
கச்சத்தீவு கடற்பரப்பில் நேற்று முன் தினம் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை மீன்பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளது என்று அந்த கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கச்சத்தீவில் ஆண்டாண்டுகாலமாக தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வரும் நிலையில் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருவதை தடுக்க வேண்டும். இலங்கைக் கடற்படையின் தாக்குதலால் தமிழக மீனவர்கள் அச்சமடைந்திருப்பதாகவும் ஜெயலலிதா தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியிருக்கும் நிலையில்தான் நள்ளிரவில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment