background img

புதிய வரவு

விண்ணைத்தாண்டி வருவாயாவை விட அதிக விலைக்குப் போன நீதானே என் பொன்வசந்தம்!

இசைஞானி இளையராஜா இசையில் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பை கிளப்பியுள்ள நீதானே என் பொன்வசந்தம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியது.

Sony Music Acquires Neethane Enn Ponvasantham சமீபத்தில் எந்தப் பட இசைக்கும் தராத மிகப் பெரிய விலையை நீதானே என் பொன்வசந்தத்துக்கு கொடுத்துள்ளது சோனி.

கவுதம் மேனன் இயக்கத்தில், ஆர் எஸ் இன்போடெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், ஜீவா - சமந்தா நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகிறது.

இளையராஜா இசை என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே, இந்தப் படத்துக்கு ஏக எதிர்ப்பார்ப்பு. படத்துக்காக வெளியான இசை முன்னோட்டம் அந்த எதிர்ப்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியது.

ரூ 2.5 கோடிவரை இந்தப் படத்தின் இசை உரிமைக்கு விலை தர சோனி நிறுவனம் முன்வந்ததாகக் கூறப்பட்டது. இது ரஹ்மான் இசையில் வந்த விண்ணைத் தாண்டி வருவாயாவை விட மிக அதிகம்.

இந்த நிலையில், சோனிக்கு நீதானே என் பொன்வசந்தம் இசை உரிமை விற்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூலை 1-ம் தேதி இசை வெளியீடு பிரமாண்டமாக நடக்கவிருப்பதாக கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.

ஷங்கரின் புதிய மெகா பட்ஜெட் படம் 'ஐ' - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Shankar Titles His New Movie I
தனது அடுத்த படத்துக்கு வித்தியாசமாக 'ஐ' எனப் பெயர் சூட்டியுள்ளார் இயக்குநர் ஷங்கர்.
இந்தப் படத்தில் ஷங்கருடன் இணைபவர் விக்ரம். நாட்டின் தலையாய பிரச்சினையான தேர்தல் முறைகேடுகள் பின்னணியில் இந்தப் படம் உருவாகவிருப்பதாக சொல்லப்படுகிறது.
படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஏஆர் ரஹ்மான் இசையமைக்க, பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழில் 'ஐ' என்றால் ஐவர் என்று ஒரு பொருள் உண்டு. ஆங்கிலத்தில் 'நான்' என்று சொல்லலாம்.
படத்தின் நாயகியாக சமந்தா ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தப் படத்துக்காக அவர் மணிரத்னம் படத்தை துறந்ததோடு, மொத்தமாக கால்ஷீட்டை கொடுத்துள்ளாராம்.
விரைவில் படத்தின் பிற விவரங்களை ஷங்கர் வெளியிடவிருக்கிறார்.

தினம் 5 மணி நேரம் உடற்பயிற்சி- அடுத்த ரிஸ்க்குக்கு ஆயத்தமாகும் அஜீத்!

தனது அடுத்த படத்தில் மிக ஸ்லிம்மாகத் தோன்ற வேண்டும் என்பதற்காக தினமும் மணி நேரம் கடும் உடற்பயிற்சியில் இறங்கியுள்ளார் நடிகர் அஜீத்.
விஷ்ணுவர்த்தன் இயக்க நயன்தாராம ஜோடியாக நடிக்கும் இந்தப் படம் இந்தியில் வெளியான ரேஸ் படத்தின் ரீமேக் என்கிறார்கள்.

Ajith Spends 5 Hours Gym படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. படப்பிடிப்பு கடந்த 18-ந்தேதி பெங்களூரில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஆர்யாவும் நடிக்கிறார். நாயகிகளாக நயன்தாரா, டாப்ஸி நடிக்கின்றனர்.

இந்த படத்தில் அஜீத்தை மங்காத்தாபோல் இல்லாமல் மிகவும் இளமையாக காட்டப் போகிறாராம் விஷ்ணுவர்த்தன். இதற்காக தலைமுடி காஸ்ட்யூம் என எல்லாவற்றையும் மாற்றுகிறார்கள்.

அத்துடன் உடல் எடையை குறைக்கும்படியும் கேட்டுக் கொண்டாராம். இதனை ஏற்று அஜீத் கடந்த 7 நாட்களாக ஜிம்முக்கு செல்கிறார். தினமும் 5 மணி நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து விஷ்ணுவர்த்தன் கூறும்போது, தீவிர உடற்பயிற்சி செய்கிறார் அஜீத். அவரது உருவம் இப்போது நம்ப முடியாத அளவுக்கு மாறியிருக்கிறது," என்றார்.

விஜய்யின் துப்பாக்கி படத் தலைப்புக்கு நீதிமன்றம் தடை!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் தலைப்பை பயன்படுத்த கோர்ட் தடை விதித்துள்ளது.

Chennai Court Bans Thuppakki Title நடிகர் கமல்ஹாசனிடம் உதவியாளராக இருந்தவர் தயாரிப்பாளார் ரவிதேவன். இவரது தயாரிப்பில் லோகியாஸ் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு ‘கள்ளத்துப்பாக்கி' என்ற படத்தலைப்பு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு துப்பாக்கி என்று தலைப்பு வைக்கப்பட்டது.

துப்பாக்கி படத்தின் டைட்டில் டிசைனும் கள்ளத்துப்பாக்கி படத்தின் டைட்டில் பாணியில் இருந்தது.

இதையடுத்து கள்ளத்துப்பாக்கி குழுவினர் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டனர். தயாரிப்பாளர்கள் சங்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைவராக இருப்பதால், தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று கூறி நீதிமன்றத்துக்குப் போனார்கள் கள்ளத்துப்பாக்கி குழுவினர்.

கள்ளத்துப்பாக்கி குழுவினரின் மனுவை விசாரித்த நீதிபதி, விஜய் நடித்து வரும் படத்திற்கு துப்பாக்கி என்று டைட்டில் வைக்கக்கூடாது என தடை விதித்து உத்தரவிட்டார்!

ஜூலை 5 முதல் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு: 3,900 பேருக்கு அழைப்பு

எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கலந்தாய்வு வரும் ஜூலை மாதம் 5ம் தேதி துவங்குகிறது.
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 27,877 மாணவ-மாணவியர் விண்ணப்பதிருந்தனர். அவர்கள் அனைவரின் விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதையடுத்து ரேங்க் பட்டியல் கடந்த 25ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 3,900 பேருக்கு எம்.பி.பி.எஸ். கலந்தாய்வுக்கான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கலந்தாய்வு வரும் ஜூலை மாதம் 5ம் தேதி துவங்குகிறது. அன்றைய தினம் மாற்று திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள் அடங்கிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் நடைபெறுகிறது.
மேலும் அன்றைய தினம் 200க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் பெற்று முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவியருக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்வதற்கான சான்றிதழ்களை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் வழங்குகிறார். ரேங்க பட்டியல் அடிப்படையில் வரும் 16ம் தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்வுக் கடிதம் கிடைக்காதவர்கள் அதை சுகாதாரத் துறையின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழகத்தில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அதில் மொத்தம் 1,696 இடங்கள் உள்ளன. மேலும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 838 உள்ளன. இவை அனைத்திற்கும் சேர்த்து தான் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவ-மாணவியருக்கான கட் ஆஃப் மதிப்பெண் 198.50கவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 197.50கவும், பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான மதிப்பெண் 196.25கவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 196.25கவும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பினருக்கு 192.50கவும், பழங்குடி வகுப்பினருக்கு 189.25கவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடரும் இலங்கை கடற்படை தாக்குதல்- பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

 Attacks On Tamil Nadu Fishermen Sri Lanka தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.
கச்சத்தீவு கடற்பரப்பில் நேற்று முன் தினம் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை மீன்பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளது என்று அந்த கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கச்சத்தீவில் ஆண்டாண்டுகாலமாக தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வரும் நிலையில் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருவதை தடுக்க வேண்டும். இலங்கைக் கடற்படையின் தாக்குதலால் தமிழக மீனவர்கள் அச்சமடைந்திருப்பதாகவும் ஜெயலலிதா தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியிருக்கும் நிலையில்தான் நள்ளிரவில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

யாமர் சமூக வலைத்தளத்தை ரூ. 6,000 கோடிக்கு வாங்கிய மைக்ரோசாப்ட்!

 Microsoft Buy Yammer 1 2 Billion
சமூக வலைத்தளமான யாமர் (Yammer) நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் ரூ. 6,000 கோடிக்கு (1.2 பில்லியன் டாலர்) வாங்கவுள்ளது. இதன்மூலம் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தள சேவையை மைக்ரோசாப்ட் வழங்க முடியும்.
வெளியுலகில் மட்டுமின்றி நிறுவனங்களுக்குள்ளான சமூக வலைத்தளங்களில் மிகப் பிரபலமானது யாமர். ஒரு நிறுவனம் தனது பணியாளர்களை மட்டும் கொண்ட சமூக வலைத்தளத்தை உருவாக்கிக் கொள்ள யாமர் உதவுகிறது.
4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட யாமர் வலைத்தளத்தை 50 லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரை தலைமையகமாகக் கொண்ட யாமர் நிறுவனத்தில் 400 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தை மைக்ரோசாப்ட் வாங்கினாலும் அதன் தலைமை செயல் அதிகாரியாக கர்ட் டெல்பென் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் முன்பு பேபால் நிறுவன அதிகாரியாக இருந்தவர் ஆவார்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் இப்போது ஷேர் பாயிண்ட் என்ற அப்ளிகேஷனை வழங்கி வருகிறது. இது நிறுவனங்களுக்குள் சமூக வலைத்தளத்தை உருவாக்க உதவும் அப்ளிகேஷனாகும். ஆனால், இதில் யாமர் அளவுக்கு வசதிகள் இல்லை.
இப்போது யாமரை வாங்கியுள்ளதன் மூலம் சமூக வலைத்தள உலகில் மைக்ரோசாப்ட் வலுவாக காலூன்ற முயல்கிறது.
மேலும் பேஸ்புக் போல யாமர் விளம்பரங்களை நம்பியில்லை. கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் இணையத்தளமாகும் (மிக அடிப்படையான சேவைகள் இலவசமாக தரப்பட்டாலும்).
ஒவ்வொரு யாமர் பயனீட்டாளருக்கும் 240 டாலர் என்று கணக்கிட்டு 50 லட்சம் பேருக்கு ரூ. 6,000 கோடியைத் தந்து இதை வாங்கவுள்ளது மைக்ரோசாப்ட்.
கடந்த ஆண்டு ஆன்லைன் சேட் நிறுவனமான ஸ்கைப் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் ரூ. 42,000 கோடிக்கு மைக்ரோசாப்ட் வாங்கியது. தனது அடுத்த ஆபிஸ் வெர்சனில் ஸ்கைப்பை சேர்க்கவுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அவுட்லுக் இமெயில், எக்ஸெல் ஸ்பிரட் ஷீட்கள், பவர் பாயிண்ட் உள்ளிட்ட எம்எஸ் ஆபிஸ் சேவைகள் மூலம் அந்த நிறுவனத்துக்கு 60 சதவீத லாபம் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதன் முக்கியமான விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் விற்பனை மூலம் கிடைக்கும் லாபம் 40 சதவீதமே.

பிரணாப், சங்மா வேட்பு மனு தாக்கல்

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களான பிரணாப் முகர்ஜி மற்றும் சங்மா ஆகியோர் தமது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளனர்.
இத்தேர்தலில் ஆளும் கூட்டணி சார்பில் நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜியையும், பிரதான எதிர்கட்சியான பா ஜ க மற்றும் அ இ அ தி மு க, பிஜு ஜனதா தளம் உட்பட பல எதிர்கட்சிகள் சங்மாவையும் தமது வேட்பாளராக நிறுத்தியுள்ளன.
பிரணாப் முகர்ஜி தமது வேட்பு மனுவை தாக்கல் செய்யும் போது பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
எதிரணியின் வேட்பாளாரான சங்மாவுடன் பா ஜ க மூத்த தலைவர் அத்வானி, அகாலி தளத்தலைவரும் பஞ்சாப் முதலவருமான பிரகாஷ் சிங் பாதல், ஒதிஷா முதல்வர் பிஜு பட்நாயக் ஆகியாருடன் மேலும் பலரும் சென்றனர்.
குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் தற்போது வாக்கு பலத்தின் அடிப்படையில் பிரணாப் முகர்ஜி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளே கூடுதலாக உள்ளன என்று செய்திகள் கூறுகின்றன.
ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணமூல் காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தமது கட்சியின் நிலை என்ன என்பதை இதுவரை வெளியிடவில்லை.
எனினும் அக்கட்சியின் ஆதரவு தனக்கு கிடைக்கக் கூடும் என சங்மா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

500 தியேட்டர்களில் பில்லா 2 – 10-ம் தேதி முதல் முன்பதிவு ஆரம்பம்!


அஜீத் நடித்துள்ள பில்லா 2 படம் வரும் ஜூலை 13-ம் தேதி வெளியாவதாக படத்தின் தயாரிப்பாளர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் மட்டும் 500 க்கும் மேற்பட்ட அரங்குகளில் படம் வெளியாகிறது.
இந்தப் படத்தின் ரிலீஸ் கடந்த மே மாதத்திலிருந்தே இதோ அதோ என இழுத்தடித்துக் கொண்டிருந்தது. சில தினங்களுக்கு முன் படம் சென்சார் செய்யப்பட்டபோது, ஏ சான்று கொடுத்துவிட்டனர். ஏராளமான காட்சிகளை வெட்டியும் விட்டனர்.
இதனால் பட வெளியீடு திட்டமிட்டபடி ஜூன் 21-ம் தேதி நடக்கவில்லை. மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளிப்போய்விட்டது.
இந்த நிலையில், படத்தின் வெளியீடு குறித்து தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
“ஆவலுடன் எதிர்ப்பார்த்த தல ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க வருகிறது பில்லா 2. அனைத்து வேலைகளும் முடிந்து பக்கா ஆக்ஷன் த்ரில்லராக வரும் ஜூலை 13-ம் தேதி பில்லா 2ஐ வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் 500க்கும் அதிகமான அரங்குகளில் பில்லா 2திரையிடப்படும். உலகம் முழுவதும் வெளியாகவுள்ள திரையரங்குகள் விவரம் விரைவில் வெளியிடப்படும்,” என்று கூறியுள்ளார்.

விஸ்வரூபம் இரண்டாம் பாகம் வருவது நிச்சயம். கமல் பேட்டி

இந்தியாவில் வெளியான படங்களில் அதிக பொருட்செலவில் உருவாகி வரும் படம் ‘விஸ்வரூபம்’. கமல் நடித்து, இயக்கி, தயாரித்து இருக்கிறார்.
கமலுடன் ஆண்ட்ரியா, பூஜாகுமார் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். இப்படத்தின் FIRST LOOK-ஐ கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட்டார் கமல்.
இப்படத்தில் கமல் இரட்டை வேடத்தில் எல்லாம் நடிக்கவில்லையாம். விஸ்வநாத் (எ) விஸ் என்ற பாத்திரத்தில் நடித்து இருக்கிறார். விஸ்வநாத் பாத்திரத்தில் கதக் நடன கலைஞராகவும், விஸ் பாத்திரத்தில் FBI ஏஜெண்டாகவும் நடித்து இருக்கிறார்.
‘விஸ்வரூபம்’ படத்திற்காக இதுவரை எடுத்த காட்சிகள் மிகவும் அதிகமாக இருப்பதால் அதில் சில காட்சிகளை பயன்படுத்தி ‘விஸ்வரூபம்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பயன்படுத்த இருக்கிறார் கமல் என்று செய்திகள் வெளியாகின.
இச்செய்தி குறித்து கமல் தெரிவித்து இருப்பது ” விஸ்வரூபம் படத்தினைத் துவங்கும் போதே, இப்படம் மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெறும் என்று பரிபூரணமாக நம்பி தான் துவக்கினோம். இரண்டாம் பாகமும் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு 40 % முடிவடைந்துவிட்டது.
இந்திய திரையுலகில் இதுவரை விஸ்வரூபம் மாதிரியான கதைகள் வந்தது இல்லை. தேசிய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து இப்படத்தில் கையாண்டுள்ளோம் ” என்று தெரிவித்து இருக்கிறார்

ஒலிம்பிக்கில் முதன்முறையாக அரேபியப் பெண்கள்

ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை பங்கேற்காமல் இருந்த சவுதி அரேபியா, கத்தார் மற்றும் புருனே நாட்டுப் பெண்கள் முதன்முறையாக உள்ளனர்.
2012ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் லண்டனில் நடைபெற உள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் பல நாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இம்முறை அரேபிய நாடுகளில் உள்ள பெண்களும் பங்கறே்க உள்ளனர்.
சவுதி அரேபியாவில் பெண்கள் வண்டி ஓட்டுவதும், தேர்தலில் வாக்களிப்பதும், பொதுப்பதவிகளை வகிப்பதும் கிடையாது. இவர்கள் பள்ளிக்கூடம் செல்வதில் தொடங்கி திருமணம், வங்கிக் கணக்கு தொடங்குதல் என்று அனைத்திலுமே ஆண்களின் அனுமதியின்றி எதுவும் செய்யக்கூடாது.
ஒலிம்பிக் போட்டிகளைப் பொறுத்தவரையில் ஆண், பெண் பார்வையாளர்கள் கலந்திருந்து பார்ப்பதால் அரேபிய பெண்களுக்கு விளையாட அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது நிலைமைகள் மாறி வருகின்றன.
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தால்மா ருஷ்டி மல்ஹாஸ் என்ற முதல் சவுதிப்பெண் தன் கனவு நனவாகியிருப்பதாகக் கூறியுள்ளார்.
தற்போது துப்பாக்கி சுடுதல், நீச்சல் மற்றும் ஓட்டப்போட்டிகளில் கலந்து கொள்ள மூன்று பெண்களை கத்தார் அனுப்புகிறது. தடையோட்டத்தில் மட்டும் பங்கு பெற ஒரு பெண்ணை புருனே அனுப்புகிறது. ஆனால், சவுதி அரேபியா அனுப்பும் வீராங்கனைகளின் எண்ணிக்கை இன்னும் முடிவாகவில்லை.

உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மூடிமறைப்பு!!!!!


திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 17 கி.மீ. தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர். தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த ஆதிச்ச நல்லூர்.......ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது மக்கள் நாகரீகத்தோடு வாழ்ந்த ஊர்.ஆச்சரியமாக இருக்கிறதா?.. ஆம் அதுதான் உண்மை ...




இந்த இடுகாடு கி.மு பத்தாம் நூற்ராண்டுக்கும் முந்தையது. இன்றைய ஆய்வுகள் மேலும் ஒரு ஆயிரம் வருடங்களை பின்னுக்குத் தள்ளலாம் என்று தெரிவிக்கின்றன. நாம் அறிந்த எந்த இந்திய சரித்திர காலகட்டத்துக்கும் முந்தைய காலகட்ட மக்களின் இடுகாடு இது. தமிழ்க்குடியின் தொன்மைக்கான முதற்பெரும் தொல்பொருட் சான்றும் இதுவே. ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான். 1876 -ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களது நாகரீகம். அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது



பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903 ஆம் ஆண்டு ஆதிச்ச நல்லூர் வந்து சில தாழிகளைத் தோண்டி எடுத்தார். அப்போது மண்வெட்டி, கொழு முதலியன கிடைத்தன. ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப் பொருள்களை அவர் பாரிசுக்கு எடுத்துப்போய்விட்டார். இவ்வாறு ஆதிச்ச நல்லூரில் கிடைத்த மிகத்தொன்மை வாய்ந்த பொருள்கள் மேல் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்த புதைபொருள் சின்னங்கள் கிடைத்தால் ஆதிச்சநல்லூரின் தொன்மையான வரலாறு நமக்குத் மேலும் தெரியும்.



1905 ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறு துணைக் கண்காணிப்பாளர் அலெக்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித்துக் கொடுத்ததோடு அகழ்ந்தெடுத்த பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்தார்.



இவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, ஆபரணங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்...

இதிலென்ன அதிர்ச்சி இருக்கிறது? என நினைக்கிறீர்களா?..அந்த அதிர்ச்சிக்கு காரணம் அந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அன்றைய மக்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான்.மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால், அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள், அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள், அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும் அல்லவா?.



பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பைக் கண்டுபிடித்து தேன் இரும்பு, வார்ப்பு இரும்பு, எஃகு இரும்பு ஆகியவற்றை உருவாக்கி இருக்கின்றனர். பயிர்த்தொழில்,சட்டிப்பானை வனையும் தொழில், நெசவுத் தொழில், கப்பல் கட்டும் தொழில் போன்றவற்றை இரும்புக் கருவிகள் மூலம் திறம்பட வளர்த்து கடல் வாணிபம் செய்து உலகப் புகழ்பெற்றவர்கள் தமிழர்கள் என ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வுச் சின்னங்கள் உறுதிப்படுத்துகின்றன. திராவிடர்கள் குறிப்பாக தமிழர்கள் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தார்கள் என்ற கருத்துக்கு இந்த அகழ்வாய்வுச் சின்னங்கள் முடிவு கட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.

மிகத் தொன்மையான காலத்திலிருந்தே இரும்பைப் பிரித்தெடுத்து அதை பல பொருள்களாகச் செய்து பயன்படுத்துவதில் தமிழர்கள் கைதேர்ந்தவர்கள் என்று அறியமுடிகிறது. சங்க இலக்கியத்தில் இரும்பினால் செய்யப்பட்ட பொருள்கள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.


மிகத் தொன்மையான காலத்திலேயே தமிழர்கள் எகிப்து,ஆப்பிரிக்கா,  சுமேரியா,  கிரீஸ்,  மெக்சிகோ முதலிய நாடுகளுக்கு இரும்புப் பொருள்கள் ஏற்றுமதி செய்து வந்தனர். எகிப்தியர்களும், கிரேக்கர்களும் இந்திய நாட்டில் இருந்துதான் இரும்பை உருக்கி பயன்படுத்தும் முறைகளை அறிந்தனர் என்று கூறப்படுகிறது. 1837ஆம் ஆண்டு இராயல் ஏஷியாட்டிக் சொசைட்டியில் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றில் அறிஞர் ஹீத் என்பவர் தென் இந்தியாவில் செய்யப்பட்ட எஃகுப் பொருள்களே எகிப்துக்கும், ஐரோப்பா கண்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று எடுத்துக்காட்டியுள்ளார்.


மெக்சிகோ நாட்டிலுள்ள பிரமிடுகளில் தமிழனின் கைவினைக் கலைகளைக் காணலாம். அண்மையில் எகிப்தில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டிலிருந்து சாத்தன், கண்ணன் என்ற இரண்டு தமிழர்கள் கடல் பயணம் செய்து எகிப்து நாடு சென்று அங்கே கொல்லன் பட்டறை ஒன்று நிறுவி, பணி செய்ததாக கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். பிரமிடுகள் கட்டப் பயன்படுத்திய கற்களை செதுக்குவதற்குரிய உளிகள் இந்த கொல்லன் பட்டறையில் உருவாகி இருக்க வேண்டும். தமிழனின் இரும்பு நாகரிகத்தை வெளிப்படுத்தியது இந்த ஆதிச்ச நல்லூர்தான்.

 
அதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார். ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் திராவிடர்களின் மண்டை ஓடுகள் என்றும்,ஒன்று மட்டும் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மண்டை ஓடு என்றும் அவர் கூறியுள்ளார். எனவே திராவிடர்களின் முன்னோர்கள் ஆஸ்திரேலிய நாட்டு பழங்குடி மக்களோடு தொடர்பு கொண்டிருந்தனர் என்று தெரியவருகிறது. அங்குள்ள பழங்குடி மக்கள் பேசும் மொழியில் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா தென் இந்தியாவோடு இணைந்திருந்தது என்ற கருத்தை மட்டுமல்ல குமரிக் கண்ட கோட்பாட்டையும் இது உறுதி செய்கிறது என்றும் கூறலாம். ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பயன்படுத்திய பூமராங் என்னும் ஒருவகை ஆயுதம் தமிழகத்தில் கிடைத்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பகைவர் மீது எறிந்தால் அவர்களைத் தாக்கிவிட்டு வீசியவர்கள் கைக்கு திரும்ப வரும் ஒருவகை ஆயுதம்தான் பூமராங்.




ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி,கொழு, நெல், உமி, பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்ச நல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி கரையில் நெல்,பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறியமுடிகிறது. ஆதிச்சநல்லூரில்அகழ்வாய்வு செய்ததில் டாக்டர் கால்டுவெல்லுக்கும் முக்கியமான பங்கு உண்டு. தாழியில் சில அரிய பொருட்களை அவரே கண்டெடுத்து அவற்றைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் நாகரிகம் மிக்கவர்கள் என்ற கருத்தை டாக்டர் கால்டுவெல் வெளியிட்டார்.




ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு.



ஏனிந்த நிலைமை என்று பார்த்தோமானால்..

எல்லாம் அந்த பாழாய்ப்போன அரசியல்தான்

எல்லாம் இந்த வடக்கத்தியர்களுக்கு தமிழன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சிதான்.




இதுதான் இன்றைய ராமேஸ்வரம் மீனவன் முதற்கொண்டு ஈழம் வரை நடந்து கொண்டிருக்கிறது.

இந்த ஆய்வுகளை ஒப்புக் கொண்டால் உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது என்றாகிவிடுகிறது. அப்படியாயின் வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை எல்லாம் இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும். இதுதான் பிரச்னை. இப்போது இங்குள்ள 150 ஏக்கர் நிலத்தை மத்திய அரசின் தொல்லியல் துறை சுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூட இன்னமும் வெளிவிடாமல் வைத்திருக்கிறது. வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஓர் உத்தரவையும் போட்டிருக்கிறது. இதுதான் இன்றைய சோகம்.


இதைச் உலகறியச் செய்யவேண்டியது மத்திய அரசு, செய்ய வலியுறுத்த வேண்டியது தமிழக அரசு.












நன்றி :Facebook







இப்போ கிரிக்கெட் எதிர்காலத்தில் ராணுவ சேவை: எம்.எஸ். டோணி

நாட்டை காக்கும் ராணுவ சேவை என்பது மகத்தான சேவை. கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் எதிர்காலத்தில் ராணுவத்தில் சேவை என்று கிரிக்கெட் கேப்டன் மகேந்திரசிங் டோணி கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணியின் சேவையை பாராட்டி அவருக்கு ராணுவத்தில் கவுரவ "லெப்டினன்ட் கர்னல்' பதவி வழங்கப்பட்டது. இதனையடுத்து அவர் சனிக்கிழமையன்று ஜம்மு-காஷ்மிரில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்கு சென்று அங்கு வீரர்களை சந்தித்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரம்பரிய நடனங்கள் ஆடப்பட்டதை டோணி உற்சாகத்துடன் கண்டு ரசித்தார். பின்னர் ராணுவ வீரர்களிடையே அவர் உரையாற்றியதாவது,
 cricket now army the future ms dhoni
இப்போது உங்கள் முன் நிற்பதற்கு காரணம் கிரிக்கெட் தான். கிரிக்கெட் போட்டிகளால் தான் நான் இந்தளவுக்கு பிரபலமாக உள்ளேன்.இதற்கு பாதிப்பு வரும் வகையில் எப்போதும் செயல்பட மாட்டேன். கிரிக்கெட் வாழ்க்கை முடிந்த பின், ராணுவத்துக்காக நிச்சயம், தீவிர சேவை செய்வேன். இதில் எனக்கு அதிக ஆர்வம் உள்ளது.

போர்க்களத்தில் அதிகாரிகள் எதிர்கொள்ளும் சவால்களை பார்க்க வேண்டும் என்ற விருப்பமும் உள்ளது. தற்போது தான் இவர்களை மிக அருகில் சந்திக்கும் வாய்ப்பு வந்துள்ளது. இதுபோன்று எல்லைப் பகுதிக்கு வருவது இதுதான் முதன் முறை. இங்குள்ள அதிகாரிகளின் குடும்பத்தினர் இங்கு வந்துள்ளனர். இப்போது தான் இவர்களை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பொதுவாக விளையாட்டுக்கு எவ்வித தடைகளையும் தகர்க்கும் சக்தி உண்டு. இதனால், இந்தியா, பாகிஸ்தான் இடையில் போட்டிகளை மீண்டும் துவங்குவது முக்கியம். இரு நாட்டு கிரிக்கெட் போர்டுகளும் இணைந்து, எப்போது விளையாடுவது என்பதை முடிவு செய்ய வேண்டும். இதேபோல நாமும் அங்கு சென்று விளையாட வேண்டும். என்ன நடக்கின்றது என பொறுத்திருந்து பார்க்கலாம் என்றார்.

டோணிக்கு ராணுவ உடை மிடுக்கான தோற்றத்தை அளித்தாலும் அவருடைய நீண்ட தலைமுடி மற்ற ராணுவ வீரர்களிடம் இருந்து அவரை வித்தியாசப்படுத்தி காட்டியது.

10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் வெளியிடப்பட உள்ளன.

சமச்சீர் கல்வி திட்டத்தின்கீழ், முதன் முறையாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு  கடந்த ஏப்ரல் 4 ம் தேதி துவங்கி 23 ம் தேதி வரை  நடைபெற்றது.

இந்த தேர்வை பள்ளிகள் மூலம் நேரடியாக 10,84,575 மாணவர்களும்,  தனித் தேர்வாளர்களாக 19,575 பேரும் எழுதி உள்ளனர்.பழைய பாடதிட்டத்தின் கீழ்  தனித்தேர்வாளர்களாக 64,777 பேர் எழுதி உள்ளனர்.

இந்நிலையில் 10 ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி இதனை வெளியிடுகிறார்.
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in என்ற அரசு இணையதளத்தில் காணலாம். மேலும் மாவட்ட அளவிலான மாணவர்களின் தேர்வு முடிவுகள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள தேசிய தகவல் மையம் (நிக் சென்டர்) மூலம் வழங்கப்படும்.

கம்ப்ïட்டர் வசதி கொண்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டு உள்ள  யுசர் ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டு உதவியுடன் பள்ளியிலேயே தேர்வு முடிவுகளை டவுன்லோடு செய்து கொள்ளலாம். கம்ப்ïட்டர் வசதி இல்லாத பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது யுசர் ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டு உதவியுடன் கம்ப்ïட்டர் வசதி கொண்ட அருகில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று தேர்வு முடிவுகளை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

மதிப்பெண் சான்றிதழ்கள் 21-ம் தேதி அன்று அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படும். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் இருந்து சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.


தேர்வு முடிவுகளை கீழே உள்ள இணையதளங்களில் காணலாம்




                http://tnresults.nic.in

                http://dge1.tn.nic.in

                http://dge2.tn.nic.in






  

முன்னாள் விடுதலைப் புலிகள் ஒரு தொகுதியினர் விடுதலை

திசாநாயக்க முன்னிலையில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் முன்னாள் புலி உறுப்பினர்இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வுப் பயிற்சிகளை முடித்துக்கொண்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களில் 78 பேர் சனிக்கிழமையன்று வவுனியாவில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் மூன்று பேர் பெண்கள்.

நான்கு வருடங்களின் பின்னர் தற்போதுதான் வெளியுலகத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் தனக்குக் கிடைத்தது என விடுதலையான ஓர் இளைஞன் குறிப்பிட்டார்.

தங்களைப் போன்று தடுப்பு முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் விசாரணைகளின்றியும், விடுதலையின்றியும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்கள் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் என விடுதலையான மற்றுமோர் இளைஞன் கேட்டுக்கொண்டார்.
இறுதிச் சண்டைகளின் முடிவில் இராணுவத்தினரிடம் சரணடைந்த 12 ஆயிரம் பேரில் 11 ஆயிரம் பேர் புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் சமூகத்தில் இணைக்கபட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்னும் 1200 பேரளவில் தமது காவலில் இருப்பதாகவும், இவர்களில் புனர்வாழ்வுப் பயிற்சி பெறுபவர்கள் அல்லது சுமார் 700 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்போவதாகவும் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
எஞ்சியுள்ள புனர்வாழ்வு பெறொவோர் அனைவரையும் இந்த வருட இறுதிக்குள் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வீட்டு வேலையிலும் உடற்பயிற்சி இருக்கு!!!

doing household chores, an easy form of exerciseஅலுவலகத்தில் அதிக வேலை பளு காரணமாக தூங்கவே நேரம் கிடைக்காத இந்த காலத்தில் உடற்பயிற்சி செய்ய முடியவில்லை. இதனால் உடலானது உடற்பயிற்சி செய்யாமல் பருத்துவிடுகிறது என்று வருந்தவேண்டாம். ஏனென்றால் நீங்கள் உடற்பயிற்சி செய்யாமல் இல்லை, நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்து கொண்டு தான் இருக்கிறீர்கள். எப்படியென்றால் நீங்கள் அன்றாடம் செய்யும் வீட்டு வேலைகளிலே நிறைய உடற்பயிற்சி இருக்கிறது. வீட்டைத் துடைத்தல், அயர்ன் பண்ணுதல் போன்ற வேலைகளிலே உடற்பயிற்சி உள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு வேலையிலும் ஒவ்வொரு உடற்பயிற்சி அடங்கியுள்ளது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் அவர்கள் எந்தந்த வேலையில் என்னென்ன உடற்பயிற்சி உள்ளது என்றும் பட்டியலிட்டு கூறியுள்ளனர்.

கிச்சனில் உள்ள கேஸின் மேல் பகுதியில் உள்ள அழுக்கை சுத்தம் பண்ணும் போது நம் கையில் உள்ள ஆர்ம்ஸ் வலுபெறுகிறது. மேலும் பாத்திரம் கழுவுவதும், கைகளுக்கும், விரல்களுக்கும் ஒரு நல்ல பயிற்சியைத் தருகிறது.

வீட்டில் உள்ள கிச்சன், பாத்ரூம், பெட்ரூம் ஆகியவற்றை துடைக்கும் போது, மாப் கொண்டு துடைக்காமல், கைகளால் துடைத்தால் கைகளுக்கு ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும். ஏனென்றால் இதை செய்யும் போது கைகளின் அசைவு அதிகமாகவும், வேகமாகவும் இருப்பதாலும், மேலும் இந்த வேலையை முட்டி போட்டு செய்வதாலும் கைகளுக்கும், தொடைக்கும் நல்லது.

துணி துவைப்பது ஒரு நல்ல உடற்பயிற்சி. துணி துவைக்கும் முறையை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். துணியை கைகளால் துவைக்கும் போதும், காய போடும் போதும் கைக்கும், அதை அலச நாம் குனிந்து செய்யும் போது இடுப்புக்கும் நல்ல பயிற்சியாக இருக்கிறது. பின் துணி காய்ந்ததும் அதை மடிக்கும் போதும், அயர்ன் பண்ணும் போது தோல் பட்டை, கழுத்து அதில் ஈடுபடுவதால், இது ஒரு சிறந்த உடற்பயிற்சி.

பெட்ரூமை சுத்தம் செய்யும் போது பெட்டில் உள்ள பெட்சீட்டை எடுத்து, பெட்டை தட்டி, மறுபடியும் பெட்டில் பெட்சீட்டை விரிப்பது போன்ற செயல்கள் உடலுக்கு நல்ல பயிற்சியாக உள்ளது.

மேலும் வீட்டில் ஒட்டடை இருந்தால், அதை எடுக்கும் போதும், கதவுகள், கார் போன்றவற்றை கழுவி சுத்தம் செய்யும் போதும் உடலானது நன்கு ஸ்ட்ரெட்ச் ஆகும்.

முக நூல்

Popular Posts