background img

புதிய வரவு

Showing posts with label MK Stalin. Show all posts
Showing posts with label MK Stalin. Show all posts

Karunanidhi

சென்னை: அழகிரி, ஸ்டாலின் இடையிலான மோதலை திசை திருப்பவே இலங்கையில் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் கூற ஆரம்பித்துள்ளதாக “தி டெலிகிராப்” ஆங்கில நாளேடு கூறியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திமுக மீதான கறையைப் போக்கவும், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி தரவுமே இலங்கை விவகாரத்தை கருணாநிதி கையில் எடுத்துள்ளதாக காங்கிரஸ் கருதுகிறது.

ஆனால், அழகிரி- ஸ்டாலின் இடையிலான பிரச்சனையை திசை திருப்புவதற்காக மேற்கொள்ளப்படும் உத்தி தான் இது என்று “தி டெலிகிராப்” தெரிவித்துள்ளது.

இலங்கையில் தமிழீழம் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக 1980ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட தமிழீழ ஆதரவாளர்களின் அமைப்பான டெசோ அமைப்பின் கூட்டம் இன்று சென்னையில் கருணாநிதியின் தலைமையில் நடைபெற உள்ளது. இந் நிலையில் டெலிகிராப் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.

திமுகவின் இந்த முயற்சி இந்தியத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் டெலிகிராப் கூறியுள்ளது.

கருணாநிதி வித்தை காட்டுகிறார்-பழ.நெடுமாறன்:

இந் நிலையில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கூறியிருப்பதாவது:

இலங்கையில் உள்ள தமிழர்கள் கடந்த 35 ஆண்டுகளாக தமிழ் ஈழத்துக்கு ஆதரவளித்து வருகிறார்கள். 1977 மற்றும் 1997-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களே சாட்சி.

வெளிநாடுகளில் அகதிகளாக இருக்கும் தமிழர்களை மீண்டும் தாயகத்தில் குடியமர்த்திவிட்டு சுதந்திரமான முறையில் ஐ.நா. பார்வையாளர்கள் கண்காணிப்பில் தமிழ் ஈழத்துக்காக மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போதுதான் மக்களின் உண்மையான உணர்வுகள் வெளிப்படும்.

1983ல் கருணாநிதி, வீரமணி மற்றும் நானும் சேர்ந்துதான் டெசோ அமைப்பை உருவாக்கினோம். ஆனால் எங்கள் யாரிடமும் கேட்காமல் டெசோ இனி இயங்காது என்று கருணாநிதி அறிவித்தார். இப்போது யாரிடமும் கேட்காமல் டெசோ உருவாக்கப்படும் என்கிறார்.

2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதை தடுக்க தவறிய கருணாநிதி மீது உலக தமிழர்கள் கோபத்தில் இருக்கிறார்கள். அதை மாற்ற செம்மொழி மாநாடு முதல் டெசோ வரை அவருக்கு தெரிந்த வித்தைகளை செய்து பார்க்கிறார். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக கருணாநிதி விரும்புகிறார். அதனால் தமிழர் ஈழ கொள்கையை மீண்டும் கையில் எடுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

தமிழ் ஈழ விவகாரத்தை மீண்டும் கையில் எடுக்கும் கருணாநிதி: காங். கூட்டணியிலிருந்து விலக திட்டம்


Karunanidhi

சென்னை: அழகிரி, ஸ்டாலின் இடையிலான மோதலை திசை திருப்பவே இலங்கையில் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் கூற ஆரம்பித்துள்ளதாக “தி டெலிகிராப்” ஆங்கில நாளேடு கூறியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திமுக மீதான கறையைப் போக்கவும், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி தரவுமே இலங்கை விவகாரத்தை கருணாநிதி கையில் எடுத்துள்ளதாக காங்கிரஸ் கருதுகிறது.

ஆனால், அழகிரி- ஸ்டாலின் இடையிலான பிரச்சனையை திசை திருப்புவதற்காக மேற்கொள்ளப்படும் உத்தி தான் இது என்று “தி டெலிகிராப்” தெரிவித்துள்ளது.

இலங்கையில் தமிழீழம் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக 1980ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட தமிழீழ ஆதரவாளர்களின் அமைப்பான டெசோ அமைப்பின் கூட்டம் இன்று சென்னையில் கருணாநிதியின் தலைமையில் நடைபெற உள்ளது. இந் நிலையில் டெலிகிராப் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.

திமுகவின் இந்த முயற்சி இந்தியத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் டெலிகிராப் கூறியுள்ளது.

கருணாநிதி வித்தை காட்டுகிறார்-பழ.நெடுமாறன்:

இந் நிலையில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கூறியிருப்பதாவது:

இலங்கையில் உள்ள தமிழர்கள் கடந்த 35 ஆண்டுகளாக தமிழ் ஈழத்துக்கு ஆதரவளித்து வருகிறார்கள். 1977 மற்றும் 1997-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களே சாட்சி.

வெளிநாடுகளில் அகதிகளாக இருக்கும் தமிழர்களை மீண்டும் தாயகத்தில் குடியமர்த்திவிட்டு சுதந்திரமான முறையில் ஐ.நா. பார்வையாளர்கள் கண்காணிப்பில் தமிழ் ஈழத்துக்காக மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போதுதான் மக்களின் உண்மையான உணர்வுகள் வெளிப்படும்.

1983ல் கருணாநிதி, வீரமணி மற்றும் நானும் சேர்ந்துதான் டெசோ அமைப்பை உருவாக்கினோம். ஆனால் எங்கள் யாரிடமும் கேட்காமல் டெசோ இனி இயங்காது என்று கருணாநிதி அறிவித்தார். இப்போது யாரிடமும் கேட்காமல் டெசோ உருவாக்கப்படும் என்கிறார்.

2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதை தடுக்க தவறிய கருணாநிதி மீது உலக தமிழர்கள் கோபத்தில் இருக்கிறார்கள். அதை மாற்ற செம்மொழி மாநாடு முதல் டெசோ வரை அவருக்கு தெரிந்த வித்தைகளை செய்து பார்க்கிறார். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக கருணாநிதி விரும்புகிறார். அதனால் தமிழர் ஈழ கொள்கையை மீண்டும் கையில் எடுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

சென்னை: ஊர் கூடி தேர் இழப்பதுபோன்று ஜனநாயக தேரை இழுத்துச் செல்ல திமுக உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்று சட்டசபை திமுக தலைவர் மு.க.சஸ்டாலின் கூறினார்.

சபாநாயகர் ஜெயக்குமாரைப் பாராட்டி இன்று சட்டசபையில் ஸ்டாலின் பேசுகையில்,

சட்டசபையின் தலைவராக ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்ட சபாநாயகருக்கும், துணை சபாநாயகருக்கும் எனது வாழ்த்தையும், வரவேற்பையும் தி.மு.க. சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் ஆளும் கட்சி வரிசையிலும், எதிர்க்கட்சி வரிசையிலும் இருந்து இருக்கிறீர்கள். சட்டம் படித்து இருக்கிறீர்கள்.

எனவே ஆளும் கட்சியின் நோக்கத்தையும் எதிர்க் கட்சியின் உணர்வுகளையும் மதித்து கடமையாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.

5 விரல்கள் இருந்தாலும் அவை ஒன்று சேர்ந்தால் தான் பயன்கிடைக்கும் என்று பேரறிஞர் அண்ணா சொல்லி இருக்கிறார். பெரிய தேராக இருந்தாலும் அதற்கு சிறிய அச்சாணி முக்கியம். எனவே எண்ணிக்கை சிறிது என்று எடுத்துக் கொள்ளாமல் அனைத்து கட்சிகளையும் மதித்து வழி நடத்துவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

இந்த பாரம்பரியம் கொண்ட இந்த அவையில் எத்தனையோ சபாநாயகர்கள் இருந்து இருக்கிறார்கள். என்றாலும் கிருஷ்ணாராவ், புலவர் கோவிந்தன், சி.பா.ஆதித்தனார், பழனிவேல் ராஜன் ஆகியோர் வரலாறு படைத்தனர். அதுபோல் நீங்களும் சிறப்பாக இடம்பெற வேண்டும்.

ஊர் கூடி தேர் இழப்பதுபோன்று ஜனநாயக தேரை இழுத்துச் செல்ல திமுக உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பை வழங்குவார்கள்

சபாநாயகருக்கும், துணை சபாநாயகருக்கும் எனது வாழ்த்தை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஸ்டாலின்.

ஜனநாயக தேரை இழுத்துச் செல்ல திமுக ஒத்துழைக்கும்-ஸ்டாலின்

சென்னை: ஊர் கூடி தேர் இழப்பதுபோன்று ஜனநாயக தேரை இழுத்துச் செல்ல திமுக உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்று சட்டசபை திமுக தலைவர் மு.க.சஸ்டாலின் கூறினார்.

சபாநாயகர் ஜெயக்குமாரைப் பாராட்டி இன்று சட்டசபையில் ஸ்டாலின் பேசுகையில்,

சட்டசபையின் தலைவராக ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்ட சபாநாயகருக்கும், துணை சபாநாயகருக்கும் எனது வாழ்த்தையும், வரவேற்பையும் தி.மு.க. சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் ஆளும் கட்சி வரிசையிலும், எதிர்க்கட்சி வரிசையிலும் இருந்து இருக்கிறீர்கள். சட்டம் படித்து இருக்கிறீர்கள்.

எனவே ஆளும் கட்சியின் நோக்கத்தையும் எதிர்க் கட்சியின் உணர்வுகளையும் மதித்து கடமையாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.

5 விரல்கள் இருந்தாலும் அவை ஒன்று சேர்ந்தால் தான் பயன்கிடைக்கும் என்று பேரறிஞர் அண்ணா சொல்லி இருக்கிறார். பெரிய தேராக இருந்தாலும் அதற்கு சிறிய அச்சாணி முக்கியம். எனவே எண்ணிக்கை சிறிது என்று எடுத்துக் கொள்ளாமல் அனைத்து கட்சிகளையும் மதித்து வழி நடத்துவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

இந்த பாரம்பரியம் கொண்ட இந்த அவையில் எத்தனையோ சபாநாயகர்கள் இருந்து இருக்கிறார்கள். என்றாலும் கிருஷ்ணாராவ், புலவர் கோவிந்தன், சி.பா.ஆதித்தனார், பழனிவேல் ராஜன் ஆகியோர் வரலாறு படைத்தனர். அதுபோல் நீங்களும் சிறப்பாக இடம்பெற வேண்டும்.

ஊர் கூடி தேர் இழப்பதுபோன்று ஜனநாயக தேரை இழுத்துச் செல்ல திமுக உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பை வழங்குவார்கள்

சபாநாயகருக்கும், துணை சபாநாயகருக்கும் எனது வாழ்த்தை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஸ்டாலின்.

சென்னை : தி.மு.க., தலைவர் கருணாநிதி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: என் தலைமையில், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், சட்டசபை தி.மு.க., தலைவராக ஸ்டாலின், துணைத் தலைவராக துரைமுருகன், கொறடாவாக சக்கரபாணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர், என்றார். "எம்.எல்.ஏ.,வாக எப்போது பதவியேற்க உள்ளீர்கள்?' என, கருணாநிதியிடம் கேட்டபோது, "சபாநாயகரிடம் அனுமதி பெற்று, அவர் ஒதுக்கும் தேதியில், பதவியேற்றுக் கொள்வேன்' என்றார்.

சட்டசபை தி.மு.க.,தலைவர் ஸ்டாலின்

சென்னை : தி.மு.க., தலைவர் கருணாநிதி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: என் தலைமையில், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், சட்டசபை தி.மு.க., தலைவராக ஸ்டாலின், துணைத் தலைவராக துரைமுருகன், கொறடாவாக சக்கரபாணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர், என்றார். "எம்.எல்.ஏ.,வாக எப்போது பதவியேற்க உள்ளீர்கள்?' என, கருணாநிதியிடம் கேட்டபோது, "சபாநாயகரிடம் அனுமதி பெற்று, அவர் ஒதுக்கும் தேதியில், பதவியேற்றுக் கொள்வேன்' என்றார்.

சென்னை: திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தால் முக ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி அளிக்கப்படுவது பற்றகி திமுக பொதுக்குழு முடிவு செய்யும், என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

முதல்வர் கருணாநிதி ஒரு தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம்:

கருத்துக்கணிப்பில் வெற்றி

கேள்வி: சமீபத்திய கருத்துக் கணிப்பில் தி.மு.க. வெற்றிபெறும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: பொதுவாக நான் கருத்துக் கணிப்புகளில் ஆர்வம் காட்டுவதில்லை. இந்தக் கருத்துக் கணிப்பு சரியாக இருக்குமேயானால், தொடர்ந்து அடுத்தடுத்து இந்தப் பத்திரிகை சார்பில் செய்யப்படுகின்ற கருத்துக் கணிப்புகளில் நம்பிக்கை வைப்பேன்.

கேள்வி: இதிலே எந்தெந்த விஷயங்கள் தி.மு.க.விற்கு ஆதரவாக வந்துள்ளன என்று நினைக்கிறீர்கள்?

பதில்: தி.மு.க. என்பது ஒரு இயக்கம். திராவிட இயக்கம். திராவிட இயக்கத்தின் பால் மக்களுக்கு ஓர் ஆர்வமும், அக்கறையும் உள்ளது. இது வெறும் இயக்கமாக மாத்திரம் இல்லாமல் ஆளுங்கட்சியாக வந்து மக்களுக்கு அண்மைக் காலத்தில் பல சாதனைகளைச் செய்து முடித்திருக்கின்றது. நம்பகத்தன்மை வாய்ந்த கட்சியாக மக்களுக்கு இது இருக்கின்றது.

கூட்டணி அமைச்சரவையா?

கேள்வி: உங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், கூட்டணி அமைச்சரவைக்கு நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா? கூட்டணி அமைச்சரவை தான் அமையுமென்று நினைக்கிறீர்களா?

பதில்: சூழ்நிலைக்கேற்ப எங்கள் கட்சி முடிவெடுக்கும். கூட்டணி ஆட்சி என்பது கூடாது என்றல்ல, கூட்டணி ஆட்சிதான் மத்தியிலே நடக்கின்றது.

கேள்வி: தேர்தலுக்கு முன்பு பல பேர் உங்கள் கட்சி ஆட்சியின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அவதூறுகளைச் சொன்னார்கள். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: நீங்களே கேட்கும் போது அவையெல்லாம் அவதூறுகள் என்று சொல்லி கேட்டிருக்கிறீர்கள். அது அவதூறுகள் தான்.

சட்டரீதியாக சந்திப்போம்:

கேள்வி: மத்தியிலும் உங்கள் ஆட்சி தான் நடக்கிறது. இப்போது கருத்துக் கணிப்பில் நீங்கள்தான் வருவீர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து உங்கள் ஆட்சி மீது வழக்குகள் வருகிறதே, அதெல்லாம் எப்படி இருக்கும்?

பதில்: வழக்குகளை நாங்கள் சட்ட ரீதியாகச் சந்திப்போம்.

கேள்வி: மக்களுக்கு ஏதாவது செய்தி சொல்ல விரும்புகிறீர்களா?

பதில்: இங்கே மேலே எழுதியிருக்கிறார்கள் பாருங்கள். "வாய்மையே வெல்லும்''. அதுதான் நான் சொல்ல விரும்பும் செய்தி.

ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி?

கேள்வி: நீங்கள் ஆட்சிக்கு வந்தால் நீங்கள் முதல்வராக தொடர்வீர்களா? அல்லது ஸ்டாலின் முதல்வராவாரா?

பதில்: அதெல்லாம் எங்கள் கட்சியின் பொதுக்குழு முடிவு செய்ய வேண்டிய விஷயங்கள்.

கேள்வி: உங்களுடைய ஆசை என்ன?

பதில்: மக்கள் நன்றாக இருக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் பதவியா? - கருணாநிதி பதில்

சென்னை: திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தால் முக ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி அளிக்கப்படுவது பற்றகி திமுக பொதுக்குழு முடிவு செய்யும், என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

முதல்வர் கருணாநிதி ஒரு தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம்:

கருத்துக்கணிப்பில் வெற்றி

கேள்வி: சமீபத்திய கருத்துக் கணிப்பில் தி.மு.க. வெற்றிபெறும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: பொதுவாக நான் கருத்துக் கணிப்புகளில் ஆர்வம் காட்டுவதில்லை. இந்தக் கருத்துக் கணிப்பு சரியாக இருக்குமேயானால், தொடர்ந்து அடுத்தடுத்து இந்தப் பத்திரிகை சார்பில் செய்யப்படுகின்ற கருத்துக் கணிப்புகளில் நம்பிக்கை வைப்பேன்.

கேள்வி: இதிலே எந்தெந்த விஷயங்கள் தி.மு.க.விற்கு ஆதரவாக வந்துள்ளன என்று நினைக்கிறீர்கள்?

பதில்: தி.மு.க. என்பது ஒரு இயக்கம். திராவிட இயக்கம். திராவிட இயக்கத்தின் பால் மக்களுக்கு ஓர் ஆர்வமும், அக்கறையும் உள்ளது. இது வெறும் இயக்கமாக மாத்திரம் இல்லாமல் ஆளுங்கட்சியாக வந்து மக்களுக்கு அண்மைக் காலத்தில் பல சாதனைகளைச் செய்து முடித்திருக்கின்றது. நம்பகத்தன்மை வாய்ந்த கட்சியாக மக்களுக்கு இது இருக்கின்றது.

கூட்டணி அமைச்சரவையா?

கேள்வி: உங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், கூட்டணி அமைச்சரவைக்கு நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா? கூட்டணி அமைச்சரவை தான் அமையுமென்று நினைக்கிறீர்களா?

பதில்: சூழ்நிலைக்கேற்ப எங்கள் கட்சி முடிவெடுக்கும். கூட்டணி ஆட்சி என்பது கூடாது என்றல்ல, கூட்டணி ஆட்சிதான் மத்தியிலே நடக்கின்றது.

கேள்வி: தேர்தலுக்கு முன்பு பல பேர் உங்கள் கட்சி ஆட்சியின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அவதூறுகளைச் சொன்னார்கள். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: நீங்களே கேட்கும் போது அவையெல்லாம் அவதூறுகள் என்று சொல்லி கேட்டிருக்கிறீர்கள். அது அவதூறுகள் தான்.

சட்டரீதியாக சந்திப்போம்:

கேள்வி: மத்தியிலும் உங்கள் ஆட்சி தான் நடக்கிறது. இப்போது கருத்துக் கணிப்பில் நீங்கள்தான் வருவீர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து உங்கள் ஆட்சி மீது வழக்குகள் வருகிறதே, அதெல்லாம் எப்படி இருக்கும்?

பதில்: வழக்குகளை நாங்கள் சட்ட ரீதியாகச் சந்திப்போம்.

கேள்வி: மக்களுக்கு ஏதாவது செய்தி சொல்ல விரும்புகிறீர்களா?

பதில்: இங்கே மேலே எழுதியிருக்கிறார்கள் பாருங்கள். "வாய்மையே வெல்லும்''. அதுதான் நான் சொல்ல விரும்பும் செய்தி.

ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி?

கேள்வி: நீங்கள் ஆட்சிக்கு வந்தால் நீங்கள் முதல்வராக தொடர்வீர்களா? அல்லது ஸ்டாலின் முதல்வராவாரா?

பதில்: அதெல்லாம் எங்கள் கட்சியின் பொதுக்குழு முடிவு செய்ய வேண்டிய விஷயங்கள்.

கேள்வி: உங்களுடைய ஆசை என்ன?

பதில்: மக்கள் நன்றாக இருக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் தனக்கு 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைக்கும் என்று, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் மேலும் கூறியதாவது, கொளத்தூர் தொகுதியில் என்னை மக்கள் சிறப்பாக வரவேற்றனர். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கொளத்தூர் தொகுதி புதிதாக உருவானது.

அந்த தொகுதியில் முதல் முதலாக, முதன் முறையாக நான் வேட்பாளராக போட்டியிடுவதும் மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களுக்கு நான் நல்லது செய்வேன் என்று நம்பிக்கை இருக்கிறது. மேயராக இருந்து, அமைச்சராக இருந்து, துணை முதல் அமைச்சராக இருந்து பணியாற்றியதை மக்கள் பார்த்தார்கள். ஆகையால் குறைந்தது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றார்.

50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைக்கும்: மு.க.ஸ்டாலின்

கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் தனக்கு 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைக்கும் என்று, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் மேலும் கூறியதாவது, கொளத்தூர் தொகுதியில் என்னை மக்கள் சிறப்பாக வரவேற்றனர். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கொளத்தூர் தொகுதி புதிதாக உருவானது.

அந்த தொகுதியில் முதல் முதலாக, முதன் முறையாக நான் வேட்பாளராக போட்டியிடுவதும் மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களுக்கு நான் நல்லது செய்வேன் என்று நம்பிக்கை இருக்கிறது. மேயராக இருந்து, அமைச்சராக இருந்து, துணை முதல் அமைச்சராக இருந்து பணியாற்றியதை மக்கள் பார்த்தார்கள். ஆகையால் குறைந்தது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றார்.

தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளுக்கு மக்கள் பதிலடி தருவார்கள் என, துணை முதல் அமைச்சரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.

விருதுநகர் மாட்டத்தில் திமுக கூட்டணி வேட்பளார்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட துணை முதல் அமைச்சரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் நேற்று இரவு மதுரையில் தங்கினார். பின்னர் காஞ்சிபுரம் புறப்படுவதற்கு முன்னர் அவரை மதுரை மாவட்ட திமுக கூட்டணி வேட்பாளர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கலைஞர் 6வது முறையாக முதல் அமைச்சராக பதவி ஏற்பார் என்றார்.

மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பை தேர்தல் ஆணையம் ரத்து செய்திருப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மு.க.ஸ்டாலின், தேர்தல் ஆணையத்தின் இதுபோன்ற வீண் கெடுபிடிகளுக்கு தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.

திமுகவின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்துள்ளதால்தான், ஜெயலலிதாவால் அதிமுக தேர்தல அறிக்கையை பற்றி பிரச்சாரம் செய்ய முடியாமல், வேறு எதையோப் பற்றி பேசி வருகிறார் என்றார்.

மக்கள் பதிலடி தருவார்கள்: மு.க.ஸ்டாலின்

தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளுக்கு மக்கள் பதிலடி தருவார்கள் என, துணை முதல் அமைச்சரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.

விருதுநகர் மாட்டத்தில் திமுக கூட்டணி வேட்பளார்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட துணை முதல் அமைச்சரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் நேற்று இரவு மதுரையில் தங்கினார். பின்னர் காஞ்சிபுரம் புறப்படுவதற்கு முன்னர் அவரை மதுரை மாவட்ட திமுக கூட்டணி வேட்பாளர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கலைஞர் 6வது முறையாக முதல் அமைச்சராக பதவி ஏற்பார் என்றார்.

மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பை தேர்தல் ஆணையம் ரத்து செய்திருப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மு.க.ஸ்டாலின், தேர்தல் ஆணையத்தின் இதுபோன்ற வீண் கெடுபிடிகளுக்கு தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.

திமுகவின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்துள்ளதால்தான், ஜெயலலிதாவால் அதிமுக தேர்தல அறிக்கையை பற்றி பிரச்சாரம் செய்ய முடியாமல், வேறு எதையோப் பற்றி பேசி வருகிறார் என்றார்.

தூத்துக்குடி : ""தேர்தல் நேரத்தில் மட்டும் நாங்கள், உங்களை தேடிவரவில்லை. எந்த சூழ்நிலையிலும், எப்போதும் உங்களுடன் தான் இருக்கிறோம் என்ற உரிமையில் ஓட்டு கேட்க வந்துள்ளோம்'' என, துணைமுதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தூத்துக்குடி தி.மு.க., வேட்பாளர் சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவனை ஆதரித்து, துணைமுதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தேர்தல் நேரத்தில் மட்டும் நாங்கள், உங்களை தேடிவரவில்லை. எந்த சூழ்நிலையிலும், எப்போதும் உங்களுடன் தான் இருக்கிறோம் என்ற உரிமையில் ஓட்டு கேட்க வந்துள்ளோம். ஆனால், சிலர் தேர்தல் நேரத்தில் மட்டும் வருவார்கள். பின்னர், காணாமல் போய்விடுவர். அவர்களுக்கு தமிழக நலனில் அக்கறையில்லை. மாறாக, கொடநாடு நலன் தான் முக்கியம். 2006 சட்டசபை தேர்தலில் தி.மு.க., சார்பில் தரப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் கருணாநிதி 100 சதவீதம் நிறைவேற்றியுள்ளார். அந்த தேர்தல் அறிக்கையை அவர், கதாநாயகன் என்று வர்ணித்தார். அதுபோல, 2011 தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு பல சிறப்பு திட்டங்கள் இருப்பதால், இந்த அறிக்கையை முதல்வர், கதாநாயகி எனக் கூறியுள்ளார். ஆனால், எதிரணியில் முன்னாள் கதாநாயகி, முன்னாள் கதாநாயகன் உள்ளனர். கடந்த தேர்தலில் ரேஷனில் கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கப்படுமென முதல்வர் அறிவித்தார். தற்போது, அது ஒரு ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.

1989ல், தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு திருமண உதவித்தொகை 5,000 ரூபாய் வழங்கப்பட்டது. 1991ல், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் அதை ஜெ., நிறுத்தினார். 1996ல், மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அந்த உதவித்தொகை 5,000த்திலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. 2001ல், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் அத்திட்டம் நிறுத்தப்பட்டது. 2006ல், ஐந்தாவது முறையாக கருணாநிதி முதல்வரானதும் அத்தொகை படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது 25 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படுகிறது. இந்த தேர்தல் வாக்குறுதிகளையும் முதல்வர் கருணாநிதி நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. அதனால், அவர் ஆறாவது முறையாக முதல்வராவது உறுதி. நாங்கள் சொன்னதை செய்தோம். செய்த சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேட்கிறோம்.

நகராட்சியாக இருந்த தூத்துக்குடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பாதாள சாக்கடை திட்டம், பக்கிள் ஓடை (கழிவு நீர் ஓடை) திட்டம் கொண்டுவரப்பட்டது. அரசு இன்ஜினியரிங் கல்லூரி துவங்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கான 500 படுக்கை வசதி கொண்ட கட்டடம் திறக்கப்பட்டுள்ளது. திரேஸ்புரத்தில் மீனவர்களுக்காக, தூண்டில் வளைவு அமைக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு நலவாரியம் அமைத்துள்ளோம். மீன்பிடி தடைக்காலத்தில் உதவித்தொகை 1,000 ரூபாயாக அதிகரிக்கவும் வாக்குறுதி தரப்பட்டுள்ளது. தமிழகத்தில், 99 சதவீதம் பேருக்கு இலவச கலர் "டிவி' வழங்கப்பட்டு விட்டது. நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் எஞ்சியுள்ள ஒரு சதவீதம் பேருக்கும் அது வழங்கப்படும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை தேடி வரவில்லை: ஸ்டாலின் பேச்சு

தூத்துக்குடி : ""தேர்தல் நேரத்தில் மட்டும் நாங்கள், உங்களை தேடிவரவில்லை. எந்த சூழ்நிலையிலும், எப்போதும் உங்களுடன் தான் இருக்கிறோம் என்ற உரிமையில் ஓட்டு கேட்க வந்துள்ளோம்'' என, துணைமுதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தூத்துக்குடி தி.மு.க., வேட்பாளர் சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவனை ஆதரித்து, துணைமுதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தேர்தல் நேரத்தில் மட்டும் நாங்கள், உங்களை தேடிவரவில்லை. எந்த சூழ்நிலையிலும், எப்போதும் உங்களுடன் தான் இருக்கிறோம் என்ற உரிமையில் ஓட்டு கேட்க வந்துள்ளோம். ஆனால், சிலர் தேர்தல் நேரத்தில் மட்டும் வருவார்கள். பின்னர், காணாமல் போய்விடுவர். அவர்களுக்கு தமிழக நலனில் அக்கறையில்லை. மாறாக, கொடநாடு நலன் தான் முக்கியம். 2006 சட்டசபை தேர்தலில் தி.மு.க., சார்பில் தரப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் கருணாநிதி 100 சதவீதம் நிறைவேற்றியுள்ளார். அந்த தேர்தல் அறிக்கையை அவர், கதாநாயகன் என்று வர்ணித்தார். அதுபோல, 2011 தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு பல சிறப்பு திட்டங்கள் இருப்பதால், இந்த அறிக்கையை முதல்வர், கதாநாயகி எனக் கூறியுள்ளார். ஆனால், எதிரணியில் முன்னாள் கதாநாயகி, முன்னாள் கதாநாயகன் உள்ளனர். கடந்த தேர்தலில் ரேஷனில் கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கப்படுமென முதல்வர் அறிவித்தார். தற்போது, அது ஒரு ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.

1989ல், தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு திருமண உதவித்தொகை 5,000 ரூபாய் வழங்கப்பட்டது. 1991ல், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் அதை ஜெ., நிறுத்தினார். 1996ல், மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அந்த உதவித்தொகை 5,000த்திலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. 2001ல், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் அத்திட்டம் நிறுத்தப்பட்டது. 2006ல், ஐந்தாவது முறையாக கருணாநிதி முதல்வரானதும் அத்தொகை படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது 25 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படுகிறது. இந்த தேர்தல் வாக்குறுதிகளையும் முதல்வர் கருணாநிதி நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. அதனால், அவர் ஆறாவது முறையாக முதல்வராவது உறுதி. நாங்கள் சொன்னதை செய்தோம். செய்த சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேட்கிறோம்.

நகராட்சியாக இருந்த தூத்துக்குடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பாதாள சாக்கடை திட்டம், பக்கிள் ஓடை (கழிவு நீர் ஓடை) திட்டம் கொண்டுவரப்பட்டது. அரசு இன்ஜினியரிங் கல்லூரி துவங்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கான 500 படுக்கை வசதி கொண்ட கட்டடம் திறக்கப்பட்டுள்ளது. திரேஸ்புரத்தில் மீனவர்களுக்காக, தூண்டில் வளைவு அமைக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு நலவாரியம் அமைத்துள்ளோம். மீன்பிடி தடைக்காலத்தில் உதவித்தொகை 1,000 ரூபாயாக அதிகரிக்கவும் வாக்குறுதி தரப்பட்டுள்ளது. தமிழகத்தில், 99 சதவீதம் பேருக்கு இலவச கலர் "டிவி' வழங்கப்பட்டு விட்டது. நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் எஞ்சியுள்ள ஒரு சதவீதம் பேருக்கும் அது வழங்கப்படும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

சென்னை: மு.க.ஸ்டாலின்தான் என்னுடைய அரசியல் வாரிசு என்பது கேள்விக் குறியாக வாய்ப்பில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சிஎன்என்-ஐபிஎன் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டி விவரம்:

எனது சாதனைகளை நம்புகிறீர்களா இல்லையா?:

கேள்வி: இந்தத் தேர்தலில் தமிழக வாக்காளர்கள் முன் திமுக வைக்கும் கேள்விகள் என்ன?

கருணாநிதி: திமுக அரசு 1967ம் ஆண்டு முதல் இதுவரையில் ஆற்றியுள்ள சாதனைகளில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?, இல்லையா?. நாங்கள் நம்பகமானவர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்களா?. இல்லையா?, நாங்கள் அறிவித்த திட்டங்கள், வாக்குறுதிகள் ஆகியவற்றை நிறைவேற்றியிருக்கிறோமா?, இல்லையா?. அப்படி நிறைவேற்றக் கூடிய அளவுக்கு ஆற்றலும், அறிவும் அதே நேரத்தில் அக்கறையும் உள்ளவர்கள் நாங்கள் என்பதை நீங்கள் உணருகிறீர்களா?, இல்லையா?. தமிழ்நாட்டில் உள்ள ஏழை-எளிய மக்களுக்கு பாடுபடுகின்ற அரசு இது என்பதை, அடித்தட்டு மக்களுக்காக உழைக்கின்ற அரசு இது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?, இல்லையா?. இத்தகைய கேள்விகளைத்தான் நான் வாக்காளப் பெருமக்களிடம் முன் வைக்க விரும்புகிறேன்.

இலவசங்கள் எதற்காக?:

கேள்வி: தேர்தல் அறிக்கையில் பல இலவசத் திட்டங்களை அறிவித்துள்ளீர்கள். 2006ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் இலவச கலர் தொலைக் காட்சி பெட்டிகளை வழங்கினீர்கள். தற்போது லேப்-டாப், கிரைண்டர், மிக்ஸி வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறீர்கள். தேர்தலில் வெற்றித் தோல்வியை நிர்ணயிப்பது இலவச திட்டங்கள் மட்டும் தானா?

கருணாநிதி: இலவச சலுகைகள் என்பது வாக்குகளைப் பெறுவதற்காக அல்ல. ஏழை-எளிய மக்கள் தமிழகத்தில் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்களை வாழ வைக்க வேண்டும் என்ற குறிக்கோள் திமுக அரசுக்கு இன்று, நேற்றல்ல- இந்த இக்கத்தை தொடங்கியதே அந்த ஏழைகளை வாழ வைப்பதற்காகத்தான். ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் காண்போம் என்பது தான் எங்கள் தலைவர் அண்ணாவின் முழக்கம். எழைகளின் முகங்களிலே அந்தச் சிரிப்பைக் காண்பதற்காகத்தான் நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கின்ற முயற்சிகளில் இந்த இலவச திட்டங்களும் ஒன்றாகும்.

தேர்தலுக்குப் பின்னும் கூட்டணி தொடருமா?:

கேள்வி: கட்சிகளிடையே தொகுதி ஒதுக்கீடு பற்றிய பேச்சுவார்த்தை நடந்தபோது காங்கிரசுக்கும், திமுகவிற்கும் இடையே கருத்து மாற்றங்கள் ஏற்பட்டன. தேர்தலுக்குப் பிறகும் இந்தக் கூட்டணி தொடரும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?

கருணாநிதி: இரண்டும் அகில இந்திய அளவில் இல்லாவிட்டாலும், இந்திய அளவில் காங்கிரசும், தமிழ்நாட்டளவில் திமுகவும் பெரிய கட்சிகள் என்பதை நாங்கள் பரஸ்பரம் உணர்ந்தவர்கள். எங்களுக்கு ஒரு சில கொள்கைகள், லட்சியங்கள் இருக்கின்றன. அவைகளை நிறைவேற்றுவதற்காக எங்களுக்கு மத்திய அரசின் உதவி தேவைப்படுகிறது. உதாரணமாக தமிழைச் செம்மொழியாக ஆக்க வேண்டும் என்பதற்காக நூற்றாண்டு காலத்திற்கு முன்பு நாங்கள் திட்டம் வகுத்து- பரிதிமாற்கலைஞர் என்ற சூரிய நாராயண சாஸ்திரிகள் தமிழ் செம்மொழியாகாக வேண்டுமென்பதற்காகக் குரல் கொடுத்தார்.

அந்தக் குரல் என்ன ஆகுமோ என்ற அளவுக்கு இடையில் வந்த ஆட்சியாளர்கள் அதைப் பற்றி கவலைப்படாமல் இருந்தபோது, சோனியா காந்தி வந்து தான் அந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தர அவர்களே முன்னின்று முயற்சித்து மறைந்த கல்வி அமைச்சர் அர்ஜுன் சிங் உதவியோடு தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தார்கள்.
ஆகவே நாங்கள் மாறுபடுவதாக இருந்தால், எங்களுக்கும் மத்தியிலே அமைகிற அரசுக்கும் மாறுபட்ட கொள்கைரீதியாக வித்தியாசங்கள் இருக்கலாம், அதாவது திட்டங்கள் தமிழகத்திற்கு இன்னும் நிறைய வேண்டும் என்று கருணாநிதி போராடுவதின் காரணமாக ஏற்படுகிற மாறுபாடுகள் இருக்கலாம்.

ஆனால் அடிப்படைக் கொள்கைகளில் எங்களுக்கும் அவர்களுக்கும் அதாவது மதவாதத்தை ஒழிப்பது, இந்தியாவில் சமதர்ம சமுதாயத்தை உருவாக்குவது போன்றவற்றில் நாங்கள் இருவரும் மாறுபட்டவர்கள் அல்ல.

கூட்டணி ஆட்சியா?:

கேள்வி: இந்த முறை திமுக தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகக் குறைவாக 121 இடங்களில் தான் போட்டியிடுகிறது. தேர்தலில் திமுக வென்றாலும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையப் போகிறது என்பதற்கான முன் அறிவிப்பதாக இதனை எடுத்துக் கொள்ளலாமா?

கருணாநிதி: அரசியல் மாற்றங்களைப் பொறுத்தவரையில் ஒரே கட்சியின் ஆட்சியா? அல்லது கூட்டணி ஆட்சியா? என்பதை தேர்தல் முடிந்த பிறகு தான் சொல்ல முடியும்.
மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளுங்கட்சியாக இருந்தாலும், தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே கூட்டணி அமைத்து அந்தக் கூட்டணியில் பல கட்சிகள் இணைந்து- இடதுசாரிக் கட்சிகள், பார்வர்டு பிளாக் எல்லாம் இடம் பெற்று,அரசு அமைக்கிறார்கள்.

அதே நேரத்தில் தமிழ்நாட்டு மக்களும் மற்றவர்களும் தமிழகத்தில் ஒரே கட்சியின் ஆட்சி நீடிக்க வேண்டுமென்று தான் கருதுவார்கள் என்று எண்ணுகிறேன். ஒரு வேளை 'வோட்டிங் பேட்டன்' (voting pattern) என்று சொல்வார்களே, அதிலே மாற்றம் ஏற்பட்டு கூட்டணி ஆட்சி அமைந்தால் தான் ஒரு அரசு நிலைத்திருக்க முடியும் என்ற சூழ்நிலை தோன்றினால் நாங்கள் அப்போது மற்ற கட்சிகளோடு கலந்து பேசி அதைத் தீர்மானிப்போம்.

அரசியல் வாரிசு முக ஸ்டாலின்தான்:

கேள்வி: 12வது முறையாக வேட்பாளராக நீங்கள் போட்டியிடுகிறீர்கள். இந்தத் நேரத்தில் உங்கள் மகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் உங்களுடைய அரசியல் வாரிசு என்பதில் ஏதாவது கேள்விக்குறி இருக்க முடியுமா?

கருணாநிதி: எந்த கேள்விக் குறிக்கும் இடம் இல்லாமல் வளர்ந்தவர் தான் மு.க. ஸ்டாலின். நான் அரசியலில் நுழைந்து அறிஞர் அண்ணா தலைமையில் ஒரு அரசியல் கட்சியின் முக்கிய பொறுப்பை ஏற்றுக் கொள்பவனாக இருந்து, பொருளாளராக அண்ணா அவர்களால் நியமிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த பொறுப்பை நான் எப்படி நிறைவேற்றினேனோ, அதற்கு அண்ணா காட்டிய அன்பும் என்னிடம் அவர்கள் வைத்த நம்பிக்கையும், அதற்கு கொஞ்சமும் குந்தகம் இல்லாமல் எப்படி நான் நடந்து கொண்டேனோ, அதைப் போலவே என்னுடைய தலைமையில் மு.க.ஸ்டாலின் தொண்டாற்றி வருகிறார்.

என்னிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்ற கழகத் தோழர்கள் கழகத்திலே இருக்கின்ற முன்னணியினர் பொதுக்குழு உறுப்பினர்கள் எல்லாம் மு.க.ஸ்டாலினிடமும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எனவே ஸ்டாலின் மீதான நம்பிக்கை குறித்து கேள்விக் குறி எழ எந்தவித நியாயமும் இல்லை.

திமுக சங்கர மடம் அல்ல!:

கேள்வி: ஸ்டாலினை அடுத்த தலைவராக திமுகவில் அனைவரும் ஏற்பார்களா?

கருணாநிதி: திராவிட முன்னேற்ற கழகம் ஒரு ஜனநாயக இயக்கம், அடுத்தது யார் என்ற கேள்விக்கு நாமே ஒருவரைப் பிடித்து வைத்து, இவர் தான் அடுத்தது என்று சொல்லக்கூடிய இயக்கம் அல்ல இது. அதாவது மடாதிபதிகள் நடத்துகின்ற மடம் அல்ல இது. மடாதிபதி என்றால், உதாரணம் சொல்ல வேண்டுமேயானால் சங்கரமடம் இருக்கிறது அல்லவா, அந்த மடத்திலே பெரியவர் சங்கராச்சாரியார் இருந்து, தனக்கு பின்னர் இவர் தான் என்று ஒருவரை அடையாளம் காட்டி விட்டு சென்றார். அதை அந்த மடத்தை சேர்ந்தவர்கள் எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள். அதைப் போல திராவிட முன்னேற்ற கழகம் ஒரு மத ஸ்தாபனம் அல்ல. இது ஜனநாயகரீதியான ஸ்தாபனம். ஜனநாயகத்தில் தலைவர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்களோ, அதை போல தான் இயக்கத் தோழர்கள், கழகச் செயலாளர்கள் எல்லாம் சேர்ந்து இவர் இந்தப் பொறுப்பு வகிக்க தகுதியானவர் என்று கருதினால் அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

யார்-யாரோ சேர்ந்து கொண்டு சில குடும்பங்கள் உருவாகின்றன:

கேள்வி: நீங்கள் குடும்ப அரசியலை ஊக்குவிக்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளதே?

கருணாநிதி: எனக்கு குடும்பம் இருப்பது தான் பெரிய தொல்லையே. என் குடும்பத்தைப் பற்றி பேசுபவர்கள், முதலில் அவர்களுக்கு குடும்பம் இருக்கிறதா இல்லையா என்பதைப் பார்க்க வேண்டும். குடும்பம் நடத்துவது என்றால் திருமணமாகி ஆணும், பெண்ணும் சேர்ந்து அவர்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகள், அண்ணன், தம்பி இவர்கள் தான் குடும்பம் என்று அர்த்தம் அல்ல.

துணைக்கு யார்-யாரோ சேர்ந்து கொண்டு சில குடும்பங்கள் உருவாகின்றன. நான் அப்படிப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல. ஒரு நேர்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன்.

கலைஞர் டிவி விவகாரம்-ஊழலே அல்ல:

கேள்வி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழலில் சிபிஐ உங்கள் மகளையும், மனைவியையும் விசாரித்ததோடு கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் கணக்குகளையும் விசாரித்துள்ளது. அதனால் எதிர்க்கட்சிகள் உங்களுக்கு தெரியாமல் எதுவும் இதிலே நடைபெற்றிருக்க முடியாது என்று சொல்கிறார்கள். இதற்கு என்ன பதில் கூறுகிறீர்கள்?

கருணாநிதி: இது ஊழலே அல்ல. இதைப் பற்றி பகிரங்கமாக எங்கள் பத்திரிகையிலே விளக்கம் வெளியிட்டுள்ளோம். கலைஞர் டி.வியில் என் பெயர் இடம் பெற்றிருக்கிறதே தவிர எனக்கு அதில் எந்தவிதமாக உரிமையும் கிடையாது. அதில் என்னுடைய மகள் (உதவியாளரிடம் விசாரித்து விட்டு) 20 சதவீதம் பங்குதாரர். என்னுடைய மனைவி தயாளு 60 சதவிகித பங்குதாரர்.

சரத்குமார் 20 சதவிகித பங்குதாரர். இந்த விவரத்தையே நான் விசாரித்து விட்டு தான் கூறுகிறேன் என்பதை நீங்கள் பார்க்கலாம். கலைஞர் டி.வி. கருணாநிதிக்கு சொந்தமானதல்ல. கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அதிலே பங்குதாரர்களாக இருக்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டு எழுந்தவுடனேயே அதைப் பற்றி பத்திரிகைகளில் சரத்குமார் ஒரு விளக்க அறிக்கையினைத் தந்திருக்கிறார்.

அது எல்லா பத்திரிகைகளிலும் வெளிவந்திருக்கிறது. ஒரு கடனை அடைப்பதற்காக ஒருவரிடம் கடன் பெற்றார்கள். பிறகு பெற்ற கடனை வட்டியோடு திருப்பிக் கொடுத்து விட்டார்கள். அதற்கான வருமான வரி தொகை எல்லாம் தரப்பட்டு அந்த ஆதாரங்களையும் காட்டியிருக்கிறார்கள். இதற்குப் பிறகு அது எப்படி ஊழலாகும் என்று எனக்குத் தெரியவில்லை.

பம்பையடிக்கும் அரசியல் பூசாரிகள்:

கேள்வி: இந்த ஊழல் குற்றச்சாட்டால் திமுகவின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விட்டதா?

கருணாநிதி: சைபர், சைபர், சைபர், சைபர் என்று போட்டு இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்கிறது என்று சொல்லும் போது ''பல்லுக்கு பல் இரு காதம், பல்லிடுக்கு மூன்று காதம்'' என்று அந்த காலத்தில் பூசாரிகள் பம்பை அடிப்பார்கள். அதைக் கேட்டு இன்னொருவர் ஆமாம், ஆமாம் என்பார். மக்களும் அதை கேட்டு தலையட்டிக் கொண்டிருப்பார்கள்.

'காதம்' என்றால் பத்து மைல் தொலைவு. பல்லுக்கு பல் இரு காதம் என்றால் இருபது மைல் தூரம். பல்லிடுக்கு மூன்று காதம் என்றால் முப்பது மைல். அந்த அளவிற்கு பல்லுக்கிடையே இடைவெளி என்றால் வாய் எந்த அளவிற்கு இருக்கும் என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்காமல், ஆமாம், ஆமாம் என்று ஒப்புக் கொண்டு பூசாரி பம்மை அடிப்பதைப் போல பாமர மக்களை ஏமாற்றிட ஒரு சில அரசியல்வாதிகள் பம்பை அடிக்கிறார்கள்.

அது தான் உண்மை என்று வேறு சிலர் பம்பை அடிக்கிறார்கள். அந்த விஷயத்தைப் பற்றி நான் விரிவாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகின்ற காரணத்தால் எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஊழலா, இல்லையா என்பதைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டியது உச்ச நீதிமன்றம். அதிலே நான் தலையிட விரும்பவில்லை.

அந்த நிறுவனத்துக்கு கடனைக் கொடுத்தவர்கள் மீது வழக்கு இருக்கலாம். கடன் வாங்கிய பணம் ஊழல் பணம் என்று சொல்வது முறையல்ல. அது நீண்ட விசாரணைக்கு பிறகுதான் தெரியும்.

இவ்வாறு தனது பேட்டியில் கருணாநிதி கூறியுள்ளார்.

ஸ்டாலின்தான் அரசியல் வாரிசு என்பது கேள்விக்குறியாக வாய்ப்பில்லை!-கருணாநிதி

சென்னை: மு.க.ஸ்டாலின்தான் என்னுடைய அரசியல் வாரிசு என்பது கேள்விக் குறியாக வாய்ப்பில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சிஎன்என்-ஐபிஎன் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டி விவரம்:

எனது சாதனைகளை நம்புகிறீர்களா இல்லையா?:

கேள்வி: இந்தத் தேர்தலில் தமிழக வாக்காளர்கள் முன் திமுக வைக்கும் கேள்விகள் என்ன?

கருணாநிதி: திமுக அரசு 1967ம் ஆண்டு முதல் இதுவரையில் ஆற்றியுள்ள சாதனைகளில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?, இல்லையா?. நாங்கள் நம்பகமானவர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்களா?. இல்லையா?, நாங்கள் அறிவித்த திட்டங்கள், வாக்குறுதிகள் ஆகியவற்றை நிறைவேற்றியிருக்கிறோமா?, இல்லையா?. அப்படி நிறைவேற்றக் கூடிய அளவுக்கு ஆற்றலும், அறிவும் அதே நேரத்தில் அக்கறையும் உள்ளவர்கள் நாங்கள் என்பதை நீங்கள் உணருகிறீர்களா?, இல்லையா?. தமிழ்நாட்டில் உள்ள ஏழை-எளிய மக்களுக்கு பாடுபடுகின்ற அரசு இது என்பதை, அடித்தட்டு மக்களுக்காக உழைக்கின்ற அரசு இது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?, இல்லையா?. இத்தகைய கேள்விகளைத்தான் நான் வாக்காளப் பெருமக்களிடம் முன் வைக்க விரும்புகிறேன்.

இலவசங்கள் எதற்காக?:

கேள்வி: தேர்தல் அறிக்கையில் பல இலவசத் திட்டங்களை அறிவித்துள்ளீர்கள். 2006ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் இலவச கலர் தொலைக் காட்சி பெட்டிகளை வழங்கினீர்கள். தற்போது லேப்-டாப், கிரைண்டர், மிக்ஸி வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறீர்கள். தேர்தலில் வெற்றித் தோல்வியை நிர்ணயிப்பது இலவச திட்டங்கள் மட்டும் தானா?

கருணாநிதி: இலவச சலுகைகள் என்பது வாக்குகளைப் பெறுவதற்காக அல்ல. ஏழை-எளிய மக்கள் தமிழகத்தில் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்களை வாழ வைக்க வேண்டும் என்ற குறிக்கோள் திமுக அரசுக்கு இன்று, நேற்றல்ல- இந்த இக்கத்தை தொடங்கியதே அந்த ஏழைகளை வாழ வைப்பதற்காகத்தான். ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் காண்போம் என்பது தான் எங்கள் தலைவர் அண்ணாவின் முழக்கம். எழைகளின் முகங்களிலே அந்தச் சிரிப்பைக் காண்பதற்காகத்தான் நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கின்ற முயற்சிகளில் இந்த இலவச திட்டங்களும் ஒன்றாகும்.

தேர்தலுக்குப் பின்னும் கூட்டணி தொடருமா?:

கேள்வி: கட்சிகளிடையே தொகுதி ஒதுக்கீடு பற்றிய பேச்சுவார்த்தை நடந்தபோது காங்கிரசுக்கும், திமுகவிற்கும் இடையே கருத்து மாற்றங்கள் ஏற்பட்டன. தேர்தலுக்குப் பிறகும் இந்தக் கூட்டணி தொடரும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?

கருணாநிதி: இரண்டும் அகில இந்திய அளவில் இல்லாவிட்டாலும், இந்திய அளவில் காங்கிரசும், தமிழ்நாட்டளவில் திமுகவும் பெரிய கட்சிகள் என்பதை நாங்கள் பரஸ்பரம் உணர்ந்தவர்கள். எங்களுக்கு ஒரு சில கொள்கைகள், லட்சியங்கள் இருக்கின்றன. அவைகளை நிறைவேற்றுவதற்காக எங்களுக்கு மத்திய அரசின் உதவி தேவைப்படுகிறது. உதாரணமாக தமிழைச் செம்மொழியாக ஆக்க வேண்டும் என்பதற்காக நூற்றாண்டு காலத்திற்கு முன்பு நாங்கள் திட்டம் வகுத்து- பரிதிமாற்கலைஞர் என்ற சூரிய நாராயண சாஸ்திரிகள் தமிழ் செம்மொழியாகாக வேண்டுமென்பதற்காகக் குரல் கொடுத்தார்.

அந்தக் குரல் என்ன ஆகுமோ என்ற அளவுக்கு இடையில் வந்த ஆட்சியாளர்கள் அதைப் பற்றி கவலைப்படாமல் இருந்தபோது, சோனியா காந்தி வந்து தான் அந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தர அவர்களே முன்னின்று முயற்சித்து மறைந்த கல்வி அமைச்சர் அர்ஜுன் சிங் உதவியோடு தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தார்கள்.
ஆகவே நாங்கள் மாறுபடுவதாக இருந்தால், எங்களுக்கும் மத்தியிலே அமைகிற அரசுக்கும் மாறுபட்ட கொள்கைரீதியாக வித்தியாசங்கள் இருக்கலாம், அதாவது திட்டங்கள் தமிழகத்திற்கு இன்னும் நிறைய வேண்டும் என்று கருணாநிதி போராடுவதின் காரணமாக ஏற்படுகிற மாறுபாடுகள் இருக்கலாம்.

ஆனால் அடிப்படைக் கொள்கைகளில் எங்களுக்கும் அவர்களுக்கும் அதாவது மதவாதத்தை ஒழிப்பது, இந்தியாவில் சமதர்ம சமுதாயத்தை உருவாக்குவது போன்றவற்றில் நாங்கள் இருவரும் மாறுபட்டவர்கள் அல்ல.

கூட்டணி ஆட்சியா?:

கேள்வி: இந்த முறை திமுக தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகக் குறைவாக 121 இடங்களில் தான் போட்டியிடுகிறது. தேர்தலில் திமுக வென்றாலும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையப் போகிறது என்பதற்கான முன் அறிவிப்பதாக இதனை எடுத்துக் கொள்ளலாமா?

கருணாநிதி: அரசியல் மாற்றங்களைப் பொறுத்தவரையில் ஒரே கட்சியின் ஆட்சியா? அல்லது கூட்டணி ஆட்சியா? என்பதை தேர்தல் முடிந்த பிறகு தான் சொல்ல முடியும்.
மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளுங்கட்சியாக இருந்தாலும், தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே கூட்டணி அமைத்து அந்தக் கூட்டணியில் பல கட்சிகள் இணைந்து- இடதுசாரிக் கட்சிகள், பார்வர்டு பிளாக் எல்லாம் இடம் பெற்று,அரசு அமைக்கிறார்கள்.

அதே நேரத்தில் தமிழ்நாட்டு மக்களும் மற்றவர்களும் தமிழகத்தில் ஒரே கட்சியின் ஆட்சி நீடிக்க வேண்டுமென்று தான் கருதுவார்கள் என்று எண்ணுகிறேன். ஒரு வேளை 'வோட்டிங் பேட்டன்' (voting pattern) என்று சொல்வார்களே, அதிலே மாற்றம் ஏற்பட்டு கூட்டணி ஆட்சி அமைந்தால் தான் ஒரு அரசு நிலைத்திருக்க முடியும் என்ற சூழ்நிலை தோன்றினால் நாங்கள் அப்போது மற்ற கட்சிகளோடு கலந்து பேசி அதைத் தீர்மானிப்போம்.

அரசியல் வாரிசு முக ஸ்டாலின்தான்:

கேள்வி: 12வது முறையாக வேட்பாளராக நீங்கள் போட்டியிடுகிறீர்கள். இந்தத் நேரத்தில் உங்கள் மகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் உங்களுடைய அரசியல் வாரிசு என்பதில் ஏதாவது கேள்விக்குறி இருக்க முடியுமா?

கருணாநிதி: எந்த கேள்விக் குறிக்கும் இடம் இல்லாமல் வளர்ந்தவர் தான் மு.க. ஸ்டாலின். நான் அரசியலில் நுழைந்து அறிஞர் அண்ணா தலைமையில் ஒரு அரசியல் கட்சியின் முக்கிய பொறுப்பை ஏற்றுக் கொள்பவனாக இருந்து, பொருளாளராக அண்ணா அவர்களால் நியமிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த பொறுப்பை நான் எப்படி நிறைவேற்றினேனோ, அதற்கு அண்ணா காட்டிய அன்பும் என்னிடம் அவர்கள் வைத்த நம்பிக்கையும், அதற்கு கொஞ்சமும் குந்தகம் இல்லாமல் எப்படி நான் நடந்து கொண்டேனோ, அதைப் போலவே என்னுடைய தலைமையில் மு.க.ஸ்டாலின் தொண்டாற்றி வருகிறார்.

என்னிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்ற கழகத் தோழர்கள் கழகத்திலே இருக்கின்ற முன்னணியினர் பொதுக்குழு உறுப்பினர்கள் எல்லாம் மு.க.ஸ்டாலினிடமும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எனவே ஸ்டாலின் மீதான நம்பிக்கை குறித்து கேள்விக் குறி எழ எந்தவித நியாயமும் இல்லை.

திமுக சங்கர மடம் அல்ல!:

கேள்வி: ஸ்டாலினை அடுத்த தலைவராக திமுகவில் அனைவரும் ஏற்பார்களா?

கருணாநிதி: திராவிட முன்னேற்ற கழகம் ஒரு ஜனநாயக இயக்கம், அடுத்தது யார் என்ற கேள்விக்கு நாமே ஒருவரைப் பிடித்து வைத்து, இவர் தான் அடுத்தது என்று சொல்லக்கூடிய இயக்கம் அல்ல இது. அதாவது மடாதிபதிகள் நடத்துகின்ற மடம் அல்ல இது. மடாதிபதி என்றால், உதாரணம் சொல்ல வேண்டுமேயானால் சங்கரமடம் இருக்கிறது அல்லவா, அந்த மடத்திலே பெரியவர் சங்கராச்சாரியார் இருந்து, தனக்கு பின்னர் இவர் தான் என்று ஒருவரை அடையாளம் காட்டி விட்டு சென்றார். அதை அந்த மடத்தை சேர்ந்தவர்கள் எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள். அதைப் போல திராவிட முன்னேற்ற கழகம் ஒரு மத ஸ்தாபனம் அல்ல. இது ஜனநாயகரீதியான ஸ்தாபனம். ஜனநாயகத்தில் தலைவர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்களோ, அதை போல தான் இயக்கத் தோழர்கள், கழகச் செயலாளர்கள் எல்லாம் சேர்ந்து இவர் இந்தப் பொறுப்பு வகிக்க தகுதியானவர் என்று கருதினால் அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

யார்-யாரோ சேர்ந்து கொண்டு சில குடும்பங்கள் உருவாகின்றன:

கேள்வி: நீங்கள் குடும்ப அரசியலை ஊக்குவிக்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளதே?

கருணாநிதி: எனக்கு குடும்பம் இருப்பது தான் பெரிய தொல்லையே. என் குடும்பத்தைப் பற்றி பேசுபவர்கள், முதலில் அவர்களுக்கு குடும்பம் இருக்கிறதா இல்லையா என்பதைப் பார்க்க வேண்டும். குடும்பம் நடத்துவது என்றால் திருமணமாகி ஆணும், பெண்ணும் சேர்ந்து அவர்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகள், அண்ணன், தம்பி இவர்கள் தான் குடும்பம் என்று அர்த்தம் அல்ல.

துணைக்கு யார்-யாரோ சேர்ந்து கொண்டு சில குடும்பங்கள் உருவாகின்றன. நான் அப்படிப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல. ஒரு நேர்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன்.

கலைஞர் டிவி விவகாரம்-ஊழலே அல்ல:

கேள்வி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழலில் சிபிஐ உங்கள் மகளையும், மனைவியையும் விசாரித்ததோடு கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் கணக்குகளையும் விசாரித்துள்ளது. அதனால் எதிர்க்கட்சிகள் உங்களுக்கு தெரியாமல் எதுவும் இதிலே நடைபெற்றிருக்க முடியாது என்று சொல்கிறார்கள். இதற்கு என்ன பதில் கூறுகிறீர்கள்?

கருணாநிதி: இது ஊழலே அல்ல. இதைப் பற்றி பகிரங்கமாக எங்கள் பத்திரிகையிலே விளக்கம் வெளியிட்டுள்ளோம். கலைஞர் டி.வியில் என் பெயர் இடம் பெற்றிருக்கிறதே தவிர எனக்கு அதில் எந்தவிதமாக உரிமையும் கிடையாது. அதில் என்னுடைய மகள் (உதவியாளரிடம் விசாரித்து விட்டு) 20 சதவீதம் பங்குதாரர். என்னுடைய மனைவி தயாளு 60 சதவிகித பங்குதாரர்.

சரத்குமார் 20 சதவிகித பங்குதாரர். இந்த விவரத்தையே நான் விசாரித்து விட்டு தான் கூறுகிறேன் என்பதை நீங்கள் பார்க்கலாம். கலைஞர் டி.வி. கருணாநிதிக்கு சொந்தமானதல்ல. கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அதிலே பங்குதாரர்களாக இருக்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டு எழுந்தவுடனேயே அதைப் பற்றி பத்திரிகைகளில் சரத்குமார் ஒரு விளக்க அறிக்கையினைத் தந்திருக்கிறார்.

அது எல்லா பத்திரிகைகளிலும் வெளிவந்திருக்கிறது. ஒரு கடனை அடைப்பதற்காக ஒருவரிடம் கடன் பெற்றார்கள். பிறகு பெற்ற கடனை வட்டியோடு திருப்பிக் கொடுத்து விட்டார்கள். அதற்கான வருமான வரி தொகை எல்லாம் தரப்பட்டு அந்த ஆதாரங்களையும் காட்டியிருக்கிறார்கள். இதற்குப் பிறகு அது எப்படி ஊழலாகும் என்று எனக்குத் தெரியவில்லை.

பம்பையடிக்கும் அரசியல் பூசாரிகள்:

கேள்வி: இந்த ஊழல் குற்றச்சாட்டால் திமுகவின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விட்டதா?

கருணாநிதி: சைபர், சைபர், சைபர், சைபர் என்று போட்டு இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்கிறது என்று சொல்லும் போது ''பல்லுக்கு பல் இரு காதம், பல்லிடுக்கு மூன்று காதம்'' என்று அந்த காலத்தில் பூசாரிகள் பம்பை அடிப்பார்கள். அதைக் கேட்டு இன்னொருவர் ஆமாம், ஆமாம் என்பார். மக்களும் அதை கேட்டு தலையட்டிக் கொண்டிருப்பார்கள்.

'காதம்' என்றால் பத்து மைல் தொலைவு. பல்லுக்கு பல் இரு காதம் என்றால் இருபது மைல் தூரம். பல்லிடுக்கு மூன்று காதம் என்றால் முப்பது மைல். அந்த அளவிற்கு பல்லுக்கிடையே இடைவெளி என்றால் வாய் எந்த அளவிற்கு இருக்கும் என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்காமல், ஆமாம், ஆமாம் என்று ஒப்புக் கொண்டு பூசாரி பம்மை அடிப்பதைப் போல பாமர மக்களை ஏமாற்றிட ஒரு சில அரசியல்வாதிகள் பம்பை அடிக்கிறார்கள்.

அது தான் உண்மை என்று வேறு சிலர் பம்பை அடிக்கிறார்கள். அந்த விஷயத்தைப் பற்றி நான் விரிவாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகின்ற காரணத்தால் எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஊழலா, இல்லையா என்பதைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டியது உச்ச நீதிமன்றம். அதிலே நான் தலையிட விரும்பவில்லை.

அந்த நிறுவனத்துக்கு கடனைக் கொடுத்தவர்கள் மீது வழக்கு இருக்கலாம். கடன் வாங்கிய பணம் ஊழல் பணம் என்று சொல்வது முறையல்ல. அது நீண்ட விசாரணைக்கு பிறகுதான் தெரியும்.

இவ்வாறு தனது பேட்டியில் கருணாநிதி கூறியுள்ளார்.

நாகர்கோவில:""தேர்தலில் கொடுக்கும் வாக்குறுதிகளை கருணாநிதி நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உங்களிடம் இருக்கிறதா?'' என்று கேள்வி கேட்டு, பொது மக்களிடம் பதில் பெற்று ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.குமரி மாவட்டத்தில் ஆறு சட்டசபை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொண்டார்.
பல்வேறு கூட்டங்களில் அவர் பேசியதாவது:தேர்தலில் உரிமையோடு ஓட்டு கேட்க வந்துள்ளோம். நாங்கள் தேர்தலுக்காக மட்டும் வருபவர்கள் அல்ல. 2006ல் கூறிய வாக்குறுதிகள், 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சொன்னதை விட அதிகம் இந்த ஆட்சியில் செய்யப்பட்டுள்ளது. இப்போது சிலர், வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர். வானத்தையும், வைகுண்டத்தையும் இணைப்போம்; மணலை கயிறாகத் திரிப்போம் என்றெல்லாம் கூறி வருகின்றனர். ஆனால், தேர்தல் முடிந்தால் இவர்கள் கொடநாடு சென்று விடுவர்.இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று கூறி, ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்கினோம். உலகிலேயே உன்னதமான திட்டமான மருத்துவக் காப்பீடு திட்டம் இந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது.
ஜெயலலிதா ஆட்சியில் நிறுத்தப்பட்ட திருமண உதவித்தொகை திட்டம் 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது.ஆனால், இப்போது யார் எதுவெல்லாமோ சொல்லி வருகின்றனர். இவர்கள் எல்லாம் தேர்தலுக்கு பின் காணாமல் போய் விடுவர். தேர்தல் நேரத்தில் மட்டும் வருபவர்கள், தேர்தலுக்கு பின்னால் கொடநாட்டுக்கு சென்று விடுவர். தேர்தலுக்காக மட்டும் வருபவர்கள் நாங்கள் அல்ல. மக்களுடன் என்றும் இருக்கும் இயக்கம் தி.மு.க., தான்.தேர்தல் நேரத்தில் கொடுக்கும் வாக்குறுதிகளை முதல்வர் கருணாநிதி நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உங்களிடம் இருக்கிறதா? என்று பொது மக்களை பார்த்து கேட்ட போது இருக்கிறது... இருக்கிறது என்று மக்கள் குரல் கொடுத்தனர். அப்படியானால், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு தர வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

கருணாநிதி மீது நம்பிக்கை இருக்கிறதா?மக்களிடம் கேள்வி கேட்ட மு.க.ஸ்டாலின்

நாகர்கோவில:""தேர்தலில் கொடுக்கும் வாக்குறுதிகளை கருணாநிதி நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உங்களிடம் இருக்கிறதா?'' என்று கேள்வி கேட்டு, பொது மக்களிடம் பதில் பெற்று ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.குமரி மாவட்டத்தில் ஆறு சட்டசபை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொண்டார்.
பல்வேறு கூட்டங்களில் அவர் பேசியதாவது:தேர்தலில் உரிமையோடு ஓட்டு கேட்க வந்துள்ளோம். நாங்கள் தேர்தலுக்காக மட்டும் வருபவர்கள் அல்ல. 2006ல் கூறிய வாக்குறுதிகள், 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சொன்னதை விட அதிகம் இந்த ஆட்சியில் செய்யப்பட்டுள்ளது. இப்போது சிலர், வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர். வானத்தையும், வைகுண்டத்தையும் இணைப்போம்; மணலை கயிறாகத் திரிப்போம் என்றெல்லாம் கூறி வருகின்றனர். ஆனால், தேர்தல் முடிந்தால் இவர்கள் கொடநாடு சென்று விடுவர்.இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று கூறி, ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்கினோம். உலகிலேயே உன்னதமான திட்டமான மருத்துவக் காப்பீடு திட்டம் இந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது.
ஜெயலலிதா ஆட்சியில் நிறுத்தப்பட்ட திருமண உதவித்தொகை திட்டம் 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது.ஆனால், இப்போது யார் எதுவெல்லாமோ சொல்லி வருகின்றனர். இவர்கள் எல்லாம் தேர்தலுக்கு பின் காணாமல் போய் விடுவர். தேர்தல் நேரத்தில் மட்டும் வருபவர்கள், தேர்தலுக்கு பின்னால் கொடநாட்டுக்கு சென்று விடுவர். தேர்தலுக்காக மட்டும் வருபவர்கள் நாங்கள் அல்ல. மக்களுடன் என்றும் இருக்கும் இயக்கம் தி.மு.க., தான்.தேர்தல் நேரத்தில் கொடுக்கும் வாக்குறுதிகளை முதல்வர் கருணாநிதி நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உங்களிடம் இருக்கிறதா? என்று பொது மக்களை பார்த்து கேட்ட போது இருக்கிறது... இருக்கிறது என்று மக்கள் குரல் கொடுத்தனர். அப்படியானால், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு தர வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

சிறுபான்மை சமூக புரட்சி இயக்கத்தின் முப்பெரும் விழா தியாகராய நகரில் அவ்வியக்கத்தின் தலைவர் லியாகத்அலிகான் தலைமையில் நடந்தது. அன்பு செரீப், கே.ஏ.நாகூர் மீரான் வரவேற்றனர். விழாவில் துணை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞர் ஓர் காவியம் என்ற நூலை வெளியிட்டார்.லியாகத் அலி கான் பெற்றுக் கொண்டார். விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

சிறுபான்மை சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீட்டை 58 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று ஏற்கனவே முதல்வர் அறிவித்துள்ளார். ஜெயலலிதா தி.மு.க. ஆட்சியை மைனாரிட்டி அரசு என்று கூறுகிறார்.

இது மைனாரிட்டி மக்களுக்கு பாடுபடும் அரசாக உள்ளது. எனவே அவர் மைனாரிட்டி அரசு என்று பேசுவதால் வருத்தம் இல்லை. இந்த அரசை தேர்தலில் மக்கள் மெஜாரிட்டியாக மாற்ற வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தி.மு.க. அரசு உறுதுணையாக இருக்கும்.சிறுபான்மை மக்கள் பொருளாதார மேம்பாட்டு கழகம் உருவாக்கப்பட்டு உள்ளது.உலமாக்கள் நல வாரியமும் அமைக்கப்பட்டு உள்ளது.

தி.மு.க. வேட்பாளர் பட்டியலை முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ளார். அ.தி. மு.க கூட்டணியின் குழப்ப நிலைப்பற்றி நிருபர்கள் முதல்வரிடம் கருத்து கேட்ட போது குழப்பத்தை கண்டு மகிழ்ச்சி அடையவில்லை என்று பெருந்தன்மையுடன் குறிப்பிட்டார். அந்த மன நிலையில் நாம் இருக்கிறோம்.

தேர்தல் களத்தில் பலம் வாய்ந்த எதிரி இருக்க வேண்டும். அப்போது தான் உற்சாகமும் சுறு சுறுப்பும் ஏற்படும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். நிர்வாகிகள் வி.ராமலிங்கம், முகமது யாசின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேர்தல் களத்தில் பலமான எதிரி வேண்டும்: அ.தி.மு.க. கூட்டணி குழப்பத்தால் மகிழ்ச்சி அடையவில்லை; மு.க.ஸ்டாலின் பேச்சு

சிறுபான்மை சமூக புரட்சி இயக்கத்தின் முப்பெரும் விழா தியாகராய நகரில் அவ்வியக்கத்தின் தலைவர் லியாகத்அலிகான் தலைமையில் நடந்தது. அன்பு செரீப், கே.ஏ.நாகூர் மீரான் வரவேற்றனர். விழாவில் துணை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞர் ஓர் காவியம் என்ற நூலை வெளியிட்டார்.லியாகத் அலி கான் பெற்றுக் கொண்டார். விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

சிறுபான்மை சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீட்டை 58 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று ஏற்கனவே முதல்வர் அறிவித்துள்ளார். ஜெயலலிதா தி.மு.க. ஆட்சியை மைனாரிட்டி அரசு என்று கூறுகிறார்.

இது மைனாரிட்டி மக்களுக்கு பாடுபடும் அரசாக உள்ளது. எனவே அவர் மைனாரிட்டி அரசு என்று பேசுவதால் வருத்தம் இல்லை. இந்த அரசை தேர்தலில் மக்கள் மெஜாரிட்டியாக மாற்ற வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தி.மு.க. அரசு உறுதுணையாக இருக்கும்.சிறுபான்மை மக்கள் பொருளாதார மேம்பாட்டு கழகம் உருவாக்கப்பட்டு உள்ளது.உலமாக்கள் நல வாரியமும் அமைக்கப்பட்டு உள்ளது.

தி.மு.க. வேட்பாளர் பட்டியலை முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ளார். அ.தி. மு.க கூட்டணியின் குழப்ப நிலைப்பற்றி நிருபர்கள் முதல்வரிடம் கருத்து கேட்ட போது குழப்பத்தை கண்டு மகிழ்ச்சி அடையவில்லை என்று பெருந்தன்மையுடன் குறிப்பிட்டார். அந்த மன நிலையில் நாம் இருக்கிறோம்.

தேர்தல் களத்தில் பலம் வாய்ந்த எதிரி இருக்க வேண்டும். அப்போது தான் உற்சாகமும் சுறு சுறுப்பும் ஏற்படும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். நிர்வாகிகள் வி.ராமலிங்கம், முகமது யாசின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தி.மு.க., தேர்தல் பணியை கண்காணிக்க, ஒன்றிய, நகர நிர்வாகிகளிடம் போனில் தொடர்பு கொண்டு, துணை முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். சுவர் விளம்பரம் முதல், பூத் கமிட்டி பணப்பட்டுவாடா வரை, துணை முதல்வரே நேரடியாக களமிறங்கியுள்ளதால், எதிர்க்கட்சியினர் கலக்கமடைந்துள்ளனர். சட்டசபை தேர்தலையொட்டி, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

அ.தி.மு.க.,வுடன், தே.மு.தி.க., - ம.தி.மு.க., - இ.கம்யூ., மற்றும் மா.கம்யூ., - புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள், கூட்டணி அமைத்துள்ளன. தி.மு.க.,வில் கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. இதனிடையே, மாவட்டம் தோறும், வார்டு மற்றும் கிளைகளில் தி.மு.க., - அ.தி.மு.க., - காங்., - தே.மு.தி.க., - பா.ம.க., - வி.சி., - இ.ஜ.க., வாக்காளர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்கள் குறித்த விவரங்கள், தி.மு.க., தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பூத் கமிட்டிகளுக்கு தலா, 3,000 ரூபாய் வரை, மாவட்ட நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்கள் மூலம், கடந்த ஒரு வாரமாக வழங்கப்படுகிறது. அந்த தொகையில், சுவர் விளம்பரம் ரிசர்வ் செய்தல் மற்றும் எழுதுதல் வேண்டும் என, கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. தமிழக துணை முதல்வர் ஸ்டாலின், ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள நகரம், ஒன்றிய செயலர்களின் மொபைல் போனில் தொடர்பு கொண்டு, தேர்தல் பணி நிலவரம் குறித்து பேசி வருகிறார்.
தொகுதியிலுள்ள பூத் கமிட்டி எண்ணிக்கை, ஒன்றிய மற்றும் நகர பகுதி பூத் எண்ணிக்கை விவரமும், பூத் கமிட்டிக்கு தொகை பட்டுவாடா மற்றும் சுவர் விளம்பர பணி பற்றி கேட்டு வருகிறார். அதனால் ஒன்றிய, நகர நிர்வாகிகள் உற்சாகத்துடன் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையறிந்த, எதிர்க்கட்சியினர் பெரிதும் கலக்கத்தில் உள்ளனர்.

தேர்தல் பணிகளில் களமிறங்கிய துணை முதல்வர் : தி.மு.க.,வினர் உற்சாகம் எதிர்க்கட்சிகள் "ஷாக்'

தி.மு.க., தேர்தல் பணியை கண்காணிக்க, ஒன்றிய, நகர நிர்வாகிகளிடம் போனில் தொடர்பு கொண்டு, துணை முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். சுவர் விளம்பரம் முதல், பூத் கமிட்டி பணப்பட்டுவாடா வரை, துணை முதல்வரே நேரடியாக களமிறங்கியுள்ளதால், எதிர்க்கட்சியினர் கலக்கமடைந்துள்ளனர். சட்டசபை தேர்தலையொட்டி, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

அ.தி.மு.க.,வுடன், தே.மு.தி.க., - ம.தி.மு.க., - இ.கம்யூ., மற்றும் மா.கம்யூ., - புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள், கூட்டணி அமைத்துள்ளன. தி.மு.க.,வில் கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. இதனிடையே, மாவட்டம் தோறும், வார்டு மற்றும் கிளைகளில் தி.மு.க., - அ.தி.மு.க., - காங்., - தே.மு.தி.க., - பா.ம.க., - வி.சி., - இ.ஜ.க., வாக்காளர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்கள் குறித்த விவரங்கள், தி.மு.க., தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பூத் கமிட்டிகளுக்கு தலா, 3,000 ரூபாய் வரை, மாவட்ட நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்கள் மூலம், கடந்த ஒரு வாரமாக வழங்கப்படுகிறது. அந்த தொகையில், சுவர் விளம்பரம் ரிசர்வ் செய்தல் மற்றும் எழுதுதல் வேண்டும் என, கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. தமிழக துணை முதல்வர் ஸ்டாலின், ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள நகரம், ஒன்றிய செயலர்களின் மொபைல் போனில் தொடர்பு கொண்டு, தேர்தல் பணி நிலவரம் குறித்து பேசி வருகிறார்.
தொகுதியிலுள்ள பூத் கமிட்டி எண்ணிக்கை, ஒன்றிய மற்றும் நகர பகுதி பூத் எண்ணிக்கை விவரமும், பூத் கமிட்டிக்கு தொகை பட்டுவாடா மற்றும் சுவர் விளம்பர பணி பற்றி கேட்டு வருகிறார். அதனால் ஒன்றிய, நகர நிர்வாகிகள் உற்சாகத்துடன் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையறிந்த, எதிர்க்கட்சியினர் பெரிதும் கலக்கத்தில் உள்ளனர்.

டெல்லி: துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி வந்துள்ளார். அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவை சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டாலின் பயணம் தொடர்பாக துணை முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 7 மணிக்கு டெல்லி தாஜ்பேலஸ் ஹோட்டலில் ஒரு தொலைக்காட்சி சார்பில் நடைபெறவுள்ள வைர மாநிலங்களுக்கான விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்தப் பயணத்தின்போது திகார் சிறைக்குச் சென்று ராசாவை ஸ்டாலின் சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன் ராசாவை திமுக எம்பி டி.ஆர்.பாலு சந்தித்து நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 17ம் தேதி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ராசா பல நாள் சிபிஐ காவலுக்குப் பின்னர் மார்ச் 3ம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட உத்தரவிடப்பட்டார். இதையடுத்து தற்போது அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ராசாவின் சகோதரரிடம் அமலாக்க பிரிவினர் விசாரணை:

இந் நிலையில் ராசாவின் அண்ணன் கலியபெருமாளிடம் அமலாக்க பிரிவு அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதே போல ராசாவின் நண்பர் சாதிக் பாட்சாவிடம் சிபிஐ மீண்டும் விசாரணை நடத்தியது.

கலியபெருமாளின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ மற்றும் மத்திய அமலாக்க பிரிவு அதிகாரிகள் ஏற்கனவே சோதனை நடத்தி உள்ளனர். இந் நிலையில், கலியபெருமாள் நேற்று டெல்லியில் உள்ள அமலாக்க பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். அவர் பொறுப்பில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் பண பரிமாற்றம் குறித்து 3 மணி நேரத்துக்கு மேல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று தெரிகிறது.

இதற்கிடையே, ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சாவிடம் சிபிஐ நேற்று மீண்டும் விசாரணை நடத்தியது. டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இந்த விசாரணை நடைபெற்றது. சாதிக் பாட்சா, `கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ்' என்ற ஏற்றுமதி நிறுவனத்தையும், பல்வேறு ரியல் எஸ்டேட் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இவரது அலுவலகங்களில் ஏற்கனவே சிபிஐ சோதனை நடத்தியுள்ளது.

சாதிக் பாட்சாவிடம் நேற்று நடைபெற்ற விசாரணையில், அவரது நிறுவனங்களின் பண விவகாரம், அவருக்கும், ஆ.ராசாவுக்கும் இடையிலான நெருக்கம் ஆகியவை குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

லூப் டெலிகாம் அதிகாரியிடம் சிபிஐ விசாரணை:

இந் நிலையில் கலியபெருமாள், லூப் டெலிகாம் தலைமை செயலதிகாரி சந்தீப் பாசு ஆகியோரிடம் இன்று சிபிஐ விசாரணை நடத்தியது.

பாதுகாப்பு அச்சுறுத்தல்-சுப்பிரமணிய சாமி வழக்கு:

இந் நிலையில் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்ற, துபாயில் செயல்படும் ஸ்வான் நிறுவனத்துக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்துடன் தொடர்பு இருப்பதால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி குற்றம் சாட்டி இருந்தார். அது குறித்து விளக்கம் அளிக்கும்படியும் சிபிஐ நீதிமன்றம் கூறியிருந்தது.

அதன்படி, தனது விசாரணை அறிக்கையை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆனால், சுப்பிரமணிய சாமி எழுப்பிய பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து அந்த அறிக்கையில் எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை. சுப்பிரமணிய சாமியின் அந்த புகார் மனுவின் விவரம் கிடைக்காததால், பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக தங்களுக்கு எதுவும் தெரியாது என்று அறிக்கையில் சிபிஐ குறிப்பிட்டுள்ளது.

திகார் சிறையில் இன்று ராசாவை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்?

டெல்லி: துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி வந்துள்ளார். அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவை சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டாலின் பயணம் தொடர்பாக துணை முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 7 மணிக்கு டெல்லி தாஜ்பேலஸ் ஹோட்டலில் ஒரு தொலைக்காட்சி சார்பில் நடைபெறவுள்ள வைர மாநிலங்களுக்கான விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்தப் பயணத்தின்போது திகார் சிறைக்குச் சென்று ராசாவை ஸ்டாலின் சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன் ராசாவை திமுக எம்பி டி.ஆர்.பாலு சந்தித்து நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 17ம் தேதி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ராசா பல நாள் சிபிஐ காவலுக்குப் பின்னர் மார்ச் 3ம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட உத்தரவிடப்பட்டார். இதையடுத்து தற்போது அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ராசாவின் சகோதரரிடம் அமலாக்க பிரிவினர் விசாரணை:

இந் நிலையில் ராசாவின் அண்ணன் கலியபெருமாளிடம் அமலாக்க பிரிவு அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதே போல ராசாவின் நண்பர் சாதிக் பாட்சாவிடம் சிபிஐ மீண்டும் விசாரணை நடத்தியது.

கலியபெருமாளின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ மற்றும் மத்திய அமலாக்க பிரிவு அதிகாரிகள் ஏற்கனவே சோதனை நடத்தி உள்ளனர். இந் நிலையில், கலியபெருமாள் நேற்று டெல்லியில் உள்ள அமலாக்க பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். அவர் பொறுப்பில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் பண பரிமாற்றம் குறித்து 3 மணி நேரத்துக்கு மேல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று தெரிகிறது.

இதற்கிடையே, ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சாவிடம் சிபிஐ நேற்று மீண்டும் விசாரணை நடத்தியது. டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இந்த விசாரணை நடைபெற்றது. சாதிக் பாட்சா, `கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ்' என்ற ஏற்றுமதி நிறுவனத்தையும், பல்வேறு ரியல் எஸ்டேட் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இவரது அலுவலகங்களில் ஏற்கனவே சிபிஐ சோதனை நடத்தியுள்ளது.

சாதிக் பாட்சாவிடம் நேற்று நடைபெற்ற விசாரணையில், அவரது நிறுவனங்களின் பண விவகாரம், அவருக்கும், ஆ.ராசாவுக்கும் இடையிலான நெருக்கம் ஆகியவை குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

லூப் டெலிகாம் அதிகாரியிடம் சிபிஐ விசாரணை:

இந் நிலையில் கலியபெருமாள், லூப் டெலிகாம் தலைமை செயலதிகாரி சந்தீப் பாசு ஆகியோரிடம் இன்று சிபிஐ விசாரணை நடத்தியது.

பாதுகாப்பு அச்சுறுத்தல்-சுப்பிரமணிய சாமி வழக்கு:

இந் நிலையில் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்ற, துபாயில் செயல்படும் ஸ்வான் நிறுவனத்துக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்துடன் தொடர்பு இருப்பதால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி குற்றம் சாட்டி இருந்தார். அது குறித்து விளக்கம் அளிக்கும்படியும் சிபிஐ நீதிமன்றம் கூறியிருந்தது.

அதன்படி, தனது விசாரணை அறிக்கையை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆனால், சுப்பிரமணிய சாமி எழுப்பிய பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து அந்த அறிக்கையில் எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை. சுப்பிரமணிய சாமியின் அந்த புகார் மனுவின் விவரம் கிடைக்காததால், பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக தங்களுக்கு எதுவும் தெரியாது என்று அறிக்கையில் சிபிஐ குறிப்பிட்டுள்ளது.

தமிழக துணை-முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு திருச்சிக்கு சென்னையில் இருந்து கிங்பிஷர் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகிறார். இரவு 11.55 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, செல்வராஜ், எம்.எல்.ஏ.க்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன், துணை மேயர் அன்பழகன், மற்றும் தி.மு.க.வினர் வரவேற்பு கொடுகிறார்கள்.

இரவு திருச்சி சுற்றுலா மாளிகையில் மு.க.ஸ்டாலின் தங்கி ஓய்வு எடுக்கிறார். நாளை காலை கார் மூலம் பெரம்பலூர் செல்கிறார். அங்கு துறைமங்கலத்தில் கலைஞர் அரங்கத்தில் நடக்கும் அமைச்சர் செல்வராஜ், இல்ல திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசுகிறார். அதன் பிறகு கார் மூலம் மீண்டும் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி வருகையையொட்டி விமான நிலையம், சுற்றுலா மாளிகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி வருகை

தமிழக துணை-முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு திருச்சிக்கு சென்னையில் இருந்து கிங்பிஷர் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகிறார். இரவு 11.55 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, செல்வராஜ், எம்.எல்.ஏ.க்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன், துணை மேயர் அன்பழகன், மற்றும் தி.மு.க.வினர் வரவேற்பு கொடுகிறார்கள்.

இரவு திருச்சி சுற்றுலா மாளிகையில் மு.க.ஸ்டாலின் தங்கி ஓய்வு எடுக்கிறார். நாளை காலை கார் மூலம் பெரம்பலூர் செல்கிறார். அங்கு துறைமங்கலத்தில் கலைஞர் அரங்கத்தில் நடக்கும் அமைச்சர் செல்வராஜ், இல்ல திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசுகிறார். அதன் பிறகு கார் மூலம் மீண்டும் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி வருகையையொட்டி விமான நிலையம், சுற்றுலா மாளிகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

முக நூல்

Popular Posts