background img

புதிய வரவு

எம்.எல்.ஏ.வாக கருணாநிதி, நாளை பதவி ஏற்கிறார்

தமிழக சட்டசபையில் கடந்த 23-ந்தேதி எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர். திருவாருர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க. தலைவர் கருணாநிதி அன்றைய தினம் டெல்லியில் கனிமொழி எம்.பி.யை பார்க்க சென்றதால் அவரும் துரைமுருகனும் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்கவில்லை.

அமைச்சர் மரியம்பிச்சை விபத்தில் இறந்ததால் அமைச்சர் சிவபதி, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. மனோகரன் ஆகியோர் திருச்சிக்கு சென்று விட்டனர். இதனால் அவர்களும் அன்றைய தினம் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்கவில்லை.

கடந்த 27-ந்தேதி தற்காலிக சபாநாயகர் செ.கு. தமிழரசன் முன்னிலையில் சிவபதி, மனோகரன் இருவரும் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றனர். இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியும், முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் நாளை (திங்கட்கிழமை) எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்கிறார்கள். சபாநாயகர் அறையில் சபாநாயகர் ஜெயக்குமார் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts