background img

புதிய வரவு

பயன் தரும் புதினா

பயன் தரும் புதினாகறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியைப் போல   புதினாவும் உணவுக்கு   சுவையும்  மணமும்  தர   பயன்படுத்தப்படுகிறது.புதினா பசியைத் தூண்டும் சக்தி கொண்டது மற்றும் .மணமும் காரச் சுவையும் கொண்டது.பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினா   மிகவும்  உதவுகிறது.  ஊளைச்சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றுப் புழுக்களை அழிக்கவும்  வாய்வுத் தொல்லையை போக்கவும்  புதினா  உதவுகிறது
 
புதினாவில்   உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில்   இதில் இருக்கின்றன. துவையல், சட்னி, போன்றவை  தயாரிக்கவும்   மசால்வடை தயாரிக்கவும்   பயன்படுகிறது   பிரியாணி மற்றும் இறைச்சி வகைகளிலும்  புதினா பயன்படுத்தப்படுகிறது.
 
புதினா இலையின் சாற்றை தலைவலிக்குப் பூசலாம். ஆஸ்துமாவை புதினா கட்டுப்படுத்துகின்றது. , வறட்டு இருமல்,  ரத்தசோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும் புதினா குணப்படுத்துகிறது.
 
புதினாவை  தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும்.சீரண சக்தி அதிகரித்து பசி தூண்டப்படும். மலச்சிக்கலும் நீங்கும்.வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் புதினாவை  துவையல்  செய்து   சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.
 
புதினா இலைகளை மட்டும் கிள்ளி எடுத்துச் சுத்தம் செய்து  அதை வெய்யிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும்.நன்கு  காய்ந்த பின் அதை எடுத்து எட்டில் ஒரு பங்கு சோற்று உப்பை  ( 8  :1  )அத்துடன் சேர்த்து உரலில் போட்டு நன்றாக இடிக்க வேண்டும் தூளான பின் சலித்து எடுத்து பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.இந்த  பற்பொடியை  தினசரி உபயோகித்து  வந்தால் ஆயுள் வரை பல் சம்பந்தமான எந்த ஒரு  நோயும்  வராது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts