background img

புதிய வரவு

Showing posts with label India and Pakistan. Show all posts
Showing posts with label India and Pakistan. Show all posts
இஸ்லாமாபாத், மே 5: ஒசாமா பின் லேடன் இருக்கும் இடம் தெரிந்துகொண்டு அமெரிக்கக் கடற்படையின் கமாண்டோக்கள் தாக்குதல் நடத்திக் கொன்றனர் என்பதற்காக வேறு எந்த நாடாவது அப்படிப்பட்ட கற்பனைகளில் மிதந்தால் பயிற்சி பெற்ற பாகிஸ்தான் ராணுவம் தக்க பாடம் கற்பிக்கும் என்று பாகிஸ்தான் ராணுவத்துறை செயலாளர் சல்மான் பஷீர் எச்சரித்திருக்கிறார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதுக்கு வெகு அருகில் உள்ள அபோட்டாபாத் பகுதியில் ஹெலிகாப்டர்களில் இறங்கி தாக்குதல் நடத்தியது குறித்து பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை, பாகிஸ்தானின் ராணுவத்துக்குத் தகவல் தெரிவித்திருந்தால் அது எப்படியாவது உடனே ஐ.எஸ்.ஐ.க்குப் போய்ச் சேரும், அதன் பிறகு பின் லேடனை உயிருடன் பிடிப்பது அல்லது சுட்டுக்கொல்வது என்ற லட்சியம் நிறைவேறி இருக்காது என்று அமெரிக்கா கூறியிருந்தது.
இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு இரட்டை அவமானம் நேர்ந்திருக்கிறது. தன்னுடைய நாட்டின் தலைநகரம் அருகே, ராணுவப் பயிற்சி நிலையம் இருக்கும் ஊரிலே வேற்று நாட்டைச் சேர்ந்த கமாண்டோக்கள் தங்களிடம் அனுமதி வாங்காமலேயே வந்து இறங்கவும் சந்தேகப்பட்ட நபரைக் கொல்லவும் அவருடைய சடலத்தையும் கொண்டு செல்லவும் முடிகிறது, அதைத் தடுக்கவோ, மறிக்கவோ, கேள்வி கேட்கவோ பாகிஸ்தானுக்கு வழி இல்லை என்பது முதலாவது அவமானம்.
உலகம் முழுக்க இத்தனை நாள்களாகத் தேடிக்கொண்டிருக்கும் சர்வதேச குற்றவாளி, மனித குலத்துக்கு எதிராக சதி செய்து அதை நிறைவேற்றிய பயங்கரவாதி, அப்பாவிகளின் உயிர்களை அன்றாடம் பலி வாங்கிக்கொண்டிருக்கும் கொடிய மனிதருக்கு பாகிஸ்தான் நாடு அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருந்தது என்பது இரண்டாவது அவமானம்.
பின் லேடன் தன்னுடைய நாட்டில் மறைந்து வாழ்ந்தார், அவர் அங்கு குடியிருந்ததே தெரியாது என்றால் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. துறையே ஒட்டுமொத்தமாக தூக்கு போட்டுக்கொண்டு சாகலாம். இல்லையில்லை, எங்களுக்குத் தெரிந்துதான் பின் லேடன் அங்கே குடியிருந்தார் என்று சொன்னால் பயங்கரவாதத்துக்குத் துணை போகும் நாடு என்று இந்தியா கூறுவது உண்மைதான் என்று எல்லா நாடுகளும் ஆமோதித்துவிடும். எனவே இந்த விவகாரத்தில் எதைப்பேசினாலும் ஆபத்து, அவமானம் என்பதால் பாகிஸ்தான் தன்னுடைய பாணியில் தனக்கு நேர்ந்துவிட்ட அவமானத்தை மறைத்து, இல்லாத வீரப் பிரதாபங்களைக் கொட்டி அளந்துள்ளது. அதைத்தான் சல்மான் பஷீர் பேட்டியாக கக்கியிருக்கிறார்.
"அமெரிக்காவைப் போலவே தங்களாலும் தாக்குதல் நடத்த முடியும் என்று ஒரு நாட்டின் (இந்தியா) ராணுவ அதிகாரிகள் (விமானப்படை, தரைப்படை தலைமை தளபதிகள்) பேட்டி அளித்திருப்பதைப் பார்த்தால் நகைப்பாக இருக்கிறது. பாகிஸ்தான் ராணுவம் சாதாரணமானதல்ல. எந்த எதிரியும் உள்ளே நுழைந்துவிடாமல் தடுக்கும் ஆற்றல் பெற்றுள்ளது. எப்போதும் விழிப்புடன் இருப்பது.
அபோட்டாபாத் நகரில் அமெரிக்கக் கமாண்டோ நடத்திய சாகசங்களை ஏன் குறை கூறுகிறோம் என்றால், பக்கத்திலேயே எங்கள் ராணுவப் பயிற்சிக் கல்லூரி இருக்கிறது, அங்கிருப்பவர்கள் தப்பித்தவறி பதில் நடவடிக்கையில் இறங்கியிருந்தால் அமெரிக்கக் கமாண்டோக்களின் கதி என்னவாகியிருக்கும் என்ற கவலையில்தான், எங்களிடம் சொல்லிவிட்டு வந்திருக்கலாமே என்று கூறினோம்.
யார் வேண்டுமானாலும் பாகிஸ்தானில் நுழையலாம், யாரை வேண்டுமானாலும் கொன்றுவிட்டுப் போகலாம் என்று எந்த நாடும் (குறிப்பாக இந்தியா) கருதிவிடக் கூடாது என்று சல்மான் பஷீர் கூறியிருக்கிறார்.
பாகிஸ்தானில் பின் லேடன் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவுடனேயே அவரை உயிருடன் பிடித்துவர வேண்டும் இல்லாவிட்டால் கொன்றுவிட வேண்டும் என்று முடிவு செய்து அதை நிறைவேற்றினோம், அதை பாகிஸ்தானிடம் எதற்காக முன் கூட்டியே தெரிவிக்கவேண்டும் என்றுதான் தெரிவிக்கவில்லை என்றுஅமெரிக்க ராணுவம் பலமுறை கூறிவிட்டது. பாகிஸ்தானை அமெரிக்கா ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று இதிலிருந்து புலனாகிறது.
தனக்கு ஏற்பட்ட அவமானத்திலிருந்து மீள வழி தெரியாத பாகிஸ்தான், இந்தியா மீது மறைமுகமாக வசைபாடியிருக்கிறது.

இந்தியாவுக்கு பாகிஸ்தான் மறைமுக எச்சரிக்கை!

இஸ்லாமாபாத், மே 5: ஒசாமா பின் லேடன் இருக்கும் இடம் தெரிந்துகொண்டு அமெரிக்கக் கடற்படையின் கமாண்டோக்கள் தாக்குதல் நடத்திக் கொன்றனர் என்பதற்காக வேறு எந்த நாடாவது அப்படிப்பட்ட கற்பனைகளில் மிதந்தால் பயிற்சி பெற்ற பாகிஸ்தான் ராணுவம் தக்க பாடம் கற்பிக்கும் என்று பாகிஸ்தான் ராணுவத்துறை செயலாளர் சல்மான் பஷீர் எச்சரித்திருக்கிறார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதுக்கு வெகு அருகில் உள்ள அபோட்டாபாத் பகுதியில் ஹெலிகாப்டர்களில் இறங்கி தாக்குதல் நடத்தியது குறித்து பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை, பாகிஸ்தானின் ராணுவத்துக்குத் தகவல் தெரிவித்திருந்தால் அது எப்படியாவது உடனே ஐ.எஸ்.ஐ.க்குப் போய்ச் சேரும், அதன் பிறகு பின் லேடனை உயிருடன் பிடிப்பது அல்லது சுட்டுக்கொல்வது என்ற லட்சியம் நிறைவேறி இருக்காது என்று அமெரிக்கா கூறியிருந்தது.
இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு இரட்டை அவமானம் நேர்ந்திருக்கிறது. தன்னுடைய நாட்டின் தலைநகரம் அருகே, ராணுவப் பயிற்சி நிலையம் இருக்கும் ஊரிலே வேற்று நாட்டைச் சேர்ந்த கமாண்டோக்கள் தங்களிடம் அனுமதி வாங்காமலேயே வந்து இறங்கவும் சந்தேகப்பட்ட நபரைக் கொல்லவும் அவருடைய சடலத்தையும் கொண்டு செல்லவும் முடிகிறது, அதைத் தடுக்கவோ, மறிக்கவோ, கேள்வி கேட்கவோ பாகிஸ்தானுக்கு வழி இல்லை என்பது முதலாவது அவமானம்.
உலகம் முழுக்க இத்தனை நாள்களாகத் தேடிக்கொண்டிருக்கும் சர்வதேச குற்றவாளி, மனித குலத்துக்கு எதிராக சதி செய்து அதை நிறைவேற்றிய பயங்கரவாதி, அப்பாவிகளின் உயிர்களை அன்றாடம் பலி வாங்கிக்கொண்டிருக்கும் கொடிய மனிதருக்கு பாகிஸ்தான் நாடு அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருந்தது என்பது இரண்டாவது அவமானம்.
பின் லேடன் தன்னுடைய நாட்டில் மறைந்து வாழ்ந்தார், அவர் அங்கு குடியிருந்ததே தெரியாது என்றால் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. துறையே ஒட்டுமொத்தமாக தூக்கு போட்டுக்கொண்டு சாகலாம். இல்லையில்லை, எங்களுக்குத் தெரிந்துதான் பின் லேடன் அங்கே குடியிருந்தார் என்று சொன்னால் பயங்கரவாதத்துக்குத் துணை போகும் நாடு என்று இந்தியா கூறுவது உண்மைதான் என்று எல்லா நாடுகளும் ஆமோதித்துவிடும். எனவே இந்த விவகாரத்தில் எதைப்பேசினாலும் ஆபத்து, அவமானம் என்பதால் பாகிஸ்தான் தன்னுடைய பாணியில் தனக்கு நேர்ந்துவிட்ட அவமானத்தை மறைத்து, இல்லாத வீரப் பிரதாபங்களைக் கொட்டி அளந்துள்ளது. அதைத்தான் சல்மான் பஷீர் பேட்டியாக கக்கியிருக்கிறார்.
"அமெரிக்காவைப் போலவே தங்களாலும் தாக்குதல் நடத்த முடியும் என்று ஒரு நாட்டின் (இந்தியா) ராணுவ அதிகாரிகள் (விமானப்படை, தரைப்படை தலைமை தளபதிகள்) பேட்டி அளித்திருப்பதைப் பார்த்தால் நகைப்பாக இருக்கிறது. பாகிஸ்தான் ராணுவம் சாதாரணமானதல்ல. எந்த எதிரியும் உள்ளே நுழைந்துவிடாமல் தடுக்கும் ஆற்றல் பெற்றுள்ளது. எப்போதும் விழிப்புடன் இருப்பது.
அபோட்டாபாத் நகரில் அமெரிக்கக் கமாண்டோ நடத்திய சாகசங்களை ஏன் குறை கூறுகிறோம் என்றால், பக்கத்திலேயே எங்கள் ராணுவப் பயிற்சிக் கல்லூரி இருக்கிறது, அங்கிருப்பவர்கள் தப்பித்தவறி பதில் நடவடிக்கையில் இறங்கியிருந்தால் அமெரிக்கக் கமாண்டோக்களின் கதி என்னவாகியிருக்கும் என்ற கவலையில்தான், எங்களிடம் சொல்லிவிட்டு வந்திருக்கலாமே என்று கூறினோம்.
யார் வேண்டுமானாலும் பாகிஸ்தானில் நுழையலாம், யாரை வேண்டுமானாலும் கொன்றுவிட்டுப் போகலாம் என்று எந்த நாடும் (குறிப்பாக இந்தியா) கருதிவிடக் கூடாது என்று சல்மான் பஷீர் கூறியிருக்கிறார்.
பாகிஸ்தானில் பின் லேடன் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவுடனேயே அவரை உயிருடன் பிடித்துவர வேண்டும் இல்லாவிட்டால் கொன்றுவிட வேண்டும் என்று முடிவு செய்து அதை நிறைவேற்றினோம், அதை பாகிஸ்தானிடம் எதற்காக முன் கூட்டியே தெரிவிக்கவேண்டும் என்றுதான் தெரிவிக்கவில்லை என்றுஅமெரிக்க ராணுவம் பலமுறை கூறிவிட்டது. பாகிஸ்தானை அமெரிக்கா ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று இதிலிருந்து புலனாகிறது.
தனக்கு ஏற்பட்ட அவமானத்திலிருந்து மீள வழி தெரியாத பாகிஸ்தான், இந்தியா மீது மறைமுகமாக வசைபாடியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டே, தமிழர்களை இழிவு படுத்தி தமிழர்களுக்கு எதிரியாக செயல்பட்ட நடிகர் ஆர்யா, இப்போது இந்தியாவுக்கே எதிரி ஆகியிருக்கிறார். உலக கோப்பையை பாகிஸ்தான் கைப்பற்றும் என்று கூறியிருக்கும் ஆர்யாவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. உலக கோப்பை ‌கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் பாகி்தான் அணி வெற்றி பெறும்; இந்தியா ஜெயிக்காது என்று நினைக்கிறேன், என்று நடிகர் ஆர்யா கூறியுள்ளார். மேலும் பாகிஸ்தான் சிறந்த அணியாக இருப்பதாகவும், இந்த உலக கோப்பை போட்டியில் அவர்கள் நிறைய ரன் எடுத்துள்ளனர், சாஹித் அப்ரிடி பாகிஸ்தானுக்கு வெற்றியை தேடித்தருவார். உலக கோப்பையை பாகிஸ்தான் கைப்பற்றும் என்றும் ஆர்யா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

ஆர்யாவின் இந்த தேசவிரோத கருத்துக்கு இந்து மக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:-

நடிகர் ஆர்யா சர்ச்சை கருத்துக்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஏற்கனவே மலையாள நடிகர்களுக்கு ஆதரவாகவும், தமிழ் நடிகர்களுக்கு எதிராகவும் பேசி கண்டனத்துக்கு உள்ளானார். இப்போது பாகிஸ்தான் அணி ஜெயிக்கும் என்று கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணிதான் தற்போது உயர்வாக உள்ளது. அது வலுவிழந்த அணியாக இருந்தபோது இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு இளைஞரும் பிரார்த்தித்தனர். அரை இறுதிபோட்டியில் இந்திய அணி வெற்றி பெற நாடுமுழுவதும் பிரார்த்தனைகளும் வேண்டுதல்களும் நடந்து வருகின்றன. இந்து முன்னணி சகோதரர்கள் இணைந்து இந்திய அணி வெற்றிக்காக பிரார்த்தனை செய்து வருகின்றார்கள்.

மதங்களை கடந்து இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று ஒவ்வொரு இந்தியன் இதயமும் துடிக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி ஜெயிக்கும் என ஆர்யா அந்த அணிக்கு வக்காலத்து வாங்குவது இளைஞர்கள் மனதை புண்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் அணி வலுவாக இல்லை. ஏற்கனவே சூதாட்டத்திலும், போதை மருந்து வழக்குகளிலும் சிக்கி பல சிறந்த வீரர்கள் வெளியேற்றப்பட்டு அந்த அணி சின்னா பின்னமாகி கிடக்கிறது. அந்த அணிக்கு ஆதரவாக ஆர்யா சொன்ன கருத்தை வாபஸ் பெற வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கண்ணன் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்யாவை வெற்றி நாயகனாக்கிய தமிழ் ரசிகர்களை இழிவுபடுத்தி பேசி சர்ச்சையில் சிக்கிக் கொண்ட நடிகர் ஆர்யா, பின்னர் அதற்கு வருத்தம் தெரிவித்தார். இப்போது இந்தியாவுக்கு எதிராக பேசி புதிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். ஆர்யாவின் ஆரூடம் பலிக்குமா? இல்லையா? என்பதல்ல இப்போதைய கேள்வி. ஒரு இந்தியனாக, அதுவும் பிரபலமான நடிகனாக இருந்து கொண்டு அவர் இப்படி சொல்லியிருப்பது சரியா, தவறா? என்பது பட்டிமன்ற விவாத்துக்குரியதுதானே!

இந்தியாவுக்கே எதிரியானார் ஆர்யா! உலக கோப்பையை பாக்., கைப்பற்றுமாம்!!

தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டே, தமிழர்களை இழிவு படுத்தி தமிழர்களுக்கு எதிரியாக செயல்பட்ட நடிகர் ஆர்யா, இப்போது இந்தியாவுக்கே எதிரி ஆகியிருக்கிறார். உலக கோப்பையை பாகிஸ்தான் கைப்பற்றும் என்று கூறியிருக்கும் ஆர்யாவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. உலக கோப்பை ‌கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் பாகி்தான் அணி வெற்றி பெறும்; இந்தியா ஜெயிக்காது என்று நினைக்கிறேன், என்று நடிகர் ஆர்யா கூறியுள்ளார். மேலும் பாகிஸ்தான் சிறந்த அணியாக இருப்பதாகவும், இந்த உலக கோப்பை போட்டியில் அவர்கள் நிறைய ரன் எடுத்துள்ளனர், சாஹித் அப்ரிடி பாகிஸ்தானுக்கு வெற்றியை தேடித்தருவார். உலக கோப்பையை பாகிஸ்தான் கைப்பற்றும் என்றும் ஆர்யா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

ஆர்யாவின் இந்த தேசவிரோத கருத்துக்கு இந்து மக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:-

நடிகர் ஆர்யா சர்ச்சை கருத்துக்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஏற்கனவே மலையாள நடிகர்களுக்கு ஆதரவாகவும், தமிழ் நடிகர்களுக்கு எதிராகவும் பேசி கண்டனத்துக்கு உள்ளானார். இப்போது பாகிஸ்தான் அணி ஜெயிக்கும் என்று கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணிதான் தற்போது உயர்வாக உள்ளது. அது வலுவிழந்த அணியாக இருந்தபோது இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு இளைஞரும் பிரார்த்தித்தனர். அரை இறுதிபோட்டியில் இந்திய அணி வெற்றி பெற நாடுமுழுவதும் பிரார்த்தனைகளும் வேண்டுதல்களும் நடந்து வருகின்றன. இந்து முன்னணி சகோதரர்கள் இணைந்து இந்திய அணி வெற்றிக்காக பிரார்த்தனை செய்து வருகின்றார்கள்.

மதங்களை கடந்து இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று ஒவ்வொரு இந்தியன் இதயமும் துடிக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி ஜெயிக்கும் என ஆர்யா அந்த அணிக்கு வக்காலத்து வாங்குவது இளைஞர்கள் மனதை புண்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் அணி வலுவாக இல்லை. ஏற்கனவே சூதாட்டத்திலும், போதை மருந்து வழக்குகளிலும் சிக்கி பல சிறந்த வீரர்கள் வெளியேற்றப்பட்டு அந்த அணி சின்னா பின்னமாகி கிடக்கிறது. அந்த அணிக்கு ஆதரவாக ஆர்யா சொன்ன கருத்தை வாபஸ் பெற வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கண்ணன் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்யாவை வெற்றி நாயகனாக்கிய தமிழ் ரசிகர்களை இழிவுபடுத்தி பேசி சர்ச்சையில் சிக்கிக் கொண்ட நடிகர் ஆர்யா, பின்னர் அதற்கு வருத்தம் தெரிவித்தார். இப்போது இந்தியாவுக்கு எதிராக பேசி புதிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். ஆர்யாவின் ஆரூடம் பலிக்குமா? இல்லையா? என்பதல்ல இப்போதைய கேள்வி. ஒரு இந்தியனாக, அதுவும் பிரபலமான நடிகனாக இருந்து கொண்டு அவர் இப்படி சொல்லியிருப்பது சரியா, தவறா? என்பது பட்டிமன்ற விவாத்துக்குரியதுதானே!

மொகாலி: மொகாலியில் இன்று நடக்கும் உலக கோப்பை தொடரின் பரபரப்பான அரையிறுதியில் "பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில், அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, பைனலுக்கு முன்னேற இந்திய வீரர்கள் காத்திருக்கின்றனர்.
இந்தியா, இலங்கை, வங்கதேச மண்ணில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று மொகாலியில் நடக்கும் அரையிறுதி போட்டியில் (பகலிரவு), இந்திய அணி, பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை மேற்கொள்கிறது.
பலமான பேட்டிங்:
இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக காட்சி அளிக்கிறது. வங்கதேச அணிக்கு எதிராக சதம் கடந்த சேவக் (342 ரன்கள்), அதன்பின் பெரிய அளவில் சோபிக்கவில்லை. எனவே இவர், இன்று தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் மழை பொழியலாம். "சூப்பர் பார்மில் உள்ள "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (379 ரன்கள்), சதத்தில் சதம் கடந்து சாதிக்கலாம். மூன்றாவது வீரராக களமிறங்கும் காம்பிர் (269 ரன்கள்), தனது பொறுப்பான ஆட்டத்தை தொடரலாம்.
யுவராஜ் நம்பிக்கை:
"மிடில்-ஆர்டரில் யுவராஜ் சிங் (341 ரன்கள்) அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை நான்கு முறை "ஆட்ட நாயகன் விருது வென்றுள்ள இவர், இன்று சொந்த ஊரில் முழுதிறமையை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு வித்திடலாம். கிடைத்த வாய்ப்பை சுரேஷ் ரெய்னா சரியாக பயன்படுத்திக் கொண்டதால், இன்று யூசுப் பதான் களமிறங்குவது சந்தேகம். விராத் கோஹ்லி, கேப்டன் தோனி, பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தும் பட்சத்தில், இமாலய இலக்கை பதிவு செய்யலாம்.
ஜாகிர் மிரட்டல்:
பவுலிங்கை பொறுத்தவரை வேகத்தில் ஜாகிர் கான் மிரட்டி வருகிறார். இதுவரை 17 விக்கெட் வீழ்த்தி உள்ள இவர், இன்றும் விக்கெட் வேட்டை நடத்தலாம். வேகத்துக்கு கைகொடுக்கும் மொகாலி மைதானத்தில் முனாப் படேல், ஸ்ரீசாந்த், ஆஷிஸ் நெஹ்ரா உள்ளிட்டோரும் சாதிக்கலாம்.
அஷ்வின் எதிர்பார்ப்பு:
சுழலில் அனுபவ ஹர்பஜன் சிங் (6 விக்கெட்) இருப்பது பலம். இவருடன் இளம் சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் (4 விக்கெட்), துல்லியமாக பந்துவீசி எதிரணியின் ரன் வேட்டையை தடுக்கிறார். ஆனால் மொகாலி மைதானத்தில் சுழல் எடுபடாது என்பதால், ஒரே ஒரு சுழற்பந்துவீச்சாளருடன் இந்திய அணி களமிறங்கலாம். பகுதிநேர சுழலில் "ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் (11 விக்கெட்) விக்கெட் வேட்டை நடத்தி வருவது கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
"மிடில்-ஆர்டர் பலம்:
லீக் சுற்றில், பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் சொல்லிக் கொள்ளும்படி விளையாடவில்லை. ஆனால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான காலிறுதியில், கம்ரான் அக்மல், முகமது ஹபீஸ் ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தது. எனவே இன்றும் இவர்கள் அசத்தலாம். "மிடில்-ஆர்டரில் அனுபவ மிஸ்பா (192 ரன்கள்), யூனிஸ் கான் (172 ரன்கள்) இருப்பது பலம். இதுவரை 211 ரன்கள் எடுத்துள்ள உமர் அக்மல், தனது ரன் வேட்டையை தொடரலாம். அப்ரிதி (65 ரன்கள்), அப்துல் ரசாக் (101 ரன்கள்) உள்ளிட்ட "ஆல்-ரவுண்டர்கள் பேட்டிங்கில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிராக இவர்கள் எழுச்சி பெறும் பட்சத்தில் அசத்தல் வெற்றி பெறலாம்.
பலமான பந்துவீச்சு:
இம்முறை பாகிஸ்தான் அணியின் மிகப்பெரிய பலம் பந்துவீச்சு. சுழலில் கேப்டன் அப்ரிதி (21 விக்கெட்), விக்கெட் மழை பொழிகிறார். நான்கு முறை, நான்கு அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்தி உள்ள இவர், இந்தியாவுக்கு எதிராக இன்று அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு முகமது ஹபீஸ், அப்துர் ரெஹ்மான், சயீத் அஜ்மல் உள்ளிட்ட இளம் சுழற்பந்துவீச்சாளர்கள் கைகொடுக்க வேண்டும். வேகப்பந்துவீச்சில் உமர் குல் (14 விக்கெட்) நம்பிக்கை அளிக்கிறார். மொகாலி மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு கைகொடுக்கும் என்பதால், சோயப் அக்தருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். வாகாப் ரியாஸ், அப்துல் ரசாக் உள்ளிட்ட வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட் வேட்டை நடத்தும் பட்சத்தில் இந்திய அணிக்கு சிக்கலாகிவிடும்.
பலமான பேட்டிங் வரிசை கொண்ட இந்திய அணி, வலுவான பவுலிங் பலத்துடன் உள்ள பாகிஸ்தானுடன் மோத இருப்பதால், அனல் பறக்கும் ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.
ஐந்தாவது முறை
உலக கோப்பை அரங்கில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஐந்தாவது முறையாக மோத உள்ளன. முன்னதாக மோதிய நான்கு (1992, 96, 99, 2003) போட்டிகளில், இந்திய அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
* கடந்த 1996ல், 8 விக்கெட்டுக்கு 287 ரன்கள் எடுத்த இந்திய அணி, உலக கோப்பை அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பெற்றது. கடந்த 2003ல், 7 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் அணி, உலக கோப்பை அரங்கில் இந்தியாவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.
* கடந்த 1999ல், 6 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்த இந்திய அணி, உலக கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக குறைந்த ஸ்கோரை பெற்றது. கடந்த 1992ல், 173 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான் அணி, உலக கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது.
* உலக கோப்பை அரங்கில், பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில் "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (4 போட்டி, 228 ரன்கள்) முன்னிலை வகிக்கிறார். பாகிஸ்தான் சார்பில், இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் சயீத் அன்வர் (3 போட்டி, 185 ரன்கள்) முதலிடத்தில் உள்ளார்.
* இந்தியா சார்பில் பாகிஸ்தானுக்கு எதிராக உலக கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் வெங்கடேஷ் பிரசாத் (2 போட்டி, 8 விக்கெட்) முன்னிலை வகிக்கிறார். பாகிஸ்தான் சார்பில், இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள் பட்டியலில் முஸ்தாக் அகமது (2 போட்டி, 5 விக்கெட்) முன்னிலையில் உள்ளார்.
---
பாக்., ஆதிக்கம்
சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் 119 முறை மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் 69, இந்தியா 46 போட்டிகளில் வெற்றி கண்டன. நான்கு போட்டிகளுக்கு முடிவு இல்லை.
---
இம்மைதானத்தில் இதுவரை...
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று நடக்கும் அரையிறுதி போட்டி, மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கிறது. இங்கு, இவ்விரு அணிகள் இரண்டு (1999, 2007) போட்டிகளில் மோதியுள்ளன. இரண்டிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
* கடந்த 1999ல், இங்கு நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.5 ஓவரில் 196 ரன்களுக்கு சுருண்டது. பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 42 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 197 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
* கடந்த 2007ல், இங்கு நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 321 ரன்கள் எடுத்தது. இதனை 49.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 322 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி "சேஸ் செய்தது.
* இந்திய அணி, இங்கு விளையாடிய ஒன்பது போட்டிகளில் ஐந்து வெற்றி, நான்கு தோல்வியை பதிவு செய்தது. பாகிஸ்தான் அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் இரண்டு வெற்றி, மூன்று தோல்வியை பெற்றது.
* இங்கு, அதிக ரன்கள் எடுத்துள்ள இந்திய வீரர்கள் வரிசையில் சச்சின் முன்னிலை வகிக்கிறார். இவர் ஆறு போட்டிகளில் பங்கேற்று 281 ரன்கள் எடுத்துள்ளார். பாகிஸ்தான் சார்பில் இசாஜ் அகமது, 3 போட்டியில் பங்கேற்று 162 ரன்கள் எடுத்துள்ளார்.
* இங்கு, அதிக விக்கெட் வீழ்த்தியுள்ள இந்திய பவுலர்கள் வரிசையில் ஹர்பஜன் சிங் (5 போட்டி, 9 விக்கெட்) முன்னிலை வகிக்கிறார். பாகிஸ்தான் சார்பில் சக்லைன் முஷ்டாக் (3 போட்டி, 8 விக்கெட்) முன்னிலையில் உள்ளார்.
* இங்கு அதிக ரன்கள் எடுத்துள்ள அணிகள் வரிசையில் தென் ஆப்ரிக்கா முன்னிலை வகிக்கிறது. இம்முறை நெதர்லாந்துக்கு எதிரான லீக் போட்டியில் 5 விக்கெட்டுக்கு 351 ரன்கள் குவித்தது தென் ஆப்ரிக்கா.
---
எட்டு ஆண்டுகளுக்கு பின்...
உலக கோப்பை அரங்கில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் சுமார் எட்டு ஆண்டுகளுக்கு பின் மோத உள்ளன. முன்னதாக கடந்த 2003ல் செஞ்சுரியனில் நடந்த லீக் போட்டியில் இவ்விரு அணிகள் மோதின. இப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
---
நான்கு ஆண்டுகளுக்கு பின்...
இன்றைய அரையிறுதிப் போட்டியின் மூலம், பாகிஸ்தான் அணி சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் ஒருநாள் போட்டியில் பங்கேற்கிறது. கடைசியாக, கடந்த 2007ல் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க சோயப் மாலிக் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியா வந்தது. இதில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
* கடந்த 2008ல் நடந்த முதலாவது ஐ.பி.எல்., தொடரில் ஒரு சில பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்றனர். பின், அதே ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின், இந்திய மண்ணில் போட்டிகளில் பங்கேற்ற பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
---
அரையிறுதிக்கு வந்த பாதை
இந்தியா
லீக் சுற்று:
1. 87 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்துடன் வெற்றி.
2. இங்கிலாந்துக்கு எதிரான போட்டி "டை ஆனது.
3. அயர்லாந்துடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
4. 5 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வென்றது.
5. தென் ஆப்ரிக்காவுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
6. வெஸ்ட் இண்டீசை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
காலிறுதி:
7. ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
பாகிஸ்தான்
லீக் சுற்று:
1. கென்யாவுக்கு எதிராக 205 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
2. 11 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் வெற்றி.
3. கனடாவை 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
4. நியூசிலாந்திடம் 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.
5. 7 விக்கெட் வித்தியாத்தில் ஜிம்பாப்வேயை வென்றது.
6. ஆஸ்திரேலியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
காலிறுதி:
7. வெஸ்ட் இண்டீசை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
---
சச்சின் "99
இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 99 சதம் அடித்துள்ளார். இதில் டெஸ்ட் போட்டியில் 51, ஒருநாள் போட்டியில் 48 சதம் அடங்கும். பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய அரையிறுதியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் சதத்தில் சதம் கடந்து புதிய உலக சாதனை படைக்கலாம்.
* கடந்த 2007ல், பாகிஸ்தானுக்கு எதிராக மொகாலியில் நடந்த போட்டியில் இந்தியாவின் சச்சின், 91 பந்தில் 99 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். தற்போது "சூப்பர் பார்மில் உள்ள இவர், அன்று நழுவவிட்ட சதத்தை, இன்று பதிவு செய்யலாம். இதன்மூலம் சதத்தில் சதம் கடந்து புதிய சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது.

பைனலுக்கு முன்னேறுமா இந்தியா! * இன்று பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை

மொகாலி: மொகாலியில் இன்று நடக்கும் உலக கோப்பை தொடரின் பரபரப்பான அரையிறுதியில் "பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில், அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, பைனலுக்கு முன்னேற இந்திய வீரர்கள் காத்திருக்கின்றனர்.
இந்தியா, இலங்கை, வங்கதேச மண்ணில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று மொகாலியில் நடக்கும் அரையிறுதி போட்டியில் (பகலிரவு), இந்திய அணி, பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை மேற்கொள்கிறது.
பலமான பேட்டிங்:
இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக காட்சி அளிக்கிறது. வங்கதேச அணிக்கு எதிராக சதம் கடந்த சேவக் (342 ரன்கள்), அதன்பின் பெரிய அளவில் சோபிக்கவில்லை. எனவே இவர், இன்று தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் மழை பொழியலாம். "சூப்பர் பார்மில் உள்ள "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (379 ரன்கள்), சதத்தில் சதம் கடந்து சாதிக்கலாம். மூன்றாவது வீரராக களமிறங்கும் காம்பிர் (269 ரன்கள்), தனது பொறுப்பான ஆட்டத்தை தொடரலாம்.
யுவராஜ் நம்பிக்கை:
"மிடில்-ஆர்டரில் யுவராஜ் சிங் (341 ரன்கள்) அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை நான்கு முறை "ஆட்ட நாயகன் விருது வென்றுள்ள இவர், இன்று சொந்த ஊரில் முழுதிறமையை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு வித்திடலாம். கிடைத்த வாய்ப்பை சுரேஷ் ரெய்னா சரியாக பயன்படுத்திக் கொண்டதால், இன்று யூசுப் பதான் களமிறங்குவது சந்தேகம். விராத் கோஹ்லி, கேப்டன் தோனி, பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தும் பட்சத்தில், இமாலய இலக்கை பதிவு செய்யலாம்.
ஜாகிர் மிரட்டல்:
பவுலிங்கை பொறுத்தவரை வேகத்தில் ஜாகிர் கான் மிரட்டி வருகிறார். இதுவரை 17 விக்கெட் வீழ்த்தி உள்ள இவர், இன்றும் விக்கெட் வேட்டை நடத்தலாம். வேகத்துக்கு கைகொடுக்கும் மொகாலி மைதானத்தில் முனாப் படேல், ஸ்ரீசாந்த், ஆஷிஸ் நெஹ்ரா உள்ளிட்டோரும் சாதிக்கலாம்.
அஷ்வின் எதிர்பார்ப்பு:
சுழலில் அனுபவ ஹர்பஜன் சிங் (6 விக்கெட்) இருப்பது பலம். இவருடன் இளம் சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் (4 விக்கெட்), துல்லியமாக பந்துவீசி எதிரணியின் ரன் வேட்டையை தடுக்கிறார். ஆனால் மொகாலி மைதானத்தில் சுழல் எடுபடாது என்பதால், ஒரே ஒரு சுழற்பந்துவீச்சாளருடன் இந்திய அணி களமிறங்கலாம். பகுதிநேர சுழலில் "ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் (11 விக்கெட்) விக்கெட் வேட்டை நடத்தி வருவது கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
"மிடில்-ஆர்டர் பலம்:
லீக் சுற்றில், பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் சொல்லிக் கொள்ளும்படி விளையாடவில்லை. ஆனால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான காலிறுதியில், கம்ரான் அக்மல், முகமது ஹபீஸ் ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தது. எனவே இன்றும் இவர்கள் அசத்தலாம். "மிடில்-ஆர்டரில் அனுபவ மிஸ்பா (192 ரன்கள்), யூனிஸ் கான் (172 ரன்கள்) இருப்பது பலம். இதுவரை 211 ரன்கள் எடுத்துள்ள உமர் அக்மல், தனது ரன் வேட்டையை தொடரலாம். அப்ரிதி (65 ரன்கள்), அப்துல் ரசாக் (101 ரன்கள்) உள்ளிட்ட "ஆல்-ரவுண்டர்கள் பேட்டிங்கில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிராக இவர்கள் எழுச்சி பெறும் பட்சத்தில் அசத்தல் வெற்றி பெறலாம்.
பலமான பந்துவீச்சு:
இம்முறை பாகிஸ்தான் அணியின் மிகப்பெரிய பலம் பந்துவீச்சு. சுழலில் கேப்டன் அப்ரிதி (21 விக்கெட்), விக்கெட் மழை பொழிகிறார். நான்கு முறை, நான்கு அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்தி உள்ள இவர், இந்தியாவுக்கு எதிராக இன்று அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு முகமது ஹபீஸ், அப்துர் ரெஹ்மான், சயீத் அஜ்மல் உள்ளிட்ட இளம் சுழற்பந்துவீச்சாளர்கள் கைகொடுக்க வேண்டும். வேகப்பந்துவீச்சில் உமர் குல் (14 விக்கெட்) நம்பிக்கை அளிக்கிறார். மொகாலி மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு கைகொடுக்கும் என்பதால், சோயப் அக்தருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். வாகாப் ரியாஸ், அப்துல் ரசாக் உள்ளிட்ட வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட் வேட்டை நடத்தும் பட்சத்தில் இந்திய அணிக்கு சிக்கலாகிவிடும்.
பலமான பேட்டிங் வரிசை கொண்ட இந்திய அணி, வலுவான பவுலிங் பலத்துடன் உள்ள பாகிஸ்தானுடன் மோத இருப்பதால், அனல் பறக்கும் ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.
ஐந்தாவது முறை
உலக கோப்பை அரங்கில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஐந்தாவது முறையாக மோத உள்ளன. முன்னதாக மோதிய நான்கு (1992, 96, 99, 2003) போட்டிகளில், இந்திய அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
* கடந்த 1996ல், 8 விக்கெட்டுக்கு 287 ரன்கள் எடுத்த இந்திய அணி, உலக கோப்பை அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பெற்றது. கடந்த 2003ல், 7 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் அணி, உலக கோப்பை அரங்கில் இந்தியாவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.
* கடந்த 1999ல், 6 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்த இந்திய அணி, உலக கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக குறைந்த ஸ்கோரை பெற்றது. கடந்த 1992ல், 173 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான் அணி, உலக கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது.
* உலக கோப்பை அரங்கில், பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில் "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (4 போட்டி, 228 ரன்கள்) முன்னிலை வகிக்கிறார். பாகிஸ்தான் சார்பில், இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் சயீத் அன்வர் (3 போட்டி, 185 ரன்கள்) முதலிடத்தில் உள்ளார்.
* இந்தியா சார்பில் பாகிஸ்தானுக்கு எதிராக உலக கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் வெங்கடேஷ் பிரசாத் (2 போட்டி, 8 விக்கெட்) முன்னிலை வகிக்கிறார். பாகிஸ்தான் சார்பில், இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள் பட்டியலில் முஸ்தாக் அகமது (2 போட்டி, 5 விக்கெட்) முன்னிலையில் உள்ளார்.
---
பாக்., ஆதிக்கம்
சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் 119 முறை மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் 69, இந்தியா 46 போட்டிகளில் வெற்றி கண்டன. நான்கு போட்டிகளுக்கு முடிவு இல்லை.
---
இம்மைதானத்தில் இதுவரை...
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று நடக்கும் அரையிறுதி போட்டி, மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கிறது. இங்கு, இவ்விரு அணிகள் இரண்டு (1999, 2007) போட்டிகளில் மோதியுள்ளன. இரண்டிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
* கடந்த 1999ல், இங்கு நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.5 ஓவரில் 196 ரன்களுக்கு சுருண்டது. பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 42 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 197 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
* கடந்த 2007ல், இங்கு நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 321 ரன்கள் எடுத்தது. இதனை 49.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 322 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி "சேஸ் செய்தது.
* இந்திய அணி, இங்கு விளையாடிய ஒன்பது போட்டிகளில் ஐந்து வெற்றி, நான்கு தோல்வியை பதிவு செய்தது. பாகிஸ்தான் அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் இரண்டு வெற்றி, மூன்று தோல்வியை பெற்றது.
* இங்கு, அதிக ரன்கள் எடுத்துள்ள இந்திய வீரர்கள் வரிசையில் சச்சின் முன்னிலை வகிக்கிறார். இவர் ஆறு போட்டிகளில் பங்கேற்று 281 ரன்கள் எடுத்துள்ளார். பாகிஸ்தான் சார்பில் இசாஜ் அகமது, 3 போட்டியில் பங்கேற்று 162 ரன்கள் எடுத்துள்ளார்.
* இங்கு, அதிக விக்கெட் வீழ்த்தியுள்ள இந்திய பவுலர்கள் வரிசையில் ஹர்பஜன் சிங் (5 போட்டி, 9 விக்கெட்) முன்னிலை வகிக்கிறார். பாகிஸ்தான் சார்பில் சக்லைன் முஷ்டாக் (3 போட்டி, 8 விக்கெட்) முன்னிலையில் உள்ளார்.
* இங்கு அதிக ரன்கள் எடுத்துள்ள அணிகள் வரிசையில் தென் ஆப்ரிக்கா முன்னிலை வகிக்கிறது. இம்முறை நெதர்லாந்துக்கு எதிரான லீக் போட்டியில் 5 விக்கெட்டுக்கு 351 ரன்கள் குவித்தது தென் ஆப்ரிக்கா.
---
எட்டு ஆண்டுகளுக்கு பின்...
உலக கோப்பை அரங்கில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் சுமார் எட்டு ஆண்டுகளுக்கு பின் மோத உள்ளன. முன்னதாக கடந்த 2003ல் செஞ்சுரியனில் நடந்த லீக் போட்டியில் இவ்விரு அணிகள் மோதின. இப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
---
நான்கு ஆண்டுகளுக்கு பின்...
இன்றைய அரையிறுதிப் போட்டியின் மூலம், பாகிஸ்தான் அணி சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் ஒருநாள் போட்டியில் பங்கேற்கிறது. கடைசியாக, கடந்த 2007ல் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க சோயப் மாலிக் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியா வந்தது. இதில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
* கடந்த 2008ல் நடந்த முதலாவது ஐ.பி.எல்., தொடரில் ஒரு சில பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்றனர். பின், அதே ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின், இந்திய மண்ணில் போட்டிகளில் பங்கேற்ற பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
---
அரையிறுதிக்கு வந்த பாதை
இந்தியா
லீக் சுற்று:
1. 87 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்துடன் வெற்றி.
2. இங்கிலாந்துக்கு எதிரான போட்டி "டை ஆனது.
3. அயர்லாந்துடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
4. 5 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வென்றது.
5. தென் ஆப்ரிக்காவுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
6. வெஸ்ட் இண்டீசை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
காலிறுதி:
7. ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
பாகிஸ்தான்
லீக் சுற்று:
1. கென்யாவுக்கு எதிராக 205 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
2. 11 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் வெற்றி.
3. கனடாவை 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
4. நியூசிலாந்திடம் 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.
5. 7 விக்கெட் வித்தியாத்தில் ஜிம்பாப்வேயை வென்றது.
6. ஆஸ்திரேலியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
காலிறுதி:
7. வெஸ்ட் இண்டீசை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
---
சச்சின் "99
இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 99 சதம் அடித்துள்ளார். இதில் டெஸ்ட் போட்டியில் 51, ஒருநாள் போட்டியில் 48 சதம் அடங்கும். பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய அரையிறுதியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் சதத்தில் சதம் கடந்து புதிய உலக சாதனை படைக்கலாம்.
* கடந்த 2007ல், பாகிஸ்தானுக்கு எதிராக மொகாலியில் நடந்த போட்டியில் இந்தியாவின் சச்சின், 91 பந்தில் 99 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். தற்போது "சூப்பர் பார்மில் உள்ள இவர், அன்று நழுவவிட்ட சதத்தை, இன்று பதிவு செய்யலாம். இதன்மூலம் சதத்தில் சதம் கடந்து புதிய சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது.

இஸ்லாமாபாத்: வரும் 30-ம் தேதி மொஹாலியில் இந்தியா-பாகிஸ்தான் அணிக்களுக்கிடையேயான அறையிறுதிப் போட்டியைக் காண பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராசா கிலானி இந்தியா வருகிறார்.

கிரிக்கெட் உலக்கோப்பையின் அரையிறுதியாட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுகின்றன. இந்த போட்டி வரும் 30-ம் தேதி மொஹாலியில் நடக்கிறது. இதைக் காண வருமாறு பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராசா கிலானிக்கு பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்திருந்தார். அதேபோல அதிபர் சர்தாரிக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்தியாவுக்கு செல்வதா, வேண்டாமா என்பது தொடர்பாக கிலானி சர்தாரியை சந்தித்து பேசினார். நேற்று நள்ளிரவில் தொடங்கிய இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நீடித்தது.

இறுதியில் கிலானி இந்தியாவுக்கு சென்று அரையிறுதிப் போட்டியைக் காண்பது என்று முடிவு எடுக்கப்பட்டதாக அதிபரின் செய்தித் தொடர்பாளர் பர்ஹத்துல்லா பாபர் தெரிவித்தார்.

இதற்கு முன்பு மறைந்த சர்வாதிகாரி ஜியா உல் ஹக், இந்தியாவின் அழைப்பை ஏற்று இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைக் காண வந்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

உலக் கோப்பை அரையிறுதியைக் காண வருகிறார் பாக். பிரதமர் கிலானி

இஸ்லாமாபாத்: வரும் 30-ம் தேதி மொஹாலியில் இந்தியா-பாகிஸ்தான் அணிக்களுக்கிடையேயான அறையிறுதிப் போட்டியைக் காண பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராசா கிலானி இந்தியா வருகிறார்.

கிரிக்கெட் உலக்கோப்பையின் அரையிறுதியாட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுகின்றன. இந்த போட்டி வரும் 30-ம் தேதி மொஹாலியில் நடக்கிறது. இதைக் காண வருமாறு பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராசா கிலானிக்கு பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்திருந்தார். அதேபோல அதிபர் சர்தாரிக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்தியாவுக்கு செல்வதா, வேண்டாமா என்பது தொடர்பாக கிலானி சர்தாரியை சந்தித்து பேசினார். நேற்று நள்ளிரவில் தொடங்கிய இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நீடித்தது.

இறுதியில் கிலானி இந்தியாவுக்கு சென்று அரையிறுதிப் போட்டியைக் காண்பது என்று முடிவு எடுக்கப்பட்டதாக அதிபரின் செய்தித் தொடர்பாளர் பர்ஹத்துல்லா பாபர் தெரிவித்தார்.

இதற்கு முன்பு மறைந்த சர்வாதிகாரி ஜியா உல் ஹக், இந்தியாவின் அழைப்பை ஏற்று இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைக் காண வந்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

புதுடில்லி: இரண்டாண்டு இடைவெளிக்கு பின், இந்தியா - பாக்., உள்துறை செயலர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நேற்று டில்லியில் நடந்தது. இதில், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவது தொடர்பாக, நீண்ட காலமாக இருநாட்டு தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. கடந்த 2008ல், மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்தி வைத்தது. இந்நிலையில், இரண்டாண்டு இடைவெளிக்கு பின், தற்போது மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழல் உருவானது.

இதையடுத்து, டில்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில், இருநாட்டு உள்துறை செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இந்திய உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை, பாக்., உள்துறை செயலர் சவுத்ரி கமார் ஜமாம் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். இருநாட்டின் சார்பிலும் தலா 17 அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இதில், மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் உள்ளிட்டவர்களை இந்தியாவிடம் ஒப்படைப்பது, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது, மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷாகிர் ரகுமான் லக்வி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்துவதற்கு இந்திய அதிகாரிகளை அனுமதிப்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து, இதில் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டம் முடிந்ததும், பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஷாகித் மாலிக் கூறுகையில், "பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்தது' என்றார். மத்திய உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை கூறுகையில், "பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. சரியான திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்' என்றார். இன்றும் இப்பேச்சு தொடர்கிறது. டில்லி மொகாலியில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை காண பாக்., பிரதமர் கிலானி வருகிறார். இந்தியா - பாக்., அணிகள் மோதும் இப்போட்டி நடைபெறும் முன், இருதரப்பும் சேர்ந்து கூட்டறிக்கை விடும் சூழ்நிலையும் உருவாகியிருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தியா - பாக்., சுமுக பேச்சு

புதுடில்லி: இரண்டாண்டு இடைவெளிக்கு பின், இந்தியா - பாக்., உள்துறை செயலர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நேற்று டில்லியில் நடந்தது. இதில், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவது தொடர்பாக, நீண்ட காலமாக இருநாட்டு தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. கடந்த 2008ல், மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்தி வைத்தது. இந்நிலையில், இரண்டாண்டு இடைவெளிக்கு பின், தற்போது மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழல் உருவானது.

இதையடுத்து, டில்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில், இருநாட்டு உள்துறை செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இந்திய உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை, பாக்., உள்துறை செயலர் சவுத்ரி கமார் ஜமாம் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். இருநாட்டின் சார்பிலும் தலா 17 அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இதில், மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் உள்ளிட்டவர்களை இந்தியாவிடம் ஒப்படைப்பது, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது, மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷாகிர் ரகுமான் லக்வி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்துவதற்கு இந்திய அதிகாரிகளை அனுமதிப்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து, இதில் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டம் முடிந்ததும், பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஷாகித் மாலிக் கூறுகையில், "பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்தது' என்றார். மத்திய உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை கூறுகையில், "பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. சரியான திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்' என்றார். இன்றும் இப்பேச்சு தொடர்கிறது. டில்லி மொகாலியில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை காண பாக்., பிரதமர் கிலானி வருகிறார். இந்தியா - பாக்., அணிகள் மோதும் இப்போட்டி நடைபெறும் முன், இருதரப்பும் சேர்ந்து கூட்டறிக்கை விடும் சூழ்நிலையும் உருவாகியிருக்கிறது.

மொகாலி: இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும், உலக கோப்பை அரையிறுதி போட்டியில் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரையிலும், சூதாட்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 30ம் தேதி, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு உலக கோப்பை அரையிறுதி போட்டி, கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான டிக்கெட்டின் விலை, தற்போதைய நிலையில் 8 முதல் 10 மடங்கு வரை அதிகமாக வைத்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், புக்கிகளும் பெரிய அளவில் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அணியை இந்தியா வீழ்த்தியவுடனே, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி குறித்த, சூதாட்டம் அதிகரித்துவிட்டது. ஆனால், இவர்களால் எந்த அணி வெல்லும் என்று உறுதியாக கணிக்க முடியவில்லை.
இதனால் இரு அணிகளுக்கும் 90 பைசா என்ற அளவில் தற்போதைய "ரேட்டிங்' உள்ளது. இதுகுறித்து சூதாட்டத்தில் ஈடுபடும் சீனியர் புக்கி ஒருவர் கூறுகையில்,"" இரு அணிகளும் சமபலத்தில் உள்ளன. இதனால் இந்த "ரேட்டிங்கில்' மாற்றம் ஏற்படும்,'' என்றார்.
இந்த மிகப்பெரிய சூதாட்டத்தில், சர்வதேச நிழல் உலக தாதா நேரடியாக ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. தற்போது பாகிஸ்தானின் கராச்சியில் தங்கியிருப்பதாக கருதப்படும், இவரது ஆட்கள் தான் இந்த வேலையில் இறங்கியுள்ளனர் என, நன்கு தெரிந்த புக்கிகள் கூறுகின்றனர். இதுகுறித்து மற்றொரு புக்கி கூறுகையில்,"" இந்தியாவுக்கு எதிரான அரையிறுதியில் பாகிஸ்தான் தோல்வியடைந்தால், இதில் "டி' கம்பெனியின் பின்னணி இருப்பதை மறுக்க முடியாது,'' என்றார்.
இதில் பெரும்பணத்தை முதலீடு செய்ய, இந்தியாவுக்கு வெளியில் இருந்து செயல்படும், ஹவாலா ஆசாமிகள் முன்வந்துள்ளனர் என தெரிகிறது. இருப்பினும் பெரும்பாலான புக்கிகள், பாகிஸ்தானில் இருந்து துபாய் சென்று செயல்படவுள்ளதாக தெரிகிறது. ஏனெனில், இங்குள்ள "கிளப்' தான் இதுபோன்ற நேரங்களில், மிகப்பெரிய பண பரிவர்த்தனையில் ஈடுபடுகிறது.
இருப்பினும், இந்த சூதாட்டத்தைத் தடுக்க போலீசார் மிகப்பெரிய அளவில், முயற்சி எடுத்து வருகின்றனர். இதுகுறித்து மொகாலி போலீசின் இணைக்கமிஷனர் ஹிமன்சு ராய் கூறுகையில்,"" கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடும் புக்கிகள் மற்றும் தரகர்களை கைது செய்ய தீவிர முயற்சி செய்து வருகிறோம்,'' என்றார்.

5 ஆயிரம் கோடி சூதாட்டம்! * இந்தியா-பாக்., போட்டிக்கு உச்சபட்சம்

மொகாலி: இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும், உலக கோப்பை அரையிறுதி போட்டியில் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரையிலும், சூதாட்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 30ம் தேதி, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு உலக கோப்பை அரையிறுதி போட்டி, கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான டிக்கெட்டின் விலை, தற்போதைய நிலையில் 8 முதல் 10 மடங்கு வரை அதிகமாக வைத்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், புக்கிகளும் பெரிய அளவில் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அணியை இந்தியா வீழ்த்தியவுடனே, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி குறித்த, சூதாட்டம் அதிகரித்துவிட்டது. ஆனால், இவர்களால் எந்த அணி வெல்லும் என்று உறுதியாக கணிக்க முடியவில்லை.
இதனால் இரு அணிகளுக்கும் 90 பைசா என்ற அளவில் தற்போதைய "ரேட்டிங்' உள்ளது. இதுகுறித்து சூதாட்டத்தில் ஈடுபடும் சீனியர் புக்கி ஒருவர் கூறுகையில்,"" இரு அணிகளும் சமபலத்தில் உள்ளன. இதனால் இந்த "ரேட்டிங்கில்' மாற்றம் ஏற்படும்,'' என்றார்.
இந்த மிகப்பெரிய சூதாட்டத்தில், சர்வதேச நிழல் உலக தாதா நேரடியாக ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. தற்போது பாகிஸ்தானின் கராச்சியில் தங்கியிருப்பதாக கருதப்படும், இவரது ஆட்கள் தான் இந்த வேலையில் இறங்கியுள்ளனர் என, நன்கு தெரிந்த புக்கிகள் கூறுகின்றனர். இதுகுறித்து மற்றொரு புக்கி கூறுகையில்,"" இந்தியாவுக்கு எதிரான அரையிறுதியில் பாகிஸ்தான் தோல்வியடைந்தால், இதில் "டி' கம்பெனியின் பின்னணி இருப்பதை மறுக்க முடியாது,'' என்றார்.
இதில் பெரும்பணத்தை முதலீடு செய்ய, இந்தியாவுக்கு வெளியில் இருந்து செயல்படும், ஹவாலா ஆசாமிகள் முன்வந்துள்ளனர் என தெரிகிறது. இருப்பினும் பெரும்பாலான புக்கிகள், பாகிஸ்தானில் இருந்து துபாய் சென்று செயல்படவுள்ளதாக தெரிகிறது. ஏனெனில், இங்குள்ள "கிளப்' தான் இதுபோன்ற நேரங்களில், மிகப்பெரிய பண பரிவர்த்தனையில் ஈடுபடுகிறது.
இருப்பினும், இந்த சூதாட்டத்தைத் தடுக்க போலீசார் மிகப்பெரிய அளவில், முயற்சி எடுத்து வருகின்றனர். இதுகுறித்து மொகாலி போலீசின் இணைக்கமிஷனர் ஹிமன்சு ராய் கூறுகையில்,"" கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடும் புக்கிகள் மற்றும் தரகர்களை கைது செய்ய தீவிர முயற்சி செய்து வருகிறோம்,'' என்றார்.

ஆமதாபாத்: உலக கோப்பை பரபரப்பான காலிறுதியில் அசத்தலாக ஆடிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. "நடப்பு சாம்பியனாக வந்த ஆஸ்திரேலிய அணி, இம்முறை காலிறுதியுடன் நடையை கட்டியது. கேப்டன் பாண்டிங்கின் சதம் வீணானது. பவுலிங், பீல்டிங், பேட்டிங் என கிரிக்கெட்டின் அனைத்து துறைகளிலும் கலக்கிய இந்திய அணி, அரையிறுதிக்கு ஜோராக முன்னேறியது. வரும் 30ம் தேதி மொகாலியில் நடக்கும் அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று நடந்த இரண்டாவது காலிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதின.
சேவக் வாய்ப்பு:
இந்திய அணியில் யூசுப் பதான் நீக்கப்பட்டு, மீண்டும் சேவக் இடம் பெற்றார். ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவன் ஸ்மித்துக்கு பதிலாக டேவிட் ஹசி வாய்ப்பு பெற்றார். "டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங், "பேட்டிங் தேர்வு செய்தார்.
முதலில் அஷ்வின்:
ஆஸ்திரேலிய அணிக்கு வாட்சன், ஹாடின் இணைந்து விவேகமான துவக்கம் தந்தனர். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடந்த போட்டி போலவே இம்முறையும் முதல் ஓவரை வீச அஷ்வினை அழைத்தார் இந்திய கேப்டன் தோனி. இந்த ஓவரில் 3 ரன் மட்டும் கொடுத்து அசத்தினார். அடுத்த ஓவரில் ஜாகிர் கான் ஒரு ரன் கொடுக்க, ஆஸ்திரேலிய அணியின் ரன் வேகம் கட்டுப்படுத்தப்பட்டது. அஷ்வின் பந்தில் "ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்ற வாட்சன்(25) பரிதாபமாக போல்டானார்.
யுவராஜ் அபாரம்:
அடுத்து வந்த கேப்டன் பாண்டிங் "கம்பெனி கொடுக்க, தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார் ஹாடின். இவர், முனாப் வீசிய 14வது ஓவரில் 3 பவுண்டரி விளாசினார். யுவராஜ் ஓவரில் பாண்டிங் 2 பவுண்டரி அடித்து அசத்தினார். அரைசதம் கடந்த ஹாடின்(53), யுவராஜ் சுழலில் சிக்கினார். மைக்கேல் கிளார்க்கும்(8), யுவராஜ் வலையில் விழுந்தார். மீண்டும் பந்துவீச வந்த ஜாகிர் கான், மைக்கேல் ஹசியை(3) வெளியேற்றி திருப்புமுனை ஏற்படுத்தினார். இப்படி இந்திய வீரர்கள் அபாரமாக பந்துவீச, ஆஸ்திரேலிய அணி 33.3 ஒவரில் 4 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்து தவித்தது.
30வது சதம்:
இதற்கு பின் கேப்டன் பாண்டிங் பொறுப்பாக ஆடினார். யுவராஜ் வீசிய போட்டியின் 39வது ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த இவர், தனது திறமையை நிரூபித்தார். கேமரான் ஒயிட்(12) ஏமாற்றினார். பேட்டிங் "பவர்பிளே ஓவர்களில் பாண்டிங்-டேவிட் ஹசி அதிரடியாக ரன் சேர்த்தனர். அஷ்வின் பந்தில் டேவிட் ஹசி ஒரு இமாலய சிக்சர்(85 மீ., தூரம்) அடித்தார். மறுமுனையில் அஷ்வின் பந்தை ஒரு ரன்னுக்கு தட்டி விட்ட பாண்டிங், ஒரு நாள் போட்டிகளில் தனது 30வது சதம் எட்டினார். இது உலக கோப்பை அரங்கில் இவரது 5வது சதம். பின் அஷ்வின் பந்தை "ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்ற பாண்டிங் 104 ரன்களுக்கு(7 பவுண்டரி, 1 சிக்சர்) அவுட்டானார். ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்தது. டேவிட் ஹசி(38), ஜான்சன்(6) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்தியா சார்பில் ஜாகிர், அஷ்வின், யுவராஜ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
சச்சின் அரைசதம்:
சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு சேவக், சச்சின் இணைந்து நல்ல துவக்கம் கொடுத்தனர். சேவக் 15 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த காம்பிருடன் சேர்ந்து "சூப்பராக ஆடினார் அனுபவ சச்சின். இவர், ஜான்சன் ஓவரில் வரிசையாக இரண்டு பவுண்டரி அடித்தார். ஒரு நாள் போட்டிகளில் தனது 94வது அரைசதம் கடந்த சச்சின்(53), டெய்ட் வேகத்தில் வீழ்ந்தார். விராத் கோஹ்லி(24) தாக்குப்பிடிக்கவில்லை. இதற்கு பின் ஒன்று, இரண்டு ரன்களாக சேர்த்த காம்பிர், அணிக்கு கைகொடுத்தார். அரைசதம் எட்டிய இவர் வீணாக 50 ரன்களுக்கு ரன் அவுட்டானார். அப்போது இந்திய அணி 33.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்து, தவித்தது.
யுவராஜ் ராசி:
போட்டியின் 38வது ஓவரை வீசிய பிரட் லீ அதிர்ச்சி கொடுத்தார். இவரது வேகத்தில் பொறுப்பற்ற "ஷாட் அடித்த தோனி(7) அவுட்டானார். பின் யுவராஜ், சுரேஷ் ரெய்னா சேர்ந்து துணிச்சலாக போராடினர். பிரட் லீ ஓவரில் யுவராஜ் 2 பவுண்டரி, ரெய்னா 1 பவுண்டரி அடிக்க, ஒட்டுமொத்தமாக 15 ரன்கள் எடுக்கப்பட்டன. தொடர்ந்து டெய்ட் ஓவரிலும் 13 ரன்கள் கிடைக்க, இந்தியாவுக்கு ஏற்பட்ட நெருக்கடி தணிந்தது. அபாரமாக ஆடிய யுவராஜ் இத்தொடரில் தனது 4வது அரைசதம் அடித்தார். இது ஒரு நாள் அரங்கில் இவரது 49வது அரைசதம். இவர் அரைசதம் அடித்தால், இந்தியாவின் வெற்றி உறுதி என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமானது. மறுபக்கம் பிரட் லீ பந்தில் ஒரு சிக்சர் அடித்த ரெய்னா, ரசிகர்களை உற்சாகத்தின் உச்சிக்கே கொண்டு சென்றார். பிரட் லீ பந்தில் யுவராஜ் ஒரு "சூப்பர் பவுண்டரி அடிக்க, இந்திய அணி 47.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 261 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்றது. யுவராஜ் 57(8 பவுண்டரி), ரெய்னா 34(2 பவுண்டரி, 1 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தனர்.
இவ்வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியது. கடந்த 1999ல் இருந்து உலக கோப்பை அரங்கில் மிரட்டி வந்த ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம், இம்முறை காலிறுதியுடன் முடிவுக்கு வந்தது.
மீண்டும் "ஆல்-ரவுண்டராக ஜொலித்த யுவராஜ் சிங் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இரண்டாவது இடம்
இந்தியாவுக்கு எதிரான காலிறுதியில் 118 பந்தில் 104 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், உலக கோப்பை அரங்கில் தனது 5வது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் உலக கோப்பை வரலாற்றில் அதிக சதம் கடந்த வீரர்கள் வரிசையில் 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (6 சதம்) உள்ளார்.
---
தோனி "100
நேற்று கேப்டனாக தனது 100வது ஒரு நாள் போட்டியில் பங்கேற்றார் இந்தியாவின் தோனி. விக்கெட் கீப்பர் ஒருவர் 100 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டது இதுவே முதன்முறை.
---
சச்சின் 18 ஆயிரம் ரன்கள்
ஒரு நாள் போட்டிகளில் 18 ஆயிரம் ரன்களை எட்டிய உலகின் முதல் வீரர் என்ற மகத்தான சாதனை படைத்தார் இந்தியாவின் "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். நேற்று அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், 45வது ரன்னை எடுத்த போது, ஒருநாள் போட்டிகளில் 18 ஆயிரம் ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இதுவரை 451 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 48 சதம், 94 அரைசதம் சேர்த்து, அதிக ரன்கள் எடுத்துள்ளவர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில்( 18,008 ரன்கள்) உள்ளார். இரண்டாவது இடத்தில் இலங்கையின் ஜெயசூர்யா(444 போட்டி, 13, 428 ரன்கள்) இருக்கிறார். மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங்(359 போட்டி, 13, 288) உள்ளார்.
ஸ்கோர்போர்டு
ஆஸ்திரேலியா
வாட்சன்(ப)அஷ்வின் 25(38)
ஹாடின்(கே)ரெய்னா(ப)யுவராஜ் 53(62)
பாண்டிங்(கே)ஜாகிர்(ப)அஷ்வின் 104(118)
கிளார்க்(கே)ஜாகிர்(ப)யுவராஜ் 8(19)
மைக்கேல் ஹசி(ப)ஜாகிர் 3(9)
ஒயிட்(கே)+(ப)ஜாகிர் 12(22)
டேவிட்-அவுட் இல்லை- 38(26)
ஜான்சன்-அவுட் இல்லை- 6(6)
உதிரிகள் 11
மொத்தம் (50 ஓவரில் 6 விக்.,) 260
விக்கெட் வீழ்ச்சி: 1-40(வாட்சன்), 2-110(ஹாடின்), 3-140(கிளார்க்), 4-150(மைக்கேல் ஹசி), 5-190(காமிரான் ஒயிட்), 6-245(பாண்டிங்).
பந்துவீச்சு: அஷ்வின் 10-0-52-2, ஜாகிர் கான் 10-0-53-2, ஹர்பஜன் சிங் 10-0-50-0, முனாப் படேல் 7-0-44-0, யுவராஜ் சிங் 10-0-44-2, சச்சின் 2-0-9-0, விராத் கோஹ்லி 1-0-6-0.
இந்தியா
சேவக்(கே)மைக்கேல் ஹசி(ப)வாட்சன் 15(22)
சச்சின்(கே)ஹாடின்(ப)டெய்ட் 53(68)
காம்பிர்-ரன் அவுட்(ஒயிட்/டேவிட் ஹசி) 50(64)
கோஹ்லி(கே)கிளார்க்(ப)டேவிட் ஹசி 24(33)
யுவராஜ் சிங்-அவுட் இல்லை- 57(65)
தோனி(கே)கிளார்க்(ப)பிரட் லீ 7(8)
ரெய்னா-அவுட் இல்லை- 34(28)
உதிரிகள் 21
மொத்தம் (47.4 ஓவரில் 5 விக்., ) 261
விக்கெட் வீழ்ச்சி: 1-44(சேவக்), 2-94(சச்சின்), 3-143(விராத் கோஹ்லி), 4-168(காம்பிர்), 5-187(தோனி).
பந்து வீச்சு: பிரட் லீ 8.4-1-45-1, டெய்ட் 7-0-52-1, ஜான்சன் 8-0-41-0, வாட்சன் 7-0-37-1, கிரெஜ்ஜா 9-0-45-0, கிளார்க் 3-0-19-0, டேவிட் ஹசி 5-0-19-1.

ஆஸி., கங்காருவை வதம் செய்த இந்திய புலி! * அரையிறுதியில் இந்தியா-பாக்., மோதல்

ஆமதாபாத்: உலக கோப்பை பரபரப்பான காலிறுதியில் அசத்தலாக ஆடிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. "நடப்பு சாம்பியனாக வந்த ஆஸ்திரேலிய அணி, இம்முறை காலிறுதியுடன் நடையை கட்டியது. கேப்டன் பாண்டிங்கின் சதம் வீணானது. பவுலிங், பீல்டிங், பேட்டிங் என கிரிக்கெட்டின் அனைத்து துறைகளிலும் கலக்கிய இந்திய அணி, அரையிறுதிக்கு ஜோராக முன்னேறியது. வரும் 30ம் தேதி மொகாலியில் நடக்கும் அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று நடந்த இரண்டாவது காலிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதின.
சேவக் வாய்ப்பு:
இந்திய அணியில் யூசுப் பதான் நீக்கப்பட்டு, மீண்டும் சேவக் இடம் பெற்றார். ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவன் ஸ்மித்துக்கு பதிலாக டேவிட் ஹசி வாய்ப்பு பெற்றார். "டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங், "பேட்டிங் தேர்வு செய்தார்.
முதலில் அஷ்வின்:
ஆஸ்திரேலிய அணிக்கு வாட்சன், ஹாடின் இணைந்து விவேகமான துவக்கம் தந்தனர். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடந்த போட்டி போலவே இம்முறையும் முதல் ஓவரை வீச அஷ்வினை அழைத்தார் இந்திய கேப்டன் தோனி. இந்த ஓவரில் 3 ரன் மட்டும் கொடுத்து அசத்தினார். அடுத்த ஓவரில் ஜாகிர் கான் ஒரு ரன் கொடுக்க, ஆஸ்திரேலிய அணியின் ரன் வேகம் கட்டுப்படுத்தப்பட்டது. அஷ்வின் பந்தில் "ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்ற வாட்சன்(25) பரிதாபமாக போல்டானார்.
யுவராஜ் அபாரம்:
அடுத்து வந்த கேப்டன் பாண்டிங் "கம்பெனி கொடுக்க, தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார் ஹாடின். இவர், முனாப் வீசிய 14வது ஓவரில் 3 பவுண்டரி விளாசினார். யுவராஜ் ஓவரில் பாண்டிங் 2 பவுண்டரி அடித்து அசத்தினார். அரைசதம் கடந்த ஹாடின்(53), யுவராஜ் சுழலில் சிக்கினார். மைக்கேல் கிளார்க்கும்(8), யுவராஜ் வலையில் விழுந்தார். மீண்டும் பந்துவீச வந்த ஜாகிர் கான், மைக்கேல் ஹசியை(3) வெளியேற்றி திருப்புமுனை ஏற்படுத்தினார். இப்படி இந்திய வீரர்கள் அபாரமாக பந்துவீச, ஆஸ்திரேலிய அணி 33.3 ஒவரில் 4 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்து தவித்தது.
30வது சதம்:
இதற்கு பின் கேப்டன் பாண்டிங் பொறுப்பாக ஆடினார். யுவராஜ் வீசிய போட்டியின் 39வது ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த இவர், தனது திறமையை நிரூபித்தார். கேமரான் ஒயிட்(12) ஏமாற்றினார். பேட்டிங் "பவர்பிளே ஓவர்களில் பாண்டிங்-டேவிட் ஹசி அதிரடியாக ரன் சேர்த்தனர். அஷ்வின் பந்தில் டேவிட் ஹசி ஒரு இமாலய சிக்சர்(85 மீ., தூரம்) அடித்தார். மறுமுனையில் அஷ்வின் பந்தை ஒரு ரன்னுக்கு தட்டி விட்ட பாண்டிங், ஒரு நாள் போட்டிகளில் தனது 30வது சதம் எட்டினார். இது உலக கோப்பை அரங்கில் இவரது 5வது சதம். பின் அஷ்வின் பந்தை "ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்ற பாண்டிங் 104 ரன்களுக்கு(7 பவுண்டரி, 1 சிக்சர்) அவுட்டானார். ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்தது. டேவிட் ஹசி(38), ஜான்சன்(6) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்தியா சார்பில் ஜாகிர், அஷ்வின், யுவராஜ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
சச்சின் அரைசதம்:
சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு சேவக், சச்சின் இணைந்து நல்ல துவக்கம் கொடுத்தனர். சேவக் 15 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த காம்பிருடன் சேர்ந்து "சூப்பராக ஆடினார் அனுபவ சச்சின். இவர், ஜான்சன் ஓவரில் வரிசையாக இரண்டு பவுண்டரி அடித்தார். ஒரு நாள் போட்டிகளில் தனது 94வது அரைசதம் கடந்த சச்சின்(53), டெய்ட் வேகத்தில் வீழ்ந்தார். விராத் கோஹ்லி(24) தாக்குப்பிடிக்கவில்லை. இதற்கு பின் ஒன்று, இரண்டு ரன்களாக சேர்த்த காம்பிர், அணிக்கு கைகொடுத்தார். அரைசதம் எட்டிய இவர் வீணாக 50 ரன்களுக்கு ரன் அவுட்டானார். அப்போது இந்திய அணி 33.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்து, தவித்தது.
யுவராஜ் ராசி:
போட்டியின் 38வது ஓவரை வீசிய பிரட் லீ அதிர்ச்சி கொடுத்தார். இவரது வேகத்தில் பொறுப்பற்ற "ஷாட் அடித்த தோனி(7) அவுட்டானார். பின் யுவராஜ், சுரேஷ் ரெய்னா சேர்ந்து துணிச்சலாக போராடினர். பிரட் லீ ஓவரில் யுவராஜ் 2 பவுண்டரி, ரெய்னா 1 பவுண்டரி அடிக்க, ஒட்டுமொத்தமாக 15 ரன்கள் எடுக்கப்பட்டன. தொடர்ந்து டெய்ட் ஓவரிலும் 13 ரன்கள் கிடைக்க, இந்தியாவுக்கு ஏற்பட்ட நெருக்கடி தணிந்தது. அபாரமாக ஆடிய யுவராஜ் இத்தொடரில் தனது 4வது அரைசதம் அடித்தார். இது ஒரு நாள் அரங்கில் இவரது 49வது அரைசதம். இவர் அரைசதம் அடித்தால், இந்தியாவின் வெற்றி உறுதி என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமானது. மறுபக்கம் பிரட் லீ பந்தில் ஒரு சிக்சர் அடித்த ரெய்னா, ரசிகர்களை உற்சாகத்தின் உச்சிக்கே கொண்டு சென்றார். பிரட் லீ பந்தில் யுவராஜ் ஒரு "சூப்பர் பவுண்டரி அடிக்க, இந்திய அணி 47.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 261 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்றது. யுவராஜ் 57(8 பவுண்டரி), ரெய்னா 34(2 பவுண்டரி, 1 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தனர்.
இவ்வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியது. கடந்த 1999ல் இருந்து உலக கோப்பை அரங்கில் மிரட்டி வந்த ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம், இம்முறை காலிறுதியுடன் முடிவுக்கு வந்தது.
மீண்டும் "ஆல்-ரவுண்டராக ஜொலித்த யுவராஜ் சிங் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இரண்டாவது இடம்
இந்தியாவுக்கு எதிரான காலிறுதியில் 118 பந்தில் 104 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், உலக கோப்பை அரங்கில் தனது 5வது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் உலக கோப்பை வரலாற்றில் அதிக சதம் கடந்த வீரர்கள் வரிசையில் 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (6 சதம்) உள்ளார்.
---
தோனி "100
நேற்று கேப்டனாக தனது 100வது ஒரு நாள் போட்டியில் பங்கேற்றார் இந்தியாவின் தோனி. விக்கெட் கீப்பர் ஒருவர் 100 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டது இதுவே முதன்முறை.
---
சச்சின் 18 ஆயிரம் ரன்கள்
ஒரு நாள் போட்டிகளில் 18 ஆயிரம் ரன்களை எட்டிய உலகின் முதல் வீரர் என்ற மகத்தான சாதனை படைத்தார் இந்தியாவின் "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். நேற்று அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், 45வது ரன்னை எடுத்த போது, ஒருநாள் போட்டிகளில் 18 ஆயிரம் ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இதுவரை 451 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 48 சதம், 94 அரைசதம் சேர்த்து, அதிக ரன்கள் எடுத்துள்ளவர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில்( 18,008 ரன்கள்) உள்ளார். இரண்டாவது இடத்தில் இலங்கையின் ஜெயசூர்யா(444 போட்டி, 13, 428 ரன்கள்) இருக்கிறார். மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங்(359 போட்டி, 13, 288) உள்ளார்.
ஸ்கோர்போர்டு
ஆஸ்திரேலியா
வாட்சன்(ப)அஷ்வின் 25(38)
ஹாடின்(கே)ரெய்னா(ப)யுவராஜ் 53(62)
பாண்டிங்(கே)ஜாகிர்(ப)அஷ்வின் 104(118)
கிளார்க்(கே)ஜாகிர்(ப)யுவராஜ் 8(19)
மைக்கேல் ஹசி(ப)ஜாகிர் 3(9)
ஒயிட்(கே)+(ப)ஜாகிர் 12(22)
டேவிட்-அவுட் இல்லை- 38(26)
ஜான்சன்-அவுட் இல்லை- 6(6)
உதிரிகள் 11
மொத்தம் (50 ஓவரில் 6 விக்.,) 260
விக்கெட் வீழ்ச்சி: 1-40(வாட்சன்), 2-110(ஹாடின்), 3-140(கிளார்க்), 4-150(மைக்கேல் ஹசி), 5-190(காமிரான் ஒயிட்), 6-245(பாண்டிங்).
பந்துவீச்சு: அஷ்வின் 10-0-52-2, ஜாகிர் கான் 10-0-53-2, ஹர்பஜன் சிங் 10-0-50-0, முனாப் படேல் 7-0-44-0, யுவராஜ் சிங் 10-0-44-2, சச்சின் 2-0-9-0, விராத் கோஹ்லி 1-0-6-0.
இந்தியா
சேவக்(கே)மைக்கேல் ஹசி(ப)வாட்சன் 15(22)
சச்சின்(கே)ஹாடின்(ப)டெய்ட் 53(68)
காம்பிர்-ரன் அவுட்(ஒயிட்/டேவிட் ஹசி) 50(64)
கோஹ்லி(கே)கிளார்க்(ப)டேவிட் ஹசி 24(33)
யுவராஜ் சிங்-அவுட் இல்லை- 57(65)
தோனி(கே)கிளார்க்(ப)பிரட் லீ 7(8)
ரெய்னா-அவுட் இல்லை- 34(28)
உதிரிகள் 21
மொத்தம் (47.4 ஓவரில் 5 விக்., ) 261
விக்கெட் வீழ்ச்சி: 1-44(சேவக்), 2-94(சச்சின்), 3-143(விராத் கோஹ்லி), 4-168(காம்பிர்), 5-187(தோனி).
பந்து வீச்சு: பிரட் லீ 8.4-1-45-1, டெய்ட் 7-0-52-1, ஜான்சன் 8-0-41-0, வாட்சன் 7-0-37-1, கிரெஜ்ஜா 9-0-45-0, கிளார்க் 3-0-19-0, டேவிட் ஹசி 5-0-19-1.

புதுடில்லி: உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோத வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கிரிக்கெட் அரங்கில், இந்தியா-பாகிஸ்தான் மோதல் என்றால் அதிக எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கும். அதுவும் உலக கோப்பை போன்ற மிகப்பெரிய தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மோதல் என்றால் சொல்லவா வேண்டும்.
இந்தியா ஆதிக்கம்:
உலக கோப்பை அரங்கில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நான்கு முறை (1992, 96, 99, 2003) மோதியுள்ளன. இதில் அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடந்த 2007ல் கரீபிய மண்ணில் நடந்த உலக கோப்பை தொடரில் இந்தியா (பி), பாகிஸ்தான் (டி) அணிகள் வெவ்வேறு பிரிவில் இடம் பெற்றதால் லீக் சுற்றில் மோத வாய்ப்பு இல்லாமல் போனது. தவிர, இவ்விரு அணிகள் முதல் சுற்றோடு வெளியேறியதால், அடுத்த சுற்றுகளிலும் எதிர்கொள்ள முடியாமல் போனது.
ஐந்தாவது முறை:
தற்போதைய பத்தாவது உலக கோப்பை தொடரில் இந்தியா (பி), பாகிஸ்தான் (ஏ) அணிகள் வெவ்வேறு பிரிவில் இடம் பிடித்ததால், மீண்டும் ஒருமுறை லீக் சுற்றில் மோத முடியாமல் போனது. காலிறுதியிலும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத வாய்ப்பு இல்லாமல் போனது. ஏனெனில் வரும் 23ம் தேதி மிர்புரில் நடக்கும் போட்டியில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. வரும் 24ம் தேதி நடக்கும் காலிறுதியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன.
இவ்விரு அணிகள் தங்களது காலிறுதிப் போட்டிகளில் வெற்றி பெறும் பட்சத்தில், வரும் 30ம் தேதி மொகாலியில் நடக்கவுள்ள அரையிறுதியில் மோதலாம். இதன்மூலம் இவ்விரு அணிகள் ஐந்தாவது முறையாக உலக கோப்பை அரங்கில் எதிர்கொள் நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் இந்திய அணி தனது ஆதிக்கத்தை தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அரையிறுதியில் இந்தியா-பாக்., மோதல்?

புதுடில்லி: உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோத வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கிரிக்கெட் அரங்கில், இந்தியா-பாகிஸ்தான் மோதல் என்றால் அதிக எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கும். அதுவும் உலக கோப்பை போன்ற மிகப்பெரிய தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மோதல் என்றால் சொல்லவா வேண்டும்.
இந்தியா ஆதிக்கம்:
உலக கோப்பை அரங்கில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நான்கு முறை (1992, 96, 99, 2003) மோதியுள்ளன. இதில் அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடந்த 2007ல் கரீபிய மண்ணில் நடந்த உலக கோப்பை தொடரில் இந்தியா (பி), பாகிஸ்தான் (டி) அணிகள் வெவ்வேறு பிரிவில் இடம் பெற்றதால் லீக் சுற்றில் மோத வாய்ப்பு இல்லாமல் போனது. தவிர, இவ்விரு அணிகள் முதல் சுற்றோடு வெளியேறியதால், அடுத்த சுற்றுகளிலும் எதிர்கொள்ள முடியாமல் போனது.
ஐந்தாவது முறை:
தற்போதைய பத்தாவது உலக கோப்பை தொடரில் இந்தியா (பி), பாகிஸ்தான் (ஏ) அணிகள் வெவ்வேறு பிரிவில் இடம் பிடித்ததால், மீண்டும் ஒருமுறை லீக் சுற்றில் மோத முடியாமல் போனது. காலிறுதியிலும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத வாய்ப்பு இல்லாமல் போனது. ஏனெனில் வரும் 23ம் தேதி மிர்புரில் நடக்கும் போட்டியில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. வரும் 24ம் தேதி நடக்கும் காலிறுதியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன.
இவ்விரு அணிகள் தங்களது காலிறுதிப் போட்டிகளில் வெற்றி பெறும் பட்சத்தில், வரும் 30ம் தேதி மொகாலியில் நடக்கவுள்ள அரையிறுதியில் மோதலாம். இதன்மூலம் இவ்விரு அணிகள் ஐந்தாவது முறையாக உலக கோப்பை அரங்கில் எதிர்கொள் நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் இந்திய அணி தனது ஆதிக்கத்தை தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

முக நூல்

Popular Posts