background img

புதிய வரவு

Showing posts with label Assemply Election. Show all posts
Showing posts with label Assemply Election. Show all posts
புதுவை மாநிலத்தில் ரங்கசாமி பெற்ற அமோக வெற்றியின் பின்னணி என்ன? என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

புதுவை மாநிலத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து17 தொகுதிகளில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் 15 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி புதுவை அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரங்கசாமி கட்சி தொடங்கிய 2 மாதத்தில் ஆட்சியை பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்த அமோக வெற்றியின் பின்னணிக்கு அனைத்து சமூகத்தினர் ஆதரவே காரணம் என்பது தெரியவந்துள்ளது.

ரங்கசாமி கட்சி தொடங்கியபோது காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்தது. தனி மனிதன் முதல்-அமைச்சர் பதவி பெறுவதற்காக ஒரே ஒரு சமுதாயத்தை நம்பி ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்று விமர்சனம் செய்தனர்.
ஆனால் இந்த விமர்சனம் தவிடுபொடியாகி உள்ளது.

புதுவை மாநிலத்தில் மொத்தம் உள்ள 5 தனி தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ் 4 தொகுதிகளில் போட்டியிட்டது. போட்டியிட்ட நெடுங்காடு, திருபுவனை, ஏம்பலம், ஊசுடு ஆகிய 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள நெட்டப்பாக்கம் தனி தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வே வெற்றி பெற்றுள்ளது. 5 தனி தொகுதிகளிலும் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதின் மூலம் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வாக்குகளில் பெரும் பகுதியை கைப்பற்றி உள்ளது தெரியவந்துள்ளது.

இதோடு பிற சமூகத்தினர் மற்றும் சிறுபான்மையினரும் ரங்கசாமியின் பக்கமே இருந்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. அதோடு பெண்களும், முதன்முறையாக வாக்களித்த இளைஞர்களும் பெரும்வாரியாக ரங்கசாமிக்கே வாக்களித்துள்ளனர்.

இதற்கு ரங்கசாமி தன்னுடைய ஆட்சி காலத்தில் முதியோர் மற்றும் விதவைகள் பென்சன் தொகை பெறலாம் என்பதால் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் பென்சன் பெறலாம் என்பதை இணைத்ததும் பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் முத்திரைதாள் கட்டணத்தில் சலுகை என்ற அறிவித்ததும் காரணம் ஆகும்.

இதேபோல் பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை ரங்கசாமி அறிவித்த காலை மாலை உணவு திட்டம், பள்ளி மாணவர்கள் உபகரணம் வாங்க நிதி, காமராஜர் கல்வி நிதி உதவி திட்டம் ஆகியவை கவர்ந்து இருந்தது.

இந்த திட்டங்களில் சிலவற்றை ரங்கசாமியை அடுத்து பதவிக்கு வந்த காங்கிரஸ் அரசு நிறுத்தியது. சில திட்டங்களில் வரைமுறைகளை மாற்றி அமைத்தது. இது முதன்முதலாக வாக்களிக்கும் மாணவர்களிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் இந்த வாக்குகள் ரங்கசாமி பக்கம் அப்படியே திரும்பியது.

இவையே ரங்கசாமியின் அமோக வெற்றிக்கு பின்னணியாக இருந்தது.

ரங்கசாமிக்கு அமோக ஆதரவு கிடைத்தது எப்படி?

புதுவை மாநிலத்தில் ரங்கசாமி பெற்ற அமோக வெற்றியின் பின்னணி என்ன? என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

புதுவை மாநிலத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து17 தொகுதிகளில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் 15 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி புதுவை அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரங்கசாமி கட்சி தொடங்கிய 2 மாதத்தில் ஆட்சியை பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்த அமோக வெற்றியின் பின்னணிக்கு அனைத்து சமூகத்தினர் ஆதரவே காரணம் என்பது தெரியவந்துள்ளது.

ரங்கசாமி கட்சி தொடங்கியபோது காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்தது. தனி மனிதன் முதல்-அமைச்சர் பதவி பெறுவதற்காக ஒரே ஒரு சமுதாயத்தை நம்பி ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்று விமர்சனம் செய்தனர்.
ஆனால் இந்த விமர்சனம் தவிடுபொடியாகி உள்ளது.

புதுவை மாநிலத்தில் மொத்தம் உள்ள 5 தனி தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ் 4 தொகுதிகளில் போட்டியிட்டது. போட்டியிட்ட நெடுங்காடு, திருபுவனை, ஏம்பலம், ஊசுடு ஆகிய 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள நெட்டப்பாக்கம் தனி தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வே வெற்றி பெற்றுள்ளது. 5 தனி தொகுதிகளிலும் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதின் மூலம் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வாக்குகளில் பெரும் பகுதியை கைப்பற்றி உள்ளது தெரியவந்துள்ளது.

இதோடு பிற சமூகத்தினர் மற்றும் சிறுபான்மையினரும் ரங்கசாமியின் பக்கமே இருந்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. அதோடு பெண்களும், முதன்முறையாக வாக்களித்த இளைஞர்களும் பெரும்வாரியாக ரங்கசாமிக்கே வாக்களித்துள்ளனர்.

இதற்கு ரங்கசாமி தன்னுடைய ஆட்சி காலத்தில் முதியோர் மற்றும் விதவைகள் பென்சன் தொகை பெறலாம் என்பதால் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் பென்சன் பெறலாம் என்பதை இணைத்ததும் பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் முத்திரைதாள் கட்டணத்தில் சலுகை என்ற அறிவித்ததும் காரணம் ஆகும்.

இதேபோல் பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை ரங்கசாமி அறிவித்த காலை மாலை உணவு திட்டம், பள்ளி மாணவர்கள் உபகரணம் வாங்க நிதி, காமராஜர் கல்வி நிதி உதவி திட்டம் ஆகியவை கவர்ந்து இருந்தது.

இந்த திட்டங்களில் சிலவற்றை ரங்கசாமியை அடுத்து பதவிக்கு வந்த காங்கிரஸ் அரசு நிறுத்தியது. சில திட்டங்களில் வரைமுறைகளை மாற்றி அமைத்தது. இது முதன்முதலாக வாக்களிக்கும் மாணவர்களிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் இந்த வாக்குகள் ரங்கசாமி பக்கம் அப்படியே திரும்பியது.

இவையே ரங்கசாமியின் அமோக வெற்றிக்கு பின்னணியாக இருந்தது.

தமிழக சட்டசபை தேர்தல் பரபரப்பு முடிந்து விட்டது. பதிவான வாக்குகள் அனைத்தும் இரும்பு திரை அரங்கிற்குள் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் அனைவரும் பரீட்சை எழுதி விட்டு ரிசல்டுக்காக காத்திருக்கும் மாணவர்களை போல் திக்.... திக்.... மனதோடு காத்திருக்கிறார்கள்.

வரலாறு காணாத வகையில் வாக்காளர்களிடையே எழுச்சி ஏற்பட்டு ஓட்டுகளை குத்தி தள்ளி விட்டார்கள். கிட்டதட்ட 80 சதவீதம் வாக்குகள் பதிவானது. இந்த அதிகப்படியான வாக்கு சதவீதம் யாரை வீழ்த்தும்? யாரை ஆட்சியில் அமர்த்தும்? என்பது புரியாத புதிராக உள்ளது.

அரசியல் கட்சிகளும் எதுவும் புரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளன. ஓட்டளித்த தொண்டர்களும் தங்கள் கற்பனை சக்திக்கு எட்டியவரை அலசி ஆராய்ந்தும் விடை காண முடியாமல் தத்தளிக்கிறார்கள். தேர்தல் பந்தயத்தில் வெற்றி பெற போகும் குதிரை எது? என்பது பற்றி களம் கண்ட கட்சி தலைவர்கள் சிலரை சந்தித்து கருத்து கேட்டோம்.

அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்:-

தி.மு.க. தொண்டர்களின் கடினமான உழைப்பு காரணமாகவே வாக்காளர்கள் பெருமளவில் சென்று ஓட்டு போட்டிருக்கிறார்கள். இதனால் தான் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே தி.மு.க.வும் கூட்டணி கட்சிகளும் இந்த தேர்தலில் அமோக வெற்றி பெறும். எங்களுக்குத்தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

தமிழக அரசின் திட்டங்கள், வேலை வாய்ப்புகள் கிராம மக்களுக்கு அதிக அளவில் கிடைத்துள்ளது. எனவே கிராம மக்கள் ஆர்வமுடன் ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். இது மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற அவர்களுடைய விருப்பத்தையே காட்டுகிறது.

நகரங்களிலும் தி.மு.க. வுக்கு ஆதரவாகவே மக்கள் இருக்கிறார்கள். அதனால் தான் அதிக அளவில் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன. எனவே மீண்டும் ஆட்சி அமைவது உறுதி.

அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன்:-

1967-ல் 76.5 சதவீத வாக்கு பதிவானது. அப் போது காங்கிரஸ் ஆட்சியை அகற்றி விட்டு தி.மு.க.வை முதல் முறையாக மக்கள் ஆட்சியில் அமர்த்தினார்கள். ஒரு ஆட்சியின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படும் போது இந்த மாதிரி எழுச்சி ஏற்படும். அப்படிப்பட்ட எழுச்சியைத்தான் இந்த தேர்தலில் பார்க்க முடிந்தது.

மின்வெட்டு, விலைவாசி உயர்வு, சகிக்க முடியாத ஊழல், சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு போன்ற கார ணங்களால் மக்களுக்கு தி.மு.க. மீது கடும் அதிருப்தி ஏற்பட்டு இருக்கிறது. எனவேதான் அலை அலையாக வந்து மக்கள் ஓட்டளித்துள்ளார்கள்.

இளைஞர்கள், பெண்கள், படித்தவர்கள் என்று எல்லா தரப்பினரும் வந்து வாக்களித்துள்ளார்கள். அனைவரிடமும் மவுன பரட்சி இருந்துள்ளது. இந்த அலை இரட்டை இலைக்கு சாதகமான அலை. அ.தி.மு.க. நிச்சயம் தனித்தே ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி பெறும்.

பா.ம.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி:-

ஒரு ஆட்சியின் மீது கொண்ட வெறுப்பால்தான் அதிக அளவில் மக்கள் வாக்களிப்பாளர்கள் என்பது தவறான வாதம். தி.மு.க. ஆட்சியின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட எந்த காரணமும் இல்லை. ஏழைகள், சுயஉதவி குழு பெண்கள், விவசாயிகள், மாணவர்கள் என்று எல்லா தரப்பு மக்களும் பயன் அடையும் வகையில் கடந்த 5 ஆண்டுகளில் திட்டங்களை நிறைவேற்றி உள்ளார்கள்.

மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்தால் சொன்னதை செய்வார் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. எனவே தான் எல்லா தரப்பு மக்களும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துள்ளார்கள். எனவே தி.மு.க. கூட்டணிக்கு சாதகமாகத்தான் அமையும்.

காங்கிரஸ் எம்.பி. ஞானதேசிகன் கூறியதாவது:-

தமிழக வாக்காளர்கள் இந்த தேர்தலில் ஆர்வமுடன் வந்து வாக்களித்தது தி.மு.க. மீண்டும் ஆட்சியை தொடர வேண்டும் என்ற எண் ணத்தின் வெளிப்பாடாகவே நாங்கள் கருதுகிறோம். தி.மு.க. ஆட்சியின் 5 ஆண்டு சாதனையுடன் மத்திய-மாநில அரசுகளின் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் மக்களை வெகுவாக கவர்ந்ததாகவே கருத வேண்டி உள்ளது.

குறிப்பாக சோனியா, பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசின் வழி காட்டுதலில் நிறைவேற்றப்பட்ட 100 நாள் கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம், வங்கிகளில் கல்வி கடன் வழங்கியது இவற்றின் வெளிப்பாடு மக்கள் ஆர்வ முடன் வந்து ஓட்டு போட்டதாக கருதுகிறோம்.

இதுதவிர போட்டோ ஒட்டிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கியது, தேர்தல் கமிஷனின் விழிப் புணர்வு பிரசாரம் ஆகியவை மக்களை அதிக அளவில் ஓட்டளிக்க வைத்துள்ளதற்கு காரணம்..

பா.ஜனதா மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்:-

ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்ற தீவிர எண்ணம்தான் மக்களை பெருமளவு வாக்களிக்க வைத்துள்ளது. அதற்காக இதை அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அலை என்றும் சொல்ல முடியாது. வேறு வழியில்லாமல் வேண்டுமானால் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து இருப்பார்கள்.

கடந்த கால செயல்பாடுகளை நினைத்தோ அல்லது இனி நன்றாக செயல்படுவார் என்ற எண்ணத்திலோ ஜெயலலிதாவுக்கு வாக்களிக்க சாத்தியமில்லை.

இந்த தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு எல்லா தொகுதிகளிலும் கணிசமான வாக்குகள் கிடைக்கும். ஒரு சில தொகுதிகளையும் கைப்பற்றுவோம்.

பிரபல எழுத்தாளர் சோ:-

இந்த முறை தேர்தல் கமிஷனின் சிறப்பான செயல்பாடு காரணமாக மக்களிடையே வாக்களிக்க வேண்டும் என்ற ஈடுபாடு ஏற்பட்டுள்ளது. நமது ஓட்டு வீணாகாது என்ற நம்பிக்கை வாக்களர்களிடம் உருவாகி இருக்கிறது. தி.மு.க.வை ஆட்சியில் இருந்து விலக்க வேண்டும் என்ற எண்ணம் பெருவாரியான மக்களிடம் தோன்றி இருக்கிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மட்டுமல்ல. விலை வாசி உயர்வு, மின்வெட்டு போன்ற பல காரணங்கள் சேர்ந்து கொண்டு மக்களை அதிக அளவில் வாக்களிக்க வைத்துள்ளது. இது தி.மு.க. ஆட்சியை மாற்றுவதற்கான வாக்குகள்தான் என்றே கருதுகிறேன்.

1967-க்கு பிறகு அதிக வாக்குபதிவு; வாக்காளர்கள் எழுச்சி யாருக்கு சாதகம்? தலைவர்கள் கருத்து

தமிழக சட்டசபை தேர்தல் பரபரப்பு முடிந்து விட்டது. பதிவான வாக்குகள் அனைத்தும் இரும்பு திரை அரங்கிற்குள் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் அனைவரும் பரீட்சை எழுதி விட்டு ரிசல்டுக்காக காத்திருக்கும் மாணவர்களை போல் திக்.... திக்.... மனதோடு காத்திருக்கிறார்கள்.

வரலாறு காணாத வகையில் வாக்காளர்களிடையே எழுச்சி ஏற்பட்டு ஓட்டுகளை குத்தி தள்ளி விட்டார்கள். கிட்டதட்ட 80 சதவீதம் வாக்குகள் பதிவானது. இந்த அதிகப்படியான வாக்கு சதவீதம் யாரை வீழ்த்தும்? யாரை ஆட்சியில் அமர்த்தும்? என்பது புரியாத புதிராக உள்ளது.

அரசியல் கட்சிகளும் எதுவும் புரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளன. ஓட்டளித்த தொண்டர்களும் தங்கள் கற்பனை சக்திக்கு எட்டியவரை அலசி ஆராய்ந்தும் விடை காண முடியாமல் தத்தளிக்கிறார்கள். தேர்தல் பந்தயத்தில் வெற்றி பெற போகும் குதிரை எது? என்பது பற்றி களம் கண்ட கட்சி தலைவர்கள் சிலரை சந்தித்து கருத்து கேட்டோம்.

அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்:-

தி.மு.க. தொண்டர்களின் கடினமான உழைப்பு காரணமாகவே வாக்காளர்கள் பெருமளவில் சென்று ஓட்டு போட்டிருக்கிறார்கள். இதனால் தான் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே தி.மு.க.வும் கூட்டணி கட்சிகளும் இந்த தேர்தலில் அமோக வெற்றி பெறும். எங்களுக்குத்தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

தமிழக அரசின் திட்டங்கள், வேலை வாய்ப்புகள் கிராம மக்களுக்கு அதிக அளவில் கிடைத்துள்ளது. எனவே கிராம மக்கள் ஆர்வமுடன் ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். இது மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற அவர்களுடைய விருப்பத்தையே காட்டுகிறது.

நகரங்களிலும் தி.மு.க. வுக்கு ஆதரவாகவே மக்கள் இருக்கிறார்கள். அதனால் தான் அதிக அளவில் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன. எனவே மீண்டும் ஆட்சி அமைவது உறுதி.

அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன்:-

1967-ல் 76.5 சதவீத வாக்கு பதிவானது. அப் போது காங்கிரஸ் ஆட்சியை அகற்றி விட்டு தி.மு.க.வை முதல் முறையாக மக்கள் ஆட்சியில் அமர்த்தினார்கள். ஒரு ஆட்சியின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படும் போது இந்த மாதிரி எழுச்சி ஏற்படும். அப்படிப்பட்ட எழுச்சியைத்தான் இந்த தேர்தலில் பார்க்க முடிந்தது.

மின்வெட்டு, விலைவாசி உயர்வு, சகிக்க முடியாத ஊழல், சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு போன்ற கார ணங்களால் மக்களுக்கு தி.மு.க. மீது கடும் அதிருப்தி ஏற்பட்டு இருக்கிறது. எனவேதான் அலை அலையாக வந்து மக்கள் ஓட்டளித்துள்ளார்கள்.

இளைஞர்கள், பெண்கள், படித்தவர்கள் என்று எல்லா தரப்பினரும் வந்து வாக்களித்துள்ளார்கள். அனைவரிடமும் மவுன பரட்சி இருந்துள்ளது. இந்த அலை இரட்டை இலைக்கு சாதகமான அலை. அ.தி.மு.க. நிச்சயம் தனித்தே ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி பெறும்.

பா.ம.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி:-

ஒரு ஆட்சியின் மீது கொண்ட வெறுப்பால்தான் அதிக அளவில் மக்கள் வாக்களிப்பாளர்கள் என்பது தவறான வாதம். தி.மு.க. ஆட்சியின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட எந்த காரணமும் இல்லை. ஏழைகள், சுயஉதவி குழு பெண்கள், விவசாயிகள், மாணவர்கள் என்று எல்லா தரப்பு மக்களும் பயன் அடையும் வகையில் கடந்த 5 ஆண்டுகளில் திட்டங்களை நிறைவேற்றி உள்ளார்கள்.

மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்தால் சொன்னதை செய்வார் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. எனவே தான் எல்லா தரப்பு மக்களும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துள்ளார்கள். எனவே தி.மு.க. கூட்டணிக்கு சாதகமாகத்தான் அமையும்.

காங்கிரஸ் எம்.பி. ஞானதேசிகன் கூறியதாவது:-

தமிழக வாக்காளர்கள் இந்த தேர்தலில் ஆர்வமுடன் வந்து வாக்களித்தது தி.மு.க. மீண்டும் ஆட்சியை தொடர வேண்டும் என்ற எண் ணத்தின் வெளிப்பாடாகவே நாங்கள் கருதுகிறோம். தி.மு.க. ஆட்சியின் 5 ஆண்டு சாதனையுடன் மத்திய-மாநில அரசுகளின் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் மக்களை வெகுவாக கவர்ந்ததாகவே கருத வேண்டி உள்ளது.

குறிப்பாக சோனியா, பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசின் வழி காட்டுதலில் நிறைவேற்றப்பட்ட 100 நாள் கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம், வங்கிகளில் கல்வி கடன் வழங்கியது இவற்றின் வெளிப்பாடு மக்கள் ஆர்வ முடன் வந்து ஓட்டு போட்டதாக கருதுகிறோம்.

இதுதவிர போட்டோ ஒட்டிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கியது, தேர்தல் கமிஷனின் விழிப் புணர்வு பிரசாரம் ஆகியவை மக்களை அதிக அளவில் ஓட்டளிக்க வைத்துள்ளதற்கு காரணம்..

பா.ஜனதா மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்:-

ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்ற தீவிர எண்ணம்தான் மக்களை பெருமளவு வாக்களிக்க வைத்துள்ளது. அதற்காக இதை அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அலை என்றும் சொல்ல முடியாது. வேறு வழியில்லாமல் வேண்டுமானால் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து இருப்பார்கள்.

கடந்த கால செயல்பாடுகளை நினைத்தோ அல்லது இனி நன்றாக செயல்படுவார் என்ற எண்ணத்திலோ ஜெயலலிதாவுக்கு வாக்களிக்க சாத்தியமில்லை.

இந்த தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு எல்லா தொகுதிகளிலும் கணிசமான வாக்குகள் கிடைக்கும். ஒரு சில தொகுதிகளையும் கைப்பற்றுவோம்.

பிரபல எழுத்தாளர் சோ:-

இந்த முறை தேர்தல் கமிஷனின் சிறப்பான செயல்பாடு காரணமாக மக்களிடையே வாக்களிக்க வேண்டும் என்ற ஈடுபாடு ஏற்பட்டுள்ளது. நமது ஓட்டு வீணாகாது என்ற நம்பிக்கை வாக்களர்களிடம் உருவாகி இருக்கிறது. தி.மு.க.வை ஆட்சியில் இருந்து விலக்க வேண்டும் என்ற எண்ணம் பெருவாரியான மக்களிடம் தோன்றி இருக்கிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மட்டுமல்ல. விலை வாசி உயர்வு, மின்வெட்டு போன்ற பல காரணங்கள் சேர்ந்து கொண்டு மக்களை அதிக அளவில் வாக்களிக்க வைத்துள்ளது. இது தி.மு.க. ஆட்சியை மாற்றுவதற்கான வாக்குகள்தான் என்றே கருதுகிறேன்.

சென்னை : தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு பலத்த பாதுகாப்புடன் துவங்கியது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. மக்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டளித்து வருகின்றனர். தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பு பலம‌டங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெறும் : ஜெ.,
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா சென்னையில் இன்று காலை 9 மணியளவில் ஓட்டுப் போட்டார். ஓட்டு அளித்து விட்டு நிருபர்களுக்கு பேட்டியளித்த ஜெயலலிதா : சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி அதிக பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெரும் என்றார்.

மக்கள் தி.மு.க., பக்கம் : ஸ்டாலின் : துணை முதல்வர் ஸ்டாலின் சென்னை கோபாலபுரத்தில் இருக்கும் ஓட்டுச்சாவ‌டியில் ஓட்டுப் போட்டார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் தி.மு.க., அரசு மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளது. சொன்னது மட்டும் அல்லாமல் சொல்லாத பல நலத்திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளது. எனவே தி.மு.க., ஆட்சிக்கு மீண்டும் வர வேண்டும் என்ப‌தே மக்கள் விருப்பம். தி.மு.க., கூட்டணி 220 தொகுதிகளில் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

கருணாநிதி வாக்களிப்பு : சென்னை கோபாலபுரம் சாரதா பள்ளி ஓட்டுச்சாவடியில் முதல்வர் கருணாநிதி ஓட்டு போட்டார்.

வரிசையில் நின்று வைகோ ஓட்டு : ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ நெல்லை மாவட்டம் சங்கரன்கோயில் தொகுதிக்கு உட்பட்ட கலிங்கப்பட்டி பள்ளியில் ஓட்டுப் போடுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டுப்போட்டார். சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதை ம.தி.மு.க., புறக்கணித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை ஓட்டுப்பதிவு துவங்கியது சில நிமிடங்களில் ஓட்டுச்சாவடிக்கு வந்த வைகோ ஓட்டு போடுவதற்காக ஆர்வத்துடன் காத்திருந்து ஓட்டளித்தார்.

இயந்திரக் கோளாறு : தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ராஜபாளையம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் ஒரு சில ஓட்டுச்சாவ‌டிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் ஓட்டுப்பதிவு தாமதமாக துவங்கியது. ராஜபாளையம் 41 வது வார்டு பூத் எண் 105ல் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டதால் ஓட்டுப்பதிவு 40 நிமிடங்கள் தாமதமாக துவங்கியது.தர்மபுரி டவுன் நகராட்சி பள்ளியில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் அரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. ராமநாதபுரத்தில் ஸ்வாஸ் பள்ளியில் ஓட்டுச்சாவடி எண் 105ல் இயந்திரக் கோளாறு காரணாக ஓட்டுபதிவு 5 நிமிடங்கள் ‌தாமதமாக துவங்கியது.

திருச்சியில் ஜரூர் : திருச்சியில் இன்று காலை 7 மணி முதலே வாக்காளர்கள் ஓட்டுப்போட ஓட்டுச்சாவடிகளில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியதில் இருந்து வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திருச்சி மேற்கு தொகுதியில், அவர் பிளாஸம் பள்ளியில் மாவட்ட கலெக்டர் மகேசன் காசிநாதன் ஓட்டளித்தார்.

ஸ்ரீரங்கத்தில் ஆர்வம் : அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிடும் ஸ்ரீரங்கம் தொகுதியில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டளித்து வருகின்றனர். நீண்ட வரிசையில் நின்று மக்கள் ஆர்வத்துடன் ஓட்டளித்து வருகின்றனர்.

விஜயகாந்த், அன்பழகன், சிதம்பரம் ஓட்டு : தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் சென்னை சாலிகிராமத்தில் ஓட்டுப்போட்டனர். அமைச்சர் அன்பழகன் அண்ணாநகரில் ஓட்டுப் போட்டார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சிட்டலாச்சி நினைவு அரசுப் பள்ளியில் மத்திய அமைச்சர் சிதம்பரம் அவரது குடும்பத்தாருடன் ஓட்டு போட்டார்.

ஆத்தூரில் பரபரப்பு : சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கெங்கவல்லி (தனி) தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் சமூக சமத்துவ படை கட்சி தலைவர் சிவகாமி ஐஏஎஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் ஓட்டுப்பதிவு துவங்கியதும், தனது தொகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிகளை பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில், ‌பெரியபுழல்வாசல் கிராமத்தில், உள்ள ஓட்டுச்சாவடியை பார்வையிட வந்தார். ஓட்டுச்சாவடிக்கு அருகில், தஇமுகவினர் பேட்ச், தொப்பி உள்ளிட்டவைகளை கொடுத்து திமுகவிற்கு ஓட்டளிக்குமாறு தேர்தல் பிரசாரம் செய்வதைக் கண்டார். இதுகுறித்து, அவர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் செய்‌தார். இந்த புகாரின் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், அவர் தனது கட்சியினருடன் சேர்ந்து திடீர் சாலைமறியலில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் பெரும்பரபரபப்பு நிலவி வருகிறது.

முதல் 2 மணி நேரத்தில் 13 சதவீதம் : தமிழகம் முழுவதும் முதல் 2 மணி நேரத்தில் 13 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகின. தமிழக சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டளித்து வருவதால் முதல் 2 மணி நேரத்தில் 11 சதவீதம் ஓட்டு பதிவாகியுள்ளது.

ராமநாதபுரம் 9.2 % : ராமநாதபுரத்தில் 10 மணி நிலவரப்படி 9.2 சதவீதம் ஓட்டுப்பதிவாகியுள்ளது. காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. கல்கிணற்று வலசை, கொட்டியன்வலசை, ஓம் சக்தி நகர் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் ஓட்டுச் சாவடிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டதால், ஓட்டுப்பதிவு ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கியது.

தர்மபுரியில் 7.04% : தர்மபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் காலை 8 மணி முதல் 9 மணிக்குள் 7.04 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டளித்து வருகின்றனர்.

நாகப்பட்டினத்தில் 10% : நாகப்பட்டினம், ஸ்ரீவேலூர் பகுதிகளில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், ஓட்டுப்பதிவு துவங்கிய முதல் 1 மணிநேரத்தில் 10 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக அப்பகுதி தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்சியில் 9 சதவீதம் : திருச்சியில் இன்று காலை 8 மணிமுதல் 9 மணிவரையிலான காலகட்டத்தில் 9 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டசபை தேர்தல் : வாக்காளர்கள் ஆர்வம் ; ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு

சென்னை : தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு பலத்த பாதுகாப்புடன் துவங்கியது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. மக்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டளித்து வருகின்றனர். தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பு பலம‌டங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெறும் : ஜெ.,
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா சென்னையில் இன்று காலை 9 மணியளவில் ஓட்டுப் போட்டார். ஓட்டு அளித்து விட்டு நிருபர்களுக்கு பேட்டியளித்த ஜெயலலிதா : சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி அதிக பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெரும் என்றார்.

மக்கள் தி.மு.க., பக்கம் : ஸ்டாலின் : துணை முதல்வர் ஸ்டாலின் சென்னை கோபாலபுரத்தில் இருக்கும் ஓட்டுச்சாவ‌டியில் ஓட்டுப் போட்டார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் தி.மு.க., அரசு மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளது. சொன்னது மட்டும் அல்லாமல் சொல்லாத பல நலத்திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளது. எனவே தி.மு.க., ஆட்சிக்கு மீண்டும் வர வேண்டும் என்ப‌தே மக்கள் விருப்பம். தி.மு.க., கூட்டணி 220 தொகுதிகளில் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

கருணாநிதி வாக்களிப்பு : சென்னை கோபாலபுரம் சாரதா பள்ளி ஓட்டுச்சாவடியில் முதல்வர் கருணாநிதி ஓட்டு போட்டார்.

வரிசையில் நின்று வைகோ ஓட்டு : ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ நெல்லை மாவட்டம் சங்கரன்கோயில் தொகுதிக்கு உட்பட்ட கலிங்கப்பட்டி பள்ளியில் ஓட்டுப் போடுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டுப்போட்டார். சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதை ம.தி.மு.க., புறக்கணித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை ஓட்டுப்பதிவு துவங்கியது சில நிமிடங்களில் ஓட்டுச்சாவடிக்கு வந்த வைகோ ஓட்டு போடுவதற்காக ஆர்வத்துடன் காத்திருந்து ஓட்டளித்தார்.

இயந்திரக் கோளாறு : தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ராஜபாளையம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் ஒரு சில ஓட்டுச்சாவ‌டிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் ஓட்டுப்பதிவு தாமதமாக துவங்கியது. ராஜபாளையம் 41 வது வார்டு பூத் எண் 105ல் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டதால் ஓட்டுப்பதிவு 40 நிமிடங்கள் தாமதமாக துவங்கியது.தர்மபுரி டவுன் நகராட்சி பள்ளியில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் அரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. ராமநாதபுரத்தில் ஸ்வாஸ் பள்ளியில் ஓட்டுச்சாவடி எண் 105ல் இயந்திரக் கோளாறு காரணாக ஓட்டுபதிவு 5 நிமிடங்கள் ‌தாமதமாக துவங்கியது.

திருச்சியில் ஜரூர் : திருச்சியில் இன்று காலை 7 மணி முதலே வாக்காளர்கள் ஓட்டுப்போட ஓட்டுச்சாவடிகளில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியதில் இருந்து வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திருச்சி மேற்கு தொகுதியில், அவர் பிளாஸம் பள்ளியில் மாவட்ட கலெக்டர் மகேசன் காசிநாதன் ஓட்டளித்தார்.

ஸ்ரீரங்கத்தில் ஆர்வம் : அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிடும் ஸ்ரீரங்கம் தொகுதியில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டளித்து வருகின்றனர். நீண்ட வரிசையில் நின்று மக்கள் ஆர்வத்துடன் ஓட்டளித்து வருகின்றனர்.

விஜயகாந்த், அன்பழகன், சிதம்பரம் ஓட்டு : தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் சென்னை சாலிகிராமத்தில் ஓட்டுப்போட்டனர். அமைச்சர் அன்பழகன் அண்ணாநகரில் ஓட்டுப் போட்டார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சிட்டலாச்சி நினைவு அரசுப் பள்ளியில் மத்திய அமைச்சர் சிதம்பரம் அவரது குடும்பத்தாருடன் ஓட்டு போட்டார்.

ஆத்தூரில் பரபரப்பு : சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கெங்கவல்லி (தனி) தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் சமூக சமத்துவ படை கட்சி தலைவர் சிவகாமி ஐஏஎஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் ஓட்டுப்பதிவு துவங்கியதும், தனது தொகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிகளை பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில், ‌பெரியபுழல்வாசல் கிராமத்தில், உள்ள ஓட்டுச்சாவடியை பார்வையிட வந்தார். ஓட்டுச்சாவடிக்கு அருகில், தஇமுகவினர் பேட்ச், தொப்பி உள்ளிட்டவைகளை கொடுத்து திமுகவிற்கு ஓட்டளிக்குமாறு தேர்தல் பிரசாரம் செய்வதைக் கண்டார். இதுகுறித்து, அவர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் செய்‌தார். இந்த புகாரின் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், அவர் தனது கட்சியினருடன் சேர்ந்து திடீர் சாலைமறியலில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் பெரும்பரபரபப்பு நிலவி வருகிறது.

முதல் 2 மணி நேரத்தில் 13 சதவீதம் : தமிழகம் முழுவதும் முதல் 2 மணி நேரத்தில் 13 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகின. தமிழக சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டளித்து வருவதால் முதல் 2 மணி நேரத்தில் 11 சதவீதம் ஓட்டு பதிவாகியுள்ளது.

ராமநாதபுரம் 9.2 % : ராமநாதபுரத்தில் 10 மணி நிலவரப்படி 9.2 சதவீதம் ஓட்டுப்பதிவாகியுள்ளது. காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. கல்கிணற்று வலசை, கொட்டியன்வலசை, ஓம் சக்தி நகர் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் ஓட்டுச் சாவடிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டதால், ஓட்டுப்பதிவு ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கியது.

தர்மபுரியில் 7.04% : தர்மபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் காலை 8 மணி முதல் 9 மணிக்குள் 7.04 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டளித்து வருகின்றனர்.

நாகப்பட்டினத்தில் 10% : நாகப்பட்டினம், ஸ்ரீவேலூர் பகுதிகளில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், ஓட்டுப்பதிவு துவங்கிய முதல் 1 மணிநேரத்தில் 10 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக அப்பகுதி தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்சியில் 9 சதவீதம் : திருச்சியில் இன்று காலை 8 மணிமுதல் 9 மணிவரையிலான காலகட்டத்தில் 9 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி விட்டன. தேர்தல் பாதுகாப்பு மற்றும் பணிகளில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநில சட்டசபைகளுக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

8 மணி முதல் மாலை 5 மணி வரை:

தமிழகத்தைப் பொறுத்தவரை 234 தொகுதிகளிலும் நாளை தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 2773 பேர் போட்டியிடுகின்றனர்.

இங்கு நாளை காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை இடைவிடாமல் வாக்குப்பதிவு நடைபெறும்.

தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டன. வாக்குப் பதிவுக்கு அத்தனை வாக்குச் சாவடிகளும் தயாராக உள்ளன. மின்னணு இயந்திரங்களை அனுப்பி பொருத்துவது, அழியாத மை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் வாக்குச் சாவடிகளுக்கு வந்து விட்டன.

இன்று வாக்குச் சாவடிகளில் பணியாற்றவுள்ள ஊழியர்கள் மின்னணு இயந்திரங்களை பொருத்துவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

54,314 வாக்குச் சாவடிகள்-10,000 வெப் கேமராக்கள் :

வாக்குப்பதிவுக்காக மொத்தம் 54,314 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முதலில் அத்தனை வாக்குச் சாவடிகளும் பதட்டமானவை என்று போலீஸ் டிஜிபி போலாநாத் கூறியிருந்தார். இருப்பினும் தற்போது அத்தனை சாவடிகளுக்கும் ஒரே மாதிரியான பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் குறிப்பிட்ட 10,000 சாவடிகளில் வெப் கேமராக்கள் மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படவுள்ளது.

4 கோடியே 59 லட்சத்து 50 ஆயிரத்து 620 வாக்காளர்கள்:

சட்டசபைத் தேர்தலில் மொத்தம் 4 கோடியே 59 லட்சத்து 50 ஆயிரத்து 620 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இவர்களில் ஆண்கள் 2,30,86,295 பேராவர். பெண்களின் எண்ணிக்கை 2,28,63,481 பேர். திருநங்கையர் எண்ணிக்கை 844.

வாக்காளர்களுக்கு முதல் முறையாக தேர்தல் ஆணையமே பூத் ஸ்லிப் கொடுத்துள்ளது. அது கிடைக்காதவர்கள் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது இல்லாமலும் கூட வாக்களிக்கலாம். புகைப்பட அடையாள அட்டை கட்டாயம்.

13,000 தேர்தல் பார்வையாளர்கள்:

வாக்குப்பதிவைக் கண்காணிக்க 13,000 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புப் பணியில் மட்டும் ஒன்றே கால் லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு லட்சம் பேர் மாநிலப் போலீஸார். மற்றவர்கள் துணை ராணுவப்படையினர். வாக்குச் சாவடிகளில் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பண விநியோகத்தைத் தடுக்க தீவிரக் கண்காணிப்பு:

வாக்காளர்களுக்கு கடைசி நேரத்தில் பணம் தரப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் அதைத் தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வீடு வீடாக சென்று கேன்வாஸ் செய்ய அரசியல் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதைப் பயன்படுத்தி வீடு வீடாகப் போய் பணம் கொடுக்கப்படலாம் என்ற சந்தேகம் உள்ளதால் அதைத் தீவிரக் கண்காணித்து வருகின்றனர் தேர்தல் பார்வையாளர்கள்.

மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் குறிப்பிட்ட 26 தொகுதிகளில்தான் பெருமளவில் பணம், இலவசப் பொருட்கள் விநியோகம் தடையில்லாமல் நடந்து வருவதாக தேர்தல் ஆணையத்திற்கு பெருமளவில் புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து இங்கு தீவிர கண்காணிப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது.

பணம் கொடுக்கப்படுவது உறுதியானால் அத்தொகுதிகளில் தேர்தலை நிறுத்தவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிரது.

தேர்தல் ஆணையத்தின் இந்தக் கண்காணிப்புப் பட்டியலில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியும் இருப்பதாக கூறப்படுகிறது.

தேர்தலை பதட்டமில்லாமலும், நியாயமான முறையிலும் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

புதுவை, கேரளாவிலும் நாளை தேர்தல்:

தமிழகத்தைப் போலவே புதுச்சேரி மற்றும் கேரளாவிலும் நாளை சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

கேரளாவில் 140 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது.

நாளை சட்டமன்ற தேர்தல்: 54,314 வாக்குச் சாவடிகள்- கண்காணிக்க 10,000 வெப் கேமராக்கள்!

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி விட்டன. தேர்தல் பாதுகாப்பு மற்றும் பணிகளில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநில சட்டசபைகளுக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

8 மணி முதல் மாலை 5 மணி வரை:

தமிழகத்தைப் பொறுத்தவரை 234 தொகுதிகளிலும் நாளை தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 2773 பேர் போட்டியிடுகின்றனர்.

இங்கு நாளை காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை இடைவிடாமல் வாக்குப்பதிவு நடைபெறும்.

தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டன. வாக்குப் பதிவுக்கு அத்தனை வாக்குச் சாவடிகளும் தயாராக உள்ளன. மின்னணு இயந்திரங்களை அனுப்பி பொருத்துவது, அழியாத மை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் வாக்குச் சாவடிகளுக்கு வந்து விட்டன.

இன்று வாக்குச் சாவடிகளில் பணியாற்றவுள்ள ஊழியர்கள் மின்னணு இயந்திரங்களை பொருத்துவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

54,314 வாக்குச் சாவடிகள்-10,000 வெப் கேமராக்கள் :

வாக்குப்பதிவுக்காக மொத்தம் 54,314 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முதலில் அத்தனை வாக்குச் சாவடிகளும் பதட்டமானவை என்று போலீஸ் டிஜிபி போலாநாத் கூறியிருந்தார். இருப்பினும் தற்போது அத்தனை சாவடிகளுக்கும் ஒரே மாதிரியான பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் குறிப்பிட்ட 10,000 சாவடிகளில் வெப் கேமராக்கள் மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படவுள்ளது.

4 கோடியே 59 லட்சத்து 50 ஆயிரத்து 620 வாக்காளர்கள்:

சட்டசபைத் தேர்தலில் மொத்தம் 4 கோடியே 59 லட்சத்து 50 ஆயிரத்து 620 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இவர்களில் ஆண்கள் 2,30,86,295 பேராவர். பெண்களின் எண்ணிக்கை 2,28,63,481 பேர். திருநங்கையர் எண்ணிக்கை 844.

வாக்காளர்களுக்கு முதல் முறையாக தேர்தல் ஆணையமே பூத் ஸ்லிப் கொடுத்துள்ளது. அது கிடைக்காதவர்கள் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது இல்லாமலும் கூட வாக்களிக்கலாம். புகைப்பட அடையாள அட்டை கட்டாயம்.

13,000 தேர்தல் பார்வையாளர்கள்:

வாக்குப்பதிவைக் கண்காணிக்க 13,000 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புப் பணியில் மட்டும் ஒன்றே கால் லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு லட்சம் பேர் மாநிலப் போலீஸார். மற்றவர்கள் துணை ராணுவப்படையினர். வாக்குச் சாவடிகளில் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பண விநியோகத்தைத் தடுக்க தீவிரக் கண்காணிப்பு:

வாக்காளர்களுக்கு கடைசி நேரத்தில் பணம் தரப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் அதைத் தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வீடு வீடாக சென்று கேன்வாஸ் செய்ய அரசியல் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதைப் பயன்படுத்தி வீடு வீடாகப் போய் பணம் கொடுக்கப்படலாம் என்ற சந்தேகம் உள்ளதால் அதைத் தீவிரக் கண்காணித்து வருகின்றனர் தேர்தல் பார்வையாளர்கள்.

மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் குறிப்பிட்ட 26 தொகுதிகளில்தான் பெருமளவில் பணம், இலவசப் பொருட்கள் விநியோகம் தடையில்லாமல் நடந்து வருவதாக தேர்தல் ஆணையத்திற்கு பெருமளவில் புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து இங்கு தீவிர கண்காணிப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது.

பணம் கொடுக்கப்படுவது உறுதியானால் அத்தொகுதிகளில் தேர்தலை நிறுத்தவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிரது.

தேர்தல் ஆணையத்தின் இந்தக் கண்காணிப்புப் பட்டியலில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியும் இருப்பதாக கூறப்படுகிறது.

தேர்தலை பதட்டமில்லாமலும், நியாயமான முறையிலும் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

புதுவை, கேரளாவிலும் நாளை தேர்தல்:

தமிழகத்தைப் போலவே புதுச்சேரி மற்றும் கேரளாவிலும் நாளை சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

கேரளாவில் 140 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது.

சென்னை : ""எவ்வளவு பணத்தை கொட்டினாலும் மக்கள் மனதை வாங்க தி.மு.க.,வால் முடியாது. அ.தி.மு.க., வெற்றியை எந்த சக்தியாலும் தட்டிப்பறிக்க முடியாது,'' என, ஜெயலலிதா பேசினார்.

அ.தி.மு.க., வேட்பாளர் பழ.கருப்பையா (துறைமுகம்), ஜெயக்குமார் (ராயபுரம்), குப்பன் (திருவொற்றியூர்), வெற்றிவேல் (ஆர்.கே.நகர்), நீலகண்டன் (திரு.வி.க.,நகர்), மற்றும் பெரம்பூர் மார்க்சிஸ்ட் கம்யூ., வேட்பாளர் சவுந்தரராஜனை ஆதரித்து ஜெயலலிதா நேற்று வடசென்னை முழுவதும் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தை காப்பாற்றுங்கள் என்ற கோரிக்கையுடன், உங்கள் முன் வந்துள்ளேன். ஒரு குடும்ப ஆட்சியின் சர்வாதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க உங்களை நாடி வந்துள்ளேன். கடுமையான மின்வெட்டு, மணல் கொள்ளை, ரவுடியிசம், தமிழகத்தில் யாரும் எந்த தொழிலையும் சுதந்திரமாக செய்ய முடியாத நிலை, கள்ளச் சாராயம், கள்ள லாட்டரி என, அனைத்து சமூக விரோத தொழில்களும், தி.மு.க., ஆட்சியில் நடக்கிறது.இந்த அவலங்களிலிருந்து, இந்த தேர்தல் மூலம் தமிழகத்தை மக்கள் மீட்டெடுக்க வேண்டும். இப்போது மீட்க முடியாவிட்டால், எப்போதும் மீட்க முடியாது என்று நல்லோரின் மனசாட்சிகள் சொல்கின்றன. ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தவர்களுக்கு, இந்த தேர்தலில் தகுந்த தண்டனை தர வேண்டும். தி.மு.க.,வினரின் ஊழல் சாம்ராஜ்யத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்ற வேண்டும்.

தமிழகத்தை ஒரு லட்சம் கோடி கடனுக்குள் சிக்கவைத்தது தான் கருணாநிதியின் சாதனை. மக்கள் பணத்தை பேராசை கொண்ட கும்பல் சுரண்டுகிறது. இதை தடுக்க தி.மு.க.,கூட்டணியினர் போட்டியிடும், அனைத்து இடங்களிலும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் வகையில், அவர்களை டிபாசிட் இழக்க செய்ய வேண்டும்.இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடக்காத ஊழலை தி.மு.க.,வினர் நிகழ்த்தியுள்ளனர். ஊழலுக்கு நிகர் ஊழல் செய்பவர் கருணாநிதி. அவர் விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதில் வல்லவர் என, சர்க்காரியா கமிஷன் கூறியது.

தேர்தலில் தோற்பது உறுதி என, தெரிந்து கொண்ட தி.மு.க.,வினர் 234 தொகுதிகளிலும் மழையாக பணத்தை கொட்டியுள்ளனர். இந்த பணமழைக்கு அ.தி.மு.க., வேட்பாளர்களும், நிர்வாகிகளும், கூட்டணி கட்சியினரும் மலைத்து போகவோ, கலக்கமடையவோ வேண்டாம். எவ்வளவு பணத்தை கொட்டினாலும், மக்கள் மனதை வாங்க தி.மு.க.,வால் முடியாது. அ.தி.மு.க., வெற்றியை இம்முறை யாரும் தட்டிப்பறிக்க முடியாது.அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் அமைந்ததும் மக்களின் அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும். மீன் பிடிக்க தடைகாலத்தில் 2,000 ரூபாய் உதவித்தொகை, மீன்பிடிக்க இயலாத மழைக்கால உதவியாக 4,000 ரூபாய் வழங்கப்படும். மீனவர்கள் நலன் காக்கப்படும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்படும். இதுகுறித்த வரைமுறைகளை ஆய்வு செய்து முடிவெடுக்க தனியே குழு அமைக்கப்படும். இன்னும் மக்களுக்கு என்னென்ன தேவைகள் உள்ளதோ அனைத்தும் செய்து தரப்படும்.இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

தி.மு.க., மிரட்டல்: ஜெ.,திடுக் : "மதுரையில் தேர்தல் பணியில் ஈடுபடுவோர் தி.மு.க.,வினரால் மிரட்டப்படுகின்றனர். தமிழகம் முழுவதும் தி.மு.க.,வினரின் மிரட்டலால் தேர்தல் அதிகாரிகள் மத்தியில் அச்சத்தால், ஒரு வித பதட்டம் நிலவுகிறது. அவர்கள் நேர்மையாகவும், நியாயமாகவும் தேர்தல் பணியாற்றுவர். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை தேர்தல் கமிஷன் தர வேண்டும்' என ஜெயலலிதா பேசினார்.

வடிவுடையம்மனை கும்பிட்ட ஜெ., : அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவின் இஷ்ட தெய்வம் திருவொற்றியூர் வடிவுடையம்மன். ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் இங்கு முக்கிய நபர்கள் வந்து சிறப்பு பூஜை செய்வது வழக்கம். டான்சி வழக்கில் அவரை சுப்ரீம் கோர்ட் விடுவித்த பத்தாவது நிமிடத்தில், வடிவுடையம்மன் கோவிலுக்கு பறந்து வந்து, அம்மனை தரிசித்தார். "கடவுளுக்கு நன்றி' என, அப்போது நிருபர்களிடம் கூறினார்.

இந்நிலையில், அ.தி.மு.க., வேட்பாளர் குப்பனை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்த ஜெயலலிதா, தேரடியில் வடிவுடையம்மன் கோவிலைப் பார்த்தவாறு பிரசாரம் செய்தார். இறுதியில், அம்மனை கையெடுத்து கும்பிட்டு தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.திருவொற்றியூர் தொகுதியில் வெற்றி பெறும் அணி தான், ஆட்சியைப் பிடிக்கும் என்பது நம்பிக்கை; இதுவரை அப்படித்தான் நடந்துள்ளது என்பதால், ஜெ., அம்மனை வழிபட்டு பிரசாரம் செய்தது, அ.தி.மு.க.,வினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க., வெற்றியை எந்த சக்தியாலும் தட்டிப்பறிக்க முடியாது: ஜெயலலிதா உறுதி

சென்னை : ""எவ்வளவு பணத்தை கொட்டினாலும் மக்கள் மனதை வாங்க தி.மு.க.,வால் முடியாது. அ.தி.மு.க., வெற்றியை எந்த சக்தியாலும் தட்டிப்பறிக்க முடியாது,'' என, ஜெயலலிதா பேசினார்.

அ.தி.மு.க., வேட்பாளர் பழ.கருப்பையா (துறைமுகம்), ஜெயக்குமார் (ராயபுரம்), குப்பன் (திருவொற்றியூர்), வெற்றிவேல் (ஆர்.கே.நகர்), நீலகண்டன் (திரு.வி.க.,நகர்), மற்றும் பெரம்பூர் மார்க்சிஸ்ட் கம்யூ., வேட்பாளர் சவுந்தரராஜனை ஆதரித்து ஜெயலலிதா நேற்று வடசென்னை முழுவதும் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தை காப்பாற்றுங்கள் என்ற கோரிக்கையுடன், உங்கள் முன் வந்துள்ளேன். ஒரு குடும்ப ஆட்சியின் சர்வாதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க உங்களை நாடி வந்துள்ளேன். கடுமையான மின்வெட்டு, மணல் கொள்ளை, ரவுடியிசம், தமிழகத்தில் யாரும் எந்த தொழிலையும் சுதந்திரமாக செய்ய முடியாத நிலை, கள்ளச் சாராயம், கள்ள லாட்டரி என, அனைத்து சமூக விரோத தொழில்களும், தி.மு.க., ஆட்சியில் நடக்கிறது.இந்த அவலங்களிலிருந்து, இந்த தேர்தல் மூலம் தமிழகத்தை மக்கள் மீட்டெடுக்க வேண்டும். இப்போது மீட்க முடியாவிட்டால், எப்போதும் மீட்க முடியாது என்று நல்லோரின் மனசாட்சிகள் சொல்கின்றன. ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தவர்களுக்கு, இந்த தேர்தலில் தகுந்த தண்டனை தர வேண்டும். தி.மு.க.,வினரின் ஊழல் சாம்ராஜ்யத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்ற வேண்டும்.

தமிழகத்தை ஒரு லட்சம் கோடி கடனுக்குள் சிக்கவைத்தது தான் கருணாநிதியின் சாதனை. மக்கள் பணத்தை பேராசை கொண்ட கும்பல் சுரண்டுகிறது. இதை தடுக்க தி.மு.க.,கூட்டணியினர் போட்டியிடும், அனைத்து இடங்களிலும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் வகையில், அவர்களை டிபாசிட் இழக்க செய்ய வேண்டும்.இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடக்காத ஊழலை தி.மு.க.,வினர் நிகழ்த்தியுள்ளனர். ஊழலுக்கு நிகர் ஊழல் செய்பவர் கருணாநிதி. அவர் விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதில் வல்லவர் என, சர்க்காரியா கமிஷன் கூறியது.

தேர்தலில் தோற்பது உறுதி என, தெரிந்து கொண்ட தி.மு.க.,வினர் 234 தொகுதிகளிலும் மழையாக பணத்தை கொட்டியுள்ளனர். இந்த பணமழைக்கு அ.தி.மு.க., வேட்பாளர்களும், நிர்வாகிகளும், கூட்டணி கட்சியினரும் மலைத்து போகவோ, கலக்கமடையவோ வேண்டாம். எவ்வளவு பணத்தை கொட்டினாலும், மக்கள் மனதை வாங்க தி.மு.க.,வால் முடியாது. அ.தி.மு.க., வெற்றியை இம்முறை யாரும் தட்டிப்பறிக்க முடியாது.அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் அமைந்ததும் மக்களின் அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும். மீன் பிடிக்க தடைகாலத்தில் 2,000 ரூபாய் உதவித்தொகை, மீன்பிடிக்க இயலாத மழைக்கால உதவியாக 4,000 ரூபாய் வழங்கப்படும். மீனவர்கள் நலன் காக்கப்படும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்படும். இதுகுறித்த வரைமுறைகளை ஆய்வு செய்து முடிவெடுக்க தனியே குழு அமைக்கப்படும். இன்னும் மக்களுக்கு என்னென்ன தேவைகள் உள்ளதோ அனைத்தும் செய்து தரப்படும்.இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

தி.மு.க., மிரட்டல்: ஜெ.,திடுக் : "மதுரையில் தேர்தல் பணியில் ஈடுபடுவோர் தி.மு.க.,வினரால் மிரட்டப்படுகின்றனர். தமிழகம் முழுவதும் தி.மு.க.,வினரின் மிரட்டலால் தேர்தல் அதிகாரிகள் மத்தியில் அச்சத்தால், ஒரு வித பதட்டம் நிலவுகிறது. அவர்கள் நேர்மையாகவும், நியாயமாகவும் தேர்தல் பணியாற்றுவர். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை தேர்தல் கமிஷன் தர வேண்டும்' என ஜெயலலிதா பேசினார்.

வடிவுடையம்மனை கும்பிட்ட ஜெ., : அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவின் இஷ்ட தெய்வம் திருவொற்றியூர் வடிவுடையம்மன். ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் இங்கு முக்கிய நபர்கள் வந்து சிறப்பு பூஜை செய்வது வழக்கம். டான்சி வழக்கில் அவரை சுப்ரீம் கோர்ட் விடுவித்த பத்தாவது நிமிடத்தில், வடிவுடையம்மன் கோவிலுக்கு பறந்து வந்து, அம்மனை தரிசித்தார். "கடவுளுக்கு நன்றி' என, அப்போது நிருபர்களிடம் கூறினார்.

இந்நிலையில், அ.தி.மு.க., வேட்பாளர் குப்பனை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்த ஜெயலலிதா, தேரடியில் வடிவுடையம்மன் கோவிலைப் பார்த்தவாறு பிரசாரம் செய்தார். இறுதியில், அம்மனை கையெடுத்து கும்பிட்டு தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.திருவொற்றியூர் தொகுதியில் வெற்றி பெறும் அணி தான், ஆட்சியைப் பிடிக்கும் என்பது நம்பிக்கை; இதுவரை அப்படித்தான் நடந்துள்ளது என்பதால், ஜெ., அம்மனை வழிபட்டு பிரசாரம் செய்தது, அ.தி.மு.க.,வினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முக நூல்

Popular Posts