background img

புதிய வரவு

திருப்பூரில் பந்த்துக்கு முழு ஆதரவு: ஜவுளி ஆலைகள் மூடல், நகரமே ஸ்தம்பித்தது!

தமிழகத்தில் பாரத் பந்துக்கு திருப்பூர் பகுதிகளில் மட்டும் கொஞ்சம் ஆதரவு கிடைத்துள்ளது.

பாஜக அழைப்பு விடுத்த இந்த பந்துக்கு இடதுசாரிகளும் ஆதரவு தெரிவித்ததால் திருப்பூரில் ஜவுளி ஆலைத் தொழிலாளர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் சுமார் 6,500 ஜவுளி ஆலைகளும் மூடப்பட்டுள்ளன.

அதே போல பிரிண்டிங் நிறுவனங்கள், எம்பிராய்டரி நிறுவனங்கள், நிட்டிங் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. 

தொழிலாளர்கள் பணிக்கு வராததால் ஹோட்டல்கள், பேக்கரிகள், கடைகளும் மூடப்பட்டுள்ளன. தியேட்டர்களில் பகல் காட்சி சினிமா ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆனால், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்குகின்றன. பஸ், லாரி, ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்குகின்றன.

அதே போல கோவை மாவட்டத்தில் அந்த பந்த்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை. கேரளத்தில் பந்த் நடந்தாலும் கோவையில் இருந்து இன்று காலை வழக்கம் போல் பஸ்கள் கேரளாவுக்கு புறப்பட்டுச் சென்றன.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts