பதவியில் இருந்த ராம.நாராயணன், வி.சி.குகநாதன் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருக்கும் ராம.நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், என் சொந்த வேலை காரணமாகவும், புதிய பட வேலையில் ஈடுபட இருப்பதாலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்து கொள்கிறேன். இதுவரை எனக்கு ஒத்துழைப்பு அளித்த பட அதிபர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், திரைப்பட தொழிலாளர்கள் ஆகிய அனைத்து தரப்பினருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.

பெப்சி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ள வி.சி.குகநாதன் அளித்துள்ள பேட்டியில், `திரைப்பட தொழிலாளர்களுக்காக கடந்த 2 வருடங்களாக அரசின் உதவியை பெற்று, என்னென்ன நன்மைகள் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தேன். தொடர்ந்து அதை செய்ய முடியுமா? என்ற கேள்விக்குறி ஏற்பட்டு இருக்கிறது. எனவே தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து விட்டேன். என் ராஜினாமா கடிதத்தை செயலாளர் ஜி.சிவா, பொருளாளர் சண்முகம் ஆகியோரிடம் கொடுத்து விட்டேன், என்று கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ் திரையுலகம் சார்பில் ஏராளமான பாராட்டு விழாக்களை எடுத்தவர்கள்தான் இந்த ராம.நாராயணனும், வி.சி.குகநாதனும். அதேபோல கருணாநிதி பங்கேற்கும் திரையுலகம் தொடர்பான அனைத்து விழாக்களிலும் இவர்கள் 2 பேரும் ஆஜராகி கருணாநிதி திரைத்துறைக்கு செய்த சலுகைகளை குறிப்பிட்டு பாராட்டி பேசி கருணாநிதியை சந்தோஷப்படுத்துவார்கள்.

பாசத்தலைவருக்கு பாராட்டு விழா என்ற பெயரில் தமிழ் திரையுலகம் கருணாநிதிக்காக நடத்திய பாராட்டு விழாவில் அரசியல்வாதி கெட்-அப்பில் கலந்து கொண்ட அஜித் பேசும்போது, ஒரு பிரச்னைன்னா திரைத்துறையில, பதவில இருக்கிற ஒரு சிலர் அறிக்கை விட்டுடுறாங்க. நாங்க ஊர்வலம் எடுக்கப் போறோம்னு அறிக்கை விடுறாங்க. பதவில இருக்கிற ஒரு சிலர், நடிகர்கள் எல்லாரும் கலந்துக்கணும்னு சொல்லி மிர‌ட்டி வர வைக்கிறாங்க. அதுக்கு ஒரு முடிவு கட்டுங்க. வராவிட்டா ஒத்துழைப்பு தரமாட்டோம்னு மிரட்டுறாங்கய்யா. முடிங்கய்யா. அதுக்கு ஏதாவது ஒரு வழி பண்ணுங்க. அதுக்கு பயந்து வரவேண்டியிருக்கு, என்று நியாயமான கருத்துக்களை தெரிவித்து ஒட்டுமொத்த திரையுலகினரின் பாராட்டுக்களைப் பெற்றார். அதன் பிறகு அஜித் சந்தித்த பிரச்னைகள் ஏராளம்.

இன்று கருணாநிதி ஆட்சி மாறியதும், பதவியை விட்டு விலகும் பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் அஜித் விவகாரத்தில் ரொம்பவே மூக்கை நுழைத்தார். பாடகசாலை என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய அவர், ஊரோடு ஒத்துப் போகணும் என்று ஒரு பழமொழி உண்டு. அதனை உணர்ந்து அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும் எதிர்த்துதான் நிற்போம் என்றால், இவர்களை எப்படி மேலோ கொண்டு வந்தோமோ... அதே போல் இருக்கும் இடம் தெரியாமலும் செய்து விடுவோம், என்று மிரட்டும் தொனியில் பேசினார். பின்னர் அஜித், கருணாநிதியை சந்தித்து மன்னிப்பு கேட்ட பிறகே பிரச்னை முடிவுக்கு வந்தது, என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த் பற்றி பேசிய நடிகர் வடிவேலு ஒரு சாக்கடை என்று டைரக்டர் அமீர் கூறியுள்ளார். வடிவேலு பிரசாரம் குறித்தும், விஜயகாந்த் குறித்த அவரது விளாசல் பற்றியும் டைரக்டர் அமீர் அளித்துள்ள பேட்டியில், சாமி ஊர்வலத்துக்கும் கூட்டம் வரும். சாவு வீட்டுக்கும் கூட்டம் வரும். வேடிக்கை பார்ப்பது தமிழ் மக்களோட தவிர்க்க முடியாத கலாச்சாரம். யாரையும் திட்டிப் பேசினா நாலு பேர் கேட்கத்தானே செய்வாங்க. அந்த மாதிரிதான் வடிவேலுவுக்கும் சிங்க முத்துக்கும் செந்திலுக்கும் கூட்டம் வந்தது, என்று கூறியுள்ளார்.

விஜயகாந்துக்கு கேப்டன்ங்கிற பட்டம் ஏன்னு கேட்கிற வடிவேலுவுக்கு வைகைப் புயல் என்கிற பட்டம் மட்டும் பொருத்தமா? இந்த புயல் எந்த மரத்தை பேத்துச்சு. எந்த வீட்டை இடிச்சுச்சு? வட்ட செயலாளர் தொடங்கி ரவுடிங்க வரைக்கும் அத்தனை பேருக்கும் பட்டம் கொடுத்தே இந்த ஊரு பழகிடுச்சு. விஜயகாந்த்தை பற்றி இவ்வளவு பேசுற வடிவேலு அந்த அம்மையார் விஷயத்தில் மட்டும் ஏன் அடக்கி வாசிக்கணும். ஆட்சி மாறினால் அதோகதி ஆகிடும்கிற பயம்தானே? எப்போதுமே அம்மையார் என்றுதான் அழைப்பேன் என 87 வயசிலும் நாகரிகத்தோடு பேசுகிறார் முதல்வர் கலைஞர். அந்த அசாத்திய நாகரிகத்துக்குப் பக்கத்தில் ஒரு சாக்கடையோட சப்போர்ட் எதுக்கு?, என்றும் கூறியிருக்கிறார் டைரக்டர் அமீர்.

வடிவேலு ஒரு சாக்கடை! டைரக்டர் அமீர் கடும் தாக்கு!!

தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த் பற்றி பேசிய நடிகர் வடிவேலு ஒரு சாக்கடை என்று டைரக்டர் அமீர் கூறியுள்ளார். வடிவேலு பிரசாரம் குறித்தும், விஜயகாந்த் குறித்த அவரது விளாசல் பற்றியும் டைரக்டர் அமீர் அளித்துள்ள பேட்டியில், சாமி ஊர்வலத்துக்கும் கூட்டம் வரும். சாவு வீட்டுக்கும் கூட்டம் வரும். வேடிக்கை பார்ப்பது தமிழ் மக்களோட தவிர்க்க முடியாத கலாச்சாரம். யாரையும் திட்டிப் பேசினா நாலு பேர் கேட்கத்தானே செய்வாங்க. அந்த மாதிரிதான் வடிவேலுவுக்கும் சிங்க முத்துக்கும் செந்திலுக்கும் கூட்டம் வந்தது, என்று கூறியுள்ளார்.

விஜயகாந்துக்கு கேப்டன்ங்கிற பட்டம் ஏன்னு கேட்கிற வடிவேலுவுக்கு வைகைப் புயல் என்கிற பட்டம் மட்டும் பொருத்தமா? இந்த புயல் எந்த மரத்தை பேத்துச்சு. எந்த வீட்டை இடிச்சுச்சு? வட்ட செயலாளர் தொடங்கி ரவுடிங்க வரைக்கும் அத்தனை பேருக்கும் பட்டம் கொடுத்தே இந்த ஊரு பழகிடுச்சு. விஜயகாந்த்தை பற்றி இவ்வளவு பேசுற வடிவேலு அந்த அம்மையார் விஷயத்தில் மட்டும் ஏன் அடக்கி வாசிக்கணும். ஆட்சி மாறினால் அதோகதி ஆகிடும்கிற பயம்தானே? எப்போதுமே அம்மையார் என்றுதான் அழைப்பேன் என 87 வயசிலும் நாகரிகத்தோடு பேசுகிறார் முதல்வர் கலைஞர். அந்த அசாத்திய நாகரிகத்துக்குப் பக்கத்தில் ஒரு சாக்கடையோட சப்போர்ட் எதுக்கு?, என்றும் கூறியிருக்கிறார் டைரக்டர் அமீர்.

பொன்னர் சங்கர் படத்தின் சில காட்சிகள் மற்றும் மூன்று பாடல்கள் நேற்று திரையிடப்பட்டன. இந்தக் காட்சிகளைப் பார்த்த பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கைதட்டி இயக்குநர் தியாகராஜனுக்கும் நடிகர் பிரசாந்துக்கும் பாராட்டு தெரிவித்தனர்.

முதல்வர் மு கருணாநிதி எழுதிய பிரமாண்ட நாவல் பொன்னர் சங்கர். எண்பதுகளில் வெளியாகி, விற்பனையில் பெரும் சாதனைப் படைத்தது. இலக்கிய உலகில் தனியிடம் பிடித்த இந்த நாவலை, அதே பெயரில் இரு ஆண்டுகளுக்கு முன் படமாக்க ஆரம்பித்தார் இயக்குநரும் தயாரிப்பாளருமான தியாகராஜன்.

தியாகராஜன் இயக்குகிறார் என்றதும் ஆரம்பத்தில் யாருக்கும் பெரிய அபிப்பிராயம் இல்லாமல் இருந்தது. அவர்களையெல்லாம் திகைத்து திக்குமுக்காட வைத்துவிட்டார் தியாகராஜன் நேற்று. அனைவரும் அவரைத் தனித்தனியாக சந்தித்து, எப்படி சார் இப்படி படமாக்கினீர்கள் என்று வியந்தனர்.

இவற்றுக்கெல்லாம் சிகரம் வைப்பது போல, "பொன்னர் சங்கரை இத்தனை அழகாகப் படமாக்கிய தியாகராஜனின் கைகளுக்கு முத்தமிடலாம். அத்தனை சிறப்பாக நடித்துள்ள பிரசாந்த் கன்னங்களில் அந்த முத்தத்தை பரிசாகத் தரலாம்," என்று கூறியிருந்தார். காரணம் அவருக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் மட்டும் 2.30 மணி நேரம் ஓடக்கூடிய காட்சிகளை முழுமையாகப் போட்டுக் காட்டிவிட்டார் தியாகராஜன்.

சமீப காலத்தில், கருணாநிதி எழுதிய கதை திரைக்கதை வசனத்தை, மிக அழகாக படமாக்கிய ஒரே இயக்குநர் தியாகராஜன்தான் என்று வந்திருந்த அனைவரும் வெளிப்படையாகவே கூறியது குறிப்பிடத்தக்கது.

படத்தில் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. இவர்களில் ராஜ்கிரண், நெப்போலியன் போன்றவர்களின் தோற்றமும் நடிப்பும் கம்பீரத்துக்கு உதாரணமாகத் திகழ்ந்தது.

பொன்னர் சங்கரில் தியாகராஜனுக்கு நிகரான பிரமாண்டத்தை தன் இசையால் காட்டியிருக்கிறார் இசைஞானி இளையராஜா. திரையிடப்பட்ட மூன்று பாடல்களும் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் ரகமாக இருந்தன. குறிப்பாக இந்தப் பாடல்களின் இசை கிறங்கடித்தது. அத்தனை அற்புதமான இசைக் கோர்வையைத் தந்துள்ளார் ராஜா.

மும்பை ஸ்டுடியோ ஒன்றில் இந்தப் படத்தின் இசைச் சேர்ப்பு நடந்து கொண்டிருந்தபோது, படத்தின் காட்சிகளைப் பார்த்த மும்பை இயக்குநர்கள் சிலர், இந்தியில் வெளியான ஜோதா அக்பரை விட தரத்திலும் உருவாக்கத்திலும் மிகச் சிறப்பாக வந்துள்ளது பொன்னர் சங்கர் என கூறியதாக இளையராஜா தெரிவித்தார்.

அந்த வார்த்தைகள் உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை என்று நிரூபித்துள்ளார் தியாகராஜன்!

பொன்னர் சங்கர்... பிரமிக்க வைக்கும் இயக்குநர் தியாகராஜன்!

பொன்னர் சங்கர் படத்தின் சில காட்சிகள் மற்றும் மூன்று பாடல்கள் நேற்று திரையிடப்பட்டன. இந்தக் காட்சிகளைப் பார்த்த பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கைதட்டி இயக்குநர் தியாகராஜனுக்கும் நடிகர் பிரசாந்துக்கும் பாராட்டு தெரிவித்தனர்.

முதல்வர் மு கருணாநிதி எழுதிய பிரமாண்ட நாவல் பொன்னர் சங்கர். எண்பதுகளில் வெளியாகி, விற்பனையில் பெரும் சாதனைப் படைத்தது. இலக்கிய உலகில் தனியிடம் பிடித்த இந்த நாவலை, அதே பெயரில் இரு ஆண்டுகளுக்கு முன் படமாக்க ஆரம்பித்தார் இயக்குநரும் தயாரிப்பாளருமான தியாகராஜன்.

தியாகராஜன் இயக்குகிறார் என்றதும் ஆரம்பத்தில் யாருக்கும் பெரிய அபிப்பிராயம் இல்லாமல் இருந்தது. அவர்களையெல்லாம் திகைத்து திக்குமுக்காட வைத்துவிட்டார் தியாகராஜன் நேற்று. அனைவரும் அவரைத் தனித்தனியாக சந்தித்து, எப்படி சார் இப்படி படமாக்கினீர்கள் என்று வியந்தனர்.

இவற்றுக்கெல்லாம் சிகரம் வைப்பது போல, "பொன்னர் சங்கரை இத்தனை அழகாகப் படமாக்கிய தியாகராஜனின் கைகளுக்கு முத்தமிடலாம். அத்தனை சிறப்பாக நடித்துள்ள பிரசாந்த் கன்னங்களில் அந்த முத்தத்தை பரிசாகத் தரலாம்," என்று கூறியிருந்தார். காரணம் அவருக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் மட்டும் 2.30 மணி நேரம் ஓடக்கூடிய காட்சிகளை முழுமையாகப் போட்டுக் காட்டிவிட்டார் தியாகராஜன்.

சமீப காலத்தில், கருணாநிதி எழுதிய கதை திரைக்கதை வசனத்தை, மிக அழகாக படமாக்கிய ஒரே இயக்குநர் தியாகராஜன்தான் என்று வந்திருந்த அனைவரும் வெளிப்படையாகவே கூறியது குறிப்பிடத்தக்கது.

படத்தில் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. இவர்களில் ராஜ்கிரண், நெப்போலியன் போன்றவர்களின் தோற்றமும் நடிப்பும் கம்பீரத்துக்கு உதாரணமாகத் திகழ்ந்தது.

பொன்னர் சங்கரில் தியாகராஜனுக்கு நிகரான பிரமாண்டத்தை தன் இசையால் காட்டியிருக்கிறார் இசைஞானி இளையராஜா. திரையிடப்பட்ட மூன்று பாடல்களும் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் ரகமாக இருந்தன. குறிப்பாக இந்தப் பாடல்களின் இசை கிறங்கடித்தது. அத்தனை அற்புதமான இசைக் கோர்வையைத் தந்துள்ளார் ராஜா.

மும்பை ஸ்டுடியோ ஒன்றில் இந்தப் படத்தின் இசைச் சேர்ப்பு நடந்து கொண்டிருந்தபோது, படத்தின் காட்சிகளைப் பார்த்த மும்பை இயக்குநர்கள் சிலர், இந்தியில் வெளியான ஜோதா அக்பரை விட தரத்திலும் உருவாக்கத்திலும் மிகச் சிறப்பாக வந்துள்ளது பொன்னர் சங்கர் என கூறியதாக இளையராஜா தெரிவித்தார்.

அந்த வார்த்தைகள் உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை என்று நிரூபித்துள்ளார் தியாகராஜன்!

அஜீத்தின் பில்லா-2வில் டைரக்டர் விஷ்ணுவர்தன் விலகியதையடுத்து, டைரக்டர் பொறுப்பை உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி எடுத்துள்ளார். அ‌தேபோல் பில்லா படத்தில் இசையமைத்த யுவன் சங்கர் ராஜா பில்லா-2விலும் இசையமைக்கிறார்.

கடந்த 2007ம் ஆண்டு அஜீத்-நயன்தாரா-நமீதா நடிப்பில் டைரக்டர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில், யுவனின் இசையில் மாபெரும் வெற்றி பெற்ற படம் பில்லா. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பில்லா-2 எனும் பெயரில் எடுக்க இருக்கின்றனர். டேவிட் எப்படி பில்லாவாக மாறினானர் என்பதே படத்தின் கதை.பில்லாவை இயக்கிய விஷ்ணுவ‌ர்தனே பில்லா-2வை இயக்குவதாக இருந்தது. ஆனால் திடீரென விஷ்ணுவர்தன் இப்படத்திலிருந்து விலகினார். இதனையடுத்து யார் இந்த படத்தை இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், கமல் நடித்து சூப்பர் ஹிட்டான உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி பில்லா-2 படத்தை இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஐ.என்.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் சுரேஷ் பாலாஜி-ஜார்ஜ் பயஸின் வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் நிறுவனம் ஆகிய இருவரும் இணைந்து பில்லா-2வை தயாரிக்கின்றனர். தீனா, பில்லா, ஏகன், மங்கத்தா படத்தை தொடர்ந்து பில்லா-2விற்கும் யுவன் சங்கர் ராஜாவே இசையமைக்கிறார். படத்திற்கான நாயகி மற்றும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. மே மாதம் முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.

அஜீத்தின் பில்லா-2-வை இயக்குகிறார் சக்ரி டோலட்டி

அஜீத்தின் பில்லா-2வில் டைரக்டர் விஷ்ணுவர்தன் விலகியதையடுத்து, டைரக்டர் பொறுப்பை உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி எடுத்துள்ளார். அ‌தேபோல் பில்லா படத்தில் இசையமைத்த யுவன் சங்கர் ராஜா பில்லா-2விலும் இசையமைக்கிறார்.

கடந்த 2007ம் ஆண்டு அஜீத்-நயன்தாரா-நமீதா நடிப்பில் டைரக்டர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில், யுவனின் இசையில் மாபெரும் வெற்றி பெற்ற படம் பில்லா. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பில்லா-2 எனும் பெயரில் எடுக்க இருக்கின்றனர். டேவிட் எப்படி பில்லாவாக மாறினானர் என்பதே படத்தின் கதை.பில்லாவை இயக்கிய விஷ்ணுவ‌ர்தனே பில்லா-2வை இயக்குவதாக இருந்தது. ஆனால் திடீரென விஷ்ணுவர்தன் இப்படத்திலிருந்து விலகினார். இதனையடுத்து யார் இந்த படத்தை இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், கமல் நடித்து சூப்பர் ஹிட்டான உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி பில்லா-2 படத்தை இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஐ.என்.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் சுரேஷ் பாலாஜி-ஜார்ஜ் பயஸின் வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் நிறுவனம் ஆகிய இருவரும் இணைந்து பில்லா-2வை தயாரிக்கின்றனர். தீனா, பில்லா, ஏகன், மங்கத்தா படத்தை தொடர்ந்து பில்லா-2விற்கும் யுவன் சங்கர் ராஜாவே இசையமைக்கிறார். படத்திற்கான நாயகி மற்றும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. மே மாதம் முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.

கவுதம்மேனன் இயக்கிய நடுநிசி நாய்கள் படம் ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. சைக்கோ இளைஞனின் தொடர் கொலைகளை இப்படத்தில் காட்சி படுத்தியுள்ளார். இதில் ஆபாசம் தூக்கலாக இருப்பதாக இந்து மக்கள் கட்சி கண்டித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர்.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நடுநிசி நாய்கள் படத்தில் நிறைய சீன்கள் வக்கிரமாக உள்ளன. வளர்ப்பு தாயை கூட தாய் ஸ்தானத்தில் வைத்து பார்ப்பதுதான் நமது பண்பாடு. ஆனால் கவுதம்மேனன் அந்த உறவை விரசமாக்கி விஷம் கலந்துள்ளார்.

எங்கேயாவது இது போன்று தவறு நடக்கலாம். அதை திரையில் வெளிச்சம் போட்டு காட்டக் கூடாது. அப்படி செய்தால் அது போன்ற தவறுகள் பரவ வாய்ப்பு இருக்கிறது. இயக்குனர்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.

தந்தையே மகனை பாலியல் தொழில் செய்வோர் கூட்டத்தில் அனுமதித்து சித்ரவதை செய்யும் சீன்கள் எவரும் சிந்திக்காதது.இது போன்ற சீன்களை படத்தில் இருந்து நீக்க வேண்டும். இல்லையேல் கவுதம்மேனன் வீட்டில் நாய்களுடன் திரண்டு போராட்டம் செய்வோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

நடுநிசி நாய்கள் படத்தில் ஆபாசம்: கவுதம்மேனன் வீட்டில் நாய்களுடன் போராட்டம்; இந்து மக்கள் கட்சி அறிவிப்பு

கவுதம்மேனன் இயக்கிய நடுநிசி நாய்கள் படம் ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. சைக்கோ இளைஞனின் தொடர் கொலைகளை இப்படத்தில் காட்சி படுத்தியுள்ளார். இதில் ஆபாசம் தூக்கலாக இருப்பதாக இந்து மக்கள் கட்சி கண்டித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர்.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நடுநிசி நாய்கள் படத்தில் நிறைய சீன்கள் வக்கிரமாக உள்ளன. வளர்ப்பு தாயை கூட தாய் ஸ்தானத்தில் வைத்து பார்ப்பதுதான் நமது பண்பாடு. ஆனால் கவுதம்மேனன் அந்த உறவை விரசமாக்கி விஷம் கலந்துள்ளார்.

எங்கேயாவது இது போன்று தவறு நடக்கலாம். அதை திரையில் வெளிச்சம் போட்டு காட்டக் கூடாது. அப்படி செய்தால் அது போன்ற தவறுகள் பரவ வாய்ப்பு இருக்கிறது. இயக்குனர்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.

தந்தையே மகனை பாலியல் தொழில் செய்வோர் கூட்டத்தில் அனுமதித்து சித்ரவதை செய்யும் சீன்கள் எவரும் சிந்திக்காதது.இது போன்ற சீன்களை படத்தில் இருந்து நீக்க வேண்டும். இல்லையேல் கவுதம்மேனன் வீட்டில் நாய்களுடன் திரண்டு போராட்டம் செய்வோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

நடிகை சாயாசிங் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். திருடா திருடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான சாயாசிங், அந்த படத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றார். ஆனால் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் அமையவில்லை; அப்படி அமைந்த வாய்ப்புகளும் எதிர்பார்த்தபடி பெயரைப் பெற்றுத்தரவில்லை. அதேநேரம் திருப்பாச்சி படத்தில் இடம்பெற்ற ஹிட் பாடலுக்கு குத்தாட்டம் போட்டதால் அடுத்தடுத்து ஒத்தப்பாட்டு வாய்ப்புகளே வந்தன. இதனால் பல படங்களை மறுத்த சாயாசிங், கடைசியாக அனந்தபுரத்து வீடு படத்தில் நாயகியாக நடித்தார். ஆனால் அந்த படமும் ஓடவில்லை. இ‌தனால் அம்மணி இயக்குனர் அவதாரம் எடுக்க முடிவு செய்து பெங்காலி சினிமா பக்கம் போய் விட்டார்.

இதுபற்றி சாயாசிங் கூறுகையில், சினிமாவில் நடிகையாக, வழக்கமான காதலையும், டான்சையும் மட்டுமே செய்து வந்தேன். அதனால், தேடி வந்த சில வாய்ப்புகளை மறுத்துவிட்டேன். சினிமாவில், நடிப்பின் அடுத்த கட்டமாக டைரக்ஷனை பார்க்கிறேன். இதில் எனது திறமையை நிரூபிக்க வேண்டும். படம் இயக்குவது சிறப்பாக இருக்கிறது. இது என் கனவு என்று கூட சொல்லலாம். என் கனவு நிறைவேற இப்போதுதான் நேரம் வந்திருக்கிறது. இதில் நானே ஹீரோயினாக நடிக்கிறேன். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. தொடர்ந்து படம் இயக்குவேனா என்பது தெரியாது. கன்னடத்தில் சில வாய்ப்புகள் வந்துள்ளது. அங்கு நடிப்பேன், என்றார்.

இயக்குனர் ஆனார் நடிகை சாயாசிங்!

நடிகை சாயாசிங் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். திருடா திருடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான சாயாசிங், அந்த படத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றார். ஆனால் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் அமையவில்லை; அப்படி அமைந்த வாய்ப்புகளும் எதிர்பார்த்தபடி பெயரைப் பெற்றுத்தரவில்லை. அதேநேரம் திருப்பாச்சி படத்தில் இடம்பெற்ற ஹிட் பாடலுக்கு குத்தாட்டம் போட்டதால் அடுத்தடுத்து ஒத்தப்பாட்டு வாய்ப்புகளே வந்தன. இதனால் பல படங்களை மறுத்த சாயாசிங், கடைசியாக அனந்தபுரத்து வீடு படத்தில் நாயகியாக நடித்தார். ஆனால் அந்த படமும் ஓடவில்லை. இ‌தனால் அம்மணி இயக்குனர் அவதாரம் எடுக்க முடிவு செய்து பெங்காலி சினிமா பக்கம் போய் விட்டார்.

இதுபற்றி சாயாசிங் கூறுகையில், சினிமாவில் நடிகையாக, வழக்கமான காதலையும், டான்சையும் மட்டுமே செய்து வந்தேன். அதனால், தேடி வந்த சில வாய்ப்புகளை மறுத்துவிட்டேன். சினிமாவில், நடிப்பின் அடுத்த கட்டமாக டைரக்ஷனை பார்க்கிறேன். இதில் எனது திறமையை நிரூபிக்க வேண்டும். படம் இயக்குவது சிறப்பாக இருக்கிறது. இது என் கனவு என்று கூட சொல்லலாம். என் கனவு நிறைவேற இப்போதுதான் நேரம் வந்திருக்கிறது. இதில் நானே ஹீரோயினாக நடிக்கிறேன். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. தொடர்ந்து படம் இயக்குவேனா என்பது தெரியாது. கன்னடத்தில் சில வாய்ப்புகள் வந்துள்ளது. அங்கு நடிப்பேன், என்றார்.

முக நூல்

Popular Posts