background img

புதிய வரவு

Showing posts with label commonwealth. Show all posts
Showing posts with label commonwealth. Show all posts
புதுடில்லி: காமன்வெல்த் ஊழல் புகார் தொடர்பாக கைது செய்யப்பட்ட சுரேஷ் கல்மாடி, இந்திய ஒலிம்பிக் சங்க (ஐ.ஓ.ஏ.,) தலைவர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். புதிய தலைவராக வி.கே.மல்கோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1996ல் இந்திய ஒலிம்பிக் சங்கத்தலைவராக தேர்வு பெற்றார் சுரேஷ் கல்மாடி. தொடர்ந்து 2004 வரை பணிபுரிந்த இவர், 2004, 2008ல் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 15 ஆண்டுகளாக பணியில் இருந்து வந்தார்.
கடந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியின் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக கல்மாடி செயல்பட்டார். அப்போது, பல்வேறு வகைகளில் ஊழல் செய்ததாக இவர் மீது, 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் கல்மாடி, கைது செய்யப்பட்டார்.
ஐ.ஓ.ஏ.,யில் கல்மாடியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2012) வரை உள்ள நிலையில், தலைவர் பதவியில் இருந்து நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார். இவருக்குப் பதில் தற்போது துணைத் தலைவராக உள்ள வி.கே.மல்கோத்ரா, தற்காலிக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதுகுறித்து மல்கோத்ரா கூறுகையில்,"" சர்வதேச ஒலிம்பிக் சங்க விதிகளின் படி, தலைவர் பதவி காலியாக இருக்கக்கூடாது. இதனால், தற்காலிக தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டேன். ஐ.ஓ.ஏ.,யின் பொதுச் செயலர் ரந்திர் சிங் டில்லி வந்தபின், அவரை கலந்து ஆலோசித்து, விரைவில் நிர்வாகக்குழு கூட்டத்தை கூட்ட உள்ளோம். அதில் அனைத்து பிரச்னைகளும் விவாதிக்கப்படும்,'' என்றார்.

இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு புதிய தலைவர் *கல்மாடி அதிரடி நீக்கம்

புதுடில்லி: காமன்வெல்த் ஊழல் புகார் தொடர்பாக கைது செய்யப்பட்ட சுரேஷ் கல்மாடி, இந்திய ஒலிம்பிக் சங்க (ஐ.ஓ.ஏ.,) தலைவர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். புதிய தலைவராக வி.கே.மல்கோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1996ல் இந்திய ஒலிம்பிக் சங்கத்தலைவராக தேர்வு பெற்றார் சுரேஷ் கல்மாடி. தொடர்ந்து 2004 வரை பணிபுரிந்த இவர், 2004, 2008ல் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 15 ஆண்டுகளாக பணியில் இருந்து வந்தார்.
கடந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியின் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக கல்மாடி செயல்பட்டார். அப்போது, பல்வேறு வகைகளில் ஊழல் செய்ததாக இவர் மீது, 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் கல்மாடி, கைது செய்யப்பட்டார்.
ஐ.ஓ.ஏ.,யில் கல்மாடியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2012) வரை உள்ள நிலையில், தலைவர் பதவியில் இருந்து நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார். இவருக்குப் பதில் தற்போது துணைத் தலைவராக உள்ள வி.கே.மல்கோத்ரா, தற்காலிக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதுகுறித்து மல்கோத்ரா கூறுகையில்,"" சர்வதேச ஒலிம்பிக் சங்க விதிகளின் படி, தலைவர் பதவி காலியாக இருக்கக்கூடாது. இதனால், தற்காலிக தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டேன். ஐ.ஓ.ஏ.,யின் பொதுச் செயலர் ரந்திர் சிங் டில்லி வந்தபின், அவரை கலந்து ஆலோசித்து, விரைவில் நிர்வாகக்குழு கூட்டத்தை கூட்ட உள்ளோம். அதில் அனைத்து பிரச்னைகளும் விவாதிக்கப்படும்,'' என்றார்.

‌ெ‌ல்‌லி‌‌யி‌ல் நடைபெ‌ற்ற காம‌‌ன்வெ‌ல்‌‌த் போ‌ட்டி‌யி‌ல் நடைபெ‌ற்ற ஊழ‌ல் கு‌றி‌த்து அமை‌க்க‌ப்ப‌ட்ட ‌விசாரணை குழு ‌பிரதம‌ரிட‌ம் அ‌றி‌க்கை தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ளது.

டெல்லியில் கடந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகளை தொலை‌க்கா‌ட்‌சிக‌ளி‌ல் ஒளிபரப்ப உரிமை வழங்கியதில் ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்டது.

இது பற்றி ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய, ஆடிட்டர் ஜெனரல் வி.கே.சுங்லு தலைமையிலான கமிட்டி ஒ‌ன்று அமைக்கப்பட்டது.

இந்த கமிட்டி நட‌த்‌திய விசாரணை‌யி‌ன் அடி‌ப்படை‌யி‌ல், பிரதமர் மன்மோகன் சிங்கிடம், 236 பக்க இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்து இருக்கிறது.

அதில், காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஒளிபரப்பு உரிமை வழங்கியதில், அய‌ல்நாட்டு நிறுவனத்துக்கு பிரசார் பாரதி, தூர்தர்ஷன் அதிகாரிகள் சலுகை காட்டினார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

காமன்வெல்த் ஊழ‌‌ல்: ‌பிரதம‌ரிட‌ம் அறிக்கை தாக்கல்

‌ெ‌ல்‌லி‌‌யி‌ல் நடைபெ‌ற்ற காம‌‌ன்வெ‌ல்‌‌த் போ‌ட்டி‌யி‌ல் நடைபெ‌ற்ற ஊழ‌ல் கு‌றி‌த்து அமை‌க்க‌ப்ப‌ட்ட ‌விசாரணை குழு ‌பிரதம‌ரிட‌ம் அ‌றி‌க்கை தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ளது.

டெல்லியில் கடந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகளை தொலை‌க்கா‌ட்‌சிக‌ளி‌ல் ஒளிபரப்ப உரிமை வழங்கியதில் ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்டது.

இது பற்றி ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய, ஆடிட்டர் ஜெனரல் வி.கே.சுங்லு தலைமையிலான கமிட்டி ஒ‌ன்று அமைக்கப்பட்டது.

இந்த கமிட்டி நட‌த்‌திய விசாரணை‌யி‌ன் அடி‌ப்படை‌யி‌ல், பிரதமர் மன்மோகன் சிங்கிடம், 236 பக்க இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்து இருக்கிறது.

அதில், காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஒளிபரப்பு உரிமை வழங்கியதில், அய‌ல்நாட்டு நிறுவனத்துக்கு பிரசார் பாரதி, தூர்தர்ஷன் அதிகாரிகள் சலுகை காட்டினார்கள் என்று கூறப்பட்டுள்ளது.


புதுடில்லி: காமன்வெல்த் போட்டிக்கான ஒப்பந்தங்கள் பெற்ற, ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் பாக்கி தொகை செலுத்த வேண்டியுள்ளது. இவை வழக்கு தொடுக்க முடிவு செய்திருப்பதால் பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதற்கு 10 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மேகன் உறுதி அளித்துள்ளார்.
டில்லியில் கடந்த ஆண்டு(அக்., 3-14) காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடந்தது. இப்போட்டிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ. 70 ஆயிரம் கோடி நிதியில் பெருமளவு ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை, சி.பி.ஐ., உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.
தற்போது, இப்போட்டிக்கான ஒப்பந்தக்காரர்களுக்கு முழுத் தொகை செலுத்தப்படாதது தெரிய வந்துள்ளது. துவக்க மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சியை நடத்த ஒப்பந்தம் பெற்ற ரிச் பர்ச் ஸ்பெக்டக், வாணவேடிக்கைக்கான ஏற்பாடுகளை செய்த ஹாவர்டு சன்ஸ் உள்ளிட்ட நான்கு ஆஸ்திரேலிய நிறுவனங்கள் தங்களுக்கான தொகை முழுமையாக வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளன. பாக்கி தொகையை வசூலிக்க வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக ஆஸ்திரேலியா சென்றுள்ள மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் முறைப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒப்பந்தக்காரர்களுக்கான பாக்கி தொகை வழங்குவது பற்றி 10 நாட்களில் தீர்வு காணப்படும் என மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மேகன் தெரிவித்தார். இது குறித்து இவர் கூறுகையில்,""போட்டிகள் முடிந்து மூன்று மாதங்களாகியும், ஒப்பந்த தொகை வழங்கப்படவில்லை. இப்பிரச்னை இனியும் நீடிக்க விரும்பவில்லை. மிக விரைவில் தீர்வு காணப்படும். மத்திய விளையாட்டு செயலருடன் விவாதித்தேன். ஒருங்கிணைப்பு கமிட்டி நிர்வாகிகளிடம் பாக்கி தொகை குறித்து ஆய்வு செய்யும்படி அறிவுறுத்தியுள்ளேன். 10 நாட்களுக்குள் பாக்கி தொகையை செலுத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளேன்,''என்றார்.
இது தொடர்பாக, போட்டி ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் சுரேஷ் கல்மாடி கூறுகையில்,""சில நிறுவனங்கள் முறைப்படி செயல்படவில்லை. எனவே, கடைசி கட்ட தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து இறுதி அறிக்கை கிடைத்த பின் பாக்கி தொகை வழங்கப்படும். பர்ச் நிறுவனத்துக்கு 90 சதவீத தொகை வழங்கப்பட்டு விட்டது. ஹாவர்டு சன்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டது. இதில், வரி தொடர்பான விளக்கம் தேவைப்பட்டதால் தான் பாக்கி தொகை நிறுத்தப்பட்டது,''என்றார்.

காமன்வெல்த் ஒப்பந்த பிரச்னை: 10 நாளில் தீர்வு: மத்திய அமைச்சர் உறுதி


புதுடில்லி: காமன்வெல்த் போட்டிக்கான ஒப்பந்தங்கள் பெற்ற, ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் பாக்கி தொகை செலுத்த வேண்டியுள்ளது. இவை வழக்கு தொடுக்க முடிவு செய்திருப்பதால் பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதற்கு 10 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மேகன் உறுதி அளித்துள்ளார்.
டில்லியில் கடந்த ஆண்டு(அக்., 3-14) காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடந்தது. இப்போட்டிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ. 70 ஆயிரம் கோடி நிதியில் பெருமளவு ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை, சி.பி.ஐ., உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.
தற்போது, இப்போட்டிக்கான ஒப்பந்தக்காரர்களுக்கு முழுத் தொகை செலுத்தப்படாதது தெரிய வந்துள்ளது. துவக்க மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சியை நடத்த ஒப்பந்தம் பெற்ற ரிச் பர்ச் ஸ்பெக்டக், வாணவேடிக்கைக்கான ஏற்பாடுகளை செய்த ஹாவர்டு சன்ஸ் உள்ளிட்ட நான்கு ஆஸ்திரேலிய நிறுவனங்கள் தங்களுக்கான தொகை முழுமையாக வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளன. பாக்கி தொகையை வசூலிக்க வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக ஆஸ்திரேலியா சென்றுள்ள மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் முறைப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒப்பந்தக்காரர்களுக்கான பாக்கி தொகை வழங்குவது பற்றி 10 நாட்களில் தீர்வு காணப்படும் என மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மேகன் தெரிவித்தார். இது குறித்து இவர் கூறுகையில்,""போட்டிகள் முடிந்து மூன்று மாதங்களாகியும், ஒப்பந்த தொகை வழங்கப்படவில்லை. இப்பிரச்னை இனியும் நீடிக்க விரும்பவில்லை. மிக விரைவில் தீர்வு காணப்படும். மத்திய விளையாட்டு செயலருடன் விவாதித்தேன். ஒருங்கிணைப்பு கமிட்டி நிர்வாகிகளிடம் பாக்கி தொகை குறித்து ஆய்வு செய்யும்படி அறிவுறுத்தியுள்ளேன். 10 நாட்களுக்குள் பாக்கி தொகையை செலுத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளேன்,''என்றார்.
இது தொடர்பாக, போட்டி ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் சுரேஷ் கல்மாடி கூறுகையில்,""சில நிறுவனங்கள் முறைப்படி செயல்படவில்லை. எனவே, கடைசி கட்ட தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து இறுதி அறிக்கை கிடைத்த பின் பாக்கி தொகை வழங்கப்படும். பர்ச் நிறுவனத்துக்கு 90 சதவீத தொகை வழங்கப்பட்டு விட்டது. ஹாவர்டு சன்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டது. இதில், வரி தொடர்பான விளக்கம் தேவைப்பட்டதால் தான் பாக்கி தொகை நிறுத்தப்பட்டது,''என்றார்.

முக நூல்

Popular Posts