தமிழ் ஈழ விவகாரத்தை மீண்டும் கையில் எடுக்கும் கருணாநிதி: காங். கூட்டணியிலிருந்து விலக திட்டம்

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திமுக மீதான கறையைப் போக்கவும், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி தரவுமே இலங்கை விவகாரத்தை கருணாநிதி கையில் எடுத்துள்ளதாக காங்கிரஸ் கருதுகிறது.
ஆனால், அழகிரி- ஸ்டாலின் இடையிலான பிரச்சனையை திசை திருப்புவதற்காக மேற்கொள்ளப்படும் உத்தி தான் இது என்று “தி டெலிகிராப்” தெரிவித்துள்ளது.
இலங்கையில் தமிழீழம் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக 1980ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட தமிழீழ ஆதரவாளர்களின் அமைப்பான டெசோ அமைப்பின் கூட்டம் இன்று சென்னையில் கருணாநிதியின் தலைமையில் நடைபெற உள்ளது. இந் நிலையில் டெலிகிராப் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.
திமுகவின் இந்த முயற்சி இந்தியத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் டெலிகிராப் கூறியுள்ளது.
கருணாநிதி வித்தை காட்டுகிறார்-பழ.நெடுமாறன்:
இந் நிலையில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கூறியிருப்பதாவது:
இலங்கையில் உள்ள தமிழர்கள் கடந்த 35 ஆண்டுகளாக தமிழ் ஈழத்துக்கு ஆதரவளித்து வருகிறார்கள். 1977 மற்றும் 1997-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களே சாட்சி.
வெளிநாடுகளில் அகதிகளாக இருக்கும் தமிழர்களை மீண்டும் தாயகத்தில் குடியமர்த்திவிட்டு சுதந்திரமான முறையில் ஐ.நா. பார்வையாளர்கள் கண்காணிப்பில் தமிழ் ஈழத்துக்காக மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போதுதான் மக்களின் உண்மையான உணர்வுகள் வெளிப்படும்.
1983ல் கருணாநிதி, வீரமணி மற்றும் நானும் சேர்ந்துதான் டெசோ அமைப்பை உருவாக்கினோம். ஆனால் எங்கள் யாரிடமும் கேட்காமல் டெசோ இனி இயங்காது என்று கருணாநிதி அறிவித்தார். இப்போது யாரிடமும் கேட்காமல் டெசோ உருவாக்கப்படும் என்கிறார்.
2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதை தடுக்க தவறிய கருணாநிதி மீது உலக தமிழர்கள் கோபத்தில் இருக்கிறார்கள். அதை மாற்ற செம்மொழி மாநாடு முதல் டெசோ வரை அவருக்கு தெரிந்த வித்தைகளை செய்து பார்க்கிறார். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக கருணாநிதி விரும்புகிறார். அதனால் தமிழர் ஈழ கொள்கையை மீண்டும் கையில் எடுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.










காதலித்து திருமணம் செய்திருந்தாலும் சில வருடங்களிலே லைப் போராடிக்க ஆரம்பிக்கிறதா? காதலிக்கும் போது எப்படி உயிரோட்டமுள்ளதாய் வாழ்க்கை இருந்ததோ அதேபோல மாற்றுங்கள். காதலிக்கும் போது உயிரைக் கொடுத்து சொல்லியிருப்போம் ஐ லவ் யூ என்ற வார்த்தையை. அதையே திருமணத்திற்குப் பின்னரும் சொல்லிப்பாருங்களேன். ஐ லவ் யூ என்பது மூன்றெழுத்து வார்த்தைதான், அது நிகழ்த்தும் மாயாஜாலம் அற்புதமானது. இந்த வார்த்தையை சாதாரணமாக சொன்னால் இயந்திரத்தனமாக இருக்கும். எனவே உங்கள் துணையை கவர, உங்களின் நேசத்தை வெளிப்படுத்த ஐ லவ் யூ என்ற வார்த்தையை எங்கு, எப்படிச்சொன்னால் உயிரோட்டமுள்ளதாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? இதோ உங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர் நிபுணர்கள்.