background img

புதிய வரவு

Showing posts with label P Chidambaram. Show all posts
Showing posts with label P Chidambaram. Show all posts
மற்ற மாநிலங்களைக் காட்டிலும், தமிழகத்தில் எந்தக் கூட்டணி வெற்றி பெறும் என்பதை கணிக்க முடியாத நிலை உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

வெற்றியோ, தோல்வியோ, தேர்தல் முடிவுகள் எப்படியிருந்தாலும், அதை ஏற்றுக்கொண்டு பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சியினருக்கு அவர் அறிவுரை கூறினார். சிவகங்கையில் தேர்தல் பணிகள் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், கலந்துகொண்ட சிதம்பரம் மேலும் பேசியதாவது: தமிழ்நாடு, கேரளம், அசாம், புதுச்சேரி, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடந்துள்ளன. ஆனால், தமிழகத்தில் மட்டும்தான் தேர்தல் ஆணையம் அதிக கெடுபிடி காட்டியுள்ளது.

இதற்கான காரணம் குறித்து, தேர்தல் முடிவுகள் வெளியானபின், தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்கப்படும்.

தமிழகத்தில் தேர்தல்முடிவுகள் எப்படியிருக்கும் என்பதைக் கணிக்க முடியாத நிலையே உள்ளது.

முடிவு எப்படியிருந்தாலும் காங்கிரசார் பக்குவமாக ஏற்றுக் கொண்டு அதற்கேற்பச் செயல்பட வேண்டும் என்றார் சிதம்பரம். முன்னதாக கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினர் பல புகார்களைத் தெரிவித்தனர்.

மானாமதுரை தொகுதியில் திமுகவினர் தங்களை அரவணைத்துச் செயல்படவில்லை எனப் புகார் தெரிவிக்கப்பட்டது.

தமிழக தேர்தல் முடிவை கணிக்க முடியவில்லை: ப. சிதம்பரம்

மற்ற மாநிலங்களைக் காட்டிலும், தமிழகத்தில் எந்தக் கூட்டணி வெற்றி பெறும் என்பதை கணிக்க முடியாத நிலை உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

வெற்றியோ, தோல்வியோ, தேர்தல் முடிவுகள் எப்படியிருந்தாலும், அதை ஏற்றுக்கொண்டு பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சியினருக்கு அவர் அறிவுரை கூறினார். சிவகங்கையில் தேர்தல் பணிகள் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், கலந்துகொண்ட சிதம்பரம் மேலும் பேசியதாவது: தமிழ்நாடு, கேரளம், அசாம், புதுச்சேரி, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடந்துள்ளன. ஆனால், தமிழகத்தில் மட்டும்தான் தேர்தல் ஆணையம் அதிக கெடுபிடி காட்டியுள்ளது.

இதற்கான காரணம் குறித்து, தேர்தல் முடிவுகள் வெளியானபின், தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்கப்படும்.

தமிழகத்தில் தேர்தல்முடிவுகள் எப்படியிருக்கும் என்பதைக் கணிக்க முடியாத நிலையே உள்ளது.

முடிவு எப்படியிருந்தாலும் காங்கிரசார் பக்குவமாக ஏற்றுக் கொண்டு அதற்கேற்பச் செயல்பட வேண்டும் என்றார் சிதம்பரம். முன்னதாக கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினர் பல புகார்களைத் தெரிவித்தனர்.

மானாமதுரை தொகுதியில் திமுகவினர் தங்களை அரவணைத்துச் செயல்படவில்லை எனப் புகார் தெரிவிக்கப்பட்டது.


புதுடில்லி:"தெலுங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பாக ஆந்திராவைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க முன்வரும் பட்சத்தில், அது தொடர்பான கூட்டம் நடத்தப்படும்' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
டில்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:ஒடிசாவில் மால்காங்கிரி கலெக்டர் உட்பட சிலர், நக்சலைட்களால் கடத்தப்பட்ட விவகாரத்தில், மாநில அரசு திறமையாக கையாண்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. முதல்வர் நவீன் பட்னாயக் எடுத்த நடவடிக்கைகள் எனக்கு அதிருப்தி தந்ததாக வந்த தகவல்கள் தவறானவை. நாங்கள் ஒத்துக் கொள்கிறோம், அல்லது மறுக்கிறோம் என்பது முக்கியமல்ல. மாநில அரசால், இந்த விவகாரம் நல்ல முறையில் கையாளப்பட்டது. இது ஒரு முக்கியமான பிரச்னை. இந்த விவகாரத்தில், மாநில அரசின் செயல் பாராட்டத்தக்கது.
ஆந்திராவை பிரித்து தனித்தெலுங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பாக, அம்மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் முன்வந்து கருத்துக்களை தெரிவிக்கும் பட்சத்தில், அது தொடர்பான கூட்டம் நடத்தப்படும். இருப்பினும், இக்கூட்டம் எப்போது நடத்தப்படும் என்பதை சொல்ல முடியாது. நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டி அளித்த பரிந்துரைகளை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஆந்திராவில் உள்ள பிரதான எட்டு அரசியல் கட்சிகளும் அழைக்கப்படும் பட்சத்தில், அவர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய சிலரிடம் விசாரணை நடத்தும்படி, பாகிஸ்தான் அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். இது தொடர்பாக, அவர்களது பதிலுக்காக காத்திருக்கிறோம். அதுபோல், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க, பாகிஸ்தானிலிருந்து வரும் உயர்மட்ட குழுவினரையும் வரவேற்க தயாராக இருக்கிறோம்.மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலையொட்டி, மத்திய துணை ராணுவத்தைச் சேர்ந்த 100 கம்பெனி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார்.

தெலுங்கானா அமையுமா:சிதம்பரம் பேட்டி

புதுடில்லி:"தெலுங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பாக ஆந்திராவைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க முன்வரும் பட்சத்தில், அது தொடர்பான கூட்டம் நடத்தப்படும்' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
டில்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:ஒடிசாவில் மால்காங்கிரி கலெக்டர் உட்பட சிலர், நக்சலைட்களால் கடத்தப்பட்ட விவகாரத்தில், மாநில அரசு திறமையாக கையாண்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. முதல்வர் நவீன் பட்னாயக் எடுத்த நடவடிக்கைகள் எனக்கு அதிருப்தி தந்ததாக வந்த தகவல்கள் தவறானவை. நாங்கள் ஒத்துக் கொள்கிறோம், அல்லது மறுக்கிறோம் என்பது முக்கியமல்ல. மாநில அரசால், இந்த விவகாரம் நல்ல முறையில் கையாளப்பட்டது. இது ஒரு முக்கியமான பிரச்னை. இந்த விவகாரத்தில், மாநில அரசின் செயல் பாராட்டத்தக்கது.
ஆந்திராவை பிரித்து தனித்தெலுங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பாக, அம்மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் முன்வந்து கருத்துக்களை தெரிவிக்கும் பட்சத்தில், அது தொடர்பான கூட்டம் நடத்தப்படும். இருப்பினும், இக்கூட்டம் எப்போது நடத்தப்படும் என்பதை சொல்ல முடியாது. நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டி அளித்த பரிந்துரைகளை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஆந்திராவில் உள்ள பிரதான எட்டு அரசியல் கட்சிகளும் அழைக்கப்படும் பட்சத்தில், அவர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய சிலரிடம் விசாரணை நடத்தும்படி, பாகிஸ்தான் அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். இது தொடர்பாக, அவர்களது பதிலுக்காக காத்திருக்கிறோம். அதுபோல், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க, பாகிஸ்தானிலிருந்து வரும் உயர்மட்ட குழுவினரையும் வரவேற்க தயாராக இருக்கிறோம்.மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலையொட்டி, மத்திய துணை ராணுவத்தைச் சேர்ந்த 100 கம்பெனி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார்.

புதுடில்லி:"இந்தியாவில் உள்ள மற்ற நகரங்களை விட, தலைநகர் டில்லி மிகவும் பாதுகாப்பான நகரம்' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.லோக்சபாவில், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கேள்வி நேரத்தின் போது, பதிலளித்து பேசியதாவது:தலைநகர் டில்லியில் நடக்கும் குற்றச் செயல்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. போலீசாரின் கடுமையான நடவடிக்கைகளின் காரணமாக, சட்டம் ஒழுங்கு நிலை கட்டுக்குள் உள்ளது.
உலக அளவில் குற்றச் செயல்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது, 1 லட்சம் மக்களின் அடிப்படையில், டில்லியில், 2001ல், 392.66 ஆக இருந்த குற்றச் செயல்களின் குறியீட்டு எண், 2010ல், 281.34 ஆக குறைந்துள்ளது.எனினும், அரசு அளித்துள்ள புள்ளிவிவரத்தின் அடிப்படையில், 2009ல், 425 ஆக இருந்த பாலியல் வன்முறை வழக்குகள், 2010ல், 458 ஆக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் மட்டும், 17 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன.இந்தியாவில் உள்ள மற்ற நகரங்களைக் காட்டிலும், தலைநகர் டில்லி மிகவும் பாதுகாப்பான நகரம்.
இங்கு, பாதுகாப்பை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. அதிக எண்ணிக்கையில் போலீஸ் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. போலீஸ் வாகனங்கள், ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிக இடங்களில் போலீஸ் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன.அரியானா, உத்தர பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடன் இணைந்து, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு சிதம்பரம் தெரிவித்தார்.

டில்லி மிகவும் பாதுகாப்பான நகரம்:உள்துறை அமைச்சர் பெருமிதம்

புதுடில்லி:"இந்தியாவில் உள்ள மற்ற நகரங்களை விட, தலைநகர் டில்லி மிகவும் பாதுகாப்பான நகரம்' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.லோக்சபாவில், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கேள்வி நேரத்தின் போது, பதிலளித்து பேசியதாவது:தலைநகர் டில்லியில் நடக்கும் குற்றச் செயல்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. போலீசாரின் கடுமையான நடவடிக்கைகளின் காரணமாக, சட்டம் ஒழுங்கு நிலை கட்டுக்குள் உள்ளது.
உலக அளவில் குற்றச் செயல்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது, 1 லட்சம் மக்களின் அடிப்படையில், டில்லியில், 2001ல், 392.66 ஆக இருந்த குற்றச் செயல்களின் குறியீட்டு எண், 2010ல், 281.34 ஆக குறைந்துள்ளது.எனினும், அரசு அளித்துள்ள புள்ளிவிவரத்தின் அடிப்படையில், 2009ல், 425 ஆக இருந்த பாலியல் வன்முறை வழக்குகள், 2010ல், 458 ஆக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் மட்டும், 17 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன.இந்தியாவில் உள்ள மற்ற நகரங்களைக் காட்டிலும், தலைநகர் டில்லி மிகவும் பாதுகாப்பான நகரம்.
இங்கு, பாதுகாப்பை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. அதிக எண்ணிக்கையில் போலீஸ் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. போலீஸ் வாகனங்கள், ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிக இடங்களில் போலீஸ் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன.அரியானா, உத்தர பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடன் இணைந்து, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு சிதம்பரம் தெரிவித்தார்.

திருநெல்வேலி : மத்திய அரசு நிதியினை மாநில அரசுகள் சொந்த நிதி போல முறையாக செலவழிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.

நெல்லை மாவட்டம் சிவகிரியில் நேற்று இரவு காங்கிரஸ் கட்சி நடத்திய மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: 10 ஆண்டுகளுக்கு பிறகு சிவகிரிக்கு வந்துள்ளேன். 2004 பார்லிமென்ட் தேர்தலில் பாரதிய ஜனதா 137 இடங்களையும் 8 இடங்களில் அதிகமாக 145 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் பிடித்தன. அப்போதைய காங்.,அரசு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், முதியோர் உதவிதிட்டம், மாணவர்களுக்கு கல்வி கடன் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது. இதனால் 2009ல் மீண்டும் காங்.,ஆட்சியை பிடித்தது.

ஆட்சியை பிடிக்கும் கனவில் இருந்த பாரதிய ஜனதாவோ முன்பை விட குறைவான இடங்களில் வெற்றிபெற்றது. இப்போதும் பா.ஜ.,ஏதாவது குறைகளை கண்டுபிடித்து சொல்லிவருகிறார்கள். ஆனால் மத்திய அரசு ரூ 12 ஆயிரம் கோடியில் கிராமச்சாலைகள், 20 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 30 ஆயிரம் கோடி ரூபாய் கல்விக்கடன், காமராஜர் அறிமுகப்படுத்திய மதிய உணவு திட்டம் இன்றைக்கு இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆயிரம் கோடி செலவில் 13 கோடி மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர். 2008ல் உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சியடைந்தது. அமெரிக்காவில் வங்கிகள் நிலைகுலைந்தன. இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் பாதிப்பிற்குள்ளாகின.

ஆனால் இந்தியாவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சுவிட்சர்லாந்தில் நடந்த பொருளாதார மாநாட்டில் நான் பங்கேற்ற போது இந்தியாவும், சீனாவும் மட்டும் பொருளாதார வீழ்ச்சியடையாமல் இருப்பது குறித்து என்னிடம் உலகத்தலைவர்கள் கருத்து கேட்டனர். 2008-2009 ஆண்டில் 6.7 சதவீதமாக இருந்த இந்தியாவின் வளர்ச்சி, 20009-10ம் ஆண்டில் 8 சதவீதமாக வளர்ச்சிபெற்றது. நடப்பு ஆண்டில் 9 சதவீதமாக உயரும். மாநிலங்களுக்கு மத்திய அரசு ஏராளமான நிதியை வழங்குகிறது. மாநில அரசுகள் அந்த நிதியை சொந்த நிதி போல முறையாக திட்டங்களுக்கு செலவழிக்க வேண்டும். மத்திய அரசு நிதியை சில இடங்களில் தவறாக பயன்படுத்துகிறார்கள். சோனியா, மன்மோகன், ராகுல் உள்ளிட்ட சுயநலமில்லாத தலைவர்களால் வளர்ச்சிப்பாதையில் செல்கிறது. எனவே இந்த வளர்ச்சியை யாராலும் தடுக்க இயலாது. விரைவில் தேர்தல் திருவிழா நடக்க இருப்பதால் உங்களை சந்திக்க மீண்டும் வருவேன் என ப.சிதம்பரம் பேசினார்.

மத்திய அரசு நிதியை முறையாக செலவழிக்க ப.சிதம்பரம் அறிவுரை

திருநெல்வேலி : மத்திய அரசு நிதியினை மாநில அரசுகள் சொந்த நிதி போல முறையாக செலவழிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.

நெல்லை மாவட்டம் சிவகிரியில் நேற்று இரவு காங்கிரஸ் கட்சி நடத்திய மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: 10 ஆண்டுகளுக்கு பிறகு சிவகிரிக்கு வந்துள்ளேன். 2004 பார்லிமென்ட் தேர்தலில் பாரதிய ஜனதா 137 இடங்களையும் 8 இடங்களில் அதிகமாக 145 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் பிடித்தன. அப்போதைய காங்.,அரசு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், முதியோர் உதவிதிட்டம், மாணவர்களுக்கு கல்வி கடன் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது. இதனால் 2009ல் மீண்டும் காங்.,ஆட்சியை பிடித்தது.

ஆட்சியை பிடிக்கும் கனவில் இருந்த பாரதிய ஜனதாவோ முன்பை விட குறைவான இடங்களில் வெற்றிபெற்றது. இப்போதும் பா.ஜ.,ஏதாவது குறைகளை கண்டுபிடித்து சொல்லிவருகிறார்கள். ஆனால் மத்திய அரசு ரூ 12 ஆயிரம் கோடியில் கிராமச்சாலைகள், 20 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 30 ஆயிரம் கோடி ரூபாய் கல்விக்கடன், காமராஜர் அறிமுகப்படுத்திய மதிய உணவு திட்டம் இன்றைக்கு இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆயிரம் கோடி செலவில் 13 கோடி மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர். 2008ல் உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சியடைந்தது. அமெரிக்காவில் வங்கிகள் நிலைகுலைந்தன. இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் பாதிப்பிற்குள்ளாகின.

ஆனால் இந்தியாவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சுவிட்சர்லாந்தில் நடந்த பொருளாதார மாநாட்டில் நான் பங்கேற்ற போது இந்தியாவும், சீனாவும் மட்டும் பொருளாதார வீழ்ச்சியடையாமல் இருப்பது குறித்து என்னிடம் உலகத்தலைவர்கள் கருத்து கேட்டனர். 2008-2009 ஆண்டில் 6.7 சதவீதமாக இருந்த இந்தியாவின் வளர்ச்சி, 20009-10ம் ஆண்டில் 8 சதவீதமாக வளர்ச்சிபெற்றது. நடப்பு ஆண்டில் 9 சதவீதமாக உயரும். மாநிலங்களுக்கு மத்திய அரசு ஏராளமான நிதியை வழங்குகிறது. மாநில அரசுகள் அந்த நிதியை சொந்த நிதி போல முறையாக திட்டங்களுக்கு செலவழிக்க வேண்டும். மத்திய அரசு நிதியை சில இடங்களில் தவறாக பயன்படுத்துகிறார்கள். சோனியா, மன்மோகன், ராகுல் உள்ளிட்ட சுயநலமில்லாத தலைவர்களால் வளர்ச்சிப்பாதையில் செல்கிறது. எனவே இந்த வளர்ச்சியை யாராலும் தடுக்க இயலாது. விரைவில் தேர்தல் திருவிழா நடக்க இருப்பதால் உங்களை சந்திக்க மீண்டும் வருவேன் என ப.சிதம்பரம் பேசினார்.


முக நூல்

Popular Posts