background img

புதிய வரவு

இந்தியாவின் இளைஞர் கொள்கையில் மூன்றாம் பாலின பிரச்சினைகள்

இந்தியாவின் ஒருபாலுறவாளர்களின் ஊர்வலம்2012 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் தேசிய இளைஞர் கொள்கையின் வரைவு நகலை இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் அஜய் மாக்கன் வெளியிட்டிருக்கிறார். இதன்மீதான பொதுமக்களின் கருத்துக்கள் வரவேற்பதாக அவர் கூறினார்.
இதில் முதல்முறையாக திருநங்கைகள், ஒருபாலுறவு ஆண்கள் மற்றும் பெண்களின் பிரத்யேக பிரச்சினைகளும் உள்ளடக்கப்பட்டு அவற்றை களைவதற்கான வழிமுறைகளும் ஆராயப்படுகின்றன.
இப்படி மூன்றாம் பாலினத்தவரின் பிரச்சினைகள் முதல்முறையாக இந்திய அரசின் கொள்கைக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதை வரவேற்கிறார், இவர்களின் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல்கொடுத்துவரும் சென்னையைச் சேர்ந்த இந்திய சமூக சேவை நிறுவனம் என்கிற தொண்டு நிறுவனத்தின் நிறுவன செயலர் ஏ ஜெ ஹரிஹரன்.
இதன்மூலம் முதல்முறையாக இந்திய நடுவணரசு மூன்றாம் பாலினத்தவர்களின் இருத்தலை அங்கீகரித்து கொள்கை வகுத்திருப்பதுடன் அவர்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்கு சமூகத்தின் கருத்துக்களை கேட்டிருப்பது ஆரோக்கியமான அணுகுமுறை என்றும் அவர் பாராட்டினார்.

நன்றி: BBC தமிழ்  

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts