background img

புதிய வரவு

சபாநாயகராக ஜெயக்குமார் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்

சென்னை: தமிழக சட்டசபை சபாநாயகராக ஜெயக்குமார் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

தமிழக சட்டசபையின் சபாநாயகர் பதவிக்கு அதிமுகவின் ஜெயக்குமாரும், துணை சபாநாயகர் பதவிக்கு அதிமுகவின் ப.தனபாலும் மனு செய்திருந்தனர்.

இவர்களை எதிர்த்து யாரும் மனு செய்யவில்லை. இதையடுத்து இருவரும் இன்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து இன்று காலை சபை கூடியதும் அவை முன்னவரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வமும், எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்தும் இணைந்து ஜெயக்குமாரை அவரது இருக்கைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர்.

பின்னர் பேசிய சபாநாயகர் ஜெயக்குமார் தன்னை சபாநாயகராக தேர்வு செய்த முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

பின்னர் அவர் பேசுகையில், சட்டசபையின் மாண்பு, மரபை சீர்குலைக்காமல் கண்ணியத்துடன் செயல்படுவேன். கட்சி பாகுபாடின்றி செயல்பட்டு அனைவரது பாராட்டுக்களையும் பெறுவேன்.

சட்டசபையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் பேசுவதற்கு உரிய வாய்ப்பளிப்பேன் என்றார்.

பின்னர் புதிய சபாநாயகரை வாழ்த்தி முதல்வர் ஜெயலலிதா, எதிர்க்கட்சித் தலைவர் விஜதயகாந்த், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, சிபிஎம், சிபிஐ கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் பேசினர்.

முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு உரிய மதிப்பளிக்கும் வகையில் ஆளுங்கட்சி செயல்படும். ஜனநாயகம் தழைக்க துணையாக இருப்போம்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு பேரவையின் மரபுகளைக் காப்பாற்றும் வகையில் சபாநாயகர் செயல்படுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,

சபாநாயகர் ஜெயக்குமார் அனைத்து உறுப்பினர்களின் மனநிலையை அறிந்த சிறந்த அனுபவம் பெற்றவர். ஒரு தேருக்கு அச்சாணி போன்று எதிர்க்கட்சி விளங்குகிறது.

சிறிய கட்சி, பெரிய கட்சி என்ற பாகுபாடு காட்டாமல் அனைத்து உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களின் நம்பிக்கையை பெறும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

5 விரல்களும் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும், அவை இணைந்து ஒன்றுகூடினால்தான் ஒரு காரியத்தை வெற்றிகரமாக முடிக்க முடியும். ஊர் கூடி தேர் இழப்பதுபோன்று ஜனநாயக தேரை இழுத்துச் செல்ல திமுக உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்றார் ஸ்டாலின்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts