background img

புதிய வரவு

Showing posts with label Cricket match. Show all posts
Showing posts with label Cricket match. Show all posts
மும்பை : பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடனான பிளே ஆப் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மும்பை, வாங்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீசியது. பெங்களூர் தொடக்க வீரர்களாக அகர்வால், கிறிஸ் கேல் களமிறங்கினர். அதிரடி வீரர் கிறிஸ் கேல் 8 ரன் மட்டுமே எடுத்து அஸ்வின் சுழலில் ஆட்டமிழந்தார். அகர்வால் 34 ரன், டிவில்லியர்ஸ் 11 ரன்னில் வெளியேற பெங்களூர் அணி தடுமாறியது.

இந்த நிலையில், கோஹ்லி & போமர்ஸ்பாக் ஜோடி 4வது விக்கெட்டுக்கு கடுமையாகப் போராடி 48 ரன் சேர்த்தது. போமர்ஸ்பாக் 29 ரன் எடுத்து போலிஞ்சர் வேகத்தில் ஸ்டம்புகள் சிதற வெளியேறினார். பெங்களூர் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்தது. கோஹ்லி 70 ரன் (44 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), திவாரி 9 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அடுத்து களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்து வென்றது. ரெய்னா ஆட்டமிழக்காமல் 73 ரன் விளாசினார். பத்ரிநாத் 34, டோனி 29, மார்க்கெல் 28 ரன் எடுத்தனர். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

பைனலுக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்

மும்பை : பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடனான பிளே ஆப் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மும்பை, வாங்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீசியது. பெங்களூர் தொடக்க வீரர்களாக அகர்வால், கிறிஸ் கேல் களமிறங்கினர். அதிரடி வீரர் கிறிஸ் கேல் 8 ரன் மட்டுமே எடுத்து அஸ்வின் சுழலில் ஆட்டமிழந்தார். அகர்வால் 34 ரன், டிவில்லியர்ஸ் 11 ரன்னில் வெளியேற பெங்களூர் அணி தடுமாறியது.

இந்த நிலையில், கோஹ்லி & போமர்ஸ்பாக் ஜோடி 4வது விக்கெட்டுக்கு கடுமையாகப் போராடி 48 ரன் சேர்த்தது. போமர்ஸ்பாக் 29 ரன் எடுத்து போலிஞ்சர் வேகத்தில் ஸ்டம்புகள் சிதற வெளியேறினார். பெங்களூர் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்தது. கோஹ்லி 70 ரன் (44 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), திவாரி 9 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அடுத்து களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்து வென்றது. ரெய்னா ஆட்டமிழக்காமல் 73 ரன் விளாசினார். பத்ரிநாத் 34, டோனி 29, மார்க்கெல் 28 ரன் எடுத்தனர். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

மும்பை: ஐ.பி.எல்., "பிளே ஆப்' சுற்று முதல் போட்டியில், இன்று சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மீண்டும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக பைனலுக்கு செல்லலாம் என்பதால், இரு அணிகளும் கடும் போராட்டத்தை வெளிப்படுத்த தயாராக உள்ளன.
இந்தியாவில் நடக்கும் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் முடிந்து இன்று, "பிளே ஆப்' சுற்று போட்டிகள் துவங்குகின்றன. இதில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடக்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
எழுச்சி தேவை:
லீக் சுற்று போட்டிகளில் 9 வெற்றிகள் பெற்ற சென்னை அணி, கடைசி போட்டியில் பெங்களூருவுடன் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. இதற்கு பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டம் தான் முக்கிய காரணம். துவக்க வீரர்கள் மைக்கேல் ஹசி (429 ரன்கள்), முரளி விஜய் (334), ரெய்னா (357), பத்ரிநாத் (362) மற்றும் சகா ஆகியோர், கடந்த போட்டியைப் போல அல்லாமல், இன்று பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
இக்கட்டான நேரங்களில் அணிக்கு கைகொடுக்கும் கேப்டன் தோனி (341), மறுபடியும் ரன்குவிப்புக்கு உதவுவது நிர்வாகத்துக்கு ஆறுதல் தான். நேற்று முன்தினம் 40 பந்துகளில் 70 ரன்கள் எடுத்த இவர், இன்றும் அதை தொடர முயற்சிக்கலாம்.
ஆறுதல் கிடைக்குமா:
சென்னை அணியின் வேகப்பந்து வீச்சில், இதுவரை தலா 15 விக்கெட் வீழ்த்திய போலிஞ்சர், ஆல்பி மார்கல் இருவரும் மீண்டும் சரியான பாதைக்கு திரும்பினால் நல்லது. சுழற்பந்து வீச்சில் தமிழகத்தின் அஷ்வின் (16 விக்.,) இன்றைய போட்டியில் மீண்டும் ஜொலித்தால் பெங்களூரு அணியின் ரன்குவிப்புக்கு அணையிடலாம்.
கெய்ல் மிரட்டல்:
துவக்கத்தில் தோல்விகளால் துவண்டு கிடந்தது பெங்களூரு அணி. கிறிஸ் கெய்லின் வருகைக்குப் பின் திடீரென எழுச்சி கண்டது. முக்கியமாக 9 போட்டிகளில் மட்டும் பங்கேற்று 511 ரன்கள் குவித்துள்ள கெய்லின் பேட்டிங்தான் இதற்கு காரணம். சென்னைக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் அரைசதம் அடித்து மிரட்டிய இவர், இன்றும் அதிரடியை தொடர காத்திருக்கிறார்.
இவருடன் விராத் கோஹ்லி (444), டிவிலியர்ஸ் (262) ஆகியோரும் சென்னை அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின் வரிசையில் சவுரப் திவாரி, முகமது கைப் ஆறுதல் தரலாம்.
ஜாகிர் அசத்தல்:
உலக கோப்பை தொடரைப் போல, வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் மீண்டும் துவக்கத்தில் விக்கெட்டுகளை சாய்ப்பது, பெரும் பலமாக உள்ளது. இவரது "சகா' அரவிந்த் தன் பங்குக்கு விக்கெட் வேட்டை நடத்துகிறார். அனுபவ கேப்டன் வெட்டோரி, அபிமன்யு மிதுன் என வலுவான பவுலிங் படை, சென்னை அணிக்கு மீண்டும் சிக்கல் தர காத்திருக்கிறது.
வெற்றி யாருக்கு?
இன்றைய போட்டியில் வெல்லும் அணி, நேரடியாக வரும் 28ம் தேதி நடக்கும், நான்காவது ஐ.பி.எல்., தொடரின் பைனலுக்கு முன்னேறலாம். தோல்வியடையும் அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு உள்ளது. இருப்பினும், முதல் அணியாக பைனலுக்கு செல்ல இரு அணிகளும் முயற்சிக்கும் என்பதால், ரசிகர்களுக்கு விறுவிறுப்பான போட்டி காத்திருக்கிறது.
----
சென்னை ஆதிக்கம்
இதுவரை நடந்த ஐ.பி.எல்., போட்டிகளில், இரு அணிகளும் 9 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 5ல் சென்னை கிங்ஸ் அணியும், 4ல் பெங்களூரு அணியும் வென்றுள்ளன.
-----

பைனலுக்கு முன்னேறுமா சென்னை கிங்ஸ்? * இன்று பெங்களூரு அணியுடன் மோதல்

மும்பை: ஐ.பி.எல்., "பிளே ஆப்' சுற்று முதல் போட்டியில், இன்று சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மீண்டும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக பைனலுக்கு செல்லலாம் என்பதால், இரு அணிகளும் கடும் போராட்டத்தை வெளிப்படுத்த தயாராக உள்ளன.
இந்தியாவில் நடக்கும் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் முடிந்து இன்று, "பிளே ஆப்' சுற்று போட்டிகள் துவங்குகின்றன. இதில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடக்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
எழுச்சி தேவை:
லீக் சுற்று போட்டிகளில் 9 வெற்றிகள் பெற்ற சென்னை அணி, கடைசி போட்டியில் பெங்களூருவுடன் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. இதற்கு பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டம் தான் முக்கிய காரணம். துவக்க வீரர்கள் மைக்கேல் ஹசி (429 ரன்கள்), முரளி விஜய் (334), ரெய்னா (357), பத்ரிநாத் (362) மற்றும் சகா ஆகியோர், கடந்த போட்டியைப் போல அல்லாமல், இன்று பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
இக்கட்டான நேரங்களில் அணிக்கு கைகொடுக்கும் கேப்டன் தோனி (341), மறுபடியும் ரன்குவிப்புக்கு உதவுவது நிர்வாகத்துக்கு ஆறுதல் தான். நேற்று முன்தினம் 40 பந்துகளில் 70 ரன்கள் எடுத்த இவர், இன்றும் அதை தொடர முயற்சிக்கலாம்.
ஆறுதல் கிடைக்குமா:
சென்னை அணியின் வேகப்பந்து வீச்சில், இதுவரை தலா 15 விக்கெட் வீழ்த்திய போலிஞ்சர், ஆல்பி மார்கல் இருவரும் மீண்டும் சரியான பாதைக்கு திரும்பினால் நல்லது. சுழற்பந்து வீச்சில் தமிழகத்தின் அஷ்வின் (16 விக்.,) இன்றைய போட்டியில் மீண்டும் ஜொலித்தால் பெங்களூரு அணியின் ரன்குவிப்புக்கு அணையிடலாம்.
கெய்ல் மிரட்டல்:
துவக்கத்தில் தோல்விகளால் துவண்டு கிடந்தது பெங்களூரு அணி. கிறிஸ் கெய்லின் வருகைக்குப் பின் திடீரென எழுச்சி கண்டது. முக்கியமாக 9 போட்டிகளில் மட்டும் பங்கேற்று 511 ரன்கள் குவித்துள்ள கெய்லின் பேட்டிங்தான் இதற்கு காரணம். சென்னைக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் அரைசதம் அடித்து மிரட்டிய இவர், இன்றும் அதிரடியை தொடர காத்திருக்கிறார்.
இவருடன் விராத் கோஹ்லி (444), டிவிலியர்ஸ் (262) ஆகியோரும் சென்னை அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின் வரிசையில் சவுரப் திவாரி, முகமது கைப் ஆறுதல் தரலாம்.
ஜாகிர் அசத்தல்:
உலக கோப்பை தொடரைப் போல, வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் மீண்டும் துவக்கத்தில் விக்கெட்டுகளை சாய்ப்பது, பெரும் பலமாக உள்ளது. இவரது "சகா' அரவிந்த் தன் பங்குக்கு விக்கெட் வேட்டை நடத்துகிறார். அனுபவ கேப்டன் வெட்டோரி, அபிமன்யு மிதுன் என வலுவான பவுலிங் படை, சென்னை அணிக்கு மீண்டும் சிக்கல் தர காத்திருக்கிறது.
வெற்றி யாருக்கு?
இன்றைய போட்டியில் வெல்லும் அணி, நேரடியாக வரும் 28ம் தேதி நடக்கும், நான்காவது ஐ.பி.எல்., தொடரின் பைனலுக்கு முன்னேறலாம். தோல்வியடையும் அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு உள்ளது. இருப்பினும், முதல் அணியாக பைனலுக்கு செல்ல இரு அணிகளும் முயற்சிக்கும் என்பதால், ரசிகர்களுக்கு விறுவிறுப்பான போட்டி காத்திருக்கிறது.
----
சென்னை ஆதிக்கம்
இதுவரை நடந்த ஐ.பி.எல்., போட்டிகளில், இரு அணிகளும் 9 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 5ல் சென்னை கிங்ஸ் அணியும், 4ல் பெங்களூரு அணியும் வென்றுள்ளன.
-----


புதுடில்லி: தோள்பட்டை காயத்துக்கு "ஆப்பரேஷன்' செய்ய, லண்டன் செல்வதால், ஐ.பி.எல்., தொடரில் இருந்து விலகினார் சேவக்.
ஐ.பி.எல்., தொடரில் டில்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக இந்தியாவின் சேவக் உள்ளார். இதுவரை நடந்த போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் (424) இருக்கிறார்.
ஏற்கனவே தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்ட சேவக்கிற்கு, மும்பை அணிக்கு எதிரான ஐ.பி.எல்., போட்டியின் போது வலி அதிகமானது. இதனால், காயத்துக்கு "ஆப்பரேஷன்' செய்ய, உடனடியாக லண்டன் செல்கிறார்.
ஹோப்ஸ் கேப்டன்:
இதுகுறித்து டில்லி அணியின் தலைமை அதிகாரி அம்ரீட் மாத்தூர் கூறுகையில்,"" தனது காயத்துக்கு சேவக் "ஆப்பரேஷன்' செய்ய இருப்பதால், எஞ்சியுள்ள ஐ.பி.எல்., போட்டிகளில் விளையாடமாட்டார். இதற்கான ஏற்பாடுகளை, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செய்து வருகிறது. ஆனால் தேதி இன்னும் முடிவாகவில்லை. இருப்பினும் எஞ்சியுள்ள 3 போட்டிகளுக்கு, ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் ஹோப்ஸ் கேப்டனாக செயல்படுவார்,'' என்றார்.
டில்லி அணி இதுவரை 11 போட்டிகளில் 4ல் மட்டுமே வென்று, அடுத்த சுற்று வாய்ப்புக்கு போராடும் நிலையில், சேவக்கின் வெளியேற்றம் மேலும், சிக்கலை ஏற்படுத்தும். தவிர, எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில், இவர் பங்கேற்பது சந்தேகம் தான்.

ஐ.பி.எல்., தொடர்: சேவக் திடீர் விலகல்


புதுடில்லி: தோள்பட்டை காயத்துக்கு "ஆப்பரேஷன்' செய்ய, லண்டன் செல்வதால், ஐ.பி.எல்., தொடரில் இருந்து விலகினார் சேவக்.
ஐ.பி.எல்., தொடரில் டில்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக இந்தியாவின் சேவக் உள்ளார். இதுவரை நடந்த போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் (424) இருக்கிறார்.
ஏற்கனவே தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்ட சேவக்கிற்கு, மும்பை அணிக்கு எதிரான ஐ.பி.எல்., போட்டியின் போது வலி அதிகமானது. இதனால், காயத்துக்கு "ஆப்பரேஷன்' செய்ய, உடனடியாக லண்டன் செல்கிறார்.
ஹோப்ஸ் கேப்டன்:
இதுகுறித்து டில்லி அணியின் தலைமை அதிகாரி அம்ரீட் மாத்தூர் கூறுகையில்,"" தனது காயத்துக்கு சேவக் "ஆப்பரேஷன்' செய்ய இருப்பதால், எஞ்சியுள்ள ஐ.பி.எல்., போட்டிகளில் விளையாடமாட்டார். இதற்கான ஏற்பாடுகளை, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செய்து வருகிறது. ஆனால் தேதி இன்னும் முடிவாகவில்லை. இருப்பினும் எஞ்சியுள்ள 3 போட்டிகளுக்கு, ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் ஹோப்ஸ் கேப்டனாக செயல்படுவார்,'' என்றார்.
டில்லி அணி இதுவரை 11 போட்டிகளில் 4ல் மட்டுமே வென்று, அடுத்த சுற்று வாய்ப்புக்கு போராடும் நிலையில், சேவக்கின் வெளியேற்றம் மேலும், சிக்கலை ஏற்படுத்தும். தவிர, எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில், இவர் பங்கேற்பது சந்தேகம் தான்.

மொகாலி: ஐ.பி.எல்., லீக் போட்டியில் வல்தாட்டி அதிரடி சதம் அடித்து கைகொடுக்க, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சென்னை கிங்ஸ் அணி பந்துவீச்சில் சொதப்பியது.
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. நேற்று மொகாலியில் நடந்த லீக் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கில்கிறிஸ்ட், "பீல்டிங்' தேர்வு செய்தார்.
ஹாரிஸ் வாய்ப்பு:
பஞ்சாப் அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது. நாதன் ரிமிங்டனுக்கு பதிலாக ரேயான் ஹாரிஸ் வாய்ப்பு பெற்றார். சென்னை அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
அதிர்ச்சி துவக்கம்:
சென்னை அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. பிரவீண் குமார் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தில், அனிருதா ஸ்ரீகாந்த் எல்.பி.டபிள்யு., முறையில் அவுட்டானார். அடுத்த பந்தில் சுரேஷ் ரெய்னா (0), வல்தாட்டியிடம் "கேட்ச்' கொடுத்து வெளியேறினார்.
விஜய் அபாரம்:
பின் இணைந்த முரளி விஜய், பத்ரிநாத் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பஞ்சாப் பந்துவீச்சை பதம்பார்த்த முரளி விஜய், பார்கவ் பட் வீசிய ஆட்டத்தின் 13வது ஓவரில், ஒரு இமாலய "சிக்சர்' அடித்து, தனது அரைசதத்தை பதிவு செய்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்த போது, 43 பந்தில் 4 சிக்சர், 6 பவுண்டரி <உட்பட 74 ரன்கள் எடுத்த முரளி விஜய், பியுஸ் சாவ்லா சுழலில் "ஸ்டெம்பிங்' ஆனார்.
பத்ரிநாத் அரைசதம்:
அடுத்து வந்த கேப்டன் தோனியுடன் இணைந்த பத்ரிநாத், பார்கவ் பட் வீசிய ஆட்டத்தின் 16வது ஓவரில், ஒரு "சூப்பர் பவுண்டரி' அடித்து தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் அதிரடி காட்டிய தோனி, பிரவீண் குமார் வீசிய ஆட்டத்தின் 18வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 22 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை வலுவாக்கினார்.
ரேயான் ஹாரிஸ் வீசிய ஆட்டத்தின் கடைசி பந்தில் "கிளீன் போல்டான' தோனி, 20 பந்தில் 43 ரன்கள் (2 சிக்சர், 4 பவுண்டரி) எடுத்தார். சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. பத்ரிநாத் (66) அவுட்டாகாமல் இருந்தார். பஞ்சாப் அணி சார்பில் பிரவீண் குமார் 2, ரேயான் ஹாரிஸ், பியுஸ் சாவ்லா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
சூப்பர் துவக்கம்:
சற்று கடின இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு கேப்டன் கில்கிறிஸ்ட், வல்தாட்டி ஜோடி சூப்பர் துவக்கம் அளித்தது. சென்னை பந்துவீச்சை எளிதாக சமாளித்த இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்த போது, கில்கிறிஸ்ட் (19) அவுட்டானார். மறுமுனையில் பவுண்டரி மழை பொழிந்த வல்தாட்டி, அரைசதம் கடந்தார்.
வல்தாட்டி சதம்:
அடுத்து வந்த மார்ஷ் (12) சோபிக்கவில்லை. அதிரடியாக ஆடிய சன்னி சிங் (20) நிலைக்கவில்லை. பின் களமிறங்கிய அபிஷேக் நாயரும் "டக்-அவுட்' ஆக, பஞ்சாப் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் தினேஷ் கார்த்திக்குடன் இணைந்த வல்தாட்டி, சென்னை பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். ஆல்பி மார்கல் வீசிய ஆட்டத்தின் 17வது ஓவரில் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்த வல்தாட்டி, 52 பந்தில் "சூப்பர்' சதம் அடித்தார்.
கடைசி ஓவரில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜகாதி பந்தில் "சூப்பர் சிக்சர்' அடித்த தினேஷ் கார்த்திக் வெற்றியை உறுதி செய்தார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 193 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வல்தாட்டி (120 ரன்கள், 63 பந்து), தினேஷ் கார்த்திக் (21) அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை சார்பில் சவுத்தி, மார்கல், ரந்திவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக வல்தாட்டி தேர்வு செய்யப்பட்டார்.
முதல் சதம்
சென்னை அணிக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் அணியின் வல்தாட்டி, 63 பந்தில் 120 ரன்கள் (2 சிக்சர், 19 பவுண்டரி) எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதன்மூலம் நான்காவது ஐ.பி.எல்., தொடரில், முதல் சதத்தை பதிவு செய்தார். இது, ஐ.பி.எல்., அரங்கில் 13வது சதம்.
---
முதல் வெற்றி
கடின இலக்கை "சேஸ்' செய்த பஞ்சாப் அணி, ஐ.பி.எல்., அரங்கில் சென்னை அணிக்கு எதிராக முதல் முறையாக வெற்றி பெற்றது. முன்னதாக மோதிய ஏழு போட்டிகளில், சென்னை கிங்ஸ் 6ல் வெற்றி கண்டது. ஒரு போட்டி "டை' ஆனது.
---
மூன்றாவது அதிகபட்சம்
நேற்று, 120 ரன்கள் எடுத்த பஞ்சாப் வீரர் வல்தாட்டி, ஐ.பி.எல்., அரங்கில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் மூன்றாவது இடம் பிடித்தார். முதல் இரண்டு இடங்களில் பிரண்டன் மெக்கலம் (158), முரளி விஜய் (127) ஆகியோர் உள்ளனர்.
---
பஞ்சாப் பதிலடி
கடந்த ஆண்டு தர்மசாலாவில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 192 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதற்கு இம்முறை பஞ்சாப் அணி பதிலடி கொடுத்தது.
* இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில், ஐந்தாவது சிறந்த "சேஸிங்கை' பஞ்சாப் அணி பதிவு செய்தது. முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் (217/7, எதிர்-டெக்கான், 2008), பஞ்சாப் (204/2, எதிர்-கோல்கட்டா, 2010), பெங்களூரு (204/2, எதிர்-பஞ்சாப், 2010), சென்னை (195/4, எதிர்-பஞ்சாப், 2010) உள்ளிட்ட அணிகள் அதிக ரன்னை "சேஸ்' செய்தன.
---
ஸ்கோர் போர்டு
சென்னை சூப்பர் கிங்ஸ்
அனிருதா எல்.பி.டபிள்யு.,(ப)பிரவீண் 0(1)
முரளிவிஜய் (ஸ்டெம்)கில்கிறிஸ்ட் (ப)சாவ்லா 74(43)
ரெய்னா (கே)வல்தாட்டி (ப)பிரவீண் 0(1)
பத்ரிநாத் -அவுட் இல்லை- 66(56)
தோனி (ப)ஹாரிஸ் 43(20)
உதிரிகள் 5
மொத்தம் (20 ஓவரில், 4 விக்.,) 188
விக்கெட் வீழ்ச்சி: 1-0(அனிருதா), 2-0(ரெய்னா), 3-124(முரளிவிஜய்), 4-188(தோனி).
பந்துவீச்சு: பிரவீண் 4-1-37-2, ஹாரிஸ் 4-0-25-1, மெக்லாரன் 4-0-31-0, சாவ்லா 3-0-33-1, அபிஷேக் 2-0-24-0, பார்கவ் 3-0-35-0.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
வல்தாட்டி -அவுட் இல்லை- 120(63)
கில்கிறிஸ்ட் (கே)ரந்திவ் (ப)மார்கல் 19(15)
மார்ஷ் -ரன் அவுட்-(அனிருதா/ரந்திவ்) 12(14)
சன்னி (கே)ஜகாதி (ப)ரந்திவ் 20(11)
அபிஷேக் எல்.பி.டபிள்யு.,(ப)சவுத்தி 0(1)
கார்த்திக் -அவுட் இல்லை- 21(11)
உதிரிகள் 1
மொத்தம் (19.1 ஓவரில், 4 விக்.,) 193
விக்கெட் வீழ்ச்சி: 1-61(கில்கிறிஸ்ட்), 2-100(மார்ஷ்), 3-136(சன்னி), 4-136(அபிஷேக்).
பந்துவீச்சு: அஷ்வின் 4-0-37-0, சவுத்தி 4-0-33-1, மார்கல் 3-0-38-1, ரந்திவ் 4-0-32-1, ஸ்டைரிஸ் 1-0-13-0, ஜகாதி 2.1-0-28-0, ரெய்னா 1-0-12-0.

சென்னை கிங்ஸ் சொதப்பல் பந்துவீச்சு! * வல்தாட்டி சதத்தில் பஞ்சாப் அணி வெற்றி

மொகாலி: ஐ.பி.எல்., லீக் போட்டியில் வல்தாட்டி அதிரடி சதம் அடித்து கைகொடுக்க, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சென்னை கிங்ஸ் அணி பந்துவீச்சில் சொதப்பியது.
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. நேற்று மொகாலியில் நடந்த லீக் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கில்கிறிஸ்ட், "பீல்டிங்' தேர்வு செய்தார்.
ஹாரிஸ் வாய்ப்பு:
பஞ்சாப் அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது. நாதன் ரிமிங்டனுக்கு பதிலாக ரேயான் ஹாரிஸ் வாய்ப்பு பெற்றார். சென்னை அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
அதிர்ச்சி துவக்கம்:
சென்னை அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. பிரவீண் குமார் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தில், அனிருதா ஸ்ரீகாந்த் எல்.பி.டபிள்யு., முறையில் அவுட்டானார். அடுத்த பந்தில் சுரேஷ் ரெய்னா (0), வல்தாட்டியிடம் "கேட்ச்' கொடுத்து வெளியேறினார்.
விஜய் அபாரம்:
பின் இணைந்த முரளி விஜய், பத்ரிநாத் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பஞ்சாப் பந்துவீச்சை பதம்பார்த்த முரளி விஜய், பார்கவ் பட் வீசிய ஆட்டத்தின் 13வது ஓவரில், ஒரு இமாலய "சிக்சர்' அடித்து, தனது அரைசதத்தை பதிவு செய்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்த போது, 43 பந்தில் 4 சிக்சர், 6 பவுண்டரி <உட்பட 74 ரன்கள் எடுத்த முரளி விஜய், பியுஸ் சாவ்லா சுழலில் "ஸ்டெம்பிங்' ஆனார்.
பத்ரிநாத் அரைசதம்:
அடுத்து வந்த கேப்டன் தோனியுடன் இணைந்த பத்ரிநாத், பார்கவ் பட் வீசிய ஆட்டத்தின் 16வது ஓவரில், ஒரு "சூப்பர் பவுண்டரி' அடித்து தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் அதிரடி காட்டிய தோனி, பிரவீண் குமார் வீசிய ஆட்டத்தின் 18வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 22 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை வலுவாக்கினார்.
ரேயான் ஹாரிஸ் வீசிய ஆட்டத்தின் கடைசி பந்தில் "கிளீன் போல்டான' தோனி, 20 பந்தில் 43 ரன்கள் (2 சிக்சர், 4 பவுண்டரி) எடுத்தார். சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. பத்ரிநாத் (66) அவுட்டாகாமல் இருந்தார். பஞ்சாப் அணி சார்பில் பிரவீண் குமார் 2, ரேயான் ஹாரிஸ், பியுஸ் சாவ்லா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
சூப்பர் துவக்கம்:
சற்று கடின இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு கேப்டன் கில்கிறிஸ்ட், வல்தாட்டி ஜோடி சூப்பர் துவக்கம் அளித்தது. சென்னை பந்துவீச்சை எளிதாக சமாளித்த இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்த போது, கில்கிறிஸ்ட் (19) அவுட்டானார். மறுமுனையில் பவுண்டரி மழை பொழிந்த வல்தாட்டி, அரைசதம் கடந்தார்.
வல்தாட்டி சதம்:
அடுத்து வந்த மார்ஷ் (12) சோபிக்கவில்லை. அதிரடியாக ஆடிய சன்னி சிங் (20) நிலைக்கவில்லை. பின் களமிறங்கிய அபிஷேக் நாயரும் "டக்-அவுட்' ஆக, பஞ்சாப் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் தினேஷ் கார்த்திக்குடன் இணைந்த வல்தாட்டி, சென்னை பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். ஆல்பி மார்கல் வீசிய ஆட்டத்தின் 17வது ஓவரில் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்த வல்தாட்டி, 52 பந்தில் "சூப்பர்' சதம் அடித்தார்.
கடைசி ஓவரில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜகாதி பந்தில் "சூப்பர் சிக்சர்' அடித்த தினேஷ் கார்த்திக் வெற்றியை உறுதி செய்தார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 193 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வல்தாட்டி (120 ரன்கள், 63 பந்து), தினேஷ் கார்த்திக் (21) அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை சார்பில் சவுத்தி, மார்கல், ரந்திவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக வல்தாட்டி தேர்வு செய்யப்பட்டார்.
முதல் சதம்
சென்னை அணிக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் அணியின் வல்தாட்டி, 63 பந்தில் 120 ரன்கள் (2 சிக்சர், 19 பவுண்டரி) எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதன்மூலம் நான்காவது ஐ.பி.எல்., தொடரில், முதல் சதத்தை பதிவு செய்தார். இது, ஐ.பி.எல்., அரங்கில் 13வது சதம்.
---
முதல் வெற்றி
கடின இலக்கை "சேஸ்' செய்த பஞ்சாப் அணி, ஐ.பி.எல்., அரங்கில் சென்னை அணிக்கு எதிராக முதல் முறையாக வெற்றி பெற்றது. முன்னதாக மோதிய ஏழு போட்டிகளில், சென்னை கிங்ஸ் 6ல் வெற்றி கண்டது. ஒரு போட்டி "டை' ஆனது.
---
மூன்றாவது அதிகபட்சம்
நேற்று, 120 ரன்கள் எடுத்த பஞ்சாப் வீரர் வல்தாட்டி, ஐ.பி.எல்., அரங்கில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் மூன்றாவது இடம் பிடித்தார். முதல் இரண்டு இடங்களில் பிரண்டன் மெக்கலம் (158), முரளி விஜய் (127) ஆகியோர் உள்ளனர்.
---
பஞ்சாப் பதிலடி
கடந்த ஆண்டு தர்மசாலாவில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 192 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதற்கு இம்முறை பஞ்சாப் அணி பதிலடி கொடுத்தது.
* இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில், ஐந்தாவது சிறந்த "சேஸிங்கை' பஞ்சாப் அணி பதிவு செய்தது. முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் (217/7, எதிர்-டெக்கான், 2008), பஞ்சாப் (204/2, எதிர்-கோல்கட்டா, 2010), பெங்களூரு (204/2, எதிர்-பஞ்சாப், 2010), சென்னை (195/4, எதிர்-பஞ்சாப், 2010) உள்ளிட்ட அணிகள் அதிக ரன்னை "சேஸ்' செய்தன.
---
ஸ்கோர் போர்டு
சென்னை சூப்பர் கிங்ஸ்
அனிருதா எல்.பி.டபிள்யு.,(ப)பிரவீண் 0(1)
முரளிவிஜய் (ஸ்டெம்)கில்கிறிஸ்ட் (ப)சாவ்லா 74(43)
ரெய்னா (கே)வல்தாட்டி (ப)பிரவீண் 0(1)
பத்ரிநாத் -அவுட் இல்லை- 66(56)
தோனி (ப)ஹாரிஸ் 43(20)
உதிரிகள் 5
மொத்தம் (20 ஓவரில், 4 விக்.,) 188
விக்கெட் வீழ்ச்சி: 1-0(அனிருதா), 2-0(ரெய்னா), 3-124(முரளிவிஜய்), 4-188(தோனி).
பந்துவீச்சு: பிரவீண் 4-1-37-2, ஹாரிஸ் 4-0-25-1, மெக்லாரன் 4-0-31-0, சாவ்லா 3-0-33-1, அபிஷேக் 2-0-24-0, பார்கவ் 3-0-35-0.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
வல்தாட்டி -அவுட் இல்லை- 120(63)
கில்கிறிஸ்ட் (கே)ரந்திவ் (ப)மார்கல் 19(15)
மார்ஷ் -ரன் அவுட்-(அனிருதா/ரந்திவ்) 12(14)
சன்னி (கே)ஜகாதி (ப)ரந்திவ் 20(11)
அபிஷேக் எல்.பி.டபிள்யு.,(ப)சவுத்தி 0(1)
கார்த்திக் -அவுட் இல்லை- 21(11)
உதிரிகள் 1
மொத்தம் (19.1 ஓவரில், 4 விக்.,) 193
விக்கெட் வீழ்ச்சி: 1-61(கில்கிறிஸ்ட்), 2-100(மார்ஷ்), 3-136(சன்னி), 4-136(அபிஷேக்).
பந்துவீச்சு: அஷ்வின் 4-0-37-0, சவுத்தி 4-0-33-1, மார்கல் 3-0-38-1, ரந்திவ் 4-0-32-1, ஸ்டைரிஸ் 1-0-13-0, ஜகாதி 2.1-0-28-0, ரெய்னா 1-0-12-0.

கோல்கட்டா: ஐ.பி.எல்., "டுவென்டி-20 தொடரில், டெக்கான் அணிக்கு எதிரான லீக் போட்டியில், கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி, 9 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. டெக்கான் அணி தொடர்ந்து இரண்டாவது தோல்வியை பதிவு செய்தது.
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20 தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் நேற்று நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா நைட்ரைடர்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதின. "டாஸ் வென்ற கோல்கட்டா கேப்டன் காம்பிர், பேட்டிங் தேர்வு செய்தார். கோல்கட்டா அணியில் சுக்லா, லாடா நீக்கப்பட்டு டசாட்டே, உனத்கட் சேர்க்கப் பட்டனர். டெக்கான் அணியில் மாற்றம் எதுவுமில்லை.
காலிஸ் அரைசதம்:
கோல்கட்டா அணிக்கு காலிஸ், பிஸ்லா துவக்கம் தந்தனர். ஸ்டைன் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த, காலிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவ்வப்போது பவுண்டரிகள் விளாசிய பிஸ்லா (19), அமித் மிஸ்ரா சுழலில் சிக்கினார். காலிசுடன், கேப்டன் காம்பிர் இணைந்தார்.
மறுமுனையில் ஓஜா பந்தில் இரண்டு பவுண்டரிகள் அடித்த காலிஸ், டுமினியின் பந்தில் "சூப்பர் சிக்சர் அடித்து, அரைசதம் (53) கடந்தார். ஆனால் அடுத்த பந்தில், சிகர் தவானிடம் பிடி கொடுத்து திரும்பினார்.
காம்பிர் அபாரம்:
அதன் பின் காம்பிர் அதிரடியாக ரன்கள் சேர்க்கத் துவங்கினார். கிறிஸ்டியன், ஓஜா பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்தார். இவரது "சகா மனோஜ் திவாரி, டுமினியின் ஓவரில் இரண்டு சிக்சர்கள் அடித்து மிரட்டினார். இந்நிலையில் காம்பிர் (29 ரன்கள், 18 பந்து) வெளியேறினார்.
அடுத்து வந்த யூசுப் பதான் (22), ஸ்டைன் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்து, அவரிடமே வீழ்ந்தார். கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. மனோஜ் திவாரி (30) அவுட்டாகாமல் இருந்தார். டெக்கான் சார்பில் அமித் மிஸ்ரா 2 விக்கெட் வீழ்த்தினார்.
துவக்க சரிவு:
சற்று கடின இலக்கை விரட்டிய டெக்கான் அணிக்கு சிகர் தவான் (7), ஜாகி (3) இருவரும் அதிர்ச்சித் துவக்கம் கொடுத்தனர். கேப்டன் சங்ககராவும் (16) நிலைக்கவில்லை. கைகொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டுமினி (6), விரைவில் திரும்பினார்.
சிப்லி போராட்டம்:
ஒரு முனையில் விக்கெட் சரிந்து கொண்டிருந்த போதும், மறுபக்கம் சிப்லி உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். யூசுப் பதான் பந்தில் சிக்சர் விளாசிய சிப்லி, பட்டியா ஓவரில் இரண்டு பவுண்டரிகள் விளாசினார். இவர் 48 ரன்னுக்கு அவுட்டாகி, அரைசத வாய்ப்பை இழந்தார்.
கிறிஸ்டியன் ஆறுதல்:
அதிக தொகைக்கு (ரூ. 4.08 கோடி) ஏலத்தில் எடுக்கப்பட்ட, ஆஸ்திரேலிய உள்ளூர் வீரரான கிறிஸ்டியன் (25 ரன்கள், 13 பந்து), ஒரு பவுண்டரி, 2 சிக்சர் அடித்து ஆறுதல் தந்தார். பின் ரவி தேஜாவும் (15) வெளியேற டெக்கான் அணியின் தோல்வி உறுதியானது.
கடைசி நேரத்தில் ஸ்டைன் (13), அமித் மிஸ்ரா (12*) போராடிய போதும், 20 ஓவரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி, 8 விக்கெட்டுக்கு 154 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஆட்ட நாயகன் விருதை காலிஸ் வென்றார்.

ஸ்கோர்போர்டு
கோல்கட்டா நைட்ரைடர்ஸ்
காலிஸ்(கே)தவான்(ப)டுமினி 53(45)
பிஸ்லா-எல்.பி.டபிள்யு.,(ப)மிஸ்ரா 19(21)
காம்பிர்(ப)மிஸ்ரா 29(18)
திவாரி-அவுட் இல்லை- 30(21)
யூசுப் பதான்(கே)ஜாகி(ப)ஸ்டைன் 22(15)
உதிரிகள் 10
மொத்தம் (20 ஓவரில் 4 விக்.,) 163
விக்கெட் வீழ்ச்சி: 1-51(பிஸ்லா), 2-90(காலிஸ்), 3-133(காம்பிர்), 4-163(யூசுப் பதான்).
பந்து வீச்சு: ஸ்டைன் 4-0-33-1, இஷாந்த் சர்மா 3-0-27-0, கிறிஸ்டியன் 2-0-19-0, அமித் மிஸ்ரா 4-0-19-2, பிரக்யான் ஓஜா 4-0-26-0, ரவி தேஜா 1-0-9-0, டுமினி 2-0-23-1.
டெக்கான் சார்ஜர்ஸ்
தவான்-ரன் அவுட்(மார்கன்) 7(7)
ஜாகி(ப)இக்பால் 3(9)
சிப்லி(கே)காலிஸ்(ப)பட்டியா 48(40)
சங்ககரா(கே)காலிஸ்(ப)பட்டியா 16(15)
டுமினி(கே)காலிஸ்(ப)இக்பால் 6(8)
கிறிஸ்டியன்(கே)டசாட்டே(ப)இக்பால் 25(13)
ரவி தேஜா(கே)காலிஸ்(ப)உனத்கட் 15(10)
ஸ்டைன்(ப)உனத்கட் 13(12)
மிஸ்ரா-அவுட் இல்லை- 12(5)
இஷாந்த்-அவுட் இல்லை- 1(1)
உதிரிகள் 8
மொத்தம் (20 ஓவரில் 8 விக்.,) 154
விக்கெட் வீழ்ச்சி: 1-10(ஜாகி), 2-15(சிகர் தவான்), 3-53(சங்ககரா), 4-81(டுமினி), 5-88(சிப்லி), 6-124(கிறிஸ்டியன்), 7-127(ரவி தேஜா), 8-146(ஸ்டைன்).
பந்து வீச்சு: இக்பால் அப்துல்லா 4-0-24-3, பாலாஜி 4-0-31-0, யூசுப் பதான் 3-0-22-0, உனத்கட் 4-0-37-2, பட்டியா 4-0-29-2, டசாட்டே 1-0-7-0.

கோல்கட்டா அணி அசத்தல் வெற்றி *டெக்கான் மீண்டும் பரிதாபம்

கோல்கட்டா: ஐ.பி.எல்., "டுவென்டி-20 தொடரில், டெக்கான் அணிக்கு எதிரான லீக் போட்டியில், கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி, 9 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. டெக்கான் அணி தொடர்ந்து இரண்டாவது தோல்வியை பதிவு செய்தது.
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20 தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் நேற்று நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா நைட்ரைடர்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதின. "டாஸ் வென்ற கோல்கட்டா கேப்டன் காம்பிர், பேட்டிங் தேர்வு செய்தார். கோல்கட்டா அணியில் சுக்லா, லாடா நீக்கப்பட்டு டசாட்டே, உனத்கட் சேர்க்கப் பட்டனர். டெக்கான் அணியில் மாற்றம் எதுவுமில்லை.
காலிஸ் அரைசதம்:
கோல்கட்டா அணிக்கு காலிஸ், பிஸ்லா துவக்கம் தந்தனர். ஸ்டைன் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த, காலிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவ்வப்போது பவுண்டரிகள் விளாசிய பிஸ்லா (19), அமித் மிஸ்ரா சுழலில் சிக்கினார். காலிசுடன், கேப்டன் காம்பிர் இணைந்தார்.
மறுமுனையில் ஓஜா பந்தில் இரண்டு பவுண்டரிகள் அடித்த காலிஸ், டுமினியின் பந்தில் "சூப்பர் சிக்சர் அடித்து, அரைசதம் (53) கடந்தார். ஆனால் அடுத்த பந்தில், சிகர் தவானிடம் பிடி கொடுத்து திரும்பினார்.
காம்பிர் அபாரம்:
அதன் பின் காம்பிர் அதிரடியாக ரன்கள் சேர்க்கத் துவங்கினார். கிறிஸ்டியன், ஓஜா பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்தார். இவரது "சகா மனோஜ் திவாரி, டுமினியின் ஓவரில் இரண்டு சிக்சர்கள் அடித்து மிரட்டினார். இந்நிலையில் காம்பிர் (29 ரன்கள், 18 பந்து) வெளியேறினார்.
அடுத்து வந்த யூசுப் பதான் (22), ஸ்டைன் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்து, அவரிடமே வீழ்ந்தார். கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. மனோஜ் திவாரி (30) அவுட்டாகாமல் இருந்தார். டெக்கான் சார்பில் அமித் மிஸ்ரா 2 விக்கெட் வீழ்த்தினார்.
துவக்க சரிவு:
சற்று கடின இலக்கை விரட்டிய டெக்கான் அணிக்கு சிகர் தவான் (7), ஜாகி (3) இருவரும் அதிர்ச்சித் துவக்கம் கொடுத்தனர். கேப்டன் சங்ககராவும் (16) நிலைக்கவில்லை. கைகொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டுமினி (6), விரைவில் திரும்பினார்.
சிப்லி போராட்டம்:
ஒரு முனையில் விக்கெட் சரிந்து கொண்டிருந்த போதும், மறுபக்கம் சிப்லி உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். யூசுப் பதான் பந்தில் சிக்சர் விளாசிய சிப்லி, பட்டியா ஓவரில் இரண்டு பவுண்டரிகள் விளாசினார். இவர் 48 ரன்னுக்கு அவுட்டாகி, அரைசத வாய்ப்பை இழந்தார்.
கிறிஸ்டியன் ஆறுதல்:
அதிக தொகைக்கு (ரூ. 4.08 கோடி) ஏலத்தில் எடுக்கப்பட்ட, ஆஸ்திரேலிய உள்ளூர் வீரரான கிறிஸ்டியன் (25 ரன்கள், 13 பந்து), ஒரு பவுண்டரி, 2 சிக்சர் அடித்து ஆறுதல் தந்தார். பின் ரவி தேஜாவும் (15) வெளியேற டெக்கான் அணியின் தோல்வி உறுதியானது.
கடைசி நேரத்தில் ஸ்டைன் (13), அமித் மிஸ்ரா (12*) போராடிய போதும், 20 ஓவரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி, 8 விக்கெட்டுக்கு 154 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஆட்ட நாயகன் விருதை காலிஸ் வென்றார்.

ஸ்கோர்போர்டு
கோல்கட்டா நைட்ரைடர்ஸ்
காலிஸ்(கே)தவான்(ப)டுமினி 53(45)
பிஸ்லா-எல்.பி.டபிள்யு.,(ப)மிஸ்ரா 19(21)
காம்பிர்(ப)மிஸ்ரா 29(18)
திவாரி-அவுட் இல்லை- 30(21)
யூசுப் பதான்(கே)ஜாகி(ப)ஸ்டைன் 22(15)
உதிரிகள் 10
மொத்தம் (20 ஓவரில் 4 விக்.,) 163
விக்கெட் வீழ்ச்சி: 1-51(பிஸ்லா), 2-90(காலிஸ்), 3-133(காம்பிர்), 4-163(யூசுப் பதான்).
பந்து வீச்சு: ஸ்டைன் 4-0-33-1, இஷாந்த் சர்மா 3-0-27-0, கிறிஸ்டியன் 2-0-19-0, அமித் மிஸ்ரா 4-0-19-2, பிரக்யான் ஓஜா 4-0-26-0, ரவி தேஜா 1-0-9-0, டுமினி 2-0-23-1.
டெக்கான் சார்ஜர்ஸ்
தவான்-ரன் அவுட்(மார்கன்) 7(7)
ஜாகி(ப)இக்பால் 3(9)
சிப்லி(கே)காலிஸ்(ப)பட்டியா 48(40)
சங்ககரா(கே)காலிஸ்(ப)பட்டியா 16(15)
டுமினி(கே)காலிஸ்(ப)இக்பால் 6(8)
கிறிஸ்டியன்(கே)டசாட்டே(ப)இக்பால் 25(13)
ரவி தேஜா(கே)காலிஸ்(ப)உனத்கட் 15(10)
ஸ்டைன்(ப)உனத்கட் 13(12)
மிஸ்ரா-அவுட் இல்லை- 12(5)
இஷாந்த்-அவுட் இல்லை- 1(1)
உதிரிகள் 8
மொத்தம் (20 ஓவரில் 8 விக்.,) 154
விக்கெட் வீழ்ச்சி: 1-10(ஜாகி), 2-15(சிகர் தவான்), 3-53(சங்ககரா), 4-81(டுமினி), 5-88(சிப்லி), 6-124(கிறிஸ்டியன்), 7-127(ரவி தேஜா), 8-146(ஸ்டைன்).
பந்து வீச்சு: இக்பால் அப்துல்லா 4-0-24-3, பாலாஜி 4-0-31-0, யூசுப் பதான் 3-0-22-0, உனத்கட் 4-0-37-2, பட்டியா 4-0-29-2, டசாட்டே 1-0-7-0.

பெங்களூரு: ஐ.பி.எல்., தொடரில், இன்று நடக்கும் லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்ய இரு அணியினரும் காத்திருக்கின்றனர்.
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. பெங்களூருவில், இன்று நடக்கவுள்ள லீக் போட்டியில் வெட்டோரி தலைமையிலான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி, சச்சின் வழிநடத்தும் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இரண்டாவது வெற்றி:
கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிக்கு எதிராக பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றது. இதேபோல டில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, தனது 2வது வெற்றியை பதிவு செய்யலாம்.
பேட்டிங் பலம்:
பெங்களூரு அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. கொச்சி அணிக்கு எதிராக நல்ல துவக்கம் கொடுத்த மயான்க் அகர்வால், இன்றும் சாதிக்கலாம். கடந்த போட்டியில் சோபிக்கத்தவறிய தில்ஷன், இன்று எழுச்சி பெற வேண்டும். விராத் கோஹ்லி, பேட்டிங்கில் அதிரடி காட்டினால் நல்லது. கொச்சி அணிக்கு எதிராக அதிவேகமாக அரைசதம் கடந்த டிவிலியர்ஸ், இன்று தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். "மிடில்-ஆர்டரில்' சவுரவ் திவாரி, புஜாரா, முகமது கைப் உள்ளிட்டோர் ரன் மழை பொழியும் பட்சத்தில் இமாலய இலக்கை பதிவு செய்யலாம்.
ஜாகிர் நம்பிக்கை:
பெங்களூரு அணியின் வேகப்பந்துவீச்சில் பலம் சேர்க்க இந்திய வீரர் ஜாகிர் கான் உள்ளார். கொச்சி அணிக்கு எதிராக பெரிய அளவில் சோபிக்கத் தவறிய இவர், இன்று விக்கெட் மழை பொழிய வேண்டும். இவருக்கு டிர்க் நான்ஸ், சார்லஸ் லாங்கிவெல்ட், அபிமன்யு மிதுன், விராத் கோஹ்லி, ஆசாத் பதான் உள்ளிட்டோர் ஒத்துழைப்பு அளித்தால் நல்லது. சுழலில் கேப்டன் வெட்டோரி நம்பிக்கை அளிக்கிறார். இவருடன் தில்ஷன் இணைவது சுழலின் பலத்தை அதிகரித்துள்ளது.
சச்சின் எதிர்பார்ப்பு:
மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் வரிசை அசுர பலத்துடன் உள்ளது. டில்லி அணிக்கு எதிராக பேட்டிங்கில் அசத்திய சச்சின், இன்றும் ரன் மழை பொழியலாம். டேவி ஜேக்கப்ஸ், நல்ல துவக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். "மிடில்-ஆர்டரில்' அம்பாதி ராயுடு, ரோகித் சர்மா, போலார்டு, ஜேம்ஸ் பிராங்க்ளின், ராஜகோபால் சதீஷ் உள்ளிட்டோர் கைகொடுக்கும் பட்சத்தில் வலுவான இலக்கை நிர்ணயிக்கலாம். கடந்த போட்டியில் வாய்ப்பு பெறாத சைமண்ட்ஸ், இன்று களமிறங்கலாம்.
மலிங்கா மிரட்டல்:
மும்பை அணியின் வேகப்பந்துவீச்சு வலுவான நிலையில் உள்ளது. டில்லி அணிக்கு எதிராக வேகத்தில் மிரட்டிய லசித் மலிங்கா, 5 விக்கெட் வீழ்த்தினார். இவரது விக்கெட் வேட்டை இன்றும் தொடரும் பட்சத்தில், பெங்களூரு அணிக்கு சிக்கலாகிவிடும். இவருக்கு முனாப் படேல், ஜேம்ஸ் பிராங்க்ளின், ஹென்றிகுயஸ், பெர்ணான்டோ, தவால் குல்கர்ணி, போலார்டு, சதீஷ் உள்ளிட்டோர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சுழலில் அனுபவ ஹர்பஜன் இருப்பது பலம்.
---
எட்டாவது முறை
ஐ.பி.எல்., அரங்கில், மும்பை இந்தியன்ஸ்-பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் எட்டாவது முறையாக மோத உள்ளன. முன்னதாக மோதிய ஏழு போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 4, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் 3 வெற்றி கண்டன.
---

பெங்களூருவை சமாளிக்குமா மும்பை! * 2வது வெற்றியை நோக்கி மோதல்

பெங்களூரு: ஐ.பி.எல்., தொடரில், இன்று நடக்கும் லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்ய இரு அணியினரும் காத்திருக்கின்றனர்.
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. பெங்களூருவில், இன்று நடக்கவுள்ள லீக் போட்டியில் வெட்டோரி தலைமையிலான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி, சச்சின் வழிநடத்தும் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இரண்டாவது வெற்றி:
கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிக்கு எதிராக பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றது. இதேபோல டில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, தனது 2வது வெற்றியை பதிவு செய்யலாம்.
பேட்டிங் பலம்:
பெங்களூரு அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. கொச்சி அணிக்கு எதிராக நல்ல துவக்கம் கொடுத்த மயான்க் அகர்வால், இன்றும் சாதிக்கலாம். கடந்த போட்டியில் சோபிக்கத்தவறிய தில்ஷன், இன்று எழுச்சி பெற வேண்டும். விராத் கோஹ்லி, பேட்டிங்கில் அதிரடி காட்டினால் நல்லது. கொச்சி அணிக்கு எதிராக அதிவேகமாக அரைசதம் கடந்த டிவிலியர்ஸ், இன்று தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். "மிடில்-ஆர்டரில்' சவுரவ் திவாரி, புஜாரா, முகமது கைப் உள்ளிட்டோர் ரன் மழை பொழியும் பட்சத்தில் இமாலய இலக்கை பதிவு செய்யலாம்.
ஜாகிர் நம்பிக்கை:
பெங்களூரு அணியின் வேகப்பந்துவீச்சில் பலம் சேர்க்க இந்திய வீரர் ஜாகிர் கான் உள்ளார். கொச்சி அணிக்கு எதிராக பெரிய அளவில் சோபிக்கத் தவறிய இவர், இன்று விக்கெட் மழை பொழிய வேண்டும். இவருக்கு டிர்க் நான்ஸ், சார்லஸ் லாங்கிவெல்ட், அபிமன்யு மிதுன், விராத் கோஹ்லி, ஆசாத் பதான் உள்ளிட்டோர் ஒத்துழைப்பு அளித்தால் நல்லது. சுழலில் கேப்டன் வெட்டோரி நம்பிக்கை அளிக்கிறார். இவருடன் தில்ஷன் இணைவது சுழலின் பலத்தை அதிகரித்துள்ளது.
சச்சின் எதிர்பார்ப்பு:
மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் வரிசை அசுர பலத்துடன் உள்ளது. டில்லி அணிக்கு எதிராக பேட்டிங்கில் அசத்திய சச்சின், இன்றும் ரன் மழை பொழியலாம். டேவி ஜேக்கப்ஸ், நல்ல துவக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். "மிடில்-ஆர்டரில்' அம்பாதி ராயுடு, ரோகித் சர்மா, போலார்டு, ஜேம்ஸ் பிராங்க்ளின், ராஜகோபால் சதீஷ் உள்ளிட்டோர் கைகொடுக்கும் பட்சத்தில் வலுவான இலக்கை நிர்ணயிக்கலாம். கடந்த போட்டியில் வாய்ப்பு பெறாத சைமண்ட்ஸ், இன்று களமிறங்கலாம்.
மலிங்கா மிரட்டல்:
மும்பை அணியின் வேகப்பந்துவீச்சு வலுவான நிலையில் உள்ளது. டில்லி அணிக்கு எதிராக வேகத்தில் மிரட்டிய லசித் மலிங்கா, 5 விக்கெட் வீழ்த்தினார். இவரது விக்கெட் வேட்டை இன்றும் தொடரும் பட்சத்தில், பெங்களூரு அணிக்கு சிக்கலாகிவிடும். இவருக்கு முனாப் படேல், ஜேம்ஸ் பிராங்க்ளின், ஹென்றிகுயஸ், பெர்ணான்டோ, தவால் குல்கர்ணி, போலார்டு, சதீஷ் உள்ளிட்டோர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சுழலில் அனுபவ ஹர்பஜன் இருப்பது பலம்.
---
எட்டாவது முறை
ஐ.பி.எல்., அரங்கில், மும்பை இந்தியன்ஸ்-பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் எட்டாவது முறையாக மோத உள்ளன. முன்னதாக மோதிய ஏழு போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 4, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் 3 வெற்றி கண்டன.
---

மும்பை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் யுவராஜ் தலைமையிலான புனே வாரியர்ஸ் அணி, கில்கிறிஸ்டின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமாக வீழ்த்தியது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று மும்பையில் நடந்த லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், புனே வாரியர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கில்கிறிஸ்ட் "பேட்டிங்' தேர்வு செய்தார்.
விக்கெட் மடமட:
பஞ்சாப் அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி கொடுத்தார் அல்போன்சா தாமஸ். இவரது வேகத்தில் கில்கிறிஸ்ட்(1) அவுட்டானார். ஸ்ரீகாந்த் வாக் வீசிய அடுத்த ஓவரில் ஷான் மார்ஷ்(1) நடையை கட்டினார். தொடர்ந்து மிரட்டிய தாமஸ் பந்தில் வல்தாட்டி(6) வீழ்ந்தார். தினேஷ் கார்த்திக்(0) அணியை கைவிட, 4 விக்கெட்டுக்கு 9 ரன்கள் மட்டும் எடுத்து தத்தளித்தது.
மெக்லாரன் அரைசதம்:
அடுத்து வந்தவர்களும் சொதப்பினர். சன்னி சிங்(12) வீணாக ரன் அவுட்டானார். அபிஷேக் நாயர்(12) ஏமாற்றினார். இதற்கு பின் "டெயிலெண்டர்கள்' உதவியுடன் பொறுப்பாக ஆடினார் மெக்லாரன். பியுஸ் சாவ்லா(15) ஓரளவுக்கு தாக்குப்பிடித்தார். தாமஸ் ஓவரில் சிக்சர், பவுண்டரி அடித்த மெக்லாரன், அரைசதம் கடந்து அசத்தினார். பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 112 ரன்கள் எடுத்தது. மெக்லாரன்(51) அவுட்டாகாமல் இருந்தார்.
எளிதான வெற்றி:
சுலப இலக்கை விரட்டிய புனே அணிக்கு முதல் பந்திலேயே "ஷாக்' கொடுத்தார் பிரவீண் குமார். இவரது வேகத்தில் கிரேம் ஸ்மித் "டக்' அவுட்டானார். இதற்கு பின் ஜெசி ரைடர்(31), மன்ஹாஸ்(35) இணைந்து பொறுப்பாக ஆடினர். அடுத்து வந்த உத்தப்பா(22*), யுவராஜ் சிங்(21*) சேர்ந்து அதிரடியாக ஆடினர். இருவரும் பிரவீண் குமார் ஓவரில் தலா ஒரு சிக்சர் அடித்து அணிக்கு முதல் வெற்றியை பெற்று தந்தனர். கடந்த முறை பஞ்சாப் அணிக்காக ஆடிய யுவராஜ், இம்முறை அறிமுக அணியாக களமிறங்கியுள்ள புனே அணியின் கேப்டனாக அருமையாக செயல்பட்டார். இவர், அபிஷேக் நாயர் பந்தை பவுண்டரிக்கு பறக்க விட, புனே அணி 13.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்து, சுலப வெற்றி பெற்றது.
மூன்று விக்கெட் வீழ்த்திய புனே வீரர் ஸ்ரீகாந்த் வாக், ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.





ஸ்கோர் போர்டு
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
கில்கிறிஸ்ட்(கே)உத்தப்பா(ப)தாமஸ் 1(3)
ஷான் மார்ஷ்(கே)சர்மா(ப)வாக் 1(3)
வல்தாட்டி(கே)ரைடர்(ப)தாமஸ் 6(6)
தினேஷ் கார்த்திக்(கே)சர்மா(ப)வாக் 0(7)
நாயர்(கே)யுவராஜ்(ப)ரைடர் 12(18)
சன்னி சிங்-ரன் அவுட்-(யுவராஜ்/உத்தப்பா) 12(6)
மெக்லாரன்-அவுட் இல்லை- 51(43)
சாவ்லா(கே)<உத்தப்பா(ப)வாக் 15(28)
பிரவீண்(கே)உத்தப்பா(ப)பார்னல் 3(5)
ரிம்மிங்டன்-அவுட் இல்லை- 1(1)
உதிரிகள் 10
மொத்தம்(20 ஓவரில் 8 விக்.,) 112
விக்கெட் வீழ்ச்சி: 1-2(கில்கிறிஸ்ட்), 2-5(ஷான் மார்ஷ்), 3-9(வல்தாட்டி), 4-9(தினேஷ் கார்த்திக்), 5-36(சன்னி சிங்), 6-45(நாயர்), 7-80(சாவ்லா), 8-102(பிரவீண்).
பந்துவீச்சு: தாமஸ் 4-0-27-2, வாக் 3-0-16-3, பார்னல் 4-0-20-1, முரளி கார்த்திக் 1-0-10-0, ரைடர் 3-1-9-1, மன்ஹாஸ் 3-0-14-0, ராகுல் சர்மா 2-0-12-0.
புனே வாரியர்ஸ்
ஸ்மித்(கே)மெக்லாரன்(ப)பிரவீண் 0(1)
ரைடர்(கே)கில்கிறிஸ்ட்(ப)மெக்லாரன் 31(17)
மன்ஹாஸ்(கே)கில்கிறிஸ்ட்(ப)நாயர் 35(32)
உத்தப்பா-அவுட் இல்லை- 22(14)
யுவராஜ்-அவுட் இல்லை- 21(15)
உதிரிகள் 4
மொத்தம்(13.1 ஓவரில் 3 விக்.,) 113
விக்கெட் வீழ்ச்சி: 1-0(ஸ்மித்), 2-60(மன்ஹாஸ்), 3-68(ரைடர்).
பந்துவீச்சு: பிரவீண் 3-0-28-1, ரிம்மிங்டன் 3-0-19-0, மெக்லாரன் 3-0-26-1, சாவ்லா 1-0-12-0, நாயர் 3.1-0-27-1.

யுவராஜ் அணி அபார வெற்றி! * பஞ்சாப் லெவன் ஏமாற்றம்

மும்பை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் யுவராஜ் தலைமையிலான புனே வாரியர்ஸ் அணி, கில்கிறிஸ்டின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமாக வீழ்த்தியது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று மும்பையில் நடந்த லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், புனே வாரியர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கில்கிறிஸ்ட் "பேட்டிங்' தேர்வு செய்தார்.
விக்கெட் மடமட:
பஞ்சாப் அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி கொடுத்தார் அல்போன்சா தாமஸ். இவரது வேகத்தில் கில்கிறிஸ்ட்(1) அவுட்டானார். ஸ்ரீகாந்த் வாக் வீசிய அடுத்த ஓவரில் ஷான் மார்ஷ்(1) நடையை கட்டினார். தொடர்ந்து மிரட்டிய தாமஸ் பந்தில் வல்தாட்டி(6) வீழ்ந்தார். தினேஷ் கார்த்திக்(0) அணியை கைவிட, 4 விக்கெட்டுக்கு 9 ரன்கள் மட்டும் எடுத்து தத்தளித்தது.
மெக்லாரன் அரைசதம்:
அடுத்து வந்தவர்களும் சொதப்பினர். சன்னி சிங்(12) வீணாக ரன் அவுட்டானார். அபிஷேக் நாயர்(12) ஏமாற்றினார். இதற்கு பின் "டெயிலெண்டர்கள்' உதவியுடன் பொறுப்பாக ஆடினார் மெக்லாரன். பியுஸ் சாவ்லா(15) ஓரளவுக்கு தாக்குப்பிடித்தார். தாமஸ் ஓவரில் சிக்சர், பவுண்டரி அடித்த மெக்லாரன், அரைசதம் கடந்து அசத்தினார். பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 112 ரன்கள் எடுத்தது. மெக்லாரன்(51) அவுட்டாகாமல் இருந்தார்.
எளிதான வெற்றி:
சுலப இலக்கை விரட்டிய புனே அணிக்கு முதல் பந்திலேயே "ஷாக்' கொடுத்தார் பிரவீண் குமார். இவரது வேகத்தில் கிரேம் ஸ்மித் "டக்' அவுட்டானார். இதற்கு பின் ஜெசி ரைடர்(31), மன்ஹாஸ்(35) இணைந்து பொறுப்பாக ஆடினர். அடுத்து வந்த உத்தப்பா(22*), யுவராஜ் சிங்(21*) சேர்ந்து அதிரடியாக ஆடினர். இருவரும் பிரவீண் குமார் ஓவரில் தலா ஒரு சிக்சர் அடித்து அணிக்கு முதல் வெற்றியை பெற்று தந்தனர். கடந்த முறை பஞ்சாப் அணிக்காக ஆடிய யுவராஜ், இம்முறை அறிமுக அணியாக களமிறங்கியுள்ள புனே அணியின் கேப்டனாக அருமையாக செயல்பட்டார். இவர், அபிஷேக் நாயர் பந்தை பவுண்டரிக்கு பறக்க விட, புனே அணி 13.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்து, சுலப வெற்றி பெற்றது.
மூன்று விக்கெட் வீழ்த்திய புனே வீரர் ஸ்ரீகாந்த் வாக், ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.





ஸ்கோர் போர்டு
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
கில்கிறிஸ்ட்(கே)உத்தப்பா(ப)தாமஸ் 1(3)
ஷான் மார்ஷ்(கே)சர்மா(ப)வாக் 1(3)
வல்தாட்டி(கே)ரைடர்(ப)தாமஸ் 6(6)
தினேஷ் கார்த்திக்(கே)சர்மா(ப)வாக் 0(7)
நாயர்(கே)யுவராஜ்(ப)ரைடர் 12(18)
சன்னி சிங்-ரன் அவுட்-(யுவராஜ்/உத்தப்பா) 12(6)
மெக்லாரன்-அவுட் இல்லை- 51(43)
சாவ்லா(கே)<உத்தப்பா(ப)வாக் 15(28)
பிரவீண்(கே)உத்தப்பா(ப)பார்னல் 3(5)
ரிம்மிங்டன்-அவுட் இல்லை- 1(1)
உதிரிகள் 10
மொத்தம்(20 ஓவரில் 8 விக்.,) 112
விக்கெட் வீழ்ச்சி: 1-2(கில்கிறிஸ்ட்), 2-5(ஷான் மார்ஷ்), 3-9(வல்தாட்டி), 4-9(தினேஷ் கார்த்திக்), 5-36(சன்னி சிங்), 6-45(நாயர்), 7-80(சாவ்லா), 8-102(பிரவீண்).
பந்துவீச்சு: தாமஸ் 4-0-27-2, வாக் 3-0-16-3, பார்னல் 4-0-20-1, முரளி கார்த்திக் 1-0-10-0, ரைடர் 3-1-9-1, மன்ஹாஸ் 3-0-14-0, ராகுல் சர்மா 2-0-12-0.
புனே வாரியர்ஸ்
ஸ்மித்(கே)மெக்லாரன்(ப)பிரவீண் 0(1)
ரைடர்(கே)கில்கிறிஸ்ட்(ப)மெக்லாரன் 31(17)
மன்ஹாஸ்(கே)கில்கிறிஸ்ட்(ப)நாயர் 35(32)
உத்தப்பா-அவுட் இல்லை- 22(14)
யுவராஜ்-அவுட் இல்லை- 21(15)
உதிரிகள் 4
மொத்தம்(13.1 ஓவரில் 3 விக்.,) 113
விக்கெட் வீழ்ச்சி: 1-0(ஸ்மித்), 2-60(மன்ஹாஸ்), 3-68(ரைடர்).
பந்துவீச்சு: பிரவீண் 3-0-28-1, ரிம்மிங்டன் 3-0-19-0, மெக்லாரன் 3-0-26-1, சாவ்லா 1-0-12-0, நாயர் 3.1-0-27-1.

புதுடில்லி: ஐ.பி.எல்., லீக் போட்டியில் சச்சினின் மும்பை இந்தியன்ஸ் அணி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வேகப்பந்து வீச்சில் மிரட்டிய மலிங்கா, 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். பேட்டிங்கில் சொதப்பிய சேவக்கின் டில்லி அணி பரிதாபமாக தோல்வியடைந்தது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. டில்லியில் நடந்த லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் சேவக், பேட்டிங் தேர்வு செய்தார்.
அதிர்ச்சித் துவக்கம்:
டில்லி அணிக்கு சேவக், வார்னர் துவக்கம் கொடுத்தனர். ஹர்பஜன் வீசிய முதல் ஓவரில் சிக்சர் அடித்து அதிரடியை துவக்கினார் சேவக். ஆனால் அடுத்து மலிங்காவின் ஓவரில் எல்லாமே தலைகீழானது. இவரது வேகத்தில் இரண்டாவது பந்தில் வார்னர் (1) போல்டானார். பின் நான்காவது பந்தில் சந்த்தையும் (0) போல்டாக்கினார்.
சேவக் ஏமாற்றம்:
இருப்பினும் சேவக், அவ்வப்போது பவுண்டரி அடித்து ஆறுதல் தந்தார். இவர் 19 ரன் எடுத்திருந்த போது, துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். அடுத்து வந்த நமன் ஓஜா, முனாப் படேல் ஓவரில் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்து அசத்தினார். மறுமுனையில் பின்ச்சை (8), ஹர்பஜன் தனது சுழலில் வெளியேற்றினார்.
மலிங்கா அபாரம்:
சற்று தாக்குப்பிடித்த ஓஜா, 29 ரன்கள் எடுத்து திரும்பினார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இர்பான் பதான், "டக்' அவுட்டானார். அதன்பின் மலிங்கா மீண்டும் மிரட்டத் துவங்கினார். இம்முறை முதலில் வேணுகோபால் ராவை (26), போல்டாக்கிய மலிங்கா, அதே ஓவரில் மார்கலையும் போல்டாக்கி அதிர்ச்சி தந்தார். கடைசியாக வந்த டிண்டாவும், மலிங்கா வேகத்தில் சிக்கினார்.
டில்லி டேர்டெவில்ஸ் அணி 17.4 ஓவரில் 95 ரன்களுக்கு சுருண்டது. மும்பை அணியின் மலிங்கா, 5 விக்கெட் வீழ்த்தினார். ஹர்பஜன் தன்பங்கிற்கு 2 விக்கெட் கைப்பற்றினார்.
ஜேக்கப்ஸ் ஏமாற்றம்:
போகிற போக்கில் எட்டக்கூடிய இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டன் சச்சின், ஜேக்கப்ஸ் துவக்கம் தந்தனர். ஜேக்கப்ஸ் ஒரு ரன்னில் அவுட்டானார். அம்பாதி ராயுடு (14) விரைவில் அவுட்டானார்.
சச்சின் அபாரம்:
பின் சச்சினுடன் ரோகித் சர்மா இணைந்தார். இந்த ஜோடி பதட்டமில்லாமல் ரன் சேர்த்தது. இதனிடையே மார்கல் ஓவரில், 3 பவுண்டரி அடித்து அதிரடிக்கு மாறினார் ரோகித் சர்மா. மறுபுறம் மெர்வி பந்தில், சச்சின் "சூப்பர்' சிக்சர் அடித்து அசத்தினார். இர்பான் பதான் பந்தில், சச்சின் ஒரு பவுண்டரி அடிக்க, மும்பை இந்தியன்ஸ் அணி 16.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்து, அபார வெற்றி பெற்றது.
சச்சின் (46), ரோகித் சர்மா (27) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்டநாயகன் விருதை மலிங்கா தட்டிச் சென்றார். மும்பை இந்தியன்ஸ் அணி, தனது இரண்டாவது போட்டியில் நாளை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சந்திக்கிறது.

இன்று "ஹீரோ'
கடந்த வாரம் மும்பையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான, உலக கோப்பை பைனலில் இலங்கையின் மலிங்கா வேகப்பந்து வீச்சில் மிரட்டினார். துவக்கத்தில் சேவக், சச்சினை அவுட்டாக்கி, மும்பை ரசிகர்களின் "வில்லனாக' மாறினார். நேற்று டில்லி அணியின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, மும்பை ரசிகர்களின் "ஹீரோ'வாக அசத்தினார்.

ஸ்கோர்போர்டு
டில்லி டேர்டெவில்ஸ்
வார்னர்(ப)மலிங்கா 1(3)
சேவக்-ரன் அவுட்(சச்சின்) 19(16)
சந்த்(ப)மலிங்கா 0(2)
பின்ச்(கே)ராயுடு(ப)ஹர்பஜன் 8(12)
ஓஜா(கே)மலிங்கா(ப)முர்டசா 29(30)
வேணுகோபால்(ப)மலிங்கா 26(25)
இர்பான்-ரன் அவுட்(சதீஷ்/ஜேக்கப்ஸ்) 0(1)
வான் டர் மெர்வி-அவுட் இல்லை- 8(6)
மார்கல்(ப)மலிங்கா 0(2)
யாதவ்(ஸ்டம்டு)ஜேக்கப்ஸ்(ப)ஹர்பஜன் 0(4)
டிண்டா(கே)பிராங்க்ளின்(ப)மலிங்கா 0(5)
உதிரிகள் 4
மொத்தம் (17.4 ஓவரில் ஆல் அவுட்) 95
விக்கெட் வீழ்ச்சி: 1-11(வார்னர்), 2-11(சந்த்), 3-27(சேவக்), 4-40(பின்ச்), 5-82(ஓஜா), 6-82(இர்பான்), 7-88(வேணுகோபால்), 8-88(மார்கல்), 9-90(யாதவ்), 10-95(டிண்டா).
பந்துவீச்சு: ஹர்பஜன் 3-0-14-2, மலிங்கா 3.4-1-13-5, முர்டசா 4-0-21-1, முனாப் படேல் 3-0-20-0, போலார்டு 3-0-18-0, பிராங்க்ளின் 1-0-9-0.
மும்பை இந்தியன்ஸ்
ஜேக்கப்ஸ்(ப)மார்கல் 1(6)
சச்சின்--அவுட் இல்லை- 46(50)
ராயுடு-ரன் அவுட்(வான் டர் மெர்வி) 14(15)
ரோகித்-அவுட் இல்லை- 27(30)
உதிரிகள் 11
மொத்தம் (16.5 ஓவரில் 2 விக்.,) 99
விக்கெட் வீழ்ச்சி: 1-1(ஜேக்கப்ஸ்), 2-31(ராயுடு).
பந்து வீச்சு: டிண்டா 2-0-7-0, மார்கல் 4-0-29-1, இர்பான் பதான் 2.5-0-14-0, யாதவ் 2-0-16-0, வான் டர் மெர்வி 4-0-16-0, பின்ச் 2-0-13-0.

மலிங்கா வேகத்தில் சரிந்தது சேவக் அணி! *சச்சின் அணி அசத்தல் வெற்றி

புதுடில்லி: ஐ.பி.எல்., லீக் போட்டியில் சச்சினின் மும்பை இந்தியன்ஸ் அணி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வேகப்பந்து வீச்சில் மிரட்டிய மலிங்கா, 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். பேட்டிங்கில் சொதப்பிய சேவக்கின் டில்லி அணி பரிதாபமாக தோல்வியடைந்தது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. டில்லியில் நடந்த லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் சேவக், பேட்டிங் தேர்வு செய்தார்.
அதிர்ச்சித் துவக்கம்:
டில்லி அணிக்கு சேவக், வார்னர் துவக்கம் கொடுத்தனர். ஹர்பஜன் வீசிய முதல் ஓவரில் சிக்சர் அடித்து அதிரடியை துவக்கினார் சேவக். ஆனால் அடுத்து மலிங்காவின் ஓவரில் எல்லாமே தலைகீழானது. இவரது வேகத்தில் இரண்டாவது பந்தில் வார்னர் (1) போல்டானார். பின் நான்காவது பந்தில் சந்த்தையும் (0) போல்டாக்கினார்.
சேவக் ஏமாற்றம்:
இருப்பினும் சேவக், அவ்வப்போது பவுண்டரி அடித்து ஆறுதல் தந்தார். இவர் 19 ரன் எடுத்திருந்த போது, துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். அடுத்து வந்த நமன் ஓஜா, முனாப் படேல் ஓவரில் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்து அசத்தினார். மறுமுனையில் பின்ச்சை (8), ஹர்பஜன் தனது சுழலில் வெளியேற்றினார்.
மலிங்கா அபாரம்:
சற்று தாக்குப்பிடித்த ஓஜா, 29 ரன்கள் எடுத்து திரும்பினார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இர்பான் பதான், "டக்' அவுட்டானார். அதன்பின் மலிங்கா மீண்டும் மிரட்டத் துவங்கினார். இம்முறை முதலில் வேணுகோபால் ராவை (26), போல்டாக்கிய மலிங்கா, அதே ஓவரில் மார்கலையும் போல்டாக்கி அதிர்ச்சி தந்தார். கடைசியாக வந்த டிண்டாவும், மலிங்கா வேகத்தில் சிக்கினார்.
டில்லி டேர்டெவில்ஸ் அணி 17.4 ஓவரில் 95 ரன்களுக்கு சுருண்டது. மும்பை அணியின் மலிங்கா, 5 விக்கெட் வீழ்த்தினார். ஹர்பஜன் தன்பங்கிற்கு 2 விக்கெட் கைப்பற்றினார்.
ஜேக்கப்ஸ் ஏமாற்றம்:
போகிற போக்கில் எட்டக்கூடிய இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டன் சச்சின், ஜேக்கப்ஸ் துவக்கம் தந்தனர். ஜேக்கப்ஸ் ஒரு ரன்னில் அவுட்டானார். அம்பாதி ராயுடு (14) விரைவில் அவுட்டானார்.
சச்சின் அபாரம்:
பின் சச்சினுடன் ரோகித் சர்மா இணைந்தார். இந்த ஜோடி பதட்டமில்லாமல் ரன் சேர்த்தது. இதனிடையே மார்கல் ஓவரில், 3 பவுண்டரி அடித்து அதிரடிக்கு மாறினார் ரோகித் சர்மா. மறுபுறம் மெர்வி பந்தில், சச்சின் "சூப்பர்' சிக்சர் அடித்து அசத்தினார். இர்பான் பதான் பந்தில், சச்சின் ஒரு பவுண்டரி அடிக்க, மும்பை இந்தியன்ஸ் அணி 16.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்து, அபார வெற்றி பெற்றது.
சச்சின் (46), ரோகித் சர்மா (27) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்டநாயகன் விருதை மலிங்கா தட்டிச் சென்றார். மும்பை இந்தியன்ஸ் அணி, தனது இரண்டாவது போட்டியில் நாளை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சந்திக்கிறது.

இன்று "ஹீரோ'
கடந்த வாரம் மும்பையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான, உலக கோப்பை பைனலில் இலங்கையின் மலிங்கா வேகப்பந்து வீச்சில் மிரட்டினார். துவக்கத்தில் சேவக், சச்சினை அவுட்டாக்கி, மும்பை ரசிகர்களின் "வில்லனாக' மாறினார். நேற்று டில்லி அணியின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, மும்பை ரசிகர்களின் "ஹீரோ'வாக அசத்தினார்.

ஸ்கோர்போர்டு
டில்லி டேர்டெவில்ஸ்
வார்னர்(ப)மலிங்கா 1(3)
சேவக்-ரன் அவுட்(சச்சின்) 19(16)
சந்த்(ப)மலிங்கா 0(2)
பின்ச்(கே)ராயுடு(ப)ஹர்பஜன் 8(12)
ஓஜா(கே)மலிங்கா(ப)முர்டசா 29(30)
வேணுகோபால்(ப)மலிங்கா 26(25)
இர்பான்-ரன் அவுட்(சதீஷ்/ஜேக்கப்ஸ்) 0(1)
வான் டர் மெர்வி-அவுட் இல்லை- 8(6)
மார்கல்(ப)மலிங்கா 0(2)
யாதவ்(ஸ்டம்டு)ஜேக்கப்ஸ்(ப)ஹர்பஜன் 0(4)
டிண்டா(கே)பிராங்க்ளின்(ப)மலிங்கா 0(5)
உதிரிகள் 4
மொத்தம் (17.4 ஓவரில் ஆல் அவுட்) 95
விக்கெட் வீழ்ச்சி: 1-11(வார்னர்), 2-11(சந்த்), 3-27(சேவக்), 4-40(பின்ச்), 5-82(ஓஜா), 6-82(இர்பான்), 7-88(வேணுகோபால்), 8-88(மார்கல்), 9-90(யாதவ்), 10-95(டிண்டா).
பந்துவீச்சு: ஹர்பஜன் 3-0-14-2, மலிங்கா 3.4-1-13-5, முர்டசா 4-0-21-1, முனாப் படேல் 3-0-20-0, போலார்டு 3-0-18-0, பிராங்க்ளின் 1-0-9-0.
மும்பை இந்தியன்ஸ்
ஜேக்கப்ஸ்(ப)மார்கல் 1(6)
சச்சின்--அவுட் இல்லை- 46(50)
ராயுடு-ரன் அவுட்(வான் டர் மெர்வி) 14(15)
ரோகித்-அவுட் இல்லை- 27(30)
உதிரிகள் 11
மொத்தம் (16.5 ஓவரில் 2 விக்.,) 99
விக்கெட் வீழ்ச்சி: 1-1(ஜேக்கப்ஸ்), 2-31(ராயுடு).
பந்து வீச்சு: டிண்டா 2-0-7-0, மார்கல் 4-0-29-1, இர்பான் பதான் 2.5-0-14-0, யாதவ் 2-0-16-0, வான் டர் மெர்வி 4-0-16-0, பின்ச் 2-0-13-0.

மும்பை: மும்பையில் வரும் சனிக்கிழமை நடைபெறும் இந்தியா-இலங்கை இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியைக் காண இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருகிறார்.

மொகாலியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த அரையிறுதிப் போட்டியைக் காண பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்தார். இதையடுத்து கிலானி நேற்று மொகாலி வந்து போட்டியை மன்மோகனுடன் இணைந்து ரசித்தார்.

மேலும் இரு தலைவர்களும் சிறிது நேரம், இரு நாட்டு விவகாரங்கள் குறித்தும் பேசினர். கிலானிக்கு மன்மோகன் சிறப்பு விருந்தும் அளித்தார்.

இந் நிலையில் இந்தியாவுடன் தனது நாட்டு அணி இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளதையடுத்து இதைக் காண மும்பை வர முடிவு செய்துள்ளார் இலங்கை அதிபர் ராஜபக்சே. இதற்கான அனுமதியையும் தன்னுடன் வரும் 30 பேருக்கு சிறப்பு இருக்கைகளையும் கோரியுள்ளார் ராஜபக்சே.

அதே போல வங்கதேச அதிபர் ஷேக் ஹசீனாவையும் போட்டியைக் காண வருமாறு இந்தியா அழைத்துள்ளது.
Read: In English
இவர்களது வருகையையொட்டி மும்பையில் கூடுதல் பாதுகாப்பு போடப்படவுள்ளது.

இந் நிலையில் இறுதிப் போட்டியைக் காண ஏராளமான இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மும்பைக்கு படை எடுக்க ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து அந் நாட்டு விமானத்துறை மும்பைக்கு கூடுதல் விமானங்களை இயக்கவுள்ளது.

இந்தியா-இலங்கை இறுதிப் போட்டியை காண மும்பை வரும் ராஜபக்சே!

மும்பை: மும்பையில் வரும் சனிக்கிழமை நடைபெறும் இந்தியா-இலங்கை இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியைக் காண இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருகிறார்.

மொகாலியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த அரையிறுதிப் போட்டியைக் காண பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்தார். இதையடுத்து கிலானி நேற்று மொகாலி வந்து போட்டியை மன்மோகனுடன் இணைந்து ரசித்தார்.

மேலும் இரு தலைவர்களும் சிறிது நேரம், இரு நாட்டு விவகாரங்கள் குறித்தும் பேசினர். கிலானிக்கு மன்மோகன் சிறப்பு விருந்தும் அளித்தார்.

இந் நிலையில் இந்தியாவுடன் தனது நாட்டு அணி இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளதையடுத்து இதைக் காண மும்பை வர முடிவு செய்துள்ளார் இலங்கை அதிபர் ராஜபக்சே. இதற்கான அனுமதியையும் தன்னுடன் வரும் 30 பேருக்கு சிறப்பு இருக்கைகளையும் கோரியுள்ளார் ராஜபக்சே.

அதே போல வங்கதேச அதிபர் ஷேக் ஹசீனாவையும் போட்டியைக் காண வருமாறு இந்தியா அழைத்துள்ளது.
Read: In English
இவர்களது வருகையையொட்டி மும்பையில் கூடுதல் பாதுகாப்பு போடப்படவுள்ளது.

இந் நிலையில் இறுதிப் போட்டியைக் காண ஏராளமான இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மும்பைக்கு படை எடுக்க ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து அந் நாட்டு விமானத்துறை மும்பைக்கு கூடுதல் விமானங்களை இயக்கவுள்ளது.

தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டே, தமிழர்களை இழிவு படுத்தி தமிழர்களுக்கு எதிரியாக செயல்பட்ட நடிகர் ஆர்யா, இப்போது இந்தியாவுக்கே எதிரி ஆகியிருக்கிறார். உலக கோப்பையை பாகிஸ்தான் கைப்பற்றும் என்று கூறியிருக்கும் ஆர்யாவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. உலக கோப்பை ‌கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் பாகி்தான் அணி வெற்றி பெறும்; இந்தியா ஜெயிக்காது என்று நினைக்கிறேன், என்று நடிகர் ஆர்யா கூறியுள்ளார். மேலும் பாகிஸ்தான் சிறந்த அணியாக இருப்பதாகவும், இந்த உலக கோப்பை போட்டியில் அவர்கள் நிறைய ரன் எடுத்துள்ளனர், சாஹித் அப்ரிடி பாகிஸ்தானுக்கு வெற்றியை தேடித்தருவார். உலக கோப்பையை பாகிஸ்தான் கைப்பற்றும் என்றும் ஆர்யா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

ஆர்யாவின் இந்த தேசவிரோத கருத்துக்கு இந்து மக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:-

நடிகர் ஆர்யா சர்ச்சை கருத்துக்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஏற்கனவே மலையாள நடிகர்களுக்கு ஆதரவாகவும், தமிழ் நடிகர்களுக்கு எதிராகவும் பேசி கண்டனத்துக்கு உள்ளானார். இப்போது பாகிஸ்தான் அணி ஜெயிக்கும் என்று கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணிதான் தற்போது உயர்வாக உள்ளது. அது வலுவிழந்த அணியாக இருந்தபோது இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு இளைஞரும் பிரார்த்தித்தனர். அரை இறுதிபோட்டியில் இந்திய அணி வெற்றி பெற நாடுமுழுவதும் பிரார்த்தனைகளும் வேண்டுதல்களும் நடந்து வருகின்றன. இந்து முன்னணி சகோதரர்கள் இணைந்து இந்திய அணி வெற்றிக்காக பிரார்த்தனை செய்து வருகின்றார்கள்.

மதங்களை கடந்து இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று ஒவ்வொரு இந்தியன் இதயமும் துடிக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி ஜெயிக்கும் என ஆர்யா அந்த அணிக்கு வக்காலத்து வாங்குவது இளைஞர்கள் மனதை புண்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் அணி வலுவாக இல்லை. ஏற்கனவே சூதாட்டத்திலும், போதை மருந்து வழக்குகளிலும் சிக்கி பல சிறந்த வீரர்கள் வெளியேற்றப்பட்டு அந்த அணி சின்னா பின்னமாகி கிடக்கிறது. அந்த அணிக்கு ஆதரவாக ஆர்யா சொன்ன கருத்தை வாபஸ் பெற வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கண்ணன் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்யாவை வெற்றி நாயகனாக்கிய தமிழ் ரசிகர்களை இழிவுபடுத்தி பேசி சர்ச்சையில் சிக்கிக் கொண்ட நடிகர் ஆர்யா, பின்னர் அதற்கு வருத்தம் தெரிவித்தார். இப்போது இந்தியாவுக்கு எதிராக பேசி புதிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். ஆர்யாவின் ஆரூடம் பலிக்குமா? இல்லையா? என்பதல்ல இப்போதைய கேள்வி. ஒரு இந்தியனாக, அதுவும் பிரபலமான நடிகனாக இருந்து கொண்டு அவர் இப்படி சொல்லியிருப்பது சரியா, தவறா? என்பது பட்டிமன்ற விவாத்துக்குரியதுதானே!

இந்தியாவுக்கே எதிரியானார் ஆர்யா! உலக கோப்பையை பாக்., கைப்பற்றுமாம்!!

தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டே, தமிழர்களை இழிவு படுத்தி தமிழர்களுக்கு எதிரியாக செயல்பட்ட நடிகர் ஆர்யா, இப்போது இந்தியாவுக்கே எதிரி ஆகியிருக்கிறார். உலக கோப்பையை பாகிஸ்தான் கைப்பற்றும் என்று கூறியிருக்கும் ஆர்யாவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. உலக கோப்பை ‌கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் பாகி்தான் அணி வெற்றி பெறும்; இந்தியா ஜெயிக்காது என்று நினைக்கிறேன், என்று நடிகர் ஆர்யா கூறியுள்ளார். மேலும் பாகிஸ்தான் சிறந்த அணியாக இருப்பதாகவும், இந்த உலக கோப்பை போட்டியில் அவர்கள் நிறைய ரன் எடுத்துள்ளனர், சாஹித் அப்ரிடி பாகிஸ்தானுக்கு வெற்றியை தேடித்தருவார். உலக கோப்பையை பாகிஸ்தான் கைப்பற்றும் என்றும் ஆர்யா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

ஆர்யாவின் இந்த தேசவிரோத கருத்துக்கு இந்து மக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:-

நடிகர் ஆர்யா சர்ச்சை கருத்துக்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஏற்கனவே மலையாள நடிகர்களுக்கு ஆதரவாகவும், தமிழ் நடிகர்களுக்கு எதிராகவும் பேசி கண்டனத்துக்கு உள்ளானார். இப்போது பாகிஸ்தான் அணி ஜெயிக்கும் என்று கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணிதான் தற்போது உயர்வாக உள்ளது. அது வலுவிழந்த அணியாக இருந்தபோது இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு இளைஞரும் பிரார்த்தித்தனர். அரை இறுதிபோட்டியில் இந்திய அணி வெற்றி பெற நாடுமுழுவதும் பிரார்த்தனைகளும் வேண்டுதல்களும் நடந்து வருகின்றன. இந்து முன்னணி சகோதரர்கள் இணைந்து இந்திய அணி வெற்றிக்காக பிரார்த்தனை செய்து வருகின்றார்கள்.

மதங்களை கடந்து இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று ஒவ்வொரு இந்தியன் இதயமும் துடிக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி ஜெயிக்கும் என ஆர்யா அந்த அணிக்கு வக்காலத்து வாங்குவது இளைஞர்கள் மனதை புண்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் அணி வலுவாக இல்லை. ஏற்கனவே சூதாட்டத்திலும், போதை மருந்து வழக்குகளிலும் சிக்கி பல சிறந்த வீரர்கள் வெளியேற்றப்பட்டு அந்த அணி சின்னா பின்னமாகி கிடக்கிறது. அந்த அணிக்கு ஆதரவாக ஆர்யா சொன்ன கருத்தை வாபஸ் பெற வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கண்ணன் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்யாவை வெற்றி நாயகனாக்கிய தமிழ் ரசிகர்களை இழிவுபடுத்தி பேசி சர்ச்சையில் சிக்கிக் கொண்ட நடிகர் ஆர்யா, பின்னர் அதற்கு வருத்தம் தெரிவித்தார். இப்போது இந்தியாவுக்கு எதிராக பேசி புதிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். ஆர்யாவின் ஆரூடம் பலிக்குமா? இல்லையா? என்பதல்ல இப்போதைய கேள்வி. ஒரு இந்தியனாக, அதுவும் பிரபலமான நடிகனாக இருந்து கொண்டு அவர் இப்படி சொல்லியிருப்பது சரியா, தவறா? என்பது பட்டிமன்ற விவாத்துக்குரியதுதானே!

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே இன்று மொஹாலியில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியைப் பார்க்கும் ஆவலில் இன்று பாலிவுட்டில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாம்.

இந்திய அணி வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் மொஹாலிக்குப் படையெடுக்கின்றனர்.

ஆமிர்கான், அவரது மனைவி கிரண் ராவ், ப்ரீத்தி ஜிந்தா, சுனில்ஷெட்டி, ராகுல் போஸ், பாடகர் மிகா சிங் உள்ளிட்டோர் நேரடியாக போட்டியைக் காணவுள்ளனர். அதேபோல ஷாருக் கான், அகஷய் குமார், இம்ரான் கான், தீபிகா படுகோன் ஆகியோர் டிவிகளில் பார்த்து ரசிக்கவுள்ளனர். மேலும் வீடுகளில் விருந்துக்கு ஏற்பாடு செய்து உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் போட்டியை ரசிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவாம்.

ஆமிர்கான் போட்டி குறித்துக் கூறுகையில், நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் உள்ளேன். இந்தியாவை இறுதிப் போட்டியில் காண பெரும் ஆவலுடன் இருக்கிறேன். எனது இயக்கும் ஒரு கிரிக்கெட் வெறியர் என்பதால் படப்பிடிப்பைக் கூட ரத்து செய்து விட்டார். எனவே மொஹாலியில் போய் நேரடியாக பார்த்து ரசிக்கப் போகிறேன் என்றார்.

தீபிகா படுகோன், சித்ராங்கதா சிங், ஜான் ஆப்ரகாம் ஆகியோர் தற்போது லண்டனில் உள்ளனர். தங்களது படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு டிவியில் இருந்தபடி போட்டியை ரசிக்க அவர்கள் தயாராகி விட்டனர்.

சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் தனது வீட்டையே குட்டி ஸ்டேடியமாக்கி விட்டார். தனது பாலிவுட் நண்பர்கள் அத்தனை பேரையும் வீட்டுக்கு அழைத்துள்ளார். அவரது மனைவி கெளரி சிறப்பு இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்து வருகிறார். நண்பர்கள் புடை சூழ தனது குடும்பத்தினருடன் போட்டியை ரசித்துப் பார்க்கவுள்ளார் ஷாருக்.

மொத்தத்தில் பாலிவுட்டில் இன்று பெரும்பாலான படப்பிடிப்புகளுக்கு லீவு விட்டு விட்டனர். போட்டி தொடங்கி முடியும் வரை பாலிவுட் பிரபலங்கள் யாரையும் எங்குமே பார்க்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அரை இறுதிப் போட்டியை நேரில் பார்க்கும் பாலிவுட்-ஷூட்டிங் ரத்து

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே இன்று மொஹாலியில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியைப் பார்க்கும் ஆவலில் இன்று பாலிவுட்டில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாம்.

இந்திய அணி வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் மொஹாலிக்குப் படையெடுக்கின்றனர்.

ஆமிர்கான், அவரது மனைவி கிரண் ராவ், ப்ரீத்தி ஜிந்தா, சுனில்ஷெட்டி, ராகுல் போஸ், பாடகர் மிகா சிங் உள்ளிட்டோர் நேரடியாக போட்டியைக் காணவுள்ளனர். அதேபோல ஷாருக் கான், அகஷய் குமார், இம்ரான் கான், தீபிகா படுகோன் ஆகியோர் டிவிகளில் பார்த்து ரசிக்கவுள்ளனர். மேலும் வீடுகளில் விருந்துக்கு ஏற்பாடு செய்து உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் போட்டியை ரசிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவாம்.

ஆமிர்கான் போட்டி குறித்துக் கூறுகையில், நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் உள்ளேன். இந்தியாவை இறுதிப் போட்டியில் காண பெரும் ஆவலுடன் இருக்கிறேன். எனது இயக்கும் ஒரு கிரிக்கெட் வெறியர் என்பதால் படப்பிடிப்பைக் கூட ரத்து செய்து விட்டார். எனவே மொஹாலியில் போய் நேரடியாக பார்த்து ரசிக்கப் போகிறேன் என்றார்.

தீபிகா படுகோன், சித்ராங்கதா சிங், ஜான் ஆப்ரகாம் ஆகியோர் தற்போது லண்டனில் உள்ளனர். தங்களது படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு டிவியில் இருந்தபடி போட்டியை ரசிக்க அவர்கள் தயாராகி விட்டனர்.

சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் தனது வீட்டையே குட்டி ஸ்டேடியமாக்கி விட்டார். தனது பாலிவுட் நண்பர்கள் அத்தனை பேரையும் வீட்டுக்கு அழைத்துள்ளார். அவரது மனைவி கெளரி சிறப்பு இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்து வருகிறார். நண்பர்கள் புடை சூழ தனது குடும்பத்தினருடன் போட்டியை ரசித்துப் பார்க்கவுள்ளார் ஷாருக்.

மொத்தத்தில் பாலிவுட்டில் இன்று பெரும்பாலான படப்பிடிப்புகளுக்கு லீவு விட்டு விட்டனர். போட்டி தொடங்கி முடியும் வரை பாலிவுட் பிரபலங்கள் யாரையும் எங்குமே பார்க்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மொகாலி: மொகாலியில் இன்று நடக்கும் உலக கோப்பை தொடரின் பரபரப்பான அரையிறுதியில் "பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில், அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, பைனலுக்கு முன்னேற இந்திய வீரர்கள் காத்திருக்கின்றனர்.
இந்தியா, இலங்கை, வங்கதேச மண்ணில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று மொகாலியில் நடக்கும் அரையிறுதி போட்டியில் (பகலிரவு), இந்திய அணி, பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை மேற்கொள்கிறது.
பலமான பேட்டிங்:
இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக காட்சி அளிக்கிறது. வங்கதேச அணிக்கு எதிராக சதம் கடந்த சேவக் (342 ரன்கள்), அதன்பின் பெரிய அளவில் சோபிக்கவில்லை. எனவே இவர், இன்று தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் மழை பொழியலாம். "சூப்பர் பார்மில் உள்ள "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (379 ரன்கள்), சதத்தில் சதம் கடந்து சாதிக்கலாம். மூன்றாவது வீரராக களமிறங்கும் காம்பிர் (269 ரன்கள்), தனது பொறுப்பான ஆட்டத்தை தொடரலாம்.
யுவராஜ் நம்பிக்கை:
"மிடில்-ஆர்டரில் யுவராஜ் சிங் (341 ரன்கள்) அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை நான்கு முறை "ஆட்ட நாயகன் விருது வென்றுள்ள இவர், இன்று சொந்த ஊரில் முழுதிறமையை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு வித்திடலாம். கிடைத்த வாய்ப்பை சுரேஷ் ரெய்னா சரியாக பயன்படுத்திக் கொண்டதால், இன்று யூசுப் பதான் களமிறங்குவது சந்தேகம். விராத் கோஹ்லி, கேப்டன் தோனி, பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தும் பட்சத்தில், இமாலய இலக்கை பதிவு செய்யலாம்.
ஜாகிர் மிரட்டல்:
பவுலிங்கை பொறுத்தவரை வேகத்தில் ஜாகிர் கான் மிரட்டி வருகிறார். இதுவரை 17 விக்கெட் வீழ்த்தி உள்ள இவர், இன்றும் விக்கெட் வேட்டை நடத்தலாம். வேகத்துக்கு கைகொடுக்கும் மொகாலி மைதானத்தில் முனாப் படேல், ஸ்ரீசாந்த், ஆஷிஸ் நெஹ்ரா உள்ளிட்டோரும் சாதிக்கலாம்.
அஷ்வின் எதிர்பார்ப்பு:
சுழலில் அனுபவ ஹர்பஜன் சிங் (6 விக்கெட்) இருப்பது பலம். இவருடன் இளம் சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் (4 விக்கெட்), துல்லியமாக பந்துவீசி எதிரணியின் ரன் வேட்டையை தடுக்கிறார். ஆனால் மொகாலி மைதானத்தில் சுழல் எடுபடாது என்பதால், ஒரே ஒரு சுழற்பந்துவீச்சாளருடன் இந்திய அணி களமிறங்கலாம். பகுதிநேர சுழலில் "ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் (11 விக்கெட்) விக்கெட் வேட்டை நடத்தி வருவது கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
"மிடில்-ஆர்டர் பலம்:
லீக் சுற்றில், பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் சொல்லிக் கொள்ளும்படி விளையாடவில்லை. ஆனால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான காலிறுதியில், கம்ரான் அக்மல், முகமது ஹபீஸ் ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தது. எனவே இன்றும் இவர்கள் அசத்தலாம். "மிடில்-ஆர்டரில் அனுபவ மிஸ்பா (192 ரன்கள்), யூனிஸ் கான் (172 ரன்கள்) இருப்பது பலம். இதுவரை 211 ரன்கள் எடுத்துள்ள உமர் அக்மல், தனது ரன் வேட்டையை தொடரலாம். அப்ரிதி (65 ரன்கள்), அப்துல் ரசாக் (101 ரன்கள்) உள்ளிட்ட "ஆல்-ரவுண்டர்கள் பேட்டிங்கில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிராக இவர்கள் எழுச்சி பெறும் பட்சத்தில் அசத்தல் வெற்றி பெறலாம்.
பலமான பந்துவீச்சு:
இம்முறை பாகிஸ்தான் அணியின் மிகப்பெரிய பலம் பந்துவீச்சு. சுழலில் கேப்டன் அப்ரிதி (21 விக்கெட்), விக்கெட் மழை பொழிகிறார். நான்கு முறை, நான்கு அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்தி உள்ள இவர், இந்தியாவுக்கு எதிராக இன்று அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு முகமது ஹபீஸ், அப்துர் ரெஹ்மான், சயீத் அஜ்மல் உள்ளிட்ட இளம் சுழற்பந்துவீச்சாளர்கள் கைகொடுக்க வேண்டும். வேகப்பந்துவீச்சில் உமர் குல் (14 விக்கெட்) நம்பிக்கை அளிக்கிறார். மொகாலி மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு கைகொடுக்கும் என்பதால், சோயப் அக்தருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். வாகாப் ரியாஸ், அப்துல் ரசாக் உள்ளிட்ட வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட் வேட்டை நடத்தும் பட்சத்தில் இந்திய அணிக்கு சிக்கலாகிவிடும்.
பலமான பேட்டிங் வரிசை கொண்ட இந்திய அணி, வலுவான பவுலிங் பலத்துடன் உள்ள பாகிஸ்தானுடன் மோத இருப்பதால், அனல் பறக்கும் ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.
ஐந்தாவது முறை
உலக கோப்பை அரங்கில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஐந்தாவது முறையாக மோத உள்ளன. முன்னதாக மோதிய நான்கு (1992, 96, 99, 2003) போட்டிகளில், இந்திய அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
* கடந்த 1996ல், 8 விக்கெட்டுக்கு 287 ரன்கள் எடுத்த இந்திய அணி, உலக கோப்பை அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பெற்றது. கடந்த 2003ல், 7 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் அணி, உலக கோப்பை அரங்கில் இந்தியாவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.
* கடந்த 1999ல், 6 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்த இந்திய அணி, உலக கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக குறைந்த ஸ்கோரை பெற்றது. கடந்த 1992ல், 173 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான் அணி, உலக கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது.
* உலக கோப்பை அரங்கில், பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில் "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (4 போட்டி, 228 ரன்கள்) முன்னிலை வகிக்கிறார். பாகிஸ்தான் சார்பில், இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் சயீத் அன்வர் (3 போட்டி, 185 ரன்கள்) முதலிடத்தில் உள்ளார்.
* இந்தியா சார்பில் பாகிஸ்தானுக்கு எதிராக உலக கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் வெங்கடேஷ் பிரசாத் (2 போட்டி, 8 விக்கெட்) முன்னிலை வகிக்கிறார். பாகிஸ்தான் சார்பில், இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள் பட்டியலில் முஸ்தாக் அகமது (2 போட்டி, 5 விக்கெட்) முன்னிலையில் உள்ளார்.
---
பாக்., ஆதிக்கம்
சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் 119 முறை மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் 69, இந்தியா 46 போட்டிகளில் வெற்றி கண்டன. நான்கு போட்டிகளுக்கு முடிவு இல்லை.
---
இம்மைதானத்தில் இதுவரை...
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று நடக்கும் அரையிறுதி போட்டி, மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கிறது. இங்கு, இவ்விரு அணிகள் இரண்டு (1999, 2007) போட்டிகளில் மோதியுள்ளன. இரண்டிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
* கடந்த 1999ல், இங்கு நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.5 ஓவரில் 196 ரன்களுக்கு சுருண்டது. பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 42 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 197 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
* கடந்த 2007ல், இங்கு நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 321 ரன்கள் எடுத்தது. இதனை 49.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 322 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி "சேஸ் செய்தது.
* இந்திய அணி, இங்கு விளையாடிய ஒன்பது போட்டிகளில் ஐந்து வெற்றி, நான்கு தோல்வியை பதிவு செய்தது. பாகிஸ்தான் அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் இரண்டு வெற்றி, மூன்று தோல்வியை பெற்றது.
* இங்கு, அதிக ரன்கள் எடுத்துள்ள இந்திய வீரர்கள் வரிசையில் சச்சின் முன்னிலை வகிக்கிறார். இவர் ஆறு போட்டிகளில் பங்கேற்று 281 ரன்கள் எடுத்துள்ளார். பாகிஸ்தான் சார்பில் இசாஜ் அகமது, 3 போட்டியில் பங்கேற்று 162 ரன்கள் எடுத்துள்ளார்.
* இங்கு, அதிக விக்கெட் வீழ்த்தியுள்ள இந்திய பவுலர்கள் வரிசையில் ஹர்பஜன் சிங் (5 போட்டி, 9 விக்கெட்) முன்னிலை வகிக்கிறார். பாகிஸ்தான் சார்பில் சக்லைன் முஷ்டாக் (3 போட்டி, 8 விக்கெட்) முன்னிலையில் உள்ளார்.
* இங்கு அதிக ரன்கள் எடுத்துள்ள அணிகள் வரிசையில் தென் ஆப்ரிக்கா முன்னிலை வகிக்கிறது. இம்முறை நெதர்லாந்துக்கு எதிரான லீக் போட்டியில் 5 விக்கெட்டுக்கு 351 ரன்கள் குவித்தது தென் ஆப்ரிக்கா.
---
எட்டு ஆண்டுகளுக்கு பின்...
உலக கோப்பை அரங்கில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் சுமார் எட்டு ஆண்டுகளுக்கு பின் மோத உள்ளன. முன்னதாக கடந்த 2003ல் செஞ்சுரியனில் நடந்த லீக் போட்டியில் இவ்விரு அணிகள் மோதின. இப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
---
நான்கு ஆண்டுகளுக்கு பின்...
இன்றைய அரையிறுதிப் போட்டியின் மூலம், பாகிஸ்தான் அணி சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் ஒருநாள் போட்டியில் பங்கேற்கிறது. கடைசியாக, கடந்த 2007ல் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க சோயப் மாலிக் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியா வந்தது. இதில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
* கடந்த 2008ல் நடந்த முதலாவது ஐ.பி.எல்., தொடரில் ஒரு சில பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்றனர். பின், அதே ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின், இந்திய மண்ணில் போட்டிகளில் பங்கேற்ற பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
---
அரையிறுதிக்கு வந்த பாதை
இந்தியா
லீக் சுற்று:
1. 87 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்துடன் வெற்றி.
2. இங்கிலாந்துக்கு எதிரான போட்டி "டை ஆனது.
3. அயர்லாந்துடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
4. 5 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வென்றது.
5. தென் ஆப்ரிக்காவுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
6. வெஸ்ட் இண்டீசை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
காலிறுதி:
7. ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
பாகிஸ்தான்
லீக் சுற்று:
1. கென்யாவுக்கு எதிராக 205 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
2. 11 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் வெற்றி.
3. கனடாவை 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
4. நியூசிலாந்திடம் 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.
5. 7 விக்கெட் வித்தியாத்தில் ஜிம்பாப்வேயை வென்றது.
6. ஆஸ்திரேலியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
காலிறுதி:
7. வெஸ்ட் இண்டீசை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
---
சச்சின் "99
இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 99 சதம் அடித்துள்ளார். இதில் டெஸ்ட் போட்டியில் 51, ஒருநாள் போட்டியில் 48 சதம் அடங்கும். பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய அரையிறுதியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் சதத்தில் சதம் கடந்து புதிய உலக சாதனை படைக்கலாம்.
* கடந்த 2007ல், பாகிஸ்தானுக்கு எதிராக மொகாலியில் நடந்த போட்டியில் இந்தியாவின் சச்சின், 91 பந்தில் 99 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். தற்போது "சூப்பர் பார்மில் உள்ள இவர், அன்று நழுவவிட்ட சதத்தை, இன்று பதிவு செய்யலாம். இதன்மூலம் சதத்தில் சதம் கடந்து புதிய சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது.

பைனலுக்கு முன்னேறுமா இந்தியா! * இன்று பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை

மொகாலி: மொகாலியில் இன்று நடக்கும் உலக கோப்பை தொடரின் பரபரப்பான அரையிறுதியில் "பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில், அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, பைனலுக்கு முன்னேற இந்திய வீரர்கள் காத்திருக்கின்றனர்.
இந்தியா, இலங்கை, வங்கதேச மண்ணில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று மொகாலியில் நடக்கும் அரையிறுதி போட்டியில் (பகலிரவு), இந்திய அணி, பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை மேற்கொள்கிறது.
பலமான பேட்டிங்:
இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக காட்சி அளிக்கிறது. வங்கதேச அணிக்கு எதிராக சதம் கடந்த சேவக் (342 ரன்கள்), அதன்பின் பெரிய அளவில் சோபிக்கவில்லை. எனவே இவர், இன்று தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் மழை பொழியலாம். "சூப்பர் பார்மில் உள்ள "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (379 ரன்கள்), சதத்தில் சதம் கடந்து சாதிக்கலாம். மூன்றாவது வீரராக களமிறங்கும் காம்பிர் (269 ரன்கள்), தனது பொறுப்பான ஆட்டத்தை தொடரலாம்.
யுவராஜ் நம்பிக்கை:
"மிடில்-ஆர்டரில் யுவராஜ் சிங் (341 ரன்கள்) அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை நான்கு முறை "ஆட்ட நாயகன் விருது வென்றுள்ள இவர், இன்று சொந்த ஊரில் முழுதிறமையை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு வித்திடலாம். கிடைத்த வாய்ப்பை சுரேஷ் ரெய்னா சரியாக பயன்படுத்திக் கொண்டதால், இன்று யூசுப் பதான் களமிறங்குவது சந்தேகம். விராத் கோஹ்லி, கேப்டன் தோனி, பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தும் பட்சத்தில், இமாலய இலக்கை பதிவு செய்யலாம்.
ஜாகிர் மிரட்டல்:
பவுலிங்கை பொறுத்தவரை வேகத்தில் ஜாகிர் கான் மிரட்டி வருகிறார். இதுவரை 17 விக்கெட் வீழ்த்தி உள்ள இவர், இன்றும் விக்கெட் வேட்டை நடத்தலாம். வேகத்துக்கு கைகொடுக்கும் மொகாலி மைதானத்தில் முனாப் படேல், ஸ்ரீசாந்த், ஆஷிஸ் நெஹ்ரா உள்ளிட்டோரும் சாதிக்கலாம்.
அஷ்வின் எதிர்பார்ப்பு:
சுழலில் அனுபவ ஹர்பஜன் சிங் (6 விக்கெட்) இருப்பது பலம். இவருடன் இளம் சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் (4 விக்கெட்), துல்லியமாக பந்துவீசி எதிரணியின் ரன் வேட்டையை தடுக்கிறார். ஆனால் மொகாலி மைதானத்தில் சுழல் எடுபடாது என்பதால், ஒரே ஒரு சுழற்பந்துவீச்சாளருடன் இந்திய அணி களமிறங்கலாம். பகுதிநேர சுழலில் "ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் (11 விக்கெட்) விக்கெட் வேட்டை நடத்தி வருவது கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
"மிடில்-ஆர்டர் பலம்:
லீக் சுற்றில், பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் சொல்லிக் கொள்ளும்படி விளையாடவில்லை. ஆனால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான காலிறுதியில், கம்ரான் அக்மல், முகமது ஹபீஸ் ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தது. எனவே இன்றும் இவர்கள் அசத்தலாம். "மிடில்-ஆர்டரில் அனுபவ மிஸ்பா (192 ரன்கள்), யூனிஸ் கான் (172 ரன்கள்) இருப்பது பலம். இதுவரை 211 ரன்கள் எடுத்துள்ள உமர் அக்மல், தனது ரன் வேட்டையை தொடரலாம். அப்ரிதி (65 ரன்கள்), அப்துல் ரசாக் (101 ரன்கள்) உள்ளிட்ட "ஆல்-ரவுண்டர்கள் பேட்டிங்கில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிராக இவர்கள் எழுச்சி பெறும் பட்சத்தில் அசத்தல் வெற்றி பெறலாம்.
பலமான பந்துவீச்சு:
இம்முறை பாகிஸ்தான் அணியின் மிகப்பெரிய பலம் பந்துவீச்சு. சுழலில் கேப்டன் அப்ரிதி (21 விக்கெட்), விக்கெட் மழை பொழிகிறார். நான்கு முறை, நான்கு அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்தி உள்ள இவர், இந்தியாவுக்கு எதிராக இன்று அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு முகமது ஹபீஸ், அப்துர் ரெஹ்மான், சயீத் அஜ்மல் உள்ளிட்ட இளம் சுழற்பந்துவீச்சாளர்கள் கைகொடுக்க வேண்டும். வேகப்பந்துவீச்சில் உமர் குல் (14 விக்கெட்) நம்பிக்கை அளிக்கிறார். மொகாலி மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு கைகொடுக்கும் என்பதால், சோயப் அக்தருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். வாகாப் ரியாஸ், அப்துல் ரசாக் உள்ளிட்ட வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட் வேட்டை நடத்தும் பட்சத்தில் இந்திய அணிக்கு சிக்கலாகிவிடும்.
பலமான பேட்டிங் வரிசை கொண்ட இந்திய அணி, வலுவான பவுலிங் பலத்துடன் உள்ள பாகிஸ்தானுடன் மோத இருப்பதால், அனல் பறக்கும் ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.
ஐந்தாவது முறை
உலக கோப்பை அரங்கில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஐந்தாவது முறையாக மோத உள்ளன. முன்னதாக மோதிய நான்கு (1992, 96, 99, 2003) போட்டிகளில், இந்திய அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
* கடந்த 1996ல், 8 விக்கெட்டுக்கு 287 ரன்கள் எடுத்த இந்திய அணி, உலக கோப்பை அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பெற்றது. கடந்த 2003ல், 7 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் அணி, உலக கோப்பை அரங்கில் இந்தியாவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.
* கடந்த 1999ல், 6 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்த இந்திய அணி, உலக கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக குறைந்த ஸ்கோரை பெற்றது. கடந்த 1992ல், 173 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான் அணி, உலக கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது.
* உலக கோப்பை அரங்கில், பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில் "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (4 போட்டி, 228 ரன்கள்) முன்னிலை வகிக்கிறார். பாகிஸ்தான் சார்பில், இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் சயீத் அன்வர் (3 போட்டி, 185 ரன்கள்) முதலிடத்தில் உள்ளார்.
* இந்தியா சார்பில் பாகிஸ்தானுக்கு எதிராக உலக கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் வெங்கடேஷ் பிரசாத் (2 போட்டி, 8 விக்கெட்) முன்னிலை வகிக்கிறார். பாகிஸ்தான் சார்பில், இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள் பட்டியலில் முஸ்தாக் அகமது (2 போட்டி, 5 விக்கெட்) முன்னிலையில் உள்ளார்.
---
பாக்., ஆதிக்கம்
சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் 119 முறை மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் 69, இந்தியா 46 போட்டிகளில் வெற்றி கண்டன. நான்கு போட்டிகளுக்கு முடிவு இல்லை.
---
இம்மைதானத்தில் இதுவரை...
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று நடக்கும் அரையிறுதி போட்டி, மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கிறது. இங்கு, இவ்விரு அணிகள் இரண்டு (1999, 2007) போட்டிகளில் மோதியுள்ளன. இரண்டிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
* கடந்த 1999ல், இங்கு நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.5 ஓவரில் 196 ரன்களுக்கு சுருண்டது. பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 42 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 197 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
* கடந்த 2007ல், இங்கு நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 321 ரன்கள் எடுத்தது. இதனை 49.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 322 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி "சேஸ் செய்தது.
* இந்திய அணி, இங்கு விளையாடிய ஒன்பது போட்டிகளில் ஐந்து வெற்றி, நான்கு தோல்வியை பதிவு செய்தது. பாகிஸ்தான் அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் இரண்டு வெற்றி, மூன்று தோல்வியை பெற்றது.
* இங்கு, அதிக ரன்கள் எடுத்துள்ள இந்திய வீரர்கள் வரிசையில் சச்சின் முன்னிலை வகிக்கிறார். இவர் ஆறு போட்டிகளில் பங்கேற்று 281 ரன்கள் எடுத்துள்ளார். பாகிஸ்தான் சார்பில் இசாஜ் அகமது, 3 போட்டியில் பங்கேற்று 162 ரன்கள் எடுத்துள்ளார்.
* இங்கு, அதிக விக்கெட் வீழ்த்தியுள்ள இந்திய பவுலர்கள் வரிசையில் ஹர்பஜன் சிங் (5 போட்டி, 9 விக்கெட்) முன்னிலை வகிக்கிறார். பாகிஸ்தான் சார்பில் சக்லைன் முஷ்டாக் (3 போட்டி, 8 விக்கெட்) முன்னிலையில் உள்ளார்.
* இங்கு அதிக ரன்கள் எடுத்துள்ள அணிகள் வரிசையில் தென் ஆப்ரிக்கா முன்னிலை வகிக்கிறது. இம்முறை நெதர்லாந்துக்கு எதிரான லீக் போட்டியில் 5 விக்கெட்டுக்கு 351 ரன்கள் குவித்தது தென் ஆப்ரிக்கா.
---
எட்டு ஆண்டுகளுக்கு பின்...
உலக கோப்பை அரங்கில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் சுமார் எட்டு ஆண்டுகளுக்கு பின் மோத உள்ளன. முன்னதாக கடந்த 2003ல் செஞ்சுரியனில் நடந்த லீக் போட்டியில் இவ்விரு அணிகள் மோதின. இப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
---
நான்கு ஆண்டுகளுக்கு பின்...
இன்றைய அரையிறுதிப் போட்டியின் மூலம், பாகிஸ்தான் அணி சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் ஒருநாள் போட்டியில் பங்கேற்கிறது. கடைசியாக, கடந்த 2007ல் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க சோயப் மாலிக் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியா வந்தது. இதில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
* கடந்த 2008ல் நடந்த முதலாவது ஐ.பி.எல்., தொடரில் ஒரு சில பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்றனர். பின், அதே ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின், இந்திய மண்ணில் போட்டிகளில் பங்கேற்ற பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
---
அரையிறுதிக்கு வந்த பாதை
இந்தியா
லீக் சுற்று:
1. 87 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்துடன் வெற்றி.
2. இங்கிலாந்துக்கு எதிரான போட்டி "டை ஆனது.
3. அயர்லாந்துடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
4. 5 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வென்றது.
5. தென் ஆப்ரிக்காவுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
6. வெஸ்ட் இண்டீசை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
காலிறுதி:
7. ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
பாகிஸ்தான்
லீக் சுற்று:
1. கென்யாவுக்கு எதிராக 205 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
2. 11 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் வெற்றி.
3. கனடாவை 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
4. நியூசிலாந்திடம் 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.
5. 7 விக்கெட் வித்தியாத்தில் ஜிம்பாப்வேயை வென்றது.
6. ஆஸ்திரேலியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
காலிறுதி:
7. வெஸ்ட் இண்டீசை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
---
சச்சின் "99
இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 99 சதம் அடித்துள்ளார். இதில் டெஸ்ட் போட்டியில் 51, ஒருநாள் போட்டியில் 48 சதம் அடங்கும். பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய அரையிறுதியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் சதத்தில் சதம் கடந்து புதிய உலக சாதனை படைக்கலாம்.
* கடந்த 2007ல், பாகிஸ்தானுக்கு எதிராக மொகாலியில் நடந்த போட்டியில் இந்தியாவின் சச்சின், 91 பந்தில் 99 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். தற்போது "சூப்பர் பார்மில் உள்ள இவர், அன்று நழுவவிட்ட சதத்தை, இன்று பதிவு செய்யலாம். இதன்மூலம் சதத்தில் சதம் கடந்து புதிய சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது.

மொகாலி: இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும், உலக கோப்பை அரையிறுதி போட்டியில் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரையிலும், சூதாட்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 30ம் தேதி, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு உலக கோப்பை அரையிறுதி போட்டி, கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான டிக்கெட்டின் விலை, தற்போதைய நிலையில் 8 முதல் 10 மடங்கு வரை அதிகமாக வைத்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், புக்கிகளும் பெரிய அளவில் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அணியை இந்தியா வீழ்த்தியவுடனே, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி குறித்த, சூதாட்டம் அதிகரித்துவிட்டது. ஆனால், இவர்களால் எந்த அணி வெல்லும் என்று உறுதியாக கணிக்க முடியவில்லை.
இதனால் இரு அணிகளுக்கும் 90 பைசா என்ற அளவில் தற்போதைய "ரேட்டிங்' உள்ளது. இதுகுறித்து சூதாட்டத்தில் ஈடுபடும் சீனியர் புக்கி ஒருவர் கூறுகையில்,"" இரு அணிகளும் சமபலத்தில் உள்ளன. இதனால் இந்த "ரேட்டிங்கில்' மாற்றம் ஏற்படும்,'' என்றார்.
இந்த மிகப்பெரிய சூதாட்டத்தில், சர்வதேச நிழல் உலக தாதா நேரடியாக ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. தற்போது பாகிஸ்தானின் கராச்சியில் தங்கியிருப்பதாக கருதப்படும், இவரது ஆட்கள் தான் இந்த வேலையில் இறங்கியுள்ளனர் என, நன்கு தெரிந்த புக்கிகள் கூறுகின்றனர். இதுகுறித்து மற்றொரு புக்கி கூறுகையில்,"" இந்தியாவுக்கு எதிரான அரையிறுதியில் பாகிஸ்தான் தோல்வியடைந்தால், இதில் "டி' கம்பெனியின் பின்னணி இருப்பதை மறுக்க முடியாது,'' என்றார்.
இதில் பெரும்பணத்தை முதலீடு செய்ய, இந்தியாவுக்கு வெளியில் இருந்து செயல்படும், ஹவாலா ஆசாமிகள் முன்வந்துள்ளனர் என தெரிகிறது. இருப்பினும் பெரும்பாலான புக்கிகள், பாகிஸ்தானில் இருந்து துபாய் சென்று செயல்படவுள்ளதாக தெரிகிறது. ஏனெனில், இங்குள்ள "கிளப்' தான் இதுபோன்ற நேரங்களில், மிகப்பெரிய பண பரிவர்த்தனையில் ஈடுபடுகிறது.
இருப்பினும், இந்த சூதாட்டத்தைத் தடுக்க போலீசார் மிகப்பெரிய அளவில், முயற்சி எடுத்து வருகின்றனர். இதுகுறித்து மொகாலி போலீசின் இணைக்கமிஷனர் ஹிமன்சு ராய் கூறுகையில்,"" கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடும் புக்கிகள் மற்றும் தரகர்களை கைது செய்ய தீவிர முயற்சி செய்து வருகிறோம்,'' என்றார்.

5 ஆயிரம் கோடி சூதாட்டம்! * இந்தியா-பாக்., போட்டிக்கு உச்சபட்சம்

மொகாலி: இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும், உலக கோப்பை அரையிறுதி போட்டியில் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரையிலும், சூதாட்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 30ம் தேதி, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு உலக கோப்பை அரையிறுதி போட்டி, கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான டிக்கெட்டின் விலை, தற்போதைய நிலையில் 8 முதல் 10 மடங்கு வரை அதிகமாக வைத்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், புக்கிகளும் பெரிய அளவில் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அணியை இந்தியா வீழ்த்தியவுடனே, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி குறித்த, சூதாட்டம் அதிகரித்துவிட்டது. ஆனால், இவர்களால் எந்த அணி வெல்லும் என்று உறுதியாக கணிக்க முடியவில்லை.
இதனால் இரு அணிகளுக்கும் 90 பைசா என்ற அளவில் தற்போதைய "ரேட்டிங்' உள்ளது. இதுகுறித்து சூதாட்டத்தில் ஈடுபடும் சீனியர் புக்கி ஒருவர் கூறுகையில்,"" இரு அணிகளும் சமபலத்தில் உள்ளன. இதனால் இந்த "ரேட்டிங்கில்' மாற்றம் ஏற்படும்,'' என்றார்.
இந்த மிகப்பெரிய சூதாட்டத்தில், சர்வதேச நிழல் உலக தாதா நேரடியாக ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. தற்போது பாகிஸ்தானின் கராச்சியில் தங்கியிருப்பதாக கருதப்படும், இவரது ஆட்கள் தான் இந்த வேலையில் இறங்கியுள்ளனர் என, நன்கு தெரிந்த புக்கிகள் கூறுகின்றனர். இதுகுறித்து மற்றொரு புக்கி கூறுகையில்,"" இந்தியாவுக்கு எதிரான அரையிறுதியில் பாகிஸ்தான் தோல்வியடைந்தால், இதில் "டி' கம்பெனியின் பின்னணி இருப்பதை மறுக்க முடியாது,'' என்றார்.
இதில் பெரும்பணத்தை முதலீடு செய்ய, இந்தியாவுக்கு வெளியில் இருந்து செயல்படும், ஹவாலா ஆசாமிகள் முன்வந்துள்ளனர் என தெரிகிறது. இருப்பினும் பெரும்பாலான புக்கிகள், பாகிஸ்தானில் இருந்து துபாய் சென்று செயல்படவுள்ளதாக தெரிகிறது. ஏனெனில், இங்குள்ள "கிளப்' தான் இதுபோன்ற நேரங்களில், மிகப்பெரிய பண பரிவர்த்தனையில் ஈடுபடுகிறது.
இருப்பினும், இந்த சூதாட்டத்தைத் தடுக்க போலீசார் மிகப்பெரிய அளவில், முயற்சி எடுத்து வருகின்றனர். இதுகுறித்து மொகாலி போலீசின் இணைக்கமிஷனர் ஹிமன்சு ராய் கூறுகையில்,"" கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடும் புக்கிகள் மற்றும் தரகர்களை கைது செய்ய தீவிர முயற்சி செய்து வருகிறோம்,'' என்றார்.

ஆமதாபாத்: உலக கோப்பை பரபரப்பான காலிறுதியில் அசத்தலாக ஆடிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. "நடப்பு சாம்பியனாக வந்த ஆஸ்திரேலிய அணி, இம்முறை காலிறுதியுடன் நடையை கட்டியது. கேப்டன் பாண்டிங்கின் சதம் வீணானது. பவுலிங், பீல்டிங், பேட்டிங் என கிரிக்கெட்டின் அனைத்து துறைகளிலும் கலக்கிய இந்திய அணி, அரையிறுதிக்கு ஜோராக முன்னேறியது. வரும் 30ம் தேதி மொகாலியில் நடக்கும் அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று நடந்த இரண்டாவது காலிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதின.
சேவக் வாய்ப்பு:
இந்திய அணியில் யூசுப் பதான் நீக்கப்பட்டு, மீண்டும் சேவக் இடம் பெற்றார். ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவன் ஸ்மித்துக்கு பதிலாக டேவிட் ஹசி வாய்ப்பு பெற்றார். "டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங், "பேட்டிங் தேர்வு செய்தார்.
முதலில் அஷ்வின்:
ஆஸ்திரேலிய அணிக்கு வாட்சன், ஹாடின் இணைந்து விவேகமான துவக்கம் தந்தனர். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடந்த போட்டி போலவே இம்முறையும் முதல் ஓவரை வீச அஷ்வினை அழைத்தார் இந்திய கேப்டன் தோனி. இந்த ஓவரில் 3 ரன் மட்டும் கொடுத்து அசத்தினார். அடுத்த ஓவரில் ஜாகிர் கான் ஒரு ரன் கொடுக்க, ஆஸ்திரேலிய அணியின் ரன் வேகம் கட்டுப்படுத்தப்பட்டது. அஷ்வின் பந்தில் "ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்ற வாட்சன்(25) பரிதாபமாக போல்டானார்.
யுவராஜ் அபாரம்:
அடுத்து வந்த கேப்டன் பாண்டிங் "கம்பெனி கொடுக்க, தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார் ஹாடின். இவர், முனாப் வீசிய 14வது ஓவரில் 3 பவுண்டரி விளாசினார். யுவராஜ் ஓவரில் பாண்டிங் 2 பவுண்டரி அடித்து அசத்தினார். அரைசதம் கடந்த ஹாடின்(53), யுவராஜ் சுழலில் சிக்கினார். மைக்கேல் கிளார்க்கும்(8), யுவராஜ் வலையில் விழுந்தார். மீண்டும் பந்துவீச வந்த ஜாகிர் கான், மைக்கேல் ஹசியை(3) வெளியேற்றி திருப்புமுனை ஏற்படுத்தினார். இப்படி இந்திய வீரர்கள் அபாரமாக பந்துவீச, ஆஸ்திரேலிய அணி 33.3 ஒவரில் 4 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்து தவித்தது.
30வது சதம்:
இதற்கு பின் கேப்டன் பாண்டிங் பொறுப்பாக ஆடினார். யுவராஜ் வீசிய போட்டியின் 39வது ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த இவர், தனது திறமையை நிரூபித்தார். கேமரான் ஒயிட்(12) ஏமாற்றினார். பேட்டிங் "பவர்பிளே ஓவர்களில் பாண்டிங்-டேவிட் ஹசி அதிரடியாக ரன் சேர்த்தனர். அஷ்வின் பந்தில் டேவிட் ஹசி ஒரு இமாலய சிக்சர்(85 மீ., தூரம்) அடித்தார். மறுமுனையில் அஷ்வின் பந்தை ஒரு ரன்னுக்கு தட்டி விட்ட பாண்டிங், ஒரு நாள் போட்டிகளில் தனது 30வது சதம் எட்டினார். இது உலக கோப்பை அரங்கில் இவரது 5வது சதம். பின் அஷ்வின் பந்தை "ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்ற பாண்டிங் 104 ரன்களுக்கு(7 பவுண்டரி, 1 சிக்சர்) அவுட்டானார். ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்தது. டேவிட் ஹசி(38), ஜான்சன்(6) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்தியா சார்பில் ஜாகிர், அஷ்வின், யுவராஜ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
சச்சின் அரைசதம்:
சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு சேவக், சச்சின் இணைந்து நல்ல துவக்கம் கொடுத்தனர். சேவக் 15 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த காம்பிருடன் சேர்ந்து "சூப்பராக ஆடினார் அனுபவ சச்சின். இவர், ஜான்சன் ஓவரில் வரிசையாக இரண்டு பவுண்டரி அடித்தார். ஒரு நாள் போட்டிகளில் தனது 94வது அரைசதம் கடந்த சச்சின்(53), டெய்ட் வேகத்தில் வீழ்ந்தார். விராத் கோஹ்லி(24) தாக்குப்பிடிக்கவில்லை. இதற்கு பின் ஒன்று, இரண்டு ரன்களாக சேர்த்த காம்பிர், அணிக்கு கைகொடுத்தார். அரைசதம் எட்டிய இவர் வீணாக 50 ரன்களுக்கு ரன் அவுட்டானார். அப்போது இந்திய அணி 33.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்து, தவித்தது.
யுவராஜ் ராசி:
போட்டியின் 38வது ஓவரை வீசிய பிரட் லீ அதிர்ச்சி கொடுத்தார். இவரது வேகத்தில் பொறுப்பற்ற "ஷாட் அடித்த தோனி(7) அவுட்டானார். பின் யுவராஜ், சுரேஷ் ரெய்னா சேர்ந்து துணிச்சலாக போராடினர். பிரட் லீ ஓவரில் யுவராஜ் 2 பவுண்டரி, ரெய்னா 1 பவுண்டரி அடிக்க, ஒட்டுமொத்தமாக 15 ரன்கள் எடுக்கப்பட்டன. தொடர்ந்து டெய்ட் ஓவரிலும் 13 ரன்கள் கிடைக்க, இந்தியாவுக்கு ஏற்பட்ட நெருக்கடி தணிந்தது. அபாரமாக ஆடிய யுவராஜ் இத்தொடரில் தனது 4வது அரைசதம் அடித்தார். இது ஒரு நாள் அரங்கில் இவரது 49வது அரைசதம். இவர் அரைசதம் அடித்தால், இந்தியாவின் வெற்றி உறுதி என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமானது. மறுபக்கம் பிரட் லீ பந்தில் ஒரு சிக்சர் அடித்த ரெய்னா, ரசிகர்களை உற்சாகத்தின் உச்சிக்கே கொண்டு சென்றார். பிரட் லீ பந்தில் யுவராஜ் ஒரு "சூப்பர் பவுண்டரி அடிக்க, இந்திய அணி 47.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 261 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்றது. யுவராஜ் 57(8 பவுண்டரி), ரெய்னா 34(2 பவுண்டரி, 1 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தனர்.
இவ்வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியது. கடந்த 1999ல் இருந்து உலக கோப்பை அரங்கில் மிரட்டி வந்த ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம், இம்முறை காலிறுதியுடன் முடிவுக்கு வந்தது.
மீண்டும் "ஆல்-ரவுண்டராக ஜொலித்த யுவராஜ் சிங் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இரண்டாவது இடம்
இந்தியாவுக்கு எதிரான காலிறுதியில் 118 பந்தில் 104 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், உலக கோப்பை அரங்கில் தனது 5வது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் உலக கோப்பை வரலாற்றில் அதிக சதம் கடந்த வீரர்கள் வரிசையில் 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (6 சதம்) உள்ளார்.
---
தோனி "100
நேற்று கேப்டனாக தனது 100வது ஒரு நாள் போட்டியில் பங்கேற்றார் இந்தியாவின் தோனி. விக்கெட் கீப்பர் ஒருவர் 100 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டது இதுவே முதன்முறை.
---
சச்சின் 18 ஆயிரம் ரன்கள்
ஒரு நாள் போட்டிகளில் 18 ஆயிரம் ரன்களை எட்டிய உலகின் முதல் வீரர் என்ற மகத்தான சாதனை படைத்தார் இந்தியாவின் "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். நேற்று அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், 45வது ரன்னை எடுத்த போது, ஒருநாள் போட்டிகளில் 18 ஆயிரம் ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இதுவரை 451 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 48 சதம், 94 அரைசதம் சேர்த்து, அதிக ரன்கள் எடுத்துள்ளவர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில்( 18,008 ரன்கள்) உள்ளார். இரண்டாவது இடத்தில் இலங்கையின் ஜெயசூர்யா(444 போட்டி, 13, 428 ரன்கள்) இருக்கிறார். மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங்(359 போட்டி, 13, 288) உள்ளார்.
ஸ்கோர்போர்டு
ஆஸ்திரேலியா
வாட்சன்(ப)அஷ்வின் 25(38)
ஹாடின்(கே)ரெய்னா(ப)யுவராஜ் 53(62)
பாண்டிங்(கே)ஜாகிர்(ப)அஷ்வின் 104(118)
கிளார்க்(கே)ஜாகிர்(ப)யுவராஜ் 8(19)
மைக்கேல் ஹசி(ப)ஜாகிர் 3(9)
ஒயிட்(கே)+(ப)ஜாகிர் 12(22)
டேவிட்-அவுட் இல்லை- 38(26)
ஜான்சன்-அவுட் இல்லை- 6(6)
உதிரிகள் 11
மொத்தம் (50 ஓவரில் 6 விக்.,) 260
விக்கெட் வீழ்ச்சி: 1-40(வாட்சன்), 2-110(ஹாடின்), 3-140(கிளார்க்), 4-150(மைக்கேல் ஹசி), 5-190(காமிரான் ஒயிட்), 6-245(பாண்டிங்).
பந்துவீச்சு: அஷ்வின் 10-0-52-2, ஜாகிர் கான் 10-0-53-2, ஹர்பஜன் சிங் 10-0-50-0, முனாப் படேல் 7-0-44-0, யுவராஜ் சிங் 10-0-44-2, சச்சின் 2-0-9-0, விராத் கோஹ்லி 1-0-6-0.
இந்தியா
சேவக்(கே)மைக்கேல் ஹசி(ப)வாட்சன் 15(22)
சச்சின்(கே)ஹாடின்(ப)டெய்ட் 53(68)
காம்பிர்-ரன் அவுட்(ஒயிட்/டேவிட் ஹசி) 50(64)
கோஹ்லி(கே)கிளார்க்(ப)டேவிட் ஹசி 24(33)
யுவராஜ் சிங்-அவுட் இல்லை- 57(65)
தோனி(கே)கிளார்க்(ப)பிரட் லீ 7(8)
ரெய்னா-அவுட் இல்லை- 34(28)
உதிரிகள் 21
மொத்தம் (47.4 ஓவரில் 5 விக்., ) 261
விக்கெட் வீழ்ச்சி: 1-44(சேவக்), 2-94(சச்சின்), 3-143(விராத் கோஹ்லி), 4-168(காம்பிர்), 5-187(தோனி).
பந்து வீச்சு: பிரட் லீ 8.4-1-45-1, டெய்ட் 7-0-52-1, ஜான்சன் 8-0-41-0, வாட்சன் 7-0-37-1, கிரெஜ்ஜா 9-0-45-0, கிளார்க் 3-0-19-0, டேவிட் ஹசி 5-0-19-1.

ஆஸி., கங்காருவை வதம் செய்த இந்திய புலி! * அரையிறுதியில் இந்தியா-பாக்., மோதல்

ஆமதாபாத்: உலக கோப்பை பரபரப்பான காலிறுதியில் அசத்தலாக ஆடிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. "நடப்பு சாம்பியனாக வந்த ஆஸ்திரேலிய அணி, இம்முறை காலிறுதியுடன் நடையை கட்டியது. கேப்டன் பாண்டிங்கின் சதம் வீணானது. பவுலிங், பீல்டிங், பேட்டிங் என கிரிக்கெட்டின் அனைத்து துறைகளிலும் கலக்கிய இந்திய அணி, அரையிறுதிக்கு ஜோராக முன்னேறியது. வரும் 30ம் தேதி மொகாலியில் நடக்கும் அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று நடந்த இரண்டாவது காலிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதின.
சேவக் வாய்ப்பு:
இந்திய அணியில் யூசுப் பதான் நீக்கப்பட்டு, மீண்டும் சேவக் இடம் பெற்றார். ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவன் ஸ்மித்துக்கு பதிலாக டேவிட் ஹசி வாய்ப்பு பெற்றார். "டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங், "பேட்டிங் தேர்வு செய்தார்.
முதலில் அஷ்வின்:
ஆஸ்திரேலிய அணிக்கு வாட்சன், ஹாடின் இணைந்து விவேகமான துவக்கம் தந்தனர். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடந்த போட்டி போலவே இம்முறையும் முதல் ஓவரை வீச அஷ்வினை அழைத்தார் இந்திய கேப்டன் தோனி. இந்த ஓவரில் 3 ரன் மட்டும் கொடுத்து அசத்தினார். அடுத்த ஓவரில் ஜாகிர் கான் ஒரு ரன் கொடுக்க, ஆஸ்திரேலிய அணியின் ரன் வேகம் கட்டுப்படுத்தப்பட்டது. அஷ்வின் பந்தில் "ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்ற வாட்சன்(25) பரிதாபமாக போல்டானார்.
யுவராஜ் அபாரம்:
அடுத்து வந்த கேப்டன் பாண்டிங் "கம்பெனி கொடுக்க, தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார் ஹாடின். இவர், முனாப் வீசிய 14வது ஓவரில் 3 பவுண்டரி விளாசினார். யுவராஜ் ஓவரில் பாண்டிங் 2 பவுண்டரி அடித்து அசத்தினார். அரைசதம் கடந்த ஹாடின்(53), யுவராஜ் சுழலில் சிக்கினார். மைக்கேல் கிளார்க்கும்(8), யுவராஜ் வலையில் விழுந்தார். மீண்டும் பந்துவீச வந்த ஜாகிர் கான், மைக்கேல் ஹசியை(3) வெளியேற்றி திருப்புமுனை ஏற்படுத்தினார். இப்படி இந்திய வீரர்கள் அபாரமாக பந்துவீச, ஆஸ்திரேலிய அணி 33.3 ஒவரில் 4 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்து தவித்தது.
30வது சதம்:
இதற்கு பின் கேப்டன் பாண்டிங் பொறுப்பாக ஆடினார். யுவராஜ் வீசிய போட்டியின் 39வது ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த இவர், தனது திறமையை நிரூபித்தார். கேமரான் ஒயிட்(12) ஏமாற்றினார். பேட்டிங் "பவர்பிளே ஓவர்களில் பாண்டிங்-டேவிட் ஹசி அதிரடியாக ரன் சேர்த்தனர். அஷ்வின் பந்தில் டேவிட் ஹசி ஒரு இமாலய சிக்சர்(85 மீ., தூரம்) அடித்தார். மறுமுனையில் அஷ்வின் பந்தை ஒரு ரன்னுக்கு தட்டி விட்ட பாண்டிங், ஒரு நாள் போட்டிகளில் தனது 30வது சதம் எட்டினார். இது உலக கோப்பை அரங்கில் இவரது 5வது சதம். பின் அஷ்வின் பந்தை "ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்ற பாண்டிங் 104 ரன்களுக்கு(7 பவுண்டரி, 1 சிக்சர்) அவுட்டானார். ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்தது. டேவிட் ஹசி(38), ஜான்சன்(6) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்தியா சார்பில் ஜாகிர், அஷ்வின், யுவராஜ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
சச்சின் அரைசதம்:
சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு சேவக், சச்சின் இணைந்து நல்ல துவக்கம் கொடுத்தனர். சேவக் 15 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த காம்பிருடன் சேர்ந்து "சூப்பராக ஆடினார் அனுபவ சச்சின். இவர், ஜான்சன் ஓவரில் வரிசையாக இரண்டு பவுண்டரி அடித்தார். ஒரு நாள் போட்டிகளில் தனது 94வது அரைசதம் கடந்த சச்சின்(53), டெய்ட் வேகத்தில் வீழ்ந்தார். விராத் கோஹ்லி(24) தாக்குப்பிடிக்கவில்லை. இதற்கு பின் ஒன்று, இரண்டு ரன்களாக சேர்த்த காம்பிர், அணிக்கு கைகொடுத்தார். அரைசதம் எட்டிய இவர் வீணாக 50 ரன்களுக்கு ரன் அவுட்டானார். அப்போது இந்திய அணி 33.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்து, தவித்தது.
யுவராஜ் ராசி:
போட்டியின் 38வது ஓவரை வீசிய பிரட் லீ அதிர்ச்சி கொடுத்தார். இவரது வேகத்தில் பொறுப்பற்ற "ஷாட் அடித்த தோனி(7) அவுட்டானார். பின் யுவராஜ், சுரேஷ் ரெய்னா சேர்ந்து துணிச்சலாக போராடினர். பிரட் லீ ஓவரில் யுவராஜ் 2 பவுண்டரி, ரெய்னா 1 பவுண்டரி அடிக்க, ஒட்டுமொத்தமாக 15 ரன்கள் எடுக்கப்பட்டன. தொடர்ந்து டெய்ட் ஓவரிலும் 13 ரன்கள் கிடைக்க, இந்தியாவுக்கு ஏற்பட்ட நெருக்கடி தணிந்தது. அபாரமாக ஆடிய யுவராஜ் இத்தொடரில் தனது 4வது அரைசதம் அடித்தார். இது ஒரு நாள் அரங்கில் இவரது 49வது அரைசதம். இவர் அரைசதம் அடித்தால், இந்தியாவின் வெற்றி உறுதி என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமானது. மறுபக்கம் பிரட் லீ பந்தில் ஒரு சிக்சர் அடித்த ரெய்னா, ரசிகர்களை உற்சாகத்தின் உச்சிக்கே கொண்டு சென்றார். பிரட் லீ பந்தில் யுவராஜ் ஒரு "சூப்பர் பவுண்டரி அடிக்க, இந்திய அணி 47.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 261 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்றது. யுவராஜ் 57(8 பவுண்டரி), ரெய்னா 34(2 பவுண்டரி, 1 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தனர்.
இவ்வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியது. கடந்த 1999ல் இருந்து உலக கோப்பை அரங்கில் மிரட்டி வந்த ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம், இம்முறை காலிறுதியுடன் முடிவுக்கு வந்தது.
மீண்டும் "ஆல்-ரவுண்டராக ஜொலித்த யுவராஜ் சிங் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இரண்டாவது இடம்
இந்தியாவுக்கு எதிரான காலிறுதியில் 118 பந்தில் 104 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், உலக கோப்பை அரங்கில் தனது 5வது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் உலக கோப்பை வரலாற்றில் அதிக சதம் கடந்த வீரர்கள் வரிசையில் 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (6 சதம்) உள்ளார்.
---
தோனி "100
நேற்று கேப்டனாக தனது 100வது ஒரு நாள் போட்டியில் பங்கேற்றார் இந்தியாவின் தோனி. விக்கெட் கீப்பர் ஒருவர் 100 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டது இதுவே முதன்முறை.
---
சச்சின் 18 ஆயிரம் ரன்கள்
ஒரு நாள் போட்டிகளில் 18 ஆயிரம் ரன்களை எட்டிய உலகின் முதல் வீரர் என்ற மகத்தான சாதனை படைத்தார் இந்தியாவின் "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். நேற்று அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், 45வது ரன்னை எடுத்த போது, ஒருநாள் போட்டிகளில் 18 ஆயிரம் ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இதுவரை 451 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 48 சதம், 94 அரைசதம் சேர்த்து, அதிக ரன்கள் எடுத்துள்ளவர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில்( 18,008 ரன்கள்) உள்ளார். இரண்டாவது இடத்தில் இலங்கையின் ஜெயசூர்யா(444 போட்டி, 13, 428 ரன்கள்) இருக்கிறார். மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங்(359 போட்டி, 13, 288) உள்ளார்.
ஸ்கோர்போர்டு
ஆஸ்திரேலியா
வாட்சன்(ப)அஷ்வின் 25(38)
ஹாடின்(கே)ரெய்னா(ப)யுவராஜ் 53(62)
பாண்டிங்(கே)ஜாகிர்(ப)அஷ்வின் 104(118)
கிளார்க்(கே)ஜாகிர்(ப)யுவராஜ் 8(19)
மைக்கேல் ஹசி(ப)ஜாகிர் 3(9)
ஒயிட்(கே)+(ப)ஜாகிர் 12(22)
டேவிட்-அவுட் இல்லை- 38(26)
ஜான்சன்-அவுட் இல்லை- 6(6)
உதிரிகள் 11
மொத்தம் (50 ஓவரில் 6 விக்.,) 260
விக்கெட் வீழ்ச்சி: 1-40(வாட்சன்), 2-110(ஹாடின்), 3-140(கிளார்க்), 4-150(மைக்கேல் ஹசி), 5-190(காமிரான் ஒயிட்), 6-245(பாண்டிங்).
பந்துவீச்சு: அஷ்வின் 10-0-52-2, ஜாகிர் கான் 10-0-53-2, ஹர்பஜன் சிங் 10-0-50-0, முனாப் படேல் 7-0-44-0, யுவராஜ் சிங் 10-0-44-2, சச்சின் 2-0-9-0, விராத் கோஹ்லி 1-0-6-0.
இந்தியா
சேவக்(கே)மைக்கேல் ஹசி(ப)வாட்சன் 15(22)
சச்சின்(கே)ஹாடின்(ப)டெய்ட் 53(68)
காம்பிர்-ரன் அவுட்(ஒயிட்/டேவிட் ஹசி) 50(64)
கோஹ்லி(கே)கிளார்க்(ப)டேவிட் ஹசி 24(33)
யுவராஜ் சிங்-அவுட் இல்லை- 57(65)
தோனி(கே)கிளார்க்(ப)பிரட் லீ 7(8)
ரெய்னா-அவுட் இல்லை- 34(28)
உதிரிகள் 21
மொத்தம் (47.4 ஓவரில் 5 விக்., ) 261
விக்கெட் வீழ்ச்சி: 1-44(சேவக்), 2-94(சச்சின்), 3-143(விராத் கோஹ்லி), 4-168(காம்பிர்), 5-187(தோனி).
பந்து வீச்சு: பிரட் லீ 8.4-1-45-1, டெய்ட் 7-0-52-1, ஜான்சன் 8-0-41-0, வாட்சன் 7-0-37-1, கிரெஜ்ஜா 9-0-45-0, கிளார்க் 3-0-19-0, டேவிட் ஹசி 5-0-19-1.

சென்னை: சென்னையில் நடந்த உலக கோப்பை லீக் போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய அணி, வெஸ்ட் இண்டீசை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. யுவராஜ் சிங்கின் அதிரடி சதம், அணியின் வெற்றிக்கு கைகொடுத்தது.
இந்திய துணைக் கண்டத்தில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று சென்னையில் நடந்த முக்கியத்துவமில்லாத லீக் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் ஏற்கனவே காலிறுதிக்கு முன்னேறி விட்டன.
அஷ்வின் வாய்ப்பு:
இந்திய அணியில் காயம் அடைந்த சேவக், நெஹ்ரா நீக்கப்பட்டு, சுரேஷ் ரெய்னா, அஷ்வின் வாய்ப்பு பெற்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்ல், கீமர் ரோச்சுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, கிர்க் எட்வர்டஸ், ரவி ராம்பால் இடம் பெற்றனர். "டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி சற்றும் தயங்காமல் "பேட்டிங் தேர்வு செய்தார்.
ராம்பால் அசத்தல்:
இந்திய அணிக்கு எடுத்த எடுப்பிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின்(2), ரவி ராம்பால் வேகத்தில் வீழ்ந்தார். பின் காம்பிர், விராத் கோஹ்லி இணைந்து ஓரளவுக்கு ரன் சேர்த்தனர். பென் சுழலில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்து அசத்தினார் காம்பிர். இரண்டாவது விக்கெட்டுக்கு 43 ரன்கள் சேர்த்த நிலையில், ராம்பால் பந்தில் காம்பிரும்(22)வீழ்ந்தார்.
கோஹ்லி அரைசதம்:
அடுத்து வந்த யுவராஜ் ஆட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டார். இவருக்கு கோஹ்லி அருமையாக "கம்பெனி கொடுக்க, ஸ்கோர் சீராக உயர்ந்தது. சமி பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்த யுவராஜ், மிகவிரைவாக அதிரடிக்கு மாறினார். பிஷூ ஓவரில் வரிசையாக இரண்டு பவுண்டரி விளாசிய இவர், அரைசதம் கடந்தார். தொடர்ந்து பென் ஓவரிலும் 2 பவுண்டரி அடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு யுவராஜுடன் சேர்ந்து 122 ரன்கள் சேர்த்த நிலையில், ராம்பால் பந்தில் விராத் கோஹ்லி(59) போல்டானார்.
முதல் சதம்:
பின் போலார்டு வீசிய பந்தை தட்டி விட்டு ஒரு ரன் எடுத்த, யுவராஜ், உலக கோப்பை அரங்கில் தனது முதல் சதம் அடித்தார். இது ஒரு நாள் போட்டிகளில் இவரது 13வது சதம். மறுபக்கம் பிஷூ பந்தை இறங்கி வந்து அடிக்க முற்பட்ட, தோனி(22) வீணாக அவுட்டானார்.
இதற்கு பின் இந்திய விக்கெட்டுகள் வரிசையாக சரிந்தன. சமி வீசிய போட்டியின் 44வது ஓவரின் முதல் பந்தில் யுவராஜ் ஒரு சிக்சர் அடித்தார். 5வது பந்தில் ராம்பாலின் சூப்பர் "கேட்ச்சில் ரெய்னா(4) அவுட்டானார். இதன் மூலம் கிடைத்த அரிய வாய்ப்பை இவர் வீணாக்கினார். சிறிது நேரத்தில் போலார்டு பந்தில் அவரிடேம "கேட்ச் கொடுத்து யுவராஜ் வெளியேறினார். இவர் 113 ரன்கள்(10 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். ராம்பாலிடம் "சரண்டர் ஆன யூசுப் பதான்(11) மீண்டும் சொதப்பினார். ஹர்பஜன்(3) தாக்குப்பிடிக்கவில்லை. ஜாகிர் கானை(5) போல்டாக்கிய ராம்பால், 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். முனாப்(1) வழக்கம் போல் வந்த வேகத்தில் வெளியேற, இந்திய அணி 49.1 ஓவரில் 268 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ராம்பால் 5 விக்கெட் வீழ்த்தினார்.
முதலில் "ஸ்பின்:
சவாலான இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, இந்திய கேப்டன் தோனி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். முதல் ஓவரை வீச தமிழக "ஸ்பின்னர் அஷ்வினை அழைத்தார். இதில், ஒரு ரன் மட்டும் கொடுத்து அசத்தினார். எட்வர்ட்ஸ் 17 ரன்களுக்கு "ரிவியு முறையில் அஷ்வின் சுழலில் சிக்கினார். டேரன் பிராவோ(22) தாக்குப்பிடிக்கவில்லை. அபாரமாக ஆடிய டேவன் ஸ்மித்(81), ஜாகிர் பந்தில் போல்டாக, சிக்கல் ஆரம்பமானது.
விக்கெட் மடமட:
இதற்கு பின் வந்தவர்கள் இந்திய பந்துவீச்சில் திணறினர். "அதிரடி போலார்டு(1), ஹர்பஜன் வலையில் விழுந்தார். யுவராஜ் பந்தில் டேவன் தாமஸ்(2) நடையை கட்டினார். சமி(2) ரன் அவுட்டானார். "டெயிலெண்டர்கள் ஜாகிர் வேகத்தில் பெவிலியன் திரும்ப, வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ஓவரில் 188 ரன்களுக்கு அவுட்டாகி, தோல்வி அடைந்தது.
"ஆல்-ரவுண்டராக அசத்திய யுவராஜ் மீண்டும் ஒரு முறை ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
50 ஓவர் தெரியுமா?
உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில், தோனி தலைமையிலான இந்திய அணி நான்கு போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்தது. இதில் வங்கதேச அணிக்கு எதிராக 50 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்த இந்திய அணி, இங்கிலாந்து (49.5 ஓவர்கள்), தென் ஆப்ரிக்கா (48.4 ஓவர்கள்), வெஸ்ட் இண்டீஸ் (49.1 ஓவர்கள்) அணிகளுக்கு எதிராக விரைவில் "ஆல்-அவுட் ஆனது. ஒருவேளை இந்திய அணியினருக்கு 50 ஓவர் போட்டி என்பது மறந்து போச்சா?
---
கடைசி கட்ட சொதப்பல்
<இம்முறை உலக கோப்பை தொடரில், இந்திய பேட்ஸ்மேன்கள் கடைசி கட்டத்தில் சொதப்பலாக விளையாடி வருகின்றனர். குறிப்பாக "பேட்டிங் பவர்பிளே ஓவரில், விக்கெட்டுகளை "மடமட என பறிகொடுக்கின்றனர். வங்கதேச அணிக்கு எதிராக 50 ஓவர்கள் முழுமையாக பேட் செய்த இந்திய பேட்ஸ்மேன்கள், 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்தனர். ஆனால் இங்கிலாந்து (33 ரன்களுக்கு 5 விக்கெட்), தென் ஆப்ரிக்கா (29 ரன்களுக்கு 9 விக்கெட்), வெஸ்ட் இண்டீஸ் (50 ரன்களுக்கு 7 விக்கெட்) அணிகளுக்கு எதிராக கடைசி நேரத்தில் எதிரணி பவுலர்களுக்கு விக்கெட்டுகளை வாரி வழங்கினர்.
---
சங்ககரா முதலிடம்
பத்தாவது உலக கோப்பை தொடரில், லீக் சுற்று முடிந்த நிலையில் இலங்கை கேப்டன் சங்ககரா, அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். இவர் 6 போட்டியில் ஒரு சதம், 2 அரைசதம் உட்பட 363 ரன்கள் எடுத்துள்ளார்.
இவ்வரிசையில் "டாப்-5 பேட்ஸ்மேன்கள்:
வீரர் போட்டி ரன் சதம்/அரைசதம்
சங்ககரா (இலங்கை) 6 363 1/2
டிராட் (இங்கிலாந்து) 6 336 0/4
ஸ்டிராஸ் (இங்கிலாந்து) 6 329 1/1
சேவக் (இந்தியா) 5 327 1/1
சச்சின் (இந்தியா) 6 326 2/0
---
"சுழல் மன்னன் அப்ரிதி
லீக் சுற்று முடிந்த நிலையில் பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி, அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் வரிசையில் முன்னிலை வகிக்கிறார். சுழலில் அசத்திய இவர், 6 போட்டியில் 17 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
இவ்வரிசையில் "டாப்-5 பவுலர்கள்:
வீரர் போட்டி விக்கெட்
அப்ரிதி (பாக்.,) 6 17
ஜாகிர் (இந்தியா) 6 15
ராபின் பீட்டர்சன் (தெ.ஆ.,) 6 14
சவுத்தி (நியூசி.,) 6 14
ரோச் (வெ.இ.,) 5 13
---
இந்தியா "370
லீக் சுற்று முடிந்த நிலையில், ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்த அணிகள் வரிசையில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 370 ரன்கள் குவித்தது.
இவ்வரிசையில் "டாப்-5 அணிகள்:
அணி ஸ்கோர் எதிரணி
இந்தியா 370/4 வங்கதேசம்
நியூசி., 358/6 கனடா
தெ.ஆ., 351/5 நெதர்லாந்து
இந்தியா 338 இங்கிலாந்து
இங்கிலாந்து 338/8 இந்தியா

சென்னையில் விண்ணை தொடும் வெற்றி! * யுவராஜ் சதத்தில் இந்தியா அபாரம் * பரிதாபமாக வீழ்ந்தது வெஸ்ட் இண்டீஸ்

சென்னை: சென்னையில் நடந்த உலக கோப்பை லீக் போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய அணி, வெஸ்ட் இண்டீசை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. யுவராஜ் சிங்கின் அதிரடி சதம், அணியின் வெற்றிக்கு கைகொடுத்தது.
இந்திய துணைக் கண்டத்தில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று சென்னையில் நடந்த முக்கியத்துவமில்லாத லீக் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் ஏற்கனவே காலிறுதிக்கு முன்னேறி விட்டன.
அஷ்வின் வாய்ப்பு:
இந்திய அணியில் காயம் அடைந்த சேவக், நெஹ்ரா நீக்கப்பட்டு, சுரேஷ் ரெய்னா, அஷ்வின் வாய்ப்பு பெற்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்ல், கீமர் ரோச்சுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, கிர்க் எட்வர்டஸ், ரவி ராம்பால் இடம் பெற்றனர். "டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி சற்றும் தயங்காமல் "பேட்டிங் தேர்வு செய்தார்.
ராம்பால் அசத்தல்:
இந்திய அணிக்கு எடுத்த எடுப்பிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின்(2), ரவி ராம்பால் வேகத்தில் வீழ்ந்தார். பின் காம்பிர், விராத் கோஹ்லி இணைந்து ஓரளவுக்கு ரன் சேர்த்தனர். பென் சுழலில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்து அசத்தினார் காம்பிர். இரண்டாவது விக்கெட்டுக்கு 43 ரன்கள் சேர்த்த நிலையில், ராம்பால் பந்தில் காம்பிரும்(22)வீழ்ந்தார்.
கோஹ்லி அரைசதம்:
அடுத்து வந்த யுவராஜ் ஆட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டார். இவருக்கு கோஹ்லி அருமையாக "கம்பெனி கொடுக்க, ஸ்கோர் சீராக உயர்ந்தது. சமி பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்த யுவராஜ், மிகவிரைவாக அதிரடிக்கு மாறினார். பிஷூ ஓவரில் வரிசையாக இரண்டு பவுண்டரி விளாசிய இவர், அரைசதம் கடந்தார். தொடர்ந்து பென் ஓவரிலும் 2 பவுண்டரி அடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு யுவராஜுடன் சேர்ந்து 122 ரன்கள் சேர்த்த நிலையில், ராம்பால் பந்தில் விராத் கோஹ்லி(59) போல்டானார்.
முதல் சதம்:
பின் போலார்டு வீசிய பந்தை தட்டி விட்டு ஒரு ரன் எடுத்த, யுவராஜ், உலக கோப்பை அரங்கில் தனது முதல் சதம் அடித்தார். இது ஒரு நாள் போட்டிகளில் இவரது 13வது சதம். மறுபக்கம் பிஷூ பந்தை இறங்கி வந்து அடிக்க முற்பட்ட, தோனி(22) வீணாக அவுட்டானார்.
இதற்கு பின் இந்திய விக்கெட்டுகள் வரிசையாக சரிந்தன. சமி வீசிய போட்டியின் 44வது ஓவரின் முதல் பந்தில் யுவராஜ் ஒரு சிக்சர் அடித்தார். 5வது பந்தில் ராம்பாலின் சூப்பர் "கேட்ச்சில் ரெய்னா(4) அவுட்டானார். இதன் மூலம் கிடைத்த அரிய வாய்ப்பை இவர் வீணாக்கினார். சிறிது நேரத்தில் போலார்டு பந்தில் அவரிடேம "கேட்ச் கொடுத்து யுவராஜ் வெளியேறினார். இவர் 113 ரன்கள்(10 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். ராம்பாலிடம் "சரண்டர் ஆன யூசுப் பதான்(11) மீண்டும் சொதப்பினார். ஹர்பஜன்(3) தாக்குப்பிடிக்கவில்லை. ஜாகிர் கானை(5) போல்டாக்கிய ராம்பால், 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். முனாப்(1) வழக்கம் போல் வந்த வேகத்தில் வெளியேற, இந்திய அணி 49.1 ஓவரில் 268 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ராம்பால் 5 விக்கெட் வீழ்த்தினார்.
முதலில் "ஸ்பின்:
சவாலான இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, இந்திய கேப்டன் தோனி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். முதல் ஓவரை வீச தமிழக "ஸ்பின்னர் அஷ்வினை அழைத்தார். இதில், ஒரு ரன் மட்டும் கொடுத்து அசத்தினார். எட்வர்ட்ஸ் 17 ரன்களுக்கு "ரிவியு முறையில் அஷ்வின் சுழலில் சிக்கினார். டேரன் பிராவோ(22) தாக்குப்பிடிக்கவில்லை. அபாரமாக ஆடிய டேவன் ஸ்மித்(81), ஜாகிர் பந்தில் போல்டாக, சிக்கல் ஆரம்பமானது.
விக்கெட் மடமட:
இதற்கு பின் வந்தவர்கள் இந்திய பந்துவீச்சில் திணறினர். "அதிரடி போலார்டு(1), ஹர்பஜன் வலையில் விழுந்தார். யுவராஜ் பந்தில் டேவன் தாமஸ்(2) நடையை கட்டினார். சமி(2) ரன் அவுட்டானார். "டெயிலெண்டர்கள் ஜாகிர் வேகத்தில் பெவிலியன் திரும்ப, வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ஓவரில் 188 ரன்களுக்கு அவுட்டாகி, தோல்வி அடைந்தது.
"ஆல்-ரவுண்டராக அசத்திய யுவராஜ் மீண்டும் ஒரு முறை ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
50 ஓவர் தெரியுமா?
உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில், தோனி தலைமையிலான இந்திய அணி நான்கு போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்தது. இதில் வங்கதேச அணிக்கு எதிராக 50 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்த இந்திய அணி, இங்கிலாந்து (49.5 ஓவர்கள்), தென் ஆப்ரிக்கா (48.4 ஓவர்கள்), வெஸ்ட் இண்டீஸ் (49.1 ஓவர்கள்) அணிகளுக்கு எதிராக விரைவில் "ஆல்-அவுட் ஆனது. ஒருவேளை இந்திய அணியினருக்கு 50 ஓவர் போட்டி என்பது மறந்து போச்சா?
---
கடைசி கட்ட சொதப்பல்
<இம்முறை உலக கோப்பை தொடரில், இந்திய பேட்ஸ்மேன்கள் கடைசி கட்டத்தில் சொதப்பலாக விளையாடி வருகின்றனர். குறிப்பாக "பேட்டிங் பவர்பிளே ஓவரில், விக்கெட்டுகளை "மடமட என பறிகொடுக்கின்றனர். வங்கதேச அணிக்கு எதிராக 50 ஓவர்கள் முழுமையாக பேட் செய்த இந்திய பேட்ஸ்மேன்கள், 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்தனர். ஆனால் இங்கிலாந்து (33 ரன்களுக்கு 5 விக்கெட்), தென் ஆப்ரிக்கா (29 ரன்களுக்கு 9 விக்கெட்), வெஸ்ட் இண்டீஸ் (50 ரன்களுக்கு 7 விக்கெட்) அணிகளுக்கு எதிராக கடைசி நேரத்தில் எதிரணி பவுலர்களுக்கு விக்கெட்டுகளை வாரி வழங்கினர்.
---
சங்ககரா முதலிடம்
பத்தாவது உலக கோப்பை தொடரில், லீக் சுற்று முடிந்த நிலையில் இலங்கை கேப்டன் சங்ககரா, அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். இவர் 6 போட்டியில் ஒரு சதம், 2 அரைசதம் உட்பட 363 ரன்கள் எடுத்துள்ளார்.
இவ்வரிசையில் "டாப்-5 பேட்ஸ்மேன்கள்:
வீரர் போட்டி ரன் சதம்/அரைசதம்
சங்ககரா (இலங்கை) 6 363 1/2
டிராட் (இங்கிலாந்து) 6 336 0/4
ஸ்டிராஸ் (இங்கிலாந்து) 6 329 1/1
சேவக் (இந்தியா) 5 327 1/1
சச்சின் (இந்தியா) 6 326 2/0
---
"சுழல் மன்னன் அப்ரிதி
லீக் சுற்று முடிந்த நிலையில் பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி, அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் வரிசையில் முன்னிலை வகிக்கிறார். சுழலில் அசத்திய இவர், 6 போட்டியில் 17 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
இவ்வரிசையில் "டாப்-5 பவுலர்கள்:
வீரர் போட்டி விக்கெட்
அப்ரிதி (பாக்.,) 6 17
ஜாகிர் (இந்தியா) 6 15
ராபின் பீட்டர்சன் (தெ.ஆ.,) 6 14
சவுத்தி (நியூசி.,) 6 14
ரோச் (வெ.இ.,) 5 13
---
இந்தியா "370
லீக் சுற்று முடிந்த நிலையில், ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்த அணிகள் வரிசையில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 370 ரன்கள் குவித்தது.
இவ்வரிசையில் "டாப்-5 அணிகள்:
அணி ஸ்கோர் எதிரணி
இந்தியா 370/4 வங்கதேசம்
நியூசி., 358/6 கனடா
தெ.ஆ., 351/5 நெதர்லாந்து
இந்தியா 338 இங்கிலாந்து
இங்கிலாந்து 338/8 இந்தியா

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி “பி” பிரிவில் இடம் பெற்றுள்ளது. தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், வங்காளதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளும் அந்த பிரிவில் இடம் பெற்றுள்ளன.

இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 87 ரன்னில் வங்காளதேசத்தை தோற்கடித்தது. இங்கிலாந்துடன் மோதிய 2-வது ஆட்டம் “டை”யில் முடிந்தது. அயர்லாந்துக்கு எதிரான 3-வது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், நெதர்லாந்துக்கு எதிரான 4-வது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5-வது “லீக்” ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இந்திய அணி 5 ஆட்டத்தில் 3 வெற்றி, ஒரு டை, ஒரு தோல்வியுடன் 7 புள்ளி பெற்றுள்ளது. இந்திய அணி கடைசி “லீக்” ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணியை வருகிற 20-ந்தேதி எதிர் கொள்கிறது.

இதற்காக இந்திய வீரர்கள் ஏற்கனவே சென்னை வந்து விட்டனர். கடந்த 2 தினங்களாக வீரர்கள் ஐ.ஐ.டி. மைதானத்தில் பயிற்சி பெற்றனர். இந்திய வீரர்கள் இன்று சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி பெற்றனர். நேற்றைய பயிற்சியின் போது கேப்டன் டோனி, அதிரடி பேட்ஸ்மேன் ஷேவாக் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. ஷேவாக்குக்கு முழங்காலில் காயம் இருப்பதாகவும், இதன் காரணமாகத்தான் அவர் பயிற்சி பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் இன்று பிற்பகலில் பயிற்சி பெறுவார்கள்.

சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய வீரர்கள் பயிற்சி; ஷேவாக்குக்கு காயம்?

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி “பி” பிரிவில் இடம் பெற்றுள்ளது. தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், வங்காளதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளும் அந்த பிரிவில் இடம் பெற்றுள்ளன.

இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 87 ரன்னில் வங்காளதேசத்தை தோற்கடித்தது. இங்கிலாந்துடன் மோதிய 2-வது ஆட்டம் “டை”யில் முடிந்தது. அயர்லாந்துக்கு எதிரான 3-வது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், நெதர்லாந்துக்கு எதிரான 4-வது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5-வது “லீக்” ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இந்திய அணி 5 ஆட்டத்தில் 3 வெற்றி, ஒரு டை, ஒரு தோல்வியுடன் 7 புள்ளி பெற்றுள்ளது. இந்திய அணி கடைசி “லீக்” ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணியை வருகிற 20-ந்தேதி எதிர் கொள்கிறது.

இதற்காக இந்திய வீரர்கள் ஏற்கனவே சென்னை வந்து விட்டனர். கடந்த 2 தினங்களாக வீரர்கள் ஐ.ஐ.டி. மைதானத்தில் பயிற்சி பெற்றனர். இந்திய வீரர்கள் இன்று சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி பெற்றனர். நேற்றைய பயிற்சியின் போது கேப்டன் டோனி, அதிரடி பேட்ஸ்மேன் ஷேவாக் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. ஷேவாக்குக்கு முழங்காலில் காயம் இருப்பதாகவும், இதன் காரணமாகத்தான் அவர் பயிற்சி பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் இன்று பிற்பகலில் பயிற்சி பெறுவார்கள்.

புதுடில்லி: உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி, நெதர்லாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியது. "கத்துக்குட்டியாக கருதப்படும் நெதர்லாந்துக்கு எதிராக நம்மவர்கள் திணறியது, ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று டில்லி, பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த "பி பிரிவு லீக் போட்டியில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதின.
நெஹ்ரா வாய்ப்பு:
நெதர்லாந்து அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் முனாப் படேலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ஆஷிஸ் நெஹ்ரா வாய்ப்பு பெற்றார். "டாஸ் வென்ற நெதர்லாந்து கேப்டன் பீட்டர் போரன் "பேட்டிங் தேர்வு செய்தார்.
டசாட்டே ஏமாற்றம்:
நெதர்லாந்து அணிக்கு சுவார்சின்ஸ்கி, வெஸ்லி பாரசி இணைந்து நிதான துவக்கம் தந்தனர். இவர்கள் ஒன்று, இரண்டு ரன்களாக சேர்க்க, ஸ்கோர் மெதுவாக நகர்ந்தது. முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்த நிலையில், பியுஸ் சாவ்லா சுழலில் சுவார்சின்ஸ்கி(28) போல்டானார். யுவராஜ் வலையில் பாரசி(26) சிக்கினார். இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் சதம் அடித்த டசாட்டே இம்முறை சோபிக்கவில்லை. இவரை 11 ரன்களுக்கு வெளியேற்றி திருப்புமுனை ஏற்படுத்தினார் யுவராஜ்.
போரன் அதிரடி:
நெஹ்ரா வேகத்தில் கூப்பர்(29) காலியானார். ஜுடிரன்ட்(0), குரூத்(5), கெர்வசி(11) விரைவில் வெளியேறினர். கடைசி கட்டத்தில் கேப்டன் போரன், புக்காரி அதிரடியாக ஆடினர். யுவராஜ் ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசினார் போரன். பின் பியுஸ் சாவ்லா ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர் அடித்து மிரட்டினார். மறுபக்கம் வாணவேடிக்கை காட்டிய புக்காரி, நெஹ்ரா ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். தொடர்ந்து ஹர்பஜன் பந்தையும் சிக்சருக்கு பறக்க விட்டு, ஸ்கோரை உயர்த்தினார். பின் ஜாகிர் கான் தனது ஒரே ஓவரில் இரட்டை "அடி கொடுத்தார். முதலில் போரனை(38) வெளியேற்றினார். அடுத்து புக்காரி(21) விக்கெட்டையும் கைப்பற்றினார். இறுதியில் நெதர்லாந்து அணி 46.4 ஓவரில் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய சார்பில் ஜாகிர் 3, சாவ்லா 2, யுவராஜ் 2 விக்கெட் வீழ்த்தினர்.
அதிரடி துவக்கம்:
போகிற போக்கில் எட்டக் கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு சச்சின், சேவக் அதிரடி துவக்கம் தந்தனர். புக்காரி வீசிய முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பினார் சேவக். டசாட்டே வீசிய அடுத்த ஓவரில் சச்சின் இரண்டு பவுண்டரி அடித்தார். போட்டியில் 5வது ஓவரை புக்காரி வீச... சேவக் வரிசையாக 3 பவுண்டரிகள் அடிக்க, இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். பின் சீலார் ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த சேவக்(39) அடுத்த பந்தில் அவுட்டானார். அடுத்த வந்த யூசுப் பதான் போரன் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்தார்.
விக்கெட் சரிவு:
சீலார் வீசிய போட்டியின் 10வது ஓவரில் அதிர்ச்சி காத்திருந்தது. முதல் பந்தில் சச்சின்(27) வெளியேறினார். 5வது பந்தில் யூசுப் பதான்(11) அவுட்டானார். விராத் கோஹ்லி(12) ஏமாற்றினார். காம்பிரும்(28) அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. இப்படி "டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏனோ தானோ என விளையாட, ரசிகர்கள் வெறுப்படைந்தனர்.
யுவராஜ் அபாரம்:
பின் யுவராஜ், தோனி இணைந்து பொறுப்பாக ஆடினர். இருவரும் பதட்டப்படாமல் பேட் செய்தனர். கிருகர் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய யுவராஜ் அரைசதம் அடித்ததோடு, அணியின் வெற்றியையும் உறுதி செய்தார். இந்திய அணி 36.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் "பி பிரிவில் 7 புள்ளிகளுடன் முதலிடம் பெற்ற இந்தியா, காலிறுதிக்கு ஜோராக முன்னேறியது. யுவராஜ் (51), தோனி (19) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆட்ட நாயகன் விருதை யுவராஜ் வென்றார்.
யுவராஜ் "100 விக்.,
நேற்று நெதர்லாந்து வீரர் பாரசியை அவுட்டாக்கி யுவராஜ் சிங், ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 100வது விக்கெட்டை பதிவு செய்தார். சுழலில் அசத்திய இவர் 2 விக்கெட் வீழ்த்தினார். இதுவரை 269 போட்டியில் பங்கேற்று 101 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் ஒருநாள் அரங்கில் 100 அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்திய 14வது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார்.
---
டேவிஸ் "100
இந்தியா-நெதர்லாந்து போட்டியில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் டேவிஸ் அம்பயராக செயல்பட்டார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் அரங்கில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளுக்கு அம்பயராக பணியாற்றிய 14வது அம்பயர் என்ற பெருமை பெற்றார்.
---
சச்சின் 2,000 ரன் சாதனை
உலக கோப்பை அரங்கில் 2000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார் இந்தியாவின் "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். நேற்று 18வது ரன்னை எடுத்த போது, இந்த மைல்கல்லை எட்டினார். இதுவரை 40 உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்று 5 சதம், 13 அரைசதம் உட்பட 2009 ரன்கள் எடுத்துள்ளார்.
இவ்வரிசையில் "டாப்-5 பேட்ஸ்மேன்கள்:
வீரர் போட்டி ரன்கள் சதம்/அரைசதம்
சச்சின் (இந்தியா) 40 2009 5/13
பாண்டிங் (ஆஸி.,) 42 1577 4/6
லாரா (வெ.இ.,) 34 1225 2/7
ஜெயசூர்யா (இலங்கை) 38 1165 3/6
கில்கிறிஸ்ட் (ஆஸி.,) 31 1085 1/8
* இம்முறை இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் சதம் அடித்த இவர், உலக கோப்பை அரங்கில் அதிக சதம் (5) கடந்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தை பிடித்தார். நேற்று நெதர்லாந்துக்கு எதிராக களமிறங்கியதன் மூலம், உலக கோப்பை அரங்கில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில் 2வது இடத்துக்கு முன்னேறினார். இதுவரை இவர், 40 போட்டியில் பங்கேற்றுள்ளார். இதன்மூலம் ஆஸ்திரேலியாவின் மெக்ராத் (39 போட்டி), 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். முதலிடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் (42 போட்டி) உள்ளார்.
ஒவ்வொரு உலக கோப்பை தொடரில், சச்சின் எடுத்த ரன்கள்:
ஆண்டு போட்டி ரன்கள்
1992 8 283
1996 7 523
1999 7 253
2003 11 673
2007 3 64
2011 4 213
1992-2011 40 2009
---
ஸ்கோர்போர்டு
நெதர்லாந்து
சுவார்சின்ஸ்கி(ப)சாவ்லா 28(42)
பாரசி-எல்.பி.டபிள்யு.,(ப)யுவராஜ் 26(58)
கூப்பர்(கே)தோனி(ப)நெஹ்ரா 29(47)
டசாட்டே(கே)ஜாகிர்(ப)யுவராஜ் 11(28)
கெர்வெசி(கே)ஹர்பஜன்(ப)சாவ்லா 11(23)
ஜூடிரன்ட்-எல்.பி.டபிள்யு.,(ப)ஜாகிர் 0(6)
குரூத்--ரன்அவுட்-(சாவ்லா/தோனி) 5(11)
போரன்(கே)நெஹ்ரா(ப)ஜாகிர் 38(36)
குருகர்-ரன்அவுட்-(கோஹ்லி/தோனி) 8(12)
புக்காரி(ப)ஜாகிர் 21(18)
சீலார்-அவுட் இல்லை- 0(0)
உதிரிகள் 12
மொத்தம் (46.4 ஓவரில், "ஆல்-அவுட்) 189
விக்கெட் வீழ்ச்சி: 1-56(சுவார்சின்ஸ்கி), 2-64(பாரசி), 3-99(டசாட்டே), 4-100(கூப்பர்), 5-101(ஜூடிரன்ட்), 6-108(குரூத்), 7-127(கெர்வெசி), 8-151(குருகர்), 9-189(போரன்), 10-189(புக்காரி).
பந்துவீச்சு: ஜாகிர்கான் 6.4-0-20-3, நெஹ்ரா 5-1-22-1, யூசுப் 6-1-17-0, ஹர்பஜன் 10-0-31-0, சாவ்லா 10-0-47-2, யுவராஜ் 9-1-43-2.
இந்தியா
சேவக்(கே)கெர்வெசி(ப)சீலார் 39(26)
சச்சின்(கே)குருகர்(ப)சீலார் 27(22)
யூசுப்(கே)+(ப)சீலார் 11(10)
காம்பிர்(ப)புக்காரி 28(28)
கோஹ்லி(ப)போரன் 12(20)
யுவராஜ்-அவுட் இல்லை- 51(73)
தோனி--அவுட் இல்லை- 19(40)
உதிரிகள் 4
மொத்தம் (36.3 ஓவரில், 5விக்.,) 191
விக்கெட் வீழ்ச்சி: 1-69(சேவக்), 2-80(சச்சின்), 3-82(யூசுப்பதான்), 4-99(கோஹ்லி), 5-139(காம்பிர்).
பந்துவீச்சு: புக்காரி 6-1-33-1, டசாட்டே 7-0-38-0, சீலார் 10-1-53-3, போரன் 8-0-33-1, கூப்பர் 2-0-11-0, குர்கர் 3.3-0-23-0.

இந்தியா திணறல் வெற்றி! * காலிறுதிக்குள் நுழைந்தது * நெதர்லாந்து போராட்டம் வீண்

புதுடில்லி: உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி, நெதர்லாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியது. "கத்துக்குட்டியாக கருதப்படும் நெதர்லாந்துக்கு எதிராக நம்மவர்கள் திணறியது, ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று டில்லி, பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த "பி பிரிவு லீக் போட்டியில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதின.
நெஹ்ரா வாய்ப்பு:
நெதர்லாந்து அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் முனாப் படேலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ஆஷிஸ் நெஹ்ரா வாய்ப்பு பெற்றார். "டாஸ் வென்ற நெதர்லாந்து கேப்டன் பீட்டர் போரன் "பேட்டிங் தேர்வு செய்தார்.
டசாட்டே ஏமாற்றம்:
நெதர்லாந்து அணிக்கு சுவார்சின்ஸ்கி, வெஸ்லி பாரசி இணைந்து நிதான துவக்கம் தந்தனர். இவர்கள் ஒன்று, இரண்டு ரன்களாக சேர்க்க, ஸ்கோர் மெதுவாக நகர்ந்தது. முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்த நிலையில், பியுஸ் சாவ்லா சுழலில் சுவார்சின்ஸ்கி(28) போல்டானார். யுவராஜ் வலையில் பாரசி(26) சிக்கினார். இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் சதம் அடித்த டசாட்டே இம்முறை சோபிக்கவில்லை. இவரை 11 ரன்களுக்கு வெளியேற்றி திருப்புமுனை ஏற்படுத்தினார் யுவராஜ்.
போரன் அதிரடி:
நெஹ்ரா வேகத்தில் கூப்பர்(29) காலியானார். ஜுடிரன்ட்(0), குரூத்(5), கெர்வசி(11) விரைவில் வெளியேறினர். கடைசி கட்டத்தில் கேப்டன் போரன், புக்காரி அதிரடியாக ஆடினர். யுவராஜ் ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசினார் போரன். பின் பியுஸ் சாவ்லா ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர் அடித்து மிரட்டினார். மறுபக்கம் வாணவேடிக்கை காட்டிய புக்காரி, நெஹ்ரா ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். தொடர்ந்து ஹர்பஜன் பந்தையும் சிக்சருக்கு பறக்க விட்டு, ஸ்கோரை உயர்த்தினார். பின் ஜாகிர் கான் தனது ஒரே ஓவரில் இரட்டை "அடி கொடுத்தார். முதலில் போரனை(38) வெளியேற்றினார். அடுத்து புக்காரி(21) விக்கெட்டையும் கைப்பற்றினார். இறுதியில் நெதர்லாந்து அணி 46.4 ஓவரில் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய சார்பில் ஜாகிர் 3, சாவ்லா 2, யுவராஜ் 2 விக்கெட் வீழ்த்தினர்.
அதிரடி துவக்கம்:
போகிற போக்கில் எட்டக் கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு சச்சின், சேவக் அதிரடி துவக்கம் தந்தனர். புக்காரி வீசிய முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பினார் சேவக். டசாட்டே வீசிய அடுத்த ஓவரில் சச்சின் இரண்டு பவுண்டரி அடித்தார். போட்டியில் 5வது ஓவரை புக்காரி வீச... சேவக் வரிசையாக 3 பவுண்டரிகள் அடிக்க, இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். பின் சீலார் ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த சேவக்(39) அடுத்த பந்தில் அவுட்டானார். அடுத்த வந்த யூசுப் பதான் போரன் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்தார்.
விக்கெட் சரிவு:
சீலார் வீசிய போட்டியின் 10வது ஓவரில் அதிர்ச்சி காத்திருந்தது. முதல் பந்தில் சச்சின்(27) வெளியேறினார். 5வது பந்தில் யூசுப் பதான்(11) அவுட்டானார். விராத் கோஹ்லி(12) ஏமாற்றினார். காம்பிரும்(28) அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. இப்படி "டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏனோ தானோ என விளையாட, ரசிகர்கள் வெறுப்படைந்தனர்.
யுவராஜ் அபாரம்:
பின் யுவராஜ், தோனி இணைந்து பொறுப்பாக ஆடினர். இருவரும் பதட்டப்படாமல் பேட் செய்தனர். கிருகர் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய யுவராஜ் அரைசதம் அடித்ததோடு, அணியின் வெற்றியையும் உறுதி செய்தார். இந்திய அணி 36.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் "பி பிரிவில் 7 புள்ளிகளுடன் முதலிடம் பெற்ற இந்தியா, காலிறுதிக்கு ஜோராக முன்னேறியது. யுவராஜ் (51), தோனி (19) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆட்ட நாயகன் விருதை யுவராஜ் வென்றார்.
யுவராஜ் "100 விக்.,
நேற்று நெதர்லாந்து வீரர் பாரசியை அவுட்டாக்கி யுவராஜ் சிங், ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 100வது விக்கெட்டை பதிவு செய்தார். சுழலில் அசத்திய இவர் 2 விக்கெட் வீழ்த்தினார். இதுவரை 269 போட்டியில் பங்கேற்று 101 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் ஒருநாள் அரங்கில் 100 அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்திய 14வது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார்.
---
டேவிஸ் "100
இந்தியா-நெதர்லாந்து போட்டியில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் டேவிஸ் அம்பயராக செயல்பட்டார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் அரங்கில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளுக்கு அம்பயராக பணியாற்றிய 14வது அம்பயர் என்ற பெருமை பெற்றார்.
---
சச்சின் 2,000 ரன் சாதனை
உலக கோப்பை அரங்கில் 2000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார் இந்தியாவின் "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். நேற்று 18வது ரன்னை எடுத்த போது, இந்த மைல்கல்லை எட்டினார். இதுவரை 40 உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்று 5 சதம், 13 அரைசதம் உட்பட 2009 ரன்கள் எடுத்துள்ளார்.
இவ்வரிசையில் "டாப்-5 பேட்ஸ்மேன்கள்:
வீரர் போட்டி ரன்கள் சதம்/அரைசதம்
சச்சின் (இந்தியா) 40 2009 5/13
பாண்டிங் (ஆஸி.,) 42 1577 4/6
லாரா (வெ.இ.,) 34 1225 2/7
ஜெயசூர்யா (இலங்கை) 38 1165 3/6
கில்கிறிஸ்ட் (ஆஸி.,) 31 1085 1/8
* இம்முறை இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் சதம் அடித்த இவர், உலக கோப்பை அரங்கில் அதிக சதம் (5) கடந்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தை பிடித்தார். நேற்று நெதர்லாந்துக்கு எதிராக களமிறங்கியதன் மூலம், உலக கோப்பை அரங்கில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில் 2வது இடத்துக்கு முன்னேறினார். இதுவரை இவர், 40 போட்டியில் பங்கேற்றுள்ளார். இதன்மூலம் ஆஸ்திரேலியாவின் மெக்ராத் (39 போட்டி), 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். முதலிடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் (42 போட்டி) உள்ளார்.
ஒவ்வொரு உலக கோப்பை தொடரில், சச்சின் எடுத்த ரன்கள்:
ஆண்டு போட்டி ரன்கள்
1992 8 283
1996 7 523
1999 7 253
2003 11 673
2007 3 64
2011 4 213
1992-2011 40 2009
---
ஸ்கோர்போர்டு
நெதர்லாந்து
சுவார்சின்ஸ்கி(ப)சாவ்லா 28(42)
பாரசி-எல்.பி.டபிள்யு.,(ப)யுவராஜ் 26(58)
கூப்பர்(கே)தோனி(ப)நெஹ்ரா 29(47)
டசாட்டே(கே)ஜாகிர்(ப)யுவராஜ் 11(28)
கெர்வெசி(கே)ஹர்பஜன்(ப)சாவ்லா 11(23)
ஜூடிரன்ட்-எல்.பி.டபிள்யு.,(ப)ஜாகிர் 0(6)
குரூத்--ரன்அவுட்-(சாவ்லா/தோனி) 5(11)
போரன்(கே)நெஹ்ரா(ப)ஜாகிர் 38(36)
குருகர்-ரன்அவுட்-(கோஹ்லி/தோனி) 8(12)
புக்காரி(ப)ஜாகிர் 21(18)
சீலார்-அவுட் இல்லை- 0(0)
உதிரிகள் 12
மொத்தம் (46.4 ஓவரில், "ஆல்-அவுட்) 189
விக்கெட் வீழ்ச்சி: 1-56(சுவார்சின்ஸ்கி), 2-64(பாரசி), 3-99(டசாட்டே), 4-100(கூப்பர்), 5-101(ஜூடிரன்ட்), 6-108(குரூத்), 7-127(கெர்வெசி), 8-151(குருகர்), 9-189(போரன்), 10-189(புக்காரி).
பந்துவீச்சு: ஜாகிர்கான் 6.4-0-20-3, நெஹ்ரா 5-1-22-1, யூசுப் 6-1-17-0, ஹர்பஜன் 10-0-31-0, சாவ்லா 10-0-47-2, யுவராஜ் 9-1-43-2.
இந்தியா
சேவக்(கே)கெர்வெசி(ப)சீலார் 39(26)
சச்சின்(கே)குருகர்(ப)சீலார் 27(22)
யூசுப்(கே)+(ப)சீலார் 11(10)
காம்பிர்(ப)புக்காரி 28(28)
கோஹ்லி(ப)போரன் 12(20)
யுவராஜ்-அவுட் இல்லை- 51(73)
தோனி--அவுட் இல்லை- 19(40)
உதிரிகள் 4
மொத்தம் (36.3 ஓவரில், 5விக்.,) 191
விக்கெட் வீழ்ச்சி: 1-69(சேவக்), 2-80(சச்சின்), 3-82(யூசுப்பதான்), 4-99(கோஹ்லி), 5-139(காம்பிர்).
பந்துவீச்சு: புக்காரி 6-1-33-1, டசாட்டே 7-0-38-0, சீலார் 10-1-53-3, போரன் 8-0-33-1, கூப்பர் 2-0-11-0, குர்கர் 3.3-0-23-0.

முக நூல்

Popular Posts