background img

புதிய வரவு

ஒலிம்பிக்கில் முதன்முறையாக அரேபியப் பெண்கள்

ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை பங்கேற்காமல் இருந்த சவுதி அரேபியா, கத்தார் மற்றும் புருனே நாட்டுப் பெண்கள் முதன்முறையாக உள்ளனர்.
2012ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் லண்டனில் நடைபெற உள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் பல நாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இம்முறை அரேபிய நாடுகளில் உள்ள பெண்களும் பங்கறே்க உள்ளனர்.
சவுதி அரேபியாவில் பெண்கள் வண்டி ஓட்டுவதும், தேர்தலில் வாக்களிப்பதும், பொதுப்பதவிகளை வகிப்பதும் கிடையாது. இவர்கள் பள்ளிக்கூடம் செல்வதில் தொடங்கி திருமணம், வங்கிக் கணக்கு தொடங்குதல் என்று அனைத்திலுமே ஆண்களின் அனுமதியின்றி எதுவும் செய்யக்கூடாது.
ஒலிம்பிக் போட்டிகளைப் பொறுத்தவரையில் ஆண், பெண் பார்வையாளர்கள் கலந்திருந்து பார்ப்பதால் அரேபிய பெண்களுக்கு விளையாட அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது நிலைமைகள் மாறி வருகின்றன.
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தால்மா ருஷ்டி மல்ஹாஸ் என்ற முதல் சவுதிப்பெண் தன் கனவு நனவாகியிருப்பதாகக் கூறியுள்ளார்.
தற்போது துப்பாக்கி சுடுதல், நீச்சல் மற்றும் ஓட்டப்போட்டிகளில் கலந்து கொள்ள மூன்று பெண்களை கத்தார் அனுப்புகிறது. தடையோட்டத்தில் மட்டும் பங்கு பெற ஒரு பெண்ணை புருனே அனுப்புகிறது. ஆனால், சவுதி அரேபியா அனுப்பும் வீராங்கனைகளின் எண்ணிக்கை இன்னும் முடிவாகவில்லை.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts