background img

புதிய வரவு

காமாட்சியம்மன் கோவிலில்விஜயகாந்த் வழிபாடு

காஞ்சிபுரம்:சட்டசபை தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், நேற்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தேர்தல் பிரசாரத்தை துவக்குவதற்கு முன், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சென்று வழிபட்டார். காமாட்சி அம்மன் கருவறையில் உள்ள வாராகி அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டார். தேர்தலில் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நேற்று காலை விஜயகாந்த் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். காமாட்சி அம்மன் மற்றும் வாராகி அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து வேண்டுதலை நிறைவேற்றினார். இவருடன், செங்கல்பட்டு எம்.எல்.ஏ., முருகேசன் உட்பட கட்சி நிர்வாகிகள் வந்திருந்தனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts