background img

புதிய வரவு

Showing posts with label yuvaraj singh. Show all posts
Showing posts with label yuvaraj singh. Show all posts
மும்பை: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக ஆடி தொடர்நாயகன் விருது வென்ற யுவராஜ் சிங்குக்கு க்யூ5 எஸ்.யூ.வீ., காரை ஆடி கார் நிறுவனம் பரிசாக வழங்கியுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் ஆனது. 28 ஆண்டுகளுக்கு பின் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டுகளும், பரிசுகளும் குவிந்தவண்ணம் உள்ளன.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் சிறப்பாக ஆடி, ஆல்இன்ஆல் அழகு ராஜாவாக வலம் வந்த யுவராஜ் சிங்குக்கு கார் பரிசளிக்கப்போவதாக ஆடி நிறுவனம் அறிவித்தது. கார் பரிசு வழங்கும் விழா விரைவில் நடைபெறும் என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், மும்பையில் நடந்த விழாவில் க்யூ5 எஸ்.யூ.வீ., காரை யுவராஜ் சிங்குக்கு ஆடி நிறுவனம் பரிசாக வழங்கியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ரவிசாஸ்திரி மற்றும் ஆடி இந்தியா தலைவர் மைக்கேல் பெர்ச்சேகேவும் இணைந்து கார் சாவியை யுவராஜ் சிங்கிடம் வழங்கினர்.

ஆடி காரை பரிசாக பெற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய யுவராஜ் சிங்,"28 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி உலக்க்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இதை பெருமைப்படுத்தும் விதமாக ஆடி நிறுவனம் காரை எனக்கு பரிசாக வழங்கியுள்ளது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது," என்றார்.

யுவராஜ்சிங்குக்கு வழங்கப்பட்ட க்யூ5 மாடல் சொகுசு எஸ்.யூ.வீ., ரகத்தை சேர்ந்த காராகும். இந்த கார் ரூ.39 லட்சம் மதிப்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக்கோப்பை கிரிக்கெட்டில் ஜொலித்த யுவராஜுக்கு ஆடி க்யூ5 கார் பரிசு

மும்பை: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக ஆடி தொடர்நாயகன் விருது வென்ற யுவராஜ் சிங்குக்கு க்யூ5 எஸ்.யூ.வீ., காரை ஆடி கார் நிறுவனம் பரிசாக வழங்கியுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் ஆனது. 28 ஆண்டுகளுக்கு பின் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டுகளும், பரிசுகளும் குவிந்தவண்ணம் உள்ளன.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் சிறப்பாக ஆடி, ஆல்இன்ஆல் அழகு ராஜாவாக வலம் வந்த யுவராஜ் சிங்குக்கு கார் பரிசளிக்கப்போவதாக ஆடி நிறுவனம் அறிவித்தது. கார் பரிசு வழங்கும் விழா விரைவில் நடைபெறும் என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், மும்பையில் நடந்த விழாவில் க்யூ5 எஸ்.யூ.வீ., காரை யுவராஜ் சிங்குக்கு ஆடி நிறுவனம் பரிசாக வழங்கியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ரவிசாஸ்திரி மற்றும் ஆடி இந்தியா தலைவர் மைக்கேல் பெர்ச்சேகேவும் இணைந்து கார் சாவியை யுவராஜ் சிங்கிடம் வழங்கினர்.

ஆடி காரை பரிசாக பெற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய யுவராஜ் சிங்,"28 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி உலக்க்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இதை பெருமைப்படுத்தும் விதமாக ஆடி நிறுவனம் காரை எனக்கு பரிசாக வழங்கியுள்ளது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது," என்றார்.

யுவராஜ்சிங்குக்கு வழங்கப்பட்ட க்யூ5 மாடல் சொகுசு எஸ்.யூ.வீ., ரகத்தை சேர்ந்த காராகும். இந்த கார் ரூ.39 லட்சம் மதிப்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.

வதோதரா:"உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், கடைசி வரை களத்தில் இருந்து வீழ்த்த வேண்டும் என்ற, எனது நீண்ட கால கனவு நிறைவேறியது, என, இந்திய வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய துணைக்கண்டத்தில் உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன் இரண்டாவது காலிறுதி போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதில் "ஆல் ரவுண்டராக அசத்திய யுவராஜ் சிங், ஆட்ட நாயகனாக ஜொலித்தார். இதுகுறித்து யுவராஜ் சிங் கூறியது:
உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த வேண்டும். இந்த போட்டியில் நான் கடைசி வரைக்கும் களத்தில் இருக்க வேண்டும் என, கடந்த ஒரு ஆண்டாகவே கனவு கண்டேன். இப்போதைய வெற்றியின் மூலம், என்னுடைய நீண்ட கால கனவு நிறைவேறியுள்ளது.
இந்த போட்டியின் போது, உணர்ச்சியை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினமாக இருந்தது. ஏனெனில் ஒரு சிறிய தவறு செய்திருந்தாலும், உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேற வேண்டியது இருந்திருக்கும். இதனால் பந்துகளை கவனமாக கணித்து, அந்தரத்தில் தூக்கி அடிக்காதவாறு எச்சரிக்கையுடன் விளையாடினேன்.
காம்பிரிடம் மன்னிப்பு:
காம்பிருடன் இணைந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில், அவுட் துரதிருஷ்டவசமாக "ரன் அவுட் ஆனார். இது எனது தவறுதான். அவர் கூறியதை சரியாக கவனிக்கவில்லை. இதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன். காம்பிருக்குப் பின், தோனியுடன் சேர்ந்து நல்ல "பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்று நினைத்தேன்.
அணியின் வெற்றி:
இந்நிலையில் அவர் ஆட்டமிழந்தது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. பின் ரெய்னா வந்ததும், எப்படியும் 20 முதல் 30 ரன்கள் இணைந்து சேர்க்க வேண்டும். இதைக்கடந்ததும், அடுத்து அதிக நம்பிக்கை ஏற்பட்டது. போட்டியில் நான் ஆட்டநாயகன் விருது வென்றாலும், இந்த வெற்றி தனிப்பட்ட ஒருவரால் கிடைத்தது அல்ல. இது ஒட்டுமொத்த அணிக்கு கிடைத்த வெற்றி.
தற்போது "ரிலாக்ஸ்:
அரையிறுதியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் எனது மற்றொரு கனவு நிறைவேறுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடியதைப் போல, பாகிஸ்தானுக்கு எதிராகவும் விளையாட முயற்சிப்போம்.
எங்களைப் பற்றி அவர்களுக்கு நன்கு தெரியும், அதேபோல அவர்களைப் பற்றி எங்களுக்கும் தெரியும். இரு அணிகளும் சமபலத்தில் உள்ளது. மற்றபடி, அரையிறுதி குறித்து இப்போதைக்கு அதிகம் பேச விரும்பவில்லை. மிகுந்த நெருக்கடியான நிலையில் இப்போது வெற்றி பெற்றோம். இதனால் சற்று "ரிலாக்சாகி விட்டு, பின் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி குறித்து திட்டமிட உள்ளோம்.
இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.
யுவராஜ் சிங் அபாரம்
உலக கோப்பை தொடரில் 300 ரன்களும் 10 விக்கெட்டும் எடுத்து அசத்திய இரண்டாவது இந்திய "ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் ஆவார். இதற்கு முன் கபில் தேவ் 1983 உலக கோப்பை போட்டிகளில் 303 ரன்களும் 12 விக்கெட்டும் எடுத்து இருந்தார். இவர்கள் தவிர, இலங்கையில் ஜெயசூர்யா, ஜிம்பாப்வேயின் நெயில் ஜான்சன் இச்சாதனை படைத்துள்ளனர்.
* ஒருநாள் போட்டிகளில் 8000 ரன்களை கடந்த ஐந்தாவது இந்திய வீரர் யுவராஜ் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் சச்சின், கங்குலி, டிராவிட், முகமது அசார் இந்த இலக்கை எட்டியுள்ளனர்.
* ஆஸ்திரேலியாவுக்கு எதிராக யுவராஜ் சிங் சிறந்த பந்து வீச்சை (2/44) பதிவு செய்தார்.
* உலக கோப்பை தொடரில் இவர் இதுவரை 11 விக்கெட் வீழ்த்தியுள்ளார். எந்த ஒரு தொடரில் இவர் இப்படி அதிக விக்கெட் கைப்பற்றுவது இதுவே முதன் முறை.
----
இந்தியா அதிகம்
நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 261 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி எடுத்து வெற்றி பெற்றது. இது உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் இரண்டாவது அதிகபட்ச "சேசிங் ஆகும். இதற்கு முன் கடந்த 2003 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா, 276 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றிருந்தது.
---
---
இந்தியா கோப்பை வெல்லும்: பாண்டிங்
இந்திய அணியின் வெற்றி குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாண்டிங் கூறுகையில்,"" இந்திய அணி ஒருங்கிணைந்து சிறப்பாக விளையாடினர். இந்த வெற்றிக்கு அவர்களுக்கு தகுதியுள்ளது. இவர்களை தோல்வியடையச் செய்வது என்பது மிகவும் கடினம். அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி, எப்படியும் <உலக கோப்பை வெல்வார்கள். ஏனெனில் சிறப்பாக பேட்டிங் வரிசையை கொண்ட அணியாக இந்தியா உள்ளது, என்றார்.
---
யார் அந்த "ஸ்பெஷல் நபர்?
உலககோப்பை தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் யுவராஜ் சிங். இதுகுறித்து அவர் கூறுகையில்,"" இம்முறை மிகவும் "ஸ்பெஷலான ஒரு நபருக்காக விளையாடி வருகிறேன். போட்டியில் மோசமான சூழ்நிலை ஏற்படும் போதெல்லாம், அவரை நினைத்துக் கொள்வேன். உடனே நிலைமை சாதகமாக மாறி விடும், என்றார். இந்த "ஸ்பெஷல் நபர் யார் என்பதை தெரிவிக்க, யுவராஜ் மறுத்துவிட்டார். இந்தியா பைனலுக்கு முன்னேறும் பட்சத்தில், அவரைப்பற்றிய ரகசியத்தை தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
--

நீண்ட கால கனவு நிறைவேறியது * யுவராஜ் சிங் உற்சாகம்

வதோதரா:"உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், கடைசி வரை களத்தில் இருந்து வீழ்த்த வேண்டும் என்ற, எனது நீண்ட கால கனவு நிறைவேறியது, என, இந்திய வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய துணைக்கண்டத்தில் உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன் இரண்டாவது காலிறுதி போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதில் "ஆல் ரவுண்டராக அசத்திய யுவராஜ் சிங், ஆட்ட நாயகனாக ஜொலித்தார். இதுகுறித்து யுவராஜ் சிங் கூறியது:
உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த வேண்டும். இந்த போட்டியில் நான் கடைசி வரைக்கும் களத்தில் இருக்க வேண்டும் என, கடந்த ஒரு ஆண்டாகவே கனவு கண்டேன். இப்போதைய வெற்றியின் மூலம், என்னுடைய நீண்ட கால கனவு நிறைவேறியுள்ளது.
இந்த போட்டியின் போது, உணர்ச்சியை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினமாக இருந்தது. ஏனெனில் ஒரு சிறிய தவறு செய்திருந்தாலும், உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேற வேண்டியது இருந்திருக்கும். இதனால் பந்துகளை கவனமாக கணித்து, அந்தரத்தில் தூக்கி அடிக்காதவாறு எச்சரிக்கையுடன் விளையாடினேன்.
காம்பிரிடம் மன்னிப்பு:
காம்பிருடன் இணைந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில், அவுட் துரதிருஷ்டவசமாக "ரன் அவுட் ஆனார். இது எனது தவறுதான். அவர் கூறியதை சரியாக கவனிக்கவில்லை. இதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன். காம்பிருக்குப் பின், தோனியுடன் சேர்ந்து நல்ல "பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்று நினைத்தேன்.
அணியின் வெற்றி:
இந்நிலையில் அவர் ஆட்டமிழந்தது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. பின் ரெய்னா வந்ததும், எப்படியும் 20 முதல் 30 ரன்கள் இணைந்து சேர்க்க வேண்டும். இதைக்கடந்ததும், அடுத்து அதிக நம்பிக்கை ஏற்பட்டது. போட்டியில் நான் ஆட்டநாயகன் விருது வென்றாலும், இந்த வெற்றி தனிப்பட்ட ஒருவரால் கிடைத்தது அல்ல. இது ஒட்டுமொத்த அணிக்கு கிடைத்த வெற்றி.
தற்போது "ரிலாக்ஸ்:
அரையிறுதியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் எனது மற்றொரு கனவு நிறைவேறுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடியதைப் போல, பாகிஸ்தானுக்கு எதிராகவும் விளையாட முயற்சிப்போம்.
எங்களைப் பற்றி அவர்களுக்கு நன்கு தெரியும், அதேபோல அவர்களைப் பற்றி எங்களுக்கும் தெரியும். இரு அணிகளும் சமபலத்தில் உள்ளது. மற்றபடி, அரையிறுதி குறித்து இப்போதைக்கு அதிகம் பேச விரும்பவில்லை. மிகுந்த நெருக்கடியான நிலையில் இப்போது வெற்றி பெற்றோம். இதனால் சற்று "ரிலாக்சாகி விட்டு, பின் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி குறித்து திட்டமிட உள்ளோம்.
இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.
யுவராஜ் சிங் அபாரம்
உலக கோப்பை தொடரில் 300 ரன்களும் 10 விக்கெட்டும் எடுத்து அசத்திய இரண்டாவது இந்திய "ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் ஆவார். இதற்கு முன் கபில் தேவ் 1983 உலக கோப்பை போட்டிகளில் 303 ரன்களும் 12 விக்கெட்டும் எடுத்து இருந்தார். இவர்கள் தவிர, இலங்கையில் ஜெயசூர்யா, ஜிம்பாப்வேயின் நெயில் ஜான்சன் இச்சாதனை படைத்துள்ளனர்.
* ஒருநாள் போட்டிகளில் 8000 ரன்களை கடந்த ஐந்தாவது இந்திய வீரர் யுவராஜ் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் சச்சின், கங்குலி, டிராவிட், முகமது அசார் இந்த இலக்கை எட்டியுள்ளனர்.
* ஆஸ்திரேலியாவுக்கு எதிராக யுவராஜ் சிங் சிறந்த பந்து வீச்சை (2/44) பதிவு செய்தார்.
* உலக கோப்பை தொடரில் இவர் இதுவரை 11 விக்கெட் வீழ்த்தியுள்ளார். எந்த ஒரு தொடரில் இவர் இப்படி அதிக விக்கெட் கைப்பற்றுவது இதுவே முதன் முறை.
----
இந்தியா அதிகம்
நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 261 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி எடுத்து வெற்றி பெற்றது. இது உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் இரண்டாவது அதிகபட்ச "சேசிங் ஆகும். இதற்கு முன் கடந்த 2003 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா, 276 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றிருந்தது.
---
---
இந்தியா கோப்பை வெல்லும்: பாண்டிங்
இந்திய அணியின் வெற்றி குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாண்டிங் கூறுகையில்,"" இந்திய அணி ஒருங்கிணைந்து சிறப்பாக விளையாடினர். இந்த வெற்றிக்கு அவர்களுக்கு தகுதியுள்ளது. இவர்களை தோல்வியடையச் செய்வது என்பது மிகவும் கடினம். அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி, எப்படியும் <உலக கோப்பை வெல்வார்கள். ஏனெனில் சிறப்பாக பேட்டிங் வரிசையை கொண்ட அணியாக இந்தியா உள்ளது, என்றார்.
---
யார் அந்த "ஸ்பெஷல் நபர்?
உலககோப்பை தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் யுவராஜ் சிங். இதுகுறித்து அவர் கூறுகையில்,"" இம்முறை மிகவும் "ஸ்பெஷலான ஒரு நபருக்காக விளையாடி வருகிறேன். போட்டியில் மோசமான சூழ்நிலை ஏற்படும் போதெல்லாம், அவரை நினைத்துக் கொள்வேன். உடனே நிலைமை சாதகமாக மாறி விடும், என்றார். இந்த "ஸ்பெஷல் நபர் யார் என்பதை தெரிவிக்க, யுவராஜ் மறுத்துவிட்டார். இந்தியா பைனலுக்கு முன்னேறும் பட்சத்தில், அவரைப்பற்றிய ரகசியத்தை தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
--

சென்னை; ""காலிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த அதிக வாய்ப்பு உள்ளது,'' என, இந்திய வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்திய துணைக் கண்டத்தில் நடக்கிறது. லீக் சுற்று முடிந்த நிலையில், வரும் 24ம் தேதி ஆமதாபாத்தில் நடக்கவுள்ள லீக் போட்டியில் இந்திய அணி, "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. உலக கோப்பை அரங்கில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் 9 முறை மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 7, இந்தியா 2 போட்டியில் வெற்றி கண்டன. கடந்த 2003ல் நடந்த பைனலில் ஆஸ்திரேலிய அணி, கங்குலி தலைமையிலான இந்தியாவை வீழ்த்தி கோப்பை வென்றது. இருப்பினும் சமீபத்தில் பெங்களூருவில் நடந்த பயிற்சி போட்டியில் இந்தியாவிடம் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தது.
இதுகுறித்து இந்திய "ஆல்-ரவுண்டர்' யுவராஜ் சிங் கூறியதாவது: லீக் சுற்றில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் தலா 4 வெற்றியை பதிவு செய்தன. எனவே வரும் 24ம் தேதி நடக்கும் போட்டியில், முழுதிறமையை வெளிப்படுத்தும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.
ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங்கில் ஆஸ்திரேலிய அணி "நம்பர்-1' இடத்தில் உள்ளது. கடந்த மூன்று உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி, சாம்பியன் கோப்பை வென்றது. இதனை மறுக்க முடியாது. ஆனால் அப்போது மெக்ராத், வார்ன், கில்கிறிஸ்ட் உள்ளிட்ட ஜாம்பவான்கள் அணியில் இடம் பெற்றிருந்தனர். தவிர ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், "பார்மின்றி' தவித்து வருவது இந்தியாவின் வெற்றிக்கு கூடுதல் நம்பிக்கை அளித்துள்ளது. எனவே காலிறுதியில் ஆஸ்திரேலிய அணியின் பலவீனத்திற்கேற்ப திட்டமிட்டு வெற்றி பெற முயற்சிப்போம்.
"ஷார்ட் பிட்ச்' பந்துகளில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர் என்பதை ஏற்றுக் கொள்ள முடியது. அப்படி திணறி இருந்தால், டெஸ்ட் ரேங்கிங்கில் "நம்பர்-1', ஒருநாள் போட்டி ரேங்கிங்கில் "நம்பர்-2' இடத்தை அடைந்திருக்க முடியாது. ஆஸ்திரேலிய அணியில் திறமையான வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இவர்கள் எளிதில் விக்கெட் வீழ்த்தக் கூடிய திறமை படைத்தவர்கள். இதற்கேற்ப பயிற்சி மேற்கொண்டு, இவர்களது பந்துவீச்சை எளிதாக சமாளிப்போம்.
இந்திய அணி உலக கோப்பை வெல்ல வேண்டும் என்பது இந்தியர்களின் கனவு. எனவே ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட முன்னணி அணிகளை வீழ்த்தி கோப்பை வெல்வதை பெருமையாக கருதுகிறேன். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சதம் கடந்து எழுச்சி கண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போட்டியில் எனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கினேன். முழுதிறமையை வெளிப்படுத்தி சதம் கடந்து வெற்றிக்கு வித்திட்டேன். இந்த "பார்ம்' அடுத்து வரவுள்ள காலிறுதி உள்ளிட்ட "நாக்-அவுட்' சுற்றில் தொடர விரும்புகிறேன்.
அம்பயர் அவுட் கொடுக்காமலே, சச்சின் வெளியேறியது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அவுட் என்று தெரிந்ததால், அம்பயரின் தீர்ப்பை அவர் எதிர்பார்க்கவில்லை. இது அவரது தனிப்பட்ட முடிவு. எனவே இதுகுறித்து அதிகம் பேச விரும்பவில்லை.
இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.

ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவோம்: யுவராஜ்

சென்னை; ""காலிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த அதிக வாய்ப்பு உள்ளது,'' என, இந்திய வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்திய துணைக் கண்டத்தில் நடக்கிறது. லீக் சுற்று முடிந்த நிலையில், வரும் 24ம் தேதி ஆமதாபாத்தில் நடக்கவுள்ள லீக் போட்டியில் இந்திய அணி, "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. உலக கோப்பை அரங்கில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் 9 முறை மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 7, இந்தியா 2 போட்டியில் வெற்றி கண்டன. கடந்த 2003ல் நடந்த பைனலில் ஆஸ்திரேலிய அணி, கங்குலி தலைமையிலான இந்தியாவை வீழ்த்தி கோப்பை வென்றது. இருப்பினும் சமீபத்தில் பெங்களூருவில் நடந்த பயிற்சி போட்டியில் இந்தியாவிடம் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தது.
இதுகுறித்து இந்திய "ஆல்-ரவுண்டர்' யுவராஜ் சிங் கூறியதாவது: லீக் சுற்றில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் தலா 4 வெற்றியை பதிவு செய்தன. எனவே வரும் 24ம் தேதி நடக்கும் போட்டியில், முழுதிறமையை வெளிப்படுத்தும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.
ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங்கில் ஆஸ்திரேலிய அணி "நம்பர்-1' இடத்தில் உள்ளது. கடந்த மூன்று உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி, சாம்பியன் கோப்பை வென்றது. இதனை மறுக்க முடியாது. ஆனால் அப்போது மெக்ராத், வார்ன், கில்கிறிஸ்ட் உள்ளிட்ட ஜாம்பவான்கள் அணியில் இடம் பெற்றிருந்தனர். தவிர ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், "பார்மின்றி' தவித்து வருவது இந்தியாவின் வெற்றிக்கு கூடுதல் நம்பிக்கை அளித்துள்ளது. எனவே காலிறுதியில் ஆஸ்திரேலிய அணியின் பலவீனத்திற்கேற்ப திட்டமிட்டு வெற்றி பெற முயற்சிப்போம்.
"ஷார்ட் பிட்ச்' பந்துகளில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர் என்பதை ஏற்றுக் கொள்ள முடியது. அப்படி திணறி இருந்தால், டெஸ்ட் ரேங்கிங்கில் "நம்பர்-1', ஒருநாள் போட்டி ரேங்கிங்கில் "நம்பர்-2' இடத்தை அடைந்திருக்க முடியாது. ஆஸ்திரேலிய அணியில் திறமையான வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இவர்கள் எளிதில் விக்கெட் வீழ்த்தக் கூடிய திறமை படைத்தவர்கள். இதற்கேற்ப பயிற்சி மேற்கொண்டு, இவர்களது பந்துவீச்சை எளிதாக சமாளிப்போம்.
இந்திய அணி உலக கோப்பை வெல்ல வேண்டும் என்பது இந்தியர்களின் கனவு. எனவே ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட முன்னணி அணிகளை வீழ்த்தி கோப்பை வெல்வதை பெருமையாக கருதுகிறேன். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சதம் கடந்து எழுச்சி கண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போட்டியில் எனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கினேன். முழுதிறமையை வெளிப்படுத்தி சதம் கடந்து வெற்றிக்கு வித்திட்டேன். இந்த "பார்ம்' அடுத்து வரவுள்ள காலிறுதி உள்ளிட்ட "நாக்-அவுட்' சுற்றில் தொடர விரும்புகிறேன்.
அம்பயர் அவுட் கொடுக்காமலே, சச்சின் வெளியேறியது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அவுட் என்று தெரிந்ததால், அம்பயரின் தீர்ப்பை அவர் எதிர்பார்க்கவில்லை. இது அவரது தனிப்பட்ட முடிவு. எனவே இதுகுறித்து அதிகம் பேச விரும்பவில்லை.
இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.

உலக கோப்பை கிரிக்கெட் விளையாடும் லெவன் அணியில் களமிறங்குவாரா அல்லது வெளியில் உட்கார வைக்கப்படுவாரா என, யுவராஜ் சிங் குறித்து அதிக குழப்பம் நிலவியது. இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் போட்டியில் இவருக்கு வாய்ப்பு தரப்பட்டது. ஆனால் இதில் பேட் செய்யவில்லை. பின் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார்.
தொடர்ந்து அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் பவுலிங்கில் மிரட்டிய இவர் 5 விக்கெட் வீழ்த்தினார். பின் அரைசதம் அடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தார். நெதர்லாந்துக்கு எதிராகவும் பேட்டிங்கில் ஜொலித்து, "ஹாட்ரிக் அரை சதம் அடித்தார். இவரது இந்த எழுச்சிக்கு காரணம் திருமண செய்தியாம். ஆம், யுவராஜ் சிங்கிற்கு திருமணம் செய்ய அவரது தந்தை யோகராஜ் சிங் முடிவெடுத்துள்ளாராம்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,"" யுவராஜ் சிங்கிற்கு திருமணம் செய்ய முடிவெடுத்தது உண்மைதான். ஆனால் இப்போது அல்ல. உலக கோப்பை தொடர் முடிந்தவுடன், திருமணம் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம், என்றார்.

யுவராஜுக்கு திருமணம்

உலக கோப்பை கிரிக்கெட் விளையாடும் லெவன் அணியில் களமிறங்குவாரா அல்லது வெளியில் உட்கார வைக்கப்படுவாரா என, யுவராஜ் சிங் குறித்து அதிக குழப்பம் நிலவியது. இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் போட்டியில் இவருக்கு வாய்ப்பு தரப்பட்டது. ஆனால் இதில் பேட் செய்யவில்லை. பின் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார்.
தொடர்ந்து அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் பவுலிங்கில் மிரட்டிய இவர் 5 விக்கெட் வீழ்த்தினார். பின் அரைசதம் அடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தார். நெதர்லாந்துக்கு எதிராகவும் பேட்டிங்கில் ஜொலித்து, "ஹாட்ரிக் அரை சதம் அடித்தார். இவரது இந்த எழுச்சிக்கு காரணம் திருமண செய்தியாம். ஆம், யுவராஜ் சிங்கிற்கு திருமணம் செய்ய அவரது தந்தை யோகராஜ் சிங் முடிவெடுத்துள்ளாராம்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,"" யுவராஜ் சிங்கிற்கு திருமணம் செய்ய முடிவெடுத்தது உண்மைதான். ஆனால் இப்போது அல்ல. உலக கோப்பை தொடர் முடிந்தவுடன், திருமணம் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம், என்றார்.

டெஸ்ட் மற்றும், ஒரு நாள் கிரிக்கெட் அணிகளிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து மனமுடைந்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறலாம் என்ற முடிவுக்கே வந்து விட்டேன் என்று யுவ்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

மோசமான ஆட்டம் காரணமாக யுவராஜ்சிங் கடந்த ஆண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.

நான் கடந்த 10 ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். எனது பெற்றோரின் உதவிதான் இதற்கு காரணம் கடந்த ஆண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் இருந்து நீக்கப்பட்டேன். அப்போது எனக்கு மிகுந்த சோதனை நிறைந்ததாக இருந்தது. இதன் காரணமாக சர்வதேச போட்டிகளில் இருந்து விலகிவிடலாம் என்று நான் நினைத்தேன். ஆனால் எனது பெற்றோர் தான் எனக்கு சில விஷயங்களை புரிய வைத்தனர். பீல்டிங்கின் போது ஒவ்வொரு முறையும் எனக்கு காயம் ஏற்படும்.

அந்த நேரம் எனக்கு உண்மையில் மோசமாக இருக்கும் அப்போது எனது நண்பர்களும், பெற்றோரும் எனது தன்னம்பிக்கையை ஏற்படுத்தி கடினமாக பயிற்சி பெற வைத்தனர்.

இந்த உலகக் கோப்பையை சச்சினுக்காக வெல்வோம். இந்தியாவுக்கு அது கனவு நனவாகும் தருணமாகும். இவ்வாறு கூறினார் யுவ்ராஜ் சிங்.

கடந்த ஆண்டே ஓய்வு பெற நினைத்தேன் -யுவ்ராஜ் சிங்

டெஸ்ட் மற்றும், ஒரு நாள் கிரிக்கெட் அணிகளிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து மனமுடைந்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறலாம் என்ற முடிவுக்கே வந்து விட்டேன் என்று யுவ்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

மோசமான ஆட்டம் காரணமாக யுவராஜ்சிங் கடந்த ஆண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.

நான் கடந்த 10 ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். எனது பெற்றோரின் உதவிதான் இதற்கு காரணம் கடந்த ஆண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் இருந்து நீக்கப்பட்டேன். அப்போது எனக்கு மிகுந்த சோதனை நிறைந்ததாக இருந்தது. இதன் காரணமாக சர்வதேச போட்டிகளில் இருந்து விலகிவிடலாம் என்று நான் நினைத்தேன். ஆனால் எனது பெற்றோர் தான் எனக்கு சில விஷயங்களை புரிய வைத்தனர். பீல்டிங்கின் போது ஒவ்வொரு முறையும் எனக்கு காயம் ஏற்படும்.

அந்த நேரம் எனக்கு உண்மையில் மோசமாக இருக்கும் அப்போது எனது நண்பர்களும், பெற்றோரும் எனது தன்னம்பிக்கையை ஏற்படுத்தி கடினமாக பயிற்சி பெற வைத்தனர்.

இந்த உலகக் கோப்பையை சச்சினுக்காக வெல்வோம். இந்தியாவுக்கு அது கனவு நனவாகும் தருணமாகும். இவ்வாறு கூறினார் யுவ்ராஜ் சிங்.

முக நூல்

Popular Posts