background img

புதிய வரவு

Showing posts with label Police. Show all posts
Showing posts with label Police. Show all posts
கவர்ச்சி கன்னியாக, கனவு தேவதையாக இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த நாயகி நமீதா, ஹீரோவாக களம் இறங்குகிறார் என்றால் நம்பமுடியாமல் தான் இருக்கும், இனி அவர் தூங்காமல் இருக்கப் போகிறார், பிரியம் கிரியேஷன்ஸ் சார்பில், எஸ்.ஆர்.மனோகரன் தயாரிப்பில், பிரபல இயக்குநர் மங்கை அரிராஜன் இயக்கத்தில் நமீதா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

சாதாரண கேரக்டரில் இல்ல, காக்கி சட்டையில் கலக்கப் போகிறாராம். இதற்காக சிறப்பு பயிற்சியும் எடுத்து வருகிறார் நமீதா. "இ‌ளமை ஊஞ்சல்" என்ற பெயரில் தொடங்கவிருக்கும் இப்படம், சென்னை, பெங்களூரு, ஹைதரபாத், மற்றும் பிரான்சில் படமாக்க உள்ளனர். மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம்.

ஹீரோவாகிறார் நமீதா!

கவர்ச்சி கன்னியாக, கனவு தேவதையாக இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த நாயகி நமீதா, ஹீரோவாக களம் இறங்குகிறார் என்றால் நம்பமுடியாமல் தான் இருக்கும், இனி அவர் தூங்காமல் இருக்கப் போகிறார், பிரியம் கிரியேஷன்ஸ் சார்பில், எஸ்.ஆர்.மனோகரன் தயாரிப்பில், பிரபல இயக்குநர் மங்கை அரிராஜன் இயக்கத்தில் நமீதா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

சாதாரண கேரக்டரில் இல்ல, காக்கி சட்டையில் கலக்கப் போகிறாராம். இதற்காக சிறப்பு பயிற்சியும் எடுத்து வருகிறார் நமீதா. "இ‌ளமை ஊஞ்சல்" என்ற பெயரில் தொடங்கவிருக்கும் இப்படம், சென்னை, பெங்களூரு, ஹைதரபாத், மற்றும் பிரான்சில் படமாக்க உள்ளனர். மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், இன்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், அவர் போலீஸ் பாதுகாப்பை ஏற்றுக்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அ.தி.மு.க., கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க., 29 எம்.எல்.ஏ.,க் களை பெற்றுள்ளது. ஆட்சியில் இருந்த தி.மு.க., எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளதால், அதிக எம்.எல்.ஏ.,க்கள் கொண்ட இரண்டாவது பெரிய கட்சியாக தே.மு.தி.க., உருவெடுத்துள்ளது. தே.மு.தி.க.,வின் இந்த எதிர்பாராத வெற்றியால், அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார். அவருக்கு பல தரப்பில் இருந்து வாழ்த்து குவிந்து வருகிறது. நேற்று ச.ம.க., தலைவர் நடிகர் சரத்குமார், விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, விரைவில் நடக்கவுள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். விவசாய சங்கத்தினர், போலீஸ் உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள் என பல தரப்பட்டவர்களும் விஜயகாந்திற்கு நேரிலும், தொலைபேசி வழியாகவும் வாழ்த்து தெரிவித்தனர்.

தே.மு.தி.க., தலைமை அலுவலக செய்திக்குறிப்பில்,"தே.மு.தி.க., சட்டசபை தலைவராக விஜயகாந்த், துணைத் தலைவராக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், கொறடாவாக கொள்கை பரப்பு செயலர் சந்திரகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்பவர்களுக்கு, அமைச்சர் அந்தஸ்தில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்தப்பட்ட அரசு வாகனம், போலீஸ் பாதுகாப்பு, அரசு வீடு ஆகியவை வழங்கப்படுவது வழக்கம். ஆனால், விஜயகாந்த், போலீஸ் பாதுகாப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார் என அக்கட்சியினர் ஆணித்தரமாக தெரிவிக்கின்றனர். இதனால், விஜயகாந்த் போலீஸ் பாதுகாப்பை ஏற்றுக்கொள்வாரா என்பதில் கேள்வி எழுந்துள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் போலீஸ் பாதுகாப்பை ஏற்பாரா?

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், இன்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், அவர் போலீஸ் பாதுகாப்பை ஏற்றுக்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அ.தி.மு.க., கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க., 29 எம்.எல்.ஏ.,க் களை பெற்றுள்ளது. ஆட்சியில் இருந்த தி.மு.க., எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளதால், அதிக எம்.எல்.ஏ.,க்கள் கொண்ட இரண்டாவது பெரிய கட்சியாக தே.மு.தி.க., உருவெடுத்துள்ளது. தே.மு.தி.க.,வின் இந்த எதிர்பாராத வெற்றியால், அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார். அவருக்கு பல தரப்பில் இருந்து வாழ்த்து குவிந்து வருகிறது. நேற்று ச.ம.க., தலைவர் நடிகர் சரத்குமார், விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, விரைவில் நடக்கவுள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். விவசாய சங்கத்தினர், போலீஸ் உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள் என பல தரப்பட்டவர்களும் விஜயகாந்திற்கு நேரிலும், தொலைபேசி வழியாகவும் வாழ்த்து தெரிவித்தனர்.

தே.மு.தி.க., தலைமை அலுவலக செய்திக்குறிப்பில்,"தே.மு.தி.க., சட்டசபை தலைவராக விஜயகாந்த், துணைத் தலைவராக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், கொறடாவாக கொள்கை பரப்பு செயலர் சந்திரகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்பவர்களுக்கு, அமைச்சர் அந்தஸ்தில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்தப்பட்ட அரசு வாகனம், போலீஸ் பாதுகாப்பு, அரசு வீடு ஆகியவை வழங்கப்படுவது வழக்கம். ஆனால், விஜயகாந்த், போலீஸ் பாதுகாப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார் என அக்கட்சியினர் ஆணித்தரமாக தெரிவிக்கின்றனர். இதனால், விஜயகாந்த் போலீஸ் பாதுகாப்பை ஏற்றுக்கொள்வாரா என்பதில் கேள்வி எழுந்துள்ளது.

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றும் பெண் போலீஸ் வள்ளி தன்னுடன் பணிபுரிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் செக்ஸ் தொல்லைகள் கொடுத்ததாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் பெண் ஊழியர்கள் மீதான செக்ஸ் புகார் தொடர்பாக உச்சநீதிமன்ற ஆணைப்படி கமிட்டி அமைக்கப்படவில்லை என்றும் கூறியிருந்தார்.

வள்ளி மீதான புகார் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இரவு 7 மணிக்கு தொடங்கிய விசாரணை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்து வள்ளியின் தரப்பு வக்கீல் மணிகண்டன் சென்னை ஐகோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இது குறித்து வக்கீல் மணிகண்டன் கூறியதாவது:-

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் போலீசுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் தொடர்பாக விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட வில்லை. இந்த நிலையில் குழு இருப்பது போன்று அதிகாரிகள் வள்ளியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனுக்கு நோட்டீஷ் அனுப்பப்பட்டது.

ஆனால் அதற்கு பதில் வரவில்லை. இதையடுத்து டி.ஜி.பி.போலோநாத் மற்றும் விசாரணை செய்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, சூப்பிரண்டின் நேர்முக உதவியாளர் ராஜேஸ்வார், துணை போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி, தொண்டு நிறுவன தலைவி கலைவாணி, இன்ஸ்பெக்டர் வேலுமணி மற்றும் அரசியில் பிரமுகர் ஒருவர் உள்பட 8 பேர் மீது ஐகோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே வள்ளி தன்னை வேலை செய்ய விடாமல் தடுத்ததாக உள்துறை செயலாளருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூலம் ஒரு புகார் மனு கொடுத்து அனுப்பினார். அந்த மனுவை சூப்பிரண்டு திருப்பி அனுப்பி விட்டதாகவும், இன்ஸ்பெக்டர் மூலம் அந்த மனுவை அனுப்பும்படி கேட்டுக்கொண்டதாகவும் கூறுப்படுகிறது.

பெண் போலீசிடம் நள்ளிரவு விசாரணை: டி.ஜி.பி, எஸ்.பி. மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றும் பெண் போலீஸ் வள்ளி தன்னுடன் பணிபுரிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் செக்ஸ் தொல்லைகள் கொடுத்ததாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் பெண் ஊழியர்கள் மீதான செக்ஸ் புகார் தொடர்பாக உச்சநீதிமன்ற ஆணைப்படி கமிட்டி அமைக்கப்படவில்லை என்றும் கூறியிருந்தார்.

வள்ளி மீதான புகார் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இரவு 7 மணிக்கு தொடங்கிய விசாரணை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்து வள்ளியின் தரப்பு வக்கீல் மணிகண்டன் சென்னை ஐகோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இது குறித்து வக்கீல் மணிகண்டன் கூறியதாவது:-

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் போலீசுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் தொடர்பாக விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட வில்லை. இந்த நிலையில் குழு இருப்பது போன்று அதிகாரிகள் வள்ளியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனுக்கு நோட்டீஷ் அனுப்பப்பட்டது.

ஆனால் அதற்கு பதில் வரவில்லை. இதையடுத்து டி.ஜி.பி.போலோநாத் மற்றும் விசாரணை செய்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, சூப்பிரண்டின் நேர்முக உதவியாளர் ராஜேஸ்வார், துணை போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி, தொண்டு நிறுவன தலைவி கலைவாணி, இன்ஸ்பெக்டர் வேலுமணி மற்றும் அரசியில் பிரமுகர் ஒருவர் உள்பட 8 பேர் மீது ஐகோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே வள்ளி தன்னை வேலை செய்ய விடாமல் தடுத்ததாக உள்துறை செயலாளருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூலம் ஒரு புகார் மனு கொடுத்து அனுப்பினார். அந்த மனுவை சூப்பிரண்டு திருப்பி அனுப்பி விட்டதாகவும், இன்ஸ்பெக்டர் மூலம் அந்த மனுவை அனுப்பும்படி கேட்டுக்கொண்டதாகவும் கூறுப்படுகிறது.

வாகன சோதனையில் கார்களில் சிக்கிய ரூ.92 லட்சம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் போலீசார் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இந்த தேர்தலில் பண புழக்கத்தை தடுக்க தேர்தல் கமிஷன் பல்வேறு புதிய கட்டுபாடுகளை விதித்துள்ளது. எனவே சோதனை சாவடிகளில் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காரை மடக்கி சோதனை போட்டனர். காரில் ஆர்.எம்.காலனியை சேர்ந்த தென்னவன் (வயது31), சண்முகம் (50) ஆகியோர் இருந்தனர். அவர்கள் வைத்திருந்த சூட்கேசை திறந்து பார்த்தபோது ரூ.34 லட்சம் பணக்கட்டுகள் இருந்தன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நிலம் வாங்குவதற்காக பணம் கொண்டு செல்வதாக தென்னவன் தெரிவித்தார். ஆனாலும் தேர்தல் நேரததில் ரூ.1 லட்சத்துக்கு மேல் கொண்டு செல்ல தடை இருந்தும் ரூ.34 லட்சம் சிக்கியுள்ளதால் இந்த பணத்தை அரசு கருவூலத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணம் கொண்டு வரப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேர்தல் சிறப்பு ரோந்து படையினர் செக்கானூரணி அருகே மீனாட்சிபுரம் ரெயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுரையில் இருந்து வந்த மாருதி காரை மடக்கி சோதனை நடத்தியதில் 2 மூடைகளில் பணக்கட்டுகள் இருந்தன. பணம் கொண்டு வந்த ஜெயக்குமார் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் ஜெயக்குமார் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தில் பணி புரிவதாகவும், உசிலம் பட்டியில் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு ரூ.58 லட்சத்தை எடுத்து செல்வதாகவும் தெரிவித்தார். இதையடுத்து சிறப்பு படையினர் ரூ.58 லட்சத்தையும் ஜெயக்குமாரிடம் கொடுத்து அனுப்பினர். ஒரே நாள் சோதனையில் திண்டுக்கல்- உசிலம்பட்டியில் ரூ.92 லட்சம் பணக் கட்டுகள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாகன சோதனையில் பண மூடைகள்: கார்களில் சிக்கிய ரூ.92 லட்சம்; திண்டுக்கல்-உசிலம்பட்டியில் பரபரப்பு

வாகன சோதனையில் கார்களில் சிக்கிய ரூ.92 லட்சம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் போலீசார் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இந்த தேர்தலில் பண புழக்கத்தை தடுக்க தேர்தல் கமிஷன் பல்வேறு புதிய கட்டுபாடுகளை விதித்துள்ளது. எனவே சோதனை சாவடிகளில் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காரை மடக்கி சோதனை போட்டனர். காரில் ஆர்.எம்.காலனியை சேர்ந்த தென்னவன் (வயது31), சண்முகம் (50) ஆகியோர் இருந்தனர். அவர்கள் வைத்திருந்த சூட்கேசை திறந்து பார்த்தபோது ரூ.34 லட்சம் பணக்கட்டுகள் இருந்தன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நிலம் வாங்குவதற்காக பணம் கொண்டு செல்வதாக தென்னவன் தெரிவித்தார். ஆனாலும் தேர்தல் நேரததில் ரூ.1 லட்சத்துக்கு மேல் கொண்டு செல்ல தடை இருந்தும் ரூ.34 லட்சம் சிக்கியுள்ளதால் இந்த பணத்தை அரசு கருவூலத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணம் கொண்டு வரப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேர்தல் சிறப்பு ரோந்து படையினர் செக்கானூரணி அருகே மீனாட்சிபுரம் ரெயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுரையில் இருந்து வந்த மாருதி காரை மடக்கி சோதனை நடத்தியதில் 2 மூடைகளில் பணக்கட்டுகள் இருந்தன. பணம் கொண்டு வந்த ஜெயக்குமார் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் ஜெயக்குமார் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தில் பணி புரிவதாகவும், உசிலம் பட்டியில் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு ரூ.58 லட்சத்தை எடுத்து செல்வதாகவும் தெரிவித்தார். இதையடுத்து சிறப்பு படையினர் ரூ.58 லட்சத்தையும் ஜெயக்குமாரிடம் கொடுத்து அனுப்பினர். ஒரே நாள் சோதனையில் திண்டுக்கல்- உசிலம்பட்டியில் ரூ.92 லட்சம் பணக் கட்டுகள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் ஆட்டம் வருகிற 12-ந்தேதி நாக்பூரில் நடக்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் இன்று நடந்தது. டிக்கெட் வாங்க ஏராளமான ரசிகர்கள் திரண்டு இருந்தனர். குறைவான டிக்கெட்டுகளே இருந்ததால் சில ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு முன்னே சென்றனர்.

சில ரசிகர்கள் டிக்கெட் கிடைப்பதற்காக போலீசாருடன் தகராறு செய்தனர். ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினார்கள். பலமுறை லேசான தடியடி நடத்தப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு முன்பு இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டிக்கான பெங்களூரில் நடந்த டிக்கெட் விற்பனையிலும் ரசிகர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மற்ற எந்த விளையாட்டுக்கும் இல்லாத அதிக அளவு புகழ் கிரிக்கெட்டுக்கு உள்ளது. அதுவும் உலக கோப்பை என்பதால் எப்படியாவது மைதானத்துக்கு சென்று பார்த்து விட வேண்டும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். டிக்கெட் எண்ணிக்கையே குறைவு. ஆனால் அதை வாங்குவதற்கு திரளுவதோ ஏராளமான கூட்டம். இதன் காரணமாகத்தான் கூட்டத்தை கட்டுப்படுத்த தடியடி சம்பவம் நடைபெறுகிறது.

நாக்பூரில் 12-ந்தேதி போட்டி: டிக்கெட் விற்பனையில் ரகளை; ரசிகர்கள் மீது தடியடி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் ஆட்டம் வருகிற 12-ந்தேதி நாக்பூரில் நடக்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் இன்று நடந்தது. டிக்கெட் வாங்க ஏராளமான ரசிகர்கள் திரண்டு இருந்தனர். குறைவான டிக்கெட்டுகளே இருந்ததால் சில ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு முன்னே சென்றனர்.

சில ரசிகர்கள் டிக்கெட் கிடைப்பதற்காக போலீசாருடன் தகராறு செய்தனர். ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினார்கள். பலமுறை லேசான தடியடி நடத்தப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு முன்பு இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டிக்கான பெங்களூரில் நடந்த டிக்கெட் விற்பனையிலும் ரசிகர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மற்ற எந்த விளையாட்டுக்கும் இல்லாத அதிக அளவு புகழ் கிரிக்கெட்டுக்கு உள்ளது. அதுவும் உலக கோப்பை என்பதால் எப்படியாவது மைதானத்துக்கு சென்று பார்த்து விட வேண்டும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். டிக்கெட் எண்ணிக்கையே குறைவு. ஆனால் அதை வாங்குவதற்கு திரளுவதோ ஏராளமான கூட்டம். இதன் காரணமாகத்தான் கூட்டத்தை கட்டுப்படுத்த தடியடி சம்பவம் நடைபெறுகிறது.

ஆலந்தூர் : மது விலக்கு போலீசாரின் தொடர் முயற்சியில், 62 ஆண்டுகளாக சாராயம் காய்ச்சுவதை குடிசைத் தொழிலாக செய்து வந்த கிராம மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.


சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள வடக்கு மலையம்பாக்கம் கிராமம் இருந்தது. இங்கு, கடந்த 1947ம் ஆண்டு முதல் வீட்டுக்கு வீடு குடிசை தொழிலாக சாராயத்தை காய்ச்சத் துவங்கினர்.கணவன்மார்கள் காய்ச்சும் சாராயத்தை மனைவிமார்கள் விற்பனை செய்தனர். வடக்கு மலையம்பாக்கம் சாராயத்தை ருசிக்க, மாங்காடு, நசரத்பேட்டை, பூந்தமல்லி, குன்றத்தூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து குடிமகன்கள் குவிந்தனர். போலீசார் ரெய்டு நடத்தும் போது தலைமறைவாகிவிடுவதும், போலீசார் சென்றபின், மீண்டும் தங்கள் தொழிலை துவங்குவதும் இங்கு வழக்கமாக இருந்தது.பல நேரங்களில் ஏமாற்றத்துடன் போலீசாருக்கு, சில நேரங்களில், அதிர்ச்சி அளிக்கும் வகையில், தாக்குதலிலும் சிக்கியதும் உண்டு. வடக்கு மலையம்பாக்கம் கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதை யாராலும் தடுக்க முடியாது என்ற சூழலில், புறநகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்குட்பட்ட குன்றத்தூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கடந்த 2009ம் ஆண்டு முதல் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.


சாராயம் காய்ச்சுபவர்களை பிடித்து, அடுத்தடுத்து வழக்கு போட்டனர். கைதானவர்களை ஜாமீனில் எடுக்கும், வடக்குமலையம்பாக்கம் கிராம ஊர் தலைவர்கள், குன்றத்தூர் மதுவிலக்கு போலீசார் மீது உயர் அதிகாரிகளிடம் புகார்களை கொடுத்தனர். ஒரு கட்டத்தில், வடக்கு மலையம்பாக்கம் கிராம சாராய வியாபாரிகள், கிராமத் தலைவர்களின் கூட்டம் ஒன்றுக்கு புறநகர் கமிஷனர் ஜாங்கிட் ஏற்பாடு செய்தார்.அந்த கூட்டத்திற்கு பின், அப்பகுதியில் போலீஸ் கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டது. கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதை தடுக்க போலீசார் அங்கு நிரந்தரமாக தங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு, ஊர்த் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அவதூறுகளை பரப்பினர். போலீசாருக்கு வீடு தர யாரும் முன்வரவில்லை. இருப்பினும், சாராயம் காய்ச்சுவதை ஒழிக்கும் முயற்சியில் இருந்து போலீசார் பின்வாங்கவில்லை.


பல கட்ட முயற்சிக்குபின், பாதிரியார் ஒருவரின் உதவியுடன் கிராமத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து போலீசார் தங்கினர். பின், சாராயம் காய்ச்சுபவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்து கைது செய்தனர். இதற்கு ஊர் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த நடவடிக்கையால் சாராய வியாபாரம் ஓரளவிற்கு குறைந்தது. அடுத்த கட்டமாக, சாராயம் காய்ச்சுபவர்களை வேறு வேலைக்கு போகும்படி போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பில்லை. எனவே, வடக்கு மலையம்பாக்கத்திற்கு சாராயம் குடிக்க வரும் குடிமகன்களை கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டது.


இம்முயற்சி நல்ல பலன் அளித்தது. சாராயம் குடிக்க வருபவர்களின் எண்ணிக்கை குறையத் துவங்கியது. காய்ச்சிய சாராயம் விற்பனையாகாமல் போனதால் சாராயம் காய்ச்சுபவர்கள் சிரமப்பட்டனர். இதில் வெறுப்படைந்த சிலர், மனம் திருந்தி, சுயதொழில் துவங்குவதற்கு ஒப்புக் கொண்டனர்.கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அந்த கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதை அறவே விட்டுவிட்டனர். தற்போது, கறவை மாடுகளை வைத்து பால் வியாபாரமும், இட்லி சுட்டும், பூ மற்றும் துணி வியாபாரமும் செய்ய துவங்கியுள்ளனர். இன்று சாராயம் என்னெவென்றே தெரியாத கிராமமாக மாறிவிட்டது. தற்போது மனம் திருந்தி வாழ்ந்து வருபவர்கள் சுயதொழில் செய்வதற்கு கடந்த 2009ம் ஆண்டு 9 பேர் தலா 10 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றனர். இந்த வகையில், கடந்த 62 ஆண்டுகளாக குடிசை தொழிலாக சாராயம் காய்ச்சிய வடக்கு மலையம்பாக்கம் கிராமம் இன்று விடியலுக்கு வந்துள்ளது.


விதவைகள் கிராமம்! சாராயத்தை காய்ச்சுபவர்கள், அதை ருசிப்பார்ப்பது வழக்கம். அதுபோல ருசிப்பார்த்து சாராயத்திற்கு பலர் அடிமையாகி இறந்து விட்டனர். தப்பி தவறி இருந்தாலும் 50 வயதுக்கு மேல் ஆண்கள் இருப்பதில்லை. இதன் காரணமாக, வடக்கு மலையம்பாக்கம் கிராமத்தில் இளவயது விதவைகள் அதிகமாக காணப்படுகின்றனர். சாராயம் முற்றிலுமாக தற்போது ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், இளம் விதவைகளின் எண்ணிக்கையும் எதிர்காலத்தில் குறையும் என்பதில் மாற்றமில்லை.

62 ஆண்டுகளாக சாராயம் காய்ச்சிய கிராமத்திற்கு விடிவு: போலீசாரின் தொடர் முயற்சி வெற்றி

ஆலந்தூர் : மது விலக்கு போலீசாரின் தொடர் முயற்சியில், 62 ஆண்டுகளாக சாராயம் காய்ச்சுவதை குடிசைத் தொழிலாக செய்து வந்த கிராம மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.


சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள வடக்கு மலையம்பாக்கம் கிராமம் இருந்தது. இங்கு, கடந்த 1947ம் ஆண்டு முதல் வீட்டுக்கு வீடு குடிசை தொழிலாக சாராயத்தை காய்ச்சத் துவங்கினர்.கணவன்மார்கள் காய்ச்சும் சாராயத்தை மனைவிமார்கள் விற்பனை செய்தனர். வடக்கு மலையம்பாக்கம் சாராயத்தை ருசிக்க, மாங்காடு, நசரத்பேட்டை, பூந்தமல்லி, குன்றத்தூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து குடிமகன்கள் குவிந்தனர். போலீசார் ரெய்டு நடத்தும் போது தலைமறைவாகிவிடுவதும், போலீசார் சென்றபின், மீண்டும் தங்கள் தொழிலை துவங்குவதும் இங்கு வழக்கமாக இருந்தது.பல நேரங்களில் ஏமாற்றத்துடன் போலீசாருக்கு, சில நேரங்களில், அதிர்ச்சி அளிக்கும் வகையில், தாக்குதலிலும் சிக்கியதும் உண்டு. வடக்கு மலையம்பாக்கம் கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதை யாராலும் தடுக்க முடியாது என்ற சூழலில், புறநகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்குட்பட்ட குன்றத்தூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கடந்த 2009ம் ஆண்டு முதல் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.


சாராயம் காய்ச்சுபவர்களை பிடித்து, அடுத்தடுத்து வழக்கு போட்டனர். கைதானவர்களை ஜாமீனில் எடுக்கும், வடக்குமலையம்பாக்கம் கிராம ஊர் தலைவர்கள், குன்றத்தூர் மதுவிலக்கு போலீசார் மீது உயர் அதிகாரிகளிடம் புகார்களை கொடுத்தனர். ஒரு கட்டத்தில், வடக்கு மலையம்பாக்கம் கிராம சாராய வியாபாரிகள், கிராமத் தலைவர்களின் கூட்டம் ஒன்றுக்கு புறநகர் கமிஷனர் ஜாங்கிட் ஏற்பாடு செய்தார்.அந்த கூட்டத்திற்கு பின், அப்பகுதியில் போலீஸ் கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டது. கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதை தடுக்க போலீசார் அங்கு நிரந்தரமாக தங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு, ஊர்த் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அவதூறுகளை பரப்பினர். போலீசாருக்கு வீடு தர யாரும் முன்வரவில்லை. இருப்பினும், சாராயம் காய்ச்சுவதை ஒழிக்கும் முயற்சியில் இருந்து போலீசார் பின்வாங்கவில்லை.


பல கட்ட முயற்சிக்குபின், பாதிரியார் ஒருவரின் உதவியுடன் கிராமத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து போலீசார் தங்கினர். பின், சாராயம் காய்ச்சுபவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்து கைது செய்தனர். இதற்கு ஊர் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த நடவடிக்கையால் சாராய வியாபாரம் ஓரளவிற்கு குறைந்தது. அடுத்த கட்டமாக, சாராயம் காய்ச்சுபவர்களை வேறு வேலைக்கு போகும்படி போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பில்லை. எனவே, வடக்கு மலையம்பாக்கத்திற்கு சாராயம் குடிக்க வரும் குடிமகன்களை கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டது.


இம்முயற்சி நல்ல பலன் அளித்தது. சாராயம் குடிக்க வருபவர்களின் எண்ணிக்கை குறையத் துவங்கியது. காய்ச்சிய சாராயம் விற்பனையாகாமல் போனதால் சாராயம் காய்ச்சுபவர்கள் சிரமப்பட்டனர். இதில் வெறுப்படைந்த சிலர், மனம் திருந்தி, சுயதொழில் துவங்குவதற்கு ஒப்புக் கொண்டனர்.கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அந்த கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதை அறவே விட்டுவிட்டனர். தற்போது, கறவை மாடுகளை வைத்து பால் வியாபாரமும், இட்லி சுட்டும், பூ மற்றும் துணி வியாபாரமும் செய்ய துவங்கியுள்ளனர். இன்று சாராயம் என்னெவென்றே தெரியாத கிராமமாக மாறிவிட்டது. தற்போது மனம் திருந்தி வாழ்ந்து வருபவர்கள் சுயதொழில் செய்வதற்கு கடந்த 2009ம் ஆண்டு 9 பேர் தலா 10 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றனர். இந்த வகையில், கடந்த 62 ஆண்டுகளாக குடிசை தொழிலாக சாராயம் காய்ச்சிய வடக்கு மலையம்பாக்கம் கிராமம் இன்று விடியலுக்கு வந்துள்ளது.


விதவைகள் கிராமம்! சாராயத்தை காய்ச்சுபவர்கள், அதை ருசிப்பார்ப்பது வழக்கம். அதுபோல ருசிப்பார்த்து சாராயத்திற்கு பலர் அடிமையாகி இறந்து விட்டனர். தப்பி தவறி இருந்தாலும் 50 வயதுக்கு மேல் ஆண்கள் இருப்பதில்லை. இதன் காரணமாக, வடக்கு மலையம்பாக்கம் கிராமத்தில் இளவயது விதவைகள் அதிகமாக காணப்படுகின்றனர். சாராயம் முற்றிலுமாக தற்போது ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், இளம் விதவைகளின் எண்ணிக்கையும் எதிர்காலத்தில் குறையும் என்பதில் மாற்றமில்லை.

சிறுத்தை படத்தின் திருட்டு சி.டிக்களை தடுக்க வலியுறுத்தி போலீசில் புகார் செய்தார் நடிகர் கார்த்தி.


டைரக்டர் சிவா இயக்கத்தில் நடிகர் கார்த்தி-தமன்னா நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி உள்ளபடம் சிறுத்தை. முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ள கார்த்தி, கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும், பிக்பாக்கெட் திருடனாகவும் நடிப்பில் மிரட்டியுள்ளார். படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் போலீசில் நடிகர் கார்த்தி புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் சிறுத்தை படத்தின் திருட்டு சி.டி.க்களை தடுக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.


புகார் அளித்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, "சிறுத்தை படத்தின் டி.வி.டிக்கள் மற்றும் சி.டி.க்கள் கல்லூரி மற்றும் கோயில் வாசல்களில் வைத்து விற்பனை செய்து வருகி்ன்றனர். இதனால் படத்தின் தயாரிப்பாளருக்கு நிறைய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்தபடத்திற்காக தயாரிப்பாளர் நிறைய பொருட்செலவு செய்துள்ளார். திருட்டு சி.டிக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீசிடம் புகார் அளித்தேன். என்னுடைய படங்கள் மட்டும் அல்ல இதுபோன்று நிறைய புதுபடங்களின் திருட்டு சி.டிக்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. எனவே போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே திருட்டு சிடிக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். திருட்டு சி.டிக்களால் படத்தின் தயாரிப்பாளர் முதல் விநியோகதஸ்ர்கள், தியேட்டர் அதிபர்கள் வரை அனைவரும் பாதிப்படைகின்றனர். ஆகவே இதனை தடுக்க வேண்டும்" என்றார்.


"ராக்கெட் ராஜா" பெயர் சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "படத்தில் பிக்பாக்கெட்டாக வரும் கேரக்டருக்கு ஏற்றபெயர் என்பதால் அந்த பெயரை வைத்தோம். மற்றபடி யாரையும் புண்படுத்தும் ந‌ோக்கத்தில் அந்த பெயரை வைக்கவில்லை. ரசிகர்களிடம் அந்த பெயர் நல்ல வரவேற் பெற்றுள்ளது. ஆகையால் பெயரை மாற்றும் எண்ணம் ஏதும்இல்லை. இதுதொடர்பாக கொலை மிரட்டல் எதுவும் எனக்கு வரவில்லை" என்றார்.

போலீசில் நடிகர் கார்த்தி புகார்

சிறுத்தை படத்தின் திருட்டு சி.டிக்களை தடுக்க வலியுறுத்தி போலீசில் புகார் செய்தார் நடிகர் கார்த்தி.


டைரக்டர் சிவா இயக்கத்தில் நடிகர் கார்த்தி-தமன்னா நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி உள்ளபடம் சிறுத்தை. முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ள கார்த்தி, கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும், பிக்பாக்கெட் திருடனாகவும் நடிப்பில் மிரட்டியுள்ளார். படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் போலீசில் நடிகர் கார்த்தி புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் சிறுத்தை படத்தின் திருட்டு சி.டி.க்களை தடுக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.


புகார் அளித்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, "சிறுத்தை படத்தின் டி.வி.டிக்கள் மற்றும் சி.டி.க்கள் கல்லூரி மற்றும் கோயில் வாசல்களில் வைத்து விற்பனை செய்து வருகி்ன்றனர். இதனால் படத்தின் தயாரிப்பாளருக்கு நிறைய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்தபடத்திற்காக தயாரிப்பாளர் நிறைய பொருட்செலவு செய்துள்ளார். திருட்டு சி.டிக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீசிடம் புகார் அளித்தேன். என்னுடைய படங்கள் மட்டும் அல்ல இதுபோன்று நிறைய புதுபடங்களின் திருட்டு சி.டிக்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. எனவே போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே திருட்டு சிடிக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். திருட்டு சி.டிக்களால் படத்தின் தயாரிப்பாளர் முதல் விநியோகதஸ்ர்கள், தியேட்டர் அதிபர்கள் வரை அனைவரும் பாதிப்படைகின்றனர். ஆகவே இதனை தடுக்க வேண்டும்" என்றார்.


"ராக்கெட் ராஜா" பெயர் சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "படத்தில் பிக்பாக்கெட்டாக வரும் கேரக்டருக்கு ஏற்றபெயர் என்பதால் அந்த பெயரை வைத்தோம். மற்றபடி யாரையும் புண்படுத்தும் ந‌ோக்கத்தில் அந்த பெயரை வைக்கவில்லை. ரசிகர்களிடம் அந்த பெயர் நல்ல வரவேற் பெற்றுள்ளது. ஆகையால் பெயரை மாற்றும் எண்ணம் ஏதும்இல்லை. இதுதொடர்பாக கொலை மிரட்டல் எதுவும் எனக்கு வரவில்லை" என்றார்.

முக நூல்

Popular Posts