background img

புதிய வரவு

Showing posts with label Political. Show all posts
Showing posts with label Political. Show all posts
ஓசூர்: ஊழலை ஒழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பாஜகவிற்கு வாக்களியுங்கள் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

சட்டசபை தேர்தலையொட்டி ஓசூரில் பாஜக சார்பில் போட்டியிடும் பாலகிருஷ்ணனை ஆதரித்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது,

நாட்டின் சில மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றாலும் நாடு முழுவதும் அதே பேச்சு தான். நாட்டில் தற்போது அனைவரும் ஊழலை பற்றியே தான் விவாதம் செய்கின்றனர். இளைய சமுதாயத்தினர் ஊழலை எதிர்த்து போராடத் துவங்கியுள்ளனர். நான் குஜராத்தில் இருக்கையில் கடந்த 1975-ம் ஆண்டில் அப்போதைய இளை சமுதாயத்தினர் ஊழலை எதிர்த்து போராடியதால் அந்த அரசு அகற்றப்பட்டது. மக்களின் போராட்டம் மூலமாக மட்டும் தான் ஊழல் அரசை அகற்ற முடியும். அதற்காக நமக்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஊழல் அரசியல்வாதிகளை அகற்றாவிட்டால் முன்னேற்றம் கிடையாது.

தற்போதைய அரசியல் சூழலில் எதுவும் நடக்கும் என்ற நிலை உள்ளது. நான் 3-வது முறையாக குஜராத் முதல்வராக உள்ளேன். அங்கு சிறு குற்றங்கள் கூட கிடையாது. ஊழல் இல்லாத அரசு நடத்த முடியும், பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படுத்த முடியும் என்று கொண்டு வந்து முன் உதாரணமாக எனது மாநிலத்தை வைத்துள்ளேன்.

தமிழகத்தை ஊழல் ஒரு பக்கம், குடும்ப அரசியல் மறு பக்கம் பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. இவற்றை உடனே அகற்ற வேண்டும்.

தமிழகத்தில் பாஜக அமோக வெற்றி பெறுமா என்று கேட்கிறார்கள். ஒரு மனிதன் நினைத்தால் கூட மாற்றத்தை கொண்டு வர முடியும். அதற்கு சிறந்த உதாரணம் அன்னா ஹசாரே. ஊழலை எதிர்த்து தனி மனிதராய் போராடி வரலாறு படைத்துள்ளார். நீங்கள் பாலகிருஷ்ணனை தேர்ந்தெடுத்தால் ஊழலை அகற்ற முடியும் என்று என்னால் உறுதியாகக் கூற முடியும்.

ஊழலை எதிர்த்து போராடுபவன் நான். இங்குள்ள அரசு மக்களுக்கு குடிநீர் கொடுக்கவில்லை ஆனால் டிவி கொடுக்கிறது. டிவியைப் பார்த்தால் தாகம் தீர்ந்து விடுமா?

குஜராத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் பஞ்சம் இருந்தது. நிலத்தடி நீர் ஆதாரம் இல்லை. ஆனால் இன்று அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் வெளிப்படையான, ஊழலற்ற, நேர்மையான நிர்வாகம் நடந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் வளர்ச்சி என்றாலும், விமர்சினம் என்றாலும் குஜராத்தை குறிப்பிடுகிறார்கள். அன்னா ஹசாரே போன்று நாம் ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கத் தேவையில்லை.

மாறாக வரும் சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிப்பதன் மூலம் ஊழலை ஒழி்க்க முடியும். தமிழகத்தின் எதிர்காலத்தை மனதில் வைத்து வாக்களியுங்கள் என்றார்.

தமிழகத்தை குடும்ப அரசியல் பாடாய் படுத்துகிறது-நரேந்திர மோடி

ஓசூர்: ஊழலை ஒழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பாஜகவிற்கு வாக்களியுங்கள் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

சட்டசபை தேர்தலையொட்டி ஓசூரில் பாஜக சார்பில் போட்டியிடும் பாலகிருஷ்ணனை ஆதரித்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது,

நாட்டின் சில மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றாலும் நாடு முழுவதும் அதே பேச்சு தான். நாட்டில் தற்போது அனைவரும் ஊழலை பற்றியே தான் விவாதம் செய்கின்றனர். இளைய சமுதாயத்தினர் ஊழலை எதிர்த்து போராடத் துவங்கியுள்ளனர். நான் குஜராத்தில் இருக்கையில் கடந்த 1975-ம் ஆண்டில் அப்போதைய இளை சமுதாயத்தினர் ஊழலை எதிர்த்து போராடியதால் அந்த அரசு அகற்றப்பட்டது. மக்களின் போராட்டம் மூலமாக மட்டும் தான் ஊழல் அரசை அகற்ற முடியும். அதற்காக நமக்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஊழல் அரசியல்வாதிகளை அகற்றாவிட்டால் முன்னேற்றம் கிடையாது.

தற்போதைய அரசியல் சூழலில் எதுவும் நடக்கும் என்ற நிலை உள்ளது. நான் 3-வது முறையாக குஜராத் முதல்வராக உள்ளேன். அங்கு சிறு குற்றங்கள் கூட கிடையாது. ஊழல் இல்லாத அரசு நடத்த முடியும், பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படுத்த முடியும் என்று கொண்டு வந்து முன் உதாரணமாக எனது மாநிலத்தை வைத்துள்ளேன்.

தமிழகத்தை ஊழல் ஒரு பக்கம், குடும்ப அரசியல் மறு பக்கம் பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. இவற்றை உடனே அகற்ற வேண்டும்.

தமிழகத்தில் பாஜக அமோக வெற்றி பெறுமா என்று கேட்கிறார்கள். ஒரு மனிதன் நினைத்தால் கூட மாற்றத்தை கொண்டு வர முடியும். அதற்கு சிறந்த உதாரணம் அன்னா ஹசாரே. ஊழலை எதிர்த்து தனி மனிதராய் போராடி வரலாறு படைத்துள்ளார். நீங்கள் பாலகிருஷ்ணனை தேர்ந்தெடுத்தால் ஊழலை அகற்ற முடியும் என்று என்னால் உறுதியாகக் கூற முடியும்.

ஊழலை எதிர்த்து போராடுபவன் நான். இங்குள்ள அரசு மக்களுக்கு குடிநீர் கொடுக்கவில்லை ஆனால் டிவி கொடுக்கிறது. டிவியைப் பார்த்தால் தாகம் தீர்ந்து விடுமா?

குஜராத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் பஞ்சம் இருந்தது. நிலத்தடி நீர் ஆதாரம் இல்லை. ஆனால் இன்று அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் வெளிப்படையான, ஊழலற்ற, நேர்மையான நிர்வாகம் நடந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் வளர்ச்சி என்றாலும், விமர்சினம் என்றாலும் குஜராத்தை குறிப்பிடுகிறார்கள். அன்னா ஹசாரே போன்று நாம் ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கத் தேவையில்லை.

மாறாக வரும் சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிப்பதன் மூலம் ஊழலை ஒழி்க்க முடியும். தமிழகத்தின் எதிர்காலத்தை மனதில் வைத்து வாக்களியுங்கள் என்றார்.

கோபி: தமிழ் மக்களிடம் ஓட்டுக் கேட்க குஷ்புவுக்கு என்ன தகுதியிருக்கிறது என்றார் நடிகர் சிங்கமுத்து.

நடிகர் சிங்கமுத்து அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து ஓட்டு கேட்டு வருகிறார். கோபியில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையனை ஆதரித்து சிங்கமுத்து பேசுகையில், "தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் நல்ல மதிப்பை பெற்றுள்ளதாக இருந்தால் நீங்கள் ஏன் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வருகிறீர்கள்.

கட்சி தொடங்கிய குறுகிய காலத்தில் வளர்ச்சியடைந்து இன்று அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 41 சீட்டுகளை பெற்றுள்ளார் விஜயகாந்த். அவரைப்பற்றி தனிப்பட்ட முறையில் பேசி விமர்சிக்க எழுதப்படிக்க தெரியாத உனக்கு (வடிவேலுவுக்கு) என்ன தகுதி இருக்கிறது?

இதேபோல் தமிழகப் பெண்களின் கற்பை பற்றி தரக்குறைவாக பேசியவர் குஷ்பு. அப்படிப்பட்ட குஷ்புவுக்கு தமிழக பெண்களிடம் வந்து ஓட்டு கேட்க என்ன தகுதி இருக்கிறது?இந்தியை எதிர்த்தவர் கருணாநிதி. இன்று இந்தி பேசும் குஷ்பு தி.மு.கவுக்கு ஆதரவாக பேசுகிறார்.

தமிழக மக்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்கிறார்கள். தமிழக மக்கள் எல்லா விவரமும் தெரிந்தவர்கள்தான்," என்றார்.

கற்பை தரக்குறைவாக பேசிய குஷ்புவுக்கு ஓட்டுக் கேட்க தகுதியில்லை! -சிங்கமுத்து

கோபி: தமிழ் மக்களிடம் ஓட்டுக் கேட்க குஷ்புவுக்கு என்ன தகுதியிருக்கிறது என்றார் நடிகர் சிங்கமுத்து.

நடிகர் சிங்கமுத்து அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து ஓட்டு கேட்டு வருகிறார். கோபியில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையனை ஆதரித்து சிங்கமுத்து பேசுகையில், "தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் நல்ல மதிப்பை பெற்றுள்ளதாக இருந்தால் நீங்கள் ஏன் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வருகிறீர்கள்.

கட்சி தொடங்கிய குறுகிய காலத்தில் வளர்ச்சியடைந்து இன்று அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 41 சீட்டுகளை பெற்றுள்ளார் விஜயகாந்த். அவரைப்பற்றி தனிப்பட்ட முறையில் பேசி விமர்சிக்க எழுதப்படிக்க தெரியாத உனக்கு (வடிவேலுவுக்கு) என்ன தகுதி இருக்கிறது?

இதேபோல் தமிழகப் பெண்களின் கற்பை பற்றி தரக்குறைவாக பேசியவர் குஷ்பு. அப்படிப்பட்ட குஷ்புவுக்கு தமிழக பெண்களிடம் வந்து ஓட்டு கேட்க என்ன தகுதி இருக்கிறது?இந்தியை எதிர்த்தவர் கருணாநிதி. இன்று இந்தி பேசும் குஷ்பு தி.மு.கவுக்கு ஆதரவாக பேசுகிறார்.

தமிழக மக்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்கிறார்கள். தமிழக மக்கள் எல்லா விவரமும் தெரிந்தவர்கள்தான்," என்றார்.

திருச்சி: ""என்னை கண்டு கருணாநிதிக்கு பயம் வந்து விட்டது. அதனால் தான் என்னை பின் தொடர்ந்து தவறான செய்திகளை பரப்புகின்றனர்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் திருச்சியில் பேசினார்.

திருச்சி வந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ஸ்ரீரங்கத்தில் போட்டியிடும் ஜெயலலிதா, திருவெறும்பூர் செந்தில்குமார், மண்ணச்சநல்லூர் பூனாச்சி, முசிறி சிவபதி ஆகியோரை ஆதரித்து ஓட்டு வேட்டையாடினார். திருவெறும்பூர், ரயில்நகர், திருவானைக்காவல், மண்ணச்சநல்லூர், முசிறி ஆகிய இடங்களில் விஜயகாந்த் பேசியதாவது: "பால் உற்பத்தியாளர்களுக்கு விலையை உயர்த்தி தரவேண்டும். குறைந்த விலையில் பால் விற்பனை செய்ய வேண்டும்' என்று மூன்றாண்டுக்கு முன் நான் கூறினேன். ஆனால், இப்போது தான் கருணாநிதி பால் உற்பத்தியாளர்களுக்கு விலை உயர்த்தி தருவதாக அறிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. டில்லிக்கு பலமுறை சென்ற கருணாநிதி, பெட்ரோல் விலை உயர்வு குறித்து வாய்திறந்திருப்பாரா? 5 ஆண்டுக்கு முன், 33.55 ரூபாயாக இருந்த பெட்ரோல் இன்று, 63 ரூபாய்க்கு விற்கிறது. அனைத்து தொழில்களும் இழுத்து மூடப்பட்டுவிட்டன. "கரன்ட் கட்' அதிகரித்துள்ளது. கலர், கலராக டிக்கெட்டை கொடுத்து பஸ் கட்டணத்தை மறைமுகமாக உயர்த்தியுள்ளனர். தவறு செய்தால் யாரையும் விடமாட்டேன். கருணாநிதி, தன் பிள்ளைகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், ஒன்றியம், வார்டு, வட்ட செயலர் வரை அனைவரையும் தவறு செய்யும்படி கூறுகிறார். எங்கும், எதிலும் ஊழல், லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

எனது கட்சி வேட்பாளரை அடித்ததாக, "டிவி'யில் அடிக்கடி ஒளிபரப்புகின்றனர். நான் என் கட்சிக்காரரை தானே அடித்தேன்; உங்களையா அடித்தேன்? கூட்டத்துக்கு வரும் தொண்டர்களை கொடியை கீழே இறக்கச் சொல்கிறார் என்கின்றனர். பின்னால் நிற்கும் மக்கள் என்னை பார்க்க முடியாது என்பதால், கொடியை கீழே இறக்கும்படி கூறுகிறேன். இதை ஏதோ தவறுபோல், சித்தரித்து "டிவி'க்களில் ஒளிபரப்புகின்றனர். என்னை கண்டு கருணாநிதிக்கு பயம் வந்துவிட்டது. அதனால் தான் என்னை பின் தொடர்கின்றனர். தவறான செய்திகளை பரப்புகின்றனர். விஜயகாந்த் வேட்பாளரை அடிச்சான்; கொடியை இறக்கச் சொன்னான்; வாந்தி எடுத்தான் என, என்ன வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். என்னைப் பற்றி என் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் தெரியும். ரோட்டில் ஒருவர் நடந்து செல்கிறார். அப்போது, அவர் திடீரென மயங்கி விழுகிறார். உடனடியாக என்ன செய்ய வேண்டும்? அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து, சோடா கொடுத்து அவரை மீட்க வேண்டும். அதுபோல், தமிழகத்தை மீட்க கருணாநிதியை ஆட்சியிலிருந்து துரத்துவது தான் தமிழகத்தின் உடனடி தேவை. இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

என்னைப்பற்றி தவறான செய்திகளை பரப்புகின்றனர்:விஜயகாந்த்

திருச்சி: ""என்னை கண்டு கருணாநிதிக்கு பயம் வந்து விட்டது. அதனால் தான் என்னை பின் தொடர்ந்து தவறான செய்திகளை பரப்புகின்றனர்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் திருச்சியில் பேசினார்.

திருச்சி வந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ஸ்ரீரங்கத்தில் போட்டியிடும் ஜெயலலிதா, திருவெறும்பூர் செந்தில்குமார், மண்ணச்சநல்லூர் பூனாச்சி, முசிறி சிவபதி ஆகியோரை ஆதரித்து ஓட்டு வேட்டையாடினார். திருவெறும்பூர், ரயில்நகர், திருவானைக்காவல், மண்ணச்சநல்லூர், முசிறி ஆகிய இடங்களில் விஜயகாந்த் பேசியதாவது: "பால் உற்பத்தியாளர்களுக்கு விலையை உயர்த்தி தரவேண்டும். குறைந்த விலையில் பால் விற்பனை செய்ய வேண்டும்' என்று மூன்றாண்டுக்கு முன் நான் கூறினேன். ஆனால், இப்போது தான் கருணாநிதி பால் உற்பத்தியாளர்களுக்கு விலை உயர்த்தி தருவதாக அறிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. டில்லிக்கு பலமுறை சென்ற கருணாநிதி, பெட்ரோல் விலை உயர்வு குறித்து வாய்திறந்திருப்பாரா? 5 ஆண்டுக்கு முன், 33.55 ரூபாயாக இருந்த பெட்ரோல் இன்று, 63 ரூபாய்க்கு விற்கிறது. அனைத்து தொழில்களும் இழுத்து மூடப்பட்டுவிட்டன. "கரன்ட் கட்' அதிகரித்துள்ளது. கலர், கலராக டிக்கெட்டை கொடுத்து பஸ் கட்டணத்தை மறைமுகமாக உயர்த்தியுள்ளனர். தவறு செய்தால் யாரையும் விடமாட்டேன். கருணாநிதி, தன் பிள்ளைகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், ஒன்றியம், வார்டு, வட்ட செயலர் வரை அனைவரையும் தவறு செய்யும்படி கூறுகிறார். எங்கும், எதிலும் ஊழல், லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

எனது கட்சி வேட்பாளரை அடித்ததாக, "டிவி'யில் அடிக்கடி ஒளிபரப்புகின்றனர். நான் என் கட்சிக்காரரை தானே அடித்தேன்; உங்களையா அடித்தேன்? கூட்டத்துக்கு வரும் தொண்டர்களை கொடியை கீழே இறக்கச் சொல்கிறார் என்கின்றனர். பின்னால் நிற்கும் மக்கள் என்னை பார்க்க முடியாது என்பதால், கொடியை கீழே இறக்கும்படி கூறுகிறேன். இதை ஏதோ தவறுபோல், சித்தரித்து "டிவி'க்களில் ஒளிபரப்புகின்றனர். என்னை கண்டு கருணாநிதிக்கு பயம் வந்துவிட்டது. அதனால் தான் என்னை பின் தொடர்கின்றனர். தவறான செய்திகளை பரப்புகின்றனர். விஜயகாந்த் வேட்பாளரை அடிச்சான்; கொடியை இறக்கச் சொன்னான்; வாந்தி எடுத்தான் என, என்ன வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். என்னைப் பற்றி என் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் தெரியும். ரோட்டில் ஒருவர் நடந்து செல்கிறார். அப்போது, அவர் திடீரென மயங்கி விழுகிறார். உடனடியாக என்ன செய்ய வேண்டும்? அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து, சோடா கொடுத்து அவரை மீட்க வேண்டும். அதுபோல், தமிழகத்தை மீட்க கருணாநிதியை ஆட்சியிலிருந்து துரத்துவது தான் தமிழகத்தின் உடனடி தேவை. இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

சொந்த கட்சி வேட்பாளரையே தாக்கும் விஜயகாந்த் ஒரு தலைவரா என, நடிகர் வடிவேலு கேள்வி எழுப்பியுள்ளார்.

தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் பாஸ்கர் என்பவர் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். அப்போது வேட்பாளர் பெயரை பாண்டியன் என விஜயகாந்த் உச்சரித்தார். இதனையடுத்து அந்த வேட்பாளர் தனது பெயரை பாஸ்கர் என கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த விஜயகாந்த், அந்த இடத்திலேயே பாஸ்கரை சரமாரியாக அடித்தார். பெயரை மாற்றி சொன்னதை சுட்டிக்காட்டிய வேட்பாளரை விஜயகாந்த் தாக்கியதால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சொந்தக் கட்சி வேட்பாளரையே விஜயகாந்த் அடித்தது அக்கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசனை ஆதரித்து நடிகர் வடிவேலு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய வடிவேலு,

தர்புரியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் பெயர் பாஸ்கர். பாஸ்கர் அவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்லுவதற்கு பதிலாக, வேட்பாளர் பாண்டியன் அவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என விஜயகாந்த் சொல்லியிருக்கிறார். எத்தனாவது ரவுண்டில் அவர் இருந்தார் என்று தெரியவில்லை. (பலத்த கைதட்டல்)

உடனே கூட இருந்த வேட்பாளர், என் பெயர் பாண்டியன் இல்ல அண்ணே, பாஸ்கர் என்று கூறியுள்ளார். ஜனங்க கூடியிருக்காக அவங்களுக்கு முன்னாடி ஒரே அடி. வேட்பாளரை அடிச்சிருக்கிறார். வேட்பாளரை அடிக்கலாமா. நீ தண்ணிய போட்டு உளறியிருக்க. வேட்பாளர் தன்னுடைய பெயரை எடுத்துச் சொல்றாரு. திருப்பி அடித்திருக்கிறார். அடிச்ச அடியில வேட்பாளரின் ரெண்டு பல்லு விழுந்திருச்சி. அதை அப்படியே வேட்பாளர் முழுங்கிட்டாரு. வெளியே துப்பினால் வேட்பாளருக்கு அசிங்கம்.

அய்யோ இப்படிப்பட்ட தலைவன் கிட்ட சேர்ந்திருக்கிறோமே, ஓபனிங் எல்லாம் இவனுக்கிட்ட நல்லதான் இருக்கு. பினிசிங் சரியில்லையே என அங்கிருந்தவர்கள் பார்த்தார்கள். கருப்பு எம்ஜிஆருக்கு எப்படின்னா பில்டிங் ஸ்டார்ங். ஆனால் பேஸ் மட்டம் வீக். (பலத்த கைதட்டல்)

தவறை சுட்டிக்காட்டிதைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாதவர் எல்லாம் தலைவரா. இவர் பெரிய பெரிய பொறுப்புகளுக்கு ஆசைப்படலாமா. விருத்தாசலம் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. மீண்டும் அங்கு நின்றால் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவ்வாறு வடிவேலு பேசினார்.

வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு

சொந்த கட்சி வேட்பாளரையே தாக்கும் விஜயகாந்த் ஒரு தலைவரா என, நடிகர் வடிவேலு கேள்வி எழுப்பியுள்ளார்.

தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் பாஸ்கர் என்பவர் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். அப்போது வேட்பாளர் பெயரை பாண்டியன் என விஜயகாந்த் உச்சரித்தார். இதனையடுத்து அந்த வேட்பாளர் தனது பெயரை பாஸ்கர் என கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த விஜயகாந்த், அந்த இடத்திலேயே பாஸ்கரை சரமாரியாக அடித்தார். பெயரை மாற்றி சொன்னதை சுட்டிக்காட்டிய வேட்பாளரை விஜயகாந்த் தாக்கியதால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சொந்தக் கட்சி வேட்பாளரையே விஜயகாந்த் அடித்தது அக்கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசனை ஆதரித்து நடிகர் வடிவேலு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய வடிவேலு,

தர்புரியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் பெயர் பாஸ்கர். பாஸ்கர் அவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்லுவதற்கு பதிலாக, வேட்பாளர் பாண்டியன் அவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என விஜயகாந்த் சொல்லியிருக்கிறார். எத்தனாவது ரவுண்டில் அவர் இருந்தார் என்று தெரியவில்லை. (பலத்த கைதட்டல்)

உடனே கூட இருந்த வேட்பாளர், என் பெயர் பாண்டியன் இல்ல அண்ணே, பாஸ்கர் என்று கூறியுள்ளார். ஜனங்க கூடியிருக்காக அவங்களுக்கு முன்னாடி ஒரே அடி. வேட்பாளரை அடிச்சிருக்கிறார். வேட்பாளரை அடிக்கலாமா. நீ தண்ணிய போட்டு உளறியிருக்க. வேட்பாளர் தன்னுடைய பெயரை எடுத்துச் சொல்றாரு. திருப்பி அடித்திருக்கிறார். அடிச்ச அடியில வேட்பாளரின் ரெண்டு பல்லு விழுந்திருச்சி. அதை அப்படியே வேட்பாளர் முழுங்கிட்டாரு. வெளியே துப்பினால் வேட்பாளருக்கு அசிங்கம்.

அய்யோ இப்படிப்பட்ட தலைவன் கிட்ட சேர்ந்திருக்கிறோமே, ஓபனிங் எல்லாம் இவனுக்கிட்ட நல்லதான் இருக்கு. பினிசிங் சரியில்லையே என அங்கிருந்தவர்கள் பார்த்தார்கள். கருப்பு எம்ஜிஆருக்கு எப்படின்னா பில்டிங் ஸ்டார்ங். ஆனால் பேஸ் மட்டம் வீக். (பலத்த கைதட்டல்)

தவறை சுட்டிக்காட்டிதைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாதவர் எல்லாம் தலைவரா. இவர் பெரிய பெரிய பொறுப்புகளுக்கு ஆசைப்படலாமா. விருத்தாசலம் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. மீண்டும் அங்கு நின்றால் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவ்வாறு வடிவேலு பேசினார்.

கற்பு முடிந்து போன விஷயம்; அது பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்று நடிகை குஷ்பு கூறினார். ஏற்கனவே பெண்களின், கற்பு குறித்து தனது கருத்தை வெளியிட்டு பிரச்னையில் சிக்கியவர் நடிகை குஷ்பு. ஜெயா டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த அவர் தற்போது தி.மு.க.வில் ஐக்கியமாகி விட்டார். வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதராக பிரசார களமிறங்கியிருக்கும் குஷ்பு, முதன் முதலாக தனது பிரசாரத்தை மதுரையில் "பிளையிங் கிஸ் கொடுத்து நேற்று தொடங்கினார்.

முன்னதாக மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை அவரது வீட்டில் சந்தித்த குஷ்பு, பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கற்பு குறித்த கேள்விகளுக்கு மழுப்பலான பதிலை தெரிவித்தார். பெண்களின் "கற்பு குறித்து கருத்து வெளியிட்ட உங்களுக்கு பிரசாரத்தின் போது பிரச்னைகள் வந்தால்? என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த குஷ்பு, கற்பு முடிந்து போன விஷயம்; இதற்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சொல்லியாச்சு, என்று கூறினார். அதைத்தொடர்ந்து கற்பு குறித்து உங்களது கருத்தால், உங்கள் மீது பெண்கள் தவறான அபிப்ராயம் வைத்துள்ளனர். அது பிரசாரத்தில் பிரதிபலித்தால், பிரச்னை ஏற்படுமே? என்று கேட்டதற்கு, கேள்வி கேட்ட நிருபரை பார்த்து, நீங்கள் அ.தி.மு.க.,வா? என, டென்ஷனாக கேட்டு விட்டு, பேட்டியை முடித்துக் கொண்டு பிரசாரத்துக்கு புறப்பட்டார்.

கற்பு முடிந்து போன விஷயம் - குஷ்பு பேட்டி

கற்பு முடிந்து போன விஷயம்; அது பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்று நடிகை குஷ்பு கூறினார். ஏற்கனவே பெண்களின், கற்பு குறித்து தனது கருத்தை வெளியிட்டு பிரச்னையில் சிக்கியவர் நடிகை குஷ்பு. ஜெயா டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த அவர் தற்போது தி.மு.க.வில் ஐக்கியமாகி விட்டார். வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதராக பிரசார களமிறங்கியிருக்கும் குஷ்பு, முதன் முதலாக தனது பிரசாரத்தை மதுரையில் "பிளையிங் கிஸ் கொடுத்து நேற்று தொடங்கினார்.

முன்னதாக மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை அவரது வீட்டில் சந்தித்த குஷ்பு, பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கற்பு குறித்த கேள்விகளுக்கு மழுப்பலான பதிலை தெரிவித்தார். பெண்களின் "கற்பு குறித்து கருத்து வெளியிட்ட உங்களுக்கு பிரசாரத்தின் போது பிரச்னைகள் வந்தால்? என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த குஷ்பு, கற்பு முடிந்து போன விஷயம்; இதற்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சொல்லியாச்சு, என்று கூறினார். அதைத்தொடர்ந்து கற்பு குறித்து உங்களது கருத்தால், உங்கள் மீது பெண்கள் தவறான அபிப்ராயம் வைத்துள்ளனர். அது பிரசாரத்தில் பிரதிபலித்தால், பிரச்னை ஏற்படுமே? என்று கேட்டதற்கு, கேள்வி கேட்ட நிருபரை பார்த்து, நீங்கள் அ.தி.மு.க.,வா? என, டென்ஷனாக கேட்டு விட்டு, பேட்டியை முடித்துக் கொண்டு பிரசாரத்துக்கு புறப்பட்டார்.

சென்னை: சினிமாவை விட அரசியல் கஷ்டம். சினிமா பார்த்து விசிலடித்துக் கைதட்டுபவர்கள் எல்லாம் ஓட்டுப் போட மாட்டார்கள் என்பதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும், என்று நடிகை குஷ்பு அட்வைஸ் செய்துள்ளார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார், அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார் என பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்தத் தேர்தலுக்குப் பிறகு தனிக்கட்சி துவங்கி முழு நேர அரசியலில் குதிப்பார் என்றும் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகரனே கூறிவருகிறார். விஜய்யும் விரைவில் அரசியலுக்கு வருவேன் என்று பேசி வருகிறார். இதற்காக தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளார்.

விஜய் அரசியலுக்கு வருவது பற்றி உங்கள் கருத்து என்ன என்று நடிகை குஷ்புவிடம் கேட்டபோது, "மக்கள் பணிகளில் ஈடுபட விரும்பும் யாரும் அரசியலில் ஈடுபடலாம். விஜய்யும் தாராளமாக வரலாம்.

ஆனால் சினிமா வேறு அரசியல் வேறு என்பதை உணர வேண்டும். சினிமாவில் நடிக்கும்போது ரசிகர்கள் கைதட்டுவார்கள். விசில் அடித்தும் ரசிப்பார்கள். அவர்கள் எல்லோருடைய ஓட்டும் நமக்குத்தான் விழும் என்று எதிர்பார்த்து அரசியலுக்கு வரக்கூடாது. சினிமாவை விட அரசியல் உண்மையிலேயே கஷ்டமான விஷயம்தான்...", என்றார்.

சினிமாவை விட அரசியல் கஷ்டம்! - விஜய்க்கு குஷ்புவின் அட்வைஸ்

சென்னை: சினிமாவை விட அரசியல் கஷ்டம். சினிமா பார்த்து விசிலடித்துக் கைதட்டுபவர்கள் எல்லாம் ஓட்டுப் போட மாட்டார்கள் என்பதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும், என்று நடிகை குஷ்பு அட்வைஸ் செய்துள்ளார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார், அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார் என பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்தத் தேர்தலுக்குப் பிறகு தனிக்கட்சி துவங்கி முழு நேர அரசியலில் குதிப்பார் என்றும் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகரனே கூறிவருகிறார். விஜய்யும் விரைவில் அரசியலுக்கு வருவேன் என்று பேசி வருகிறார். இதற்காக தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளார்.

விஜய் அரசியலுக்கு வருவது பற்றி உங்கள் கருத்து என்ன என்று நடிகை குஷ்புவிடம் கேட்டபோது, "மக்கள் பணிகளில் ஈடுபட விரும்பும் யாரும் அரசியலில் ஈடுபடலாம். விஜய்யும் தாராளமாக வரலாம்.

ஆனால் சினிமா வேறு அரசியல் வேறு என்பதை உணர வேண்டும். சினிமாவில் நடிக்கும்போது ரசிகர்கள் கைதட்டுவார்கள். விசில் அடித்தும் ரசிப்பார்கள். அவர்கள் எல்லோருடைய ஓட்டும் நமக்குத்தான் விழும் என்று எதிர்பார்த்து அரசியலுக்கு வரக்கூடாது. சினிமாவை விட அரசியல் உண்மையிலேயே கஷ்டமான விஷயம்தான்...", என்றார்.

ஆந்திராவை பிரித்து தனி மாநிலம் அமைக்க கோரி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி போராடி வருகிறது. இக் கட்சி எம்.பி.க்கள் சந்திரசேகரராவ், நடிகை விஜயசாந்தி உள்பட பலர் தெலுங்கானா கோரி பாராளுமன்றத்தில் கோஷம் எழுப்பினர். இந்த அமளி காரணமாக சபை அடுத்தடுத்து 6 முறை ஒத்தி வைக்கப்பட்டது. மாலையிலும் அமளி நீடித்ததால் சபை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. இந் நிலையில் விஜயசாந்தி டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தெலுங்கானா தனி மாநில போராட்டம் கடந்த 50 ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் மத்திய அரசு தனி மாநிலம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. தெலுங்கானா மாநிலம் அமைக்க கோரி நேற்று எங்கள் கட்சி எம்.பி.க்கள், மற்ற கட்சியை சேர்ந்த ஆதரவு எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டோம். தெலுங்கானா கிடைக்கா விட்டால் பாராளுமன்றத்தை நடத்த விடமாட்டோம். தெலுங்கானா மக்கள் அனைவரும் ஒன்று பட்டு போராடி வருகிறார்கள். 10-ந் தேதி ஐதராபாத் நகரை முற்றுகையிட்டு மிகப் பெரிய போராட்டம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு விஜயசாந்தி கூறினார்.

தனித் தெலுங்கானா கிடைக்காவிட்டால் பாராளுமன்றத்தை நடத்த விடமாட்டோம்; நடிகை விஜயசாந்தி ஆவேசம்

ஆந்திராவை பிரித்து தனி மாநிலம் அமைக்க கோரி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி போராடி வருகிறது. இக் கட்சி எம்.பி.க்கள் சந்திரசேகரராவ், நடிகை விஜயசாந்தி உள்பட பலர் தெலுங்கானா கோரி பாராளுமன்றத்தில் கோஷம் எழுப்பினர். இந்த அமளி காரணமாக சபை அடுத்தடுத்து 6 முறை ஒத்தி வைக்கப்பட்டது. மாலையிலும் அமளி நீடித்ததால் சபை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. இந் நிலையில் விஜயசாந்தி டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தெலுங்கானா தனி மாநில போராட்டம் கடந்த 50 ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் மத்திய அரசு தனி மாநிலம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. தெலுங்கானா மாநிலம் அமைக்க கோரி நேற்று எங்கள் கட்சி எம்.பி.க்கள், மற்ற கட்சியை சேர்ந்த ஆதரவு எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டோம். தெலுங்கானா கிடைக்கா விட்டால் பாராளுமன்றத்தை நடத்த விடமாட்டோம். தெலுங்கானா மக்கள் அனைவரும் ஒன்று பட்டு போராடி வருகிறார்கள். 10-ந் தேதி ஐதராபாத் நகரை முற்றுகையிட்டு மிகப் பெரிய போராட்டம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு விஜயசாந்தி கூறினார்.

முக நூல்

Popular Posts