background img

புதிய வரவு

Showing posts with label Kushboo. Show all posts
Showing posts with label Kushboo. Show all posts
சென்னை: வரிசையாக ஒவ்வொரு சினிமா சங்கத்தின் நிர்வாகிகளும் ராஜினாமா செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் லேட்டஸ்ட் ராஜினாமா சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகை குஷ்புவுடையது.

திமுகவின் முக்கிய பேச்சாளரான இவர் தனது ராஜினாமா கடிதத்தை சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை அளித்தார்.

சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பதவிக்கு கடந்த முறை நடத்தப்பட்ட தேர்தலில், நடிகை குஷ்பு தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து தலைவர் பதவியை வகித்து வந்தார். திமுக-வில் இணைந்த அவர், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக-வை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்தில் திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டதோடு, எதிர்க்கட்சியினரை கடுமையாக தாக்கியும் பேசினார். இப்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை திடீரென அவர் ராஜினாமா செய்துள்ளார்.

அதுவும் சொல்லி வைத்த மாதிரி, "சொந்தப் பணி காரணமாகவும், தொடர் படப்பிடிப்புகள் இருப்பதாலும் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்,'' என ராஜினாமா கடிதத்தில் குஷ்பு குறிப்பிட்டுள்ளார். தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜிநாமா செய்தபோது, ராம நாராயணனும் இதே காரணத்தைத்தான் சொல்லியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா!

சென்னை: வரிசையாக ஒவ்வொரு சினிமா சங்கத்தின் நிர்வாகிகளும் ராஜினாமா செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் லேட்டஸ்ட் ராஜினாமா சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகை குஷ்புவுடையது.

திமுகவின் முக்கிய பேச்சாளரான இவர் தனது ராஜினாமா கடிதத்தை சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை அளித்தார்.

சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பதவிக்கு கடந்த முறை நடத்தப்பட்ட தேர்தலில், நடிகை குஷ்பு தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து தலைவர் பதவியை வகித்து வந்தார். திமுக-வில் இணைந்த அவர், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக-வை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்தில் திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டதோடு, எதிர்க்கட்சியினரை கடுமையாக தாக்கியும் பேசினார். இப்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை திடீரென அவர் ராஜினாமா செய்துள்ளார்.

அதுவும் சொல்லி வைத்த மாதிரி, "சொந்தப் பணி காரணமாகவும், தொடர் படப்பிடிப்புகள் இருப்பதாலும் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்,'' என ராஜினாமா கடிதத்தில் குஷ்பு குறிப்பிட்டுள்ளார். தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜிநாமா செய்தபோது, ராம நாராயணனும் இதே காரணத்தைத்தான் சொல்லியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.


திமுக அடைந்த தோல்வி, மக்களுக்கு கிடைத்த தோல்வி என்று நடிகை குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். சினிமா வாய்ப்பு குறைந்ததால் ஜெயா டிவியில் ஜாக்பாட் நிகழ்ச்சியை நடத்திய நடிகை குஷ்பு, பின்னர் திமுகவில் இணைந்தார். பின்னர் திமுகவுக்காக மாநிலம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டார். செல்லும் இடங்களில் எல்லாம் குஷ்பு என்ற நடிகையை பார்க்கத்தான் மக்கள் கூடினார்கள் என்பது தெரியாமல் தமிழை கொலை செய்து, தாறுமாறாக பேசி, தமிழ் ஆர்வலர்களின் எதிர்ப்பை சம்பாதித்த குஷ்பு, தேர்தல் முடிவு அதிமுகவுக்கு சாதகமாக அமைந்ததை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தேர்தல் முடிவு வெளியாகி திமுக தோல்வியடைந்ததும் சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டுக்கு வந்த குஷ்பு, அங்கு கருணாநிதியுடன் சிறிது நேரம் பேசிவிட்டு புறப்பட்டார். அப்போது தேர்தல் முடிவு பற்றி கருத்து தெரிவித்த குஷ்பு, இது திமுகவுக்கு தோல்வியே அல்ல. மாறாக மக்கள்தான் தோல்வி அடைந்துள்ளனர். 2ஜி வழக்கு குறித்து மீடியாக்கள் தவறான செய்திகளை வெளியிட்டன. இதனால்தான் திமுகவுக்கு பெரும் தோல்வி ஏற்பட்டு விட்டது. இருந்தாலும் அவை பொய் என்பதை நாங்கள் சட்டப்பூர்வமாக நிரூபிப்போம், என்றார்.

மக்கள் தோற்று விட்டார்களாம்! சொல்கிறார் குஷ்பு!!


திமுக அடைந்த தோல்வி, மக்களுக்கு கிடைத்த தோல்வி என்று நடிகை குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். சினிமா வாய்ப்பு குறைந்ததால் ஜெயா டிவியில் ஜாக்பாட் நிகழ்ச்சியை நடத்திய நடிகை குஷ்பு, பின்னர் திமுகவில் இணைந்தார். பின்னர் திமுகவுக்காக மாநிலம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டார். செல்லும் இடங்களில் எல்லாம் குஷ்பு என்ற நடிகையை பார்க்கத்தான் மக்கள் கூடினார்கள் என்பது தெரியாமல் தமிழை கொலை செய்து, தாறுமாறாக பேசி, தமிழ் ஆர்வலர்களின் எதிர்ப்பை சம்பாதித்த குஷ்பு, தேர்தல் முடிவு அதிமுகவுக்கு சாதகமாக அமைந்ததை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தேர்தல் முடிவு வெளியாகி திமுக தோல்வியடைந்ததும் சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டுக்கு வந்த குஷ்பு, அங்கு கருணாநிதியுடன் சிறிது நேரம் பேசிவிட்டு புறப்பட்டார். அப்போது தேர்தல் முடிவு பற்றி கருத்து தெரிவித்த குஷ்பு, இது திமுகவுக்கு தோல்வியே அல்ல. மாறாக மக்கள்தான் தோல்வி அடைந்துள்ளனர். 2ஜி வழக்கு குறித்து மீடியாக்கள் தவறான செய்திகளை வெளியிட்டன. இதனால்தான் திமுகவுக்கு பெரும் தோல்வி ஏற்பட்டு விட்டது. இருந்தாலும் அவை பொய் என்பதை நாங்கள் சட்டப்பூர்வமாக நிரூபிப்போம், என்றார்.

வருகிற தேர்தலில் ஜெயலலிதா ஜெயிக்கப்போவது இல்லை என, நடிகை குஷ்பு பேசினார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் க.விஜயனை ஆதரித்து நத்தம், கோபால்பட்டி, சாணார்பட்டி, கொசவப்பட்டி ஆகிய இடங்களில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் நடிகை குஷ்பு பேசினார். அவர் கூறியதாவது:

வருகிற தேர்தலில் ஜெயலலிதா ஜெயிக்கப்போவது இல்லை. அவர் வெற்றி பெற்றால் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பத்துக்கு 4 ஆடுகள், 2 மாடுகள் கொடுப்பதாக சொல்லி இருக்கிறார். தமிழகத்தில் 30 லட்சம் குடும்பத்தினர் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளனர். இவர்களுக்கு கொடுப்பதற்கு சுமார் 11/4 கோடி ஆடுகளும், 60 லட்சம் மாடுகளும் தேவையாக உள்ளது.

இந்தியா முழுவதிலும் இந்த எண்ணிக்கையில் ஆடு, மாடுகள் இல்லை. மேஜிக் மூலமாக தான் ஆடு, மாடுகளை அவர் கொண்டு வருவார். தி.மு.க. தேர்தல் அறிக்கையின் ஜெராக்ஸ் காப்பியாக, அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை உள்ளது. இதை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம்.


தமிழக மக்கள் முன்னேற வேண்டும், தமிழகத்தில் அடுத்த தலைமுறையினர் டாக்டர், என்ஜினீயர் ஆக வேண்டும் என்பதற்காகவும் கிராமங்களில் பள்ளிகளையும், மாவட்டந்தோறும் கல்லூரிகளையும் கலைஞர் திறந்து வருகிறார்.

ஆனால் மக்களை படிக்க விடக்கூடாது, சுயமாக சிந்திக்கக்கூடாது என்பதற்காக ஆடு, மாடுகளை தருவதாக ஜெயலலிதா கூறுகிறார். திட்டங்களை சொல்லி நாங்கள் ஓட்டு கேட்கிறோம். ஆனால் திட்டி, திட்டி அந்த அம்மா ஓட்டு கேட்கிறார். மக்கள் அவரை நம்ப தயாராக இல்லை.

6வது முறையாக தலைவர் முதல் அமைச்சரானால், இந்தியாவில் மட்டுமல்லாமல், ஆசியாவிலேயே மிகப்பெரிய சாதனையாக அமையும். அந்த பெருமை நமக்கு கிடைக்க வேண்டும். இவ்வாறு நடிகை குஷ்பு பேசினார்.

ஜெயலலிதா ஜெயிக்கப்போவது இல்லை: குஷ்பு

வருகிற தேர்தலில் ஜெயலலிதா ஜெயிக்கப்போவது இல்லை என, நடிகை குஷ்பு பேசினார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் க.விஜயனை ஆதரித்து நத்தம், கோபால்பட்டி, சாணார்பட்டி, கொசவப்பட்டி ஆகிய இடங்களில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் நடிகை குஷ்பு பேசினார். அவர் கூறியதாவது:

வருகிற தேர்தலில் ஜெயலலிதா ஜெயிக்கப்போவது இல்லை. அவர் வெற்றி பெற்றால் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பத்துக்கு 4 ஆடுகள், 2 மாடுகள் கொடுப்பதாக சொல்லி இருக்கிறார். தமிழகத்தில் 30 லட்சம் குடும்பத்தினர் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளனர். இவர்களுக்கு கொடுப்பதற்கு சுமார் 11/4 கோடி ஆடுகளும், 60 லட்சம் மாடுகளும் தேவையாக உள்ளது.

இந்தியா முழுவதிலும் இந்த எண்ணிக்கையில் ஆடு, மாடுகள் இல்லை. மேஜிக் மூலமாக தான் ஆடு, மாடுகளை அவர் கொண்டு வருவார். தி.மு.க. தேர்தல் அறிக்கையின் ஜெராக்ஸ் காப்பியாக, அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை உள்ளது. இதை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம்.


தமிழக மக்கள் முன்னேற வேண்டும், தமிழகத்தில் அடுத்த தலைமுறையினர் டாக்டர், என்ஜினீயர் ஆக வேண்டும் என்பதற்காகவும் கிராமங்களில் பள்ளிகளையும், மாவட்டந்தோறும் கல்லூரிகளையும் கலைஞர் திறந்து வருகிறார்.

ஆனால் மக்களை படிக்க விடக்கூடாது, சுயமாக சிந்திக்கக்கூடாது என்பதற்காக ஆடு, மாடுகளை தருவதாக ஜெயலலிதா கூறுகிறார். திட்டங்களை சொல்லி நாங்கள் ஓட்டு கேட்கிறோம். ஆனால் திட்டி, திட்டி அந்த அம்மா ஓட்டு கேட்கிறார். மக்கள் அவரை நம்ப தயாராக இல்லை.

6வது முறையாக தலைவர் முதல் அமைச்சரானால், இந்தியாவில் மட்டுமல்லாமல், ஆசியாவிலேயே மிகப்பெரிய சாதனையாக அமையும். அந்த பெருமை நமக்கு கிடைக்க வேண்டும். இவ்வாறு நடிகை குஷ்பு பேசினார்.

கற்பு முடிந்து போன விஷயம்; அது பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்று நடிகை குஷ்பு கூறினார். ஏற்கனவே பெண்களின், கற்பு குறித்து தனது கருத்தை வெளியிட்டு பிரச்னையில் சிக்கியவர் நடிகை குஷ்பு. ஜெயா டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த அவர் தற்போது தி.மு.க.வில் ஐக்கியமாகி விட்டார். வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதராக பிரசார களமிறங்கியிருக்கும் குஷ்பு, முதன் முதலாக தனது பிரசாரத்தை மதுரையில் "பிளையிங் கிஸ் கொடுத்து நேற்று தொடங்கினார்.

முன்னதாக மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை அவரது வீட்டில் சந்தித்த குஷ்பு, பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கற்பு குறித்த கேள்விகளுக்கு மழுப்பலான பதிலை தெரிவித்தார். பெண்களின் "கற்பு குறித்து கருத்து வெளியிட்ட உங்களுக்கு பிரசாரத்தின் போது பிரச்னைகள் வந்தால்? என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த குஷ்பு, கற்பு முடிந்து போன விஷயம்; இதற்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சொல்லியாச்சு, என்று கூறினார். அதைத்தொடர்ந்து கற்பு குறித்து உங்களது கருத்தால், உங்கள் மீது பெண்கள் தவறான அபிப்ராயம் வைத்துள்ளனர். அது பிரசாரத்தில் பிரதிபலித்தால், பிரச்னை ஏற்படுமே? என்று கேட்டதற்கு, கேள்வி கேட்ட நிருபரை பார்த்து, நீங்கள் அ.தி.மு.க.,வா? என, டென்ஷனாக கேட்டு விட்டு, பேட்டியை முடித்துக் கொண்டு பிரசாரத்துக்கு புறப்பட்டார்.

கற்பு முடிந்து போன விஷயம் - குஷ்பு பேட்டி

கற்பு முடிந்து போன விஷயம்; அது பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்று நடிகை குஷ்பு கூறினார். ஏற்கனவே பெண்களின், கற்பு குறித்து தனது கருத்தை வெளியிட்டு பிரச்னையில் சிக்கியவர் நடிகை குஷ்பு. ஜெயா டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த அவர் தற்போது தி.மு.க.வில் ஐக்கியமாகி விட்டார். வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதராக பிரசார களமிறங்கியிருக்கும் குஷ்பு, முதன் முதலாக தனது பிரசாரத்தை மதுரையில் "பிளையிங் கிஸ் கொடுத்து நேற்று தொடங்கினார்.

முன்னதாக மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை அவரது வீட்டில் சந்தித்த குஷ்பு, பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கற்பு குறித்த கேள்விகளுக்கு மழுப்பலான பதிலை தெரிவித்தார். பெண்களின் "கற்பு குறித்து கருத்து வெளியிட்ட உங்களுக்கு பிரசாரத்தின் போது பிரச்னைகள் வந்தால்? என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த குஷ்பு, கற்பு முடிந்து போன விஷயம்; இதற்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சொல்லியாச்சு, என்று கூறினார். அதைத்தொடர்ந்து கற்பு குறித்து உங்களது கருத்தால், உங்கள் மீது பெண்கள் தவறான அபிப்ராயம் வைத்துள்ளனர். அது பிரசாரத்தில் பிரதிபலித்தால், பிரச்னை ஏற்படுமே? என்று கேட்டதற்கு, கேள்வி கேட்ட நிருபரை பார்த்து, நீங்கள் அ.தி.மு.க.,வா? என, டென்ஷனாக கேட்டு விட்டு, பேட்டியை முடித்துக் கொண்டு பிரசாரத்துக்கு புறப்பட்டார்.

மலையாளத்தில் “மிஸ்டர் மருகன்” என்ற பெயரில் புதுப்படம் தயாராகிறது. இதில் மாமியார் வேடத்தில் நடிக்க குஷ்புவை அணுகினர். கதை பிடித்ததால் நடிக்க ஒப்புக்கொண்டார். மருமகனாக திலீப் நடிக்கிறார்.

இப்படத்தில் நடிப்பது பற்றி குஷ்பு கூறும்போது, “கதை என்னை மிகவும் கவர்ந்தது. இதுவரை 11 மலையாள படங்களில் நடித்துள்ளேன். ரஞ்சித் பட மொன்றில் கவுரவ வேடத்திலும் நடித்தேன். சவாலான வேடங்களில் நடித்து வருகிறேன்.

திலீப் படத்தில் இளம் மாமியாராக நடிக்க சம்மதித்ததற்கு காரணம் கதை. என்னையே சுற்றி நகர்வதால் அற்புதமான கதை. படத்துக்கு டப்பிங் பேச மாட்டேன். தமிழில் என்னால் பேச முடியும். மலையாளம் கஷ்டம் என்றார். மேலும் அவர் கூறும் போது, சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்வேன் என்றார்.

மலையாள படத்தில் மாமியார் வேடத்தில் குஷ்பு

மலையாளத்தில் “மிஸ்டர் மருகன்” என்ற பெயரில் புதுப்படம் தயாராகிறது. இதில் மாமியார் வேடத்தில் நடிக்க குஷ்புவை அணுகினர். கதை பிடித்ததால் நடிக்க ஒப்புக்கொண்டார். மருமகனாக திலீப் நடிக்கிறார்.

இப்படத்தில் நடிப்பது பற்றி குஷ்பு கூறும்போது, “கதை என்னை மிகவும் கவர்ந்தது. இதுவரை 11 மலையாள படங்களில் நடித்துள்ளேன். ரஞ்சித் பட மொன்றில் கவுரவ வேடத்திலும் நடித்தேன். சவாலான வேடங்களில் நடித்து வருகிறேன்.

திலீப் படத்தில் இளம் மாமியாராக நடிக்க சம்மதித்ததற்கு காரணம் கதை. என்னையே சுற்றி நகர்வதால் அற்புதமான கதை. படத்துக்கு டப்பிங் பேச மாட்டேன். தமிழில் என்னால் பேச முடியும். மலையாளம் கஷ்டம் என்றார். மேலும் அவர் கூறும் போது, சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்வேன் என்றார்.

முக நூல்

Popular Posts