background img

புதிய வரவு

மனம் திறந்தார் திரிஷா

கடந்த 10 வருடங்களாக தமிழ், தெலுங்கு என பிஸியாகவும் நம்பர் 1 நடிகையாகவும் திகழ்கிறார் திரிஷா. அவர் நேற்று தனது 29வது பிறந்ததினத்தைக் கொண்டாடினார்.
அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
தெலுங்கில் நான் கதானாயகியாக நடித்து வெளிவந்துள்ள‌ தம்மு படத்தில் நான் கவர்ச்சியாக நடித்திருப்பது பற்றி கேட்கின்றனர். அது ஜாலியான படம். அதுபோன்ற வேடங்களில் நடித்துதான் இந்த அளவுக்கு வளர்ந்துள்ளேன். எனவே அதுபோன்ற வேடங்களில் நடிப்பேன். கடந்த 10 வருடமாக சினிமாவில் நடிக்கிறேன். இவ்வளவு காலத்துக்கு பிறகும் அதுபோன்ற கவர்ச்சி வேடங்களில் நடிப்பது ஒரு கவுரவம்தான்.
என் வாழ்க்கை முழுவதும் சினிமாவும் ஒரு அங்கமாக இருக்குமா? என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. சினிமா துறையில் இது எனக்கு பத்தாவது வருடம் ஆகும். நான் சந்தோஷமாக இந்த துறையில் இருக்கிறேன். இதை விட்டு எங்கேயும் போக மாட்டேன். என்னைப்பற்றி கிசு கிசுக்கள் வருகின்றன. சொந்த வாழ்க்கையை சினிமாவில் போட்டு குழப்பிக் கொள்ளமாட்டேன்.
வீட்டுக்கு போனால் சினிமா தொடர்புடைய பலருடன் பேசுகிறேன். ஆனால் என் தோழிகள் சினிமாவை தவிர்த்து திரிஷாவாகவே என்னை பார்க்கின்றனர். எனது பிறந்தநாளுக்கு மெர்சிடெஸ் பென்ஸ் கார் பரிசாக வாங்கி உள்ளேன்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts