background img

புதிய வரவு

Showing posts with label MK Alagiri. Show all posts
Showing posts with label MK Alagiri. Show all posts

Karunanidhi

சென்னை: அழகிரி, ஸ்டாலின் இடையிலான மோதலை திசை திருப்பவே இலங்கையில் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் கூற ஆரம்பித்துள்ளதாக “தி டெலிகிராப்” ஆங்கில நாளேடு கூறியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திமுக மீதான கறையைப் போக்கவும், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி தரவுமே இலங்கை விவகாரத்தை கருணாநிதி கையில் எடுத்துள்ளதாக காங்கிரஸ் கருதுகிறது.

ஆனால், அழகிரி- ஸ்டாலின் இடையிலான பிரச்சனையை திசை திருப்புவதற்காக மேற்கொள்ளப்படும் உத்தி தான் இது என்று “தி டெலிகிராப்” தெரிவித்துள்ளது.

இலங்கையில் தமிழீழம் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக 1980ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட தமிழீழ ஆதரவாளர்களின் அமைப்பான டெசோ அமைப்பின் கூட்டம் இன்று சென்னையில் கருணாநிதியின் தலைமையில் நடைபெற உள்ளது. இந் நிலையில் டெலிகிராப் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.

திமுகவின் இந்த முயற்சி இந்தியத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் டெலிகிராப் கூறியுள்ளது.

கருணாநிதி வித்தை காட்டுகிறார்-பழ.நெடுமாறன்:

இந் நிலையில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கூறியிருப்பதாவது:

இலங்கையில் உள்ள தமிழர்கள் கடந்த 35 ஆண்டுகளாக தமிழ் ஈழத்துக்கு ஆதரவளித்து வருகிறார்கள். 1977 மற்றும் 1997-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களே சாட்சி.

வெளிநாடுகளில் அகதிகளாக இருக்கும் தமிழர்களை மீண்டும் தாயகத்தில் குடியமர்த்திவிட்டு சுதந்திரமான முறையில் ஐ.நா. பார்வையாளர்கள் கண்காணிப்பில் தமிழ் ஈழத்துக்காக மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போதுதான் மக்களின் உண்மையான உணர்வுகள் வெளிப்படும்.

1983ல் கருணாநிதி, வீரமணி மற்றும் நானும் சேர்ந்துதான் டெசோ அமைப்பை உருவாக்கினோம். ஆனால் எங்கள் யாரிடமும் கேட்காமல் டெசோ இனி இயங்காது என்று கருணாநிதி அறிவித்தார். இப்போது யாரிடமும் கேட்காமல் டெசோ உருவாக்கப்படும் என்கிறார்.

2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதை தடுக்க தவறிய கருணாநிதி மீது உலக தமிழர்கள் கோபத்தில் இருக்கிறார்கள். அதை மாற்ற செம்மொழி மாநாடு முதல் டெசோ வரை அவருக்கு தெரிந்த வித்தைகளை செய்து பார்க்கிறார். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக கருணாநிதி விரும்புகிறார். அதனால் தமிழர் ஈழ கொள்கையை மீண்டும் கையில் எடுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

தமிழ் ஈழ விவகாரத்தை மீண்டும் கையில் எடுக்கும் கருணாநிதி: காங். கூட்டணியிலிருந்து விலக திட்டம்


Karunanidhi

சென்னை: அழகிரி, ஸ்டாலின் இடையிலான மோதலை திசை திருப்பவே இலங்கையில் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் கூற ஆரம்பித்துள்ளதாக “தி டெலிகிராப்” ஆங்கில நாளேடு கூறியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திமுக மீதான கறையைப் போக்கவும், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி தரவுமே இலங்கை விவகாரத்தை கருணாநிதி கையில் எடுத்துள்ளதாக காங்கிரஸ் கருதுகிறது.

ஆனால், அழகிரி- ஸ்டாலின் இடையிலான பிரச்சனையை திசை திருப்புவதற்காக மேற்கொள்ளப்படும் உத்தி தான் இது என்று “தி டெலிகிராப்” தெரிவித்துள்ளது.

இலங்கையில் தமிழீழம் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக 1980ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட தமிழீழ ஆதரவாளர்களின் அமைப்பான டெசோ அமைப்பின் கூட்டம் இன்று சென்னையில் கருணாநிதியின் தலைமையில் நடைபெற உள்ளது. இந் நிலையில் டெலிகிராப் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.

திமுகவின் இந்த முயற்சி இந்தியத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் டெலிகிராப் கூறியுள்ளது.

கருணாநிதி வித்தை காட்டுகிறார்-பழ.நெடுமாறன்:

இந் நிலையில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கூறியிருப்பதாவது:

இலங்கையில் உள்ள தமிழர்கள் கடந்த 35 ஆண்டுகளாக தமிழ் ஈழத்துக்கு ஆதரவளித்து வருகிறார்கள். 1977 மற்றும் 1997-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களே சாட்சி.

வெளிநாடுகளில் அகதிகளாக இருக்கும் தமிழர்களை மீண்டும் தாயகத்தில் குடியமர்த்திவிட்டு சுதந்திரமான முறையில் ஐ.நா. பார்வையாளர்கள் கண்காணிப்பில் தமிழ் ஈழத்துக்காக மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போதுதான் மக்களின் உண்மையான உணர்வுகள் வெளிப்படும்.

1983ல் கருணாநிதி, வீரமணி மற்றும் நானும் சேர்ந்துதான் டெசோ அமைப்பை உருவாக்கினோம். ஆனால் எங்கள் யாரிடமும் கேட்காமல் டெசோ இனி இயங்காது என்று கருணாநிதி அறிவித்தார். இப்போது யாரிடமும் கேட்காமல் டெசோ உருவாக்கப்படும் என்கிறார்.

2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதை தடுக்க தவறிய கருணாநிதி மீது உலக தமிழர்கள் கோபத்தில் இருக்கிறார்கள். அதை மாற்ற செம்மொழி மாநாடு முதல் டெசோ வரை அவருக்கு தெரிந்த வித்தைகளை செய்து பார்க்கிறார். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக கருணாநிதி விரும்புகிறார். அதனால் தமிழர் ஈழ கொள்கையை மீண்டும் கையில் எடுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

மதுரை: தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து மதுரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா திருமண மண்டபம் மீது கல்வீச்சு தாக்குதல் நடந்தது. அதே போல அவரது தீவிர ஆதரவாளரான பொட்டு சுரேஷ் வீடும் தாக்கப்பட்டது.

நேற்று நள்ளிரவில் இந்த மண்டபத்தை சூழ்ந்த சிலர் கல்வீசித் தாக்க ஆரம்பித்தனர். அவர்களை காவலாளிகள் துரத்தியபோது, தாங்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்றும், இனிமேல் உங்களை சும்மா விடமாட்டோம் என்றும் மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

பொட்டு சுரேஷ் வீடு மீது தாக்குதல்:

இந் நிலையில் அழகிரிக்கு மிக நெருக்கமானவருமான சுரேஷ் பாபு என்கிற பொட்டு சுரேஷ் வீடு மீதும் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதிமுக தரப்பினர்தான் இந்த தாக்குதலை நடத்தியதாக அழகிரியிடம் முறையிட்டுள்ளார் பொட்டு சுரேஷ்.

பொட்டு சுரேஷை தொடர்ந்து மதுரையில் மற்ற திமுக பிரமுகர்கள் வீடு மீதும் தாக்குதல் தொடரலாம் என்பதால் அவர்களின் வீடுகளில் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் மதுரை திமுக பிரமுகர்களுடன் அழகிரி ஆலோசனை நடத்தி வருகிறார். கவர்னரை சந்தித்து புகார் அளிக்கலாமா என்றும் ஆலோசனை செய்யப்படுவதாகத் தெரிகிறது.

நடிகர் வடிவேலு வீடு தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் நிலையில், மதுரையில் அழகிரியின் ஆதரவாளர்கள் வீடுகள் மீதும் தாக்குதல் நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

9 எம்.எல்.ஏக்கள் அழகிரியுடன் சந்திப்பு:

இந் நிலையில் தென் மாவட்டங்களில் வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏக்கள் மதுரையில் மு.க.அழகிரியை சந்தித்தனர்.

தென் மாவட்டங்களில் உள்ள 58 தொகுதியில் திமுக கூட்டணி போட்டியிட்டது. ஆனால், அதில் 12 தொகுதியில் மட்டுமே வெற்றி கிடைத்தது. 36 தொகுதியில் போட்டியிட்ட திமுக 9ல் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 3 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.

வெற்றி பெற்ற 9 திமுக எம்.எல்.ஏக்களும் அழகிரியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

மதுரையில் மு.க.அழகிரி திருமண மண்டபம்-ஆதரவாளர் வீடு மீது தாக்குதல்

மதுரை: தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து மதுரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா திருமண மண்டபம் மீது கல்வீச்சு தாக்குதல் நடந்தது. அதே போல அவரது தீவிர ஆதரவாளரான பொட்டு சுரேஷ் வீடும் தாக்கப்பட்டது.

நேற்று நள்ளிரவில் இந்த மண்டபத்தை சூழ்ந்த சிலர் கல்வீசித் தாக்க ஆரம்பித்தனர். அவர்களை காவலாளிகள் துரத்தியபோது, தாங்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்றும், இனிமேல் உங்களை சும்மா விடமாட்டோம் என்றும் மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

பொட்டு சுரேஷ் வீடு மீது தாக்குதல்:

இந் நிலையில் அழகிரிக்கு மிக நெருக்கமானவருமான சுரேஷ் பாபு என்கிற பொட்டு சுரேஷ் வீடு மீதும் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதிமுக தரப்பினர்தான் இந்த தாக்குதலை நடத்தியதாக அழகிரியிடம் முறையிட்டுள்ளார் பொட்டு சுரேஷ்.

பொட்டு சுரேஷை தொடர்ந்து மதுரையில் மற்ற திமுக பிரமுகர்கள் வீடு மீதும் தாக்குதல் தொடரலாம் என்பதால் அவர்களின் வீடுகளில் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் மதுரை திமுக பிரமுகர்களுடன் அழகிரி ஆலோசனை நடத்தி வருகிறார். கவர்னரை சந்தித்து புகார் அளிக்கலாமா என்றும் ஆலோசனை செய்யப்படுவதாகத் தெரிகிறது.

நடிகர் வடிவேலு வீடு தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் நிலையில், மதுரையில் அழகிரியின் ஆதரவாளர்கள் வீடுகள் மீதும் தாக்குதல் நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

9 எம்.எல்.ஏக்கள் அழகிரியுடன் சந்திப்பு:

இந் நிலையில் தென் மாவட்டங்களில் வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏக்கள் மதுரையில் மு.க.அழகிரியை சந்தித்தனர்.

தென் மாவட்டங்களில் உள்ள 58 தொகுதியில் திமுக கூட்டணி போட்டியிட்டது. ஆனால், அதில் 12 தொகுதியில் மட்டுமே வெற்றி கிடைத்தது. 36 தொகுதியில் போட்டியிட்ட திமுக 9ல் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 3 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.

வெற்றி பெற்ற 9 திமுக எம்.எல்.ஏக்களும் அழகிரியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்ற போது , மதுரையில் இருந்த மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, வாக்கு பதிவு பின்னர் சென்னையில் முகாமிட்டிருந்தார். டெல்லி பக்கம் அவர் சென்று வெகு நாட்களாகி விட்டது.

தற்போது கடும் வெயில் கொளுத்தி வருவதைத் தொடர்ந்து கொடைக்கானலுக்கு ஓய்வுக்காக அவர் சென்றிருந்தார். அங்கிருந்தபடி தென் மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனைகளையும் மேற்கொண்டிருந்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் வரும் 6ம் தேதி சிபிஐ விசாரணைக்கு கனிமொழி ஆஜராகவேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளது.

இந்தப் பின்னணியில், இன்று அதிகாலையில் கொடைக்கானலில் இருந்து மதுரை சென்ற அழகிரி, அங்கிருந்து காலை 10 மணி அளவில் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.

கனிமொழி விவகாரம் தொடர்பாகவே அழகிரி டெல்லிக்குப் போயுள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திடீர் டெல்லி பயணம்

மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்ற போது , மதுரையில் இருந்த மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, வாக்கு பதிவு பின்னர் சென்னையில் முகாமிட்டிருந்தார். டெல்லி பக்கம் அவர் சென்று வெகு நாட்களாகி விட்டது.

தற்போது கடும் வெயில் கொளுத்தி வருவதைத் தொடர்ந்து கொடைக்கானலுக்கு ஓய்வுக்காக அவர் சென்றிருந்தார். அங்கிருந்தபடி தென் மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனைகளையும் மேற்கொண்டிருந்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் வரும் 6ம் தேதி சிபிஐ விசாரணைக்கு கனிமொழி ஆஜராகவேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளது.

இந்தப் பின்னணியில், இன்று அதிகாலையில் கொடைக்கானலில் இருந்து மதுரை சென்ற அழகிரி, அங்கிருந்து காலை 10 மணி அளவில் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.

கனிமொழி விவகாரம் தொடர்பாகவே அழகிரி டெல்லிக்குப் போயுள்ளதாக கூறப்படுகிறது.

மதுரை : ""இத்தேர்தலில் வேட்பாளர் செலவு செய்ய வேண்டிய தொகையை காட்டிலும் குறைவாக தான் தி.மு.க., வேட்பாளர்கள் செலவு செய்திருக்கின்றனர்,'' என, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறினார். மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட முத்துப்பட்டி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், மு.க.அழகிரி தனது குடும்பத்தினருடன் ஓட்டளித்தார்.
பின் அவர் கூறியதாவது: தி.மு.க.,வினர் ஓட்டுக்கு 200 ரூபாய் கொடுப்பதாக அ.தி. மு.க.,வினர் கூறுகின்றனரே?
எப்போதுமே அப்படி தான் கூறுவர். தோல்வி பயத்தில் பலவற்றை கூறுகின்றனர். "நாங்கள் வன்முறையில் ஈடுபடுவோம்; பணம் கொடுக்குகிறோம்' என்று ஏதோதோ கூறுகின்றனர்.
தேர்தலில் தி.மு.க., 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ததாக ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?
தேர்தல் கமிஷன் எப்படி இருந்தது என்பது உங்களுக்கு தெரியும். நாங்கள் எப்படி அவ்வளவு செலவு செய்திருக்க முடியும். ஒரு வேட்பாளர் செலவு செய்ய வேண்டிய தொகையை காட்டிலும் குறைவாக தான் செலவு செய்திருக்கிறோம்.
தேர்தல் பிரசாரத்தில் ஊழல் பெரிய விஷயமாக...
(இடைமறித்து) எங்கள் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்கிறோம். 200 இடங்களில் வெற்றி பெறுவோம். அவர்கள் எந்த சாதனையும் செய்யவில்லை. கருணாநிதி குடும்பத்தை மட்டும் தான் குறை கூறுகின்றனர்.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல்...
(இடைமறித்து) "2ஜி'யும் கிடையாது. "1ஜி'யும் கிடையாது.
தி.மு.க., தலைவர்களை ஜெயலலிதா அதிக விமர்சனம் செய்கிறாரே?
அவருக்கு கொள்கை எதுவும் கிடையாது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் பழிவாங்கும் என்று கூறுவார். அவர் சொல்வதை தான் பத்திரிகைகள் பெரிதுபடுத்துகின்றன.
தி.மு.க., மீது அதிகம் குற்றம் சாட்டப்படுகிறதே?
தேர்தல் கமிஷன் அ.தி. மு.க.,வுக்கு ஆதரவாக, மதுரை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் செயல்படுகிறது. தி.மு.க., கூட்டணி தோற்க வேண்டுமென்று அவர்கள் வேலை பார்க்கின்றனர்.
கருத்து கணிப்பு பற்றி?
அதெல்லாம் சும்மா. தென் மாவட்டங்களில் குறைந்தது 40 முதல் 45 இடங்களில் வெற்றி பெறுவோம். இவ்வாறு அழகிரி கூறினார்.

ரூ.50 ஆயிரம் கோடி செலவு செய்தோமா? அழகிரி

மதுரை : ""இத்தேர்தலில் வேட்பாளர் செலவு செய்ய வேண்டிய தொகையை காட்டிலும் குறைவாக தான் தி.மு.க., வேட்பாளர்கள் செலவு செய்திருக்கின்றனர்,'' என, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறினார். மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட முத்துப்பட்டி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், மு.க.அழகிரி தனது குடும்பத்தினருடன் ஓட்டளித்தார்.
பின் அவர் கூறியதாவது: தி.மு.க.,வினர் ஓட்டுக்கு 200 ரூபாய் கொடுப்பதாக அ.தி. மு.க.,வினர் கூறுகின்றனரே?
எப்போதுமே அப்படி தான் கூறுவர். தோல்வி பயத்தில் பலவற்றை கூறுகின்றனர். "நாங்கள் வன்முறையில் ஈடுபடுவோம்; பணம் கொடுக்குகிறோம்' என்று ஏதோதோ கூறுகின்றனர்.
தேர்தலில் தி.மு.க., 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ததாக ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?
தேர்தல் கமிஷன் எப்படி இருந்தது என்பது உங்களுக்கு தெரியும். நாங்கள் எப்படி அவ்வளவு செலவு செய்திருக்க முடியும். ஒரு வேட்பாளர் செலவு செய்ய வேண்டிய தொகையை காட்டிலும் குறைவாக தான் செலவு செய்திருக்கிறோம்.
தேர்தல் பிரசாரத்தில் ஊழல் பெரிய விஷயமாக...
(இடைமறித்து) எங்கள் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்கிறோம். 200 இடங்களில் வெற்றி பெறுவோம். அவர்கள் எந்த சாதனையும் செய்யவில்லை. கருணாநிதி குடும்பத்தை மட்டும் தான் குறை கூறுகின்றனர்.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல்...
(இடைமறித்து) "2ஜி'யும் கிடையாது. "1ஜி'யும் கிடையாது.
தி.மு.க., தலைவர்களை ஜெயலலிதா அதிக விமர்சனம் செய்கிறாரே?
அவருக்கு கொள்கை எதுவும் கிடையாது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் பழிவாங்கும் என்று கூறுவார். அவர் சொல்வதை தான் பத்திரிகைகள் பெரிதுபடுத்துகின்றன.
தி.மு.க., மீது அதிகம் குற்றம் சாட்டப்படுகிறதே?
தேர்தல் கமிஷன் அ.தி. மு.க.,வுக்கு ஆதரவாக, மதுரை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் செயல்படுகிறது. தி.மு.க., கூட்டணி தோற்க வேண்டுமென்று அவர்கள் வேலை பார்க்கின்றனர்.
கருத்து கணிப்பு பற்றி?
அதெல்லாம் சும்மா. தென் மாவட்டங்களில் குறைந்தது 40 முதல் 45 இடங்களில் வெற்றி பெறுவோம். இவ்வாறு அழகிரி கூறினார்.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் நடிகர் அருண்பாண்டியன் போட்டியிடுகிறார். அவருக்கு ஓட்டு கேட்டு பேராவூரணி பெரியார் சிலை அருகே தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார்.


பிரச்சாரத்தின் போது விஜயகாந்த், ‘’இந்த தேர்தலில் என்னை இழுக்க அழகிரி முயற்சித்தார். அவர் முயற்சி பலிக்கவில்லை. மனிதனின் அடிப்படை குணத்தை மாற்ற முடியாது.

விஜயகாந்த் கோபக்காரன்தான். அந்த கோபம் பிள்ளையை படிக்க சொல்லி தந்தை கண்டிப்பது போன்றது. அதை பெரிது படுத்துகிறார்கள். அதுபற்றி நான் கவலைப்படவில்லை.

5 ஆண்டுகளாக நான் கேட்ட எந்த கேள்விக்கும் முதலமைச்சர் கருணாநிதி பதில் அளிக்கவில்லை. துணிவு இருந்தால் என்னுடைய கேள்விக்கு நேரடியாக அவர் பதில் சொல்லட்டும். சமச்சீர் கல்வி என்பது சென்னையில் உள்ள புகழ்பெற்ற பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும்.

கல்வி, கிராமத்து மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும். ஆனால் 5-ம், 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே பாடம் தான் சமச்சீர் கல்வி என்று கருணாநிதி சொல்கிறார்.

கருணாநிதியால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. இலங்கையில் தமிழ் இனத்தை காட்டி கொடுத்து அந்த இனத்தையே அழித்தது காங்கிரஸ். அதற்கு கருணாநிதி துணை போனார்.

கரும்பு தோட்டத்துக்கு யானையையும், கழனி மேட்டுக்கு எருமையையும், கொய்யா தோப்புக்கு குரங்கையும் காவல் வைத்தது போல தி.மு.க.விடம் தமிழ் நாட்டை ஒப்படைத்து விட்டோம். தி.மு.க. ஆட்சியை அகற்ற வாக்காளர்கள் அனைவரும் முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்’’ என்று பேசினார்.

அழகிரி முயற்சி பலிக்கவில்லை : விஜயகாந்த்

தஞ்சை மாவட்டம் பேராவூரணி தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் நடிகர் அருண்பாண்டியன் போட்டியிடுகிறார். அவருக்கு ஓட்டு கேட்டு பேராவூரணி பெரியார் சிலை அருகே தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார்.


பிரச்சாரத்தின் போது விஜயகாந்த், ‘’இந்த தேர்தலில் என்னை இழுக்க அழகிரி முயற்சித்தார். அவர் முயற்சி பலிக்கவில்லை. மனிதனின் அடிப்படை குணத்தை மாற்ற முடியாது.

விஜயகாந்த் கோபக்காரன்தான். அந்த கோபம் பிள்ளையை படிக்க சொல்லி தந்தை கண்டிப்பது போன்றது. அதை பெரிது படுத்துகிறார்கள். அதுபற்றி நான் கவலைப்படவில்லை.

5 ஆண்டுகளாக நான் கேட்ட எந்த கேள்விக்கும் முதலமைச்சர் கருணாநிதி பதில் அளிக்கவில்லை. துணிவு இருந்தால் என்னுடைய கேள்விக்கு நேரடியாக அவர் பதில் சொல்லட்டும். சமச்சீர் கல்வி என்பது சென்னையில் உள்ள புகழ்பெற்ற பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும்.

கல்வி, கிராமத்து மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும். ஆனால் 5-ம், 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே பாடம் தான் சமச்சீர் கல்வி என்று கருணாநிதி சொல்கிறார்.

கருணாநிதியால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. இலங்கையில் தமிழ் இனத்தை காட்டி கொடுத்து அந்த இனத்தையே அழித்தது காங்கிரஸ். அதற்கு கருணாநிதி துணை போனார்.

கரும்பு தோட்டத்துக்கு யானையையும், கழனி மேட்டுக்கு எருமையையும், கொய்யா தோப்புக்கு குரங்கையும் காவல் வைத்தது போல தி.மு.க.விடம் தமிழ் நாட்டை ஒப்படைத்து விட்டோம். தி.மு.க. ஆட்சியை அகற்ற வாக்காளர்கள் அனைவரும் முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்’’ என்று பேசினார்.

திமுக தேர்தல் அறிக்கையை மக்கள் நம்புகிறார்கள் என்றும், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்றும் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கூறினார்.

மத்திய அமைச்சரும், தென்மண்டல தி.மு.க. அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரி தூத்துக்குடி மீனாட்சிபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தலைமை தேர்தல் அலுவலகத்துக்கு சென்றார்.

அங்கு தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் தி.மு.க. வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க. அழகிரி,

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது. 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். 2006 ம் ஆண்டு வெளியிடப்பட்ட தேர்தல்

அறிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே போல் இந்த முறையும் தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையை நிறைவேற்றுவார்கள் என்று மக்கள் நம்புகிறார்கள். தென்மாவட்டத்தில் 52 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் பெ.கீதாஜீவன் 35 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றார்.

234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்: மு.க.அழகிரி

திமுக தேர்தல் அறிக்கையை மக்கள் நம்புகிறார்கள் என்றும், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்றும் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கூறினார்.

மத்திய அமைச்சரும், தென்மண்டல தி.மு.க. அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரி தூத்துக்குடி மீனாட்சிபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தலைமை தேர்தல் அலுவலகத்துக்கு சென்றார்.

அங்கு தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் தி.மு.க. வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க. அழகிரி,

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது. 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். 2006 ம் ஆண்டு வெளியிடப்பட்ட தேர்தல்

அறிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே போல் இந்த முறையும் தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையை நிறைவேற்றுவார்கள் என்று மக்கள் நம்புகிறார்கள். தென்மாவட்டத்தில் 52 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் பெ.கீதாஜீவன் 35 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றார்.

மதுரை: "" ஜெயலலிதா ஆட்சிக்கு வரப்போவதுமில்லை; தங்கம் தரப்போவதுமில்லை,'' என, மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கூறினார்.

மதுரையில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கை, கருணாநிதி அவருக்கு எழுதி கொடுத்ததை போல், காப்பி அடித்து வெளியிட்டுள்ளனர். இதற்கு, காரணம் ஜெ.,க்கு தோல்வி பயம் வந்து விட்டது. 2006 தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளும், சொல்லாத திட்டங்களையும் கருணாநிதி நிறைவேற்றியுள்ளார். 2001ல் ஆட்சிக்கு வந்த ஜெ., முந்தைய தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை முடக்கினார். மக்களுக்கு சென்றடையா வண்ணம் தடுத்தார். தி.மு.க., தேர்தல் அறிக்கையில் திருமண உதவி திட்டம் 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 30 ஆயிரம் ரூபாயாகவும், கர்ப்பிணிகளுக்கு 6,000 ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 2011ல் ஜெ., ஆட்சிக்கு வந்தால் 2006ல் தி.மு.க., கொண்டு வந்த திட்டங்களை முடக்குவார். கர்ப்பிணிகளுக்கு 6,000 ரூபாய், திருமண உதவி திட்டத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் கூட தரமாட்டார். ஜெயலலிதாவிற்கு நடிப்பதை தவிர ஒன்றும் தெரியாது. தங்கத்தைப் பற்றி கவலையில்லை. அவர், ஆட்சிக்கு வரப்போவதுமில்லை; தங்கம் தரப்போவதுமில்லை,'' என்றார்.

ஜெ., வரப்போவதுமில்லை; தங்கம் தரப்போவதுமில்லை: மு.க. அழகிரி

மதுரை: "" ஜெயலலிதா ஆட்சிக்கு வரப்போவதுமில்லை; தங்கம் தரப்போவதுமில்லை,'' என, மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கூறினார்.

மதுரையில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கை, கருணாநிதி அவருக்கு எழுதி கொடுத்ததை போல், காப்பி அடித்து வெளியிட்டுள்ளனர். இதற்கு, காரணம் ஜெ.,க்கு தோல்வி பயம் வந்து விட்டது. 2006 தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளும், சொல்லாத திட்டங்களையும் கருணாநிதி நிறைவேற்றியுள்ளார். 2001ல் ஆட்சிக்கு வந்த ஜெ., முந்தைய தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை முடக்கினார். மக்களுக்கு சென்றடையா வண்ணம் தடுத்தார். தி.மு.க., தேர்தல் அறிக்கையில் திருமண உதவி திட்டம் 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 30 ஆயிரம் ரூபாயாகவும், கர்ப்பிணிகளுக்கு 6,000 ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 2011ல் ஜெ., ஆட்சிக்கு வந்தால் 2006ல் தி.மு.க., கொண்டு வந்த திட்டங்களை முடக்குவார். கர்ப்பிணிகளுக்கு 6,000 ரூபாய், திருமண உதவி திட்டத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் கூட தரமாட்டார். ஜெயலலிதாவிற்கு நடிப்பதை தவிர ஒன்றும் தெரியாது. தங்கத்தைப் பற்றி கவலையில்லை. அவர், ஆட்சிக்கு வரப்போவதுமில்லை; தங்கம் தரப்போவதுமில்லை,'' என்றார்.

மதுரை: ""வெண்டிலேட்டரில் அ.தி.மு.க., அணி ஓடுகிறது. ஏப்., 13ல் வெண்டிலேட்டரை மக்கள் பிடுங்கி விடுவர்,'' என மத்தியமைச்சர் மு.க.அழகிரி குறிப்பிட்டார்.

அவரை, பார்வர்ட் பிளாக் (சுபாஷிஸ்ட்) பொது செயலாளர் முத்தையா பசும்பொன், பார்வர்ட் பிளாக்(தினகரன்) நிர்வாகி தினகரன், திரிணமுல் காங்., மாநில தலைவர் கணேசன் சந்தித்து, தேர்தலில் தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். அ.தி.மு.க., முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ரத்தினம் உட்பட 50 பேர் தி.மு.க.,வில் இணைந்தனர். அவர்களுக்கு மு.க.அழகிரி பொன்னாடை அணிவித்தார்.பின் அவர் அளித்த பேட்டி: தி.மு.க., கூட்டணிக்கு ஏற்கனவே சந்தானம் தலைமையிலான பார்வர்ட் பிளாக் ஆதரவு தெரிவித்தது. தற்போது சுபாஷிஸ்ட், தினகரன் பிரிவு பார்வர்ட் பிளாக் ஆதரவு தெரிவித்துள்ளது. அ.தி.மு.க., அணி வெண்டிலேட்டரில் ஓடுகிறது. வெண்டிலேட்டரை பிடுங்கி விட்டால், கதை முடிந்து விடும். ஏப்., 13ல் மக்கள், தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளிப்பதன் மூலம் வெண்டிலேட்டரை பிடுங்கி விடுவர்.

அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்ததன் மூலம், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் "ரோஷக்காரர்' இல்லை என நிரூபித்து விட்டார். தேர்தலுக்கு இருபது நாட்கள் உள்ளன. அதற்குள் அவர் இன்னும் ஜெயலலிதாவால் என்னென்ன பாடுபட போகிறாரோ? தென் மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தில் நடிகை குஷ்பு, இயக்குனர் பாக்யராஜ், மத்தியமைச்சர் நெப்போலியன், நடிகர் வடிவேலு, துணை முதல்வர் ஸ்டாலின் ஈடுபடவுள்ளனர். முதல்வர் கருணாநிதி இன்று திருவாரூரில் பிரசாரத்தை துவக்குகிறார். மதுரைக்கு முதல்வர் வருகை குறித்து தேதி முடிவாகவில்லை. தென் மாவட்டங்களில் 58 தொகுதிகளுக்கும் செல்வேன். வெற்றிக்கு தேவையான வியூகங்களை வகுத்து கொடுப்பேன். கூட்டணியின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது, என்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ்பாபு, துணை மேயர் மன்னன், இளைஞரணி செயலாளர் ஜெயராமன் உடனிருந்தனர்.

"நானும் எம்.ஜி.ஆர்., ரசிகன்': ரத்தினம் அணிந்திருந்த அ.தி.மு.க., துண்டை அகற்றும்படி கூறிய மு.க.அழகிரி, தி.மு.க., துண்டை அணிவித்தார். பெரியசாமி என்ற தொண்டர், ""நான் எம்.ஜி.ஆர்., ரசிகன். தி.மு.க.,வில் சேருகிறேன்,'' என்றார். அதை கேட்ட மு.க.அழகிரி, ""நானும் எம்.ஜி.ஆர்.,ரசிகன் தான்,'' என்றார். ""அ.தி.மு.க.,வை துவக்கியதில் இருந்து இருக்கிறேன். சட்டசபை தேர்தலில் போட்டியிட்டேன். சசிகலா ஆதிக்கம் உள்ளது. தொண்டர்களால், ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை,'' என்றார் ரத்தினம்.

வெண்டிலேட்டரில் ஓடுகிறது அ.தி.மு.க.,: மு.க.அழகிரி "கமென்ட்'

மதுரை: ""வெண்டிலேட்டரில் அ.தி.மு.க., அணி ஓடுகிறது. ஏப்., 13ல் வெண்டிலேட்டரை மக்கள் பிடுங்கி விடுவர்,'' என மத்தியமைச்சர் மு.க.அழகிரி குறிப்பிட்டார்.

அவரை, பார்வர்ட் பிளாக் (சுபாஷிஸ்ட்) பொது செயலாளர் முத்தையா பசும்பொன், பார்வர்ட் பிளாக்(தினகரன்) நிர்வாகி தினகரன், திரிணமுல் காங்., மாநில தலைவர் கணேசன் சந்தித்து, தேர்தலில் தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். அ.தி.மு.க., முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ரத்தினம் உட்பட 50 பேர் தி.மு.க.,வில் இணைந்தனர். அவர்களுக்கு மு.க.அழகிரி பொன்னாடை அணிவித்தார்.பின் அவர் அளித்த பேட்டி: தி.மு.க., கூட்டணிக்கு ஏற்கனவே சந்தானம் தலைமையிலான பார்வர்ட் பிளாக் ஆதரவு தெரிவித்தது. தற்போது சுபாஷிஸ்ட், தினகரன் பிரிவு பார்வர்ட் பிளாக் ஆதரவு தெரிவித்துள்ளது. அ.தி.மு.க., அணி வெண்டிலேட்டரில் ஓடுகிறது. வெண்டிலேட்டரை பிடுங்கி விட்டால், கதை முடிந்து விடும். ஏப்., 13ல் மக்கள், தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளிப்பதன் மூலம் வெண்டிலேட்டரை பிடுங்கி விடுவர்.

அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்ததன் மூலம், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் "ரோஷக்காரர்' இல்லை என நிரூபித்து விட்டார். தேர்தலுக்கு இருபது நாட்கள் உள்ளன. அதற்குள் அவர் இன்னும் ஜெயலலிதாவால் என்னென்ன பாடுபட போகிறாரோ? தென் மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தில் நடிகை குஷ்பு, இயக்குனர் பாக்யராஜ், மத்தியமைச்சர் நெப்போலியன், நடிகர் வடிவேலு, துணை முதல்வர் ஸ்டாலின் ஈடுபடவுள்ளனர். முதல்வர் கருணாநிதி இன்று திருவாரூரில் பிரசாரத்தை துவக்குகிறார். மதுரைக்கு முதல்வர் வருகை குறித்து தேதி முடிவாகவில்லை. தென் மாவட்டங்களில் 58 தொகுதிகளுக்கும் செல்வேன். வெற்றிக்கு தேவையான வியூகங்களை வகுத்து கொடுப்பேன். கூட்டணியின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது, என்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ்பாபு, துணை மேயர் மன்னன், இளைஞரணி செயலாளர் ஜெயராமன் உடனிருந்தனர்.

"நானும் எம்.ஜி.ஆர்., ரசிகன்': ரத்தினம் அணிந்திருந்த அ.தி.மு.க., துண்டை அகற்றும்படி கூறிய மு.க.அழகிரி, தி.மு.க., துண்டை அணிவித்தார். பெரியசாமி என்ற தொண்டர், ""நான் எம்.ஜி.ஆர்., ரசிகன். தி.மு.க.,வில் சேருகிறேன்,'' என்றார். அதை கேட்ட மு.க.அழகிரி, ""நானும் எம்.ஜி.ஆர்.,ரசிகன் தான்,'' என்றார். ""அ.தி.மு.க.,வை துவக்கியதில் இருந்து இருக்கிறேன். சட்டசபை தேர்தலில் போட்டியிட்டேன். சசிகலா ஆதிக்கம் உள்ளது. தொண்டர்களால், ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை,'' என்றார் ரத்தினம்.

சென்னை: தேர்தல் நேரத்தில் வாக்களர்களுக்கு பணம் கொடுப்பது தென் இந்தியாவில் சாதாரண விஷயம் என்று விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. மேலும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி ஆகியோர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாகவும் விக்கிலிகீஸ் தகவல் கூறுகிறது.

உலகெங்கும் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் தங்கள் நாட்டின் வெளியுறவுத்துறைக்கு அனுப்பிய பல்வேறு ரகசிய தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டு வருகிறது. இதில் இந்தியா தொடர்பான விவரங்களை விக்கிலீக்ஸ், த ஹிந்து நாளிதழுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.

இதுவரை விக்கிலீக்ஸ் வெளியிடாத இந்தத் தகவல்களை நேற்று முதல் ஹிந்து வெளியிட்டு வருகிறது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

2009ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் கொடுத்தாக ஆந்திரா மற்றும் தமிழக அரசியல்வாதிகளும், அவர்கள் உதவியாளர்களும் ஒப்புக் கொண்டதாக சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி பிரடரிக் கப்லான் அமெரிக்காவுக்கு அனுப்பிய கேபிளில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க தூதரக குழுவிடம் கார்த்தி சிதம்பரம், ரசாயனத்துறை அமைச்சர் மு.க. அழகிரியின் நம்பிக்கைக்குரிய முன்னாள் மதுரை மேயர் எம். பட்டுராஜன், ஆந்திராவைச் சேர்ந்த மஜ்லிஸ் இ இத்தன்ஹதுல் முஸ்லிமீனைச் சேர்ந்த எம்.பி. அசாதுதீன் ஒவைசி ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தின்போது தாங்களும், தங்கள் உதவியாளர்களும் வாக்களர்களுக்கு எவ்வாறு பண பட்டுவாடா செய்தார்கள் என்று ஒளிவுமறைவின்றி பேசியுள்ளனர்.

13-5-2009 அன்று அனுப்பப்பட்டுள்ள கேபிளில் கப்லான் தேர்தல் பணிகளை பண பலம் எவ்வாறு ஆட்டி படைக்கிறது என்று இந்த துறையில் உள்ள பலரிடம் சேகரித்த தகவல்களை அனுப்பியுள்ளார்.

வாக்காளர்களுக்கு அரசியல்வாதிகள் பணம், பொருள் முதலியவை கொடுப்பது என்பது தென் இந்தியாவில் சாதாரணமான ஒன்று. ஏழை வாக்காளர்கள் வேட்பாளர்கள் ஏதாவது கொடுக்க மாட்டார்களா என்று எதிர்பார்க்கின்றனர்.

அவர்களும் வாக்களர்களின் எதிர்பார்ப்புகளை எப்படியாவது பூர்த்தி செய்கின்றனர். கிணறு வெட்ட பணம் கொடுப்பதில் இருந்து, காலையில் செய்தித்தாள் கொடுக்கும்போது அதற்குள் பணத்தை வைத்து கொடுத்து வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுப்பது வரை செய்தவற்றை எல்லாம் அரசியல்வாதிகளும், அவர்கள் ஆட்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதற்கான பணம் கட்சி நிதி திரட்டுவதன் மூலம் கிடைக்கிறது. இவ்வாறு பணம் கொடுப்பதால் வாக்காளர்களின் மனம் மாறுகிறதா என்று உறுதியாக சொல்ல முடியவில்லை என்றாலும், சில நேரங்களில் நிச்சயம் மனம் மாறத்தான் செய்கிறது.

கப்லானும், அவரது சக ஊழியர்களும் சென்ற இடங்களில் எல்லாம் பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள், வாக்காளர்கள் லஞ்சம் என்பது தேர்தல் நேரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை என்றே கூறினர்.

இந்த குழு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள சேரிப் பகுதிகளுக்கு சென்றபோது தேர்தல் நேரத்தில் அங்குள்ள மக்கள் ஏதாவது கிடைக்காதா என்று எதிர்பார்ப்பதை தெரிந்து கொண்டனர்.

அரசியல் வல்லுநர் ஒருவர் அவர்களிடம் கூறுகையில், பிரச்சாரத்திற்கு சேரிப்பகுதிகள் மிகவும் முக்கியமானவை. அங்குள்ள மக்கள் தொகையும், அவர்கள் வறுமையும் லஞ்சம் மூலம் அவர்களை சுலபமாக வாங்கிவிடச் செய்கிறது என்றார்.

சென்னையில் உள்ள ஒரு என்ஜிஓ அமைப்பு கூறுகையில், தமிழகத்தில் வாக்காளர்களைக் கவர அவர்களுக்கு திமுகவும், அதிமுகவும் எப்பொழுதுமே லஞ்சம் கொடுக்கும். அவர்கள் பணப் பட்டுவாடாவுக்கென்று தனி முறை வைத்துள்ளனர்.

தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன் அரசியல் கட்சிகளின் ஏஜென்ட்கள் அரிசி மூட்டையில் பணத்தை கொண்டு வருவார்கள். அவர்களிடம் இருக்கும் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களின் அடிப்படையில் பணப்பட்டுவாடா செய்வர். ஏஜென்டகள் வழக்கமாக தேர்தல் ஆணையம் தூங்கும்போது நடுராத்திரியில் குறிப்பாக 2 முதல் 4 மணிக்குள் தான் வருவார்கள்.

இன்னொரு செய்தித்தாள் கிடைக்குமா?:

இதுவரை தமிழகம் கண்டிராத அளவுக்கு அரசியலில் பணப்புழக்கத்தை விட்டவர் அழகிரி என்பது கப்லானின் கருத்து. அழகிரியின் நம்பிக்ககைக்கு பாத்திரமான பட்டுராஜன் கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த மக்களை இடைத் தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதை ஒப்புக் கொண்டார். இது ஒன்றும் பெரிய ரகசியம் எல்லாம் கிடையாது. அழகிரி திருமங்கலத்தில் உள்ள ஒவ்வொரு வாக்காளருக்கும் ரூ. 5 ஆயிரம் கொடுத்தார் என்று பட்டுராஜன் கேபிளில் கூறியுள்ளார்.

இன்னொரு செய்தித்தாள் கிடைக்குமா என்ற தலைப்பில் கப்லான் எழுதிய கட்டுரையில் திருமங்கலத்தில் திமுக எவ்வாறு பணப்பட்டுவாடா செய்தது என்று விளக்கமாக கூறியுள்ளார்.

வழக்கமாக நடுராத்திரியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்கு பதிலாக திருமங்களத்தில் வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களுக்கு செய்தித்தாள்களில் ஒரு கவரில் பணம் வைத்து கொடுக்கப்பட்டது. அந்த செய்தித்தாள்களில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி திமுக வாக்காளர் சீட்டு வைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் அனைவரும் லஞ்சம் வாங்க வற்புறுத்தப்பட்டுள்ளனர். செய்தித்தாள்களில் வைத்து பணம் பட்டுவாடா செய்யப்பட்டதை பட்டுராஜனே ஒப்புக் கொண்டுள்ளார்.

மதுரையில் உள்ள காங்கிரஸ் நிர்வாகி எஸ். கண்ணன் தூதரக ஊழியர்களிடம் கூறுகையில், திருமங்கலத்தில் தலைக்கு ரூ. 5 ஆயிரம் கொடுக்கப்பட்டது அனைத்தையுமே மாற்றிவிட்டது. இது முன்பு கொடுக்கப்பட்ட தொகையை விட ரூ. 500 அதிகம் என்றார்.

2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது திருமங்கலத்தில் செய்ததுபோல் பணம் பட்டுவாடா செய்வதில் சிரமம் ஏற்பட்டது. ஏனென்றால் சட்டசபை தொகுதியை விட மக்களவை தொகுதி 7 மடங்கு பெரியது. இருப்பினும் செய்தித்தாள் முறை மூலம் பணம் கொடுக்கத்தான் அழகிரி திட்டமிட்டுள்ளார்.

கார்த்தி சிதம்பரம்:

மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் 2009ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தான் கவனித்துக் கொண்டார். கார்த்தி சிதம்பரம் ஓட்டுக்கு பணம் கொடுக்க மறுத்துவிட்டார். அவ்வாறு செய்வது தவறு என்றெல்லாம் ஒன்றும் இல்லை. சிவகங்கை தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது சாத்தியம் இல்லை என்று தான்.

கேபிளில் பெயர் குறிப்பிடாத தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் சென்னையில் உள்ள தூதரக குழுவிடம் கூறுகையில், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் சிறப்பாக செய்லபடுகிறார். அவர் சிலருக்கு பணம் கொடுத்துள்ளார். ஆனால் அவரது தந்தை அவ்வாறு செய்யமாட்டார் என்றார்.

தனது தந்தையை ஆதரிக்கும் சில கிராமவாசிகளுக்கு பணம் கொடுத்ததை கார்த்தி ஒப்புக் கொண்டுள்ளார். பெரும்பாலான கிராமங்கள் உள்ளூர் கோயில்களுக்கும், சத்திரங்களுக்கும் நன்கொடை கேட்டன என்றார்.

இது தவிர ஒவைசி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததை ஒப்புக் கொண்டார். நான் கிணறு வெட்ட பணம் கேட்டவர்களுக்கு கட்சியினர் மூலம் ரூ. 25 ஆயிரம் கொடுத்து அவர்கள் கிணறு தான் வெட்டுகிறார்களா என்று கண்காணிக்குமாறு கூறினேன். நான் வாக்காளர்களுக்கு நேரடியாக பணம் கொடுக்கவில்லை, அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்தேன்.

நான் ஒரு அனாதைப் பெண்ணின் திருமணத்திற்கு ரூ. 35 ஆயிரம் கொடுத்தேன். இவ்வாறு பணம் கொடுப்பது சட்டவிரோதமில்லையா என்று கேட்டதற்கு ஆமாம், ஆனால் இது தான் ஜனநாயகம் என்று பதில் அளித்துள்ளார்.

வாக்காளர்களுக்கு அழகிரி, கார்த்தி சிதம்பரம் பணம் கொடுத்தனர்: விக்கிலீக்ஸ்

சென்னை: தேர்தல் நேரத்தில் வாக்களர்களுக்கு பணம் கொடுப்பது தென் இந்தியாவில் சாதாரண விஷயம் என்று விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. மேலும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி ஆகியோர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாகவும் விக்கிலிகீஸ் தகவல் கூறுகிறது.

உலகெங்கும் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் தங்கள் நாட்டின் வெளியுறவுத்துறைக்கு அனுப்பிய பல்வேறு ரகசிய தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டு வருகிறது. இதில் இந்தியா தொடர்பான விவரங்களை விக்கிலீக்ஸ், த ஹிந்து நாளிதழுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.

இதுவரை விக்கிலீக்ஸ் வெளியிடாத இந்தத் தகவல்களை நேற்று முதல் ஹிந்து வெளியிட்டு வருகிறது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

2009ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் கொடுத்தாக ஆந்திரா மற்றும் தமிழக அரசியல்வாதிகளும், அவர்கள் உதவியாளர்களும் ஒப்புக் கொண்டதாக சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி பிரடரிக் கப்லான் அமெரிக்காவுக்கு அனுப்பிய கேபிளில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க தூதரக குழுவிடம் கார்த்தி சிதம்பரம், ரசாயனத்துறை அமைச்சர் மு.க. அழகிரியின் நம்பிக்கைக்குரிய முன்னாள் மதுரை மேயர் எம். பட்டுராஜன், ஆந்திராவைச் சேர்ந்த மஜ்லிஸ் இ இத்தன்ஹதுல் முஸ்லிமீனைச் சேர்ந்த எம்.பி. அசாதுதீன் ஒவைசி ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தின்போது தாங்களும், தங்கள் உதவியாளர்களும் வாக்களர்களுக்கு எவ்வாறு பண பட்டுவாடா செய்தார்கள் என்று ஒளிவுமறைவின்றி பேசியுள்ளனர்.

13-5-2009 அன்று அனுப்பப்பட்டுள்ள கேபிளில் கப்லான் தேர்தல் பணிகளை பண பலம் எவ்வாறு ஆட்டி படைக்கிறது என்று இந்த துறையில் உள்ள பலரிடம் சேகரித்த தகவல்களை அனுப்பியுள்ளார்.

வாக்காளர்களுக்கு அரசியல்வாதிகள் பணம், பொருள் முதலியவை கொடுப்பது என்பது தென் இந்தியாவில் சாதாரணமான ஒன்று. ஏழை வாக்காளர்கள் வேட்பாளர்கள் ஏதாவது கொடுக்க மாட்டார்களா என்று எதிர்பார்க்கின்றனர்.

அவர்களும் வாக்களர்களின் எதிர்பார்ப்புகளை எப்படியாவது பூர்த்தி செய்கின்றனர். கிணறு வெட்ட பணம் கொடுப்பதில் இருந்து, காலையில் செய்தித்தாள் கொடுக்கும்போது அதற்குள் பணத்தை வைத்து கொடுத்து வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுப்பது வரை செய்தவற்றை எல்லாம் அரசியல்வாதிகளும், அவர்கள் ஆட்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதற்கான பணம் கட்சி நிதி திரட்டுவதன் மூலம் கிடைக்கிறது. இவ்வாறு பணம் கொடுப்பதால் வாக்காளர்களின் மனம் மாறுகிறதா என்று உறுதியாக சொல்ல முடியவில்லை என்றாலும், சில நேரங்களில் நிச்சயம் மனம் மாறத்தான் செய்கிறது.

கப்லானும், அவரது சக ஊழியர்களும் சென்ற இடங்களில் எல்லாம் பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள், வாக்காளர்கள் லஞ்சம் என்பது தேர்தல் நேரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை என்றே கூறினர்.

இந்த குழு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள சேரிப் பகுதிகளுக்கு சென்றபோது தேர்தல் நேரத்தில் அங்குள்ள மக்கள் ஏதாவது கிடைக்காதா என்று எதிர்பார்ப்பதை தெரிந்து கொண்டனர்.

அரசியல் வல்லுநர் ஒருவர் அவர்களிடம் கூறுகையில், பிரச்சாரத்திற்கு சேரிப்பகுதிகள் மிகவும் முக்கியமானவை. அங்குள்ள மக்கள் தொகையும், அவர்கள் வறுமையும் லஞ்சம் மூலம் அவர்களை சுலபமாக வாங்கிவிடச் செய்கிறது என்றார்.

சென்னையில் உள்ள ஒரு என்ஜிஓ அமைப்பு கூறுகையில், தமிழகத்தில் வாக்காளர்களைக் கவர அவர்களுக்கு திமுகவும், அதிமுகவும் எப்பொழுதுமே லஞ்சம் கொடுக்கும். அவர்கள் பணப் பட்டுவாடாவுக்கென்று தனி முறை வைத்துள்ளனர்.

தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன் அரசியல் கட்சிகளின் ஏஜென்ட்கள் அரிசி மூட்டையில் பணத்தை கொண்டு வருவார்கள். அவர்களிடம் இருக்கும் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களின் அடிப்படையில் பணப்பட்டுவாடா செய்வர். ஏஜென்டகள் வழக்கமாக தேர்தல் ஆணையம் தூங்கும்போது நடுராத்திரியில் குறிப்பாக 2 முதல் 4 மணிக்குள் தான் வருவார்கள்.

இன்னொரு செய்தித்தாள் கிடைக்குமா?:

இதுவரை தமிழகம் கண்டிராத அளவுக்கு அரசியலில் பணப்புழக்கத்தை விட்டவர் அழகிரி என்பது கப்லானின் கருத்து. அழகிரியின் நம்பிக்ககைக்கு பாத்திரமான பட்டுராஜன் கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த மக்களை இடைத் தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதை ஒப்புக் கொண்டார். இது ஒன்றும் பெரிய ரகசியம் எல்லாம் கிடையாது. அழகிரி திருமங்கலத்தில் உள்ள ஒவ்வொரு வாக்காளருக்கும் ரூ. 5 ஆயிரம் கொடுத்தார் என்று பட்டுராஜன் கேபிளில் கூறியுள்ளார்.

இன்னொரு செய்தித்தாள் கிடைக்குமா என்ற தலைப்பில் கப்லான் எழுதிய கட்டுரையில் திருமங்கலத்தில் திமுக எவ்வாறு பணப்பட்டுவாடா செய்தது என்று விளக்கமாக கூறியுள்ளார்.

வழக்கமாக நடுராத்திரியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்கு பதிலாக திருமங்களத்தில் வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களுக்கு செய்தித்தாள்களில் ஒரு கவரில் பணம் வைத்து கொடுக்கப்பட்டது. அந்த செய்தித்தாள்களில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி திமுக வாக்காளர் சீட்டு வைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் அனைவரும் லஞ்சம் வாங்க வற்புறுத்தப்பட்டுள்ளனர். செய்தித்தாள்களில் வைத்து பணம் பட்டுவாடா செய்யப்பட்டதை பட்டுராஜனே ஒப்புக் கொண்டுள்ளார்.

மதுரையில் உள்ள காங்கிரஸ் நிர்வாகி எஸ். கண்ணன் தூதரக ஊழியர்களிடம் கூறுகையில், திருமங்கலத்தில் தலைக்கு ரூ. 5 ஆயிரம் கொடுக்கப்பட்டது அனைத்தையுமே மாற்றிவிட்டது. இது முன்பு கொடுக்கப்பட்ட தொகையை விட ரூ. 500 அதிகம் என்றார்.

2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது திருமங்கலத்தில் செய்ததுபோல் பணம் பட்டுவாடா செய்வதில் சிரமம் ஏற்பட்டது. ஏனென்றால் சட்டசபை தொகுதியை விட மக்களவை தொகுதி 7 மடங்கு பெரியது. இருப்பினும் செய்தித்தாள் முறை மூலம் பணம் கொடுக்கத்தான் அழகிரி திட்டமிட்டுள்ளார்.

கார்த்தி சிதம்பரம்:

மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் 2009ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தான் கவனித்துக் கொண்டார். கார்த்தி சிதம்பரம் ஓட்டுக்கு பணம் கொடுக்க மறுத்துவிட்டார். அவ்வாறு செய்வது தவறு என்றெல்லாம் ஒன்றும் இல்லை. சிவகங்கை தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது சாத்தியம் இல்லை என்று தான்.

கேபிளில் பெயர் குறிப்பிடாத தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் சென்னையில் உள்ள தூதரக குழுவிடம் கூறுகையில், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் சிறப்பாக செய்லபடுகிறார். அவர் சிலருக்கு பணம் கொடுத்துள்ளார். ஆனால் அவரது தந்தை அவ்வாறு செய்யமாட்டார் என்றார்.

தனது தந்தையை ஆதரிக்கும் சில கிராமவாசிகளுக்கு பணம் கொடுத்ததை கார்த்தி ஒப்புக் கொண்டுள்ளார். பெரும்பாலான கிராமங்கள் உள்ளூர் கோயில்களுக்கும், சத்திரங்களுக்கும் நன்கொடை கேட்டன என்றார்.

இது தவிர ஒவைசி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததை ஒப்புக் கொண்டார். நான் கிணறு வெட்ட பணம் கேட்டவர்களுக்கு கட்சியினர் மூலம் ரூ. 25 ஆயிரம் கொடுத்து அவர்கள் கிணறு தான் வெட்டுகிறார்களா என்று கண்காணிக்குமாறு கூறினேன். நான் வாக்காளர்களுக்கு நேரடியாக பணம் கொடுக்கவில்லை, அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்தேன்.

நான் ஒரு அனாதைப் பெண்ணின் திருமணத்திற்கு ரூ. 35 ஆயிரம் கொடுத்தேன். இவ்வாறு பணம் கொடுப்பது சட்டவிரோதமில்லையா என்று கேட்டதற்கு ஆமாம், ஆனால் இது தான் ஜனநாயகம் என்று பதில் அளித்துள்ளார்.

சென்னை : ""காங்கிரஸ் கட்சியினர் மீண்டும் வருவார்கள், கூட்டணி அமைப்பார்கள் என, தி.மு.க., எதிர்பார்க்கவில்லை,'' என்று, மத்திய அமைச்சர் அழகிரி கூறினார்.

மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலக உள்ள மு.க. அழகிரி, ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட தி.மு.க., அமைச்சர்கள் நேற்றிரவு, சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதல்வர் கருணாநிதியை சந்தித்தனர்.

இச்சந்திப்புக்குப் பின், மு.க. அழகிரி நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
கேள்வி: மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க., விலகுவது சந்தோஷமா?
பதில்: உங்களுக்கு (நிருபர்களுக்கு) சந்தோஷம் என்றால், எனக்கும் சந்தோஷம்.

கேள்வி: கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகுவதால், தென்மாவட்டங்களில் கடும் போட்டி இருக்குமே?
பதில்: போட்டி இருந்தால் தான் சுவாரஸ்யம் இருக்கும்.

கேள்வி: தி.மு.க., கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகியது பற்றி?
காங்கிரஸ் விலகவில்லை. நாங்கள் விலகி விட்டோம். காங்கிரஸ் கட்சியினர் மீண்டும் வருவார்கள் என, நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
தி.மு.க., அமைச்சர்கள் இன்று காலை 6.45 மணிக்கு டில்லி புறப்படுகின்றனர்.

முதல்வர் இறுதி முடிவு * அழகிரி தகவல் : ""கூட்டணி குறித்து, தலைவர் கருணாநிதி இறுதி முடிவு எடுப்பார்,'' என, மத்தியமைச்சர் அழகிரி தெரிவித்தார்.திருச்சி மாவட்டம், தா.பேட்டை ஒன்றியம் ஜெம்புநாதபுரம் கிராமத்தில், 310 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, தனியார் உருட்டு உருக்கு ஆலை திறப்பு விழா நேற்று நடந்தது. ஆலையை திறந்து வைத்துவிட்டு புறப்பட்ட, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் அழகிரியிடம் கூட்டணி நிலவரம் குறித்து நிருபர்கள் கேட்டபோது, ""மத்தியில் பொறுப்பு வகிக்கும் அமைச்சர்கள் டில்லி செல்ல உள்ளோம். கூட்டணி குறித்து தலைவர் கருணாநிதி இறுதி முடிவு எடுப்பார்,'' என்றார்.

காங்கிரசார் மீண்டும் வருவர் என எதிர்பார்க்கவில்லை : மு.க. அழகிரி பேட்டி

சென்னை : ""காங்கிரஸ் கட்சியினர் மீண்டும் வருவார்கள், கூட்டணி அமைப்பார்கள் என, தி.மு.க., எதிர்பார்க்கவில்லை,'' என்று, மத்திய அமைச்சர் அழகிரி கூறினார்.

மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலக உள்ள மு.க. அழகிரி, ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட தி.மு.க., அமைச்சர்கள் நேற்றிரவு, சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதல்வர் கருணாநிதியை சந்தித்தனர்.

இச்சந்திப்புக்குப் பின், மு.க. அழகிரி நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
கேள்வி: மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க., விலகுவது சந்தோஷமா?
பதில்: உங்களுக்கு (நிருபர்களுக்கு) சந்தோஷம் என்றால், எனக்கும் சந்தோஷம்.

கேள்வி: கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகுவதால், தென்மாவட்டங்களில் கடும் போட்டி இருக்குமே?
பதில்: போட்டி இருந்தால் தான் சுவாரஸ்யம் இருக்கும்.

கேள்வி: தி.மு.க., கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகியது பற்றி?
காங்கிரஸ் விலகவில்லை. நாங்கள் விலகி விட்டோம். காங்கிரஸ் கட்சியினர் மீண்டும் வருவார்கள் என, நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
தி.மு.க., அமைச்சர்கள் இன்று காலை 6.45 மணிக்கு டில்லி புறப்படுகின்றனர்.

முதல்வர் இறுதி முடிவு * அழகிரி தகவல் : ""கூட்டணி குறித்து, தலைவர் கருணாநிதி இறுதி முடிவு எடுப்பார்,'' என, மத்தியமைச்சர் அழகிரி தெரிவித்தார்.திருச்சி மாவட்டம், தா.பேட்டை ஒன்றியம் ஜெம்புநாதபுரம் கிராமத்தில், 310 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, தனியார் உருட்டு உருக்கு ஆலை திறப்பு விழா நேற்று நடந்தது. ஆலையை திறந்து வைத்துவிட்டு புறப்பட்ட, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் அழகிரியிடம் கூட்டணி நிலவரம் குறித்து நிருபர்கள் கேட்டபோது, ""மத்தியில் பொறுப்பு வகிக்கும் அமைச்சர்கள் டில்லி செல்ல உள்ளோம். கூட்டணி குறித்து தலைவர் கருணாநிதி இறுதி முடிவு எடுப்பார்,'' என்றார்.

மதுரை:"சென்னை - எழும்பூரில் இருந்து திருச்செந்தூருக்கு, மதுரை வழியாக வாரம் ஒருமுறை எக்ஸ்பிரஸ் ரயில் சென்று வந்தது. அதை தினமும் இயக்க வேண்டும் என, தென்மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்."அதை ஏற்று, ரயில்வே பட்ஜெட்டில் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் சென்று வரும் என, மத்திய அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அவருக்கு, தென்மாவட்ட மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன்' என, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜிக்கு மு.க.அழகிரி நன்றி

மதுரை:"சென்னை - எழும்பூரில் இருந்து திருச்செந்தூருக்கு, மதுரை வழியாக வாரம் ஒருமுறை எக்ஸ்பிரஸ் ரயில் சென்று வந்தது. அதை தினமும் இயக்க வேண்டும் என, தென்மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்."அதை ஏற்று, ரயில்வே பட்ஜெட்டில் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் சென்று வரும் என, மத்திய அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அவருக்கு, தென்மாவட்ட மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன்' என, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

முக நூல்

Popular Posts