background img

புதிய வரவு

Showing posts with label Indian. Show all posts
Showing posts with label Indian. Show all posts
புதுடில்லி: "உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் ஜாகிர் கானுக்கு, அர்ஜுனா விருது வழங்கவேண்டும்,' என, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) பரிந்துரை செய்துள்ளது.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான். கடந்த சில ஆண்டுகளாக பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் இவர், சமீபத்திய உலக கோப்பை தொடரில், 21 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.
இவருக்கு விளையாட்டு பிரிவில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருது வழங்க, பி.சி.சி.சி., மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதற்கு முன் இவ்விருதை முன்னாள் வீரர்கள் சலீம் துரானி, மன்சூர் அலி கான் பட்டோடி, விஜய் மஞ்ச்ரேக்கர், தற்போதைய சேவக், காம்பிர், ஹர்பஜன் சிங், சச்சின் போன்ற வீரர்கள் பெற்றுள்ளனர்.

ஜாகிர் கானுக்கு விருது

புதுடில்லி: "உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் ஜாகிர் கானுக்கு, அர்ஜுனா விருது வழங்கவேண்டும்,' என, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) பரிந்துரை செய்துள்ளது.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான். கடந்த சில ஆண்டுகளாக பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் இவர், சமீபத்திய உலக கோப்பை தொடரில், 21 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.
இவருக்கு விளையாட்டு பிரிவில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருது வழங்க, பி.சி.சி.சி., மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதற்கு முன் இவ்விருதை முன்னாள் வீரர்கள் சலீம் துரானி, மன்சூர் அலி கான் பட்டோடி, விஜய் மஞ்ச்ரேக்கர், தற்போதைய சேவக், காம்பிர், ஹர்பஜன் சிங், சச்சின் போன்ற வீரர்கள் பெற்றுள்ளனர்.

புதுடில்லி: காமன்வெல்த் ஊழல் புகார் தொடர்பாக கைது செய்யப்பட்ட சுரேஷ் கல்மாடி, இந்திய ஒலிம்பிக் சங்க (ஐ.ஓ.ஏ.,) தலைவர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். புதிய தலைவராக வி.கே.மல்கோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1996ல் இந்திய ஒலிம்பிக் சங்கத்தலைவராக தேர்வு பெற்றார் சுரேஷ் கல்மாடி. தொடர்ந்து 2004 வரை பணிபுரிந்த இவர், 2004, 2008ல் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 15 ஆண்டுகளாக பணியில் இருந்து வந்தார்.
கடந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியின் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக கல்மாடி செயல்பட்டார். அப்போது, பல்வேறு வகைகளில் ஊழல் செய்ததாக இவர் மீது, 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் கல்மாடி, கைது செய்யப்பட்டார்.
ஐ.ஓ.ஏ.,யில் கல்மாடியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2012) வரை உள்ள நிலையில், தலைவர் பதவியில் இருந்து நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார். இவருக்குப் பதில் தற்போது துணைத் தலைவராக உள்ள வி.கே.மல்கோத்ரா, தற்காலிக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதுகுறித்து மல்கோத்ரா கூறுகையில்,"" சர்வதேச ஒலிம்பிக் சங்க விதிகளின் படி, தலைவர் பதவி காலியாக இருக்கக்கூடாது. இதனால், தற்காலிக தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டேன். ஐ.ஓ.ஏ.,யின் பொதுச் செயலர் ரந்திர் சிங் டில்லி வந்தபின், அவரை கலந்து ஆலோசித்து, விரைவில் நிர்வாகக்குழு கூட்டத்தை கூட்ட உள்ளோம். அதில் அனைத்து பிரச்னைகளும் விவாதிக்கப்படும்,'' என்றார்.

இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு புதிய தலைவர் *கல்மாடி அதிரடி நீக்கம்

புதுடில்லி: காமன்வெல்த் ஊழல் புகார் தொடர்பாக கைது செய்யப்பட்ட சுரேஷ் கல்மாடி, இந்திய ஒலிம்பிக் சங்க (ஐ.ஓ.ஏ.,) தலைவர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். புதிய தலைவராக வி.கே.மல்கோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1996ல் இந்திய ஒலிம்பிக் சங்கத்தலைவராக தேர்வு பெற்றார் சுரேஷ் கல்மாடி. தொடர்ந்து 2004 வரை பணிபுரிந்த இவர், 2004, 2008ல் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 15 ஆண்டுகளாக பணியில் இருந்து வந்தார்.
கடந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியின் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக கல்மாடி செயல்பட்டார். அப்போது, பல்வேறு வகைகளில் ஊழல் செய்ததாக இவர் மீது, 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் கல்மாடி, கைது செய்யப்பட்டார்.
ஐ.ஓ.ஏ.,யில் கல்மாடியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2012) வரை உள்ள நிலையில், தலைவர் பதவியில் இருந்து நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார். இவருக்குப் பதில் தற்போது துணைத் தலைவராக உள்ள வி.கே.மல்கோத்ரா, தற்காலிக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதுகுறித்து மல்கோத்ரா கூறுகையில்,"" சர்வதேச ஒலிம்பிக் சங்க விதிகளின் படி, தலைவர் பதவி காலியாக இருக்கக்கூடாது. இதனால், தற்காலிக தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டேன். ஐ.ஓ.ஏ.,யின் பொதுச் செயலர் ரந்திர் சிங் டில்லி வந்தபின், அவரை கலந்து ஆலோசித்து, விரைவில் நிர்வாகக்குழு கூட்டத்தை கூட்ட உள்ளோம். அதில் அனைத்து பிரச்னைகளும் விவாதிக்கப்படும்,'' என்றார்.

துபாய்: டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் இந்திய அணிக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,)ரூ. 78 லட்சம் பரிசு அறிவித்துள்ளது.
சர்வதேச ரேங்கிங் பட்டியலில் முன்னணியில் இருக்கும் அணிகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும், ஐ.சி.சி., பரிசு வழங்கி வருகிறது. தற்போது டெஸ்ட் ரேங்கிங்கில் இந்திய அணி கடந்த 2009 முதல் "நம்பர்-1' (128 புள்ளி) இடத்தில் இருந்து வருகிறது. இதனால் இந்திய டெஸ்ட் அணிக்கு, இந்த ஆண்டு ரூ. 78 லட்சம் பரிசு கிடைக்கவுள்ளது. இரண்டாவது (117) இடத்தில் உள்ள தென் ஆப்ரிக்க அணிக்கு, ரூ. 33 லட்சம் தரப்படவுள்ளது.
இதேபோல, ஒருநாள் ரேங்கிங்கில் இரண்டாவது (121 புள்ளி) இடத்திலுள்ள இந்திய அணிக்கு ரூ. 33 லட்சம் கிடைக்கும். முதலிடத்தில் (129) இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு ரூ. 78 லட்சம் கிடைக்கும்.

இந்திய அணிக்கு ரூ. 78 லட்சம்

துபாய்: டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் இந்திய அணிக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,)ரூ. 78 லட்சம் பரிசு அறிவித்துள்ளது.
சர்வதேச ரேங்கிங் பட்டியலில் முன்னணியில் இருக்கும் அணிகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும், ஐ.சி.சி., பரிசு வழங்கி வருகிறது. தற்போது டெஸ்ட் ரேங்கிங்கில் இந்திய அணி கடந்த 2009 முதல் "நம்பர்-1' (128 புள்ளி) இடத்தில் இருந்து வருகிறது. இதனால் இந்திய டெஸ்ட் அணிக்கு, இந்த ஆண்டு ரூ. 78 லட்சம் பரிசு கிடைக்கவுள்ளது. இரண்டாவது (117) இடத்தில் உள்ள தென் ஆப்ரிக்க அணிக்கு, ரூ. 33 லட்சம் தரப்படவுள்ளது.
இதேபோல, ஒருநாள் ரேங்கிங்கில் இரண்டாவது (121 புள்ளி) இடத்திலுள்ள இந்திய அணிக்கு ரூ. 33 லட்சம் கிடைக்கும். முதலிடத்தில் (129) இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு ரூ. 78 லட்சம் கிடைக்கும்.

முக நூல்

Popular Posts