background img

புதிய வரவு

Showing posts with label Old Age. Show all posts
Showing posts with label Old Age. Show all posts
சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.
சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.
தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர்.
தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்லவேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாகத் தென்சீனக் கடலை அடையலாம். மலேசியத் தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்லவேண்டியிருக்கும். ஆனால் இந்தவழி சுற்றுவழியாகும். ஆயிரம் கல்களுக்கு அதிகமாகப் பயணத்தொலைவு நீளும். மேலும் பயணநேரத்திலும் பல மாதம் கூடிவிடும்.
சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்று. வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில், புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
சூவன்லிசௌ துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சில விக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப் பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.
இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும்.
சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிசுகானின் பேரனாவான. மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.
இவன்தான் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது.
சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ்க்கல்வெட்டு இதுவாகும்.

சீன நாட்டில் தமிழ் கல்வெட்டு

சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.
சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.
தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர்.
தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்லவேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாகத் தென்சீனக் கடலை அடையலாம். மலேசியத் தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்லவேண்டியிருக்கும். ஆனால் இந்தவழி சுற்றுவழியாகும். ஆயிரம் கல்களுக்கு அதிகமாகப் பயணத்தொலைவு நீளும். மேலும் பயணநேரத்திலும் பல மாதம் கூடிவிடும்.
சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்று. வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில், புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
சூவன்லிசௌ துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சில விக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப் பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.
இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும்.
சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிசுகானின் பேரனாவான. மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.
இவன்தான் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது.
சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ்க்கல்வெட்டு இதுவாகும்.

ஐபிஎல் போட்டிகள் முடிந்த அடுத்த வாரத்திலேயே, அதாவது ஜூன் 4ம் தேதியே இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் ஆட இருக்கிறது. எனவே தொடர்ந்து விளையாடி வரும் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்திய அணி ஒரு 20 ஓவர் போட்டி, 5 ஒருநாள் ஆட்டம், 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் போட்டியில் மட்டும் சச்சின், தோனி, ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், கம்பீர் ஆகியோர் விளையாட மாட்டார்கள் என்று தெரிகிறது. வீரேந்திர சேவாக் இந்த தொடர் முழுவதும் விளையாட மாட்டார்.


தங்களுக்கு ஓய்வு தேவை என்பது குறித்து இந்த மூத்த வீரர்கள் ஏற்கெனவே கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் போதிய ஓய்வு எடுத்தால்தான் இந்த ஆண்டில் அடுத்து நடைபெறவுள்ள இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாட முடியும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனையடுத்து வீரர்களுக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

மூத்த வீரர்களுக்கு ஓய்வு? பிசிசிஐ முடிவு!

ஐபிஎல் போட்டிகள் முடிந்த அடுத்த வாரத்திலேயே, அதாவது ஜூன் 4ம் தேதியே இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் ஆட இருக்கிறது. எனவே தொடர்ந்து விளையாடி வரும் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்திய அணி ஒரு 20 ஓவர் போட்டி, 5 ஒருநாள் ஆட்டம், 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் போட்டியில் மட்டும் சச்சின், தோனி, ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், கம்பீர் ஆகியோர் விளையாட மாட்டார்கள் என்று தெரிகிறது. வீரேந்திர சேவாக் இந்த தொடர் முழுவதும் விளையாட மாட்டார்.


தங்களுக்கு ஓய்வு தேவை என்பது குறித்து இந்த மூத்த வீரர்கள் ஏற்கெனவே கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் போதிய ஓய்வு எடுத்தால்தான் இந்த ஆண்டில் அடுத்து நடைபெறவுள்ள இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாட முடியும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனையடுத்து வீரர்களுக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

முதியவர்களுக்கு சேவை செய்யும் புதிய “ரோபோ” தயாரிப்புவளர்ந்து வரும் அறிவியல் உலகில் “ரோபோ”க்களின் பங்கு அவசியமாக திகழ்கிறது. பல துறைகளில் “ரோபோ”க்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது முதியவர்களுக்கு உதவக்கூடிய புதியவகை “ரோபோ”க்களை விஞ்ஞானிகள் தயாரித்து வருகின்றனர்.

நியூசிலாந்தை சேர்ந்த ஒரு விளையாட்டு நிறுவனம் ஒரு புதியவகை ரோபோவை வடிவமைத்து வருகிறது. அதன்மூலம் மூளையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவதிப்படும் முதியோருக்கு உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.

இந்த “ரோபோ” கற்றுத்தரும் “குங்பூ பங்க்” எனப்படும் புதிய விளையாட்டின் மூலம் அந்த நோயை குணப்படுத்த முடியும் என்றும் நம்பப்படுகிறது. இந்த “ரோபோ”வை நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வடிவமைத்து வருகின்றனர்.

இதை மேலும் மாற்றியமைத்து முதியோர்களுக்கு உதவும் வண்ணம் உருவாக்க முடியும் என கருதினர். அதற்கான முயற்சியிலும் தற்போது அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில், தென் கொரியாவின் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலை தொடர்பு ஆய்வு மையமும் இணைந்து செயல்படுகிறது.

இந்த “ரோபா”க்கள் முதியோர்களுக்கு பலவிதங்களில் உதவியாக இருக்கும். ரத்த அழுத்த சோதனை, உடலில் இருக்கும் இன்சுலின் அளவு போன்றவற்றை கணக் கெடுத்து பதிவு செய்து கொள்ளும். பின்னர் அதில் பொருத்தப் பட்டுள்ள வயர்லெஸ் இணைப்பு மூலம் டாக்டர் அல்லது நர்சுகள் அறிந்து கொள்ள முடியும்.

அதே நேரத்தில் முதியவர் ஒருவர் தவறி கீழே விழுந்து கிடந்தால் கூட அதுபற்றிய தகவலையும் இது தெரிவிக்கும். இந்த தகவலை “ரோபோ”வை வடிவமைத்து வரும் விஞ்ஞானி டேவிட் காட்டர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, முதியோர்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய மருந்து மாத்திரைகள் பற்றிய தகவலை தெரிவித்தல் மற்றும் அவர்கள் செய்யக்கூடிய உடற்பயிற்சிகளை கற்றுக்கொடுத்தல் போன்ற பணிகளை செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட உள்ளது என்றும் அவர் கூறினார்.

முதியவர்களுக்கு சேவை செய்யும் புதிய “ரோபோ” தயாரிப்பு

முதியவர்களுக்கு சேவை செய்யும் புதிய “ரோபோ” தயாரிப்புவளர்ந்து வரும் அறிவியல் உலகில் “ரோபோ”க்களின் பங்கு அவசியமாக திகழ்கிறது. பல துறைகளில் “ரோபோ”க்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது முதியவர்களுக்கு உதவக்கூடிய புதியவகை “ரோபோ”க்களை விஞ்ஞானிகள் தயாரித்து வருகின்றனர்.

நியூசிலாந்தை சேர்ந்த ஒரு விளையாட்டு நிறுவனம் ஒரு புதியவகை ரோபோவை வடிவமைத்து வருகிறது. அதன்மூலம் மூளையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவதிப்படும் முதியோருக்கு உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.

இந்த “ரோபோ” கற்றுத்தரும் “குங்பூ பங்க்” எனப்படும் புதிய விளையாட்டின் மூலம் அந்த நோயை குணப்படுத்த முடியும் என்றும் நம்பப்படுகிறது. இந்த “ரோபோ”வை நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வடிவமைத்து வருகின்றனர்.

இதை மேலும் மாற்றியமைத்து முதியோர்களுக்கு உதவும் வண்ணம் உருவாக்க முடியும் என கருதினர். அதற்கான முயற்சியிலும் தற்போது அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில், தென் கொரியாவின் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலை தொடர்பு ஆய்வு மையமும் இணைந்து செயல்படுகிறது.

இந்த “ரோபா”க்கள் முதியோர்களுக்கு பலவிதங்களில் உதவியாக இருக்கும். ரத்த அழுத்த சோதனை, உடலில் இருக்கும் இன்சுலின் அளவு போன்றவற்றை கணக் கெடுத்து பதிவு செய்து கொள்ளும். பின்னர் அதில் பொருத்தப் பட்டுள்ள வயர்லெஸ் இணைப்பு மூலம் டாக்டர் அல்லது நர்சுகள் அறிந்து கொள்ள முடியும்.

அதே நேரத்தில் முதியவர் ஒருவர் தவறி கீழே விழுந்து கிடந்தால் கூட அதுபற்றிய தகவலையும் இது தெரிவிக்கும். இந்த தகவலை “ரோபோ”வை வடிவமைத்து வரும் விஞ்ஞானி டேவிட் காட்டர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, முதியோர்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய மருந்து மாத்திரைகள் பற்றிய தகவலை தெரிவித்தல் மற்றும் அவர்கள் செய்யக்கூடிய உடற்பயிற்சிகளை கற்றுக்கொடுத்தல் போன்ற பணிகளை செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட உள்ளது என்றும் அவர் கூறினார்.

முக நூல்

Popular Posts