background img

புதிய வரவு

Showing posts with label Speach. Show all posts
Showing posts with label Speach. Show all posts
ரிஷிவந்தியம்:பின்தங்கிய தொகுதியான ரிஷிவந்தியத்தை, முன்மாதிரியாக மாற்ற தொடர்ந்து போராடுவேன் என, விஜயகாந்த் பேசினார்.

ரிஷிவந்தியம் தொகுதியில், விஜயகாந்த் கடந்த நான்கு நாட்களாக தங்கி கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் செய்தார். தொண்டை வலியால் அவதிப்பட்ட அவர், பல ஊர்களில் பேச முடியாமல் சைகைமூலம் பிரசாரம் செய்தார்.

நேற்று மாலை 4 மணிக்கு ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் எதிரில் அமைக்கப்பட்ட பொதுக்கூட்ட மேடையில் தன் பிரசாரத்தை முடித்து விஜயகாந்த் பேசியதாவது:ரிஷிவந்தியம் தொகுதியை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்று நான் சொல்லியாக வேண்டும். தொண்டை வலியால் அவதிப்பட்ட என்னை டாக்டர் பேசக்கூடாது என்று கூறியுள்ளார். இருப்பினும் மக்களுக்காக நான் பேசித்தான் ஆக வேண்டும். இதோ சிவனின் எதிரில் நின்று பேசுகிறேன். ரிஷிகளின் வனம் தான் ரிஷிவந்தியம். இது சிவனுக்கு உகந்த இடம்.ஆனால், இத்தொகுதியில் சிவராஜ் செய்வது அட்டூழியமாக உள்ளது. நான் பிரசாரத்திற்காக சென்ற இடமெல்லாம் எந்த சாலையும் சரியில்லை. ஐந்து முறை சிவராஜ் எம்.எல்.ஏ., என்று கூறுகிறார்களே இந்த தொகுதிக்காக என்ன செய்தார்?ரிஷிவந்தியத்தை முன்மாதிரியாக மாற்றுவதற்காகவே போட்டியிடுகிறேன். இதற்காக நான் தொடர்ந்து போராடுவேன். சாதனையை சொல்லி ஓட்டு கேட்காமல் இரவுநேரத்தில் வந்து 500 ரூபாய் தந்து ஓட்டுகேட்கும் நிலையில் சிவராஜ் உள்ளார்.

காங்., கட்சி கருணாநிதியுடன் கூட்டணி வைத்துள்ளதே, உருப்பட முடியுமா; வீல் சேரில் உட்கார்ந்து கொண்டு தமிழகத்தையே வீல்சேரில் கருணாநிதி உட்கார வைத்து விட்டார். ஊழல் செய்வதற்கு மட்டும் அவருக்கு உடலும் உள்ளமும் சோர்வடைவதில்லை. வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று நான் பேசுபவன். வழவழ கொழகொழவென்று பேசப்பிடிக்காது. எனக்கு மூன்று ஆண்டுகள், "டைம்' கொடுங்கள் மணலூர்பேட்டையில் தென்பெண்ணை ஆற்றில் பாலம், ஆர்கவாடி பாலம் உள்ளிட்டவற்றை நிறைவேற்றி காட்டுகிறேன்.சனி என்பது கருணாநிதி, பிணி என்பது ஸ்டாலின். இவர்களுக்கு தேர்தலில் பாடம் புகட்டுவேன். காடுவெட்டி குரு என்றால் எனக்கு பயமா; யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

விழுப்புரத்தில் பேசிய ஸ்டாலின், மக்கள் காலில் விழுகிறேன் என்று கூறினார். ஏன், இத்தனை நாள் செய்த சாதனைகள் எடுபடவில்லையா? நேற்று முன்தினம் 200 ரூபாய், நேற்று 500 ரூபாய் என்று ஓட்டுக்கு பணம் கொடுக்கின்றனர். இதை தேர்தல் கமிஷன் வேடிக்கை பார்க்கிறது.பெரியாரை பற்றி பேசும் கருணாநிதி, தனது தோளில் உள்ள மஞ்சள் துண்டு, சிவப்பு கல் மோதிரத்தை கழட்டி போடுவாரா?சுனாமியால் அடித்துச் செல்லப்பட்ட ஊராக ரிஷிவந்தியம் உள்ளது. மூன்று பாலம், இணைப்பு சாலை, மாணவர்கள் பள்ளிக்கு செல்ல பஸ்வசதி இவைகளை செய்துவிட்டுத்தான் அனைத்து கிராமத்திற்கும் நான் வருவேன்.அத்தியாவசியப் பொருட்களை பார்த்து பார்த்து நாம் வாங்குகிறோம், வாழ்க்கைக்கு உபயோகப்படும் கட்சியை கவனமுடன் பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டாமா? இந்த தொகுதியை முன்னேற்ற உங்களின் ஆதரவை தர வேண்டும்.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.மாலை 4.38 மணிக்கு தனது பேச்சை முடித்துக் கொண்டு விஜயகாந்த் புறப்பட்டு சென்றார்.

கருணாநிதி தமிழகத்தையே வீல் சேரில்உட்கார வைத்து விட்டார்: விஜயகாந்த்

ரிஷிவந்தியம்:பின்தங்கிய தொகுதியான ரிஷிவந்தியத்தை, முன்மாதிரியாக மாற்ற தொடர்ந்து போராடுவேன் என, விஜயகாந்த் பேசினார்.

ரிஷிவந்தியம் தொகுதியில், விஜயகாந்த் கடந்த நான்கு நாட்களாக தங்கி கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் செய்தார். தொண்டை வலியால் அவதிப்பட்ட அவர், பல ஊர்களில் பேச முடியாமல் சைகைமூலம் பிரசாரம் செய்தார்.

நேற்று மாலை 4 மணிக்கு ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் எதிரில் அமைக்கப்பட்ட பொதுக்கூட்ட மேடையில் தன் பிரசாரத்தை முடித்து விஜயகாந்த் பேசியதாவது:ரிஷிவந்தியம் தொகுதியை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்று நான் சொல்லியாக வேண்டும். தொண்டை வலியால் அவதிப்பட்ட என்னை டாக்டர் பேசக்கூடாது என்று கூறியுள்ளார். இருப்பினும் மக்களுக்காக நான் பேசித்தான் ஆக வேண்டும். இதோ சிவனின் எதிரில் நின்று பேசுகிறேன். ரிஷிகளின் வனம் தான் ரிஷிவந்தியம். இது சிவனுக்கு உகந்த இடம்.ஆனால், இத்தொகுதியில் சிவராஜ் செய்வது அட்டூழியமாக உள்ளது. நான் பிரசாரத்திற்காக சென்ற இடமெல்லாம் எந்த சாலையும் சரியில்லை. ஐந்து முறை சிவராஜ் எம்.எல்.ஏ., என்று கூறுகிறார்களே இந்த தொகுதிக்காக என்ன செய்தார்?ரிஷிவந்தியத்தை முன்மாதிரியாக மாற்றுவதற்காகவே போட்டியிடுகிறேன். இதற்காக நான் தொடர்ந்து போராடுவேன். சாதனையை சொல்லி ஓட்டு கேட்காமல் இரவுநேரத்தில் வந்து 500 ரூபாய் தந்து ஓட்டுகேட்கும் நிலையில் சிவராஜ் உள்ளார்.

காங்., கட்சி கருணாநிதியுடன் கூட்டணி வைத்துள்ளதே, உருப்பட முடியுமா; வீல் சேரில் உட்கார்ந்து கொண்டு தமிழகத்தையே வீல்சேரில் கருணாநிதி உட்கார வைத்து விட்டார். ஊழல் செய்வதற்கு மட்டும் அவருக்கு உடலும் உள்ளமும் சோர்வடைவதில்லை. வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று நான் பேசுபவன். வழவழ கொழகொழவென்று பேசப்பிடிக்காது. எனக்கு மூன்று ஆண்டுகள், "டைம்' கொடுங்கள் மணலூர்பேட்டையில் தென்பெண்ணை ஆற்றில் பாலம், ஆர்கவாடி பாலம் உள்ளிட்டவற்றை நிறைவேற்றி காட்டுகிறேன்.சனி என்பது கருணாநிதி, பிணி என்பது ஸ்டாலின். இவர்களுக்கு தேர்தலில் பாடம் புகட்டுவேன். காடுவெட்டி குரு என்றால் எனக்கு பயமா; யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

விழுப்புரத்தில் பேசிய ஸ்டாலின், மக்கள் காலில் விழுகிறேன் என்று கூறினார். ஏன், இத்தனை நாள் செய்த சாதனைகள் எடுபடவில்லையா? நேற்று முன்தினம் 200 ரூபாய், நேற்று 500 ரூபாய் என்று ஓட்டுக்கு பணம் கொடுக்கின்றனர். இதை தேர்தல் கமிஷன் வேடிக்கை பார்க்கிறது.பெரியாரை பற்றி பேசும் கருணாநிதி, தனது தோளில் உள்ள மஞ்சள் துண்டு, சிவப்பு கல் மோதிரத்தை கழட்டி போடுவாரா?சுனாமியால் அடித்துச் செல்லப்பட்ட ஊராக ரிஷிவந்தியம் உள்ளது. மூன்று பாலம், இணைப்பு சாலை, மாணவர்கள் பள்ளிக்கு செல்ல பஸ்வசதி இவைகளை செய்துவிட்டுத்தான் அனைத்து கிராமத்திற்கும் நான் வருவேன்.அத்தியாவசியப் பொருட்களை பார்த்து பார்த்து நாம் வாங்குகிறோம், வாழ்க்கைக்கு உபயோகப்படும் கட்சியை கவனமுடன் பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டாமா? இந்த தொகுதியை முன்னேற்ற உங்களின் ஆதரவை தர வேண்டும்.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.மாலை 4.38 மணிக்கு தனது பேச்சை முடித்துக் கொண்டு விஜயகாந்த் புறப்பட்டு சென்றார்.

கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் தனக்கு 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைக்கும் என்று, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் மேலும் கூறியதாவது, கொளத்தூர் தொகுதியில் என்னை மக்கள் சிறப்பாக வரவேற்றனர். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கொளத்தூர் தொகுதி புதிதாக உருவானது.

அந்த தொகுதியில் முதல் முதலாக, முதன் முறையாக நான் வேட்பாளராக போட்டியிடுவதும் மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களுக்கு நான் நல்லது செய்வேன் என்று நம்பிக்கை இருக்கிறது. மேயராக இருந்து, அமைச்சராக இருந்து, துணை முதல் அமைச்சராக இருந்து பணியாற்றியதை மக்கள் பார்த்தார்கள். ஆகையால் குறைந்தது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றார்.

50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைக்கும்: மு.க.ஸ்டாலின்

கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் தனக்கு 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைக்கும் என்று, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் மேலும் கூறியதாவது, கொளத்தூர் தொகுதியில் என்னை மக்கள் சிறப்பாக வரவேற்றனர். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கொளத்தூர் தொகுதி புதிதாக உருவானது.

அந்த தொகுதியில் முதல் முதலாக, முதன் முறையாக நான் வேட்பாளராக போட்டியிடுவதும் மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களுக்கு நான் நல்லது செய்வேன் என்று நம்பிக்கை இருக்கிறது. மேயராக இருந்து, அமைச்சராக இருந்து, துணை முதல் அமைச்சராக இருந்து பணியாற்றியதை மக்கள் பார்த்தார்கள். ஆகையால் குறைந்தது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றார்.

ஓசூர்: ஊழலை ஒழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பாஜகவிற்கு வாக்களியுங்கள் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

சட்டசபை தேர்தலையொட்டி ஓசூரில் பாஜக சார்பில் போட்டியிடும் பாலகிருஷ்ணனை ஆதரித்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது,

நாட்டின் சில மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றாலும் நாடு முழுவதும் அதே பேச்சு தான். நாட்டில் தற்போது அனைவரும் ஊழலை பற்றியே தான் விவாதம் செய்கின்றனர். இளைய சமுதாயத்தினர் ஊழலை எதிர்த்து போராடத் துவங்கியுள்ளனர். நான் குஜராத்தில் இருக்கையில் கடந்த 1975-ம் ஆண்டில் அப்போதைய இளை சமுதாயத்தினர் ஊழலை எதிர்த்து போராடியதால் அந்த அரசு அகற்றப்பட்டது. மக்களின் போராட்டம் மூலமாக மட்டும் தான் ஊழல் அரசை அகற்ற முடியும். அதற்காக நமக்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஊழல் அரசியல்வாதிகளை அகற்றாவிட்டால் முன்னேற்றம் கிடையாது.

தற்போதைய அரசியல் சூழலில் எதுவும் நடக்கும் என்ற நிலை உள்ளது. நான் 3-வது முறையாக குஜராத் முதல்வராக உள்ளேன். அங்கு சிறு குற்றங்கள் கூட கிடையாது. ஊழல் இல்லாத அரசு நடத்த முடியும், பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படுத்த முடியும் என்று கொண்டு வந்து முன் உதாரணமாக எனது மாநிலத்தை வைத்துள்ளேன்.

தமிழகத்தை ஊழல் ஒரு பக்கம், குடும்ப அரசியல் மறு பக்கம் பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. இவற்றை உடனே அகற்ற வேண்டும்.

தமிழகத்தில் பாஜக அமோக வெற்றி பெறுமா என்று கேட்கிறார்கள். ஒரு மனிதன் நினைத்தால் கூட மாற்றத்தை கொண்டு வர முடியும். அதற்கு சிறந்த உதாரணம் அன்னா ஹசாரே. ஊழலை எதிர்த்து தனி மனிதராய் போராடி வரலாறு படைத்துள்ளார். நீங்கள் பாலகிருஷ்ணனை தேர்ந்தெடுத்தால் ஊழலை அகற்ற முடியும் என்று என்னால் உறுதியாகக் கூற முடியும்.

ஊழலை எதிர்த்து போராடுபவன் நான். இங்குள்ள அரசு மக்களுக்கு குடிநீர் கொடுக்கவில்லை ஆனால் டிவி கொடுக்கிறது. டிவியைப் பார்த்தால் தாகம் தீர்ந்து விடுமா?

குஜராத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் பஞ்சம் இருந்தது. நிலத்தடி நீர் ஆதாரம் இல்லை. ஆனால் இன்று அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் வெளிப்படையான, ஊழலற்ற, நேர்மையான நிர்வாகம் நடந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் வளர்ச்சி என்றாலும், விமர்சினம் என்றாலும் குஜராத்தை குறிப்பிடுகிறார்கள். அன்னா ஹசாரே போன்று நாம் ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கத் தேவையில்லை.

மாறாக வரும் சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிப்பதன் மூலம் ஊழலை ஒழி்க்க முடியும். தமிழகத்தின் எதிர்காலத்தை மனதில் வைத்து வாக்களியுங்கள் என்றார்.

தமிழகத்தை குடும்ப அரசியல் பாடாய் படுத்துகிறது-நரேந்திர மோடி

ஓசூர்: ஊழலை ஒழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பாஜகவிற்கு வாக்களியுங்கள் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

சட்டசபை தேர்தலையொட்டி ஓசூரில் பாஜக சார்பில் போட்டியிடும் பாலகிருஷ்ணனை ஆதரித்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது,

நாட்டின் சில மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றாலும் நாடு முழுவதும் அதே பேச்சு தான். நாட்டில் தற்போது அனைவரும் ஊழலை பற்றியே தான் விவாதம் செய்கின்றனர். இளைய சமுதாயத்தினர் ஊழலை எதிர்த்து போராடத் துவங்கியுள்ளனர். நான் குஜராத்தில் இருக்கையில் கடந்த 1975-ம் ஆண்டில் அப்போதைய இளை சமுதாயத்தினர் ஊழலை எதிர்த்து போராடியதால் அந்த அரசு அகற்றப்பட்டது. மக்களின் போராட்டம் மூலமாக மட்டும் தான் ஊழல் அரசை அகற்ற முடியும். அதற்காக நமக்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஊழல் அரசியல்வாதிகளை அகற்றாவிட்டால் முன்னேற்றம் கிடையாது.

தற்போதைய அரசியல் சூழலில் எதுவும் நடக்கும் என்ற நிலை உள்ளது. நான் 3-வது முறையாக குஜராத் முதல்வராக உள்ளேன். அங்கு சிறு குற்றங்கள் கூட கிடையாது. ஊழல் இல்லாத அரசு நடத்த முடியும், பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படுத்த முடியும் என்று கொண்டு வந்து முன் உதாரணமாக எனது மாநிலத்தை வைத்துள்ளேன்.

தமிழகத்தை ஊழல் ஒரு பக்கம், குடும்ப அரசியல் மறு பக்கம் பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. இவற்றை உடனே அகற்ற வேண்டும்.

தமிழகத்தில் பாஜக அமோக வெற்றி பெறுமா என்று கேட்கிறார்கள். ஒரு மனிதன் நினைத்தால் கூட மாற்றத்தை கொண்டு வர முடியும். அதற்கு சிறந்த உதாரணம் அன்னா ஹசாரே. ஊழலை எதிர்த்து தனி மனிதராய் போராடி வரலாறு படைத்துள்ளார். நீங்கள் பாலகிருஷ்ணனை தேர்ந்தெடுத்தால் ஊழலை அகற்ற முடியும் என்று என்னால் உறுதியாகக் கூற முடியும்.

ஊழலை எதிர்த்து போராடுபவன் நான். இங்குள்ள அரசு மக்களுக்கு குடிநீர் கொடுக்கவில்லை ஆனால் டிவி கொடுக்கிறது. டிவியைப் பார்த்தால் தாகம் தீர்ந்து விடுமா?

குஜராத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் பஞ்சம் இருந்தது. நிலத்தடி நீர் ஆதாரம் இல்லை. ஆனால் இன்று அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் வெளிப்படையான, ஊழலற்ற, நேர்மையான நிர்வாகம் நடந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் வளர்ச்சி என்றாலும், விமர்சினம் என்றாலும் குஜராத்தை குறிப்பிடுகிறார்கள். அன்னா ஹசாரே போன்று நாம் ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கத் தேவையில்லை.

மாறாக வரும் சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிப்பதன் மூலம் ஊழலை ஒழி்க்க முடியும். தமிழகத்தின் எதிர்காலத்தை மனதில் வைத்து வாக்களியுங்கள் என்றார்.

சென்னை: தேர்தலுக்கு பின் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஆட்சி அமைக்க தயாராக இருப்பதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

கூட்டணி ஆட்சியில் தவறு ஏதும் இல்லை என்று கூறியுள்ள அவர், தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிதான் நியாயமான தீர்வாக அமையும் என்று கூறியுள்ளார்.

ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டியில்,

நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால், என்னை திமுக மீண்டும் முதல்வராக தேர்வு செய்தால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு நான் தான் முதலமைச்சராக பொறுப்பு வகிப்பேன். கூட்டணி ஆட்சியில் எந்தத் தவறும் இல்லை. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நிலவுகின்ற சூழலுக்கு ஏற்ப அது அமையும். தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிதான் நியாயமான தீர்வாக இருக்கும் என்றார்.

இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிகமான சீட்டுக்கள் வழங்கப்பட்டதால் திமுக ஒரு நெருக்கடியான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகி்றதே என்ற கேள்விக்கு, அதில் உண்மை இருக்கலாம். ஆயினும் அது பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் சிபிஐயால் விசாரிக்கப்பட்டது பற்றி எனக்கு எந்தவித வருத்தமோ, ஆட்சேபனையோ கிடையாது. இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை தேவை என்பதே என்னுடைய விருப்பம்.

தேர்தல் ஆணையர் குரேஷி ஆரம்பத்திலிருந்தே மோதல் போக்கைதான் கடைப்பிடித்து வருகிறார். தற்போதைய தேர்தல் நடவடிக்கைகளை மீறி அவர் தன்னுடைய அதிகாரத்தை காட்ட முயல்கிறார். ஒரு முதலமைச்சர் பொதுப்பணித்துறை விருந்தினர் விடுதியில் தங்க முடியாதா? இதிலிருந்தே யார் யாருக்கு அவர் சவால் விடுகிறார் என்று தெரியவில்லையா? என்றார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியோ, அதன் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியோ தங்களது தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுகவை தாக்கி பேசவே இல்லையே என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள கருணாநிதி, அது அவர்களுடைய பண்பாட்டை காட்டுகிறது என்று கூறியுள்ளார்.

திமுக கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்கள் ஒதுக்க நிர்ப்பந்தம் அளிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, நான் நெருக்குதல்களுக்கு அடிப்பணிவதில்லை. நிலவுகின்ற சூழலுக்கு ஏற்ப நான் முடிவுகளை எடுக்கிறேன்.

திமுக ஆட்சியின் இலவச திட்டங்கள் எல்லாம் உங்களுடைய குடும்ப வருமானத்தை பெருக்குவதற்காக தீட்டப்பட்டவை என்று ஜெயலலிதா குற்றம் சாட்டி வருகிறாரே என்ற கேள்விக்கு, ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுக்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை மக்கள் அறிவார்கள். மக்கள் நல திட்டங்களால் முதலமைச்சர் குடும்பம் மட்டுமா பயன் அடைந்துள்ளது. எங்களுடைய ஒவ்வொரு திட்டத்தாலும் லட்சக்கணக்கான குடும்பங்கள் பயன்பெற்றிருக்கிறார்கள். நான் ஒரு வெற்றிகரமான திரைப்பட வசனக் கர்த்தா என்ற முறையில் நான் ஈட்டிய வருமானத்தை அறப்பணிகளுக்காகவும், ஏழைகளுக்காகவும் வழங்கி இருக்கிறேனே தவிர என்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு அல்ல என்று கூறி்யுள்ளார் கருணாநிதி.

திருவாரூரில் இன்று கருணாநிதி பிரசாரம்:

இந் நிலையில் தான் போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் கருணாநிதி இன்று பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

திருக்கண்ணமங்கை, மணக்கால் உள்ளிட்ட இடங்களில் கருணாநிதி பிரசாரம் செய்தார்.

இன்று மாலை 3.30 மணி அளவில் திருவாரூர் தொகுதியில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்துடன் முதல்வர் தன் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி

சென்னை: தேர்தலுக்கு பின் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஆட்சி அமைக்க தயாராக இருப்பதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

கூட்டணி ஆட்சியில் தவறு ஏதும் இல்லை என்று கூறியுள்ள அவர், தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிதான் நியாயமான தீர்வாக அமையும் என்று கூறியுள்ளார்.

ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டியில்,

நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால், என்னை திமுக மீண்டும் முதல்வராக தேர்வு செய்தால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு நான் தான் முதலமைச்சராக பொறுப்பு வகிப்பேன். கூட்டணி ஆட்சியில் எந்தத் தவறும் இல்லை. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நிலவுகின்ற சூழலுக்கு ஏற்ப அது அமையும். தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிதான் நியாயமான தீர்வாக இருக்கும் என்றார்.

இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிகமான சீட்டுக்கள் வழங்கப்பட்டதால் திமுக ஒரு நெருக்கடியான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகி்றதே என்ற கேள்விக்கு, அதில் உண்மை இருக்கலாம். ஆயினும் அது பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் சிபிஐயால் விசாரிக்கப்பட்டது பற்றி எனக்கு எந்தவித வருத்தமோ, ஆட்சேபனையோ கிடையாது. இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை தேவை என்பதே என்னுடைய விருப்பம்.

தேர்தல் ஆணையர் குரேஷி ஆரம்பத்திலிருந்தே மோதல் போக்கைதான் கடைப்பிடித்து வருகிறார். தற்போதைய தேர்தல் நடவடிக்கைகளை மீறி அவர் தன்னுடைய அதிகாரத்தை காட்ட முயல்கிறார். ஒரு முதலமைச்சர் பொதுப்பணித்துறை விருந்தினர் விடுதியில் தங்க முடியாதா? இதிலிருந்தே யார் யாருக்கு அவர் சவால் விடுகிறார் என்று தெரியவில்லையா? என்றார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியோ, அதன் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியோ தங்களது தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுகவை தாக்கி பேசவே இல்லையே என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள கருணாநிதி, அது அவர்களுடைய பண்பாட்டை காட்டுகிறது என்று கூறியுள்ளார்.

திமுக கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்கள் ஒதுக்க நிர்ப்பந்தம் அளிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, நான் நெருக்குதல்களுக்கு அடிப்பணிவதில்லை. நிலவுகின்ற சூழலுக்கு ஏற்ப நான் முடிவுகளை எடுக்கிறேன்.

திமுக ஆட்சியின் இலவச திட்டங்கள் எல்லாம் உங்களுடைய குடும்ப வருமானத்தை பெருக்குவதற்காக தீட்டப்பட்டவை என்று ஜெயலலிதா குற்றம் சாட்டி வருகிறாரே என்ற கேள்விக்கு, ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுக்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை மக்கள் அறிவார்கள். மக்கள் நல திட்டங்களால் முதலமைச்சர் குடும்பம் மட்டுமா பயன் அடைந்துள்ளது. எங்களுடைய ஒவ்வொரு திட்டத்தாலும் லட்சக்கணக்கான குடும்பங்கள் பயன்பெற்றிருக்கிறார்கள். நான் ஒரு வெற்றிகரமான திரைப்பட வசனக் கர்த்தா என்ற முறையில் நான் ஈட்டிய வருமானத்தை அறப்பணிகளுக்காகவும், ஏழைகளுக்காகவும் வழங்கி இருக்கிறேனே தவிர என்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு அல்ல என்று கூறி்யுள்ளார் கருணாநிதி.

திருவாரூரில் இன்று கருணாநிதி பிரசாரம்:

இந் நிலையில் தான் போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் கருணாநிதி இன்று பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

திருக்கண்ணமங்கை, மணக்கால் உள்ளிட்ட இடங்களில் கருணாநிதி பிரசாரம் செய்தார்.

இன்று மாலை 3.30 மணி அளவில் திருவாரூர் தொகுதியில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்துடன் முதல்வர் தன் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

ஆம்பூர் & உளுந்தூர்பேட்டை: அதிமுக கூட்டணியில் நேற்று இருந்தவர்கள் இன்று இல்லை, அதன்படி வைகோவும் இப்போது இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

ஆம்பூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜெ.விஜய் இளஞ்செழியனை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்கையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இது பலமான கூட்டணி.

அதிமுக கூட்டணியில் நேற்று இருந்தவர்கள் இன்று இல்லை. வைகோவும் இப்போது இல்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை. திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் ஒரே கொள்கை. அது இந்தியா மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டுமென நினைப்பது தான்.

திமுக தலைவர் கருணாநிதி கடுமையான உழைப்பாளி. பொருளாதார மேதையும் கூட. ஏழை, எளிய மக்களின் தேவையை அறிந்தவர். அதனால் தான் இலவசங்களை வழங்கினார். வரும் தேர்தலிலும் மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார். அவற்றை நிச்சயம் வழங்குவார்.

கடந்த அதிமுக ஆட்சியில் யானைகள் மீது தான் ஜெயலலிதா அக்கறை காட்டினார். மக்கள் மீது அக்கறை காட்டவில்லை. ஆனால் கருணாநிதிக்கு எப்பொழுதும் மக்கள் மீது அக்கறை உண்டு. யாருக்கு வாக்களிக்க வேண்டுமென சிந்தித்து செயல்பட வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் தான் மக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்க முடியும் என்றார்.

ஏமாற்றம் தந்த ஜெயலலிதா ஆட்சி-வாசன்:

மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முதல்வர் கருணாநிதிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து பேசுகையில்,

திமுக ஆட்சியில் பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் வேதனையையும், சோதனையையும், ஏமாற்றத்தையும் மக்களுக்கு அளித்தார்கள். உங்களுடைய வாக்கு வளர்ச்சிக்காக இருக்க வேண்டுமே தவிர, வீழ்ச்சிக்காக இருக்கக் கூடாது.

முதல்வர் கருணாநிதி மூத்த அரசியல் தலைவர். மதவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மதச்சார்பின்மைக்கு தோள் கொடுத்தவர். திருவாரூரில் மாணவராக வலம் வந்த முதல்வர், இன்று தமிழகத்தின் பெரும் தலைவராக உருவாகியுள்ளார்.

இதுவரை 11 முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் கருணாநிதி, தற்போது 12 வது முறையாக திருவாரூரில் போட்டியிடுகிறார். தமிழகத்தில் திமுக ஆட்சியில், மத்திய அரசு உதவியுடன் ஏராளமானத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதற்கெல்லாம் காரணம் மத்திய, மாநில அரசுகளின் இணக்கமான போக்குதான் என்றார்.

துரோகம் செய்தவர் ஜெயலலிதா-திருமா:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உளுந்தூர்பேட்டை தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் மு.முகமது யூசுப்பை ஆதரித்து வாக்குச் சேகரித்தார்.

அப்போது பேசுகையில், 2006ல் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தபோது, நமது கட்சியினருக்கு ஒருசில இடங்களை ஒதுக்கிவிட்டு, அந்த இடங்களில் நம்மை கேட்காமலேயே அதிமுக வேட்பாளர்களை அறிவித்து கூட்டணிக் கட்சியிலிருந்து வெளியேற்றி நம்மை அழிக்க துரோகம் செய்தவர்தான் ஜெயலலிதா.

ஆனால் அப்போது முதல்வர் கருணாநிதி நமது கட்சியினருக்கு ஆதரவு கரம் நீட்டி அவரது வேட்பாளருக்கு அறிவித்த ஒரு சில இடங்களை வாபஸ் பெற்று நமது கட்சியினருக்கு பதவிகளை வாரி வழங்கி பெருமை செய்தவர்.

சிட்டுக் குருவிகளுக்குக்கூட வீடு இருக்கிறது. ஆனால் மனிதர்களாகிய இவர்களுக்குச் சொந்தமாக வீடுகள் இல்லை. இவர்களுக்கு குடிசை வீடுகளை அகற்றி காரை வீடுகள் வழங்கியவர் முதல்வர் கருணாநிதி.

ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் செய்த சாதனை என்னவென்றால் அவர்களுக்குப் பிடிக்காதவர்களை சிறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதுதான் சாதனை. ஜெயலலிதாவையே நம்பியிருந்த அண்ணன் வைகோவை நம்பவைத்து கழுத்தை அறுத்துவிட்டார். அவருக்கு செய்தது பச்சை துரோகம் என்றார்.

'வைகோவை நம்ப வைத்து கழுத்தை அறுத்த ஜெ'-திருமாவளவன் தாக்கு

ஆம்பூர் & உளுந்தூர்பேட்டை: அதிமுக கூட்டணியில் நேற்று இருந்தவர்கள் இன்று இல்லை, அதன்படி வைகோவும் இப்போது இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

ஆம்பூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜெ.விஜய் இளஞ்செழியனை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்கையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இது பலமான கூட்டணி.

அதிமுக கூட்டணியில் நேற்று இருந்தவர்கள் இன்று இல்லை. வைகோவும் இப்போது இல்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை. திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் ஒரே கொள்கை. அது இந்தியா மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டுமென நினைப்பது தான்.

திமுக தலைவர் கருணாநிதி கடுமையான உழைப்பாளி. பொருளாதார மேதையும் கூட. ஏழை, எளிய மக்களின் தேவையை அறிந்தவர். அதனால் தான் இலவசங்களை வழங்கினார். வரும் தேர்தலிலும் மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார். அவற்றை நிச்சயம் வழங்குவார்.

கடந்த அதிமுக ஆட்சியில் யானைகள் மீது தான் ஜெயலலிதா அக்கறை காட்டினார். மக்கள் மீது அக்கறை காட்டவில்லை. ஆனால் கருணாநிதிக்கு எப்பொழுதும் மக்கள் மீது அக்கறை உண்டு. யாருக்கு வாக்களிக்க வேண்டுமென சிந்தித்து செயல்பட வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் தான் மக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்க முடியும் என்றார்.

ஏமாற்றம் தந்த ஜெயலலிதா ஆட்சி-வாசன்:

மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முதல்வர் கருணாநிதிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து பேசுகையில்,

திமுக ஆட்சியில் பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் வேதனையையும், சோதனையையும், ஏமாற்றத்தையும் மக்களுக்கு அளித்தார்கள். உங்களுடைய வாக்கு வளர்ச்சிக்காக இருக்க வேண்டுமே தவிர, வீழ்ச்சிக்காக இருக்கக் கூடாது.

முதல்வர் கருணாநிதி மூத்த அரசியல் தலைவர். மதவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மதச்சார்பின்மைக்கு தோள் கொடுத்தவர். திருவாரூரில் மாணவராக வலம் வந்த முதல்வர், இன்று தமிழகத்தின் பெரும் தலைவராக உருவாகியுள்ளார்.

இதுவரை 11 முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் கருணாநிதி, தற்போது 12 வது முறையாக திருவாரூரில் போட்டியிடுகிறார். தமிழகத்தில் திமுக ஆட்சியில், மத்திய அரசு உதவியுடன் ஏராளமானத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதற்கெல்லாம் காரணம் மத்திய, மாநில அரசுகளின் இணக்கமான போக்குதான் என்றார்.

துரோகம் செய்தவர் ஜெயலலிதா-திருமா:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உளுந்தூர்பேட்டை தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் மு.முகமது யூசுப்பை ஆதரித்து வாக்குச் சேகரித்தார்.

அப்போது பேசுகையில், 2006ல் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தபோது, நமது கட்சியினருக்கு ஒருசில இடங்களை ஒதுக்கிவிட்டு, அந்த இடங்களில் நம்மை கேட்காமலேயே அதிமுக வேட்பாளர்களை அறிவித்து கூட்டணிக் கட்சியிலிருந்து வெளியேற்றி நம்மை அழிக்க துரோகம் செய்தவர்தான் ஜெயலலிதா.

ஆனால் அப்போது முதல்வர் கருணாநிதி நமது கட்சியினருக்கு ஆதரவு கரம் நீட்டி அவரது வேட்பாளருக்கு அறிவித்த ஒரு சில இடங்களை வாபஸ் பெற்று நமது கட்சியினருக்கு பதவிகளை வாரி வழங்கி பெருமை செய்தவர்.

சிட்டுக் குருவிகளுக்குக்கூட வீடு இருக்கிறது. ஆனால் மனிதர்களாகிய இவர்களுக்குச் சொந்தமாக வீடுகள் இல்லை. இவர்களுக்கு குடிசை வீடுகளை அகற்றி காரை வீடுகள் வழங்கியவர் முதல்வர் கருணாநிதி.

ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் செய்த சாதனை என்னவென்றால் அவர்களுக்குப் பிடிக்காதவர்களை சிறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதுதான் சாதனை. ஜெயலலிதாவையே நம்பியிருந்த அண்ணன் வைகோவை நம்பவைத்து கழுத்தை அறுத்துவிட்டார். அவருக்கு செய்தது பச்சை துரோகம் என்றார்.

முக நூல்

Popular Posts