background img

புதிய வரவு

10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் வெளியிடப்பட உள்ளன.

சமச்சீர் கல்வி திட்டத்தின்கீழ், முதன் முறையாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு  கடந்த ஏப்ரல் 4 ம் தேதி துவங்கி 23 ம் தேதி வரை  நடைபெற்றது.

இந்த தேர்வை பள்ளிகள் மூலம் நேரடியாக 10,84,575 மாணவர்களும்,  தனித் தேர்வாளர்களாக 19,575 பேரும் எழுதி உள்ளனர்.பழைய பாடதிட்டத்தின் கீழ்  தனித்தேர்வாளர்களாக 64,777 பேர் எழுதி உள்ளனர்.

இந்நிலையில் 10 ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி இதனை வெளியிடுகிறார்.
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in என்ற அரசு இணையதளத்தில் காணலாம். மேலும் மாவட்ட அளவிலான மாணவர்களின் தேர்வு முடிவுகள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள தேசிய தகவல் மையம் (நிக் சென்டர்) மூலம் வழங்கப்படும்.

கம்ப்ïட்டர் வசதி கொண்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டு உள்ள  யுசர் ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டு உதவியுடன் பள்ளியிலேயே தேர்வு முடிவுகளை டவுன்லோடு செய்து கொள்ளலாம். கம்ப்ïட்டர் வசதி இல்லாத பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது யுசர் ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டு உதவியுடன் கம்ப்ïட்டர் வசதி கொண்ட அருகில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று தேர்வு முடிவுகளை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

மதிப்பெண் சான்றிதழ்கள் 21-ம் தேதி அன்று அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படும். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் இருந்து சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.


தேர்வு முடிவுகளை கீழே உள்ள இணையதளங்களில் காணலாம்




                http://tnresults.nic.in

                http://dge1.tn.nic.in

                http://dge2.tn.nic.in






  

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts