background img

புதிய வரவு

Showing posts with label MDMK. Show all posts
Showing posts with label MDMK. Show all posts
தஞ்சை மாவட்டம் பேராவூரணி தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் நடிகர் அருண்பாண்டியன் போட்டியிடுகிறார். அவருக்கு ஓட்டு கேட்டு பேராவூரணி பெரியார் சிலை அருகே தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார்.


பிரச்சாரத்தின் போது விஜயகாந்த், ‘’இந்த தேர்தலில் என்னை இழுக்க அழகிரி முயற்சித்தார். அவர் முயற்சி பலிக்கவில்லை. மனிதனின் அடிப்படை குணத்தை மாற்ற முடியாது.

விஜயகாந்த் கோபக்காரன்தான். அந்த கோபம் பிள்ளையை படிக்க சொல்லி தந்தை கண்டிப்பது போன்றது. அதை பெரிது படுத்துகிறார்கள். அதுபற்றி நான் கவலைப்படவில்லை.

5 ஆண்டுகளாக நான் கேட்ட எந்த கேள்விக்கும் முதலமைச்சர் கருணாநிதி பதில் அளிக்கவில்லை. துணிவு இருந்தால் என்னுடைய கேள்விக்கு நேரடியாக அவர் பதில் சொல்லட்டும். சமச்சீர் கல்வி என்பது சென்னையில் உள்ள புகழ்பெற்ற பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும்.

கல்வி, கிராமத்து மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும். ஆனால் 5-ம், 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே பாடம் தான் சமச்சீர் கல்வி என்று கருணாநிதி சொல்கிறார்.

கருணாநிதியால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. இலங்கையில் தமிழ் இனத்தை காட்டி கொடுத்து அந்த இனத்தையே அழித்தது காங்கிரஸ். அதற்கு கருணாநிதி துணை போனார்.

கரும்பு தோட்டத்துக்கு யானையையும், கழனி மேட்டுக்கு எருமையையும், கொய்யா தோப்புக்கு குரங்கையும் காவல் வைத்தது போல தி.மு.க.விடம் தமிழ் நாட்டை ஒப்படைத்து விட்டோம். தி.மு.க. ஆட்சியை அகற்ற வாக்காளர்கள் அனைவரும் முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்’’ என்று பேசினார்.

அழகிரி முயற்சி பலிக்கவில்லை : விஜயகாந்த்

தஞ்சை மாவட்டம் பேராவூரணி தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் நடிகர் அருண்பாண்டியன் போட்டியிடுகிறார். அவருக்கு ஓட்டு கேட்டு பேராவூரணி பெரியார் சிலை அருகே தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார்.


பிரச்சாரத்தின் போது விஜயகாந்த், ‘’இந்த தேர்தலில் என்னை இழுக்க அழகிரி முயற்சித்தார். அவர் முயற்சி பலிக்கவில்லை. மனிதனின் அடிப்படை குணத்தை மாற்ற முடியாது.

விஜயகாந்த் கோபக்காரன்தான். அந்த கோபம் பிள்ளையை படிக்க சொல்லி தந்தை கண்டிப்பது போன்றது. அதை பெரிது படுத்துகிறார்கள். அதுபற்றி நான் கவலைப்படவில்லை.

5 ஆண்டுகளாக நான் கேட்ட எந்த கேள்விக்கும் முதலமைச்சர் கருணாநிதி பதில் அளிக்கவில்லை. துணிவு இருந்தால் என்னுடைய கேள்விக்கு நேரடியாக அவர் பதில் சொல்லட்டும். சமச்சீர் கல்வி என்பது சென்னையில் உள்ள புகழ்பெற்ற பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும்.

கல்வி, கிராமத்து மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும். ஆனால் 5-ம், 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே பாடம் தான் சமச்சீர் கல்வி என்று கருணாநிதி சொல்கிறார்.

கருணாநிதியால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. இலங்கையில் தமிழ் இனத்தை காட்டி கொடுத்து அந்த இனத்தையே அழித்தது காங்கிரஸ். அதற்கு கருணாநிதி துணை போனார்.

கரும்பு தோட்டத்துக்கு யானையையும், கழனி மேட்டுக்கு எருமையையும், கொய்யா தோப்புக்கு குரங்கையும் காவல் வைத்தது போல தி.மு.க.விடம் தமிழ் நாட்டை ஒப்படைத்து விட்டோம். தி.மு.க. ஆட்சியை அகற்ற வாக்காளர்கள் அனைவரும் முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்’’ என்று பேசினார்.

சென்னை:"ம.தி.மு.க.,விற்கு களங்கம் ஏற்படுத்தும் செயல்களில், தொண்டர்கள் ஈடுபட்டது கண்டனத்திற்குரியது' என்று, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ வெளியிட்ட அறிக்கை:ம.தி.மு.க., சட்டசபைத் தேர்தல் தொகுதி உடன்பாடு மற்றும் பேச்சுவார்த்தையில், மிகுந்த கண்ணியத்தையும், அமைதியான போக்கையும் கடைபிடித்து வருகிறது. லட்சக்கணக்கான தொண்டர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து, மக்கள் மத்தியில் ம.தி.மு.க.,விற்கு நல்லெண்ணத்தையும், மதிப்பையும் ஏற்படுத்தி உள்ளனர்.இந்நிலையில், தாம்பரம் மற்றும் தேனி மாவட்டத்தில் நான்கு, ஐந்து பேர், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை எரித்துள்ளனர். இது மிகவும் கண்டனத்திற்குரியது. இதுபோன்ற செயல்களில், தொண்டர்கள் இனி ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க.,விற்கு களங்கம் ஏற்படுத்தவேண்டாம்: வைகோ வேண்டுகோள்

சென்னை:"ம.தி.மு.க.,விற்கு களங்கம் ஏற்படுத்தும் செயல்களில், தொண்டர்கள் ஈடுபட்டது கண்டனத்திற்குரியது' என்று, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ வெளியிட்ட அறிக்கை:ம.தி.மு.க., சட்டசபைத் தேர்தல் தொகுதி உடன்பாடு மற்றும் பேச்சுவார்த்தையில், மிகுந்த கண்ணியத்தையும், அமைதியான போக்கையும் கடைபிடித்து வருகிறது. லட்சக்கணக்கான தொண்டர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து, மக்கள் மத்தியில் ம.தி.மு.க.,விற்கு நல்லெண்ணத்தையும், மதிப்பையும் ஏற்படுத்தி உள்ளனர்.இந்நிலையில், தாம்பரம் மற்றும் தேனி மாவட்டத்தில் நான்கு, ஐந்து பேர், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை எரித்துள்ளனர். இது மிகவும் கண்டனத்திற்குரியது. இதுபோன்ற செயல்களில், தொண்டர்கள் இனி ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. கூட்டணியில் கடந்த 2 நாட்களாக தொகுதி பங்கீட்டில் கடும் சிக்கல் நிலவி வந்தது. அ.தி.மு.க. 160 வேட்பாளர்களை அறிவித்ததால் தொகுதி பங்கீடு சிக்கல் முற்றியது. இந்த முட்டுக்கட்டைகளுக்கு தீர்வு காணும் வகையில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் 3-வது அணி அமையலாம் என்ற யூகங்கள் கிளம்பின. ஆனால் இன்று மதியம் அதற்கு முற்றுப்புள்ளி விழுந்தது.

அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் சுமூகமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாக தெரிய வந்தது. ம.தி.மு.க.வுக்கு கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. வுக்கு 16 தொகுதிகளை கொடுக்க அ.தி.மு.க. சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மேல்சபை எம்.பி. பதவி ஒன்றும் தருவதாக அ.தி.மு.க. தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இடதுசாரிகளுடனும் அ.தி.மு.க.வுக்கு சமரசம் ஏற்பட்டு உள்ளது. கம்யூனிஸ்டு கட்சிகள் விரும்பும் தொகுதிகளை கொடுக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தே.மு.தி.க. சில குறிப்பிட்ட தொகுதிகளை வலியுறுத்தி கேட்டு வருகிறது. அது தொடர்பாக இன்று பிற்பகல் வரை பேச்சு வார்த்தை நீடித்தது. இன்று மாலை அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி உடன்பாடு முழுமையாக முடிவு செய்யப்பட்டு ஜெயலலிதா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று தெரிகிறது.

ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க. கூட்டணி இன்று உடன்பாடு: ம.தி.மு.க.வுக்கு 16 தொகுதிகள்

அ.தி.மு.க. கூட்டணியில் கடந்த 2 நாட்களாக தொகுதி பங்கீட்டில் கடும் சிக்கல் நிலவி வந்தது. அ.தி.மு.க. 160 வேட்பாளர்களை அறிவித்ததால் தொகுதி பங்கீடு சிக்கல் முற்றியது. இந்த முட்டுக்கட்டைகளுக்கு தீர்வு காணும் வகையில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் 3-வது அணி அமையலாம் என்ற யூகங்கள் கிளம்பின. ஆனால் இன்று மதியம் அதற்கு முற்றுப்புள்ளி விழுந்தது.

அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் சுமூகமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாக தெரிய வந்தது. ம.தி.மு.க.வுக்கு கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. வுக்கு 16 தொகுதிகளை கொடுக்க அ.தி.மு.க. சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மேல்சபை எம்.பி. பதவி ஒன்றும் தருவதாக அ.தி.மு.க. தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இடதுசாரிகளுடனும் அ.தி.மு.க.வுக்கு சமரசம் ஏற்பட்டு உள்ளது. கம்யூனிஸ்டு கட்சிகள் விரும்பும் தொகுதிகளை கொடுக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தே.மு.தி.க. சில குறிப்பிட்ட தொகுதிகளை வலியுறுத்தி கேட்டு வருகிறது. அது தொடர்பாக இன்று பிற்பகல் வரை பேச்சு வார்த்தை நீடித்தது. இன்று மாலை அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி உடன்பாடு முழுமையாக முடிவு செய்யப்பட்டு ஜெயலலிதா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று தெரிகிறது.

ம.தி.மு.க., - மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்குவதில், சுமுக முடிவு எட்டப்படாததால், அ.தி.மு.க., கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2006 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் 35 இடங்களில் ம.தி.மு.க., போட்டியிட்டு ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றது. ம.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன் ஆகி யோர் தி.மு.க.,விற்கு தாவினர். திருமங் கலம் எம்.எல்.ஏ.,வாக இருந்த வீரஇளவரசன் மரணம் அடைந்தார். தற்போது மூன்று எம்.எல்.ஏ.,க்கள் மட்டும் ம.தி.மு.க.,வில் உள்ளனர். கடந்த 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் நான்கு இடங்களைப் பெற்ற ம.தி.மு.க., ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. கடந்த ஐந்தாண்டுகளாக பல்வேறு பிரச்னைகளில், அ.தி.மு.க., எடுக்கும் முடிவையே ம.தி.மு.க., பின்பற்றியது. ஆளுங்கட்சியை எதிர்ப்பதிலும், தோழமை கட்சியை ஆதரிப்பதிலும் ம.தி.மு.க., உறுதியாக இருந்தது. அத்தகைய கட்சிக்கு தற்போது தொகுதி பங்கீடு விவகாரத்தில் புயல் வீச ஆரம்பித்துள்ளது.

அ.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினரிடம் முதல் கட்டம், இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையில் 35 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, ம.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினர் கேட்டனர். இதற்கு எந்த பதிலும் அ.தி.மு.க., தரப்பில் தரப்படவில்லை. மூன்றாவது கட்டமாக 25 தொகுதிகளாவது கிடைக்கும் என, ம.தி.மு.க.,வினர் எதிர்பார்த்து உடன்பாடு ஒப்பந்தத்திற்கு அழைப்பார்களா என காத்திருந்தனர். ஆனால், 10 முதல் 12 தொகுதிகளே ஒதுக்க முடியும் என, அ.தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் வைகோ அதிர்ச்சி அடைந்தார். குறைந்த தொகுதி எண்ணிக்கை முடிவை அவரால் நம்ப முடியவில்லை. தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய குழுவின் தலைவரும், திருப்பூர் மாவட்டச் செயலருமான ஆர்.டி.மாரியப்பன், தன் சொந்த ஊருக்கு விரக்தியோடு புறப்பட்டுச் சென்றார். குறைந்த தொகுதிகளை பெற, ம.தி.மு.க., தயாராக இல்லை. குறைந்தபட்சம் 21 தொகுதிகளாவது ஒதுக்கீடு செய்தால் தான் ஒப்பந்தத்தில் வைகோ கையெழுத்திடுவார் என்று ம.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுவரை பொறுமையாக இருக்கவும், அ.தி.மு.க., தலைமையிடமிருந்து நல்ல முடிவுக்காக வைகோ காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கட்சி 18 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டுள்ளது. ஆனால், 11 தொகுதிகள் மட்டுமே தர அ.தி.மு.க., தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூ.,வும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு இணையாக 18 தொகுதிகள் வேண்டும் என கேட்டுள்ளது. ஆனால், இந்திய கம்யூ., கட்சிக்கு ஒன்பது தொகுதிகள் மட்டுமே தர முடியும் என, அ.தி.மு.க., தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூ., கட்சிகள் ஒரே தொகுதிகளைக் கேட்பதால், அந்தச் சிக்கலும் ஏற்பட்டுள்ளது. எனவே, இரு கம்யூ.,கட்சிகளும் தங்களுக்குள் பேசி, ஒரு சுமுக முடிவுடன் வரும்படி அ.தி.மு.க., தரப்பில் கூறப்பட்டுள்ளது. இறுதியில், மார்க்சிஸ்ட் கட்சி 14 தொகுதிகளுக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 11 தொகுதிகளுக்கும் இறங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த எண்ணிக்கையை மேலும் குறைப்பது குறித்து பேச்சு நடப்பதால் அ.தி.மு.க., கூட்டணியில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது முடிவு அ.தி.மு.க., கையில் உள்ளதாக கம்யூனிஸ்டுகள் தெரிவிக்கின்றனர். அ.தி.மு.க.,வின் முடிவைப் பொறுத்து, எந்த நேரமும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு, கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.

அ.தி.மு.க., கூட்டணியை இறுதி செய்வதில் இழுபறி: ம.தி.மு.க., - கம்யூ., கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சு

ம.தி.மு.க., - மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்குவதில், சுமுக முடிவு எட்டப்படாததால், அ.தி.மு.க., கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2006 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் 35 இடங்களில் ம.தி.மு.க., போட்டியிட்டு ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றது. ம.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன் ஆகி யோர் தி.மு.க.,விற்கு தாவினர். திருமங் கலம் எம்.எல்.ஏ.,வாக இருந்த வீரஇளவரசன் மரணம் அடைந்தார். தற்போது மூன்று எம்.எல்.ஏ.,க்கள் மட்டும் ம.தி.மு.க.,வில் உள்ளனர். கடந்த 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் நான்கு இடங்களைப் பெற்ற ம.தி.மு.க., ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. கடந்த ஐந்தாண்டுகளாக பல்வேறு பிரச்னைகளில், அ.தி.மு.க., எடுக்கும் முடிவையே ம.தி.மு.க., பின்பற்றியது. ஆளுங்கட்சியை எதிர்ப்பதிலும், தோழமை கட்சியை ஆதரிப்பதிலும் ம.தி.மு.க., உறுதியாக இருந்தது. அத்தகைய கட்சிக்கு தற்போது தொகுதி பங்கீடு விவகாரத்தில் புயல் வீச ஆரம்பித்துள்ளது.

அ.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினரிடம் முதல் கட்டம், இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையில் 35 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, ம.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினர் கேட்டனர். இதற்கு எந்த பதிலும் அ.தி.மு.க., தரப்பில் தரப்படவில்லை. மூன்றாவது கட்டமாக 25 தொகுதிகளாவது கிடைக்கும் என, ம.தி.மு.க.,வினர் எதிர்பார்த்து உடன்பாடு ஒப்பந்தத்திற்கு அழைப்பார்களா என காத்திருந்தனர். ஆனால், 10 முதல் 12 தொகுதிகளே ஒதுக்க முடியும் என, அ.தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் வைகோ அதிர்ச்சி அடைந்தார். குறைந்த தொகுதி எண்ணிக்கை முடிவை அவரால் நம்ப முடியவில்லை. தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய குழுவின் தலைவரும், திருப்பூர் மாவட்டச் செயலருமான ஆர்.டி.மாரியப்பன், தன் சொந்த ஊருக்கு விரக்தியோடு புறப்பட்டுச் சென்றார். குறைந்த தொகுதிகளை பெற, ம.தி.மு.க., தயாராக இல்லை. குறைந்தபட்சம் 21 தொகுதிகளாவது ஒதுக்கீடு செய்தால் தான் ஒப்பந்தத்தில் வைகோ கையெழுத்திடுவார் என்று ம.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுவரை பொறுமையாக இருக்கவும், அ.தி.மு.க., தலைமையிடமிருந்து நல்ல முடிவுக்காக வைகோ காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கட்சி 18 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டுள்ளது. ஆனால், 11 தொகுதிகள் மட்டுமே தர அ.தி.மு.க., தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூ.,வும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு இணையாக 18 தொகுதிகள் வேண்டும் என கேட்டுள்ளது. ஆனால், இந்திய கம்யூ., கட்சிக்கு ஒன்பது தொகுதிகள் மட்டுமே தர முடியும் என, அ.தி.மு.க., தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூ., கட்சிகள் ஒரே தொகுதிகளைக் கேட்பதால், அந்தச் சிக்கலும் ஏற்பட்டுள்ளது. எனவே, இரு கம்யூ.,கட்சிகளும் தங்களுக்குள் பேசி, ஒரு சுமுக முடிவுடன் வரும்படி அ.தி.மு.க., தரப்பில் கூறப்பட்டுள்ளது. இறுதியில், மார்க்சிஸ்ட் கட்சி 14 தொகுதிகளுக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 11 தொகுதிகளுக்கும் இறங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த எண்ணிக்கையை மேலும் குறைப்பது குறித்து பேச்சு நடப்பதால் அ.தி.மு.க., கூட்டணியில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது முடிவு அ.தி.மு.க., கையில் உள்ளதாக கம்யூனிஸ்டுகள் தெரிவிக்கின்றனர். அ.தி.மு.க.,வின் முடிவைப் பொறுத்து, எந்த நேரமும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு, கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.

சென்னை: சட்டசபையில் இருந்து அதிமுக, மதிமுகவினர் இன்று வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் செ.மா. வேலுச்சாமி பேச தொடங்கும்போது, சபாநாயகர் குறுக்கீட்டு, உங்களுக்கு பேச ஒதுக்கப்பட்ட நேரம் 25 நிமிடம் என்றார். இதை தொடர்ந்து நடந்த விவாதம்:

செ.மா. வேலுச்சாமி: இந்த ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது. நாடு முழுவதும் போலிகள் நடமாட்டம் அதிகரித்து விட்டது. போலி டீத்தூள், போலி ரேசன் கார்டு, போலி மருந்து, போலி போலீஸ் என உள்ளது. விலைவாசி உயர்வு விண்ணை முட்டிக்கொண்டுள்ளது. வெங்காய விலை உங்கள் ஆட்சிக்கு வேட்டு வைக்கப்போகிறது.

உணவுத்துறை அமைச்சர் எ.வ. வேலு: வெங்காயத்தை வைத்து ஆட்சி மாற்றம் வரும் என நினைக்கிறீர்கள். வெங்காய விலை இப்போது சரிந்து விட்டது. கிலோ 10 ரூபாய்க்கு நான் வாங்கித் தரவா?

செ.மா. வேலுச்சாமி: நீங்கள் என்னதான் திட்டம் தீட்டினாலும் புரட்சித் தலைவியின் திட்டங்களை மிஞ்ச முடியாது. இலவச காங்கிரீட் வீடு வழங்கும் திட்டத்திற்கு ரூ.75,000 கொடுக்கிறீர்கள். ஆனால் அந்த வீட்டை கட்டி முடிக்க ரூ.2 லட்சம் ஆகிறது. எனவே இது மக்களை கடனாளியாக்கும் திட்டமாகிவிட்டது.

அமைச்சர் பொன்முடி: 2001ல் அதிமுக ஆட்சி கவர்னர் உரையில் ஒரு குடும்பத்திற்கு ஒரு வீடு என்ற திட்டத்தை அறிவித்தீர்கள். இதுவரை எத்தனை வீடு கட்டிக் கொடுத்தீர்கள். விவரம் கூறத் தயாரா?.

இதற்கு பதிலளிக்காத செ.மா வேலுச்சாமி, நான் அடுத்த சப்ஜெக்ட்டுக்கு செல்கிறேன் என்று சொல்லி விட்டு தி.மு.க. ஆட்சியை விமர்சித்துப் பேச ஆரம்பித்தார்.

அவர் பேசி கொண்டிருக்கும் போதே 25 நிமிடம் ஆகிவிட்டதால் சபாநாயகர் அடுத்து தி.மு.க. உறுப்பினரான அப்பாவுவை பேச அழைத்தார். இதையடுத்து அதிமுக எம்எல்ஏ பன்னீர் செல்வம் எழுந்து, செ.மா. வேலுச்சாமி தொடர்ந்து பேச அனுமதிக்க வேண்டு்ம் என்றார்.

ஆனால் அவருக்கு ஒதுக்கப்பட்ட 25 நிமிட நேரம் முடிந்து விட்டதாக சபாநாயகர் கூறிவிட்டதையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களைத்தொடர்ந்து ம.தி.மு.க. உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

வெளியே வந்த அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறுகையில், சட்டமன்ற ஆய்வுக்குழு வில் எடுக்கப்பட்ட முடிவுக்கு மாறாக 35 நிமிடத்திற்கு பதில் 25 நிமிடமே பேச அனுமதி தந்துள்ளார்கள். மக்கள் விரோத செயல்களை சுட்டிக்காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தால் அ.தி.மு.கவுக்கு பேச வேண்டிய நேரத்தை குறைக்கிறார்கள். இதை கண்டித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம் என்றார்.

இது குறித்து அதிமுக எம்எல்ஏ மதுசூதனன் கூறுகையில், அதிமுக உறுப்பினர்கள் சட்டசபையில் பேச 35 நிமிடங்கள் அளிக்கப்படும் என அலுவல் ஆய்வுக் குழுவில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், 25 நிமிடங்கள் மட்டுமே சபாநாயகர் வழங்குகிறார். தொடர்ந்து 2வது நாளாக சபாநாயகர் இதே மாதிரி செயல்படுவதால் மக்களுக்கு நன்மை பயக்கும் கருத்தக்களை அவையில் முன் வைக்க முடியவில்லை. இது ஜனநாயக படுகொலை. இதனால் வெளிநடப்பு செய்தோம் என்றார்.

'நான் அடுத்த சப்ஜெக்ட்டுக்கு செல்கிறேன்'..அதிமுக-மதிமுக வெளிநடப்பு

சென்னை: சட்டசபையில் இருந்து அதிமுக, மதிமுகவினர் இன்று வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் செ.மா. வேலுச்சாமி பேச தொடங்கும்போது, சபாநாயகர் குறுக்கீட்டு, உங்களுக்கு பேச ஒதுக்கப்பட்ட நேரம் 25 நிமிடம் என்றார். இதை தொடர்ந்து நடந்த விவாதம்:

செ.மா. வேலுச்சாமி: இந்த ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது. நாடு முழுவதும் போலிகள் நடமாட்டம் அதிகரித்து விட்டது. போலி டீத்தூள், போலி ரேசன் கார்டு, போலி மருந்து, போலி போலீஸ் என உள்ளது. விலைவாசி உயர்வு விண்ணை முட்டிக்கொண்டுள்ளது. வெங்காய விலை உங்கள் ஆட்சிக்கு வேட்டு வைக்கப்போகிறது.

உணவுத்துறை அமைச்சர் எ.வ. வேலு: வெங்காயத்தை வைத்து ஆட்சி மாற்றம் வரும் என நினைக்கிறீர்கள். வெங்காய விலை இப்போது சரிந்து விட்டது. கிலோ 10 ரூபாய்க்கு நான் வாங்கித் தரவா?

செ.மா. வேலுச்சாமி: நீங்கள் என்னதான் திட்டம் தீட்டினாலும் புரட்சித் தலைவியின் திட்டங்களை மிஞ்ச முடியாது. இலவச காங்கிரீட் வீடு வழங்கும் திட்டத்திற்கு ரூ.75,000 கொடுக்கிறீர்கள். ஆனால் அந்த வீட்டை கட்டி முடிக்க ரூ.2 லட்சம் ஆகிறது. எனவே இது மக்களை கடனாளியாக்கும் திட்டமாகிவிட்டது.

அமைச்சர் பொன்முடி: 2001ல் அதிமுக ஆட்சி கவர்னர் உரையில் ஒரு குடும்பத்திற்கு ஒரு வீடு என்ற திட்டத்தை அறிவித்தீர்கள். இதுவரை எத்தனை வீடு கட்டிக் கொடுத்தீர்கள். விவரம் கூறத் தயாரா?.

இதற்கு பதிலளிக்காத செ.மா வேலுச்சாமி, நான் அடுத்த சப்ஜெக்ட்டுக்கு செல்கிறேன் என்று சொல்லி விட்டு தி.மு.க. ஆட்சியை விமர்சித்துப் பேச ஆரம்பித்தார்.

அவர் பேசி கொண்டிருக்கும் போதே 25 நிமிடம் ஆகிவிட்டதால் சபாநாயகர் அடுத்து தி.மு.க. உறுப்பினரான அப்பாவுவை பேச அழைத்தார். இதையடுத்து அதிமுக எம்எல்ஏ பன்னீர் செல்வம் எழுந்து, செ.மா. வேலுச்சாமி தொடர்ந்து பேச அனுமதிக்க வேண்டு்ம் என்றார்.

ஆனால் அவருக்கு ஒதுக்கப்பட்ட 25 நிமிட நேரம் முடிந்து விட்டதாக சபாநாயகர் கூறிவிட்டதையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களைத்தொடர்ந்து ம.தி.மு.க. உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

வெளியே வந்த அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறுகையில், சட்டமன்ற ஆய்வுக்குழு வில் எடுக்கப்பட்ட முடிவுக்கு மாறாக 35 நிமிடத்திற்கு பதில் 25 நிமிடமே பேச அனுமதி தந்துள்ளார்கள். மக்கள் விரோத செயல்களை சுட்டிக்காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தால் அ.தி.மு.கவுக்கு பேச வேண்டிய நேரத்தை குறைக்கிறார்கள். இதை கண்டித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம் என்றார்.

இது குறித்து அதிமுக எம்எல்ஏ மதுசூதனன் கூறுகையில், அதிமுக உறுப்பினர்கள் சட்டசபையில் பேச 35 நிமிடங்கள் அளிக்கப்படும் என அலுவல் ஆய்வுக் குழுவில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், 25 நிமிடங்கள் மட்டுமே சபாநாயகர் வழங்குகிறார். தொடர்ந்து 2வது நாளாக சபாநாயகர் இதே மாதிரி செயல்படுவதால் மக்களுக்கு நன்மை பயக்கும் கருத்தக்களை அவையில் முன் வைக்க முடியவில்லை. இது ஜனநாயக படுகொலை. இதனால் வெளிநடப்பு செய்தோம் என்றார்.

சென்னை அஇஅ‌திமுகவுட‌ன் தொகு‌தி ப‌ங்‌கீடு கு‌றி‌த்து வரு‌ம் 4ஆ‌ம் தே‌தி ம‌திமுக பே‌ச்சுவா‌ர்‌த்தை நட‌த்த உ‌ள்ளதாக அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொது‌‌ச் செய‌ல‌ர் வைகோ தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

சென்னையில் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சியபோது அவ‌ர், தொகுதி பங்கீடு குறித்து அ.இ.அ.தி.மு.க.வுடன் பேச்சு நடத்த ம.தி.மு.க.வில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

அந்த குழுவில் திருப்பூர் மாவட்ட செயலர் ஆர்.டி.மாரியப்பன், காஞ்‌சிபுரம் மாவட்ட செயலர் பாலவாக்கம் சோமு, முன்னாள் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் குருநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த குழு வ‌ரு‌ம் 4ஆ‌ம் தேதி முதல் சுற்று பேச்சுவார்த்தை நடத்துகிறது. ம.தி.மு.க. பொதுக்குழு வருகிற 17ஆ‌ம் தேதி அண்ணாநகரில் உள்ள விஜயஸ்ரீ மண்டபத்தில் நடைபெறும் என்று வைகோ கூ‌றினா‌ர்.

தொகுதி பங்கீடு: அ.இ.அ.தி.மு.க- ம.தி.மு.க. 4ஆ‌ம் தேதி பேச்சு

சென்னை அஇஅ‌திமுகவுட‌ன் தொகு‌தி ப‌ங்‌கீடு கு‌றி‌த்து வரு‌ம் 4ஆ‌ம் தே‌தி ம‌திமுக பே‌ச்சுவா‌ர்‌த்தை நட‌த்த உ‌ள்ளதாக அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொது‌‌ச் செய‌ல‌ர் வைகோ தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

சென்னையில் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சியபோது அவ‌ர், தொகுதி பங்கீடு குறித்து அ.இ.அ.தி.மு.க.வுடன் பேச்சு நடத்த ம.தி.மு.க.வில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

அந்த குழுவில் திருப்பூர் மாவட்ட செயலர் ஆர்.டி.மாரியப்பன், காஞ்‌சிபுரம் மாவட்ட செயலர் பாலவாக்கம் சோமு, முன்னாள் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் குருநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த குழு வ‌ரு‌ம் 4ஆ‌ம் தேதி முதல் சுற்று பேச்சுவார்த்தை நடத்துகிறது. ம.தி.மு.க. பொதுக்குழு வருகிற 17ஆ‌ம் தேதி அண்ணாநகரில் உள்ள விஜயஸ்ரீ மண்டபத்தில் நடைபெறும் என்று வைகோ கூ‌றினா‌ர்.



சென்னை: தமிழ் ஈழப் பகைவர்களின் கைக்கூலியாகச் செயல்பட்ட ஈஎன்டிஎல்எஃப் இயக்கத்தைச் சேர்ந்த சிலர், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து டெல்லிக்கு நடைப்பயணம் போகவும், பொய்களைப் பரப்புரை செய்யவும் திட்டமிட்டுள்ளதோடு, டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்து, ஈழத் தமிழர் என்ற போர்வையில் தமிழ் ஈழ விடுதலைக்கு உண்மையில் போராடுவோரைக் கொச்சைப்படுத்தவும், தமிழ் இனத்துக்கு இழிவைத் தரும் காரியங்களில் ஈடுபடவும் முற்பட்டு உள்ளனர் என்றும்,


தாய்த் தமிழக தமிழர்களும், உலகம் முழுவதும் உள்ள புலம் பெயர்ந்த தமிழ் ஈழ மக்களும், துரோகிகளை அடையாளம் கண்டுகொள்ளவும், மோசடி முயற்சிகளை முறியடிக்கவும் விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் ஈழ மக்களின் துயரமும் தியாகமும் நிறைந்த கண்ணீர் வரலாற்றில், காக்கைவன்னியன்களும், கருணாக்களும், தொடர்ந்து துரோகம் இழைப்பவர்களும் தமிழ் ஈழ விடுதலை விரும்பிகளால் அடையாளம் காணப்பட வேண்டும்.


சோனியா காந்தி இயக்கும் இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆயுதங்களும் ஆயிரமாயிரம் கோடிப் பணமும் கொடுத்து, இந்தியாவின் முப்படைத் தளபதிகளையும் இலங்கைக்கு அனுப்பி, தமிழர் அழிப்பு யுத்தத்தை இயக்கியது மன்னிக்க முடியாத கொடிய துரோகம்.


லண்டன் சேனல் 4 தொலைக்காட்சி, 2010 டிசம்பர் 30ல் வெளியிட்ட காணொளிக் காட்சிகள், தமிழர் நெஞ்சில் நெருப்பைப் போட்டு துடிக்கச் செய்கின்றன. பிரித்தானியத் தமிழர்கள் கொட்டும் பனியில் பல்லாயிரக்கணக்கில் திரண்டு, ராஜ பட்சவை லண்டனை விட்டு ஓடச் செய்தனர். உலகின் மனச்சாட்சி இப்பொழுதுதான் தமிழர் துயரத்தை உணரத் தொடங்கி உள்ளது.


இச்சூழலில் இந்தியாவின் மத்தியில் ஆட்சிக்குத் தலைமை தாங்கும் காங்கிரசின் தலைமை ஈழத் தமிழர்க்குச் செய்த துரோகத்தை மூடி மறைக்கவும், உண்மைகளைப் புதைக்குழிக்கு அனுப்பவும், பொய்ப் பிரசாரத்தை அவிழ்த்து விடவும், இந்திய உளவுத்துறையின் ஏற்பாட்டில் ஒரு கூட்டம் ஒரு திட்டத்தை வகுத்துள்ளது.


தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக எண்ணற்ற துரோகங்களைச் செய்து, தமிழ் ஈழப் பகைவர்களின் கைக்கூலியாகச் செயல்பட்ட ஈஎன்டிஎல்எஃப் இயக்கத்தைச் சேர்ந்த சிலர், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து டெல்லிக்கு நடைப்பயணம் போகவும், பொய்களைப் பரப்புரை செய்யவும் திட்டமிட்டுள்ளதோடு,


டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்து, ஈழத் தமிழர் என்ற போர்வையில் தமிழ் ஈழ விடுதலைக்கு உண்மையில் போராடுவோரைக் கொச்சைப்படுத்தவும், தமிழ் இனத்துக்கு இழிவைத் தரும் காரியங்களில் ஈடுபடவும் முற்பட்டு உள்ளனர்.


தாய்த் தமிழகத்துத் தமிழர்களும், உலகெங்கும் உள்ள புலம் பெயர்ந்த தமிழ் ஈழ மக்களும் துரோகிகளை அடையாளம் கண்டு கொள்ளவும், இந்த மோசடி முயற்சிகளை ஆரம்பத்திலேயே முறியடிக்கவும் மிக்க விழிப்பு உணர்வுடன் செயலாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் வைகோ.

துரோகிகளை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்-வைகோ



சென்னை: தமிழ் ஈழப் பகைவர்களின் கைக்கூலியாகச் செயல்பட்ட ஈஎன்டிஎல்எஃப் இயக்கத்தைச் சேர்ந்த சிலர், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து டெல்லிக்கு நடைப்பயணம் போகவும், பொய்களைப் பரப்புரை செய்யவும் திட்டமிட்டுள்ளதோடு, டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்து, ஈழத் தமிழர் என்ற போர்வையில் தமிழ் ஈழ விடுதலைக்கு உண்மையில் போராடுவோரைக் கொச்சைப்படுத்தவும், தமிழ் இனத்துக்கு இழிவைத் தரும் காரியங்களில் ஈடுபடவும் முற்பட்டு உள்ளனர் என்றும்,


தாய்த் தமிழக தமிழர்களும், உலகம் முழுவதும் உள்ள புலம் பெயர்ந்த தமிழ் ஈழ மக்களும், துரோகிகளை அடையாளம் கண்டுகொள்ளவும், மோசடி முயற்சிகளை முறியடிக்கவும் விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் ஈழ மக்களின் துயரமும் தியாகமும் நிறைந்த கண்ணீர் வரலாற்றில், காக்கைவன்னியன்களும், கருணாக்களும், தொடர்ந்து துரோகம் இழைப்பவர்களும் தமிழ் ஈழ விடுதலை விரும்பிகளால் அடையாளம் காணப்பட வேண்டும்.


சோனியா காந்தி இயக்கும் இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆயுதங்களும் ஆயிரமாயிரம் கோடிப் பணமும் கொடுத்து, இந்தியாவின் முப்படைத் தளபதிகளையும் இலங்கைக்கு அனுப்பி, தமிழர் அழிப்பு யுத்தத்தை இயக்கியது மன்னிக்க முடியாத கொடிய துரோகம்.


லண்டன் சேனல் 4 தொலைக்காட்சி, 2010 டிசம்பர் 30ல் வெளியிட்ட காணொளிக் காட்சிகள், தமிழர் நெஞ்சில் நெருப்பைப் போட்டு துடிக்கச் செய்கின்றன. பிரித்தானியத் தமிழர்கள் கொட்டும் பனியில் பல்லாயிரக்கணக்கில் திரண்டு, ராஜ பட்சவை லண்டனை விட்டு ஓடச் செய்தனர். உலகின் மனச்சாட்சி இப்பொழுதுதான் தமிழர் துயரத்தை உணரத் தொடங்கி உள்ளது.


இச்சூழலில் இந்தியாவின் மத்தியில் ஆட்சிக்குத் தலைமை தாங்கும் காங்கிரசின் தலைமை ஈழத் தமிழர்க்குச் செய்த துரோகத்தை மூடி மறைக்கவும், உண்மைகளைப் புதைக்குழிக்கு அனுப்பவும், பொய்ப் பிரசாரத்தை அவிழ்த்து விடவும், இந்திய உளவுத்துறையின் ஏற்பாட்டில் ஒரு கூட்டம் ஒரு திட்டத்தை வகுத்துள்ளது.


தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக எண்ணற்ற துரோகங்களைச் செய்து, தமிழ் ஈழப் பகைவர்களின் கைக்கூலியாகச் செயல்பட்ட ஈஎன்டிஎல்எஃப் இயக்கத்தைச் சேர்ந்த சிலர், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து டெல்லிக்கு நடைப்பயணம் போகவும், பொய்களைப் பரப்புரை செய்யவும் திட்டமிட்டுள்ளதோடு,


டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்து, ஈழத் தமிழர் என்ற போர்வையில் தமிழ் ஈழ விடுதலைக்கு உண்மையில் போராடுவோரைக் கொச்சைப்படுத்தவும், தமிழ் இனத்துக்கு இழிவைத் தரும் காரியங்களில் ஈடுபடவும் முற்பட்டு உள்ளனர்.


தாய்த் தமிழகத்துத் தமிழர்களும், உலகெங்கும் உள்ள புலம் பெயர்ந்த தமிழ் ஈழ மக்களும் துரோகிகளை அடையாளம் கண்டு கொள்ளவும், இந்த மோசடி முயற்சிகளை ஆரம்பத்திலேயே முறியடிக்கவும் மிக்க விழிப்பு உணர்வுடன் செயலாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் வைகோ.

முக நூல்

Popular Posts