background img

புதிய வரவு

Showing posts with label Suresh kalmadi. Show all posts
Showing posts with label Suresh kalmadi. Show all posts
புதுடில்லி: காமன்வெல்த் ஊழல் புகார் தொடர்பாக கைது செய்யப்பட்ட சுரேஷ் கல்மாடி, இந்திய ஒலிம்பிக் சங்க (ஐ.ஓ.ஏ.,) தலைவர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். புதிய தலைவராக வி.கே.மல்கோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1996ல் இந்திய ஒலிம்பிக் சங்கத்தலைவராக தேர்வு பெற்றார் சுரேஷ் கல்மாடி. தொடர்ந்து 2004 வரை பணிபுரிந்த இவர், 2004, 2008ல் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 15 ஆண்டுகளாக பணியில் இருந்து வந்தார்.
கடந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியின் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக கல்மாடி செயல்பட்டார். அப்போது, பல்வேறு வகைகளில் ஊழல் செய்ததாக இவர் மீது, 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் கல்மாடி, கைது செய்யப்பட்டார்.
ஐ.ஓ.ஏ.,யில் கல்மாடியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2012) வரை உள்ள நிலையில், தலைவர் பதவியில் இருந்து நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார். இவருக்குப் பதில் தற்போது துணைத் தலைவராக உள்ள வி.கே.மல்கோத்ரா, தற்காலிக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதுகுறித்து மல்கோத்ரா கூறுகையில்,"" சர்வதேச ஒலிம்பிக் சங்க விதிகளின் படி, தலைவர் பதவி காலியாக இருக்கக்கூடாது. இதனால், தற்காலிக தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டேன். ஐ.ஓ.ஏ.,யின் பொதுச் செயலர் ரந்திர் சிங் டில்லி வந்தபின், அவரை கலந்து ஆலோசித்து, விரைவில் நிர்வாகக்குழு கூட்டத்தை கூட்ட உள்ளோம். அதில் அனைத்து பிரச்னைகளும் விவாதிக்கப்படும்,'' என்றார்.

இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு புதிய தலைவர் *கல்மாடி அதிரடி நீக்கம்

புதுடில்லி: காமன்வெல்த் ஊழல் புகார் தொடர்பாக கைது செய்யப்பட்ட சுரேஷ் கல்மாடி, இந்திய ஒலிம்பிக் சங்க (ஐ.ஓ.ஏ.,) தலைவர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். புதிய தலைவராக வி.கே.மல்கோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1996ல் இந்திய ஒலிம்பிக் சங்கத்தலைவராக தேர்வு பெற்றார் சுரேஷ் கல்மாடி. தொடர்ந்து 2004 வரை பணிபுரிந்த இவர், 2004, 2008ல் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 15 ஆண்டுகளாக பணியில் இருந்து வந்தார்.
கடந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியின் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக கல்மாடி செயல்பட்டார். அப்போது, பல்வேறு வகைகளில் ஊழல் செய்ததாக இவர் மீது, 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் கல்மாடி, கைது செய்யப்பட்டார்.
ஐ.ஓ.ஏ.,யில் கல்மாடியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2012) வரை உள்ள நிலையில், தலைவர் பதவியில் இருந்து நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார். இவருக்குப் பதில் தற்போது துணைத் தலைவராக உள்ள வி.கே.மல்கோத்ரா, தற்காலிக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதுகுறித்து மல்கோத்ரா கூறுகையில்,"" சர்வதேச ஒலிம்பிக் சங்க விதிகளின் படி, தலைவர் பதவி காலியாக இருக்கக்கூடாது. இதனால், தற்காலிக தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டேன். ஐ.ஓ.ஏ.,யின் பொதுச் செயலர் ரந்திர் சிங் டில்லி வந்தபின், அவரை கலந்து ஆலோசித்து, விரைவில் நிர்வாகக்குழு கூட்டத்தை கூட்ட உள்ளோம். அதில் அனைத்து பிரச்னைகளும் விவாதிக்கப்படும்,'' என்றார்.

காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளை கவனித்த இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடியும், அவர் கீழ் பணியாற்றியவர்களும் ஊழலில் ஈடுபட்டது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. போட்டிகளுக்கான உப கரணங்கள் வாங்கியது, ஒளிபரப்பு உரிமை கொடுத்தது, வீரர்களுக்கு உணவு தயாரிக்க ஒப்பந்தம் விட்டது உள்பட எல்லாவற்றிலும் சுரேஷ்கல்மாடி பணத்தை சுருட்டி உள்ளார்.

காமன்வெல்த் ஊழல் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். போட்டி அமைப்பு குழு அலுவலகங்கள் மற்றும் அதிகாரிகளின் வீடுகளில் சி.பி.ஐ. அதிரடி வேட்டை நடத்தி ஏராளமான ஆவணங்களை கைப்பற்றியது. அவற்றை ஆய்வு செய்த போது ரூ. 2 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதையடுத்து போட்டி அமைப்புக்குழு நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சுரேஷ்கல்மாடி அனுமதி கொடுத்ததன் பேரில் நடந்து கொண்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இதனால் சி.பி.ஐ. பார்வை சுரேஷ்கல்மாடி மீது திரும்பி உள்ளது.

கடந்த ஒரு மாதமாகவே சுரேஷ்கல்மாடி கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியானபடி உள்ளது. இந்த நிலையில் சுரேஷ் கல்மாடி நேற்று முன்தினம் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், காமன்வெல்த்தில் ஊழல் குறித்து மத்திய மந்திரிகளிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறி இருந்தார். டெல்லி முதல்-மந்திரி ஷீலாதீட்சித்தையும் கடுமையாக தாக்கி இருந்தார். இது மத்திய அரசில் அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்த சுரேஷ் கல்மாடியை கைது செய்யும் நடவடிக்கையை சி.பி.ஐ. தீவிரப்படுத்தி உள்ளதாக தெரிய வந்துள்ளது. ராஞ்சியில் இன்று மாலை தேசிய விளையாட்டு நிறைவு விழா நடக்கிறது. அது முடிந்ததும் சுரேஷ்கல்மாடி எந்த நேரத்திலும் கைதாவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

காமன்வெல்த் ஊழல்: சுரேஷ்கல்மாடி இன்று கைது?

காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளை கவனித்த இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடியும், அவர் கீழ் பணியாற்றியவர்களும் ஊழலில் ஈடுபட்டது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. போட்டிகளுக்கான உப கரணங்கள் வாங்கியது, ஒளிபரப்பு உரிமை கொடுத்தது, வீரர்களுக்கு உணவு தயாரிக்க ஒப்பந்தம் விட்டது உள்பட எல்லாவற்றிலும் சுரேஷ்கல்மாடி பணத்தை சுருட்டி உள்ளார்.

காமன்வெல்த் ஊழல் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். போட்டி அமைப்பு குழு அலுவலகங்கள் மற்றும் அதிகாரிகளின் வீடுகளில் சி.பி.ஐ. அதிரடி வேட்டை நடத்தி ஏராளமான ஆவணங்களை கைப்பற்றியது. அவற்றை ஆய்வு செய்த போது ரூ. 2 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதையடுத்து போட்டி அமைப்புக்குழு நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சுரேஷ்கல்மாடி அனுமதி கொடுத்ததன் பேரில் நடந்து கொண்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இதனால் சி.பி.ஐ. பார்வை சுரேஷ்கல்மாடி மீது திரும்பி உள்ளது.

கடந்த ஒரு மாதமாகவே சுரேஷ்கல்மாடி கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியானபடி உள்ளது. இந்த நிலையில் சுரேஷ் கல்மாடி நேற்று முன்தினம் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், காமன்வெல்த்தில் ஊழல் குறித்து மத்திய மந்திரிகளிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறி இருந்தார். டெல்லி முதல்-மந்திரி ஷீலாதீட்சித்தையும் கடுமையாக தாக்கி இருந்தார். இது மத்திய அரசில் அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்த சுரேஷ் கல்மாடியை கைது செய்யும் நடவடிக்கையை சி.பி.ஐ. தீவிரப்படுத்தி உள்ளதாக தெரிய வந்துள்ளது. ராஞ்சியில் இன்று மாலை தேசிய விளையாட்டு நிறைவு விழா நடக்கிறது. அது முடிந்ததும் சுரேஷ்கல்மாடி எந்த நேரத்திலும் கைதாவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

34-வது தேசிய விளை யாட்டுப் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடை பெற்று வருகிறது. இதன் நிறைவு விழா இன்று மாலை நடக்கிறது. இந்த நிறைவு விழாவில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அஜய் மக்கான் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது அவர் நிறைவு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க முடிவு செய்துள்ளார். பாராளுமன்ற கூட்ட தொடர் காரணமாக அவர் நிறைவு விழாவில் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியை நடத்தும் அமைப்பாளர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது. இதனால் தனது பெயருக்கு களங்கம் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அவர் இந்த விழாவை புறக்கணிக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் நிறைவு விழாவில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் சுரேஷ்கல்மாடி பங்கேற்கிறார். அவருடன் நெருங்கி அமர்வது அல்லது நெருக்கமாக பேசுவது போன்ற சூழல் ஏற்படும். இதன் காரணமாக அஜய்மக்கான் தேசிய விளையாட்டு நிறைவு விழாவை புறக்கணிக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

அஜய் மக்கான் சமீபத்தில் தான் மத்திய விளையாட்டுத் துறை மந்திரியாக பொறுப் பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய போட்டி நிறைவு விழா: மத்திய விளையாட்டு மந்திரி புறக்கணிக்க முடிவு; கல்மாடி பங்கேற்பதால் தயக்கம்

34-வது தேசிய விளை யாட்டுப் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடை பெற்று வருகிறது. இதன் நிறைவு விழா இன்று மாலை நடக்கிறது. இந்த நிறைவு விழாவில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அஜய் மக்கான் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது அவர் நிறைவு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க முடிவு செய்துள்ளார். பாராளுமன்ற கூட்ட தொடர் காரணமாக அவர் நிறைவு விழாவில் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியை நடத்தும் அமைப்பாளர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது. இதனால் தனது பெயருக்கு களங்கம் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அவர் இந்த விழாவை புறக்கணிக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் நிறைவு விழாவில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் சுரேஷ்கல்மாடி பங்கேற்கிறார். அவருடன் நெருங்கி அமர்வது அல்லது நெருக்கமாக பேசுவது போன்ற சூழல் ஏற்படும். இதன் காரணமாக அஜய்மக்கான் தேசிய விளையாட்டு நிறைவு விழாவை புறக்கணிக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

அஜய் மக்கான் சமீபத்தில் தான் மத்திய விளையாட்டுத் துறை மந்திரியாக பொறுப் பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக நூல்

Popular Posts