background img

புதிய வரவு

புவனேஸ்வரி நடிக்கும் பாவத்தின் சம்பளம்!

சின்னத்திரை நடிகை புவனேஸ்வரி பாவத்தின் சம்பளம் என்ற புதிய தொடரில் நடிக்கிறார். தமிழ் சீரியல்களில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வந்த புவனேஸ்வரி, தெலுங்கு சீரியல்கள் மற்றும் சினிமாக்களிலும் கொடிகட்டி பறந்தார். விபசார வழக்கில் சிக்கிய புவனேஸ்வரி, அதன் பிறகு சின்னத்திரையில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இடையில் அரசியல் அழைக்க, அதில் கவனம் செலுத்தியதால் நீண்ட இடைவெளி விழுந்து விட்டது. இப்போது இந்த இடைவெளியைக் குறைக்கும் விதத்தில் `பாவத்தின் சம்பளம் என்ற தொடர் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு வருகிறார் புவனேஸ்வரி. வசந்த் டிவியில் கிறிஸ்துமஸ் தினத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் இந்த தொடரில் அவருடன் சேசு, யுவான்சுவாங், ஜெயதேவி, சத்யா உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள். எப்போதோ நடந்த ஒரு சம்பவத்துக்காக ஒரு அப்பாவி இளம்பெண் மீது சாக்கடையை அள்ளி வீசுகிறது சமுதாயம். தன் மீதான சமூகத்தின் தவறான பார்வையை மாற்ற போராடும் அவளின் போராட்டமே பாவத்தின் சம்பளம்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts