background img

புதிய வரவு

பனிக்கால சரும பராமரிப்பு


சருமம் பனிக் காலத்தில் வறண்டு போகும். உதடுகள் வெடிக்கும். கை, கால்களில் நிறம் மாறும். அதற்கு காரணம், சருமத்திற்கு தேவையான ஈரத்தன்மை, எண்ணைத் தன்மை போன்றவற்றை வழங்கி, சருமத்தை மினுமினுப்பாக வைத்திருக்கும் சில வகை சுரப்பிகளின் செயல்பாடுகள் பனிக்காலத்தில் மட்டும்  குறைத்து    விடும். 
 
இந்த காரணங்கலால்   சுரப்பிகள் தரும் ஈரத்தன்மையும், எண்ணைத் தன்மையும் சருமத்திற்குக் கிடைக்காமல் போய் விடும்கிறது    இதனால் சருமம் வறண்டு  போய்  பொலிவு   இழந்து    தோலில் சுருக்கங்களும், மாற்றங்களும் ஏற்படுகின்றன.
 
குளிர்காலத்தில் உதடுகள் தான்   அதிகமாக பாதிக்கப்படுகிறது. உடலில் மிகவும்  மென்மையான பகுதி உதடு  அதனால் பனிக்காலத்தில் அதிகமாக பாதிப்புகள் ஏற்படுகிறது.
 
பனிக் காலத்தில் ஆரோக்கியத்தோடு  பெண்கள் உணவு, உடற்பயிற்சி, உடல் பராமரிப்பு போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. பனிக் காலத்தில் உடல் சூடு   குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.     அதனால் சற்று அதிக  ஆரோக்கியமான  உணவுகளை சாப்பிட வேண்டும்.
 
உணவு சத்துடனும், சூடாகவும் இருப்பது  நல்லது. கோதுமை, முந்திரி பருப்பு பாதாம் பருப்பு, வேர்க்கடலை, அரிசி, ஆகிய உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் உடல் சூடு பாதுகாக்கபடுகிறது. உடலில் தேங்காய் எண்ணையை தேய்த்து குளிப்பது நல்லது.
 
சோப் ஷாம்புவை தவிரப்பதும் மிகவும்  நல்லது. கடலை மாவு, பாசிபயறு மாவு பயன்படுத்தலாம். பனிக் காலத்தில் வாரத்தில் 3   முறையாவது எண்ணை தேய்த்துக் குளிக்க  வேண்டும். தூங்குவதற்கு முன் உதட்டில் வெண்ணை தடவலாம்.
 
பனிக் காலத்தில் பெண்களுக்கு பாதங்களிலும் வெடிப்பு ஏற்படும். வெடித்த இடத்தில்   எலுமிச்சம் பழத்தை தேய்த்து  வந்தால்  வெடிப்பு ஓரளவு கட்டுபடும். இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு பாதங்களை 20   நிமிடங்களுக்கு  உப்பு கலந்த நீரில் வைத்தால் பாத வெடிப்புகள் மறையும்.
 
முறையான உடற்பயிற்சிகளை செய்து, உடல் நன்றாக வியர்த்து விட்டால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி அழகும் கிடைக்கும்.


0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts