background img

புதிய வரவு

Showing posts with label sachin tendulgar. Show all posts
Showing posts with label sachin tendulgar. Show all posts
பிப்ரவரி 19ஆம் தேதி துவங்கவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய வெற்றியில் சச்சின் டெண்டுல்கரின் பங்களிப்பு மிக முக்கியமானது என்று 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற 'கபில்ஸ் டெவில்ஸ்' அணியின் முன்னாள் மித வேகப்பந்து வீச்சாளர் பல்வீந்தர் சிங் சாந்து தெரிவித்துள்ளார்.

1983ஆம் ஆண்டு உலக சாம்பியனான கபில்தேவ் தலைமை இந்திய அணியைக் காட்டிலும் தற்போது மகேந்திர சிங் தலைமை இந்திய அணி அனுபவம், திறமை இரண்டிலும் சிறப்பாகவே உள்ளது.

மேலும் தோல்வி பெறும் நிலையிலிருந்து வெற்றிக்கு ஆட்டத்தைத் திருப்பும் யுவ்ராஜ், யூசுஃப் பத்தான், தோனி ஆகியோர் அணியில் இருக்கின்றனர்.

டெண்டுல்கர் தற்போது இந்த உலகக் கோப்பையை வெல்வதில்தான் தன் முழு கவனத்தையும் செலுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

அவர் நன்றாகத் தன்னைத் தயார் செய்து கொள்வார், அவர் எப்போதும் உழைப்பதில் வல்லவர். இவ்வாறு பல்வீந்தர் சிங் சாந்து கூறியுள்ளார்.

வெற்றிக்கு சச்சினின் பங்கு முக்கியமானது - சாந்து

பிப்ரவரி 19ஆம் தேதி துவங்கவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய வெற்றியில் சச்சின் டெண்டுல்கரின் பங்களிப்பு மிக முக்கியமானது என்று 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற 'கபில்ஸ் டெவில்ஸ்' அணியின் முன்னாள் மித வேகப்பந்து வீச்சாளர் பல்வீந்தர் சிங் சாந்து தெரிவித்துள்ளார்.

1983ஆம் ஆண்டு உலக சாம்பியனான கபில்தேவ் தலைமை இந்திய அணியைக் காட்டிலும் தற்போது மகேந்திர சிங் தலைமை இந்திய அணி அனுபவம், திறமை இரண்டிலும் சிறப்பாகவே உள்ளது.

மேலும் தோல்வி பெறும் நிலையிலிருந்து வெற்றிக்கு ஆட்டத்தைத் திருப்பும் யுவ்ராஜ், யூசுஃப் பத்தான், தோனி ஆகியோர் அணியில் இருக்கின்றனர்.

டெண்டுல்கர் தற்போது இந்த உலகக் கோப்பையை வெல்வதில்தான் தன் முழு கவனத்தையும் செலுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

அவர் நன்றாகத் தன்னைத் தயார் செய்து கொள்வார், அவர் எப்போதும் உழைப்பதில் வல்லவர். இவ்வாறு பல்வீந்தர் சிங் சாந்து கூறியுள்ளார்.

மும்பை: ""கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக டெஸ்ட் அரங்கில் தோனி தலைமையிலான இந்திய அணி "நம்பர்-1' இடத்தில் உள்ளது. இதில், இடம் பெற்றிருப்பது மிகவும் பெருமையாக உள்ளது,''
என, சச்சின் தெரிவித்துள்ளார்.


ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ரன்கள், டெஸ்டில் 50 சதம் அடித்து அசத்தியவர் இந்திய சாதனை பேட்ஸ்மேன் சச்சின். இவருக்கு இந்த ஆண்டின் சிறந்த இந்திய வீரர் மற்றும் ஸ்பெஷல் டெஸ்ட் வீரர் என்ற விருதை, "காஸ்டிரால்' நிறுவனம் வழங்கியது. இதற்கு முன் கடந்த 2009ல், இதே நிறுவனம் வழங்கிய சிறந்த டெஸ்ட் வீரர் விருதும் பெற்றுள்ளார். இவர் தவிர, தோனி, ஹர்பஜன், டிராவிட், யூசுப் பதான் ஆகியோரும் விருது பெற்றனர். விழாவில் பங்கேற்ற சச்சின் கூறியது:


இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியை தோற்கடித்து, இந்திய அணி "நம்பர்-1' டெஸ்ட் அணி என்ற அந்தஸ்தை முதன் முதலாக பெற்றது. அப்போது, இது 30 அல்லது 40 நாட்களுக்குத் தான் நீடிக்கும் என்று, பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர். அடுத்து வந்த தென் ஆப்ரிக்க தொடரில் முதல் டெஸ்டில் தோல்வியடைந்தோம். உடனே "நம்பர்-1' இடம் பறிபோகும் என்றனர். ஆனால், இப்போது ஒரு ஆண்டுக்கும் மேலாக இதே இடத்தில் நீடிக்கிறோம்.
இந்த இடத்தை பெறுவது என்பது அவ்வளவு எளிதல்ல. இதற்காக பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளோம். கடினமாக உழைத்துள்ளோம். பயிற்சியாளர் கிறிஸ்டனும் அணியில் வியக்கத்தக்க வகையில் மாற்றம் கொண்டு வந்தார். கடந்த 2007க்கு பின் அணியில் உள்ள அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இத்தகைய அணியில் இருப்பதை மிகவும் பெருமையாக கருதுகிறேன்.


வயது தடையல்ல:
இதுவரை நான்கு முறை காயத்துக்கு "ஆப்பரேஷன்' செய்துள்ளேன். இந்த நேரத்தில் அணியில் வருவதும், போவதுமாக இருந்தேன். பின் 2007க்குப் பின் பெரிய அளவில் காயம் எதுவுமில்லாததால், மகிழ்ச்சியாக உணர்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் கிரிக்கெட்டில், நீடிக்க வயது ஒரு தடையே அல்ல. நான் 16 வயதில் போட்டிகளில் பங்கேற்க துவங்கினேன். இது போல யாரும் எந்த வயதிலும் துவங்கலாம், எவ்வளவு காலம் வேண்டுமானாலும் விளையாடலாம். ஆனால் எப்படி விளையாடுகின்றோம் என்பது தான் முக்கியம். இந்த உலக கோப்பை தொடரில் சிலவற்றை நிறைவேற்ற விரும்புகிறேன். அது என்ன என்பது எல்லோருக்கும் தெரியும்.
இவ்வாறு சச்சின் கூறினார்.

"நம்பர்-1' அணியில் இருப்பது பெருமை: சச்சின்

மும்பை: ""கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக டெஸ்ட் அரங்கில் தோனி தலைமையிலான இந்திய அணி "நம்பர்-1' இடத்தில் உள்ளது. இதில், இடம் பெற்றிருப்பது மிகவும் பெருமையாக உள்ளது,''
என, சச்சின் தெரிவித்துள்ளார்.


ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ரன்கள், டெஸ்டில் 50 சதம் அடித்து அசத்தியவர் இந்திய சாதனை பேட்ஸ்மேன் சச்சின். இவருக்கு இந்த ஆண்டின் சிறந்த இந்திய வீரர் மற்றும் ஸ்பெஷல் டெஸ்ட் வீரர் என்ற விருதை, "காஸ்டிரால்' நிறுவனம் வழங்கியது. இதற்கு முன் கடந்த 2009ல், இதே நிறுவனம் வழங்கிய சிறந்த டெஸ்ட் வீரர் விருதும் பெற்றுள்ளார். இவர் தவிர, தோனி, ஹர்பஜன், டிராவிட், யூசுப் பதான் ஆகியோரும் விருது பெற்றனர். விழாவில் பங்கேற்ற சச்சின் கூறியது:


இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியை தோற்கடித்து, இந்திய அணி "நம்பர்-1' டெஸ்ட் அணி என்ற அந்தஸ்தை முதன் முதலாக பெற்றது. அப்போது, இது 30 அல்லது 40 நாட்களுக்குத் தான் நீடிக்கும் என்று, பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர். அடுத்து வந்த தென் ஆப்ரிக்க தொடரில் முதல் டெஸ்டில் தோல்வியடைந்தோம். உடனே "நம்பர்-1' இடம் பறிபோகும் என்றனர். ஆனால், இப்போது ஒரு ஆண்டுக்கும் மேலாக இதே இடத்தில் நீடிக்கிறோம்.
இந்த இடத்தை பெறுவது என்பது அவ்வளவு எளிதல்ல. இதற்காக பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளோம். கடினமாக உழைத்துள்ளோம். பயிற்சியாளர் கிறிஸ்டனும் அணியில் வியக்கத்தக்க வகையில் மாற்றம் கொண்டு வந்தார். கடந்த 2007க்கு பின் அணியில் உள்ள அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இத்தகைய அணியில் இருப்பதை மிகவும் பெருமையாக கருதுகிறேன்.


வயது தடையல்ல:
இதுவரை நான்கு முறை காயத்துக்கு "ஆப்பரேஷன்' செய்துள்ளேன். இந்த நேரத்தில் அணியில் வருவதும், போவதுமாக இருந்தேன். பின் 2007க்குப் பின் பெரிய அளவில் காயம் எதுவுமில்லாததால், மகிழ்ச்சியாக உணர்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் கிரிக்கெட்டில், நீடிக்க வயது ஒரு தடையே அல்ல. நான் 16 வயதில் போட்டிகளில் பங்கேற்க துவங்கினேன். இது போல யாரும் எந்த வயதிலும் துவங்கலாம், எவ்வளவு காலம் வேண்டுமானாலும் விளையாடலாம். ஆனால் எப்படி விளையாடுகின்றோம் என்பது தான் முக்கியம். இந்த உலக கோப்பை தொடரில் சிலவற்றை நிறைவேற்ற விரும்புகிறேன். அது என்ன என்பது எல்லோருக்கும் தெரியும்.
இவ்வாறு சச்சின் கூறினார்.

மீப காலமாக அடுத்துடுத்து சதங்களையும் இரட்டைச் சதங்களையும் அடித்து வரும் சச்சின் டெண்டுல்கர் ஐ.சி.சி. டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

நேற்று முடிந்த ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 403 ரன்கள் எடுத்தார் சச்சின் டெண்டுல்கர்.

தனது 6-வது இரட்டைச் சதத்தை எடுத்த சச்சின் டெண்டுல்கர், சேவாகை சமன் செய்தார். சச்சின் டெண்டுல்கர் தற்போது 891 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார்.

சேவாக் 819 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் உள்ளார். சங்கக்காரா 874 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்தார்

மீப காலமாக அடுத்துடுத்து சதங்களையும் இரட்டைச் சதங்களையும் அடித்து வரும் சச்சின் டெண்டுல்கர் ஐ.சி.சி. டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

நேற்று முடிந்த ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 403 ரன்கள் எடுத்தார் சச்சின் டெண்டுல்கர்.

தனது 6-வது இரட்டைச் சதத்தை எடுத்த சச்சின் டெண்டுல்கர், சேவாகை சமன் செய்தார். சச்சின் டெண்டுல்கர் தற்போது 891 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார்.

சேவாக் 819 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் உள்ளார். சங்கக்காரா 874 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

கேப் டவுன்: கேப் டவுன் டெஸ்டில் அபாரமாக ஆடிய சச்சின் சதம் கடந்தார். இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் 51 வது சதம் அடித்து, மீண்டும் அசத்தினார். இவரது சதம் கைகொடுக்க இந்திய அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது. தென் ஆப்ரிக்கா சார்பில் ஸ்டைன், 5 விக்கெட் கைப்பற்றினார்.


தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. வெற்றியாளரை முடிவு செய்யும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடக்கிறது.
தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 362 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி தனது முதல் இன்னிங்சில், 2 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்திருந்தது. காம்பிர் 65, சச்சின் 49 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.


நழுவிய சதம்:நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. சச்சின், காம்பிர் ஜோடி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஸ்கோர் சீராக உயர்ந்தது. இந்த ஜோடியை பிரிக்க, தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித் செய்த, எந்த முயற்சியும் பலிக்கவில்லை. மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 176 ரன்கள் சேர்த்து சாதித்தது. இந்நிலையில் காம்பிர், 93 ரன்களுக்கு (13 பவுண்டரி) அவுட்டாகி, சதமடிக்கும் வாய்ப்பை தவற விட்டார்.


"மிடில் ஆர்டர்' சரிவு:பின் சச்சினுடன் லட்சுமண் இணைந்தார். வழக்கத்துக்கு மாறாக லட்சுமண், சற்று அதிரடியாக விளையாடினார். இவர் 15 ரன்கள் எடுத்த நிலையில், துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார். கடந்த போட்டியில் ஏமாற்றிய இளம் வீரர் புஜாரா (2), மீண்டும் சொதப்பினார். கேப்டன் தோனி "டக்' அவுட்டானார்.


சச்சின் சதம்:ஒருமுனையில் தொடர்ந்து விக்கெட் சரிந்த போதும், மறுமுனையில் சச்சின் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டிசோட்சபே ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் விளாசிய சச்சின், மார்கல் பந்தில் "மிரட்டல்' சிக்சர் அடித்து, சர்வதேச டெஸ்ட் அரங்கில் 51 வது சதத்தை எட்டினார்.


ஹர்பஜன் ஆறுதல்:சச்சினுடன் இணைந்த ஹர்பஜன், துவக்கத்தில் தடுமாறிய போதும், பின் அதிரடியில் அசத்தினார். டிசோட்சபே பந்தில் சூப்பர் சிக்சர் அடித்த இவர், ஸ்டைனின் பந்திலும் சிக்சர் விளாசினார். ஹர்பஜன் 40 ரன்கள் எடுத்து அவுட்டானர். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின் 146 ரன்கள் (17 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து, மார்கல் பந்தில் போல்டானார். இஷாந்த் (1) நிலைக்கவில்லை.
கடைசியில் ஜாகிர் கான் (23) அடித்த 2 சிக்சர் கைகொடுக்க, இந்திய அணி முதல் இன்னிங்சில் 364 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்ரீசாந்த் (4) அவுட்டாகாமல் இருந்தார். வேகத்தில் மிரட்டிய தென் ஆப்ரிக்க வீரர் ஸ்டைன், 5 விக்கெட் வீழ்த்தினார்.


இந்தியா முன்னிலை:இரண்டு ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சை துவங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் ஸ்மித், பீட்டர்சன் துவக்கம் கொடுத்தனர். ஸ்மித் 29 ரன்கள் எடுத்தார். "நைட் வாட்ச்மேன்' ஹாரிஸ் "டக்' அவுட்டானார். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 52 ரன்கள் எடுத்து இருந்தது. பீட்டர்சன் (22), அவுட்டாகாமல் இருந்தார். ஹர்பஜன் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் ஆடுகளம் சுழலுக்கு கைகொடுக்கும் என்று தெரிகிறது. இதனால் பவுலிங்கில் ஹர்பஜன் உள்ளிட்டவர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், இந்திய அணி வெற்றிக்கு முயற்சிக்கலாம்.


சச்சின் மீண்டும் அசத்தல்
சர்வதேச டெஸ்ட் அரங்கில் சமீபத்தில் 50 வது சதம் அடித்து சாதனை படைத்த சச்சின், நேற்று 51வது சதம் கடந்து (177 போட்டி), மற்றொரு சாதனை படைத்தார். தவிர, 442 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று, 46 சதம் அடித்துள்ள சச்சின், ஒட்டுமொத்தமாக 97 சதம் அடித்து அசத்தியுள்ளார்.
டெஸ்ட் அரங்கில் அதிக சதம் அடித்த, "டாப்-3' வீரர்கள்:
வீரர்/அணி போட்டி ரன்கள் சதம்
1.சச்சின் (இந்தியா) 177 14,678 51
2.காலிஸ்(தெ.ஆப்.,) 145 11,838 39
3.பாண்டிங்(ஆஸி.,) 152 12,363 39


"பெஸ்ட்' ஜோடி
நேற்று இந்தியாவின் சச்சின், காம்பிர் ஜோடி 176 ரன்கள் சேர்த்து, தென் ஆப்ரிக்க மண்ணில் 1990க்கு பின் 3வது விக்கெட்டுக்கு, அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற பெருமை பெற்றது. இதற்கு முன் ஜெயவர்தனா, சங்ககரா ஜோடி 168 ரன்கள் (2000) சேர்த்து இருந்தது. தவிர, இந்தியா சார்பிலும் 3வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற பெருமையும் பெற்றது. இதற்கு முன் டிராவிட், கங்குலி ஜோடி 84 ரன்கள் (2007) சேர்த்து இருந்தது.


"லக்கி' ஹர்பஜன்
நேற்று ஹர்பஜன் 6 ரன்கள் எடுத்திருந்த போது, தென் ஆப்ரிக்க வீரர் ஸ்டைனின் புயல் வேக பந்தை எதிர்கொண்டார். இதை அடிக்காமல் விட்டுவிட, பந்து "ஆப் ஸ்டம்பை' உரசிக்கொண்டு விக்கெட் கீப்பரிடம் சென்றது. ஹர்பஜன் "அவுட்' என எல்லோரும் துள்ளிக்குதித்தனர். ஆனால் "பைல்ஸ்' கீழே விழாததால், அதிருஷ்டவசமாக ஹர்பஜன் தப்பினார்.


காலிஸ் காயம்
கேப்டவுன் டெஸ்டின் 2வது நாளில் தென் ஆப்ரிக்க வீரர் காலிஸ், ஸ்ரீசாந்த் பந்தை எதிர்கொண்ட போது, வலது நெஞ்சில் காயம் ஏற்பட்டது. இதனால் நேற்று இவர் பீல்டிங் செய்யவரவில்லை. இவர் 2வது இன்னிங்சில் களமிறங்குவது கடினம். தவிர, முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது.


ஸ்ரீசாந்த் மீது பாட்டில் "வீச்சு'
நேற்று தென் ஆப்ரிக்க அணியின் 2வது இன்னிங்சில், மைதானத்தின் எல்லைப் பகுதியில் இந்திய வீரர் ஸ்ரீசாந்த், பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது ரசிகர்கள் இவர் மீது காலியான பாட்டில்களை கொண்டு எறிந்தனர். இதனால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது.


ஸ்கோர் போர்டு


முதல் இன்னிங்ஸ்



தென் ஆப்ரிக்கா 362


இந்தியா
காம்பிர்(கே)பவுச்சர்(ப)ஹாரிஸ் 93(222)
சேவக்(கே)ஸ்மித்(ப)ஸ்டைன் 13(20)
டிராவிட்--ரன் அவுட்(டிவிலியர்ஸ்) 5(16)
சச்சின்(ப)மார்கல் 146(314)
லட்சுமண்-ரன் அவுட்(ஹாரிஸ்) 15(19)
புஜாரா-எல்.பி.டபிள்யு.,(ப)ஸ்டைன் 2(14)
தோனி(கே)பிரின்ஸ்(ப)ஸ்டைன் 0(3)
ஹர்பஜன்(கே)சப்-டுமினி(ப)ஸ்டைன் 40(67)
ஜாகிர்(கே)பிரின்ஸ்(ப)மார்கல் 23(22)
இஷாந்த்(கே)பவுச்சர்(ப)ஸ்டைன் 1(2)
ஸ்ரீசாந்த்-அவுட் இல்லை- 4(5)
உதிரிகள் 22
மொத்தம் (117.1 ஓவரில் ஆல் அவுட்) 364
விக்கெட் வீழ்ச்சி: 1-19(சேவக்), 2-28(டிராவிட்), 3-204(காம்பிர்), 4-235(லட்சுமண்), 5-237(புஜாரா), 6-247(தோனி), 7-323(ஹர்பஜன்), 8-341(சச்சின்), 9-350(இஷாந்த்), 10-364(ஜாகிர் கான்).
பந்து வீச்சு: ஸ்டைன் 31-11-75-5, மார்கல் 29.1-7-106-2, டிசோட்சபே 26-5-82-0, ஹாரிஸ் 29-8-72-1, பீட்டர்சன் 2-0-9-0.


இரண்டாவது இன்னிங்ஸ்
தென் ஆப்ரிக்கா
ஸ்மித்--எல்.பி.டபிள்யு.,(ப)ஹர்பஜன் 29(47)
பீட்டர்சன்-அவுட் இல்லை- 22(38)
ஹாரிஸ்-எல்.பி.டபிள்யு.,(ப)ஹர்பஜன் 0(8)
ஆம்லா-அவுட் இல்லை- 0(4)
உதிரிகள் 1
மொத்தம் (16 ஓவரில் 2 விக்.,) 52
விக்கெட் வீழ்ச்சி: 1-50(ஸ்மித்), 2-52(ஹாரிஸ்).
பந்து வீச்சு: ஜாகிர் கான் 5-0-25-0, ஸ்ரீசாந்த் 5-1-20-0, இஷாந்த் சர்மா 3-0-3-0, ஹர்பஜன் 3-0-4-2.

சச்சின் 51வது சதம் * டெஸ்ட் அரங்கில் மீண்டும் அசத்தல்

கேப் டவுன்: கேப் டவுன் டெஸ்டில் அபாரமாக ஆடிய சச்சின் சதம் கடந்தார். இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் 51 வது சதம் அடித்து, மீண்டும் அசத்தினார். இவரது சதம் கைகொடுக்க இந்திய அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது. தென் ஆப்ரிக்கா சார்பில் ஸ்டைன், 5 விக்கெட் கைப்பற்றினார்.


தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. வெற்றியாளரை முடிவு செய்யும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடக்கிறது.
தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 362 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி தனது முதல் இன்னிங்சில், 2 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்திருந்தது. காம்பிர் 65, சச்சின் 49 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.


நழுவிய சதம்:நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. சச்சின், காம்பிர் ஜோடி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஸ்கோர் சீராக உயர்ந்தது. இந்த ஜோடியை பிரிக்க, தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித் செய்த, எந்த முயற்சியும் பலிக்கவில்லை. மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 176 ரன்கள் சேர்த்து சாதித்தது. இந்நிலையில் காம்பிர், 93 ரன்களுக்கு (13 பவுண்டரி) அவுட்டாகி, சதமடிக்கும் வாய்ப்பை தவற விட்டார்.


"மிடில் ஆர்டர்' சரிவு:பின் சச்சினுடன் லட்சுமண் இணைந்தார். வழக்கத்துக்கு மாறாக லட்சுமண், சற்று அதிரடியாக விளையாடினார். இவர் 15 ரன்கள் எடுத்த நிலையில், துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார். கடந்த போட்டியில் ஏமாற்றிய இளம் வீரர் புஜாரா (2), மீண்டும் சொதப்பினார். கேப்டன் தோனி "டக்' அவுட்டானார்.


சச்சின் சதம்:ஒருமுனையில் தொடர்ந்து விக்கெட் சரிந்த போதும், மறுமுனையில் சச்சின் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டிசோட்சபே ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் விளாசிய சச்சின், மார்கல் பந்தில் "மிரட்டல்' சிக்சர் அடித்து, சர்வதேச டெஸ்ட் அரங்கில் 51 வது சதத்தை எட்டினார்.


ஹர்பஜன் ஆறுதல்:சச்சினுடன் இணைந்த ஹர்பஜன், துவக்கத்தில் தடுமாறிய போதும், பின் அதிரடியில் அசத்தினார். டிசோட்சபே பந்தில் சூப்பர் சிக்சர் அடித்த இவர், ஸ்டைனின் பந்திலும் சிக்சர் விளாசினார். ஹர்பஜன் 40 ரன்கள் எடுத்து அவுட்டானர். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின் 146 ரன்கள் (17 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து, மார்கல் பந்தில் போல்டானார். இஷாந்த் (1) நிலைக்கவில்லை.
கடைசியில் ஜாகிர் கான் (23) அடித்த 2 சிக்சர் கைகொடுக்க, இந்திய அணி முதல் இன்னிங்சில் 364 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்ரீசாந்த் (4) அவுட்டாகாமல் இருந்தார். வேகத்தில் மிரட்டிய தென் ஆப்ரிக்க வீரர் ஸ்டைன், 5 விக்கெட் வீழ்த்தினார்.


இந்தியா முன்னிலை:இரண்டு ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சை துவங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் ஸ்மித், பீட்டர்சன் துவக்கம் கொடுத்தனர். ஸ்மித் 29 ரன்கள் எடுத்தார். "நைட் வாட்ச்மேன்' ஹாரிஸ் "டக்' அவுட்டானார். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 52 ரன்கள் எடுத்து இருந்தது. பீட்டர்சன் (22), அவுட்டாகாமல் இருந்தார். ஹர்பஜன் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் ஆடுகளம் சுழலுக்கு கைகொடுக்கும் என்று தெரிகிறது. இதனால் பவுலிங்கில் ஹர்பஜன் உள்ளிட்டவர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், இந்திய அணி வெற்றிக்கு முயற்சிக்கலாம்.


சச்சின் மீண்டும் அசத்தல்
சர்வதேச டெஸ்ட் அரங்கில் சமீபத்தில் 50 வது சதம் அடித்து சாதனை படைத்த சச்சின், நேற்று 51வது சதம் கடந்து (177 போட்டி), மற்றொரு சாதனை படைத்தார். தவிர, 442 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று, 46 சதம் அடித்துள்ள சச்சின், ஒட்டுமொத்தமாக 97 சதம் அடித்து அசத்தியுள்ளார்.
டெஸ்ட் அரங்கில் அதிக சதம் அடித்த, "டாப்-3' வீரர்கள்:
வீரர்/அணி போட்டி ரன்கள் சதம்
1.சச்சின் (இந்தியா) 177 14,678 51
2.காலிஸ்(தெ.ஆப்.,) 145 11,838 39
3.பாண்டிங்(ஆஸி.,) 152 12,363 39


"பெஸ்ட்' ஜோடி
நேற்று இந்தியாவின் சச்சின், காம்பிர் ஜோடி 176 ரன்கள் சேர்த்து, தென் ஆப்ரிக்க மண்ணில் 1990க்கு பின் 3வது விக்கெட்டுக்கு, அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற பெருமை பெற்றது. இதற்கு முன் ஜெயவர்தனா, சங்ககரா ஜோடி 168 ரன்கள் (2000) சேர்த்து இருந்தது. தவிர, இந்தியா சார்பிலும் 3வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற பெருமையும் பெற்றது. இதற்கு முன் டிராவிட், கங்குலி ஜோடி 84 ரன்கள் (2007) சேர்த்து இருந்தது.


"லக்கி' ஹர்பஜன்
நேற்று ஹர்பஜன் 6 ரன்கள் எடுத்திருந்த போது, தென் ஆப்ரிக்க வீரர் ஸ்டைனின் புயல் வேக பந்தை எதிர்கொண்டார். இதை அடிக்காமல் விட்டுவிட, பந்து "ஆப் ஸ்டம்பை' உரசிக்கொண்டு விக்கெட் கீப்பரிடம் சென்றது. ஹர்பஜன் "அவுட்' என எல்லோரும் துள்ளிக்குதித்தனர். ஆனால் "பைல்ஸ்' கீழே விழாததால், அதிருஷ்டவசமாக ஹர்பஜன் தப்பினார்.


காலிஸ் காயம்
கேப்டவுன் டெஸ்டின் 2வது நாளில் தென் ஆப்ரிக்க வீரர் காலிஸ், ஸ்ரீசாந்த் பந்தை எதிர்கொண்ட போது, வலது நெஞ்சில் காயம் ஏற்பட்டது. இதனால் நேற்று இவர் பீல்டிங் செய்யவரவில்லை. இவர் 2வது இன்னிங்சில் களமிறங்குவது கடினம். தவிர, முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது.


ஸ்ரீசாந்த் மீது பாட்டில் "வீச்சு'
நேற்று தென் ஆப்ரிக்க அணியின் 2வது இன்னிங்சில், மைதானத்தின் எல்லைப் பகுதியில் இந்திய வீரர் ஸ்ரீசாந்த், பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது ரசிகர்கள் இவர் மீது காலியான பாட்டில்களை கொண்டு எறிந்தனர். இதனால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது.


ஸ்கோர் போர்டு


முதல் இன்னிங்ஸ்



தென் ஆப்ரிக்கா 362


இந்தியா
காம்பிர்(கே)பவுச்சர்(ப)ஹாரிஸ் 93(222)
சேவக்(கே)ஸ்மித்(ப)ஸ்டைன் 13(20)
டிராவிட்--ரன் அவுட்(டிவிலியர்ஸ்) 5(16)
சச்சின்(ப)மார்கல் 146(314)
லட்சுமண்-ரன் அவுட்(ஹாரிஸ்) 15(19)
புஜாரா-எல்.பி.டபிள்யு.,(ப)ஸ்டைன் 2(14)
தோனி(கே)பிரின்ஸ்(ப)ஸ்டைன் 0(3)
ஹர்பஜன்(கே)சப்-டுமினி(ப)ஸ்டைன் 40(67)
ஜாகிர்(கே)பிரின்ஸ்(ப)மார்கல் 23(22)
இஷாந்த்(கே)பவுச்சர்(ப)ஸ்டைன் 1(2)
ஸ்ரீசாந்த்-அவுட் இல்லை- 4(5)
உதிரிகள் 22
மொத்தம் (117.1 ஓவரில் ஆல் அவுட்) 364
விக்கெட் வீழ்ச்சி: 1-19(சேவக்), 2-28(டிராவிட்), 3-204(காம்பிர்), 4-235(லட்சுமண்), 5-237(புஜாரா), 6-247(தோனி), 7-323(ஹர்பஜன்), 8-341(சச்சின்), 9-350(இஷாந்த்), 10-364(ஜாகிர் கான்).
பந்து வீச்சு: ஸ்டைன் 31-11-75-5, மார்கல் 29.1-7-106-2, டிசோட்சபே 26-5-82-0, ஹாரிஸ் 29-8-72-1, பீட்டர்சன் 2-0-9-0.


இரண்டாவது இன்னிங்ஸ்
தென் ஆப்ரிக்கா
ஸ்மித்--எல்.பி.டபிள்யு.,(ப)ஹர்பஜன் 29(47)
பீட்டர்சன்-அவுட் இல்லை- 22(38)
ஹாரிஸ்-எல்.பி.டபிள்யு.,(ப)ஹர்பஜன் 0(8)
ஆம்லா-அவுட் இல்லை- 0(4)
உதிரிகள் 1
மொத்தம் (16 ஓவரில் 2 விக்.,) 52
விக்கெட் வீழ்ச்சி: 1-50(ஸ்மித்), 2-52(ஹாரிஸ்).
பந்து வீச்சு: ஜாகிர் கான் 5-0-25-0, ஸ்ரீசாந்த் 5-1-20-0, இஷாந்த் சர்மா 3-0-3-0, ஹர்பஜன் 3-0-4-2.


தெண்டுல்கர் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டியில் 50-வது சதம் அடித்து வரலாற்று சாதனை ஏற்படுத்தினார். அவர் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் சேர்த்து 100 சதத்தை எட்டும் நிலையில் இருக்கிறார்.
 
அவருடைய அபார சாதனைக்கு மேலும் பெருமை அளிக்கும் வகையில் அவருக்கு நாட்டின் உயரிய விருதான “பாரத ரத்னா” விருது வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் வற்புறுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே விளையாட்டு வீரர்கள் பலர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
 
பிரபல பின்னணி பாடகிகள் லதாமங்கேஸ்கர், ஆஷா பான்ஸ்லே ஆகியோரும் தெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
 
இப்போது பிரபல “செஸ்” வீரர் ஆனந்தும் இதே கருத்தை கூறியுள்ளார். அவர் இதுபற்றி கூறியதாவது:-
 
தெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கான எல்லா தகுதிகளும் உள்ளன. எனவே அவர்ருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். அவர் மிகப் பெரிய சாதனை நிகழ்த்தி இருக்கிறார்.
 
இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன். ஒரு வீரர் மட்டும் சிறப்பாக ஆடினால் போதாது 3 அல்லது 4 வீரர்கள் சிறப்பாக ஆடி விட்டால் உலக கோப்பையை வென்று விடலாம். தெண்டுல்கர் எப்போதுமே சிறப்பாக ஆடிவருகிறார்.
 
இவ்வாறு ஆனந்த் கூறினார்.

தெண்டுல்கருக்கு “பாரத ரத்னா” விருது வழங்க வேண்டும்: “செஸ்” வீரர் ஆனந்த் வற்புறுத்தல்


தெண்டுல்கர் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டியில் 50-வது சதம் அடித்து வரலாற்று சாதனை ஏற்படுத்தினார். அவர் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் சேர்த்து 100 சதத்தை எட்டும் நிலையில் இருக்கிறார்.
 
அவருடைய அபார சாதனைக்கு மேலும் பெருமை அளிக்கும் வகையில் அவருக்கு நாட்டின் உயரிய விருதான “பாரத ரத்னா” விருது வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் வற்புறுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே விளையாட்டு வீரர்கள் பலர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
 
பிரபல பின்னணி பாடகிகள் லதாமங்கேஸ்கர், ஆஷா பான்ஸ்லே ஆகியோரும் தெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
 
இப்போது பிரபல “செஸ்” வீரர் ஆனந்தும் இதே கருத்தை கூறியுள்ளார். அவர் இதுபற்றி கூறியதாவது:-
 
தெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கான எல்லா தகுதிகளும் உள்ளன. எனவே அவர்ருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். அவர் மிகப் பெரிய சாதனை நிகழ்த்தி இருக்கிறார்.
 
இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன். ஒரு வீரர் மட்டும் சிறப்பாக ஆடினால் போதாது 3 அல்லது 4 வீரர்கள் சிறப்பாக ஆடி விட்டால் உலக கோப்பையை வென்று விடலாம். தெண்டுல்கர் எப்போதுமே சிறப்பாக ஆடிவருகிறார்.
 
இவ்வாறு ஆனந்த் கூறினார்.

முக நூல்

Popular Posts