background img

புதிய வரவு

வடிவேலு இப்போ அடுத்த C.M?

தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை மன்னராக இருந்தார் வடிவேலு. ஆனால் யார் கண் பட்டதோ அரசியலில் குதித்ததன்மூலம் தனது மார்கெட்டை இழந்தார். இன்னோரு பக்கம் சந்தானத்தின் விஸ்வரூப வளர்ச்சி, வடிவேலுவின் இடத்தை நிரப்பியது. இதனால் பிஸியாக இருந்த வடிவேலு கேட்பாரற்று கிடந்தார்.
இதனால் மீண்டும் ஒரு அதிரடியான நுழைவின் மூலம் தனது இடத்தை பிடிக்க முடிவு செய்திருக்கும் வடிவேலு, இதற்காக இயக்குனர் சிம்புதேவனைச் சரணடைந்தார். சிம்புதேவனும் ‘மாரீசன்’ படத்துக்கு உடனடியாக கால்ஷீட் கொடுக்காததால், வெறுத்துப் போய் இருந்த சூழ்நிலையில் வடிவேலு வலிய வந்து நின்றதில் அவரை அப்படியே கப்பென்று பிடித்துக் கொண்டாராம்! மார்கெட் இழந்த நடிகர். மார்கெட் இழந்த இயக்குனர் இரண்டுபேரும் முதல் முறையாக ஒன்றாக சேர்ந்து இருக்கிறார்கள்.
சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு திரையுலகில் இருந்து வடிவேலு மறைந்து வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து , “நான் ஓடி ஒளியவில்லை. மீண்டும் சினிமாவில் நடிப்பேன், அதுவும் ஹீரோவாகத்தான் வருவேன்” என்று கூறிவருகிறார் வைப்புயல். இந்நிலையில்தான் ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகத்தை மிகபிரமாண்டமாக உருவாக்குவதை விட குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கலாம் என்று ஒருமனதாக முடிவு இருப்பதாகத் தகவல் கிடைக்கிறது. இந்த இரண்டாம் பாகத்தில் வடிவேலுவை திடீர் முதலமைச்சராக காட்டுவதென்று முடிவு செய்து கதை விவாதம் நடத்தி முடித்திருகிறாராம் சிம்புதேவன். இதனடிப்படையில் வடிவேலு தமிழக முதல்வரானால் என்ன நடக்கும் என்பதை இரண்டரை மணிநேர திரைக்கதையாக்கி, முதல் பாகத்தை தயாரித்த ஷங்கரிடமே சொல்லியிருகிறார் சிம்பு!
கதைக்கேட்டு மூக்கில் விரல்வைத்த ஷங்கர் “ இதுதாங்க ரியல் ஸ்ஃபூப்” என்றாராம். அத்துடன் புலிகேசியின் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்க ஷங்கரே ஒப்புகொண்டிருகிறார் என்கிறார்கள். ஜூன் முதல்வாரம் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் சிம்புதேன், தேன்நிலவு முடிந்ததும், புலிக்கேசி இரண்டாம் பாகத்துக்கான வேலைகளில் சுறுசுறுப்பாக இறங்க இருக்கிறராம் எது எப்படியோ! இந்த இரண்டாவது பாகத்தில் கேப்டன் நடிகரை கைது செய்து, தனது ஆட்சியில் படாத பாடு படுத்துவதுபோல வடிவேலு காட்சி அமைக்கச் சொல்லுவர் என்பது மட்டும் உறுதி!

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts